அத்தியாயம்-1
அந்த அழகிய அதிகாலை வேளையில் புலர்ந்தும் புலராத புதிய விடியலில் என்றும் புதுமைகளை வாரி வழங்கும் வாழ்க்கையினை பற்றி எப்போதும் தோன்றும் சிந்தனையுடன் இன்றும் அதே போன்றதொரு சிந்தனையில் வான்வெளியினை வெரித்துக் கொண்டிருந்தாள் அவள்…
பிரபஞ்சம் பல அதிசயங்களை உள்ளடக்கியது என்று பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் மனிதர்கள் சிலர் அவர்கள் மனதினை ஆராய்ச்சி செய்வது அரிது. அவர்கள் இதனை அறியத் தவறினறா(?) இல்லை மறந்தனரா (?)
உலகில் ஏராளமான விசயங்கள் மர்மங்களாய் கண்ணுக்கு புலப்படாது கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறது முடிச்சுக்கள் அவிழ்கப்படா நிலையிலும் அதனைப் பற்றி பல கதைகள் புனையப்பட்டு பரந்த உலகில் பரவி வருகிறது…
வாழ்கையே மர்மங்கள் நிறைந்த பயணம் தான் என அறிந்தோர் சிலரே… ஆம் வாழ்கை எந்நொடி எத்தகு விஷயங்களை நமக்கு எப்போது(?) எங்கே(?) ஏன்(?) எவ்வாறு(?) எதற்காக(?) எதனால்(?) பரிசளிக்கும்/ பாதளத்தில் தள்ளும் என்பதினை யவரும் அறிகிலர்…
ஆனாலும் அறிவீனத்தில் மூழ்கி திளைக்கும் மாந்தர் இனமோ பல தீய வழிகளில் சென்று அழிக்கும் சக்தியாக உருபெறுகின்றனர்…
அவளுக்கு எப்போதும் தோன்றும் சிந்தனை இதுவே…
என்றேனும் ஓர் நாள் இப்புவியில் தீமைகள் கருகி நன்மைகள் மலராதா(?) என்ற அவளது ஆழ்மனதின் ஏக்கம் இன்றும் அவள் சிந்தையில் சிந்து பாடியது இது அவள் சந்தித்த பல தாக்கத்தினால் விழைந்தது…
சொற்பமான சிலரில் அற்பமாக இல்லாமல் அற்புதமாய் இரு…
(இதை சொன்னவள் யாரென சிந்தனை வேண்டாம் …
இது என்னில் பிறந்த எனது எழுத்துக் குழந்தைகளே)
பின்னர் என்றேனும் ஒரு நாள் மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் தனது காலை கடன்களை முடித்துவிட்டு குளிக்கச் சென்றாள்…
சடுதியில் தயாரானவள் யோகாசனப் பயிற்ச்சியில் ஈடுபட்டாள்… இது அவளது அன்றாட வழக்கம் , பின்னர் தனது தோழிகளை காணச் சென்றாள்…
அவள் நேரே சென்றது அந்த அழகிய தோட்டத்திலுள்ள மரம் செடி கொடிகளை காணவே… இவர்களே அவளின் உற்ற தோழிகள் மனதின் பாராமோ இதயத்தின் இன்பமோ எதுவாயினும் தனது தோழிகளான இவற்றுடன் பகிர்ந்துக்கொள்வாள்…
ஏனெனில் இத்தோழிகளுக்கு புறம்பேச தெரியாது அகத்தின் அன்பினையே உணரத் தெரியும்… அவற்றிற்கு தண்ணீரை பாய்ச்சிவிட்டு சிறிது நேரம் அக்காலை நேர ஏகாந்த சூழலை ஆழ்ந்து அனுபவித்தாள்.
