Devi Anand
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனதோடுதான் நான் பேசுவேன் அத்தியாயம் 17
அவசரப்பட்டு விட்டோமோ நூறாவது முறையாக யோசித்தபடி பைக்கில் சென்று கொண்டிருந்தாள் ஆர்த்தி
பெரிய கடைவீதியில் பிரபலமான துணிக்கடை அருகே நின்று கொண்டிருந்தவளின் அருகில் உரசுவது போல் ஒரு பைக் வந்து நின்றது
யார்ரா இவன் ஹெல்மெட் போட்டுகிட்டு எரும மாடு மாதிரி வந்து மோத பாக்குறானே
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பயந்தபடியே பின்னடைந்தாள்
இதை கவனித்த துணிக்கடையின் செக்யூரிட்டி அவள் அருகே வந்து
"சார் பைக் ஸ்டாண்ட் அந்த பக்கம் போங்க "
அப்பவும் அவன் ஆர்த்தியை பார்த்தபடியே இருக்க
"உங்கள பிக்கப்பண்ண வந்துருக்கிறாரா "
ஆர்த்தியிடம் விசாரித்தார்
இல்லை என்று அவள் வாயைத் திறப்பதற்குள்
" உன்ன கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கேன் " என்று
ஹெல்மட்டை கழட்டினான்
அவன் குரலை வைத்தே அவனை யார் என்று உணர்ந்து விட்டவள்
' லூசு எப்படி பயமுறுத்திடான் '
அவனை பார்த்து மகிழ்வுடன் புன்னகைத்தாள்
ஆர்த்தியின் புன்னகையால் அதை உறுதி செய்து கொண்ட செக்யூரிட்டி தன் வேலையை தொடர்ந்தார்
"இப்படியா வந்து பயமுறுத்துறது லூசு "
" அப்பயாச்சும் நீ பயப்படுவன்னு பார்த்தேன் , பரவால்ல கொஞ்சம் பயந்துட்ட வா போலாம் "
" எங்கே "
" இப்புடி நடு ரோட்டுல நின்னே பேச முடியுமா, அந்த செக்யூரிட்டி வேற இங்கேயே பாத்துக்கிட்டு இருக்கான்
வா போலாம் "
ஆர்த்தியும் அதை கவனித்தாள் , செக்யூரிட்டியின் பார்வை அவர்களை நோக்கியே இருந்தது
'இவனோட பைக்ல போலாமா,, '
அவள் யோசித்துக் கொண்டிருக்க
" ஏறு ஆர்த்தி "
சிவா பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட்டான்
கடவுளே என்று நினைத்தபடி சிவாவுடன் பைக்கில் அமர்ந்தாள்
அவள் தோழிகளுடன் செல்லும் ரெஸ்டாரண்ட்தான் அது , அங்கேயே அழைத்து வந்திருந்தான்
" அப்பா,,,,
ஒரு வழியா வெளியில வந்துட்ட,
என்ன சாப்பிடுற "
" எனக்கு எதுவும் வேண்டாம் "
" என்னடி விளையாடுறியா
ரொம்ப சீன் போடாம என்ன வேணும்னு சொல்லு "
" நீங்களே சொல்லுங்க "
" சரிடி என்ன கிப்ட் கொண்டுவந்திருக்க"
புன்னகையுடன் அவன் முன் அழகிய கிப்ட் பாக்ஸ் வைத்தாள்
அதை ஆவலோடு பிரித்தவனுக்கு
சப்பென்று ஆகிவிட்டது
கிப்ட் பாக்சை திறந்தவனை அழகாக ஆசீர்வதித்தார் சாய்பாபா
"என்னடி இது "
" சாய்பாபா சிவா, அவரோட ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கும், அதான் வாங்கினேன் "
" அடி கஞ்சப்பிசுனாரி இந்த சாய்பாபா எனக்கு வேண்டாம் "
" ஏன் , அப்படியெல்லாம் சொல்லாதீங்க தயவு செஞ்சு எடுத்துக்கோங்க சிவா ப்ளீஸ் நான் உனக்காக பார்த்து பார்த்து வாங்கினேன் , இவரு உனக்கு எப்பவுமே துணையா இருப்பார்
இக்கட்டான சூழ்நிலையில் கூட பாபா உங்களுக்கு கை கொடுப்பார் ப்ளீஸ் சிவா, எனக்காக வாங்கிக்கோங்க
" ஏண்டி இப்படி அலும்பு பண்ற
உன்னய வச்சுகிட்டு ஒரு கொலை கூட பண்ணமுடியாது,,,,, எடுத்துக்கிறேன்
போதுமா நீ மூக்க சிந்தாத "
அன்றோடு அந்த நிகழ்வுடன் அவனுக்கு டாட்டா காட்டிவிட்டு வேகமாகவே அந்த சந்திப்பை முடித்துக் கொண்டு போய் விட்டாள்
அவனது வற்புறுத்தலின் பேரில் இரண்டாவது முறையாக அவனோடு வெளியே சென்றபோதுதான் அவளுக்கு சற்று திகில் பிடிக்க ஆரம்பித்தது
' எங்க கூட்டிட்டு போறான் '
யோசித்துக்கொண்டே வந்தவளுக்கு அவன் வண்டியை நிறுத்திய இடத்தை கண்டு சற்று பயம் உண்டானது
தார்சாலை சாலையின் இருபுறமும் இருபுறமும் சுற்றி அடர்ந்த காடுகள்
" இறங்கு "
" இங்கே எதுக்கு நடு ரோட்டுல
நின்னுபேசவா இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்த அடப்பாவி,,,, "
" இறங்குடி இங்கயே கொஞ்சம் நேரம் பேசிட்டு போலாம் "
" ஏய் என்ன விளையாடுறியா "
" விளையாட ஆசைதான் அத அப்புறம் பார்ப்போம் இப்ப சும்மா பேசிட்டு போவோம் "
" என்ன பேசப்போறோம் , வாங்க போவோம் எனக்கு பயமா இருக்கு "
" நான் இருக்கும்போது என்னடி பயம் உனக்கு "
' நீதான்டா என் பயமே, உன்னோட செகன்டைம் பைக்ல வந்ததே ஏதோ
பட படப்பா இருக்கு , இப்படி யாரும்
ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில அதுவும் நடு ரோட்டுல பைக் நிறுத்திட்டு பேசலாங்குறானே இவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு '
" பயம்லாம் இல்ல , நீ என்ன பேசணும் சொல்லு சீக்கிரம் பேசிட்டு
கிளம்புவோம் "
" எப்ப பாத்தாலும் வீட்டுக்குள்ள தானே இருக்க கொஞ்ச நேரம், வெளியே கூட்டிட்டு வந்து பேசலான்னு நெனச்சா ஓவரா பண்றடி "
" சரி என்ன விஷயம் சொல்லுங்க "
" உனக்கு எப்போடி மாப்பிள பாக்க போறாங்க "
" இதைக் கேட்கத்தான் இவ்வளவு தூரம் கூட்டிகிட்டு வந்தீங்களா "
" கேள்வி கேட்ட முதல்ல பதில் சொல்லுடி என்னைய திரும்ப கேள்வி கேட்காத "
" எனக்கு இப்போலாம் ஒன்னும் பாக்க மாட்டாங்க அதெல்லாம் லேட் ஆகும் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் நானே ஒரு பேபி எனக்கு ஒரு பேபியா "
" கல்யாணம் ஆன பத்து மாசத்தில பிள்ளை பெத்துருவ , நீ பேபியா "
" நா மட்டும் இல்ல எல்லா பொண்ணுங்களுக்கும் பத்து மாசத்துல தான் குழந்தை பிறக்கும், எதையோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி இத பேசத்தான் கூட்டிட்டு வந்தீங்களாக்கும் "
" அப்பா,,,,,,, இந்த வாய் இருக்கே உனக்கு இந்த வாய் இல்லன்னா நீ பொழைக்கமாட்டடி இந்த வாய்க்கலாம் பின்னாடி நிறைய வாங்க போற "
அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினான்
" ஆஆஆஆ,,,,,ஏய் வலிக்குது விடுங்க " அவன் கையைப் பிடித்து இழுத்தாள்
அவள் தோளை பற்றி தன் புறம் திருப்பி அவன் கண்களால் அவளை கைது செய்ய முயற்சித்தான், அவள் கண்களோ உன் பார்வைக்கு நான் மயங்க மாட்டேன் என்று சவால் போட்டு சொன்னது
அவள் தோளில் அவன் கைகள் திடீரென படிந்ததும் , ஆர்த்திக்கு படபடப்பும்,
கோபமும் வந்துவிட்டது
" என்ன பண்றீங்க நீங்க
