All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஷம்லாவின் "சிதற வைத்த செம்பாவையாள்" -கதை திரி

Status
Not open for further replies.

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...
ஷௌர்யா மற்றும் அனிகா இப்போதைக்கு வரமாட்டாங்க... ஆனா கூடிய சீக்கிரம் உங்களை தேடி வந்திடுவாங்க...
உங்களை ரொம்ப நாள் காக்க வைக்க கூடாதின்னு நான் முன்பு எழுதின கதையை சில திருத்தங்களுடன் பதிவு பண்ணுகிறேன்...
ஒரு வித்தியாசமான கதை களமாகவும் அமையலாம்... இல்லை வழமை போலவும் அமையலாம்... அதை நீங்கள் தான் எடுத்துரைக்க வேண்டும்...


சில உண்மைகளும் கற்பனையும் கலந்த கலவையான கதை உங்களுக்காக....!!!
அந்த உண்மைகளை எழுத முழுமுதற் காரணம் மித்ரவருணா சிஸ்... காதல் இல்லாமல் கதைகளே இல்லையான்னு ஒரு பதிவு போட்டாங்க... அப்போ தோணுச்சு இந்த கதை... அதற்காக காதல் இல்லாமலும் இல்லை.. அதுவும் இருக்கிறது... இந்த எந்தளவுக்கு வெற்றி அடையும் என்பது உங்களின் கருத்துக்களில் தான் இருக்கிறது...


இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக அத்தியாயம் பதிவு பண்ண முயல்கிறேன்...
(இப்போ தான் எழுந்து உக்காரும் அளவுக்கு முன்னேறியிருக்கேன்... அதான்...)


உங்களின் நல் ஆதரவுடன் இந்த கதையை துவங்குகிறேன்....

new1 .jpg
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'சிதற வைத்த செம்பாவையாள்'


அத்தியாயம் 01



portrait-three-girlfriends-play-summer-30037682.jpg


I'm so lonely broken angel,
I'm so lonely, listen to my heart.


Man, dooset daram,
Be cheshme man, gerye nade.
Na, nemitoonam,
Bedoone to, halam bade.


I'm so lonely broken angel...
I'm so lonely, listen to my heart...
One n' lonley, broken angel...
Come n' save me, before I fall apart...




ஆடிடோரியத்தின் எட்டுத்திக்கும் பரவிய குழைந்த குரல் வெகு திருப்தியளிக்க அதை கண்மூடி ரசித்தபடி தனக்குள் ஆழ்ந்து போயிருந்த ஷாலினி திருப்தியுடன் முன் நின்ற மாணவியை பார்த்து.



“இத்தனை நாள் ப்ராக்டீஸ்ல இன்னிக்கி தான் நல்லா பாடியிருக்க இதே மாதிரி காம்பெடிசன்லயும் பாடி பிரஸ்ட் பிளேஸ் எடுக்கணும் புரியுதா... கீப் இட் அப்...” பாராட்டி விடைபெற்று ஆசிரியர்களுக்கான ஸ்டாப் ரூம் நோக்கி சென்றார்.



‘பார்றா நம்மள பாராட்டிட்டு போகுது.. அவ்வளவு நல்லாவா பாடினேன்..’ மனதில் எண்ணிக் கொண்டாள் அவள்.



‘இது உனக்கு தெரியுது உன்னைய பாராட்டிட்டு போன டீச்சருக்கு தெரியலையேமா’ டைமிங் கவுண்டர் கொடுத்தது அவள் மனசாட்சி.



‘எவ்ளோவோ கேட்டிட்டோம் இத கேக்கமாட்டோமா..’ அதை கேட்டு வெமாசூசு எதுவுமில்லாமல் சிரித்துக்கொண்டே பதிலடிகொடுத்தாள்.



‘இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல...’ காறித்துப்பியது மனசாட்சி.



