ஒற்றன் குறுநாவல் தொடர் - கடைசி அத்தியாயம்..
நேரம் சரியாக 1௦ மணி . ஓடிக்கொண்டிருக்கும் கடிகார முள்ளின் சப்தம் கேட்கும் அளவுக்கு , அமைதி நிலவியிருந்தது . ஒவ்வொரு நொடியும் திக் திக் என்றிருந்தது. எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள் .
எல்லாரும் பதற்றத்தின் உச்சத்தில் இருந்த நேரம் , சப்-இன்ஸ்பெக்டர் குமார் , மெல்ல இன்ஸ்பெக்டர் ரவியின் தோளைத் தொட்டார் . என்னவென்று திரும்பிப் பார்த்தார் ரவி . திடீரென்று , குமார் தன் தலையில் மாட்டியிருந்த தொப்பியை கழற்றினார் . முன்பிருந்த பதற்றம் துளிகூட இல்லை . தன் காக்கிச் சட்டையில் இருந்த முதல் ரெண்டு பட்டன்களை கழற்ற ஆரம்பித்தார் . ஒரு அசாதாரணமான தைரியம் அவரைத் தொற்றியிருந்தது . தன் போலீஸ் துப்பாக்கியை கையில் எடுத்து இன்ஸ்பெக்டர் ரவியின் முன் நீட்டினார் .
இன்ஸ்பெக்டர் ரவி : (பதற்றமான குரலில் ) என்ன பண்றீங்க குமார் ?
WHAT ARE U DOING ?
(மெல்ல சிரித்தபடி) SORRY சார் ! என்று சொல்லிவிட்டு , தன்னிடமிருந்த தொப்பியையும் , துப்பாக்கியையும் இன்ஸ்பெக்டர் ரவியிடம் கொடுத்துவிட்டு,
JUDGEMENT ஏரியாவை நோக்கி கம்பீரமாக நடக்க ஆரம்பித்தார் குமார் .
குமார் ! குமார் ! நில்லுங்க ! என்றே அவரைப், பின் தொடர்ந்தார் ரவி .
கேமாராக்காரர்கள் , இந்த காட்சியை நேரலையில் ஒளிபரப்பினார்கள் .
இப்போது எல்லாருடைய கண்களும் சப்-இன்ஸ்பெக்டர் குமாரையே உற்று நோக்கியிருந்தது .
இன்ஸ்பெக்டர் ரவியின் குரலுக்கு , செவி கொடுக்காமல் , வேகமாக உள்ளே சென்றார் குமார் . குமாரின் இந்த விசித்திரமான செயலைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரவி , அவரை தடுக்குமாறு நீதிமன்ற மெய்காப்பாளர்களுக்கு செய்கையால் உத்தரவிட்டார். நீதிமன்ற காவலர்கள் அவரை தடுக்க முற்பட்டனர் . அவர்களை மீறி அவர் உள்ளே நுழைய முயன்றார் . இந்த போராட்டத்தைக் கண்ட நீதிபதிகள் , குமாரை உள்ளே வர அனுமதித்தனர் . எந்த வித சலனமும் இல்லாமல் , திடீரென்று குற்றவாளிக் கூண்டில் ஏறி நின்றார் சப்-இன்ஸ்பெக்டர் குமார். அனைவர் முகத்திலும் ஆச்சர்யம் தொற்றியிருந்தது.
அங்கிருந்த நீதிபதிகளுள் ஒருவர் , ஹ்ம்ம் ! சொல்லுங்க ! எதையோ சொல்ல வந்தீங்க ! தைரியமா சொல்லுங்க !
ஒரு நிமிடம் அமைதியாக கடந்திருந்தது
.
சப்-இன்ஸ்பெக்டர் குமார் பேச ஆரம்பித்திருந்தார்
.