கையை எடுங்க "
வேகமாக அவன் கையைத் தட்டிவிட்டாள்
அதில் அவனுக்கும் கோபம் வந்துவிட்டது
" ஏய் என்ன, கைய தட்டி விடுற, எந்த பொன்னையும் பைக்ல ஏத்தமாட்டேன், நீயும் விருப்பப்பட்டு தானே என் கூட வந்த , என்னமோ உன்னை கடத்திட்டு வந்த மாதிரி தட்டி விடுற,
இப்ப தொட்டு பேசுனதுல என்ன ஆயிடுச்சு , பிரண்ட்ஸ்குள்ள தொட்டு பேசுறது சகஜம்தானே, உன் பிரெண்ட்ஸ் கூட எல்லாம் நீ தொட்டு பேசினது இல்லையா "
" பிரிண்ட்ஸ்குள்ள தொட்டுப் பேசுகிறது சகஜம்தான், நீங்க,,,,நீங்க தொட்டப்ப ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கு, சாதாரணமான என்னால அத ஏத்துக்க முடியல அதான் எனக்கு கோவம் வந்துருச்சு "
" ரிலாக்ஸ் ,,,ரிலாக்ஸ்,,,,, கண்டபடி போட்டு மனச குழப்பிக்காத எதுக்கு கோபப்படுற ரிலாக்ஸ் "
அவளின் வென்மையான , மென்கரத்தை வருடியபடி
அவளை சமாதானப்படுத்தினான்
ஆர்த்தி எதையும் உணரும் நிலையில் இல்லை அவளது இதயம் எம்பி எம்பி குதித்துக் கொண்டு இருந்தது
" ப்ளீஸ் இங்கிருந்து போயிடலாம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு "
" போலாம்,,, போலாம்,, உன்னை கூட்டிட்டு வந்தேன் பாருடி என்னை சொல்லணும் , வீட்டுக்குள்ளேயே இருந்து முட்டை போடு, அட கோழி மாதிரி "
" போலாம்,,,,,,,,,,"
அவனை அணத்தி எடுத்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள்
ஆர்த்திக்கு பதின் பருவம் தாண்டி ஒரு வருடம் ஆகி இருந்த நிலையில்
இளம் பருவத்தில் வரும் தடுமாற்றத்தால் , அதை உணர்ந்து கொள்ள முடியாத நிலையிலேயே இருந்தாள்
அவனிடம் பேச வேண்டும் என்ற ஆவல் ஆர்த்திக்கு இருக்கத்தான் செய்தது, அவன் தவறாக பேசும் இடத்தில் எல்லாம் கோபப்பட்டாள்
" நான் தான் தப்பா பேசுறேன் ,பொறுக்கினெல்லாம் திட்டுற அப்பறம் ஏண்டி என் கிட்ட பேசுற "
" தெரியல,,, பட் நீங்க ரியலா அப்படி பேசுற கேரக்டர் கிடையாது, எனக்கு அது தெரியும் , என்னைய வம்பிழுக்கணும்னு தானே இப்படியெல்லாம் பேசுறீங்க "
ஆர்த்தியின் சிறுபிள்ளைத்தனமும் அவளது குழந்தை மனமும் சிவாவை மிகவும் ஈர்த்தது
தன்னை அறியாமல் தன் மீது ஒரு ஈர்ப்பை சிவாவிற்குள் ஏற்படுத்தி விட்டால் ஆர்த்தி
இதை உணராமல் அவனுடன் பேசிய நாட்களிலிருந்து அவனது மெசேஜ் வந்துவிட்டதா என்று தன்னையறியாமல் தேடத் துவங்கினாள்
அவன் மெசேஜ் பண்ணவில்லை என்றால்,
என்ன பண்றீங்க எப்படி இருக்கீங்க என்று அவளாகவே கேட்கத் துவங்கி விட்டாள்
சிவாவிற்கோ தன்னையும் தேட ஒருவள் இருக்கிறாள் என்ற எண்ணம் , ஆர்த்தியால் விதைக்கப்பட்டு மலை என வளர்ந்து நின்றது,
ஆனால் அவளாக தன்னை தேடி வர வேண்டும் அவளாகவே,
அவள் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தான்
அவன் நினைத்ததற்கு மாறாக,
அவனது எல்லை மீறிய தீண்டல் ஆர்த்திக்கு காதலை உணர்த்துவதற்கு பதிலாக பயத்தை
கொடுக்க ஆரம்பித்து விட்டது
வாழ்க்கையில் பொறுமை என்பது மிக மிக அவசியம்
பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சும்மாவா சொன்னார்கள் அன்று
பொறுமையாக அவனது காதலை எடுத்துச் சொல்லி
அவளது அன்பை பெற வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை
ஆர்த்தியின் மனதில் சிவாவின் மீதான அன்பு - நட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட உறவில் இருந்தது
அதை உணர்ந்து அவனது காதலை பொறுமையாகவே வெளிப்படுத்தி இருந்தால் ஆர்த்தியும் அவனது காதலை உணர்ந்து இருப்பாள்
வீடு வந்து சேர்ந்தவளுக்கு, அவனது தொடுதலின் பயமும் படபடப்பும் இன்னும் குறையவில்லை இது எங்கே போய் முடியுமோ என்ற பய உணர்வு
கடவுளே என்றபடி கட்டிலில்
சாய்ந்தவளுக்கு
பலவித எண்ணங்கள்,
பலவித குழப்பங்கள்
எங்கே தீர்வு காண்பது
அவனிடமே கேட்போம் அவனுக்கு போன் செய்தால்
" வீட்டுக்கு போயிட்டியா "
"ம்,,, வந்துட்டேன் "
" என்னடி "
" எனக்கு ரொம்ப பயமா இருக்கு
நம்ம இனிமே இப்படி பார்த்துக்க வேண்டாம் சிவா "
" ஏன்டி "
"எனக்கு சொல்ல தெரியல "
" என்ன லவ் பண்ணிடுவோம்னு பயமா இருக்கா உனக்கு "
" லவ்வா உங்களையா அதெல்லாம் இல்ல "
" என்ன லவ் பண்ணாம வேற யாரை லவ் பண்ண போற "
" எனக்கு லவ் மேரேஜ் எல்லாம் செட்டாகாது சிவா, ப்ளீஸ் இனி நாம ரொம்ப பேசிக்க வேண்டாம் நினைக்கிறேன் "
" என்ன லவ் பண்ணிடுவோம்ங்குற பயம் உன் மனசுல வந்துடுச்சுடி அதான் பேச வேணாம்னு சொல்ற"
" சரி சாப்பிட்டு தூங்குங்க பாய் " போனை வைத்துவிட்டாள்
' சாப்பிட்டு தூங்குங்கன்னு அன்பா சொல்ற, அந்த அன்ப காதலா
மாத்திகாட்றேன்டி'
சிவாவின் நினைவு தனக்கு வரக்கூடாது என்று அவனுடன் பேசும் நேரத்தில் தன்னை வேறு ஒரு பணியில் திணித்துக் கொண்டாள்
எப்படியோ பத்துநாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது
திடீரென்று சிவாவின் போன் காலை பார்த்ததும், ஆர்த்திக்கு அடிவயிற்றில் பய உணர்வு ஏற்பட்டு தொண்டைக்கு வந்து நின்றது
" சொல்லுங்க என்னடி எப்படி இருக்க, ரொம்ப பெரிய ஆள் ஆகிட்ட
பேசக்கூட மாட்ற "
" அப்படியெல்லாம் இல்ல சிவா
கொஞ்சம் பிசியா இருந்தேன் அவ்வளவுதான் "
" நான் ஒன்னு கேப்பேன் முடியுமா, முடியாதா மட்டும் சொல் வேறு எதுவும் பேசக்கூடாது "
" என்னன்னு சொல்லுங்க "
" உன்ன உடனே பாக்கணும் வர முடியுமா "
" என்ன, போன்ல சொல்லுங்க சிவா "
" நேர்ல தான் பேசணும் "
" என்ன விஷயமா பேசணும் அதையாவது சொல்லுங்க "
" எல்லாமே நேர்ல தான் பேசணும் உடனே நீ வா நான் வைக்கிறேன் "
போகலாமா வேண்டாமா ஆர்த்தியின் மனது பட்டிமன்றமே நடத்தியது
அவன் அழைப்பை பார்த்தவுடன் மனம் சிறு துள்ளல் போட்டாலும்
அதையும் மீறி, பயம் அவள் வயிற்றில் புளியைத்தான் கரைத்தது
தேவையில்லாம ஏன் அவன் கிட்ட இப்ப பேசின, போன கட் பண்ண வேண்டியதுதானே , ஓவரா சீன்
போடாதன்னு சொல்லுவான்,
வாண்ணா வரணும் போன்னா போபகனும், எதிர்கேள்வி கேட்காதன்னு சொல்லுவான் அவன போய் நீ இப்ப பார்க்க போறியா , உனக்கு சூடு சொரணை இல்லையா என்று அவளது மூளையே அவளைக் காறித் துப்பியது,,