அதில் சுற்றும் முற்றும் பார்த்தவள் ‘நல்லவேளை யாருக்கும் தெரியலை...’ எனும் பாவனையுடன் முகத்தை கெத்தாய் வைத்துக் கொண்டு உற்சாகத்துடன் தோழிகளை நாடிச் செல்ல,



‘அடச்சி தூ... ரியாக்சன குறை...’ மீண்டும் அது காறி உமிழ அதை கேட்டு அசட்டு சிரிப்பை உதிர்த்தவள்,



‘இது நமக்குள்ளே இருக்கட்டும் வெளிய யாருக்கும் தெரிய வேணாம்...’ காலில் விழாத குறையாக அவள் கெஞ்ச மனசாட்சி கேவலமான பார்வையுடன் போனால் போகட்டும் என்று சமத்தாய் உள்ளே நுழைந்து கொண்டது.



‘ஷப்பாஹ்... இது கிட்ட மாட்டிக்கின்னு நான் படும் பாடிருக்கே... தாங்கமுடில...’ உதட்டி பிதுக்கி அழுவது போல் பாவனை செய்தவள் தோழிகள் அருகில் நெருங்கவும் முகத்தை பழையபடி வைத்துக் கொண்டாள்.



“என்னடி சீடுமூஞ்சி வாயால பாராட்டெல்லாம் வாங்கிட்டியாம்... பெரிய ஆளு தான் போ... என்ன சொக்கு பொடி டி போட்ட... நானும் அது வாயால என்னைக்காவது ஒரு நாள் பாராட்டு வாங்கலாம்னு பார்க்கிறேன் முடியலடி... என்னைய பார்த்தாலே உர்ராங்கோட்டான் மாதிரி உர்ருன்னு முறைச்சு வைக்குது...” கடுப்பில் பொரிந்தாள் ஷாஷி.



அதை கேட்டு பள்ளி சீருடையின் மேற்சட்டையை தூக்கி விட்ட பாலா சீரியசான முகபாவத்தில் அவள் தோள் மேல் கைபோட்டு “மச்சி... இதுக்கெல்லாம் ஒரு டெக்னிக் இருக்கு சொல்றேன் கேட்டுக்கோ... இதுக்கு ஒரு குருட்டுத்தனமான முட்டாள்தனம் வேணும் ஒரு முரட்டு தனமான புத்திசாலித்தனம் வேணும்...” கண்களை உருட்டி உருட்டி அவளை ஓட்ட,



“உன்கிட்ட கேட்டதுக்கு என்னைய ...” ஷாஷி கடுப்புடன் பல்லை கடித்து பாதியில் நிறுத்த,



“செருப்பாலயே அடிச்சிக்கனும்.. அத தானே சொல்ல வந்த” அழகாய் முடித்து வைத்தாள் ஷிக்கு.



“ஹா ஹா...” ஷிக்குவும் பாலாவும் கையடித்து சிரிக்க “உங்கள...” அவர்களை அடிக்க துரத்தினாள் ஷாஷி.



“அடியே அடிக்காதடி... வலிக்கிது... வேணாம் விட்டிடு அழுதிடுவேன்...” ஷிக்கு ஆடிடோரியத்தின் மேல் தளத்தில் படிகளில் ஏறி இறங்கி ஆட்டம் காட்ட அவளுடன் பாலாவும் சேர்ந்து கொண்டாள்.



“கன்னி பொண்ணு சாபம் உன்னைய சும்மாவிடாதிடி... இதுக்கு மேலா என்னால ஓட முடில விட்டிடு...”



“அடிங்..” பாலாவின் பேச்சை கேட்டு மீண்டும் அவளை துரத்த இறுதியில் மூவரும் மூச்சு வாங்க படியில் தோய்ந்து அமர்ந்து கொண்டனர்.



“எ..என்னா..ல முடில... ஷப்பா.. மூ..ச்சு வாங்கிது...” தொண்டை உளற மூச்சு வாங்கிக் கொண்டு ஒரு போத்தல் தண்ணீரை மூவரும் காலி செய்தனர்.



