All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிஜெகதீஷின் முகில் இல்லா புயல் கதை திரி

Mathijagadheesh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகில் இல்லா புயல்
நாயகன் விஷ்வா
நாயகி ஆதிரா
 
Last edited:

Mathijagadheesh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று




சென்னைக்கே உரிய பரபரப்புடன் துவங்கி இருந்த காலை பொழுதில் தனது அன்றாட செயல்களான தியானம் உடற்பயிற்சி ஆகியவற்றை முடித்துக்கொண்டு அலுவலக பணியை துவங்குவதற்காக ஆயத்தமாகி கொண்டிருந்தான் விஷ்வா…


செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கும் சென்னையின் நடுப்பகுதியில் அமைந்திருந்தது அனைத்து வசதிகளையும் தனக்குள் உள்ளடக்கியிருந்த அந்த மாளிகை,


விஷ்வா...விஷ்வா…. ப்ளீஸ்...என் பட்டு இல்ல,என் தங்கம்இல்ல என கொஞ்சலான மொழியில் கெஞ்சி கொண்டு,பூனை குட்டி ஒன்று தன் எஜமானனை சுற்றி வருவதைப்போல சுற்றி கொண்டிருந்தவளை,சிறு புன்னகையுடன் ரசித்தவாறு அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தான்…


விஷ்வா..இந்த ஷேட் போட்டுக்கோ,இரு நானே நான் போட்டுவிடுறேன்,விஷ்வா இந்தா வாட்ச்,விஷ்வா..இந்தா கார் கீ என அவன் அடுத்து செய்ய இருக்கும் ஒவ்வொரு செயலையும் தனதாக்கி செய்து கொண்டு சிறு குழந்தையின் முக பாவனையுடன் சுற்றிக்கொண்டிருந்தவளை கண்டு பொங்கிய காதலை இனியும் கட்டுப்படுத்த இயலாது,சிறிதாக உதட்டுக்கு அடியில் ஒட்டியிருந்த புன்னகையை பெரிதாக்கி,இதழ் பிரித்து சிரித்தவனை கண்டவள்,


விஷ்வா...சிரிச்சுட்டியா!அப்பா...உன்னை சிரிக்க வைக்கிறதுக்குள்ள என செல்லமாக முறைத்தவளது கை பற்றி இழுத்தவன்,


ஹே பொண்டாட்டி,ஏதாச்சும் செஞ்சு என்னை டென்ஷன் பண்ண வேண்டியது,ஏன் டி என்கிட்ட சொல்லாம ஊருக்கு போன?



அது இல்ல விஷ்வா, “அம்மாக்கு உடம்பு முடியலன்னு குப்பு அண்ணா போன் செய்ஞ்சாங்க,அதான் அவசரமா ஊருக்கு போய்ட்டேன்,பதட்டத்தில உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்”…


அதுக்கு தான் அத்தைய இங்க வர சொல்லி கூப்பிடறேன்,இங்க இருந்தா நாமளே பாத்துக்கலாம்,நீயும் இப்படி அவசரமா,பதட்டம் இல்லாம இருக்கலாம்,


நானும் எத்தனையோ முறை கூப்டுட்டேன் விஷ்வா,அவங்க அந்த வீட்டை விட்டு வர மாட்றாங்க,அப்பகூட வாழ்ந்த இடம், அதனால அங்க தான் இருப்பேன்னு பிடிவாதமா இருகாங்க,அதுக்காக தான் நானும் குப்புசாமி அண்ணனையும்,அவங்க மனைவி அன்னம் அக்காவையும் அங்கேயே தங்கி பாத்துக்க சொல்லிருக்கேன்,


அத்தைக்கு உடம்பு எப்படி இருக்கு?


அதான் போன்லயே சொன்னேனே விஷ்வா,இப்போ பரவால்ல கொஞ்சம் பிபி அதிகமாகி மயக்கம் வந்துருச்சு,அப்புறம் நான் ரெண்டு நாள் பக்கத்துல இருந்து பாத்துக்கிட்டதும் சரி ஆயிடுச்சு...


சரி விடு அம்மு அவங்க பீலிங்கையும் நாம புரிஞ்சுக்கணும்ல,நீ ஊருக்கு போனது தப்பு இல்ல,ஆனா போறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருந்தா நான் அதுக்கு ஏத்த மாதிரி உனக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செஞ்சு அனுப்பியிருப்பேன்,ஆனா நீ அங்க போயிட்டு சாவகாசமா போன் பண்ணி சொல்ற !அதான் எனக்கு கோபம் வந்துருச்சு,அப்புறம்,என் புருஷன் கோபக்காரன்னு என் பின்னாடியே சுத்த வேண்டியது,சேட்டைக்காரி,என்னை ஒழுங்கா கோபப்பட கூட விடமாற்றியே டி,ராட்சஷி,என்றவனின் பார்வை தன்னவளை சிவக்க வைக்க,அங்கு அரங்கேறிய அனைத்திற்கும் அவர்களே பொறுப்பாகினர்…


கணவன் அலுவலகத்திற்கு சென்றதும் அவளுக்கென்று பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த அறைக்கு சென்றாள்,


தன்னவளின் ரசனைக்கு ஏற்ப பல வகையான புத்தகங்கள் ஒரு பக்க சுவர் முழுதும் மர சட்டகங்களுக்குள் சிறைவைக்க பட்டிருக்க,அமர்ந்து படிப்பதற்கான இருக்கை தோட்டத்தை பார்த்தவாறு இடது பக்கம் நாற்காலி,மேசையுடன் போடப்பட்டிருந்தது,அதற்கு நேராக வலது புறம் ஊஞ்சளுடன் ஆனா இருக்கை போடப்பட்டிருந்தது,

