All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிர்ஷியின் "என்னை ஆராதிக்கப் பிறந்தவ(னே)ளே..!" - கதைத் திரி

Status
Not open for further replies.

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையின் முன்னோட்டம்💞



உள்ளேச் சென்றவனை அங்கு யாரும் தடுக்கவில்லை..அவனின் ஆளுமையான நடையே சொல்லியது வந்திருப்பது யாராக இருக்குமென்று..


நேராக செக்யூரிட்டி ஆபீசர்ஸ் நிற்கும் இடத்திற்க்கு சென்றவன்.. அவர்களது மரியாதை நிமித்தமான சல்யூட்டை கூட கவனிக்காமல்,


“இஸ் தெய்ர் எவரிதிங் க்ளியர் கௌதம்?”..வந்து இரண்டு நிமிடத்திற்குள் அனைத்தையும் தன் பார்வை வட்டத்திற்குள் கொண்டு வந்தவன் இப்பொழுது கௌதமை நோக்கினான்..


*****

“என்ன டிரஸ் டி இது?” அவனின் சுளித்த முகமும் பற்களை கடித்துக் கொண்டு பேசும் விதமுமே கோபத்தில் இருக்கிறான் என்பதை காட்ட,


குனிந்து தன்னை பார்த்தவள் “ஆள் பாதி ஆடை பாதி! கேள்வி பட்டது இல்லையா நீ ?” இரு தோள்களையும் தூக்கி அலட்சியமாக சொன்னாள்..


“அது எதுக்கு கேவலமா பாதியை மட்டும் போட்டுக் கிட்டு.. அதையும் கழட்டி தூக்கி எறிஞ்சிடலாம்” தன் கைச் சட்டையை முழங்கை வரை மடித்துக் கொண்டே அவளை நோக்கி நடந்தான்..


“இருக்கு...இன்னைக்கு இங்க ஒரு தரமான சம்பவம் இருக்கு” அவள் மனசாட்சி எடுத்துரைத்தது...

.

.

.


”ஒன்னு இவன் என் மேல பாய்வான்.. இல்லைனா அவன் பாய்வான்.. வந்து சேர்ந்தானுங்க எனக்குனு” கடுகடுப்புடன் கபோர்டைத் திறந்தவள் கண்களை அதிகம் உறுத்தாத, சிறு வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு நிற மேக்ஸி உடை அணிந்து, கூந்தலை விரித்துவிட்டு தேவதையென படிகளில் இறங்கி வந்தாள்..
 

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர் 2💞


தாத்தா முன்பு அவர்களின் குடும்ப வக்கீல் கையில் கத்தையான பேப்பர்களுடன் அமர்ந்திருந்தார்..


சுற்றி அனைவரையும் பார்த்தவன் அங்கு தீக்ஷாவை கண்டதும் யோசனையில் புருவத்தை உயர்த்தினான்..”இவ இந்நேரம் இங்க வந்துருக்கானா விஷயம் சீரியசாக தான் இருக்கணும்” யோசனையுடன் தாத்தா சொன்ன இடத்தில் அமர்ந்தான்..


நீங்க இப்போ படிங்க சேதுராமன்.. அவன் தாத்தா வக்கீலிடம் வினவ,
.

.

வக்கீல் படிப்பதை கேட்க கேட்க முகமானது இறுக , உள்ளமானது எரிமலையாய் தீப்பிழம்புகளை கக்க தயார் நிலையில் இருந்தது.. வலது கையை தீக்ஷி பற்றிக் கொண்டாள் ஆதூரமாக..அவளை திரும்பி பார்த்தவனின் கண்களில் இருந்தது என்னவென்று அவளுக்கா தெரியாது?
.

.

.

“கடைசியில நீ கூட மத்தவங்களை மாதிரி என்னை ஊனமா தான் பார்த்து இருக்கல்ல தாத்தா” தொண்டை அடைக்க அவரிடம் கேட்டவன்..


மற்றவர்களிடம் இருந்து வந்த ரிஷி, அண்ணா, மாமா என்ற எந்த அழைப்பையும் கண்டுக்காமல் கோபத்துடன் வெளியேறினான்..
 
Status
Not open for further replies.
Top