“ MLA மார்த்தாண்டம் போன்ற
, அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து
,விடியலுக்காக காத்திருந்த
, துடியலூர் மக்களில் நானும் ஒருவன்
. இன்று
“ ஒற்றன் ” என்ற பெயரில்
, வேறு வடிவில் வந்திருக்கின்றேன் என்றார் பெருமிதத்தோடு
.
நீதிபதிகள் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது
. உள்ளே அமர்ந்திருந்த சற்குணம் ஐயா
, இந்த பதிலைக் கேட்டதும்
, மகிழ்ச்சி வெள்ளத்தால் நமச்சிவாயத்தின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்
.நம்முடைய குமாரா இதயெல்லாம் செய்தது ? என்று பூரித்துப் போனார்கள் இருவரும்
. .. இருவருடைய கண்களிலும் கண்ணீர் தேங்கியிருந்தது
. ......
இருண்டு போயிருந்தார் இன்ஸ்பெக்டர் ரவி
. குமார் ஒற்றனா ?????????? புரியாத புதிராய் இருந்தது அவருக்கு
. சட்டென்று , அங்கிருந்த நாற்காலியில் பிரம்மை பிடித்தவர் போன்று அமர்ந்திருந்தார்
.
இதை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த புண்ணியகோடியின்இதயத்துடிப்பு
, ஒரு நிமிடம் நின்று
, மீண்டும் சீரான நிலைக்கு திரும்பியிருந்தது
. தன் 27 வருட அரசியல் வாழக்கையில்
, அவர் கண்டிராத ஒரு அதிர்ச்சி
. தன்னை சுயநினைவுக்கு கொண்டு வரவே சில நிமிடங்கள் ஆயிருந்தன
.
வெளியே பெரிய திரையில் பார்த்துக்கொண்டிருந்த , கோர்ட் வளாகமே ஒரே இன்ப அதிர்ச்சியில் மூழ்கியிருந்தது
. ஒற்றன் ! ஒற்றன் ! என்ற குரல்கள் விண்ணைப் பிளந்துகொண்டிருந்தது
. இரண்டு நிமிடங்களாகியும் ஆரவாரம் அடங்கியபாடில்லை
. காவலர்கள் கூச்சலைக் கட்டுப்படுத்த போராடிக்கொண்டிருந்தார்கள்
.
நிலைமையை உணர்ந்த குமார்
, கேமராவைப் பார்த்து தன் கையை கீழ்நோக்கி அசைத்தார்
. அடைமழை பேய்ந்து ஓய்ந்ததைப் போல ஆரவாரம் தணிந்திருந்தது
.
அங்கிருந்த அரசு தரப்பு வழக்கறிஞர் , தன் விசாரணையை தொடங்கியிருந்தார்
.
வழக்கறிஞர் : என்னதான் ! உங்க போராட்டத்தோட நோக்கம் , நியாயமானதாக இருந்தாலும் ,........ அது சட்ட விரோதமானதுன்னு உங்களுக்கு தெரியாதா ?
ஒற்றன் : ஏன்
? குருசேத்திர யுத்தத்தில கூட தான்
, தர்மத்த காப்பாத்தறதுக்காக
, சில முரணான வழிகள் தேவைப்பட்டுச்சு
..... ஐயா......
! சட்டத்துக்கு புறம்பா நடக்குற சில விசயங்களுக்கு
,அதோட வழியில தான் நாம முற்றுப்புள்ளி வச்சாகணும்
.
வழக்கறிஞர் : அதுக்காக நீங்க என்ன செஞ்சாலும் அது நியாயமாகிடுமா
? ஒரு பொறுப்பான போலீஸ் ஆபீசர் நீங்க
.. நீங்களே இப்படி பண்ணீங்கன்னா
? பொதுமக்களுக்கு எப்படி காவல்துறை மேல நம்பிக்கை வரும்
?