அறையின் மற்றொரு பகுதி வரைவதற்கான உபகரணங்களுடன் அமைக்கப்பட்டிருந்தது…



சிறு வயதிலிருந்தே ஆதிராவிற்கு ஓவியத்தின் மீது அலாதி பிரியம்,முறைப்படி ஓவியம் கற்று கொண்டவள்,இதுவரை தான் வரைந்தவற்றை கொண்டு வீட்டை அழகு படுத்துவதும்,அன்பளிப்புக்குமே வரைவாள்,ஒரு முறை கூட அதை பணமாகியதில்லை,அதற்கான அவசியமும் ஏற்பட்டதில்லை...


எல்லாவற்றிலும் வியாபார நோக்கத்தை அணுகுபவன் தன்னவளிடம் மட்டும் ரசனைக்கு அப்பாற்பட்டு செயல்பட மாட்டான்…


தற்போதைய மனநிலைக்கு ஏற்ப சிறைவைக்க பட்டிருக்கும் புத்தகங்களுக்கு விடுதலை அளித்து கை சிறையில் இட்டு இயற்கையை ரசித்து கொண்டே வாசிப்பதில் அலாதி இன்பம் என்பாள்…


ஆதிரா இயற்கையிலேயே பேரழகி,வட்ட கருவிழி,பட்டு நூலை போன்ற கற்றை கூந்தல் இடை தழுவியிருக்க,பளிங்கு கன்னம், புன்னகை சிந்துகையில் விழும் கன்ன குழி ,இயற்கையிலேயே சிவந்த உதடுகள்,முகத்திற்கு ஏற்ற அளவான நாசி,பிறந்த குழந்தையின் மேனியின் மென்மை ஒத்திருக்கும் பெண்ணவளின் தேகம்,மொத்தத்தில் ஐந்து அடி அழகு பெட்டகம்...



மனதில் தோன்றுபவற்றை எந்த தயக்கமும் இன்றி முகத்திற்கு நேராக கூறிவிடுவாள்,தவறு என்றால் அது கணவனாக இருந்தாலும் சரி தாயாக இருந்தாலும் சரி தண்டனை கிடைக்க வேண்டும் என எண்ணம் கொண்டவள்…



மதுரை,திருமங்கலம் எனும் ஊரை சொந்த பிறப்பிடமாக கொண்டவள் ஆதிரா...



ஆதிசங்கரன்,பூங்கோதையின் ஒரே இளவரசி ஆதிரா, தந்தையின் தைரியத்தையும்,அன்னையின் அழகையும் கொண்டு வளர்ந்தவள்,ஆதிசங்கரன் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வீர மரணம் அடைந்தார்,தன் பதியை இழந்த அன்றில் இருந்து மனதளவில் மறித்து போனவர் , தனது பதின்ம வயதில் இருந்த பெண் குழந்தைக்காக வாழ ஆரம்பித்தார்…



சிறு வயதிலிருந்தே தந்தையின் அறிவுரைகளையும்,தைரியத்தையும் பெற்றவள்,மன தைரியத்துடன் வளர்ந்தாள்,தந்தையின் பசுமையான நினைவுகளை மனதில் பத்திரப்படுத்தியவள்,தனது தாய் துவண்டு விடும் நேரங்களில் அவருக்கே தாயாக மாறி போவாள்,வழி வழியாக நில புலன்களை கொண்ட செல்வந்தர்கள் ஆதலால் அவர்களின் வாழ்வதாரத்திற்கு பஞ்சம் ஏற்படவில்லை,தோட்டங்களை குத்தகைக்கு விட்டும்,பெரிய வீடாக இருந்ததை சிறு சிறு சீரமைப்பு செய்து ஒரு பகுதியில் தாயும் மகளும் இருந்து கொண்டு மீதமிருந்த இரண்டு பிரிவை வாடகைக்கு விட்டும் அதில் வரும் வருமானத்தை வைத்தும், தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனர்…




மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் தனது MBA படிப்பை முடித்தவள்,பல நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பிக்க சென்னைலயில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணி கிடைக்கவே முதலில் தான் மட்டும் சென்னைக்கு வந்து மகளிர் விடுதியில் தங்கி பணி புரிந்தாள்,அதுவே அவள் வாழ்க்கையின் திசையை மாற்றியது,அதனால் அவள் அடைந்தது?






இன்று…



ஏம்மா...உனக்கு எத்தனை முறை சொல்றது?மணி அடிச்சா சாப்பிட போக மாட்டியா?போ போ என முகத்தில் கடுமையை காட்டி விரட்டியவரிடம் எதுவும் பேச தோன்றாது தனது ஆறு மாத மகவை சுமந்து கொண்டு உணவு வழங்கும் இடத்திற்கு சென்றாள் …


வரிசையில் நின்று உணவை வாங்கியதும் அவள் வழக்கமாக அமரும் அந்த மற்ற நிழலில் அமர்ந்தவள் தனக்குள் இருக்கும் சிசுவின் தேவை அறிந்து உணவு உண்ட பின் சற்று நேரம் ஓய்வாக’ மரத்தில் சாய்ந்து அமர்ந்தாள்…


