All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Subasini

Well-known member
அமரஞ்சலி...

பிள்ளையிடம் பிள்ளையாய் துள்ளி விளையாடும் தாய்...
அவள் இழந்த பிள்ளை காலத்தையும் சேர்த்து தரும் அமர்...


காதல் என்றும் தொடக்க புள்ளியாய்...
அவனை அவன் தவறில் இருந்து திருத்தி எடுத்தது அவள் காதல் என்றால் அவளின் மறையும் நினைவடுக்கில் தனக்கான காதலை புணரமைப்பது அவன் காதல்...


காதல் அழகான உணர்வு என்பதை மேலும் உணர வைக்கும் எபி... அருமை ஸ்ரீ மா...


வாழ்ந்த காலமெல்லாம்
இருளடைந்த
நினைவடுக்கில்
அமிழ்ந்து போனதோ...


காதலால்
அகழ்வ்வாராய்ந்து
புதைந்து நினைவு
சின்னங்களை
வெளிக்கொணரும்
நேரம் இதோ...


பிள்ளைக்கு பிள்ளையாய்
துள்ளி திரியும்
அவள் ‌மனமோ
பதிப்பிக்காத புது
காகிதமாய் அதில்
நிதம் நிதம்
அவன் வரையும்
காவியமாய் காதல்...


வாழ்க்கை சிதைந்தாலும்
காதல் என்றும
சிதிலடையாத ஓவியமாக
என்றும் அமரஞ்சலி
காவியமாக...


அருமை ஸ்ரீ மா.... காவியம் தான் நீங்கள் எழுதி இருக்கீங்க....


சஞ்சய்க்கு தண்டனை கொஞ்சம் லேட்டா கொடுத்துட்டடனோ...
ஆனால் அவள் வியாதியின் மேல் உள்ள நம்பிக்கையில் தான் விட்டு வைத்திருக்கான்...அது தானே பார்த்தேன் என்னடா இந்த ஆன்டி ஹீரோ எப்படி விட்டு வைப்பான் 😂😂😂😂


SP இன்று வரவில்லை என்ற ஏக்கம் சிறு மனதின் ஓரம் இருக்கிறது 😂😂


இனி வரும் எபியில் காதல் விதம் விதமாக படிக்க வெயிட்டிங் ஸ்ரீ மா....
 

Chitra Balaji

Bronze Winner
Woooooooooooooow.... Wooooooow.... Asathuringale இப்படி.... Enna solla no words mam.... Semma semma episode..... Ava கொஞ்சம் konjamaa avangaloda onra aarambichita.... Athuyum athmika kuda அவளும் ஒரு குழந்தை ah senthu ஒரே ஆட்டம் கலாட்டா தான்.... அமர் ah அன்பு... பாசம்... நேசம் ellame avanoda avala ஒன்ற veikithu avana mela நம்பிக்கை veikka solluthu..... Avaluku அப்ப அப்ப nadakurathe maranthudra போல avaluku நியாபகம் irukara வரை ezhuthi vechi இருக்கா.... அமர் avana pathi ava ezhuthi irukarathu பாத்து avvallavu santhosham...... அவன் காதல் avala maaththum..... இந்த sanjay எப்படியோ vanthutaane..... அயன்.. ராதை கதை semma.... அந்த சஞ்சய் ah maranthutaa..... Avanukaana thandanai ah koduthutaan... Super Super mam... Semma
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - 2 - எழுத்தரசி ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

ஆழ்மனத் தேடலின்
அழகான காதல் - இது
ஆதர்சனக் கூடலின்
அரிதான கூதல்!

கிள்ளை மொழியின்
கிளி மொழி இங்கு...
பிள்ளை மொழியின்
விழி வழி கண்டு...
கொள்ளை கொள்ளும்
குதூகலம் நன்று!

அன்னவன் விழியின் மறுமொழியில்
அன்னவள் விழியில் காதல் பனி!
மன்னவன் மதியின் மனமொழியில்
மங்கையவள் சுதியில் காதல் இனி!

அலைமோதும் கடலாய்
ஆர்ப்பரித்த கள்ளங்கள்...
நிலை கொள்ளும் நிலையாய்
வேர்பிடித்த உள்ளங்கள்...!
அன்பின் கூட்டில்
ஆலோலம் பாட...
ஆத்மீக ராகம்
மேட்டிசைக்கும் நேரம்...
மேகங்கள் எல்லாம்
தூவானம் ஆகும்!

காதல் தீவிரவாதி - அவன்
மெய் கண்ட நியதி!
மண்ணில் கயவர்க்கு..
காட்டாதோ நீதி!

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 

Banumathi Balachandran

Well-known member
இப்படி ஒரு ஞாபகமறதியா அஞ்சலிக்கு பாவம் அவள்.பெற்ற குழந்தையையும் உயிர் காதலனையும் மறப்பது ஒரு பெண்ணுக்கு எவ்வளவு வேதனை என்றால் அமர்வுக்கு அதை விட அதிக வேதனை.