ஆனால் மனமோ துப்புனா, துப்பிக்க அவன்கிட்ட பேசதான் தான் செய்வேன் மனம் சற்று திமிராக நினைத்தாலும் அந்த நினைப்பையும் மீறி அந்த இது தப்புதான் என்ற பயத்தையும் எச்சரிக்கையையும்
அதே மனம் தான் தந்தது
இந்த முறை அவன் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு அவனை சந்திக்க சென்றாள்
மூன்றாவது முறையாக
ஒரு அழகான குகை கோவில்
ஆள் நடமாட்டம் மிகவும் கம்மி
அந்த கோவிலை ஒட்டிய படியே பூங்காவும், மலையும் இருந்தது
கோவிலில் இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு , மலைமேல் மலைமேல் உள்ள கோவிலுக்கு சென்றார்கள்
" இங்க கூட்டிட்டு வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல சிவா,
ரொம்ப தேங்க்ஸ்,
நான் இங்க வந்ததே இல்லை "
மனநிறைவுடன் சொன்னாள்
அவனது அமைதி,
அவளுக்குள் திக் திக் என்று தான் இருந்தது
' எந்த நேரத்தில் என்ன செய்வானோ இவனோட வந்த்து சரியா , தப்பா '
மனம் குரங்கு போல் தாவிக் கொண்டே இருந்தது
" ஏன் ஆர்த்தி இத்தனை வருஷமா இங்க வந்தது இல்லையா "
அப்போதுதான் வாயைத் திறந்தான்
" இல்ல சிவா "
" அந்த காலத்து ராஜாக்கள் கட்டினது எப்படி இருக்கு பார்த்தியா"
" இப்ப எல்லாம் இந்த மாதிரி
கட்ட முடியாது சிவா "
" இதுக்குள்ள பார் மூனு சாமி இருக்கு "
ஒரு குகைபோல் சென்றது அந்த இடம்
ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது
அதற்குள் அழைத்துச் சென்றான்
அங்கே இருந்த தெய்வத்தை கண்மூடி ஆர்த்தி வேண்டிக் கொண்டிருக்க
அவள் பின்னாலிருந்து அவளை ஒரே தூக்காக தூக்கிவிட்டான்
" என்ன பண்றீங்க நீங்க,
இறக்கி விடுங்க "
ஆர்த்திக்கு கண்களில் நீர் சூழ்ந்து விட்டது
"இறக்கிவிடுங்க ,,,,"
" முடியாதுடி "
" இறக்கி விடுங்க ப்ளீஸ் சிவா "
உள்ளே, யாரோ வரும் அரவம் கேட்டதும் சட்டென அவளை இறக்கி விட்டான்
தன் கண்களிலிருந்து தாரை தாரையாக வடிந்த கண்ணீரை கூட துடைக்காமல்
அங்கே இருந்து இறைவனை பார்த்தால் அவரை பார்க்க பார்க்க அழுகை அவளுக்கு வெடித்து கொண்டு தான்
என்ன சோதனை இது, இதுக்குத்தான் இங்க வந்தேனா, இவன பத்தி தெரிஞ்சுக்கத்தான் என்ன இங்க கூட்டிட்டு வந்தியாப்பா, போதும்பா
இவன் கிட்ட இருந்து என்னை எப்படியாவது காப்பாத்து
அந்த இறைவனை மனமார வேண்டினால்
அந்த இறைவன் என்ன
சாமானிய பட்டவரா
வள்ளி - தெய்வானையின்
மணாளன் அல்லவா
அவளது எதிர்காலத்தை அன்றே உணர்ந்தது போல் அவர் முகத்தில் ஒரு புன்சிரிப்பு மட்டுமே இருந்தது
உள்ளே வந்த பூஜகர் முருகனுக்கு தீபாராதனை காட்டினார்
" எதுக்கும் கவலைப்படாதம்மா,
இந்த முருகன் பாத்துக்குவார்,
தைரியமா இருங்கோ "
அவள் கண்ணீரை பார்த்துவிட்டு வீடு ஆறுதலாக கூறினார் அர்ச்சகர்
அந்த முருகனே அவர் மூலம் அந்த வார்த்தையை கூறிய ஆறுதல்படுத்தியதாக
நம்பிக்கை கொண்டாள் ஆர்த்தி
ஒரு பெண்ணின் மனதை , ஆயிரம் முறை ஒரு ஆண் வென்றிருந்தாலும் அவள் மனதிற்கு பிடித்தவனாக இருந்தாலும் கூட, உரிமையோடு தான் அவன் கை தன்னை பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்
ஆர்த்தி தைரியமாக பேசினாலும் சற்று பயந்த சுபாவம் கொண்டவள்
அவளுக்கு சிவாவைப் பிடித்திருந்தது ஆனால் அவன் தொடுகையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தாள் நட்புக்கும் , காதலுக்கும் இடைப்பட்ட உறவில் நாம் சிவாவோடு பழகுகிறோம் இது காதலில் போய் முடிந்து விடுமோ என்ற பயம் மட்டுமே அவளுக்குள் இருந்தது
காதலித்தால் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், காதலிப்பவர்கள் கரம் பற்ற வேண்டும் இல்லையேல் அந்த காதல் அர்த்தமற்றதாக போய்விடும்
ஒரு மனிதனின் சூழ்நிலை அவனை பலவிதமாக மாற்றிவிடும் , எந்த சூழ்நிலையிலும் எவ்வளவு தடைகள் வந்தாலும் அவர்கள் கரம்பற்றி திருமணத்துக்கு பின்னும், வாழ்நாள் முழுவதும் அந்த காதல் துளி அளவு கூட குறையாமல் வாழும் அவர்களது அன்பான குடும்ப வாழ்வில்தான் அந்த காதல் வெற்றி பெறுகிறது
வேறு ஒருவன் ஆர்த்தியின் கையைப் பிடித்து இருந்தால் சட்டென்று அவன் கண்ணத்தில் அடித்திருப்பாள்
ஒரு ஆண், ஒரு பெண்ணை அவனது உடல் பலத்தால் வெல்ல முடியுமே தவிர அவள் மனதை அவ்வளவு எளிதில் வெல்ல முடியாது
" இப்ப எதுக்குடி அழுவுற அவளிடம் மேலும் சீறினான் "
" இதுக்குதான் என்னை கூட்டிட்டு வந்தீங்களா "
" இப்ப என்னடி செஞ்சிட்டேன் உன்னை தூக்கணும்னு நினைச்சு தூக்கினேன் இது ஒரு தப்பா "
" வேற எது தப்பு, உங்கள நம்பி வந்தேன் பாருங்க என்ன சொல்லணும் "
" ஓவரா சீன் போடாதடி "
" முதல்ல இந்த பாட்டை நிறுத்துங்க, நான் இப்போ, ஓப்பனாவே ஒன்னு சொல்றேன் சிவா,
உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா நீங்க தொடுறது எனக்கு பிடிக்கல,
இதுவே வேற ஒருத்தன் எண்ணத் தொட்டுருந்தா, அறஞ்சுருப்பேன் , தயவு செஞ்சு இனிமே நம்ம ரெண்டு பேரும் பேசிக்க வேணாம், பாத்துக்க வேண்டாம் இதோடு நிறுத்திக்கலாம் "
அவனிடம் பொரிந்து தள்ளிவிட்டு , அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்
" ஏய் நில்லுடி, நான் தொட்டா பிடிக்கல ஆனா என்கிட்ட பேச மட்டும் புடிக்குது கேட்டா, நட்புக்கும் காதலுக்கும்
நடுவுலன்னு சொல்ற இதுக்கு என்னடி அர்த்தம் பதில் சொல்லிட்டு போ "
" என்ன பொறுத்த வரைக்கும்
காதல்னா - உங்க மேல முதல்ல எனக்கு நல்ல எண்ணத்தை கொடுக்கணும்
எனக்கு எல்லாமே நீங்க தான், நான் நினைக்கணும்,
உங்களோட பலகுறப்ப நான் பயப்படக்கூடாது ,
உரிமையோட நீங்க என் கைய புடிக்கணும்,
உரிமையோடு நான் உங்க கூட வரனும்
உங்க மேல ஒரு நம்பிக்கை, இருந்துச்சு நீங்க நல்ல மனுஷன் , அந்த நம்பிக்கைதான் நீங்க கூப்பிட்ட என்னைய வர வச்சுது ,
இன்னைக்கு அந்த நம்பிக்கையை நீங்க பொய்யாக்கிடீங்க ,
இதுவரைக்கும் என்கிட்ட உங்க காதலை நீங்க சொன்னது கிடையாது ,
நீங்க சொல்லி இருந்தாலும் , உங்க மேல எனக்கு காதல் வர போறது கிடையாது
ஏன்னா காதல் - முதல்ல நேசிக்கதான்வைக்கும், யோசிச்சு நேசம் வந்தா அது காதலே கிடையாது
