ஶ்ரீகலா
Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,
இதோ அடுத்தக் கதையுடன் வந்து விட்டேன். இந்தக் கதையைப் பற்றி என்ன சொல்ல? எப்போதும் போல் சாதாரணக் காதல் கதைதான். ஆனால் என்னுடைய பாணியில் சற்று வித்தியாசமாய்!! கதையின் தலைப்பே கதையைச் சொல்லாது சொல்லியிருக்கும் என்று நம்புகின்றேன். சமுதாயத்தின் இன்றைய அவலங்களைப் பூச்சு இல்லாது கொடுக்கவிருக்கின்றேன். சில விசயங்கள் உங்களை முகம் சுளிக்க வைக்கலாம். சில விசயங்கள் உங்களுக்குப் பிடிக்காது இருக்கலாம். அப்படிப்பட்ட விசயங்கள் நம்மைச் சுற்றி நடக்கத்தான் செய்கிறது. அதை எல்லாம் கடந்து வாழ வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அப்படிப்பட்டவர்கள் அதைக் கடந்து வந்து நல்வாழ்க்கை வாழவேண்டும் என்பதே என் எண்ணம்.
தவறுகள் ஒரு புள்ளியில் சரி செய்யப்பட்டுச் செம்மைப்படுத்தும் போது... அந்தத் தவறுகள் கூடப் பிரமிக்கத்தக்க ஒன்றாக, ஒரு அற்புத விசயமாகி மாறிப் போய்விடுகிறது. அந்தத் தவறு காதலில் என்றால் சொல்லவும் வேண்டுமோ??? முரணான நேசம், பொருந்தா காதல் என்று பல பெயர் கொண்டாலும்... இதில் பொதுவானது காதல். அந்தக் காதல் படுத்தும் பாட்டைத் தான் இந்தக் கதையில் நாம் பார்க்க போகின்றோம்.
ஆன்கோயிங் கதை முடிந்ததும் இந்தக் கதையுடன் வருகிறேன். நம் வழக்கமான நேரத்தில் சந்திக்கலாம் என்னுடைய கதைகளைத் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
தலைப்பு : அரக்கனே! என் அரசனே!!
(நாயகன் & நாயகிக்கு பெயர் இன்னும் வைக்கவில்லை.)
அன்புடன்,
ஶ்ரீகலா
கதையிலிருந்து சிறு முன்னோட்டம்...
மது உடலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கெடுதல்...
"வாட் டூ யூ வான்ட் கிச்சுலு? விஸ்கி, ஒயின் ஆர் வோட்கா?" கனிஷ்கா மகளிடம் கேட்டார்.
"ஐ வாட் காக்டெயில் மாம்." அவள் அன்னையிடம் சிடுசிடுத்தாள்.
காலையில் இருந்து இரவு உறங்க போகும் வரை அவளது உலகம் உற்சாகமாய் இயங்கும். ஆனால் இரவு வந்துவிட்டால் மட்டும் அவளுக்கு எங்கே இருந்து தான் பேய் பிடிக்குமோ? கோபம், வெறுப்பு, வேதனை, வலி என்று அனைத்து உணர்வுகளுக்கும் ஆட்ப்பட்டு அவள் தனக்குள் தவித்துப் போய்விடுவாள். இது இன்று நேற்று நடப்பதல்ல. அவளது பதினான்கு வயதில் இருந்து இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
"மாம், இன்னுமா ரெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" அவள் கத்த தொடங்க...
"இதோ வந்துட்டேன் கிச்சுலு." கனிஷ்கா மகளிடம் ஒரு கோப்பையைக் கொடுத்தவர் தானும் ஒரு கோப்பையை எடுத்து மதுவை பருகலானார்.
ஒரே மூச்சில் மதுவை குடித்து முடித்துக் கோப்பையைத் தூக்கி எறிந்தாள் அவள். அதைக் கண்ட அன்னை, "இதோட ஆயிரம் கிளாசுக்கு மேல் உடைச்சிட்ட கிச்சுலு. உன் கோபத்தை அதில் காட்டி எந்தப் பிரயோஜனமும் இல்லை." என்றவர் மெதுவாக மதுவை ரசித்து ருசித்து அருந்தினார்.