மூடிய விழிகளுக்குள் தன்னவனின் பிம்பம் நிறைந்து கண்ணீராக’ கன்னத்தில் இறங்கியது…


“உன் கன்னத்துக்குள்ள என்னத்தடி ஒளிச்சு வச்சுருக்க?குண்டு குண்டா குழந்தை கன்னம் மாறி இருக்கு!”,என்றபடி தன்னவன்

முத்தமிடும் கன்னங்கள், இன்று இருக்கிறதா இல்லையா என்று தோன்றும் வண்ணம் ஒட்டி,உடல் மெலிந்து,பல மாதங்களாக உறக்கத்தை தொலைத்த விழிகளுக்கு தண்டனை வழங்கியது போல கண்களுக்கு அடியில் கருவளையம் தோன்றி அடையாளமே தெரியாது உரு மாறி போனாள்…


கணவனை வெறுக்கவும் இயலாது,நினைத்து உருகவும் இயலாது தனக்குள் உருகி போனாள்,தான் செய்த பாவம் என்ன?அவனை மணந்தது தான் தான் செய்த பிழையா?அதற்கு இத்தனை பெரிய தண்டனையா!


இந்த தண்டனையை தான் ஏற்பதிலும் ஓர் நியதி இருக்கிறது,ஆனால் இந்த குழந்தைக்கு ஏன் இத்தனை பெரிய தண்டனை !என் கருவில் வளர்வதினாலா?என்று தனக்குள் சிந்தித்தவளாக கண்ணீர் வடிக்க,கைகள் அதன் போக்கில் மகவை சுமந்திருக்கும் இடத்தை தடவி கொடுக்க,



எப்படி துவங்கிய வாழ்வு! ஆனால்? இன்று தான் இருக்கும் நிலையை எண்ணி ஆயிரமாவது முறையாக வருந்தியவளாக கண்ணீர் சிந்தினாள்…


வருவாள்...
 

Mathijagadheesh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பகுதி 2

அன்று


துவங்கிய குறுகிய காலத்திலேயே சென்னையில் பிரபலமான அந்த கட்டுமான நிறுவனத்தில் கணக்காளர் பிரிவில் பணியில் அமர்ந்தாள் ஆதிரா…



பணிக்கு சேர்ந்த குறுகிய நாட்களிலேயே மேலாளரிடம் நன் மதிப்பை பெற்று அந்த பிரிவில் இன்றியமையாதவளாக மாறி போனாள்…


மகளிர் விடுதி நண்பர்கள்,நிறுவனத்தில் உடன் பணி புரியும் நண்பர்கள் என ஒருநண்பர் பட்டாளத்தையே கொண்டிருந்தாள் ,அலுவலகம்,மாலை நண்பர்களுடன் கோவில்,விடுமுறை நாட்களில் அன்னையை பார்க்க சென்றுவிடுவாள்,அப்படி செல்லாத நாட்களில் மால்,சினிமா என ஆதிராவின் நாட்கள் அழகாக சென்று கொண்டிருந்தது…


Vk கன்ஸ்ட்ரக்ஷன், நண்பர்கள் இருவரும் இணைந்து துவங்க பட்ட நிறுவனம்,பல கிளைகளுடன் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது,


அதுவரை வேறு பணி காரணமாக வெளிநாட்டிற்கு சென்றிருந்த விஷ்வா அன்று நிறுவனத்திற்கு வருகைபுரிந்திருந்தான்…


அன்று ஆதிராவின் பிறந்தநாள் ஆதலால் அன்னையின் விருப்ப படி காலை கோவிலுக்கு சென்றுவிட்டு அலுவலகத்திற்கு சற்று தாமதமாக வந்தாள்,இதுவரை சரியான நேரத்திற்கு வந்துவிடுபவள் அன்று கோவிலில் கூட்டமாக இருந்ததால் தாமதமாகி விட்டதை உணர்ந்து காலை உணவை கூட உண்ணாது வந்துசேர்ந்தாள்,எவ்வளவு முயன்றும் அலுவலக நேரப்படி பத்து நிமிடங்கள் கடந்து தான் வர முடிந்தது…


வேக வேகமா தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தவளை ஆசுவாச பட கூட அவகாசம் அளிக்காது,மேலாளரிடமிருந்து அழைப்பு வந்தது,


அச்சச்சோ,லேட்டா வந்ததுக்கு என்ன சொல்ல போறாங்கன்னு தெரியலையே,சரி அவரை பேச விடாம நாம முதல்ல சாரி சொல்லிடனும் முதல் தடவைங்கிறதால அவ்வளவா திட்ட மாட்டாங்க,என தனக்குள் திட்டமிட்டவாறு மேலாளரின் அறைக்குள் நுழைந்தவள்,”குட்மோர்னிங் சார்,சாரி சார் கோவிலுக்கு போனதால லேட் ஆகிடுச்சு சார்,இனி இப்படி நடக்காது சார்,”என தான் திட்டமிட்டபடி வேக வேகமாக கூறியவளை கண்டு புன்னகைத்தவர்,