நீங்களும் நல்லா இருக்கணும், நானும் நல்லா இருக்கணும் ,
நம்ம ரெண்டு பேரோட குடும்பமும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன் நம்ம பிரண்ட்ஷிப் இதோட
முடிச்சுகுறதுதான் நல்லது
இதுக்கு மேல நாம பேசவேண்டாம்
நான் வர்றேன் "
சிவாவுடன் பேசிய நேரங்களை தனது படிப்பு, தையல் கிளாஸ் என
தன் அன்றாட வாழ்க்கையை
மாற்றிக் கொண்டால் ஆர்த்தி
மூன்று மாதத்திற்குப் பின்
ஒரு திருமண நிகழ்ச்சியில் ஆர்த்தி தன் தோழிகளுடன் சென்றிருந்தாள்
அதே திருமணத்தில் சிவா ஆர்த்தியை பார்த்ததுதான் விதியின் சதி
மணமகள் அறையில் தோழிகளோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தவளின் மொபைல் சிணுங்கியது, அங்கே பேச முடியாமல் வெளியே வந்து முதல் மாடி பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தாள்
பேசிவிட்டு திரும்பிய வேகத்தில் யார் மீதோ மோதி நின்றாள்
" சாரி,,, சாரி ,,,,"
என்றபடி நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி கலந்த ஒரு மகிழ்ச்சி
சிவாவை அங்கு சற்றும் எதிர்பாராதவள் அவனை பார்த்தவுடன் வெள்ளை மனதுடன்
" எப்படி இருக்கீங்க "
" எனக்கு என்ன டீ நல்லா இருக்கேன்,
நீ,,,நீ ,,எப்படி இருப்ப, சந்தோஷமா தானே இருப்ப "
பொடி வைத்துப் பேசினான்
" புரியல "
" இல்ல மூணு மாசத்துல சதை போட்ட மாதிரி இருக்கியே அதான் சந்தோஷமா இருக்கியான்னு கேட்டேன் "
உச்சி முதல் பாதம் வரை அவனது நேரடிப் பார்வையில் ஒரு கள்ளத்தனம் இருந்தது அதை உணர்ந்த ஆர்த்திக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது
" நீங்க மாறவே மாட்டீங்க " அவனை தாண்டி செல்ல முயன்றாள்
அவள் கையை பிடித்து கொண்டான் " எங்கடிபோற, இப்பதானே பாத்தோம் அதுக்குள்ள கிளம்புற "
" கையை விடுங்க , யாராவது பாக்க போறாங்க ப்ளீஸ் கைய விடுங்க சிவா"
" அதான் உன் பிரச்சனையா வாடி " விருட்டென்று அருகிலிருந்த ஒரு ரூமுக்குள் அவளை இழுத்து தள்ளி கதவை சாத்திவிட்டான் "
" ஏய் என்ன பண்றீங்க, கதவ திறங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க தயவு செஞ்சு கதவைத் திறங்க "
" முதல்ல இருடி ரொம்ப தான் கத்துற, வாய ஒடச்சிடுவேன் சொல்லிட்டேன் "
" பர்ஸ்ட் கதவ திறங்க அப்புறம் பேசிக்கலாம் "
" கதவ துறக்கலாம், உன் முதுகுல
என்ன "
" என் முதுகலையா "
"ஆமாண்டி "
" தன் கையையும் தலையும் வளைத்து பின்புறம் பார்த்தால் ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை "
என்னவென்று அவனையே புரியாமல் பார்க்க
" ஸாரில செம்மையா இருக்க, சூப்பர் இன்னைக்கு ஃபுல்லா சைட் அடிச்சிகிட்டே இருக்கலாம் , உன் முதுகுல என்னடி அவ்வளவு பெரிய ஓட்டை "
"ஓட்டையா,,,"
தன் கைகளை வளைத்து தன் முதுகை தொட்டுப் பார்த்துவிட்டு, அவன் தன் பிளவுசை சொல்கிறான் என்பதை உணர்ந்து தன் சேலை முந்தானையை எடுத்து முன்புறம் இழுத்து பிடித்துக்கொண்டாள்
" நான் ஒரு மாடல் சொன்னேன், அவங்க,,, அவங்க மாத்தி தச்சுட்டாங்க அதான் முந்திய விடாம பிடிச்சுகிட்டே இருந்தேன் "
" கல்யாணத்துக்கு வர்றவன் எல்லாம் உன்னைய பாக்கணும் தானே இப்படி போட்டுகிட்டு வந்திருக்க "
அமிலத்தை எடுத்து முகத்தில் ஊற்றியது போல் கோபத்தில் ஆர்த்தியின் முகம் சிவந்து விட்டது இதுபோன்ற பேச்சுக்களை கேட்டிராதவள் , அவள் வளர்ந்த சூழ்நிலை அப்படி,
தன்னை போய் இப்படி பேசி விட்டானே அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கண்களிலிருந்து வரவா, வரவா கேட்டுக்கொண்டிருந்த கண்ணீர் அவளையும் மீறி வெளியே எட்டி பார்த்து விட்டது
அவனிடம் எதுவும் பேசப் பிடிக்காமல் வேகமாக அவனை கடந்து கதவின் தாழ்ப்பாளை நீக்கி விட்டு வெளியே செல்ல அடி எடுத்து வைத்தாள்
புலியென பாய்ந்து , அவள் கையைப் பற்றி உள்ளே இழுத்தான்
" எங்கடி போற, திமிர்பிடிச்சவளே உனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்கலாமே "
" என்ன உளர்றீங்க "
" நான் ஒன்னும் உளறல, உங்க வீட்டில உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க "
' எனக்கு தெரியாம எங்க வீட்ல எப்படி டா மாப்ள பாப்பாங்க, லூசாடா நீ ' மனதுக்குள் அவனை வசவு விட்டு
" சரி, பார்த்துட்டு போகட்டும் இப்போ என்ன அதுக்கு "
" அதான பார்த்தேன் ஏன்டி இப்பவே கல்யாணத்துக்கு அலையுற "
" இதுக்கு மேல பேசின மரியாதை கெட்டுரும் , வழியை விடு "
" அதையும் பார்த்துடலாம்டி , வீட்ல பாக்குறவன கல்யாணம் பண்ணிக்க என்ன கள்ளபுருஷன் வச்சுக்கடி, என் கள்ள பொண்டாட்டி "
சிவாவின் அளவுக்கு மீறிய அந்த வார்த்தை சீண்டலை ஆர்த்தியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
எங்கிருந்துதான் அவளுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ தன் கண்களை இறுக மூடிக்கொண்டு தனது கோபத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோற்றுப் போய்விட்டால்
அவனது கை, அவளது இடது கரத்தை பிடித்து இருந்தது அதை வேகமாக ஒரு உதறு உதறி விட்டு, ஓங்கி அவன் கன்னத்தில் ஓர் அறை விட்டாள்
அவள் அறையவும் , அந்த அறைக்குள் சிவாவின் நண்பர்கள் இருவர் வரவும் சரியாக அமைந்து விட்டது
கோபத்தின் உச்சியில் இருந்த ஆர்த்தியும் , அவளது அரையை எதிர்பார்த்திராத சிவாவும்
அவர்கள் இருவரையும் கவனிக்கவில்லை
" இவ்வளவு தான் உனக்கு மரியாதை இனிமே என் விஷயத்துல தலையிட்ட அவ்வளவுதான் , நீயெல்லாம் ஒரு மனுஷன் த்தூ,,,,, "
புயலென அங்கிருந்து வெளியேறி விட்டாள்
" என்னடா இதெல்லாம் "
சிவாவின் நண்பர்கள் புரியாமல் விழிக்க
" அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சி "
" ஒரு பொம்பள புள்ள உன்ன கைநீட்டி அடிச்சிட்டு போற நீ ஒன்னும் இல்லைங்கிற, யார்ரா அவ,எதுக்கு உன்ன அடிச்சுட்டு போறா, சொல்லுடா இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்த்தறேன் "
" ப்ளீஸ் சொன்னா புரிஞ்சுக்கோங்கடா என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க "