அவளை அணு அணுவாய் இரசித்துக் கொண்டிருந்தான் அவன் , அவ்வீட்டின் அழகிய விசாலமான பால்கனியிலிருந்து…
அவளவனாக மாறும் நாளிற்காய் காத்திருக்கும் நம் கதையின் நாயகன் (போன்றவன்)
அவன் பார்வைகள் வட்டமிட்ட பாவை அவனின் மாமன் பெற்ற மரகதம் / மல்கோவா , Dr.விகாஷனா விஷ்வநாதன் சுருக்கமாக Dr.விவி மிகவும் நெருக்கமானோருக்கு விகா அவளவனுக்கு ’ ஷனு ‘... (நம் கதையின் நாயகி போன்றவள்). வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் இளம் விஞ்ஞானி.
இத்தனை நேரம் அவளை ரசனையாய் பார்த்திருந்த அவன் Dr.விவேக் விஷ்வேஷ்வர் சுருக்கமாக Dr.விவி. இயற்பியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு பல்வேறு சாதனைகள் நிகழ்த்திய இளம் விஞ்ஞானி.
யாரோ தன்னை உற்று நோக்குவது போல் உள்ளுணர்வு உந்த சட்டென அழகாய் தலை சாய்த்து திரும்பி பார்த்தாள், யாரும் இல்லாதது கண்டு திரும்பவும் பூக்களுடன் உரையாடிவளின் உள்ளுணர்வில் தன்னை யாரோ பார்ப்பது போல் தோன்ற சுற்றும் முற்றும் பார்த்தாள் இப்போதும் யாரும் இருப்பதாக தெரியவில்லை யோசனையூடே மேலே பார்த்தவளின் நயனங்களில் அவனின் காலை தரிசனம்…
நீல நிற கண்களில் குறும்பு மின்ன எப்போதும் இறுக்கமாய் இருக்கும் இதழ்களில் அவளை கண்டால் மட்டும் மின்னலாய் தோன்றும் கீற்றுப் புன்னகை , ‘இந்த நக்கல் சிரிப்புக்கு மட்டும் குறைச்சல் இல்ல மனதிற்குள் வானலியில்லாமல் வருத்தெடுத்தால் அவனை’. முறுக்கேறிய புஜங்கள் , போர் வீரனை போல் பறைசாற்றும் வில் போன்ற உடல் தோற்றம் , தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் வந்த சிக்ஸ் பேக்ஸ் உடலமைப்பு, அலை அலையாய் புரளும் கேசம் என பார்ப்பதற்கு பேரழகனாய் இருந்தவனை கண்டவள் அவனுக்கு மனதில் லக்ஷார்ச்சனை நடத்தினாள்.
ஆளையும் மூஞ்சையும் பாரு வானரத்துக்கு வேஷம் போட்ட மாறி இருந்துக்கிட்டு அவனும் அவன் தாடியும் பார்க்க பிதாமகன் விக்ரம் மாதிரியே இருக்கான் மனசுல உலக அழகன் நினைப்பு , வெள்ள எருமை மாடு மாதிரி அங்க அங்க கோடு கோடா வெச்சுகிட்டு சிக்ஸ் பேக்ஸ்னு சீன் காமிச்சிட்டு இருக்கான், என்னோட யோகாவ குறை சொல்லுவான் … என் ரசகுல்லாவ பிடுங்கி திண்ணுற டிராகுலா மண்டையன்… பார்க்குற பார்வையை பாரு கண்ண தோண்டி காண்டமிருகத்துக்கு போடுறேன்டா மனதில் புகைந்தாள்.
