EPISODE-1
யாரும் அற்று வெருச்சோடி இருந்த அந்த சாலையில் மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தாள் அவள்… (‘உசைன் போல்ட்க்கு தங்கச்சியா இருப்பாலோ’
) அவளை முறைத்தவாரே ஆவேசத்துடன் துரத்திக் கொண்டிருந்தான் அவன்….
(‘யாரா இருக்கும்
அம்மா மின்னலு, யாருனு சொல்லு மா’)
அச்சோ சொல்ல மறந்துட்டேன் இவ தாங்க நம்ம கதையின் நாயகி
(‘அடியே இந்த பொண்ணு என்ன பன்னிடிச்சினு இப்படி எடுத்ததும் ஓட விடுற’)
”அப்போ தான் என் கதையும் நல்ல ஓடுங்கற நினைப்புல தான்”
(‘உன் நினைப்புல நைட்ரிக் ஆசிட் ஊத்த’)
“அய்யோ விடாது போலயே” பயத்தில் வேர்த்து விருவிருத்து போனால் அவள்… அவன் இன்னும் வேகமெடுக்கவும், செய்வதறியாது திகைத்தாள், திகைத்தவளின் பார்வையில் பட்டது அது, அதை கண்டதும் அவள் கண்களில் ஓர் நிம்மதி(கல்லு /கட்டை எடுத்து அடிக்க போறா னு நினைச்ச அது ரொம்ப தப்பு மக்களே, ஏன் னா, செல்லம் கொஞ்சம் பயந்த சுபாவம்) சற்றும் தாமதிக்காமல் சட்டென்று திறந்திருந்த அவ்வீட்டினுள் நுழைந்தவள் கண்கள் சுழல மயங்கி சரியவிருந்தால் ….
அப்போது இரு வலிய கரங்கள் அவள் மெல்லிடையினை பற்றி அவள் கீழே விழாமல் தாங்கிப் பிடிக்க , ஒரு வலிய கரம் அவள் பூங்கரத்தினை பற்றி இழுப்பதற்காய் நீள… அங்கே அவள் கண்ட காட்சியில் நினைவுகள் பின்னோக்கி செல்ல சற்று நேரத்தில் மயங்கிச் சரிந்தால்….
அப்படி என்ன நினைச்சி இருப்பா??? (அவ மைன்ட் வாய்ஸ நான் கேட்ச் பன்னிடேன் அத வச்சு நாம அவளோட அவ வாழ்ந்து கொண்டிருந்த வரலாறு (இங்கயும் வரலாறா னு பயப்பட வேண்டாம் )எப்படி இருந்துச்சு னு பாக்க கொசுவத்திய சுழலவிடுவோம்.
(ஹா ஹா, கொசு வ கொல்ல பயன்படுதோ இல்லையோ ஃப்ளாஷ் பேக் தெரிஞ்சிக்க பயன்படுது)
அவ்வினிய காலை பொழுதினில் கடமையே கண் என கருதும் கதிரவன் தன் கிரனங்களை பரவச் செய்து பலரின் மனதில் பரவசமூட்டிக் கொண்டிருந்தான்…
‘கீச்’ ‘கீச்’ என்ற பறவையின் ஒலியும் , குக்கூ… குக்கூ… என்ற குயிலின் கானமும் செவிகளுக்கு இனிமை சேர்த்து அந்த காலைப் பொழுதினை மேலும் அழகாக்கியது…
ஆங்காங்கே இருந்த மாணவர் கூட்டமும் ஆசிரியர்களும் பெற்றோர்களும் என அக்கல்லூரி பரபரப்புடன் காணப்பட்டது…
முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான சேர்க்கை நடைப்பெற்றுக் கொண்டிருந்தது…
அங்கே அழகின் திருவுருவாய் மஞ்சள் உடையில் பச்சை நிறம் தெரிக்க புன்னகையுடன் இருந்தாள் ஓர் மஞ்சள் அழகி… அவளை ரசித்துக் கொண்டிருந்தது இரு ஜோடி விழிகள், “நம் கதை நாயகி அப்படினு நினைச்சா அதுக்கு நான் பொருப்பில்ல”
அவள் அருகில் சுவரசியமாய் கதைத்துக் கொண்டிருந்தாள் அவள்… பீச் நிறத்தில் ஆங்காங்கே வெண்ணிற முத்துக்கள் பதித்திருந்த உடையில் முத்து மூரல் மின்ன புன்னகை பூசி அழகாய் இருந்தாள் அவள்… ஸஷ்ரியா.