"நான் கோபத்தைக் காட்டுவதாக இருந்தால் உங்க கிட்ட தான் காட்டணும்." மகள் அன்னையிடம் வளென்று எரிந்து விழுந்தாள். அவர் ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தார்.
அவள் வழிகளை மூடி சோபாவில் சாய்ந்து படுக்க... கனிஷ்காவின் கண்டிப்பான குரல் அவளது விழிகளைத் திறக்க செய்தது.
"வீட்டுக்கு போ." அவர் கண்டிப்பான குரலில் சொல்ல...
"இன்னைக்கு ஒருநாள் நான் இங்கே இருக்கேனே." மகள் கெஞ்சுதலாய் அன்னையைப் பார்த்தாள்.
"நோ கிச்சுலு... நீ அங்கே இருப்பது தான் நல்லது." என்றவர் மகளை மூட்டை கட்டி அனுப்பி வைத்தார்.
கனிஷ்காவிற்கு என்று சில கணக்குகள் இருக்கிறது. அதற்கு மகள் அங்கே இருந்தால் தான் சரி வரும். அவரது நோக்கம் நிறைவேறும். கனிஷ்கா இன்னொரு கோப்பையை எடுத்து மதுவை தொண்டையில் சரித்தார்.
*******************************
மும்பையில் பணக்காரர்கள் வசிக்கும் ஏரியாவில் இருந்த அந்தப் பிரமாண்ட வீட்டின் வரவேற்பறையின் நடுவே ஹோமம் நடந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றிலும் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து இருந்தனர். அதில் நடுநாயகமாக நம் நாயகன் அமர்ந்திருந்தான். அவனது திண்ணிய தோள்களும், புடைத்த புஜங்களும், சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டும் அவன் மேலே போர்த்தியிருந்த அங்கவஸ்திரத்தை மீறி வெளியில் தெரிந்தது. நெடுநெடுவென்ற உயரத்தில் கதாநாயகன் போன்ற தோற்றத்தில் அவன் இருந்தான். தோற்றம் மட்டுமல்ல, அவன் உண்மையில் திரையில் கதாநாயகன் தான். இளம்பெண்களின் கனவு நாயகன் வேறு. அதற்காக அவன் சாக்லேட் பாய் அல்ல. அவன் ஒரு ரக்டு பாய். ஆனால் வீட்டினருக்கு மட்டும் அவன் ஒரு நல்ல மகன். இன்று அவனுக்குப் பிறந்தநாள். அதற்காக அவனது அன்னை ஏற்பாடு செய்திருந்த ஹோமத்தில் கலந்து கொள்ளவென்று அவன் தனது படப்பிடிப்பை விட்டு விட்டு இங்கே வந்திருக்கின்றான்.
ஹோமம் முடிந்ததும் வந்திருந்த புரோகிதர்களுக்குப் பரிசுகள், வெகுமதியை கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு பின்பு அங்கே வீட்டினர் மட்டும் மீதம் இருந்தனர்.
"ம்மா, ஐயம் வெரி டயர்ட்." என்றவன் தனது அன்னையின் மடியில் படுத்துக் கொண்டான்.
"காலாகாலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தால்... இந்நேரம் நீ உன் மனைவி மடியில் படுத்திருக்க வேண்டும். நீ என்னடா என்றால்..." ரமணி மகனை கண்டு கேலி செய்தார்.
"இதுக்கு எல்லாமா கல்யாணம் பண்ணிக்க முடியும்? எனக்கு உங்க மடியே போதும்." என்றவன் விழிகளை மூடி கொண்டான்.
"உனக்கு வயசு என்ன குறைஞ்சிட்டே போகுதுன்னு நினைச்சியா? இன்னையோட முப்பத்திமூணு வயசாகுது." அவர் மகனை கடிந்து கொண்டார்.
"என்னைப் பார்த்தால் முப்பத்திமூணு வயசு மாதிரியா தெரியுது." அவன் குறும்பாய் கண்ணடித்துக் கேட்க...
நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருபத்தியைந்து வயது இளைஞனுக்கு அவன் டஃப் கொடுப்பான். அத்தனை இளமையாக அவன் இருந்தான்.