அவன் நயனவிழிகள் இவளது நளினங்களில் நர்த்தனம் புரிந்தது… படபடக்கும் பட்டாம்பூச்சியாய் படபடக்கும் அடர்ந்த இமைகள் அவள் அஞ்சனம் தீட்டிய கருவிழிகளின் அழகுகிற்கு அழகு சேர்ப்பதாய்… அதை காணும் நொடியெல்லாம்
அவன் மனமோ அவள் விழிகளில் தொலையும் நாளிற்காய் ஆசைக்கொண்டது. தன்னை கண்டால் மட்டுமே ஏளனமாக வளையும் செவ்விதழ்கள் நாணத்தில் நாணம் கொண்டு தனக்குள் புதைய மையல் கொண்டது. செவ்விதழ்களில் இருக்கும் மச்சமோ அவனது மனதினை பித்தம் கொள்ளச் செய்யும். இயற்கையிலேயே வில்லாக வளைந்த புருவங்கள் புருவ மத்தியில் அன்றாடம் நிறம் மாறும் பூக்களாய் அவள் பிறை நெற்றியில் கலர் கலராக வைக்கும் சிறிய பொட்டு, கோபத்தில் சிவக்கும் அவளின் நுனி மூக்கு கூட அஞ்சுகத்தின் மூக்கினை ஒத்திருக்கும். அவள் சிரிப்பில் சிறிதாய் மின்னும் முத்து மூரல்களில் அவன் தேகம் சிலிர்க்கும்… அவளின் பட்டுப் போன்ற கார்குழலில்
அவனோ சுழலில் சிக்கிய கப்பலாக அவளுள் மூழ்கச் செய்யும். மொத்தத்தில் அவள் அவனில் வேதியல் வினை புரியும் வனிதை…
ஆனால் அவனது வேதனை யாதெனில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற அவளிடம் அவனது பார்வைகள் அவளுள் வேதியல் மாற்றம் நிகழ்த்தாததே. இதுவே அவனிற்க்கு தற்போதைய பெறும் சோதனை. ‘டேய் நீ முனைவர் பட்டம் வாங்கினது இயற்பியல்ல நீ ஏன் அவள உன் கந்தக பார்வையால காந்தமாய் ஈர்க்க ட்ரை பண்ணாம வேதியல் வேப்பங்காய்னு இருக்க அவன் மனசாட்சி ஐடியா மணி ஐடியா கொடுத்தது(?)’
என்ன பேபி என்னையே ரொம்ப நேரமா சைட் அடிச்சிட்டு இருக்க போல பாத்து கழுத்து சுளுக்கிக்கிட்டு கலிபோர்னியா போய்ட போகுது நான் வேணும்னா கீழ இறங்கி வரேன் நல்லா சைட் அடிச்சிக்கோ பேபி என்று மேலிருந்து கத்தினான்.
அதில் ஆத்திரமடைந்தவள் நான் மேல வந்தேனா உன் வாய் வெனியூசிலா போய்டும் பாத்துக்க எரிச்சலாய் மொழிந்தாள்.
நீயும் கூட வரியா பேபி என மேலும் அவளை சீண்டினான். விட்டா இவன் ஓவரா பேசுவான் என நினைத்தவள் அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள்.
அவளது அலட்சிய பாவனையில் கோபம் கொண்டவன் கொழுப்புடி உனக்கு உன்ன என்ன செய்றேன் பாரு என மனதில் கறுவிக் கொண்டான்.
தனது அறைக்கு சென்று தயாராகி கீழே வந்தவனை சாப்பிடுவதற்காக அழைத்தார் அவனின் அத்தை விசாலாக்ஷி. ‘கண்ணா தோசை வார்த்து தரேன் இன்னிக்காவது சாப்பிட்டு போ என்றார் அவர் சொன்னதற்கினங்க டைனிங் டேபிலில் அமர்ந்தான் அப்போது தானும் தயாராகி வந்த அவனின் பேபியை கண்டு அவனின் சம்சாரம் ஆக போகும் அவளால் அவன் தேகத்தின் அணுக்கள் எல்லாம் கிரவுண்ட் ஸ்டேட்டிலிருந்து எக்ஸைட்டட் ஸ்டேட் சென்றது.
அவன் மீது பாசப்பார்வை வீசியவள் தன் அன்னையிடம்,” அம்மா எனக்கு தோசை கொண்டு வா சீக்கிரமா நான் சாப்பிட்டு கிளம்பனும் என்றாள்".
பாருடா ‘ஈ’ ஓட்ட எக்ஸ்பிரஸ் வேகத்துல கிளம்புறத என கிண்டலடித்தவன், அத்தை எனக்கு பர்ஸ்ட் குடுங்க நான் தானே முதல்ல வந்தேன் எனக்கும் டைம் ஆச்சு என்றான் அவன்.
