Niviaju
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10
வேதா கடைக்குள் நுழையும் நேரம் தான் ரம்யா ஹீட்டெரினை சரி பார்த்துக் கொண்டு இருப்பதனைக் கவனித்தான். அவள் கரம் ப்ளக்கின் கம்பியினைத் தொடும் நேரம் அவனுக்கு நடக்க இருக்கும் விபரீதம் புரிந்து அவளை தள்ளிவிடும் முன் அவள் கம்பியினைத் தொட்டு இருந்தாள். அவன் அவளினை இழுத்ததில் அவனும் கீழே விழ அவளும் அவனது மடியினிலேயே விழுந்தாள். அவன் எழுந்து அவளைக் காண அவனது மடியினில் மயங்கிக் கிடந்தாள். நடந்த நிகழ்வில் அதிர்ந்த ராஜி அவளினை எழுப்பக் கரம் கொண்டு கன்னத்தில் தட்ட... சசி ஒடிச் சென்றுத் தண்ணீரினை எடுத்து வந்தாள். சசியிடம் நீரினை வாங்கிய ராஜி ரம்யாவின் முகத்தினில் தெளிக்க சிறிது முகம் அசைக்க... கண் திறந்தாள். அவளின் கரம் கொண்டு தன் ஷாக் அடித்தக் கரத்தினைத் தொட்டவள் உடல் சிலிர்த்தது. அவளின் உடல் மொழியினை அறிந்த வேதா அவளினை ஆறுதலாகத் தோளில் கரம் பதித்து அழுத்தினான்.
அவனின் கரம் தீண்டலில் தான்... தான் எங்கு இருக்கிறோம் என்று அவள் பார்க்க வேதாவின் மடியினில் சாய்ந்து இருந்தாள். வேகமாக அவள் எழ முயற்சிக்க முடியவில்லை. வேதாவே அவளைக் கரங்களில் தாங்கி எழுப்பி அருகில் அமர்த்தினான்.
அதன் பின் வேதா அவளை முறைத்துப் பார்க்கவும் ரம்யாவிற்கு உள்ளுக்குள் குளிர் எடுத்தது. ராஜி தான் அவள் அருகில் வந்தவள் நீரினைப் பருகக் கொடுத்தாள்.
"நாளைக்கே ஹாஸ்டல்ல ரிலீவ் ஆக பர்மிஷன் கேளு. ஒரு வாரத்துல நமக்குக் கல்யாணம்", என்று ரம்யாவினைப் பார்த்து அடிக் குரலில் கூறியவன் ராஜியிடம் திரும்பி "நான் நாளைக்கு வரேன்டா... வீட்டுக்கு", என்றவன் ராஜி புன்னகைத்து தலயினை அசைக்கவும் வேதா ராஜியின் தலையினைக் கோதியவன் சென்று விட்டான்.
ராஜியும் சசியும் ஆனந்தத்தில் ரம்யாவினை அணைத்துக் கொண்டு மகிழ.. ரம்யாவிற்கு மனதில் மகிழ்ச்சி இல்லை.
அவளின் முக பாவனையில் ராஜி யோசித்தாளும் ஷாக் ஆனதில் அப்படி இருக்கின்றாள் என்று நினைத்துக் கொண்டாள்.
அதன் பின் அவர்கள் அவரவர் வேலையினை முடிக்க நேரம் கடந்தது... கிளம்பும் நேரம் அவர்களுக்கு அருகில் ஒரு பெண்ணிடம் ஒருவன் வம்பு இழுத்துக் கொண்டு இருப்பது தெரிந்தது.. சசி அவனை நோக்கிச் செல்ல... அந்த நேரம் யுவா ராஜிக்கு அழைக்கவும் மொபைலை எடுத்துக் கொண்டு ஓரமாக நகர்ந்தாள்.
சசி அந்த இடத்தினை நோக்கிச் செல்ல ரம்யா அவளினைத் தடுத்தாள். சசி அவளைக் கண்களிலேயே முறைத்துப் பார்த்தவள் அவனின் அருகில் செல்ல... அவன் அப்பெண்ணிடம் வழி மறைத்தது மட்டும் இல்லாமல் அவளினைத் தொட்டு சிரித்துக் கொண்டே இருக்க.. அந்தப் பெண் அவனிடம் வழி விடச் சொல்லிக் கெஞ்சிக் கொண்டு இருப்பது தெரிந்தது..
