காதல் இல்லா காதல் 1:
நாயகன் : தேவ் ஆதித்யா.
நாயகி :ப்ரீதா
அந்த 12 மணி அளவு ஆள் அரவம் ஏதும் இல்லாமல் நிசப்தம் நிறைந்து , வயலுக்கு மடை மாற்ற செல்பவர்கள் கூட,, சென்று திரும்பிவிட்ட பின் இரவு நேரம்…
சருகின் மேல் காலை வைத்தால் கூட சட சட வென்று ஊரை கூட்டும்.. அந்த அளவுக்கு அமைதி..ஒரு நிலவா இல்லை ஒரு கோடி நிலவா என்று அறிய முடியா அளவு தன் இதமான வெளிச்சத்தால் தம்பிக்கோட்டைக்கே ஒளி ஊட்டும் ஒரு பௌர்ணமி நாள்…
தம்பிக்கோட்டை என்ன சிறப்பு இல்லை இங்கே …வடக்கரை…தென்கரை.கீழை, மேலை ,என நான்கு ஊர்களின் தொகுப்பு தான் தம்பிக்கோட்டை தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைக்கோடு…ஊரின் நுழைவே ரயில் நிலையம் தான்… ஊருக்கு தெற்கே 10 கிலோ மீட்டர் தொலைவில் கடல் , வடக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் காவேரியின் கிளை ஆறு என்ற இயற்கையின் வரம்…
வரிசையாக தென்னத்தோப்புகள், ஓவ்வொரு தோப்புக்குள்ளும் ஓவ்வொரு வீடும் அந்த தோப்பிற்கு சொந்தமான ஒரு பெரிய குளமும்,ஒரு கிணறும் இருக்கும் எப்பொழுதும் வற்றாத நீரோடு…
எல்லா ஊர்களில் இருப்பது போல வீடுகள் பக்கம் பக்கமாக இல்லாமல் தோப்பிற்கே ஒன்றாக இருக்கும்..ஊருக்கு வெளிபுறத்தில் வயல்வெளிகள் கோடைகால பயிரான எள்ளு.,உளுந்தில் ஆரம்பித்து நீர்வரத்து அதிகம் தேவைப்படும் நெல், நிலக்கடலை வரை அனைத்தும் விளையும் சத்தான மண்ணோடும் இதமான தட்ப வெட்ப நிலையோடும்…
அங்கு உள்ள எல்லோரும் ஓரளவு வசதியோடுதான் காணப்படுவார்கள்,அதிக வசதி ,குறைந்த வசதி என்றே பிரிக்கலாம், தவிர வசதி ,சொத்து பத்து சுத்தமாக இல்லை என்ற வகையில் பிரிக்க முடியாது…
அந்த ஊர் பிரிந்து காணப்படும் ஒரே விஷயம் அவர்களின் ஜாதி,சமூகம் மட்டுமே.. ஜாதி வரிசையின் கடை நிலையில் உள்ளவர்கள் எந்த ஈடுபாடும் இல்லாமல் தனியே வடக்கரை மற்றும் தென்கரையில் இருப்பார்கள்…
எப்பொழுதும் அதிக ஜாதி சார்ந்த பிரச்சனைகள் வருவது மேலை மற்றும் கீழை ஊர்களில் மட்டுமே ,கெளரவக் கொலைகள் ,ஜாதி கலவரம் என்று இரு ஊரும் அடித்து பிரண்டு கொள்வார்கள்…
இரு ஊர்களிலும் இதற்கு தலைமை தாங்கும் இரு பெரிய மனிதர்கள்…அந்த பெரிய மனிதர்களின் மகனும் மகளும் பாதி இரவில் அங்கு உள்ள களத்து மேட்டு சொனையில் வைக்கோல் தரிகளால் தங்கள் உடலை போர்த்திக்கொண்டு ஆடைகளுக்கு சுதந்திரம் கொடுத்து ஒருவர் மற்றவர்களுள் புதைந்து போகும் அளவுக்கு இறுக்கி அணைத்துக்கொண்டு தங்களை மறந்த நிலையில், கிறக்க கண்களுடன் கட்டுண்டு கிடந்தார்கள்…
வார்தைகள் சங்கமிக்காமல் இருவரும் ஒருவருடன் ஒருவர் உடல் அளவில் சங்கமித்து கொண்டு இருந்தார்கள். மாயாமோ மயக்கமோ ,காதலோ, மந்திரமோ தந்திரமோ அந்த இரவை இருவரும் கொண்டாடி தீர்த்தனர்..