ஒற்றன் : போலீஸ்காரன்னு வேணும்னா சொல்லுங்க
! . ஆனால் பொறுப்பான போலீஸ்காரன்னு தயவு செஞ்சு சொல்லாதீங்க
. எங்கய்யா ! எங்களோட பொறுப்புகள பார்க்க விட்டாங்க
? என்னைக்கு இந்த காக்கிச் சட்டையப் போட ஆரம்பிச்சோமோ
! அன்னிக்கே இந்த பொறுப்பு
, பருப்பு எல்லாத்தையும் குழி தோண்டி , பொதச்சுட்டுத் தான் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்
. இன்னிக்கு வரைக்கும்
,அரசியல்வாதிகளோட அடிமாடாத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
.கிரிமினல்-குற்றம் பண்ணவனெல்லாம்
, இன்னிக்கு அரசியல்வாதிகளோட சிபாரிசுல
, வெளியில சுதந்திரமா நடமாடிக்கிட்டு இருக்காங்க
. எங்கள நேருக்கு நேர் பார்த்து சவால் விட்றானுங்க
.எதிர்த்து கேட்டா
, தண்ணியில்லாத காட்டுக்கு மாத்திருவேன்னு பயமுறுத்தறாங்க
.
வழக்கறிஞர் : அதெல்லாம் இருக்கட்டும்
. ஏன்
? நீங்க நேர்மையான வழியில இந்த போராட்டத்த தொடங்கியிருக்கலாமே
?
ஒற்றன் : நேர்மையான வழி
.... (உரக்க சிரித்தார் குமார்
...)
அங்க பாருங்க
! என்று சற்குணம் ஐயாவை நோக்கி
, கையைக் காட்டினார்
.
அதோ
, நேர்மையான வழியில போராடின
, என்னோட தமிழ் வாத்தியார பாருங்க
.......
இச்சகத்துள்ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும் , துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும் , உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் , அச்சமில்லை ! அச்சமில்லை ! அச்சமென்பதில்லையே ! என்று எங்களுக்கு சொல்லிக்குடுத்த அந்த மனுசனப் பாருங்க
. கிட்டத்தட்ட அவர நடக்க முடியாத அளவுக்கு பண்ணிட்டானுங்க
. அறவழியில போராடி இதுவரைக்கும் நாம என்ன சாதிச்சோம் நீங்களே சொல்லுங்க
?
வழக்கறிஞர் : (யோசித்துவிட்டு
.... ) அறவழியில போராடித்தான்
, நாம சுதந்திரமே வாங்கணும்
.
ஒற்றன் : சட்டம் படிச்ச நீங்களே
.... இப்படி பதில் சொல்றது ஆச்சர்யமா இருக்குது
. அறவழியிலயா நாம சுதந்திரம் வாங்கினோம்
? நல்லா யோசிச்சு பாருங்க
. வீரபாண்டிய கட்டபொம்மன்
.... நேதாஜி
.... பகத்சிங்
.... போன்றவர்கள் எல்லாம்
, இன்றைக்கு மறைக்கப்பட்ட வரலாறுகள்
. நாட்டோட விடுதலைக்காக
, இன்னும் எத்தனயோ பேர் தன்னோட உயிரைக்கூட பொருட்படுத்தாம போராடியிருக்கிறார்கள்
. அவங்களோட தன்னலமற்ற உயிர் தியாகத்தாலதான், இன்னிக்கு நாம சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்
. அத விட்டுட்டு, இன்னும் அறப்போராட்டம்
, அகிம்சைனு நாம பேசிட்டு இருக்கோம்
.காரணம் அரசியல் தான்
. ஒற்றனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் வெளியே கைதட்டல்கள் அதிகரித்திருந்தது
. தமிழ் ஆசிரியர்களால் தான்
, இன்றைக்கும் நமது நாட்டில் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கின்றது
.
அவர்களுடைய கோபம் சாதாரணமானது அல்ல
, என்பதற்காகத் தான் இந்த போராட்டத்தை நாங்கள் கையில் எடுத்தோம்
.