இருவரையும் சீக்கிரம் இணைத்து விடுங்கள் ஸ்ரீமா
சஞ்சய்க்கு சரியான தண்டனை
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? மூவரும் ஒரு குடும்பமாக கலகலத்து சிரித்து அமரின் மகிழ்ச்சியை மீட்டெடுத்த மிக மிக சந்தோஷமான பதிவு...

அஞ்சலியும் அவள் குழந்தையும் விளையாடும் விளையாட்டை அமர் ரசித்து சந்தோஷத்துடன் கண்டது அழகென்றால் மூவரும் சமையலறையில் குடும்பமாக பொருந்தி மற்றும் இடி மின்னலுக்கு பயந்த அஞ்சலியையும் தன் முதல் மகவு என்பது போல் தாங்கிய அமரின் செயல் அழகோ அழகு..

ஸ்ரீ மேம் ஒவ்வொரு காட்சி யும் எங்கள் முன் உயிரோவியமாய்... சஞ்சய் வருவதற்கு முன்பு வரை இந்த பதிவை படிக்கும் போது என்பதை விட அதில் நாங்கள் வாழ்ந்தோம் என்பது தான் சரி அது வரை எங்கள் அகமும் முகமும் மலர சந்தோஷ புன்னகையுடன் ரசித்தது... அருமை ஸ்ரீ மேம்...

அஞ்சலி நேற்று நடந்தது கூட மறந்து விடுகிறாளா? இது ஒரு கொடுமை அல்லவா? எதற்காக இத்துன்பம் அவளுக்கு? அஞ்சலியிடம் பொய்யாய் அமரின் மேல் இல்லாததையல்லாம் சொல்லிய சஞ்சய்க்கே இத்தண்டனை என்றால் அவளை இக்கதிக்கு ஆளாக்கியவர்களை அமரின் நீதிமன்றத்தில்????

இதுவரையில் தள்ளியிருந்த அஞ்சலிக்காகவே அமர் பொறுத்திருந்தான் போலும்... தன்னவள் தன்னிடம் வந்து சேர்ந்து விட்ட சந்தோஷத்தில் இனி யானை பலம் பெற்று வீறு கொண்டு எழுவான்..

அருமையான கவிதை... எதிர்காலத்தில் அமர் எடுக்கும் எதிரிகளுக்கு எதிராக நடவடிக்கைகளின் பிரதிபலிப்பா ஸ்ரீ மேம் இக்கவிதை...

அழகான சந்தோஷமான பதிவு...

வாழ்த்துக்கள் ஸ்ரீ மேம்...
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மழலையென மனதால் மாறிய மங்கை
மாயோனை மட்டும் மனதில் ஏற்றிய நங்கை..

கிள்ளை மொழி பிள்ளையிடம் தத்தை மொழியில் நயந்திடம் நாரி..

நல்லோனிடம் மட்டும் நம்பிக்கை கொள்ளும் நயணி..

தன்னை மறந்த நிலையிலும் நித்திலனை ஏற்ற எழில்

ஏந்தலின் நிழலில் நிம்மதியில் துயில் கொள்ள தூயவளின் துயில் முகத்தில் அமைதி கொண்டான் ஆதவன்..

ஆதாரம் கொண்டு அரிவையின் காதலை கொய்ய ஓர் நொடி போதும்.
பெதும்பனுக்கு.

இருப்பினும் இதழாளின் இதயம் கொண்ட காதல் இயல்பாய் ஏய்திட வேண்டும் என்றே எண்ணினான் எரியோன்..

உயிர் அணுவுடனும் தன் உயிராளுடன் ஓர் கூட்டில் உருகி கரைந்தான் உன்னதன்.

உன்னதனை உமையாளின் உற்றவனாக்க வந்தான் வஞ்சகன்.

பேதையின் பிழை நிலையை பயன்படுத்தி பாதகம் விழைத்த வீணன்..

பார்த்தனின் வினை அம்பில் அழிந்து போனான்...

இனி அவன் இறைவியை அன்பால் அரவணைப்பான் அவளவனின் அன்பன்..
 

Hanza

Bronze Winner
சூப்பர் .... கொஞ்சம் கொஞ்சமா அஞ்சலி மாறிட்டு வரது 👌🏻👌🏻👌🏻👌🏻
அப்போ அடுத்த எபில கல்யாணம்.... அதுக்குள்ள இன்னொரு entry வந்தாகணுமே .... 🤣🤣🤣🤣🤣
 

Deebha

Well-known member
அஞ்சலி, ஆத்மி, அமர் மூவரும் இணைந்து இருந்ததது ஒரு அழகான கவிதை. ஆத்மி, அஞ்சலி பிணைப்பு அருமை. தைரியமான அஞ்சலி மறதியால் தடுமாறுவது சிரமமாக உள்ளது. ஆத்மி plug box இல் கை வைக்க செல்வது பதர வைத்தது .அஞ்சலி ஞாபக சக்தியை அதிகரிக்க எடுக்கும் முயற்சி super. அமர் சஞ்சய்கு கொடுத்த தண்டனை அதிகம் தான். அமர், அஞ்சலி & ஆத்மி மீது வைத்திருக்கும் பாசம் அளப்பரியது.
 
Top