அதில் கோபமுற்றவள் ,” நீ மட்டும் என்ன(?) காலங்காத்தால போய் காக்கா தான ஓட்ட போற என்று சண்டை கோழியாக அவனிடம் சிலிர்த்துக் கொண்டு நின்றாள்”. இவர்களின் சண்டையை சமாதானம் செய்ய விழைந்து விரைந்து வந்தவர் அடுப்பை அணைக்க மறந்ததில் தோசை கறுகியது. ஆனால் அவர்களின் சண்டை முடிவுக்கு வந்த பாடில்லை.
டேய் உன்னால தான்டா தோசை தீஞ்சது என்று அவளும் உன்னால தான் டி தீஞ்சுது என அவளும் சிறு பிள்ளையாய் சண்டையிடுவது கண்டு நீங்க இரண்டு பேரும் சைன்டிஸ்ட் மாதிரியா நடந்துக்குறிங்க சைல்டிஷா பிஹேவ் பண்றிங்க உங்களை வச்சிக்கிட்டு நாங்க படுற அவஸ்தை இருக்கே அய்யய்யோ முடிலடா சாமி காலையிலே கண்ணக்கட்டி கன்னித்தீவுல விட்ட பீல் வருது என புலம்பினார் அவர்.
ஒரு தோசை சுட தெரில என்ன வந்து வம்பிழுத்திட்டு இருக்க நானே போய்ட்டு தோசை சுட்டுகிறேன் என சென்றாள் விகா…
எப்படி சின்ன வயசுல பேப்பர்ல ஓட்ட போட்டு தோசை சுட்டியே அப்படியா (?)
பாத்து மா தோசை கல்லுல ஓட்டை போட்ற போற... ஹ ஹ ஹா என அவளை கேலி செய்து சிரித்தான்.
அவன் சொன்னதற்கு தானும் சேர்ந்து சிரித்த விகா’வின் அன்னைக்கு அவளின் சிறு வயது நினைவலைகள் நெஞ்சில் அலை மோதியது…
அப்போது அவளுக்கு மூன்று வயது இருக்கும் L.K.G படித்துக்கொண்டிருத்தாள். விவேக்கும் அதே பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவன். தேர்வுகள் முடிந்து பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் மீட்டிங்கிற்கு இவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு சென்றிருந்தனர்.
முதலில் விகாவின் வகுப்பாசிரியரை சந்திக்க சென்றனர். ‘ மேடம் எங்க பொண்ணு விகா எப்படி படிக்கிறா எக்ஸாம் எல்லாம் எப்படி எழுதி இருக்கா என்று வினவினர்.
ஓ! ரொம்ப நல்லா ஆஆஆ எழுதி இருக்கா என்றார் அவர் சிரித்துக் கொண்டே ( பட்டூஸ் இத நீங்க வேற மாடுலேஷன்ல படிக்கனும் அவ சூப்பரா எழுதி இருப்பா அப்படினு இப்ப அவ இருக்கறத வச்சு தப்பு கணக்கு போட்டுறாதிங்க ஹி ஹி ஹி ஏன் னா மேடத்தோட வரலாறு அப்படி
)
உங்க பொண்ணு எழுதின பேப்பர் பாத்தா அவ மார்க் என்ன உலகமே தெரியும் என்றவர் அவள் எழுதிய பேப்பரினை எடுத்து காண்பித்ததில் நால்வருக்கும் சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை , விவேக் மட்டும் விழுந்து விழுந்து அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டான்.
அதில் சினந்த விகா அவனை கோபத்தில் கடித்து வைத்தால். அதில் இருவருக்கும் மூண்ட சண்டை தான் இன்று வரையிலும் முற்று பெறா தொடர்கதையாக தொடர்கிறது.
ஒருவாறு அவர்களை சமாளித்து வைத்த அவர்களின் பெற்றோரிடம் விகா விடைதாளினில் விளையாடிய விளையாட்டினை உரைத்தார் அவளின் ஆசிரியை.
அவர் காண்பித்த விடைதாளில் உலகத்தோடு சேர்த்து அவரும் தெரிந்தார்.