அதற்கு மேல் பேசினால் சிவாவிடம் எடுபடாது என்று உணர்ந்தவர்கள் அவனை தனிமையில் விட்டுச்சென்றார்கள்
நான் மனுஷனா- மிருகமா கண்டிப்பா உனக்கு ஒரு நாள் தெரியவரும்,,
தயாரா,,, இருடி
அந்த நாள் கண்டிப்பா வரும்
அப்ப நீ தெரிஞ்சுக்குவ
நான் மனுசனா , மிருகமான்னு,,,,
அவசரப்பட்டு விட்டோமோ நூறாவது முறையாக யோசித்தபடி பைக்கில் சென்று கொண்டிருந்தாள் ஆர்த்தி
பெரிய கடைவீதியில் பிரபலமான துணிக்கடை அருகே நின்று கொண்டிருந்தவளின் அருகில் உரசுவது போல் ஒரு பைக் வந்து நின்றது
யார்ரா இவன் ஹெல்மெட் போட்டுகிட்டு எரும மாடு மாதிரி வந்து மோத பாக்குறானே
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு பயந்தபடியே பின்னடைந்தாள்
இதை கவனித்த துணிக்கடையின் செக்யூரிட்டி அவள் அருகே வந்து
"சார் பைக் ஸ்டாண்ட் அந்த பக்கம் போங்க "
அப்பவும் அவன் ஆர்த்தியை பார்த்தபடியே இருக்க
"உங்கள பிக்கப்பண்ண வந்துருக்கிறாரா "
ஆர்த்தியிடம் விசாரித்தார்
இல்லை என்று அவள் வாயைத் திறப்பதற்குள்
" உன்ன கூட்டிட்டு போகத்தான் வந்திருக்கேன் " என்று
ஹெல்மட்டை கழட்டினான்
அவன் குரலை வைத்தே அவனை யார் என்று உணர்ந்து விட்டவள்
' லூசு எப்படி பயமுறுத்திடான் '
அவனை பார்த்து மகிழ்வுடன் புன்னகைத்தாள்
ஆர்த்தியின் புன்னகையால் அதை உறுதி செய்து கொண்ட செக்யூரிட்டி தன் வேலையை தொடர்ந்தார்
"இப்படியா வந்து பயமுறுத்துறது லூசு "
" அப்பயாச்சும் நீ பயப்படுவன்னு பார்த்தேன் , பரவால்ல கொஞ்சம் பயந்துட்ட வா போலாம் "
" எங்கே "
" இப்புடி நடு ரோட்டுல நின்னே பேச முடியுமா, அந்த செக்யூரிட்டி வேற இங்கேயே பாத்துக்கிட்டு இருக்கான்
வா போலாம் "
ஆர்த்தியும் அதை கவனித்தாள் , செக்யூரிட்டியின் பார்வை அவர்களை நோக்கியே இருந்தது
'இவனோட பைக்ல போலாமா,, '
அவள் யோசித்துக் கொண்டிருக்க
" ஏறு ஆர்த்தி "
சிவா பைக்கை ஸ்டார்ட் பண்ணிவிட்டான்
கடவுளே என்று நினைத்தபடி சிவாவுடன் பைக்கில் அமர்ந்தாள்
அவள் தோழிகளுடன் செல்லும் ரெஸ்டாரண்ட்தான் அது , அங்கேயே அழைத்து வந்திருந்தான்
" அப்பா,,,,
ஒரு வழியா வெளியில வந்துட்ட,
என்ன சாப்பிடுற "
" எனக்கு எதுவும் வேண்டாம் "
" என்னடி விளையாடுறியா
ரொம்ப சீன் போடாம என்ன வேணும்னு சொல்லு "
" நீங்களே சொல்லுங்க "
" சரிடி என்ன கிப்ட் கொண்டுவந்திருக்க"
புன்னகையுடன் அவன் முன் அழகிய கிப்ட் பாக்ஸ் வைத்தாள்
அதை ஆவலோடு பிரித்தவனுக்கு
சப்பென்று ஆகிவிட்டது
கிப்ட் பாக்சை திறந்தவனை அழகாக ஆசீர்வதித்தார் சாய்பாபா
"என்னடி இது "
" சாய்பாபா சிவா, அவரோட ஆசீர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கும், அதான் வாங்கினேன் "
" அடி கஞ்சப்பிசுனாரி இந்த சாய்பாபா எனக்கு வேண்டாம் "
" ஏன் , அப்படியெல்லாம் சொல்லாதீங்க தயவு செஞ்சு எடுத்துக்கோங்க சிவா ப்ளீஸ் நான் உனக்காக பார்த்து பார்த்து வாங்கினேன் , இவரு உனக்கு எப்பவுமே துணையா இருப்பார்
இக்கட்டான சூழ்நிலையில் கூட பாபா உங்களுக்கு கை கொடுப்பார் ப்ளீஸ் சிவா, எனக்காக வாங்கிக்கோங்க
" ஏண்டி இப்படி அலும்பு பண்ற
உன்னய வச்சுகிட்டு ஒரு கொலை கூட பண்ணமுடியாது,,,,, எடுத்துக்கிறேன்
போதுமா நீ மூக்க சிந்தாத "
அன்றோடு அந்த நிகழ்வுடன் அவனுக்கு டாட்டா காட்டிவிட்டு வேகமாகவே அந்த சந்திப்பை முடித்துக் கொண்டு போய் விட்டாள்
அவனது வற்புறுத்தலின் பேரில் இரண்டாவது முறையாக அவனோடு வெளியே சென்றபோதுதான் அவளுக்கு சற்று திகில் பிடிக்க ஆரம்பித்தது
' எங்க கூட்டிட்டு போறான் '
யோசித்துக்கொண்டே வந்தவளுக்கு அவன் வண்டியை நிறுத்திய இடத்தை கண்டு சற்று பயம் உண்டானது
தார்சாலை சாலையின் இருபுறமும் இருபுறமும் சுற்றி அடர்ந்த காடுகள்
" இறங்கு "
" இங்கே எதுக்கு நடு ரோட்டுல
நின்னுபேசவா இவ்வளவு தூரம் கூட்டிட்டு வந்த அடப்பாவி,,,, "
" இறங்குடி இங்கயே கொஞ்சம் நேரம் பேசிட்டு போலாம் "
" ஏய் என்ன விளையாடுறியா "
" விளையாட ஆசைதான் அத அப்புறம் பார்ப்போம் இப்ப சும்மா பேசிட்டு போவோம் "
" என்ன பேசப்போறோம் , வாங்க போவோம் எனக்கு பயமா இருக்கு "
" நான் இருக்கும்போது என்னடி பயம் உனக்கு "
' நீதான்டா என் பயமே, உன்னோட செகன்டைம் பைக்ல வந்ததே ஏதோ
பட படப்பா இருக்கு , இப்படி யாரும்
ஆள் நடமாட்டமே இல்லாத இடத்தில அதுவும் நடு ரோட்டுல பைக் நிறுத்திட்டு பேசலாங்குறானே இவனுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு '
" பயம்லாம் இல்ல , நீ என்ன பேசணும் சொல்லு சீக்கிரம் பேசிட்டு
கிளம்புவோம் "
" எப்ப பாத்தாலும் வீட்டுக்குள்ள தானே இருக்க கொஞ்ச நேரம், வெளியே கூட்டிட்டு வந்து பேசலான்னு நெனச்சா ஓவரா பண்றடி "
" சரி என்ன விஷயம் சொல்லுங்க "
" உனக்கு எப்போடி மாப்பிள பாக்க போறாங்க "
" இதைக் கேட்கத்தான் இவ்வளவு தூரம் கூட்டிகிட்டு வந்தீங்களா "
" கேள்வி கேட்ட முதல்ல பதில் சொல்லுடி என்னைய திரும்ப கேள்வி கேட்காத "
" எனக்கு இப்போலாம் ஒன்னும் பாக்க மாட்டாங்க அதெல்லாம் லேட் ஆகும் கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம் நானே ஒரு பேபி எனக்கு ஒரு பேபியா "
" கல்யாணம் ஆன பத்து மாசத்தில பிள்ளை பெத்துருவ , நீ பேபியா "
" நா மட்டும் இல்ல எல்லா பொண்ணுங்களுக்கும் பத்து மாசத்துல தான் குழந்தை பிறக்கும், எதையோ புதுசா கண்டுபிடிச்ச மாதிரி இத பேசத்தான் கூட்டிட்டு வந்தீங்களாக்கும் "
" அப்பா,,,,,,, இந்த வாய் இருக்கே உனக்கு இந்த வாய் இல்லன்னா நீ பொழைக்கமாட்டடி இந்த வாய்க்கலாம் பின்னாடி நிறைய வாங்க போற "
அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினான்
" ஆஆஆஆ,,,,,ஏய் வலிக்குது விடுங்க " அவன் கையைப் பிடித்து இழுத்தாள்
அவள் தோளை பற்றி தன் புறம் திருப்பி அவன் கண்களால் அவளை கைது செய்ய முயற்சித்தான், அவள் கண்களோ உன் பார்வைக்கு நான் மயங்க மாட்டேன் என்று சவால் போட்டு சொன்னது
அவள் தோளில் அவன் கைகள் திடீரென படிந்ததும் , ஆர்த்திக்கு படபடப்பும்,
கோபமும் வந்துவிட்டது
" என்ன பண்றீங்க நீங்க
கையை எடுங்க "
வேகமாக அவன் கையைத் தட்டிவிட்டாள்