“காலைல போனதிலிருந்து எஸ்எஸ் (SS – சிடுமூஞ்சி ஷாலினி) கிட்ட பாடி காமிச்சே என் தொண்ட போச்சு... இப்போ செம்மையா பசிக்கிது.. கான்டீன் போகலாம்.. இல்ல இங்கயே பொட்டுன்னு போய்டுவேன்...” சோர்ந்த குரலில் கூறிய பாலா தோழிகளை இழுத்துக் கொண்டு கான்டீன் சென்றாள்.



“அண்ணே... ஆறு சமோஸா...”



“எதுக்கிடி ஆறு சமோஸா...” ஷிக்கு லட்டுவை வாய்க்குள் மென்றபடி கேட்க, அதில் அர்த்த பார்வை பரிமாறிக் கொண்ட பாலாவும் ஷாஷியும் வாய்விட்டு சிரித்தனர்.



தோழிகளின் சிரிப்பின் காரணம் உணர்ந்து முதலில் அவர்களை முறைத்தவள் பின் சன்ன சிரிப்புடன் சிரிக்கும் போது பளிச் பளிச் என மின்னும் பாலாவின் கன்னத்து குழியை ஆசையுடன் தடவிக் கொடுத்து எப்போதும் போல் “நான் மட்டும் பையனா பொறந்திருந்தேன் அப்பிடியே உன்னை தூக்கிட்டு போய்....”



“தூக்கிட்டு போயி...” ஷாஷி கண்ணடித்துக் கொண்டு கேட்க,



“அப்பிடியே...” கள்ளச்சிரிப்புடன் ஷிக்கு பாதியில் நிறுத்த,



“சீ... கர்மம்... கர்மம்... என்னத்த சொல்ல போற...” கண்களை சுருக்கி மறைமுகமான ஆர்வத்துடன் கேட்டாலும் முகம் தோழியின் பேச்சில் லேசாய் சிவந்து போனது.



“கல்யாணம் பண்ணுவேன்னு தான் சொல்ல வந்தேன்... நீ என்ன நினைச்ச...” குறும்புடன் ஹை பை அடித்துக் கொண்டு இரு தோழிகளும் ஒருமித்த குரலில் கேட்க, அதில் சன்னமாய் வெட்கம் கொண்டவள் “சும்மாயிருங்கடி...” முகத்தை கைகுட்டையால் மறைத்துக் கொண்டாள்.



“வெக்கத்த பாருடா... இந்த உலகத்தில யாரை வேணா நம்பலாம் ஆனா அமைதியா இருக்கிற யாரையும் நம்ப கூடாதுடி...” ஷாஷி கண்ணடிக்க, அதை ஆமோதித்து தலையசைத்தாள் ஷிகா.



அதற்குள் சுட சுட சமோஸா வரவும் பசியில் இருந்த மூவரும் எச்சில் ஊறிய நாவுடன் தக்காளி கெட்சப் ஊற்றி ஒரு கட்டு கட்டினர்.



மூவருமே பாலர் வகுப்பில் இருந்து ஒன்றாய் படித்தவர்கள். பெண்கள் பள்ளி என்பதால் பெரிதாய் கட்டுபாடுகள் இல்லாவிடினும் ஓரளவு கட்டுப்பாடுடன் கூடிய பள்ளி தான். இப்போது பத்தாம் வகுப்பில் பயின்று கொண்டிருந்தனர்.



படிப்பில் மூவரும் மூன்று விதம். ஷிகா எப்போதும் வகுப்பில் முதலிடம். பாலா இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொள்வாள். ஷாஷினிக்கு அந்தளவுக்கு படிப்பில் ஈடுபாடில்லை. அவள் ரசனைகள் சற்று வித்தியாசமானவை. ஆனாலும் படித்து நல்ல மார்க் எடுத்து விடுவாள்.