ஏன்மா... இவ்வளவு நாள் இல்லாம இன்னைக்கு தான் நீ தாமதமா வரணுமா?இன்னைக்கு தான் நம்ம இன்னொரு md விஷ்வா சார் வெளிநாட்டுல இருந்து வந்துருக்கார்,அவர் கிஷோர் சார் மாதிரி இல்ல,ரொம்ப கண்டிப்பானவர்,வேலைக்கு தாமதமா வந்தாலும் சரி,வேலையை தாமத படுத்தினாலும் சரி பயங்கரமா கோபப்படுவாரு,அவர் வரும் போது உன் இருக்கை காலியா இருந்ததை பார்த்துட்டு கேட்டார்,நீ வந்ததும் உடனே வந்து பார்க்க சொன்னார்,நீ வேலைக்கு புதுசுன்னு சொல்லிருக்கேன்,ஆனாலும் கோபப்படுவார்,பார்த்து இப்போ என்கிட்ட கேட்ட மன்னிப்பை அவர்கிட்ட கேட்டுட்டு வாம்மா”, என அனுப்பி வைத்தார்,


விஷ்வா என பெயர் பொறிக்க பட்ட அறைக்குள் அனுமதி கேட்டு உள்ளே நுழைந்தவளை கண்டவனது கண்கள் இமைக்க மறந்ததை போல் பார்த்தது பார்த்தபடி இருந்தன,கணிப்பொறியின் விசைப்பலகையில் நடனமாடிய விரல்கள் தன் நடனத்தை நிறுத்தியிருந்தது,மனம் பெண்ணவளை கண்டு தடுமாறி நின்றது


பீச் நிற அனார்கலி சல்வார் அணிந்து,மெல்லிடை தொட்ட கூந்தலை சென்டர் கிளிப்பில் அடக்கிய கூந்தலை விரித்து விட்டு அதில் கோவிலில் கொடுத்த மல்லிகையை சிறு துண்டு வைத்து,நெற்றியில் வியர்வை அரும்பியிருக்க,எதிரில் இருப்பவனை ஒரே பார்வையில் அடித்து வீழ்த்தியதை அறியாது, சற்று பெரிய விழிகளில் மை தீட்டி,இயற்கையாக சிவந்திருக்கும் இதழ்களில் சாயம் பூசியிருக்கின்றதா இல்லையா என்று அறியா வண்ணம் இதழ் சாயம் இட்டு, இளம் ரோஜா நிற முகத்தில் பயம் கலந்த பதட்டத்தில் நின்றவளை விழி எடுக்காது நோக்கியாவன்,ஆதிராவின் சார் என்ற விளிப்பிலேயே தன்னிலை அடைந்தான்…


“ சாரி சார்,இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆயிடுச்சு,இதுக்கு முன்னாடி இப்படி நடந்தது இல்லை,இன்னியும் இப்படி நடக்காது சார்,”என்றவளை கண்டு ,புன்னகையுடன் தலையசைத்தவன்,


உங்க நேம்...மிஸ் ஆர் மிஸ்ஸஸ்?என தட தடக்கும் மனதுடன் கேட்டவனது கண்கள் ,நொடிப்பொழுதில் அவளது கழுத்திலும்,கால் விரல்களிலும் படிந்து மீண்டது,


மிஸ் ஆதிரா சார்…


ஆதிராவிற்கு திருமணம் ஆகவில்லை என்று கேட்டதும் மனதில் ஓர் நிம்மதி பரவ அவளுக்கு விடைகொடுத்தவன்,கண்மூடி தனக்குள் சிந்தலையில் ஆழ்ந்தான்…


உதடுகள் தானாக ஆதிரா என மங்கையவளின் பெயரை முனுமுனுக்க,மூடிய விழிகளுக்குள் பெண்ணவள் முகம் காட்ட இதுவரை உணராத எதோ ஓர் உணர்வு ஆட்கொள்ள,எந்த பெண்ணை கண்டும் தோன்றாத உணர்வுகள் கன்னியவளை கண்டதும் தோன்ற அந்த உணர்வில் கரைந்து காதல் எனும் கடலுக்குள் மூழ்கிப்போனான்…


பெண்ணவள் கரம் கொடுக்க காதல் முத்தெடுப்பார்களா?


MD யின் அறையிலிருந்து தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தவள்,என்ன மேனேஜர் சார் என்னனா பயங்கர பில்டப் கொடுத்தாரு,அவர் கொடுத்த பில்டப்புக்கு சம்பந்தமே இல்லாம ரொம்ப சாப்ட்டா பேசுறாரு ….,சரி நாம வேலையை பார்ப்போம் என தனது சிந்தனையிலிருந்து வெளிவந்தவள் தனது வேலையில் மூழ்கிப்போனாள்,


மாலை நண்பர்கள் படை சூழ அவர்களது விருப்பத்தின் பேரில் அலுவலகத்திற்கு கீழ் தளத்தில் இருக்கும் கோபி ஷாப்பிற்கு சென்றவள் நுழைவாயிலை அடைந்ததும்,பின்னிருந்த நண்பி விழிகளை மூடி அழைத்து வர,


“ஏய் ஏன் டி கண்ணை மூடுற,லூசு கை எடு டி,நான் விழ போறேன் பாரு,என்று திட்டிக்கொண்டே கையை எடுக்க முயன்றவளை,”


ஏய் ஆதி சும்மா வா டி,அதெல்லாம் நீ ஒன்னும் விழ மாட்ட,அதான் நாங்க இருக்கோம்ல,என்று மற்றொருத்தி அடக்க


அது தான் டி என் பயமே...என கூறி சிரித்தவளிடம்,நீ இப்போ பேசாம வரல...நீ சொன்னது போல நானே உன்னை தள்ளிவிட்ருவேன் என மற்றொரு நண்பி கூறியதும் அமைதியாக வந்தவள்,அவர்கள் தயார்செய்திருந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை கண்டு சந்தோசத்தில் தோழிகளை அணைத்து கொண்டாள்...