அவளின் விழி அவனோடு சங்கமிக்கிறது அவள்தான் ப்ரீதா…கதையின் நாயகி…காயங்கள் பல படப்போகும் பாவி… சுப்பையா தேவர் மகன் வழி பேத்தி உத்திராபதி ரூபிணி தம்பதியினரின் செல்ல மகள்…அவள் அண்ணன் குமரனின் குலசாமி…தாத்தா,அப்பா அண்ணனை காட்டிலும் தேவர் திமிர் பிடித்தவள்…தான் ஒரு சொல் செயலிலும் தேவச்சி என்று அடையாளத்தை விரும்பியே காட்டுபவள் தன் நடை, உடை பேச்சு என்று அனைத்திலும் பெருமையுடன் வெளி காட்டுபவள்..அழகி இல்லை இல்லை .. பேரழகி.
தோற்று போவோம் என்றே தெரிந்தே பாலின் நிறமும்..பட்டின் மிருதுவும், கார்மேக கருப்பும் இவள் நிறதோடும் இவள் மென்மையோடும், இவள் குழலோடும் விரும்பியே போட்டி போடும்..இவள் நல் குணங்கள்யாவும் இவள் இனக்கொள்கையால் இவள் உள்ளே புதைந்து கிடக்கிறது ….
இதோ இவள் உள்ளே புதைந்து கிடக்கிறானே தேவ் ஆதித்ய நாடர் இவனை போல.. தேவ் ஆதித்யா…தன் குடும்பத்தின் ஒற்றை வாரிசு தன் தாத்தா ராஜாப்ப நாடாரின் மறு வார்ப்பு … தன் அப்பா கலையரசை போல, ஜாதிக்காக உயிரைவிட்ட சித்தப்பன் செழியனை போல மிடுக்கும்..கம்பிரமும் நிரம்ப பெற்றவன்..பழக்க வழக்கம் , உதவி செய்வது…பிரச்சனை என்றால் முன்னே முதல் ஆளாக நிற்பது என எல்லாம் எல்லா சமூகத்திடம் என்று இருந்தாலும்…, தான் ,தன் வீடு தன் குடும்பம் என்று வந்தால் முதலில் எல்லாவற்றையும் எடுத்து கட்டிக்கொண்டு நிற்பவன்..
ஆண்களின் அடையாளமான தைரியமும் வீரமும் , அசாத்திய செயல் திறனும் ஒட்டு மொத்தமாய் குத்தகைக்கு வைத்து இருப்பவன் … கருமையும் அல்லாத வெள்ளையும் அல்லாத நம் நாட்டிற்கே உரிய கோதுமை நிறத்தில் நல்ல உயரத்தில் எப்பொழுதும் வேஷ்டி சட்டையில், முறுக்கு மீசை தாடியுடன் அந்த பகுதியில் உள்ள எல்லா பெண்களின் மனதில் இருக்கும் தன் எதிர்கால கணவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவு இருக்குமோ அவை எல்லாவற்றையும் கொண்ட அய்யனார் அவன்…
அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் ஆகாத ஒரே குடும்பம் உத்திராபதி தேவரின் குடும்பம்( ப்ரீதாவின் குடும்பம்)…சாதரண பகை இல்லை தலைமுறை தலை முறையாய் இருக்கும் தீரா பகை..வாய்ப்பு கிடைத்தால் அவ்வீட்டில் உள்ள ஆண்களை எல்லாம் கொன்று புதைக்கும்,கருவருக்கும் அளவு வெறி கொண்ட பகை…
இப்படி பழி உணர்ச்சி கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் இப்படி ஆலிங்கனம் செய்ய காரணம் என்ன…யாரை யார் பழி வாங்குகிறார்கள்…இல்லை விதி செய்த சதியா…ஒன்றும் விளங்கவில்லை....காலமும் காயமும் தான் பதில் சொல்ல வேண்டும்
மறுநாள் காலை 8 மணி மேலையில் உள்ள அந்த மாடிவீடு சாம்பிராணி புகையால் நிரம்பி இருக்க டிவியில் சுப்பிரபாதம் சத்தமாக ஒலித்துக்கொண்டு இருக்க உத்திராபதி தன் ஆட்களுடன் ஊரில் உள்ள ஏதோ பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ணிக்கொண்டிருந்தார்…
வரப்பு பிரச்சினையில் ஆரம்பித்து கோவில் திருவிழா என அனைத்தும் இந்த வீட்டில்தான் முடிக்க படும்…உத்திராபதி தோற்றத்திலே பயமுறுத்தும் ரௌத்திர குணத்தையும் கடா மீசையுடன் முக அமைப்பையும் கொண்டவர்..