இவ்வளவு நேரமும் அவள் ரசித்து பேசிக் கொண்டிருந்தது சரக்கொன்றை மரத்திடம். ஆம்! அந்த மஞ்சள் அழகி சரக்கொன்றை மரம் தான்.
அப்போது அவளை சுவரசியமாய் பார்த்துக் கொண்டே வந்தாள் பெண்ணொருத்தி…
“ஹாய் ! நான் வினோநியா.. உங்களை பார்த்தா ஃபர்ஸ்ட் இயர் மாதிரி தெரியுது!! Am I right?? நான் ஃபர்ஸ்ட் இயர் EEE டிபார்ட்மென்ட் , அப்றம் நீங்க சிரிக்கும் போது அழகா இருக்கிங்க
உங்க பேர் என்ன எந்த டிபார்ட்மென்ட் ??“ பிரன்ட்ஸ் என்று தன் கையினை அவள் புறம் நீட்டி வினவினாள்….
நீட்டிய கையினை பற்றிக் கொண்டே, “போதும் போதும் மூச்சு விடுங்க ஹப்பா நான் ஸ்டாப் பா பேசுறீங்க.. ஐ அம்(I am) ஸஷ்ரியா, ECE டிபார்ட்மென்ட் அண்ட் தேங்க்ஸ் உங்க சிரிப்பும் உங்க பேச்சு மாதிரியே ரொம்ப அழகா இருக்கு.” என்று பாராட்டினாள்.
"ஹே வாவ் சூப்பர்! நான் நியா, நீ ரியா
ஆமா உனக்கு அப்போ என் சிரிப்பு கூட என் பேச்சு மாதிரியே மொக்கைனு indirectஆ சொல்லுற மாதிரி தெரியுதே…
அப்படிலாம் இல்லங்க நியா…
என்னது ‘ங்க’ வா நமக்கு இந்த வாங்க போங்க லாம் கேட்டா அலர்ஜி நம்ம ஒரே இயர் தான சோ இந்த வாங்க போங்க லாம் வேணாம் டீல் ஓகே வா??" என நியா வினவினாள்.
"டபுள் ஓகே செல்லம்" என உடனே அந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டாள்.
இவ்வாறாக இவர்கள் பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது..
அவர்களை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தன இரு ஜோடி விழிகள்…
“ஓகே, ரியா நான் கிளம்புறேன் என்று விட்டு சென்றாள் நியா” அவளுக்கு கையசைத்து விடைக்கொடுத்தாள் ரியா…
அவளை கண்டதும் காதல் கொண்டான் (‘யாருனு?? கேட்டா அவன் என்ன பார்த்த பாச பார்வையில பறந்தோடிட்டேன் டியர்ஸ், அப்றம் உங்களுக்காக அவன் யாருனு ஃபாலோ பன்னதுல(அட நம்புங்க பா) அவன் பேர் ஆதர்ஷ் ஹர்ஷித் வ்ரிஷங்கா (Aadharsh harshith vrishanka) 1St yr, EEE dept னு தெரிஞ்சுது’)
சிறிது நேரம் இரசித்துப் பார்த்துவிட்டு மனமே இல்லாமல் அவர்கள் கிளம்பியதும் இவனும் தன் வீடு நோக்கி புறப்பட்டான்…