அதில் அவனுக்கும் கோபம் வந்துவிட்டது
" ஏய் என்ன, கைய தட்டி விடுற, எந்த பொன்னையும் பைக்ல ஏத்தமாட்டேன், நீயும் விருப்பப்பட்டு தானே என் கூட வந்த , என்னமோ உன்னை கடத்திட்டு வந்த மாதிரி தட்டி விடுற,
இப்ப தொட்டு பேசுனதுல என்ன ஆயிடுச்சு , பிரண்ட்ஸ்குள்ள தொட்டு பேசுறது சகஜம்தானே, உன் பிரெண்ட்ஸ் கூட எல்லாம் நீ தொட்டு பேசினது இல்லையா "
" பிரிண்ட்ஸ்குள்ள தொட்டுப் பேசுகிறது சகஜம்தான், நீங்க,,,,நீங்க தொட்டப்ப ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கு, சாதாரணமான என்னால அத ஏத்துக்க முடியல அதான் எனக்கு கோவம் வந்துருச்சு "
" ரிலாக்ஸ் ,,,ரிலாக்ஸ்,,,,, கண்டபடி போட்டு மனச குழப்பிக்காத எதுக்கு கோபப்படுற ரிலாக்ஸ் "
அவளின் வென்மையான , மென்கரத்தை வருடியபடி
அவளை சமாதானப்படுத்தினான்
ஆர்த்தி எதையும் உணரும் நிலையில் இல்லை அவளது இதயம் எம்பி எம்பி குதித்துக் கொண்டு இருந்தது
" ப்ளீஸ் இங்கிருந்து போயிடலாம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு "
" போலாம்,,, போலாம்,, உன்னை கூட்டிட்டு வந்தேன் பாருடி என்னை சொல்லணும் , வீட்டுக்குள்ளேயே இருந்து முட்டை போடு, அட கோழி மாதிரி "
" போலாம்,,,,,,,,,,"
அவனை அணத்தி எடுத்து ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள்
ஆர்த்திக்கு பதின் பருவம் தாண்டி ஒரு வருடம் ஆகி இருந்த நிலையில்
இளம் பருவத்தில் வரும் தடுமாற்றத்தால் , அதை உணர்ந்து கொள்ள முடியாத நிலையிலேயே இருந்தாள்
அவனிடம் பேச வேண்டும் என்ற ஆவல் ஆர்த்திக்கு இருக்கத்தான் செய்தது, அவன் தவறாக பேசும் இடத்தில் எல்லாம் கோபப்பட்டாள்
" நான் தான் தப்பா பேசுறேன் ,பொறுக்கினெல்லாம் திட்டுற அப்பறம் ஏண்டி என் கிட்ட பேசுற "
" தெரியல,,, பட் நீங்க ரியலா அப்படி பேசுற கேரக்டர் கிடையாது, எனக்கு அது தெரியும் , என்னைய வம்பிழுக்கணும்னு தானே இப்படியெல்லாம் பேசுறீங்க "
ஆர்த்தியின் சிறுபிள்ளைத்தனமும் அவளது குழந்தை மனமும் சிவாவை மிகவும் ஈர்த்தது
தன்னை அறியாமல் தன் மீது ஒரு ஈர்ப்பை சிவாவிற்குள் ஏற்படுத்தி விட்டால் ஆர்த்தி
இதை உணராமல் அவனுடன் பேசிய நாட்களிலிருந்து அவனது மெசேஜ் வந்துவிட்டதா என்று தன்னையறியாமல் தேடத் துவங்கினாள்
அவன் மெசேஜ் பண்ணவில்லை என்றால்,
என்ன பண்றீங்க எப்படி இருக்கீங்க என்று அவளாகவே கேட்கத் துவங்கி விட்டாள்
சிவாவிற்கோ தன்னையும் தேட ஒருவள் இருக்கிறாள் என்ற எண்ணம் , ஆர்த்தியால் விதைக்கப்பட்டு மலை என வளர்ந்து நின்றது,
ஆனால் அவளாக தன்னை தேடி வர வேண்டும் அவளாகவே,
அவள் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்தான்
அவன் நினைத்ததற்கு மாறாக,
அவனது எல்லை மீறிய தீண்டல் ஆர்த்திக்கு காதலை உணர்த்துவதற்கு பதிலாக பயத்தை
கொடுக்க ஆரம்பித்து விட்டது
வாழ்க்கையில் பொறுமை என்பது மிக மிக அவசியம்
பொறுத்தார் பூமி ஆள்வார் என்று சும்மாவா சொன்னார்கள் அன்று
பொறுமையாக அவனது காதலை எடுத்துச் சொல்லி
அவளது அன்பை பெற வேண்டும் என்று அவனுக்குத் தெரியவில்லை
ஆர்த்தியின் மனதில் சிவாவின் மீதான அன்பு - நட்புக்கும் காதலுக்கும் இடைப்பட்ட உறவில் இருந்தது
அதை உணர்ந்து அவனது காதலை பொறுமையாகவே வெளிப்படுத்தி இருந்தால் ஆர்த்தியும் அவனது காதலை உணர்ந்து இருப்பாள்
வீடு வந்து சேர்ந்தவளுக்கு, அவனது தொடுதலின் பயமும் படபடப்பும் இன்னும் குறையவில்லை இது எங்கே போய் முடியுமோ என்ற பய உணர்வு
கடவுளே என்றபடி கட்டிலில்
சாய்ந்தவளுக்கு
பலவித எண்ணங்கள்,
பலவித குழப்பங்கள்
எங்கே தீர்வு காண்பது
அவனிடமே கேட்போம் அவனுக்கு போன் செய்தால்
" வீட்டுக்கு போயிட்டியா "
"ம்,,, வந்துட்டேன் "
" என்னடி "
" எனக்கு ரொம்ப பயமா இருக்கு
நம்ம இனிமே இப்படி பார்த்துக்க வேண்டாம் சிவா "
" ஏன்டி "
"எனக்கு சொல்ல தெரியல "
" என்ன லவ் பண்ணிடுவோம்னு பயமா இருக்கா உனக்கு "
" லவ்வா உங்களையா அதெல்லாம் இல்ல "
" என்ன லவ் பண்ணாம வேற யாரை லவ் பண்ண போற "
" எனக்கு லவ் மேரேஜ் எல்லாம் செட்டாகாது சிவா, ப்ளீஸ் இனி நாம ரொம்ப பேசிக்க வேண்டாம் நினைக்கிறேன் "
" என்ன லவ் பண்ணிடுவோம்ங்குற பயம் உன் மனசுல வந்துடுச்சுடி அதான் பேச வேணாம்னு சொல்ற"
" சரி சாப்பிட்டு தூங்குங்க பாய் " போனை வைத்துவிட்டாள்
' சாப்பிட்டு தூங்குங்கன்னு அன்பா சொல்ற, அந்த அன்ப காதலா
மாத்திகாட்றேன்டி'
சிவாவின் நினைவு தனக்கு வரக்கூடாது என்று அவனுடன் பேசும் நேரத்தில் தன்னை வேறு ஒரு பணியில் திணித்துக் கொண்டாள்
எப்படியோ பத்துநாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது
திடீரென்று சிவாவின் போன் காலை பார்த்ததும், ஆர்த்திக்கு அடிவயிற்றில் பய உணர்வு ஏற்பட்டு தொண்டைக்கு வந்து நின்றது
" சொல்லுங்க என்னடி எப்படி இருக்க, ரொம்ப பெரிய ஆள் ஆகிட்ட
பேசக்கூட மாட்ற "
" அப்படியெல்லாம் இல்ல சிவா
கொஞ்சம் பிசியா இருந்தேன் அவ்வளவுதான் "
" நான் ஒன்னு கேப்பேன் முடியுமா, முடியாதா மட்டும் சொல் வேறு எதுவும் பேசக்கூடாது "
" என்னன்னு சொல்லுங்க "
" உன்ன உடனே பாக்கணும் வர முடியுமா "
" என்ன, போன்ல சொல்லுங்க சிவா "
" நேர்ல தான் பேசணும் "
" என்ன விஷயமா பேசணும் அதையாவது சொல்லுங்க "
" எல்லாமே நேர்ல தான் பேசணும் உடனே நீ வா நான் வைக்கிறேன் "
போகலாமா வேண்டாமா ஆர்த்தியின் மனது பட்டிமன்றமே நடத்தியது
அவன் அழைப்பை பார்த்தவுடன் மனம் சிறு துள்ளல் போட்டாலும்
அதையும் மீறி, பயம் அவள் வயிற்றில் புளியைத்தான் கரைத்தது
தேவையில்லாம ஏன் அவன் கிட்ட இப்ப பேசின, போன கட் பண்ண வேண்டியதுதானே , ஓவரா சீன்
போடாதன்னு சொல்லுவான்,
வாண்ணா வரணும் போன்னா போபகனும், எதிர்கேள்வி கேட்காதன்னு சொல்லுவான் அவன போய் நீ இப்ப பார்க்க போறியா , உனக்கு சூடு சொரணை இல்லையா என்று அவளது மூளையே அவளைக் காறித் துப்பியது,,
ஆனால் மனமோ துப்புனா, துப்பிக்க அவன்கிட்ட பேசதான் தான் செய்வேன் மனம் சற்று திமிராக நினைத்தாலும் அந்த நினைப்பையும் மீறி அந்த இது தப்புதான் என்ற பயத்தையும் எச்சரிக்கையையும்