சாப்பிட்டு முடித்து கிரௌண்டிற்குள் நுழைந்தவர்கள் கல் இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.



“மோர்னிங் வந்தது... இன்னும் கிளாஸ்க்கு போகல... சீதேவி மட்டும் என்ட்ரி கொடுத்தா நம்ம மூனு பேரையும் மூதேவயாக்கி இமேஜ் டேமேஜ் பண்ணிடுவா... சும்மாவே நம்ம மூனு பேரையும் அதுக்கு பிடிக்காது இப்போ மட்டும் கிளாஸ்க்கு போகல வச்சி செஞ்சிடும்...” பாலா வகுப்பாசிரியரின் நினைவில் கடுப்புடன் கூறினாள்.



“ஏன்டி நல்ல நேரத்தில் அவ பேச்சை எடுக்கிற வாயில வந்திட போகுது... இவங்களையெல்லாம் யாருடி டீச்சர் ஆக சொன்னாங்க... இப்போ நம்ம உயிரை குடிக்கிறாங்க... உனக்கே தெரியும்ல எனக்கு ஹிஸ்ட்ரி எவ்ளோ இன்ரெஸ்ட்னு; எப்போ இவ வந்தாவோ அன்னைக்கு போச்சு என் ஹிஸ்ட்ரி மேல இருந்த ஆசை... இப்போ எனக்கு கிளாஸ்க்கு போற மூடே இல்லடி... நீ வேணா போய் அவ அறுக்கிறதை ஆசைதீர வாங்கிட்டு வாயேன்..” கடுப்புடன் கூறியபடி உதட்டை சுழித்துக் கொண்டாள் ஷிகா.



“அது என்ன தேவைக்கு... அதெல்லாம் நானும் போக போறதில்ல... நீங்க ரெண்டு பேரும் வராம நான் என்னைக்கு அந்த வகுப்புக்குள்ள போய் இருக்கேன்....” அலுப்புடன் உரைத்த பாலா ஷாஷியின் தோளில் வாகாய் சாய்ந்து கொண்டாள்.



“இன்னிக்காச்சும் தூங்கலாம்னு பார்த்தேன் அதுக்கு வேட்டு வச்சிட்டானுங்க... ஈவ்னிங் டியூசன் க்ளாஸ் போறதா இல்ல கட் பண்றதா...” மாலை நேர வகுப்பை பற்றி பேச்சை எடுத்தாள் ஷிகா.



“நான் கண்டிப்பா வருவேன்...” அவசரப்பட்டு வாயை விட்ட ஷாஷி அதன் பின்பு தான் அவசரபட்டதை உணர்ந்து அசடு வழிந்து இதழை அழுந்த கடித்துக் கொண்டாள்.



“அம்மாடியோய்... செம்ம ஸ்பீட்டா தான் போ...” ஓட்டினாள் பாலா.



“அதுக்கில்லடி.. இன்னிக்கு சயின்ஸ்ல முக்கியமான பாடம் படிக்கிறோம்ல அதுக்கு தான் சொன்னேன்... வேறயொன்னுயில்ல...” தோழிகளிடம் வசமாய் சிக்கிக் கொண்டதில் தவிப்புடன் படபடத்தாள்.



“அப்பிடியா... நான் நம்பிட்டேன்... ஷிக்கு நீயும் நம்பிட்டேன்னு சொல்லு... அப்போதான் இது நம்பும்... நாம நம்பிட்டோம்னு...” தான் நம்பவில்லை என்பதை மறைமுகமாக எடுத்துரைத்தாள் பாலா. உடன் ஷிகாவும்.



“நானும் சத்தியமா நம்பிட்டேன்டி...” இதழ்கடையோரம் குறும்பில் துடித்தது.