அதே நேரம் அலுவலகத்திலிருந்து கிளம்பி ஓர் சந்திப்பிற்காக வெளியே வந்தவன் கண்ணில் பட்டது கண்ணாடி கதவுகளுக்கு பின் நண்பர்கள் படைசூழ தன் முன்னே வைக்கப்பட்டிருந்த ரெட்வெட்வெட் கேக்கின் முன் புன்சிரிப்புடன் நின்று கொண்டிருந்த ஆதிராவை கண்டவன் சில நொடி தயங்கி தன்னவளிடம் சென்றான்…


விஷ் யூ ஹாப்பி பர்த்டே ஆதிரா என கை நீட்ட,


தீடீரென்னு கேட்டவனின் குரலில் சற்று திடுக்கிட்டு பின் தன்னை சமன் செய்து கொண்டு புன்னகையுடன் தன் கரம் குலுக்கி வாழ்த்தை பெற்று,”தேங்க்யூ சார்”,என்றவளிடம்


இன்னும் வேற யாராவது வரணுமா? அவங்களுக்காக வெயிட் பண்றிங்களா ?என கேட்டவனிடம்


அதுவரை அங்கு நடப்பவற்றை ஆச்சர்யமாக பார்த்து கொண்டிருந்த நண்பர்கள் கூட்டத்தில் தோழி ஒருத்தி, “அதெல்லாம் இல்ல சார் எல்லாரும் வந்தாச்சு”,


அப்புறம் என்ன ஆதிரா?கட் பண்ணுங்க, என தான் வந்ததிலிருந்து அமைதியாகவே நின்று கொண்டிருந்தவளை கண்டு சிறு கோபம் எட்டிப்பார்க்க அதை மறைத்து கொண்டு கூறினான்,


MD யின் முன் பெரிதாக ஆராவாரம் செய்ய இயலாது அமைதியாக கைதட்டி பிறந்தநாள் பாடலை பாட சிறு புன்னகையுடன் கேக்கை கட் செய்தவள் அதை மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு முன் சிறு துண்டை எடுத்து தன்னவளுக்கு ஊட்டியவன்,மீதியை தானே உண்டதும்,அந்த செயலில் பெண்ணவளின் அதிர்ச்சியில் விரிந்த கரு விழிகள் இரண்டும் இன்னும் பெரிதாகி எதிரிலிருப்பவனை சிறை செய்ய அதில் விரும்பியே தன்னை தொலைத்தவன் தலையசைப்புடன் விடைபெற்று சென்றான்…

வருவாள்...
 

Mathijagadheesh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்று

எப்பொழுதும் ஒரு வட்டத்திற்குள்ளே நின்று பழகும் md விஷ்வா,இன்று தனது நிலையில் இருந்து மாறுபட்டு அழைக்காமலே பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது, அதுமட்டுமில்லாது கேக்கை ஊட்டியது என அத்தனையும் கண்ட நண்பர்களுக்கு ஒருபுறம் சந்தேகம் எழுந்தாலும்,வாலிப பருவதிற்கே உரிய விளையாட்டு குணத்துடன் அதை மறந்து கொண்டாட்டத்தில் அதை மறந்தும் போயினர்,

ஆண்,பெண் நட்பை சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனப்பான்மை கொண்ட ஆதிராவிற்கு இது தப்பாக படவில்லை என்பதை காட்டிலும் விஷ்வாவின் நேர் கொண்ட கண்ணியமான பார்வை அதை தவறாக சிந்திக்க விடவில்லை…

நண்பர்களுடன் இரவு உணவையும் வெளியிலே ஒரு உணவகத்தில் முடித்து கொண்டு தான் தங்கியிருக்கும் விடுதிக்கு சென்றவள்,அலைபேசியில் அன்னையுடன் பேசியபடியே களைப்பில் அப்படியே உறங்கிவிட்டாள்…

தொழில் சந்திப்பை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தவனை யாருமற்ற பிரமாண்டமான,வெறுமையே வரவேற்றது,

விவரம் தெரிந்த வயதிலிருந்தே தனிமையிலேயே இருந்தவனுக்கு இன்று அந்த தனிமை வெறுப்பை தந்தது,இதுவரை இப்படி தோன்றாது,இன்று மட்டும் என்ன! என்ற சிந்தனையுடனே வந்தவனுக்கு உணவு மேஜையில் தயாராக வைக்கப்பட்டிருந்த உணவு கண்ணில் பட்டது,இரவு அவன் வர தாமதமாகும் ஆதலால் இரவு உணவை தயார் செய்து வைத்துவிட்டு வீட்டிற்கு செல்ல சொல்லிவிடுவான்,

வீட்டை பராமரிப்பதற்கும்,சமையல் செய்வதற்கும் ஒரு குடும்பத்தை வேலைக்கு அமர்த்தி,அங்கேயே அவர்களுக்கென்று வீட்டின் பின்னே ஒரு வீடு கட்டிக்கொடுத்திருந்தான்,அந்த குழந்தைகளின் படிப்பு செலவையும் தானே செய்தான்,அதை அவர்களுக்காக செய்தானா?அல்லது செய்யும் பாவத்திற்கான நிவர்த்தியாக செய்தானா?என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம்,