அதே மனம் தான் தந்தது
இந்த முறை அவன் எல்லை மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நினைவோடு அவனை சந்திக்க சென்றாள்
மூன்றாவது முறையாக
ஒரு அழகான குகை கோவில்
ஆள் நடமாட்டம் மிகவும் கம்மி
அந்த கோவிலை ஒட்டிய படியே பூங்காவும், மலையும் இருந்தது
கோவிலில் இருவரும் சாமி கும்பிட்டுவிட்டு , மலைமேல் மலைமேல் உள்ள கோவிலுக்கு சென்றார்கள்
" இங்க கூட்டிட்டு வருவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல சிவா,
ரொம்ப தேங்க்ஸ்,
நான் இங்க வந்ததே இல்லை "
மனநிறைவுடன் சொன்னாள்
அவனது அமைதி,
அவளுக்குள் திக் திக் என்று தான் இருந்தது
' எந்த நேரத்தில் என்ன செய்வானோ இவனோட வந்த்து சரியா , தப்பா '
மனம் குரங்கு போல் தாவிக் கொண்டே இருந்தது
" ஏன் ஆர்த்தி இத்தனை வருஷமா இங்க வந்தது இல்லையா "
அப்போதுதான் வாயைத் திறந்தான்
" இல்ல சிவா "
" அந்த காலத்து ராஜாக்கள் கட்டினது எப்படி இருக்கு பார்த்தியா"
" இப்ப எல்லாம் இந்த மாதிரி
கட்ட முடியாது சிவா "
" இதுக்குள்ள பார் மூனு சாமி இருக்கு "
ஒரு குகைபோல் சென்றது அந்த இடம்
ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது
அதற்குள் அழைத்துச் சென்றான்
அங்கே இருந்த தெய்வத்தை கண்மூடி ஆர்த்தி வேண்டிக் கொண்டிருக்க
அவள் பின்னாலிருந்து அவளை ஒரே தூக்காக தூக்கிவிட்டான்
" என்ன பண்றீங்க நீங்க,
இறக்கி விடுங்க "
ஆர்த்திக்கு கண்களில் நீர் சூழ்ந்து விட்டது
"இறக்கிவிடுங்க ,,,,"
" முடியாதுடி "
" இறக்கி விடுங்க ப்ளீஸ் சிவா "
உள்ளே, யாரோ வரும் அரவம் கேட்டதும் சட்டென அவளை இறக்கி விட்டான்
தன் கண்களிலிருந்து தாரை தாரையாக வடிந்த கண்ணீரை கூட துடைக்காமல்
அங்கே இருந்து இறைவனை பார்த்தால் அவரை பார்க்க பார்க்க அழுகை அவளுக்கு வெடித்து கொண்டு தான்
என்ன சோதனை இது, இதுக்குத்தான் இங்க வந்தேனா, இவன பத்தி தெரிஞ்சுக்கத்தான் என்ன இங்க கூட்டிட்டு வந்தியாப்பா, போதும்பா
இவன் கிட்ட இருந்து என்னை எப்படியாவது காப்பாத்து
அந்த இறைவனை மனமார வேண்டினால்
அந்த இறைவன் என்ன
சாமானிய பட்டவரா
வள்ளி - தெய்வானையின்
மணாளன் அல்லவா
அவளது எதிர்காலத்தை அன்றே உணர்ந்தது போல் அவர் முகத்தில் ஒரு புன்சிரிப்பு மட்டுமே இருந்தது
உள்ளே வந்த பூஜகர் முருகனுக்கு தீபாராதனை காட்டினார்
" எதுக்கும் கவலைப்படாதம்மா,
இந்த முருகன் பாத்துக்குவார்,
தைரியமா இருங்கோ "
அவள் கண்ணீரை பார்த்துவிட்டு வீடு ஆறுதலாக கூறினார் அர்ச்சகர்
அந்த முருகனே அவர் மூலம் அந்த வார்த்தையை கூறிய ஆறுதல்படுத்தியதாக
நம்பிக்கை கொண்டாள் ஆர்த்தி
ஒரு பெண்ணின் மனதை , ஆயிரம் முறை ஒரு ஆண் வென்றிருந்தாலும் அவள் மனதிற்கு பிடித்தவனாக இருந்தாலும் கூட, உரிமையோடு தான் அவன் கை தன்னை பற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்
ஆர்த்தி தைரியமாக பேசினாலும் சற்று பயந்த சுபாவம் கொண்டவள்
அவளுக்கு சிவாவைப் பிடித்திருந்தது ஆனால் அவன் தொடுகையை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
ஒரு விஷயத்தில் மட்டும் தெளிவாக இருந்தாள் நட்புக்கும் , காதலுக்கும் இடைப்பட்ட உறவில் நாம் சிவாவோடு பழகுகிறோம் இது காதலில் போய் முடிந்து விடுமோ என்ற பயம் மட்டுமே அவளுக்குள் இருந்தது
காதலித்தால் எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், காதலிப்பவர்கள் கரம் பற்ற வேண்டும் இல்லையேல் அந்த காதல் அர்த்தமற்றதாக போய்விடும்
ஒரு மனிதனின் சூழ்நிலை அவனை பலவிதமாக மாற்றிவிடும் , எந்த சூழ்நிலையிலும் எவ்வளவு தடைகள் வந்தாலும் அவர்கள் கரம்பற்றி திருமணத்துக்கு பின்னும், வாழ்நாள் முழுவதும் அந்த காதல் துளி அளவு கூட குறையாமல் வாழும் அவர்களது அன்பான குடும்ப வாழ்வில்தான் அந்த காதல் வெற்றி பெறுகிறது
வேறு ஒருவன் ஆர்த்தியின் கையைப் பிடித்து இருந்தால் சட்டென்று அவன் கண்ணத்தில் அடித்திருப்பாள்
ஒரு ஆண், ஒரு பெண்ணை அவனது உடல் பலத்தால் வெல்ல முடியுமே தவிர அவள் மனதை அவ்வளவு எளிதில் வெல்ல முடியாது
" இப்ப எதுக்குடி அழுவுற அவளிடம் மேலும் சீறினான் "
" இதுக்குதான் என்னை கூட்டிட்டு வந்தீங்களா "
" இப்ப என்னடி செஞ்சிட்டேன் உன்னை தூக்கணும்னு நினைச்சு தூக்கினேன் இது ஒரு தப்பா "
" வேற எது தப்பு, உங்கள நம்பி வந்தேன் பாருங்க என்ன சொல்லணும் "
" ஓவரா சீன் போடாதடி "
" முதல்ல இந்த பாட்டை நிறுத்துங்க, நான் இப்போ, ஓப்பனாவே ஒன்னு சொல்றேன் சிவா,
உங்களை எனக்கு பிடிக்கும் ஆனா நீங்க தொடுறது எனக்கு பிடிக்கல,
இதுவே வேற ஒருத்தன் எண்ணத் தொட்டுருந்தா, அறஞ்சுருப்பேன் , தயவு செஞ்சு இனிமே நம்ம ரெண்டு பேரும் பேசிக்க வேணாம், பாத்துக்க வேண்டாம் இதோடு நிறுத்திக்கலாம் "
அவனிடம் பொரிந்து தள்ளிவிட்டு , அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்
" ஏய் நில்லுடி, நான் தொட்டா பிடிக்கல ஆனா என்கிட்ட பேச மட்டும் புடிக்குது கேட்டா, நட்புக்கும் காதலுக்கும்
நடுவுலன்னு சொல்ற இதுக்கு என்னடி அர்த்தம் பதில் சொல்லிட்டு போ "
" என்ன பொறுத்த வரைக்கும்
காதல்னா - உங்க மேல முதல்ல எனக்கு நல்ல எண்ணத்தை கொடுக்கணும்
எனக்கு எல்லாமே நீங்க தான், நான் நினைக்கணும்,
உங்களோட பலகுறப்ப நான் பயப்படக்கூடாது ,
உரிமையோட நீங்க என் கைய புடிக்கணும்,
உரிமையோடு நான் உங்க கூட வரனும்
உங்க மேல ஒரு நம்பிக்கை, இருந்துச்சு நீங்க நல்ல மனுஷன் , அந்த நம்பிக்கைதான் நீங்க கூப்பிட்ட என்னைய வர வச்சுது ,
இன்னைக்கு அந்த நம்பிக்கையை நீங்க பொய்யாக்கிடீங்க ,
இதுவரைக்கும் என்கிட்ட உங்க காதலை நீங்க சொன்னது கிடையாது ,
நீங்க சொல்லி இருந்தாலும் , உங்க மேல எனக்கு காதல் வர போறது கிடையாது
ஏன்னா காதல் - முதல்ல நேசிக்கதான்வைக்கும், யோசிச்சு நேசம் வந்தா அது காதலே கிடையாது
நீங்களும் நல்லா இருக்கணும், நானும் நல்லா இருக்கணும் ,