“ஏன்டி இப்பிடி ஓட்டிறீங்க...” முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு கேட்க,



“ஏண்டி மத்தவங்கள கலாய்ச்சா சிரிக்கிற... கூடவே நீயும் சேர்ந்து கவுண்டர் கொடுக்கிற.. ஆனா உன்ன கலாய்ச்சா மட்டும் முகத்த பச்ச குழந்த மாதிரி வச்சிக்கிட்டு அழுகிற சீன் போற...” பாலா கிடுக்கிபிடி போட,



“தானா வந்த எலியை தப்பிச்சுக்கொன்னு விட்றதுக்கு அவ்ளோ நல்லவங்க இல்லடி நாங்க...” ஷிகா உடன் சேர்ந்து கொண்டாள்.



“அதுவும் இது சாதாரண எலியில்ல... காதல் வலையில் சிக்கியிருக்கிற எலி... சும்மா விட்டிடுவோமா இல்ல விடத்தான் பூனை நினைக்குமா...” அவளை எலியாக்கி தங்களை பூனையாக்கி அவளை சுற்றி வளைத்தனர்.



‘இனி இதுங்க என்னை ஒருவழியாக்காம விடமாட்டாங்களே... இருக்கிற பிரச்சினைல இவளுங்க வேற’ தன்னை நினைத்து எழுந்த பரிதாபத்துடன் தோழிகளின் நடுவில் அமர்ந்திருந்தாள் ஷாஷி.



“சரி சொல்லு...”



“என்னத்த சொல்ல சொல்ற...”



“என்னடி இப்பிடி பட்டுன்னு கேட்டிட்ட... உன் லவ் ஸ்டோரியை தான் கேட்கிறோம்.. வேற எதை பத்தி உன்கிட்ட பேச போறோம்... சரி சொல்லு சொல்லு...” கதை கேட்கும் ஆர்வத்தில் கேட்டாள் ஷிகா. அதே ஆர்வம் பாலாவுக்கும் இருந்திருக்கும் போல. அவளும் ஷாஷியின் முகத்தை ஆவலுடன் பார்த்திருந்தாள்.



ஷாஷி ஒருவித வெட்கம் கலந்த படபடப்புடன் அமர்ந்திருந்தாள். அவனை பற்றி நினைக்கும் போதெல்லாம் இதே நிலை தான். யாரிடத்திலும் அதை கூற முடியவில்லை. இந்த வயதில் என்ன காதல் என யாராவது திட்டி விட்டால்... இல்லை வீட்டிற்குள் முடக்கி விட்டால்... அந்த பயத்தினால் யாரிடமும் சொல்ல முடியவில்லை.



தோழிகளின் முகத்தை பார்த்தாள். கதை கேட்கும் ஆர்வத்தில் அமர்ந்திருந்தனர். அதை பார்த்து சிறு சிரிப்பை உதிர்த்தவள் தன் காதல் கதையை விவரிக்கலானாள்.



@@@ அது ஒரு மாலைநேர வகுப்பு...

பாலாவும் ஷிகாவும் அங்கு செல்லாததால் தன் வகுப்பு மாணவர்களுடன் சலசலத்தபடி வந்தவள் கன்னத்தில் புரண்ட முடிக்கற்றை மென்மையாய் காதின் புறம் சொருகி விட்டாள்.



அவள் அணிந்திருந்த சிகப்பு நிற குர்தியும் கருப்பு நிற பாலாஸ்ஸோவும் மஞ்சள் குழைந்த வெள்ளை நிறத்தினளை எடுப்பாக காட்டியது. தோளின் வலது புறம் தோள்பை. ஒரு கையில் நெஞ்சோடு சேர்த்தணைத்த புத்தகம். இடது கையில் வாட்ச். காதில் மெல்லிய தொங்கட்டான், கழுத்தில் மெல்லிய பென்டன் பதித்த சங்கிலி. எளிமையான அலங்காரம். இருந்தும் பேரழகியாய் காட்டியது.