தனது அறைக்கு சென்று குளித்து உடை மாற்றி வந்ததும், தொலைக்காட்சியை உயிர்ப்பித்து செய்தியை ஓட விட்டவன் உணவு மேஜையில் அமர்ந்து உணவை வாயருகே கொண்டு சென்றதும், மாலை தன்னவளுக்கு கேக்கை ஊட்டியது நினைவில் தோன்றி புன்னகை பூக்க செய்தது…

தன்னவள் நினைவு தோன்றியதும் அதுவரை இருந்த வெறுமையான மனநிலை மாறி இதமான உணர்வு ஒன்று ஆட்கொண்டது,அதே மனநிலையுடன் உணவை முடித்தவன் உணவு பாத்திரங்களை ஒழுங்கு படுத்திவிட்டு தனதறைக்கு சென்றான்,

காதல் பிறந்துவிட்டால் அதனுடன் ஒட்டி பிறந்த இரட்டை குழந்தை போல ரசனையும் சேர்ந்து வந்துவிடுமோ?கண்கள் காணும் அனைத்தையும் மனம் ரசித்தது,இதுவரை இயந்திரம் போல தனது செயல்களை மட்டும் நேரப்படி செய்து வந்தவன்,இன்று நிதானமாக பால்கனியில் நின்று தழுவி செல்லும் காற்று,அதில் மிதந்து வரும் பூக்களின் நறுமணம்,நட்சத்திரங்களின் நடுவே ஓளி வீசும் பிறை நிலவு என அனைத்தையும் ரசித்து கொண்டிருந்தான்…

தான் ஒரு பெண்ணிடம் இப்படி காதலில் விழுவோம் என்று நேற்று கூறியிருந்தால் அதை பரிகாசம் செய்திருப்பான்,ஆனால் இன்று,” எப்படி சந்தித்த ஒரே நாளில் ஒரு பெண்ணால் தன்னை இப்படி வசியம் செய்ய இயலும்,அவளின் கண்கள் என்ன காதல் கடலா!அதில் மூழ்கினால் மீள இயலாதோ ?இதுவரை எத்தனையோ பெண்களை கடந்து வந்திருக்கிறேன்,எவரிடமும் தோன்றாத இந்த உணர்வு இவளிடம் மட்டும் தோன்றியதேன்?”என தன்னிடமே பேசிக்கொண்டிருந்தான்,

இதுவரை திருமணத்தை பற்றியே சிந்திக்காதவன்,செய்து வைப்பதற்கும் பெற்றோர்,உடன் பிறந்தவர் என யாரும் இல்லாது இருந்தவனிற்கு, தனக்கென்று ஒரு குடும்பம், உறவுகள் என சிந்தித்ததில்லை,ஆனால் இன்று அனைத்தும் வேண்டும் என்று தோன்றியது,


அதே நேரம் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அலைபேசி ஒலி எலுப்ப அதில் தோன்றிய பெயரை கண்டதும் அதுவரை இருந்த மன நிலையிலிருந்து முற்றிலும் மாறி அலைபேசியை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டான்…

தன்னை நினைத்து ஒருவன் உறங்காமல் விழித்து கொண்டு தனிமையில் தவித்து கொண்டிருக்கிறான் என அறியாது நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் ஆதிரா…

இன்று

இந்தாம்மா... உன்ன பார்க்க கரண் தேவ் சார் வந்துருக்காரு வா,

அந்த நடுத்தர வயது பெண்மணியின் பின்னே ஓய்ந்த தோற்றத்துடன்,சோர்வாக நடந்து வந்தவளை கண்டதும் ஆணவன் மனதில் ஆயிரம் வலிகள்,அது அவளது நிலை கண்டா?அல்லது அவளது வாழ்வை நினைத்தா !அதில் அவனின் சுயநலமும் இருக்கின்றதோ?

தனது முன்னே நின்றவரை கண்டு முறுவலிக்க முயன்று,கண்களை எட்டாத புன்னகை ஒன்றை சிந்தியவள்,

நல்லாருக்கீங்களா சார்?வீட்ல எல்லாரும் எப்படி இருகாங்க, என எதிலிருப்பவனின் நலத்தை கேட்க ,

நான் நல்லாருக்கேன்,வீட்லயும் எல்லாரும் நல்லாருக்காங்க,எங்களுக்கு என்ன ஆதிரா?நீங்க தான் இருக்க இருக்க மெலிஞ்சுக்கிட்டே போறீங்க,ஒழுங்கா சாப்பிடுறீங்களா இல்லையா?

அதற்கு பதிலாக எதிரிலிருப்பவளிடமிருந்து விரக்தி புன்னகையே பதிலாக கிடைக்க,

“நடந்தது எதையும் மாற்ற முடியாது ஆதிரா,நீங்க உங்களை பார்த்துக்கிட்டா தான் உங்க குழந்தையும் நல்லாருக்கும்,உங்களுக்காக இல்லைனாலும் அந்த குழந்தைக்காகவாது உங்க உடம்பை பார்த்துக்க வேண்டாமா ?”,என்ற கேள்விக்கும் அதே புன்னகை தான்,

சரி உங்க உடம்பை பார்த்துக்கோங்க மருந்தெல்லாம் சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க,நான் கிளம்புறேன், என்றவனுக்கு தலையசைப்பையே பதிலாக கொடுத்தவள் மீண்டும் தனது இடத்திற்கு சென்றுவிட்டாள்…