அவனின் செயலில் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்றவள் அவனை தோளில் கை வைத்து திருப்பினாள். அவனைப் பார்த்து என்ன நடந்து உள்ளது என்று ஒரு நொடியில் அறிந்தவள் அருகில் ஒருவர் டீ குடித்துக் கொண்டு இருப்பதினைப் பார்த்து அவரருகில் சென்றவள் அதனைக் கேட்டுப் பெற்றுக் கொண்டு வந்தவள் அவனின் மார்பில் இருந்து கீழ் வரை டீயினை ஊற்ற... ஒரு நொடியில் இது நடக்க... அவன் சிறிது அதிர்ந்து பார்த்தான்.
அதன் பின் தான் அவனுக்கு புத்தி உரைக்க... ஷிட் என்றவன் அவளினை அடிக்கக் கரம் ஓங்க அவன் கரத்தினை தட்டி விட்டவள் அவனது கன்னத்தில் இவள் அறைந்து இருந்தாள். அங்கிருந்த அனைவரும் ஷாக் அகிப் பார்க்க... அவன் அத்தனை பேரின் முன்னிலையில் அவள் அறைந்ததில் கோபத்தினைக் கட்டுப்படுத்திக் கொண்டு திரும்பி விட்டான். அந்தப் பெண் அவள் வைத்திருந்த டீயினை அவன் திடீரென்று எதிரில் வரவும் தவறி அவன் மேல் கொட்டி இருக்க.. அதற்குத் தான் அவன் அப்படி நடந்து கொண்டு இருந்தான். அப்பெண்ணும் ஆயிரம் முறை சாரி கேட்டும் விட்டபாடில்லை.
"யாரும் எனக்கென்னனு இருக்கப்போ நீங்கள் தைரியமா அவனை அடித்தது கிரேட் சிஸ்டர். நானே இதை செய்து இருப்பேன்... எல்லாம் அம்மாவல" என்று அந்தப் பெண்ணினைத் தடுத்து நிறுத்தியத் தன் தாயினை முறைத்த வண்ணம் சசியிடம் ஒரு பெண் வந்து கூறிக் கொண்டு இருந்தாள்.
தலையினை மட்டும் அசைத்து அப்பெண்ணிடம் இருந்து திரும்பியவள் அவன் கோபமாக செல்வதைத் தான் பார்த்தாள். வழி மறைத்து வம்பு செய்யப்பட்டப் பெண் சசியிடம் வந்து நன்றி தெரிவிக்க... அவளினை ஆறுதலாக அணைத்து வழி அனுப்பி வைத்தாள்.
அனைத்தும் முடிந்து இருக்க.. அப்பொழுதும் ரம்யா சசியினை நினைத்து தான் வருந்தினாள். அவன் கோபமாகச் செல்வதினை பார்த்தால் இதனை லேசில் விடமாட்டான் போலவே என்று நினைத்தவள் மனதிற்குள் பயபந்து உருண்டது. ஆனால் அதற்கு நேர் எதிர் சசி மனம் அவனின் மேல் ஆத்திரமாக இருப்பது மட்டும் அல்லாமல் அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கும் நபர்களின் மேல் அடங்காத கோபம் வர விருவிருவென்று ரம்யாவின் கரத்தினைப் பற்றி அந்த இடம் விட்டு நகர்ந்தாள். ராஜிக்கு நடந்த சம்பவம் எதுவும் தெரியாது... அவள் யுவாவிடம் பேசிவிட்டு அப்பொழுதுதான் வர அவளினை அழைத்துக் கொண்டு மூவரும் வீட்டினை அடைந்தனர்.
ராஜி வீட்டிற்கு வர பரணி மட்டும் டிவி பார்த்துக் கொண்டு இருக்க.. அவள் வரவினை அறிந்தவன் டீ கொண்டு வந்து தர அதனைப் பருகிக் கொண்டே இருவரும் டீவி பார்த்துக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் செய்தியினைப் பார்த்துக் கொண்டு இருக்க... அமுதன் அப்பொழுது தான் கீழே வந்தான். அவனை ஓரக் கண்ணில் பார்த்தவள் அமைதியாக டீவியினைப் பார்த்துக் கொண்டு இருக்க... பரணி அவனுக்கும் டீ எடுத்துக் கொண்டு வந்து தர அமுதன் ராஜி அமர்ந்திருந்த சோபாவில் அமராமல் அவர்களுக்கு அருகில் இருந்த சோபாவில் அமர்ந்தவன் செய்தியினை ஆர்வமாக கவனித்துக் கொண்டு இருக்க... பரணியும் ராஜியும் அங்கேயே தூங்கி விட்டிருந்தனர்.