இதோ அடுத்தக் கதையுடன் வந்து விட்டேன். இந்தக் கதையைப் பற்றி என்ன சொல்ல? எப்போதும் போல் சாதாரணக் காதல் கதைதான். ஆனால் என்னுடைய பாணியில் சற்று வித்தியாசமாய்!! கதையின் தலைப்பே கதையைச் சொல்லாது சொல்லியிருக்கும் என்று நம்புகின்றேன். சமுதாயத்தின் இன்றைய அவலங்களைப் பூச்சு இல்லாது கொடுக்கவிருக்கின்றேன். சில விசயங்கள் உங்களை முகம் சுளிக்க வைக்கலாம். சில விசயங்கள் உங்களுக்குப் பிடிக்காது இருக்கலாம். அப்படிப்பட்ட விசயங்கள் நம்மைச் சுற்றி நடக்கத்தான் செய்கிறது. அதை எல்லாம் கடந்து வாழ வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அப்படிப்பட்டவர்கள் அதைக் கடந்து வந்து நல்வாழ்க்கை வாழவேண்டும் என்பதே என் எண்ணம்.
தவறுகள் ஒரு புள்ளியில் சரி செய்யப்பட்டுச் செம்மைப்படுத்தும் போது... அந்தத் தவறுகள் கூடப் பிரமிக்கத்தக்க ஒன்றாக, ஒரு அற்புத விசயமாகி மாறிப் போய்விடுகிறது. அந்தத் தவறு காதலில் என்றால் சொல்லவும் வேண்டுமோ??? முரணான நேசம், பொருந்தா காதல் என்று பல பெயர் கொண்டாலும்... இதில் பொதுவானது காதல். அந்தக் காதல் படுத்தும் பாட்டைத் தான் இந்தக் கதையில் நாம் பார்க்க போகின்றோம்.
ஆன்கோயிங் கதை முடிந்ததும் இந்தக் கதையுடன் வருகிறேன். நம் வழக்கமான நேரத்தில் சந்திக்கலாம் என்னுடைய கதைகளைத் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தும் அனைத்து தோழமைகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
தலைப்பு : அரக்கனே! என் அரசனே!!
(நாயகன் & நாயகிக்கு பெயர் இன்னும் வைக்கவில்லை.)
அன்புடன்,
ஶ்ரீகலா
கதையிலிருந்து சிறு முன்னோட்டம்...
மது உடலுக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கெடுதல்...
"வாட் டூ யூ வான்ட் கிச்சுலு? விஸ்கி, ஒயின் ஆர் வோட்கா?" கனிஷ்கா மகளிடம் கேட்டார்.
"ஐ வாட் காக்டெயில் மாம்." அவள் அன்னையிடம் சிடுசிடுத்தாள்.
காலையில் இருந்து இரவு உறங்க போகும் வரை அவளது உலகம் உற்சாகமாய் இயங்கும். ஆனால் இரவு வந்துவிட்டால் மட்டும் அவளுக்கு எங்கே இருந்து தான் பேய் பிடிக்குமோ? கோபம், வெறுப்பு, வேதனை, வலி என்று அனைத்து உணர்வுகளுக்கும் ஆட்ப்பட்டு அவள் தனக்குள் தவித்துப் போய்விடுவாள். இது இன்று நேற்று நடப்பதல்ல. அவளது பதினான்கு வயதில் இருந்து இது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
"மாம், இன்னுமா ரெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க?" அவள் கத்த தொடங்க...
"இதோ வந்துட்டேன் கிச்சுலு." கனிஷ்கா மகளிடம் ஒரு கோப்பையைக் கொடுத்தவர் தானும் ஒரு கோப்பையை எடுத்து மதுவை பருகலானார்.
ஒரே மூச்சில் மதுவை குடித்து முடித்துக் கோப்பையைத் தூக்கி எறிந்தாள் அவள். அதைக் கண்ட அன்னை, "இதோட ஆயிரம் கிளாசுக்கு மேல் உடைச்சிட்ட கிச்சுலு. உன் கோபத்தை அதில் காட்டி எந்தப் பிரயோஜனமும் இல்லை." என்றவர் மெதுவாக மதுவை ரசித்து ருசித்து அருந்தினார்.