நம்ம ரெண்டு பேரோட குடும்பமும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன் நம்ம பிரண்ட்ஷிப் இதோட
முடிச்சுகுறதுதான் நல்லது
இதுக்கு மேல நாம பேசவேண்டாம்
நான் வர்றேன் "
சிவாவுடன் பேசிய நேரங்களை தனது படிப்பு, தையல் கிளாஸ் என
தன் அன்றாட வாழ்க்கையை
மாற்றிக் கொண்டால் ஆர்த்தி
மூன்று மாதத்திற்குப் பின்
ஒரு திருமண நிகழ்ச்சியில் ஆர்த்தி தன் தோழிகளுடன் சென்றிருந்தாள்
அதே திருமணத்தில் சிவா ஆர்த்தியை பார்த்ததுதான் விதியின் சதி
மணமகள் அறையில் தோழிகளோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தவளின் மொபைல் சிணுங்கியது, அங்கே பேச முடியாமல் வெளியே வந்து முதல் மாடி பால்கனியில் நின்று பேசிக்கொண்டிருந்தாள்
பேசிவிட்டு திரும்பிய வேகத்தில் யார் மீதோ மோதி நின்றாள்
" சாரி,,, சாரி ,,,,"
என்றபடி நிமிர்ந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சி கலந்த ஒரு மகிழ்ச்சி
சிவாவை அங்கு சற்றும் எதிர்பாராதவள் அவனை பார்த்தவுடன் வெள்ளை மனதுடன்
" எப்படி இருக்கீங்க "
" எனக்கு என்ன டீ நல்லா இருக்கேன்,
நீ,,,நீ ,,எப்படி இருப்ப, சந்தோஷமா தானே இருப்ப "
பொடி வைத்துப் பேசினான்
" புரியல "
" இல்ல மூணு மாசத்துல சதை போட்ட மாதிரி இருக்கியே அதான் சந்தோஷமா இருக்கியான்னு கேட்டேன் "
உச்சி முதல் பாதம் வரை அவனது நேரடிப் பார்வையில் ஒரு கள்ளத்தனம் இருந்தது அதை உணர்ந்த ஆர்த்திக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது
" நீங்க மாறவே மாட்டீங்க " அவனை தாண்டி செல்ல முயன்றாள்
அவள் கையை பிடித்து கொண்டான் " எங்கடிபோற, இப்பதானே பாத்தோம் அதுக்குள்ள கிளம்புற "
" கையை விடுங்க , யாராவது பாக்க போறாங்க ப்ளீஸ் கைய விடுங்க சிவா"
" அதான் உன் பிரச்சனையா வாடி " விருட்டென்று அருகிலிருந்த ஒரு ரூமுக்குள் அவளை இழுத்து தள்ளி கதவை சாத்திவிட்டான் "
" ஏய் என்ன பண்றீங்க, கதவ திறங்க யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க தயவு செஞ்சு கதவைத் திறங்க "
" முதல்ல இருடி ரொம்ப தான் கத்துற, வாய ஒடச்சிடுவேன் சொல்லிட்டேன் "
" பர்ஸ்ட் கதவ திறங்க அப்புறம் பேசிக்கலாம் "
" கதவ துறக்கலாம், உன் முதுகுல
என்ன "
" என் முதுகலையா "
"ஆமாண்டி "
" தன் கையையும் தலையும் வளைத்து பின்புறம் பார்த்தால் ஒன்றும் அவளுக்கு தெரியவில்லை "
என்னவென்று அவனையே புரியாமல் பார்க்க
" ஸாரில செம்மையா இருக்க, சூப்பர் இன்னைக்கு ஃபுல்லா சைட் அடிச்சிகிட்டே இருக்கலாம் , உன் முதுகுல என்னடி அவ்வளவு பெரிய ஓட்டை "
"ஓட்டையா,,,"
தன் கைகளை வளைத்து தன் முதுகை தொட்டுப் பார்த்துவிட்டு, அவன் தன் பிளவுசை சொல்கிறான் என்பதை உணர்ந்து தன் சேலை முந்தானையை எடுத்து முன்புறம் இழுத்து பிடித்துக்கொண்டாள்
" நான் ஒரு மாடல் சொன்னேன், அவங்க,,, அவங்க மாத்தி தச்சுட்டாங்க அதான் முந்திய விடாம பிடிச்சுகிட்டே இருந்தேன் "
" கல்யாணத்துக்கு வர்றவன் எல்லாம் உன்னைய பாக்கணும் தானே இப்படி போட்டுகிட்டு வந்திருக்க "
அமிலத்தை எடுத்து முகத்தில் ஊற்றியது போல் கோபத்தில் ஆர்த்தியின் முகம் சிவந்து விட்டது இதுபோன்ற பேச்சுக்களை கேட்டிராதவள் , அவள் வளர்ந்த சூழ்நிலை அப்படி,
தன்னை போய் இப்படி பேசி விட்டானே அதற்கு மேல் பொறுக்க முடியாமல் கண்களிலிருந்து வரவா, வரவா கேட்டுக்கொண்டிருந்த கண்ணீர் அவளையும் மீறி வெளியே எட்டி பார்த்து விட்டது
அவனிடம் எதுவும் பேசப் பிடிக்காமல் வேகமாக அவனை கடந்து கதவின் தாழ்ப்பாளை நீக்கி விட்டு வெளியே செல்ல அடி எடுத்து வைத்தாள்
புலியென பாய்ந்து , அவள் கையைப் பற்றி உள்ளே இழுத்தான்
" எங்கடி போற, திமிர்பிடிச்சவளே உனக்கு மாப்பிள்ளை பார்க்குறாங்கலாமே "
" என்ன உளர்றீங்க "
" நான் ஒன்னும் உளறல, உங்க வீட்டில உனக்கு மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்காங்க "
' எனக்கு தெரியாம எங்க வீட்ல எப்படி டா மாப்ள பாப்பாங்க, லூசாடா நீ ' மனதுக்குள் அவனை வசவு விட்டு
" சரி, பார்த்துட்டு போகட்டும் இப்போ என்ன அதுக்கு "
" அதான பார்த்தேன் ஏன்டி இப்பவே கல்யாணத்துக்கு அலையுற "
" இதுக்கு மேல பேசின மரியாதை கெட்டுரும் , வழியை விடு "
" அதையும் பார்த்துடலாம்டி , வீட்ல பாக்குறவன கல்யாணம் பண்ணிக்க என்ன கள்ளபுருஷன் வச்சுக்கடி, என் கள்ள பொண்டாட்டி "
சிவாவின் அளவுக்கு மீறிய அந்த வார்த்தை சீண்டலை ஆர்த்தியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை
எங்கிருந்துதான் அவளுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ தன் கண்களை இறுக மூடிக்கொண்டு தனது கோபத்தை கட்டுப்படுத்த முயன்றும் தோற்றுப் போய்விட்டால்
அவனது கை, அவளது இடது கரத்தை பிடித்து இருந்தது அதை வேகமாக ஒரு உதறு உதறி விட்டு, ஓங்கி அவன் கன்னத்தில் ஓர் அறை விட்டாள்
அவள் அறையவும் , அந்த அறைக்குள் சிவாவின் நண்பர்கள் இருவர் வரவும் சரியாக அமைந்து விட்டது
கோபத்தின் உச்சியில் இருந்த ஆர்த்தியும் , அவளது அரையை எதிர்பார்த்திராத சிவாவும்
அவர்கள் இருவரையும் கவனிக்கவில்லை
" இவ்வளவு தான் உனக்கு மரியாதை இனிமே என் விஷயத்துல தலையிட்ட அவ்வளவுதான் , நீயெல்லாம் ஒரு மனுஷன் த்தூ,,,,, "
புயலென அங்கிருந்து வெளியேறி விட்டாள்
" என்னடா இதெல்லாம் "
சிவாவின் நண்பர்கள் புரியாமல் விழிக்க
" அதெல்லாம் ஒன்னும் இல்ல மச்சி "
" ஒரு பொம்பள புள்ள உன்ன கைநீட்டி அடிச்சிட்டு போற நீ ஒன்னும் இல்லைங்கிற, யார்ரா அவ,எதுக்கு உன்ன அடிச்சுட்டு போறா, சொல்லுடா இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்த்தறேன் "
" ப்ளீஸ் சொன்னா புரிஞ்சுக்கோங்கடா என்னை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க "
அதற்கு மேல் பேசினால் சிவாவிடம் எடுபடாது என்று உணர்ந்தவர்கள் அவனை தனிமையில் விட்டுச்சென்றார்கள்
நான் மனுஷனா- மிருகமா கண்டிப்பா உனக்கு ஒரு நாள் தெரியவரும்,,
தயாரா,,, இருடி
அந்த நாள் கண்டிப்பா வரும்
அப்ப நீ தெரிஞ்சுக்குவ
நான் மனுசனா , மிருகமான்னு,,,,