நாளை விடிந்தால் திருமணம் முகம் முழுவதும் மகிழ்ச்சியாக அந்த நிலவே போட்டி போடும் அளவிற்கு, தனது திருமணத்தை எண்ணி கனவு கண்டு கொண்டு இருந்தாள் இஷானி.
கனவுக்குள் மூழ்கி இருந்தவளை, கதவு திறக்கும் ஓசையில் தான் வெளி வந்தவள் யாரது என்று அங்கேயே பார்க்க, அவன் தான் நின்றுகொண்டிருந்தான் அவளின் நாளைய கணவன் தன்வீர்.
திடீரென அவனை அங்கு எதிர்பாராததால் தலையை குனிந்தபடி பதட்டத்துடன்"நீங்க இங்க என்ன பண்றீங்க? ஏதாச்சும் வேணுமா?"என்று கேட்டவள் பதிலுக்கு சத்தம் வராமல் போகவும், நிமிர்ந்து பார்க்கஇதற்காகவே காத்திருந்தார் போன்று அவளது இதழை நொடியில் சிறை செய்தான்.
எதிர்பாராது அவனின் செய்கையில் திகைத்தாலும், தன் கணவனாக போகிறவன் தானே என்று அவளும் ஒத்துழைப்பு கொடுத்தாள்.
மீண்டும் கதவு திறக்கும் ஓசையில் அவளைப் பிடித்து தள்ளிவிட்டு வேகமாக வெளியேறினான். அவனின் செய்கையில் சற்று தடுமாறி பின்பு சமாளித்துக் கொண்டவள் அங்கு வந்து நின்ற அவனைக் கண்டு அதிர்ந்து போனாள்.
"தன்வீர்..."நீங்க எப்படி இங்க? என்று கேட்கவும், நான் இப்போது தானே வருகிறேன் இனி. சரி வா சாப்பிட போகலாம் என்று அவன் முன்னே நடக்க, குழம்பியவள் இதற்கு முன்னால் வந்தவன் சென்ற திசையிலேயே, குழப்பத்துடன் பார்க்க இதற்காகவே காத்திருந்தார் போன்று அவளைப்பார்த்து கண்ணடித்து விட்டு நொடியில் பறந்து இருந்தான்.
ஓரளவுக்கு உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துகளையும் கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள்.