"நான் கோபத்தைக் காட்டுவதாக இருந்தால் உங்க கிட்ட தான் காட்டணும்." மகள் அன்னையிடம் வளென்று எரிந்து விழுந்தாள். அவர் ஒன்றும் பேசாது அமைதியாக இருந்தார்.
அவள் வழிகளை மூடி சோபாவில் சாய்ந்து படுக்க... கனிஷ்காவின் கண்டிப்பான குரல் அவளது விழிகளைத் திறக்க செய்தது.
"வீட்டுக்கு போ." அவர் கண்டிப்பான குரலில் சொல்ல...
"இன்னைக்கு ஒருநாள் நான் இங்கே இருக்கேனே." மகள் கெஞ்சுதலாய் அன்னையைப் பார்த்தாள்.
"நோ கிச்சுலு... நீ அங்கே இருப்பது தான் நல்லது." என்றவர் மகளை மூட்டை கட்டி அனுப்பி வைத்தார்.
கனிஷ்காவிற்கு என்று சில கணக்குகள் இருக்கிறது. அதற்கு மகள் அங்கே இருந்தால் தான் சரி வரும். அவரது நோக்கம் நிறைவேறும். கனிஷ்கா இன்னொரு கோப்பையை எடுத்து மதுவை தொண்டையில் சரித்தார்.
*******************************
மும்பையில் பணக்காரர்கள் வசிக்கும் ஏரியாவில் இருந்த அந்தப் பிரமாண்ட வீட்டின் வரவேற்பறையின் நடுவே ஹோமம் நடந்து கொண்டிருந்தது. அதைச் சுற்றிலும் குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து இருந்தனர். அதில் நடுநாயகமாக நம் நாயகன் அமர்ந்திருந்தான். அவனது திண்ணிய தோள்களும், புடைத்த புஜங்களும், சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டும் அவன் மேலே போர்த்தியிருந்த அங்கவஸ்திரத்தை மீறி வெளியில் தெரிந்தது. நெடுநெடுவென்ற உயரத்தில் கதாநாயகன் போன்ற தோற்றத்தில் அவன் இருந்தான். தோற்றம் மட்டுமல்ல, அவன் உண்மையில் திரையில் கதாநாயகன் தான். இளம்பெண்களின் கனவு நாயகன் வேறு. அதற்காக அவன் சாக்லேட் பாய் அல்ல. அவன் ஒரு ரக்டு பாய். ஆனால் வீட்டினருக்கு மட்டும் அவன் ஒரு நல்ல மகன். இன்று அவனுக்குப் பிறந்தநாள். அதற்காக அவனது அன்னை ஏற்பாடு செய்திருந்த ஹோமத்தில் கலந்து கொள்ளவென்று அவன் தனது படப்பிடிப்பை விட்டு விட்டு இங்கே வந்திருக்கின்றான்.
ஹோமம் முடிந்ததும் வந்திருந்த புரோகிதர்களுக்குப் பரிசுகள், வெகுமதியை கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டு பின்பு அங்கே வீட்டினர் மட்டும் மீதம் இருந்தனர்.
"ம்மா, ஐயம் வெரி டயர்ட்." என்றவன் தனது அன்னையின் மடியில் படுத்துக் கொண்டான்.
"காலாகாலத்தில் கல்யாணம் பண்ணியிருந்தால்... இந்நேரம் நீ உன் மனைவி மடியில் படுத்திருக்க வேண்டும். நீ என்னடா என்றால்..." ரமணி மகனை கண்டு கேலி செய்தார்.
"இதுக்கு எல்லாமா கல்யாணம் பண்ணிக்க முடியும்? எனக்கு உங்க மடியே போதும்." என்றவன் விழிகளை மூடி கொண்டான்.
"உனக்கு வயசு என்ன குறைஞ்சிட்டே போகுதுன்னு நினைச்சியா? இன்னையோட முப்பத்திமூணு வயசாகுது." அவர் மகனை கடிந்து கொண்டார்.
"என்னைப் பார்த்தால் முப்பத்திமூணு வயசு மாதிரியா தெரியுது." அவன் குறும்பாய் கண்ணடித்துக் கேட்க...
நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இருபத்தியைந்து வயது இளைஞனுக்கு அவன் டஃப் கொடுப்பான். அத்தனை இளமையாக அவன் இருந்தான்.