ஹி ஹி ஹி அவ்ளோ பெரிய ஓட்டை இருந்தா அவர் தெரியாம இருந்தா தான் ஆச்சரியம். எல்லாரும் பேப்பர்ல தான் ‘ஓ’ போடுவாங்க உங்க பொண்ணு பேப்பருக்கே ல ‘ஓ’ போட்டுருக்கா...
(பேப்பர்ல O.N.E. -1 க்கு ஓ ( O ) போடாம பேப்பரையே ‘ஓ’ னு ஓட்ட போட்டு வச்சிருக்கா ) என்றவராலும் தனது சிரிப்பை அடக்க வழித் தெரியவில்லை.
ஹே ‘ஓ’ போடே … ‘ஓ’ போடே என்று பாட்டு பாடி அவளை வம்பிழுத்தான் விவேக்.
ஏன் பப்பு இப்படி பண்ணிருக்க என்று வினவிய விஷ்வநாதனிடம் அப்பா ரப்பர் எங்கயோ கீல விழ்ன்ச்சு அதா கைல அழ்ச்சேனா பெருச இப்டி ஆச்சு ( ரப்பர் எங்கயோ கீழ விழுந்திடுச்சு அதான் கையால அழிச்சேனா இப்படி ஆகிடுச்சு மழலை மொழியில் பிதற்றினால் அந்த சின்னஞ்சிறு சிட்டு) அழுதவாறு உதட்டை பிதுக்கி அவள் சொன்ன அழகில் அனைவரும் மயங்கினர்.
பின்னர் விவேக்கின் வகுப்பிற்கு சென்றனர் அங்கு
விவேக் பற்றி புகழ்ந்து பேசிய அவனின் வகுப்பு ஆசிரியை அவனது ஐக்யூ ( IQ) திறன் அதிகமாக உள்ளது என்றும் அவன் பிற்காலத்தில் பல சாதனைகள் புரிந்து சிறந்து விளங்குவான் என்றும் வாழ்த்தினார்.
அவனை மட்டும் புகழ்ந்து பேசியதில் கோபம் கொண்ட விகா அச்சிறு வயதிலேயே அவனை விட சிறந்து விளங்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் தீவிரமாக படித்தால். அதனாலேயே இன்று சிறந்து விளங்குகிறாள் வேதியியலில் வித்தகியாக…
தங்களது நினைவிலிருந்து கலைந்தவர்கள் மேலும் சண்டையை ஆரம்பிக்க துவங்கும் வேளையில் சொல்லி வைத்தார் போன்று இருவரது அலைபேசியும் இசைத்து தனது இருப்பை காட்டியது…
இருவரும் அதை ஆன் செய்து காதில் வைத்ததும் செவியில் நுழைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
**********************************************
இருக்க இருக்க இவங்க திருந்துவாங்கனு பார்த்த திருந்துற மாதிரி தெரியலையே என்றான் அவன்.
நான் சொன்ன அவங்களுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு வந்த இப்போ பாத்தியா நிலைமையா என்றான் இன்னொருவன்.
ஆமா, அவனுங்க இவங்கள சும்மா விடமாட்டானுங்க திணற திணற கதறடிக்க போறங்க, நாம ஏதாவது செஞ்சே ஆகனும் ஏன்னா இவங்க எல்லோரும் வெரி டேஞ்சரஸ் என்றான் மற்றொருவன்.
என்ன செய்யலாம் ஹம்ம்ம்…
ஒரு பெருமூச்சுடன்…
எஸ் இட்ஸ் டைம் டு லீவ் திஸ் பிளானட்…
Yes it's TiMe tO LeAvE tHiS pLaNeT…
விழிகளின் வீச்சில்
என்னை வீழ்த்தும்
வித்தகியே…
நின் விழிச்சிறையில்
விரும்பியே அகப்பட காத்திருக்கும்
வித்தகன் நானடி…
விழுங்கும் பார்வையில்
எனது காதலில்
நீ விழுவதும்
எப்போதடி
என் வஞ்சிக்கொடியே.
வேதனைகளின் தீர்வை நோக்கி
சோதனைகள் தொடரும்…