பாதி வழியிலே தோழிகள் பிரிந்து சென்றிருக்க அந்த குறுகிய சந்தில் தனியாய் நுழைந்தாள் ஷாஷி. பழக்கப்பட்ட இடம் என்பதினால் பெரிதாய் பயம் கொள்ளவில்லை. இருந்தும் பொழுது சாய்ந்து கொண்டிருந்ததில் இருள் படிய துவங்கிய வானம் அவளை பீதியடைய செய்திருந்தது.



வேகமான நடையில் சிறு தூரம் கடந்திருந்தாள் அதற்குள் அவள் வழியை மறித்தாற் போன்று வந்து நின்றது பள்சர் ஒன்று. அதில் திடுக்கிட்டு போனவள் முன்னால் நின்றவனை ஏறிட்டாள். அவன் யாரென சரிவர தெரியவில்லை. பெண்களுக்கேயான இயல்பான பயம் நெஞ்சை கவ்வியது, அதற்கு மாறாய் அவன் பார்வை கூச்சத்தை மூட்டியது தான் விந்தையிலும் விந்தை. பதின் வயதில் காலடி எடுத்து வைத்தவளுக்கு அந்த உணர்வுகள் புதிது.



இருந்தும் அவனை தாண்டி போக முற்பட்டாள். கை நீட்டி போக விடாமல் தடுத்து நிறுத்தினான்.



“கொஞ்சம் பேசனும்..” மென்மையுடன் கூடிய அழுத்தமான குரல்.



அவளுக்கோ முன்னே பின்னே தெரியாதவன் வழிமறித்து நிற்பதை பார்த்து அடிவயிற்றை பிசைந்தது. யாராவது பார்த்துவிட்டால் என்ற எண்ணமே அவளுள் பயத்தை விளைவித்தது.



இங்கிருந்து சென்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் மேலோங்க “என்ன பேசணும்...” வழமைக்கு மாறாய் குரலுக்கு பதில் காற்று வந்து சதி செய்தது.



அவளின் நிலை அவன் முகத்தில் காந்த புன்னகையை தவழ செய்தது. மனதிற்கு பிடித்தவர்களின் எந்தவொரு செயலும் மனதை மகிழ்விக்கும் போலும்.



“கண்டிப்பா பேசத்தான் போறேன்.. அதுக்கு முன்னாடி சின்ன இன்ட்ரோ”



“ஐயம் ரோஹன்” கை நீட்டினான்.



‘லூசாப்பா நீ... யாருன்னு தெரியாத பொண்ணுக்கிட்ட வந்து கை குலுக்க கை நீட்டிற.... ஒருவேள உண்மையிலேயே லூஸா இருப்பானோ’ அந்த எண்ணத்தின் ஊடே இறுக்கமாய் கைகளை ஒன்றுடன் ஒன்று பிணைந்து கொண்டு அவனை பார்த்து வைத்தாள்.



“கை கொடுத்தா பதிலுக்கு கை கொடுக்கணும்னு தெரியாதளவு நீ ஒன்னும் சின்ன பொண்ணு இல்லன்னு எனக்கு தெரியும்... அப்றோம் ஏன்? ஒருவேளை முன்னபின்ன தெரியாதவன்கிட்ட கைகொடுக்க கூடாதுன்னு சொல்லியிருக்காங்களா...”



‘ஆமா உங்க ஆயா வந்து சொல்லிட்டு போச்சு... லூசுத்தனமா பேசிறான்...’ மண்டையை சொரிந்தவள் “வழி விட்டீங்கன்னா நான் வீட்டுக்கு போய்டுவேன்...” நடுவழியில் நந்தி மாதிரி வழியை மறிக்கிறானே என்ற கோபம் வார்த்தைகளில் தெறித்தது.



“சொல்ல வேண்டியதை சொன்னதும் நானே பத்திரமா கூட்டிட்டு போறேன்...”



அதை கேட்டு அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டாள் ஷாஷி.



‘அது என்ன தேவைக்கு டா... என் வீட்டுக்கு எனக்கு வழி தெரியும் நான் போய்க்குவேன்... அதுக்கு இவன் வழியை விட்டாத்தானே...’