எப்பொழுதும் தன்னை சுற்றி நண்பர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்,எல்லோரிடமும் எளிதில் பழகி விடுவாள்,தன்னை சுற்றி உள்ளவர்களை தனது பேச்சிலேயே கவர்ந்து விடுவாள்,அதுவும் ஓர் காரணம்,ஆனால் ஒருவர் தவறு செய்தால் அது யாராக இருந்தாலும் தண்டனை நிச்சயம் வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள்,தன்னிடம் அன்பாக இருப்பவர்களிடம் அதை இருமடங்காக அன்பை செலுத்துவாள்,பகைமை பாராட்டினால் பல மடங்காக திருப்பி கொடுப்பாள்,அவளது சிரிப்பு,கோபம்,விளையாட்டு குணம் என்று அனைத்தயும் ரசிப்பதற்கே ஓர் நண்பர் பட்டாளம் இருந்தது,

இன்றோ, தன்னை காண சரணை தவிர வேறு எந்த நண்பர்களும் வரவில்லை,அவரது நட்பு கூட நெடுங்காலம் பழகிய நட்பில்லை,சிறிது காலமாக தான் தெரியும், ஆனால் பல காலங்கள் பழகிய நண்பனை போல தனக்கு இத்தனை உதவி செய்பவர்க்கு தான் எந்த விதத்தில் தன் நன்றியை செலுத்துவது!இவ்வாறாக சிந்தித்தவள்,

யாரையும் சந்திக்கும் மனநிலையிலா தான் இருக்கிறோம்?அவர்கள் வராததும் ஒரு வகையில் நல்லது தான் என்று மற்றொரு மனம் கூறியது,இப்படியே பல சிந்தனையில் குழம்பிய மனம் இறுதியாக தன்னவனிடம் சென்று நின்றது,

அவளும் அந்த நினைவுகளிலிருந்து வெளி வர தான் நினைக்கிறாள்,ஆனால் மறக்க கூடிய நினைவுகளா அவை,தான் வாழும் காலம் முழுதும் மறக்காது தன்னுடன், ஆழ் மனதில் பதிந்து,உயிருடன் கலந்து விட்ட உணர்வுகள் ஆயிற்றே!

பிறந்ததிலிருந்தே எதற்கும் கண்ணீர் சிந்தாதவள்,வாழ்க்கை முழுவதற்கும் போதும் போதும் எனும் அளவிற்கு துன்பத்தை அனுபவித்து விட்டாள்,இனியும் காலம் பெண்ணவளுக்கு என்ன என்ன வைத்திருக்கிறதோ?

அங்கிருந்து வெளியேறிய சரண் தேவ், தனது நண்பிக்கு அழைத்து ஆதிராவை பற்றி பேசிவிட்டு கிளம்பிவிட்டான்,செல்லும் வழியெங்கும் ஆதிராவின் நினைவுகளே துரத்த, வாகனத்தை அமைதியான இடத்தில் நிறுத்திவிட்டு இருக்கையில் தளர்வாக கண்மூடி அமர்ந்திருந்தான்,


தன் மனம் கவர்ந்தவளை முதல் முறை சந்தித்த தருணம் மூடிய விழிகளுக்குள் விரிந்தது,

அன்று அன்னையின் வேண்டுகோளுக்கு இணங்க கோவிலுக்கு சென்றிருந்தான் கரண் தேவ், தனக்கு எதிரே விழி மூடி அம்பாளை வணங்கி கொண்டிருந்தவளை கண்டதும் அவளது முக பாவனையில் இதழ்கள் அவன் அனுமதி இல்லாது புன்னகைத்தது,

எதிரிலிருப்பவரிடம் பேசுவது போல கண் மூடி முக பாவங்களை மாற்றி மாற்றி மூணு முணுத்து கொண்டிருந்தாள்,இதே போல பிரகாரத்தை சுற்றி உள்ள அனைத்து தெய்வங்களையும் வணங்கியவள் பிரசாதம் வாங்கி சுவைத்து உண்டவள் அதன் சுவையில் மயங்கி இருக்க வேண்டும்,பெண்ணவளின் முகம் அதையே பிரதிபலித்தது,நிதானமாக ரசித்து உண்டவள்,சுற்றி சுற்றி பார்த்து விட்டு இலையை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு மீண்டும் ஒரு முறை பிரசாதம் வாங்க சென்றாள்,அன்று விஷேஷ நாளும் இல்லாது,விடுமுறை நாளும் இல்லாது இருந்ததால்,கோவிலில் கூட்டம் ஏதுமின்றி இருந்தது,அதனால் பிரசாதமும் அதிகமாக இருந்தது,குறைவாக இருந்திருந்தாலும் சென்று மறுமுறை வாங்கி இருப்பாள் போலிருக்கிறது,அவளது செயல் அப்படி தான் இருந்தது,மீண்டும் அதே இடத்தில் அமர்ந்து ரசித்து, ருசித்து உண்ட பின் அம்பாளிடம் வந்து கை அசைத்து விடை பெற்று சென்றாள்…

இதுவரை தான் வந்த வேலையை,மறந்து விட்டு அம்பாளை கூட வணங்காது ஒரு பெண்ணின் பின்னே சுத்தி கொண்டிருக்கிறோம் என்பது அவள் செல்லும் வரை உணராதவன்,அவள் சென்றதும் தான் நினைவு வந்ததை போல தலையை கோதி கொண்டே கோவிலினுள் சென்றான்…