அவர்களினைப் பார்த்த அமுதனுக்கு இருவரும் குழந்தையாகவே தெரிய... இனி ராஜியின் வாழ்க்கை சுழலும் நிலையினை நினைத்து மனதில் சிறிது வலி எழ... இருப்பினும் அவன் அவனது முடிவினை மாற்றினான் இல்லை. பெரும் மூச்சு ஒன்றினை எடுத்துவிட்டவன் பரணியினை எழுப்பி அறைக்குச் செல்ல சொல்லிக் கூறியவன் ராஜியினைக் கரங்களில் ஏந்தியவன் அறையில் உறங்க வைத்தான். அவளின் மாசு மருவற்ற முகத்தினை மிக அருகில் பார்த்துக் கொண்டே இருந்தவன்... பின் பால்கனிக்குச் சென்று விட்டான்.
இரவில் உண்ண ராணி அழைக்க....சாப்பிட்டு அதன்பின் அனைவரும் உறங்கிவிட்டிருக்க.. ராஜி அமுதனின் ஆழ்ந்தத் தூக்கத்தினை கவனித்து அவனின் பக்கம் இருந்த வாலட்டினை கையில் எடுத்தவள் அதில் சாவியினைத் தேடினாள். அவளின் கரத்திற்கு ஒரு பெண்டன்ட் மட்டும் அழகாய் தெரிய அதனைக் கையில் எடுத்து பத்திரப் படுத்திக் கொண்டு மிக நுண்ணிய ஊசி போன்று இருந்த அந்த சாவியினைக் கையில் எடுத்தவள் அதனின் வடிவில் கொஞ்சம் ஷாக் ஆகத் தான் செய்தாள். இப்படியும் ஒரு சாவியா என்று...
பின்னே வாட்றோப் பின் ஒரு அறை உண்டு என்று பரணி சொல்லியும் அவள் கண்ணுக்கு அப்படி ஒன்றும் தெரியவில்லை.. என்னடா இது என்று யோசித்தவள் காலையில் அவன் குளிக்கச் சென்ற நேரம் தான் அவள் கண்ணுக்கு மிக நுண்ணிய ஓட்டை அந்த சுவற்றினில் இருப்பது தெரிந்தது... என்னவாக இருக்கும் என்று பல முறை ஆராய்ச்சி செய்ய அமுதன் கதவு திறக்கும் சப்தம் கேட்டு மாயமனாள். அதனை யுவா மாலையில் அழைக்க அவனிடம் மிக நுண்ணிய ஓட்டை அறையில் வைப்பார்களா என கேட்க.. அவனும் ஆம் அதற்கு டிஜிட்டல் லாக் செய்யப் பட்டு கீ கொடுத்து இருப்பாங்க எனவும்... அதன்படி தான் அவளும் அவனின் வாலட்டினை எடுத்து சாவியினைக் கையில் எடுத்து இருந்தாள். அதன்பின் சமத்தாக உறங்கியும் போனாள்...
அவனறியவில்லை என்று அவள் உறங்க அனைத்தினையும் அறிந்தவன் எதுவும் தெரியாதவாறு உறங்கிக் கொண்டு இருந்தான்....
முதலும் காதலாய் மாறுமோ
காதலும் கடந்து செல்லுமோ
கடந்துசெல்ல பிரிவும் உண்டோ
பிரிவும் வலியில் சேருமோ !!!
கையில் ஏந்துவான் !
தங்களின் கருத்தினைக் காண ஆவலுடன் உங்களின் நிவி
Sryyy for the late
ini crct ah daily update kudukaren... illana neenga enna tharalama thittalam
Anaal me paavam
நிவிராமின் "கையில் நான் ஏந்தும் காதல் நீதானே " - கருத்துத்திரி
ஹாய் மக்களே🤗... நிறை குறை கூறி என்னை செதுக்கும் உளி நீங்களே... என்னை செதுக்கத் தயாராகுங்கள்😘😘😘 என்றும் உங்களின் நிவி🤗
www.srikalatamilnovel.com