“என்ன சொல்லணுமோ அதை சீக்கிரம் சொல்லுங்க...” கைக்கடிகாரத்தை பார்த்துக் கொண்டு உரைத்தாள்.



“சொல்றேன்... சொல்றதுக்கு தான் இவ்ளோ தூரம் வந்திருக்கேன்...” கைகளை பிசைந்து தலையை அழுந்தக் கோதி நெற்றியை தேய்த்து பல பாவனைகள் செய்தவன் தன் மனதிலுள்ளதை அவளிடத்தில் எப்படி கூறுவது என தடுமாறினான்.



‘வாரணமாயிரம் சூர்யா கூட இந்தளவுக்கு பெர்போர்மேன்ஸ் பண்ணியிருக்க மாட்டான்...’



“நான் என்ன சொல்ல வந்தேன்னா... எனக்கு... ஐ மீன்.. எனக்கு சுத்தி வளைத்து பேச தெரியாது... நேரடியாவே சொல்றேன்... எனக்கு உன்னை பிடிச்சிருக்கு.. காதலிக்கணும் போல இருக்கு... உனக்கும் என்னை பிடிச்சதின்னா இதே இடத்துக்கு நான் நாளைக்கும் வருவேன்... அப்போ சொல்லு... உனக்காக காத்திருப்பேன்...” என்றவன் அவள் முகத்தை உற்று நோக்கி புன்னகை புரிந்தான்.



மறுநொடி அவளை பார்த்தவாறே தன் பைக்கை உயிர்பித்தவன் “I will be waiting” அழகாய் தன் மனதிலுள்ளதை எடுத்துரைத்தவாறு வந்த வேகத்தில் பறந்தும் போயிருந்தான்.



அவளோ முதலில் அவன் சொன்ன வார்த்தைகளை ஏனோதானோவென கேட்டிருந்தவள் அதன் பின்பே அதன் அர்த்தம் உணர்ந்து கற்சிலையாய் சமைந்து போய் நின்று விட்டாள். எத்தனை நேரம் அசையாது நின்ற இடத்திலே ஆணி அடித்தது போல் நின்றாளோ தூரத்தில் எங்கோ புள்ளியாய் கேட்ட பறவைகளின் சல்லாப சத்தத்தில் தன்னிலைக்கு மீண்டவள் படபடத்த இதயத்துடன் வீட்டை நோக்கி ஓடினாள்.



வீட்டிற்கு வந்தும் கூட அவளால் அவனின் வார்த்தைகளை மறக்க முடியவில்லை. மீண்டும் மீண்டும் அவள் காதினுள் ஒலித்து பெரிதும் இம்சித்தது.



புத்தகத்தை வைத்துக் கொண்டு படிப்பிலாவது ஈடுபடுவோம் என்றால் புத்தகத்திலும் அவன் முகம் தெரிவது போல் மாயை. பாட்டி வீட்டுக்கு செல்வோம் என்றால் மீண்டும் அவன் கண் முன் தோன்றிடுவானோ என்ற பயம். தூங்க சென்றால் மூடிய விழிகளுக்குள் அவன் முகம். தோழிகளிடத்தில் சொல்ல முயன்றவளுக்கு கூச்சம் உந்தி தள்ள தொலைபேசியின் அருகினில் சென்றவள் பாதியிலே திரும்பி விட்டாள்.



அன்று முழுவதும் மந்திரித்து விட்ட கோழி போல் திரு திருவென முழித்துக் கொண்டு செய்வதறியாமல் தவித்து போனால் மறுநாள் ஏதேதோ சாக்கு சொல்லி வகுப்பிற்கு செல்லாமல் மட்டம் போட்டுவிட்டாள்.