இப்பொழுது கொஞ்ச காலமாக வயதின் காரணமாகவும் தந்தை,தம்பியை இழந்து தனியே நிற்பதாலும் எல்லாம் குறைந்து ஒளி க்குன்றி காணப்பட்டார்..ஆனால் மனதில் உள்ள பழி உணர்ச்சி மட்டும் சிறிதும் குறையவில்லை..தன்னால் முடியவில்லை என்றாலும் தன் காலத்திற்கு பிறகு தன் ஒற்றை பிள்ளை கண்டிப்பாக முடிப்பான் என்ற நம்பிக்கையில் இருப்பவர்…
ஏதோ யோசனையில் இருந்தவர் உள்ளே ஒலிக்கும் தன் தன் தம்பி மனையாள் வாசுகியின் குரலில் சிந்தனை கலைத்தார்…”ஏய் குழலி எழுந்திரி டி தினம் காலேஜ் போக தார் குச்சி வச்சி எழுப்ப வேண்டியதா இருக்கு “ அண்ணன், மில்லுக்கு போய்ட்டு வாரத்துக்குள்ள சாமியை கிளம்பி இருக்க சொல்லு சித்தி”ன்னு சொல்லிட்டு போயிருக்கான், அவன் போயி ஒரு மணிநேரம் ஆகுது நானும் அப்ப புடிச்சி எழுப்பிட்டு இருக்கேன் காதுல வாங்க மாற்ற”என கத்த
அதன் பிரதிபலிப்பு ஏதும் இல்லாமல் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருந்த குழலி..பிறந்த அன்னைக்கே தந்தையை பறிக்கொடுத்தவள்…ராசி கெட்டவள் என்று ஒதுக்கி வைக்கபடாமல் இந்த குடும்பத்தாலே குலசாமி என்று கொண்டாட படுபவள்…
“ஏன் வாசுகி புள்ள தூங்கட்டும்…புள்ளை நைட் டிவி பார்த்துட்டு லேட்டாதான் தூங்குனா..காலேஜ்க்கு வேணுனா லீவ் போட்டுக்கலாம்” என்று அவளின் பெரியம்மா சொல்ல..
( ஏய் கிழவி ஏதோ படிச்சிட்டு லேட்டா தூங்குனது மாறி எதுக்கு இப்ப பில்டப் பண்ற)..
“அப்படி சொல்லு என் தங்க பெரியம்மா “என அவளின் பெரியம்மா மடியில் முகம் புதைத்துக்கொண்டு தூக்கத்தை தொடர்ந்தாள்…
“ அக்கா நீங்க 3 பேரும் கொடுக்குற செல்லம்தான்…இப்படி பண்ற “என வாசுகி அங்கலாய்த்துக்கொண்டாலும் அவ்வளவு சந்தோசம் அவரின் முகத்தில் ஒரு வருட திருமண வாழ்க்கையில் குழந்தை பிறந்த அன்றே கணவனை பறிகொடுத்த பின் இந்த குடும்பத்தின் அன்பும் ஆதரவும் இல்லை என்றால் தானும் தன் குழந்தையும் என்ன ஆகி இருப்போம் என்று யோசிக்க கூட முடியவில்லை..
பணம் இருந்தாலும் அதை கொண்டு இந்த நேசத்தை வாங்கமுடியுமா….