கடந்த ஜனவரி 26
, நான் படித்த துடியலூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் , குடியரசு தின விழா நிகழ்ச்சி நடந்தது
. அதில் நானும் எனது பள்ளித் தோழர்களான விஜயனும்
, மலர்விழியும் கலந்து கொண்டோம்
.அப்பொழுது தான் MLA மார்த்தாண்டம் அங்கு நடத்துகின்ற அட்டூழியங்கள் அனைத்தையும் நாங்கள் தெரிந்து கொண்டோம்
. MLA மார்த்தாண்டத்துக்கு
, தக்க பாடம் கற்பிக்க வேண்டும் என்று நானும்
,விஜயனும் முடிவு செய்தோம்
. அதற்கான சந்தர்பத்தை எதிர்நோக்கி காத்திருந்தோம்
. திடீரென்று ஒரு நாள் மலர்விழி எங்களுக்கு போன் பண்ணியிருந்தாள்
. அறிவியலில் அதீத ஆர்வம் கொண்ட அவள்
, பிரேதப் பரிசோதனை ரிப்போர்ட்டில் இருந்த அக்டோசின் ரசாயனத்தின் உண்மையைக் கண்டுபிடித்திருந்தாள்
. இது எங்களின் போராட்டத்துக்கு அதிகம் வழு சேர்த்திருந்தது
.
சில வருடங்களுக்கு முன்
, அமெரிக்காவில் நடந்த சர்வதேச பாதுகாப்பு தின விழாவில்
, கலந்துகொள்ள எனக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது
. அதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பாதுகாப்பு வீரர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்
. அதில் சிரியாவைச் சேர்ந்த ஒருவரின்
,அறிமுகம் எனக்கு கிடைத்தது
. நாளடைவில் அது நட்பாக மாறியது
.
ஒற்றன் இணையத்தளம் உருவாவதற்கு
, எனக்கு அவன் தான் உதவி புரிந்தான்
. ISIS இயக்கத்தின் பிடியில் சிரியா இருந்த போதும் கூட எனக்காக அவன் இந்த உதவியை செய்தான்
. இணையதளத்துக்கு தேவையான அனைத்து விவரங்களையும் நான் அவனுக்கு
, E-MAIL மூலமாக அவனுக்கு UPDATE பண்ணிருவேன்
. அவன் அதை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவான்
. இப்படித்தான்
WWW.ஒற்றன்.COM உருவானது
.
ஏப்ரல் 3௦ சனிக்கிழமை இரவு
, MLA மார்த்தாண்டத்தை நாங்கள் கடத்தினோம்
.
இன்று மார்த்தாண்டமும்
, டிரைவர் கதிரேசனும் என்னுடைய வீட்டில்தான் நலமாக இருக்கிறார்கள்
.
இன்னும் பல முகத்திரைகள் கிழிக்கப்படவிருக்கின்றன
. இதோ இந்த ஆடியோவ கேளுங்க
. கோர்ட் வளாகத்திலேயே என்னை கொலை செய்ய
, என்னிடமே ஆயுதம் கொடுத்து அனுப்பியிருக்கிறார் ஒரு அமைச்சர்
. இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கின் நிலை எப்படி இருக்கின்றது என்பதற்கு இந்த ஆடியோ ஆதாரமே ஒரு சாட்சி என்று பாக்கெட்டில் இருந்து ஒரு PENDDRIVE-ஐ குடுத்தார்
.
மறுமுனையில் ஆடியோ ஆதாரம் PLAY ஆனது
.
புண்ணியகோடியும்
, சப்-இன்ஸ்பெக்டர் குமாரும் பேசிய பேச்சுக்கள் அதில் பதிவாயிருந்தன
. நீதிமன்றமே அதிர்ச்சியில் உறைந்திருந்தது
.
