"எனக்காகவா...! நான் உனக்காகவா...!" - எழுத்தரசி ஸ்ரீ கலாவின் எண்ணத்தின் ஏகாந்தத்தில் சந்திரனை கரம் வைத்த சூரியனின் ஆட்டம், இது காதல் காவிய வரிசையில் சதிராடும் களியாட்டம்!
இனிய தோழி,
காத்திருந்த நெஞ்சங்களை
கலகலக்க வைத்ததென்ன...
பூத்திருந்த கண்களை
படபடக்க வைத்ததென்ன...
பார்த்திருந்த பார்வைளை
பரிதவிக்க வைத்ததென்ன...
எழுத்தின் வேகத்தில்
எண்ணத்தின் விவேகத்தில்
அரசியாய் அன்பால்
அகிலத்தை ஆள்வதற்கு
காவிய வரிசையாய்
கரம் சேர்ந்த காதல்கள்...
புத்தகமாய் இருந்தாலும்
புன்னகைக்க வைத்ததென்ன...!
எதை தொலைத்தோம்
என்று புரியாது....
எதை தேடினோம்
என்று தெளியாது...
கண்கட்டு வாழ்க்கையில்
கரைந்திட்ட நாட்களில்
இழந்திட்ட உயிர்ப்பை
மீட்டெடுக்க வந்ததுவோ....
எனக்காக வா, நான் உனக்காகவா...
என...
பாட்டெழுதி பாந்தமாய்
பாவை நெஞ்சை உசுப்பி விட்டு...
காதலின் காவியத்தில்
அன்பின் அறம் சேர்க்க...
அரும்பிய புதுப் பூவாய்...
சூரியனும் சந்திரனும்
காதல் கவி பாட....
போர்க்களமாய் ஒர் களத்தை...
அமர்க்களமாய் முன்னிறுத்தி...
கொஞ்சும் மொழி பேசும்
பிஞ்சு மொழி கிள்ளையுடன்
சந்திரவதனியையும்
சூர்ய நாராயணனையும்
வழக்காடும் காதையிலே
வழக்குரைக்க வகை செய்த
எழுத்தரசி வித்தியிலே
வியக்காமல் இருப்போமா...?
வாழ்த்துகள் தோழி, எதிர்பாரா நேரத்தில் எதிர்பாராத விருந்து... நன்றி தோழி.