ஒருவழியாக கெஞ்சி கொஞ்சி குழலியை எழுப்பி அவள் கிளப்பவும் தேவ் ஆதித்யா முகத்தில் மோதும் முடியை இடது கையால் மேலே ஏற்றி வலது கையால் தன் வெள்ளை வேட்டியின் முனியை பிடுத்துக்கொண்டு வேக நடையுடன் உள்ளே வரவும் சரியாக இருக்க…
தந்தை உத்திராபதி தன் தங்கைக்கு சோறு ஊட்டிக்கொண்டு இருக்கும் காட்சி கண்ணில் பட்டது…”பெரியப்பா சிந்தாம ஊட்டுங்க “என்க..” சரி தாயி சரி தாயி “என அவரும் பதமாக ஊட்டிவிட்டுக்கொண்டு இருந்தார்…
தன் தாத்தாவிற்கு எதிராக பொய் சாட்சி சொன்னவனின் தலையை துண்டாக வெட்டி 3 நாள் வீட்டு வாசலிலையே நட்டுவைத்த ராஜாப நாடாரின் வாரிசு சின்ன பிள்ளைக்கு ஆமாம் சாமி போடுவதை பார்த்து சிரித்த படி உள்ளே வந்தான்..தேவ் ஆதித்யா..
நேற்று இரவின் அவனவளுடனான கூடலின் அடையாளங்கள் ஏதும் இன்றி ..
”ஏய் கழுதை இதையெல்லாம் நீயா சாப்பிடமாட்டியா, மாமா நீங்க கொடுங்க நான் ஊட்டுறேன் என அவரிடம் இருந்து தட்டை வாங்கியவர் தானே ஊட்டிவிட்டார்..வழக்கப்படி “ எவளோ பெரிய மனுசன உனக்கு எடுபிடி வேலை பார்க்க வைக்குற” என்று திட்டியபடியே…
உத்திராபதி “விடுத்தா..என் தம்பியேதான் சாமி ரூபத்துல பொறந்து இருக்கான் ,நான் செய்யாம யாரு செய்வா” என்றவர் ஆதியை நோக்கி “பாப்பா கொண்ட காலேஜ்விடுப்பா..நான் கோவில் திருவிழா பத்தி கோவில் நிர்வாகிக்கள்ட பேசிட்டு வரேன் என்றார்.“ சரிங்கப்பா “ என்றவன் சாப்பிட அமர்ந்தான்..
அவர் வாசலை விட்டு இறங்கியதும் அந்த கம்பீரம் எப்படிதான் வந்து ஒட்டிக்கொள்ளுமோ அவ்வளவு கம்பீரம் அவர் நடையில்…பின் ஆதி குழலியை அழைத்துக்கொண்டு பக்கத்து டவுனில் உள்ள கல்லூரி வாசலில் இறக்கிவிட்டு திரும்பி வரும்போது எதிரில் ப்ரீதா உத்திராபதி கூடிய சீக்கிரம் ப்ரீதா தேவ் ஆதித்யா.. ஆக போகும் நம் கதையின் நாயகி அவளின் இரு சக்கர வாகனத்தில்
ஆதியின் கண்கள் சூரியனை விட அதிக வெட்பத்தோடு அவளை எரித்தது…மற்றவர் என்றால் அந்த பார்வையில் பயந்து ஒதுங்கி பொசுக்கி இருப்பார்..ஆனால் ப்ரீதாவோ அவனை விட அதிக கனலை கண்களில் தாங்கி அவனை முறைத்து கொண்டு இருந்தாள்.. இருவரின் கண்களிலும் துளி நேசம்..துளி பரிச்சயம் இல்லை மாறாக பழி..பழி வேட்கை மட்டும்தான்…
இதில் எது போய்…நேற்று நடந்த காதல் போரா..இல்லை இதோ யார் முதலில் சுட்டு பொசுக்கவது என்று வீரியம் அதிகமாக கொண்டு நடக்கும் இந்த பார்வை போரா…
தொடரும்…
உங்கள் கருத்தை கிழே உள்ள லிங்கில் கொடுங்க செல்லங்ளா...
காதல் இல்லா காதல் கருத்து திரி
www.srikalatamilnovel.com
இப்படிக்கு
மிளாணி...