தாமதத்திற்கு மன்னிக்கவும் இரு வாரங்களுக்கு முன்பே அரமிக்க வேண்டிய கதை லேட் ஆகிவிட்டது சில தவிர்க்க முடியாத காரணத்தினால்......
வந்துட்டேன் வந்துட்டேன் இதோ என் கதையின் முதல் அத்தியாயத்துடன்........
இனி சனி மற்றும் ஞாயிறு அன்று தவறாமல் பதிவுகள் வரும் மக்களே.....
சிறு முன்னொட்டாம்
மாலை கதிரோன் தன் கதிர்களை தன்னுள் அடக்கி நிலவ மங்கைக்கு வழி விட்டுக்கொண்டிருந்த வேளை, தன் கழுத்தில் மின்னிக்கொண்டிருந்த புத்தம் புதிய தாலியை கையில் பிடித்திருந்தால் அவள்.
ஒரே நாளில் தன் வழக்கை இவாறு மாறும் என அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை, இந்த திருமணத்தை அவள் மனம் சற்றும் ஏற்றுக்கொள்ளவில்லை. தன் அக்காவை காதலித்துவிட்டு எவ்வாறு தன் கழுத்தில் தாலி கட்ட அவனால் முடிந்தது. அவள் மனம் சற்றும் ஆறவில்லை.
பின்னால் இருந்து வந்த காலடி சாதத்தில் தன் நினைவு கலைத்து திரும்பியவள் கண்ணில் பட்டது என்னவோ தன் எண்ணத்தின் நாயகன் தான்.
வந்தவன் அவள் முன்னே நின்று அவளை தலை முதல் கால் வரை ஆராய்ந்தான்.
"உன் அக்காவை விட நீ நல்லாத்தான் இருக்க "
அவனை பயம் கலந்த பார்வை பார்த்தால்
அவள் பார்வையை நம்பாதவன் " பத்தினி வேடம் போடதடி" என்றான் கடுபாக.....
வார்த்தைக்கு பதில் அவள் கண்களில் இருந்து கண்ணீர் தான் வழிந்தது.
இந்த கொடுமை எனக்கு எதற்கு, நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன் கிருஷ்ணா எனக்கு மட்டும் என் இந்த நரகவாழ்கை.
இந்த திருமணத்தை நான் கேட்கவில்லை, தாலி கட்டியவன் அதில் உள்ள மஞ்சள் காயும் முன்னே பத்தினி வேடம் போடாதே என்கிறான்.
யார் இவன் இவனை ஒரு முறை சந்திதற்கே தான் வாழ்கை இப்படி மாறிவிட்டதே.
எதற்காக இதெல்லாம், தன் குடும்பம் இப்போ எங்கிருக்கிறது. இதற்கெல்லாம் யார் பதில் கூறுவார்கள்.
இவனை காதலித்த அக்கா இங்கே, அவளுக்கு என்ன நேர்தது.
யார் இவள், அவள் அக்கா யார், எதற்காக அவன் இவளை திருமணம் புரிந்தான், என் இந்த சுடு சொல் கட்டிய மனைவியை பார்த்து.......
இதற்கெல்லாம் பதில் தெரிய வேண்டும் அல்லவா, நாளை யூடி படியுங்கள் புரியும்....
நிறை குறைகளை எடுத்து கூறுங்கள், உங்கள் ஆதரவுகளை எனக்கும் கொடுங்கள்......