சாருலதா,பூமிநாதன் தம்பதியருக்கு இளைய மகனாக பிறந்தவன் சரண் தேவ்,வீட்டின் செல்ல பிள்ளையாக வளர்ந்தவன்,அண்ணன் அஜய்க்கு பிரியமான தம்பி,இருவருக்கும் ஐந்து வருட இடைவெளி இருந்ததால்,சரண் தனது அண்ணனின் அன்பான விளையாட்டு தம்பியாகினான்,பெற்றவர்கள் கூட தனது தம்பியை கோபமாக ஒரு சொல் சொல்வதற்கு அனுமதிக்க மாட்டான்,செல்லமாக வளர்ந்தாலும்,ஒழுக்கமாக ,விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடனும் கிடைத்ததில் திருப்தி கொள்ளும் குழந்தையாக வளர்ந்தான்…

சிறு வயதிலிருந்தே படிப்பில் சிறந்தவனாக, தனது லட்சியத்தை வகுத்து அதை நோக்கி பயணித்தான்,அதை அடைந்தும் விட்டான்,

அடுத்து திருமணம் பற்றிய பேச்சை வீட்டினர் எடுத்ததும்,

ஆணவன் மனதிலோ கோவிலில் கண்ட பெண்ணின் முகம் அழையா விருந்தாளியாக,

அதை பெரிதாக ஆராயாமல் தனது வேலையில் கவனத்தை செலுத்தினான்,

சரணின் பொற்றோர் தேடி அலைந்து தனது மகனுக்கான வரணாக ஒரு பெண்ணை முடிவு செய்து பெண் பார்க்க செல்வதற்கான ஆயத்தங்களை செய்தனர்,

சரண் தேவ்வின் மனதில் இனம் காண முடியாத உணர்வு ஒன்று அவனை இம்சை செய்தது,காரணம் அறியாது குழம்பியவனை கண்ட அவனது அண்ணன் அஜய்,

சரண்...என்ன ஆச்சு ஏன் கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருக்க?எதாவது பிரச்சினையா?

அதெல்லாம் எதுவும் இல்லண்ணா,என்னவோ தெரியல மனசுக்கு ஒரு நிலையில இல்லை,

சரி சரண், உன்கிட்ட பொண்ணு பேட்டோ குடுத்தமே பார்த்துட்டியா? உனக்கு சம்மதம் தானே!என தன் அண்ணன் கேட்டதும் தான் தான் இன்னும் பெண்ணின் புகைப்படத்தையே பார்க்காதது நினைவில் தோன்றியது,

இல்லண்ணா மறந்துட்டேன், நீங்க போங்க நான் பாக்குறேன் என்றவனின் மீது சந்தேகம் தோன்ற

"உனக்கு கல்யாணத்துல விருப்பம் தானே சரண்,இல்ல வேற யாரையாவது விரும்புறியா?எ"ன கேட்ட அண்ணனிடம் இல்லை என்று மறுக்க தோன்றாது அமைதியாக நின்றான்,

இந்த நிலை அவனுக்கே புதிது,இதுவரை அந்த கோணத்தில் சிந்திக்காதவனின் மனம் இப்போது சிந்தித்தது,திருமணம் என்று சொன்னதும் ஏன் அந்த பெண்ணின் முகம் நினைவில் வந்தது?ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்த பெண், இத்தனை மாதங்கள் கழித்தும் மறக்காது நினைவில் தோன்றி இம்சை செய்வது ஏன்? ஒருவேலை அண்ணன் சொல்வது போல இது காதலாக இருக்குமோ?அதனால் தான் திருமணத்திற்காக பார்த்த பெண்ணின் புகைப்படத்தை கூட பார்க்க தோன்றவில்லையோ!என பல கேள்விகள் மனதில் எழ, தனது பதிலுக்காக உடன்பிறந்தவன் காத்துக்கொண்டிருப்பதை உணர்ந்து, நான் காலையில பேசுறேன் ண்ணா,இப்போ என நெற்றியை நீவியவனிடம்

தான் நினைத்ததை போல தனது தம்பி ஏதோ குழப்பத்தில் இருப்பதை உணர்ந்து,"புரியிது சரண் நீ நிதானமா யோசித்து சொல்லு,நான் வரேன்"என அங்கிருந்து செனாறான்,

அஜய் சென்றதும் கண்மூடி படுக்கையில் விழந்தவன் மனதிரையில் தோன்றிய பெண்ணவளை நினைத்து புன்னகை பூத்தான் சரண் தேவ்…

வெகு நேரமாக தனது சிந்தைனயில் மூழ்கியிருந்தவன் தொலை பேசியின் அழைப்பில் சுயம் பெற்று அலைபேசியில் அழைத்த அன்னைக்கு பதிலளித்தான்,மீண்டும் மனம் அவளது நினைவுகளிடமே சிக்கி தவித்தது,


அன்று சந்தித்தது இன்று போல் தோன்றினாலும்,அதற்குள் எத்தனையோ நடந்து விட்டது,

தனது காதலை தாமதமாக உணர்ந்தவன் பெண்ணவளை சேரும் முன் அவள் வேறு ஒருவருக்கு சொந்தமாகி இருந்தாள்,

முன்பே தன் காதலை உணர்ந்திருந்தால்!அவளிடம் தன் விருப்பத்தை கூறியிருந்தால்!இப்போது நிதழ்ந்த எதுவும் நடந்திருக்காதோ?என்ற கேள்வி தோன்றி இம்சித்தது,


இனி தனது வாழ்வில் என்ன?என்ற கேள்வி அவனின் மனதில் எழுந்தது …

வருவாள்.....
 
Top