நான் செய்தது சட்டம் ஒழுங்குக்கு முரணானது தான் என்கிறீர்கள்
.இப்பொழுது சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் புண்ணியகோடி
, பேசியபேச்சுக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகுறீர்கள்
?
நீதிமன்றம் எனக்கு என்ன தண்டனை குடுத்தாலும்
, அதை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன்
. எனக்காக யாரும் எந்த விதமான போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம்
. இணையத்தால் இணைந்தோம் , இன்று இதயத்தால் இணைகிறோம்
. இதுவரை எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி
. என்று முடித்தார் சப்-இன்ஸ்பெக்டர் குமார்
.
வழக்கை தீர விசாரித்த நீதிபதிகள்
, 15 நிமிட நேரத்துக்குப் பிறகு தீர்ப்பை வழங்கினார்கள்
.
தீர்ப்பின் விவரம் பின்வருமாறு
,
“ அமைச்சர் புண்ணியகோடி இருபத்தி நான்கு மணிநேரத்தில்
, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு
, நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று தீர்ப்பளித்திருந்தார்கள்
, ஒற்றனின் போராட்டம் நியாயமானது என்றாலும்
, சட்டம் ஒழுங்குக்கு முரணான வகையில் நடந்து கொண்டதால்
, சப் –இன்ஸ்பெக்டர் குமார் , விஜயன் ,மற்றும் மலர்விழி
,இவர்கள் மூவருக்கும் 6 மாத சிறை தண்டனையை அளித்திருந்தது
.
சப்-இன்ஸ்பெக்டர் குமார் கைகளை உயரே தூக்கி, வணங்கிவிட்டு கூண்டை விட்டு வெளியேறினார்
.
இன்ஸ்பெக்டர் ரவி எதிர்பட்டார்
.
சப்-இன்ஸ்பெக்டர் குமார் : சார் ! என்ன மன்னிசிருங்க ! உங்கள நான் ஏமாத்திட்டேன் என்றார் கண்ணீருடன் .
இன்ஸ்பெக்டர் ரவி சற்றும் எதிர்பாராமல் , தன் கைகளை உயர்த்தி SALUTE அடித்தார் . அவர் கண்களில் உண்மையான ஒரு தலைவனைப் பார்த்த ஆனந்தம் தெரிந்தது
. குமாரின் உள்ளம் நெகிழ்ந்திருந்தது
.
சற்குணம் ஐயா குமாரையும் , விஜயனையும் கட்டி அணைத்துக் கொண்டார் . மின்னல் டிவியின் நிர்வாக இயக்குனர் நாராயணன் இவர்கள் மூவரோடு ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு அவர்களை வழியனுப்பினார் . இன்ஸ்பெக்டர் ரவி இவர்கள் மூவரையும் , வெளியே அழைத்துக் கொண்டு வந்தார் . வெளியே பொதுமக்களின் ஆரவாரம் விண்ணைப் பிளந்திருந்தது . அவர்கள் அனைவரையும் பார்த்து , வணங்கி விட்டு மூவரும் போலீஸ் வாகனத்தில் ஏறினார்கள் . கோவை மத்திய் சிறைச்சாலையை நோக்கி வேன் வேகமாக பறந்திருந்தது .
மூன்று நாள் சுவாரஸ்யம் முடிவுக்கு வந்தது , காவல்துறையில் ஒற்றன் ??? என்று பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகி இருந்தன .
அடுத்து துடியலூர் தொகுதியில் , இடைத்தேர்தல் வந்தது .
சுயட்சையாக போட்டியிட்ட , ரத்தினம் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .
-
முற்றும் -
இந்த நாவல் உங்களுக்கு ஒரு நல்ல பொழுது போக்கை அளித்திருக்கும் என்று நான் நம்புகிறேன் . முடிந்தால், உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் . உங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கிறேன் .
இப்படிக்கு
பூபதி கோவை .
boopathycovai@gmail.com
+91-7299543057