ஆனாலும் அவன் நினைவுகள் விடாது கருப்பாய் அவளை துரத்திக் கொண்டே தான் இருந்தது. ஒரு சில கணங்கள் தான் அவனை அசட்டையாய் பார்த்திருந்தாள். சில நொடிகள் தான் அவன் குரல் கேட்டாள். கண்ணிமைக்கும் நொடி தான் அவன் புன்னகை முகம் பார்த்தாள். அதுவே அவள் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொண்டது.



நாட்கள் அதன் போக்கில் நகர அதன் பின் அவன் அவள் கண்களில் விழவேயில்லை. அதை பார்த்து முதலில் களிப்படைந்தவள் பின்பு அவனை காணாது தவித்து தான் போனாள். இதுவரைக்கும் யாரிடத்திலும் அவள் இது போல் உணர்ந்ததில்லை. முதன் முதலாய் அவள் இதயத்தை மலர செய்தவன் அதன் பின் அவள் கண்களிலே படாமல் போனதில் தவித்து போனவள் அதை யாரிடத்திலும் சொல்ல முடியா பயத்தில் தனக்குள் மறைத்துக் கொண்டு வெளியில் தன்னை உற்சாகமாய் காட்டிக் கொண்டாள்.



அவள் உயிர்தோழிகளிடத்தில் கூட அவள் மூச்சு விடவில்லை. விருப்பமில்லாததால் இல்லை. சங்கடத்தினால். தோழிகளுக்கு தான் தவறான முன்னுதாரணம் ஆகிவிடக்கூடாது என்பதனால். உள்ளுக்குள்ளே புழுங்கிக் கொண்டாள். வெளியில் சொல்ல வார்த்தைகள் வரவில்லை.



நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. தினமும் வகுப்பு முடிந்து செல்லும் போதும் அவள் விழிகள் அந்த குறுகிய சந்தில் பாய்ந்து மீளும். அவனை காண மாட்டோமா எனும் ஏக்கம் அதிகரிக்கும். இந்த வயதில் இது தேவையில்லாதது என அவளே தன்னை சமன் படுத்திக் கொள்வாள். அவனை நினையாதே என மனதிற்கு கட்டளை இடுவாள்.



மனம் ஒரு குரங்காயிற்றே. நினையாதே என்று மனதை சமன் படுத்திக் கொண்டு அவன் நினைவிலே நாட்களை கழித்தாள். இரண்டு மாதங்கள் நில்லாமல் கடந்திருந்தது.



மழை வரும் போல் இருந்ததில் நேரத்துடனே வகுப்புகள் முடிந்திருக்க குடை கொண்டு வராததில் நகத்தை கடித்து துப்பிக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் அந்த குறுகிய சந்தினுள் நுழைந்தாள் ஷாஷி.



கிட்டத்தட்ட அவள் இந்த வழியால் வந்தே இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது. முதலில் பயத்தில் வராமல் இருந்தவள் பின்பு அவனை காணாத தவிப்பில் வரவில்லை. இன்று வீட்டிற்கு அவசரமாய் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உந்தி தள்ளியதில் இந்த வழியால் நுழைந்திருந்தாள்.



கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்ப்பதும் இடையிடையே வானத்தை பார்ப்பதுமாய் நடந்து வந்து கொண்டிருந்தவள் எதன் மீதோ மோதி தடுமாறி நின்றாள். பயத்தில் நெஞ்சம் வேகமாய் அதிர்ந்தது. முகம் வெளுக்க அச்சத்துடன் நிமிர்ந்து பார்த்தவள் தன் முன் நின்றவனை பார்த்ததும் ஆசுவாசமாய் மூச்சு விட்டாள்.



அவளிடத்தில் காதலை உரைத்த ரோஹன் தான் அவள் முன் நின்றிருந்தான்.



முதலில் அவனை பார்த்து ஆசுவாசமடைந்தவளின் கண்கள் ஏக்கமாய் அவன் முகத்தை தழுவி மீண்டது மறுகணமே தவிப்புடன் கூடிய கோபத்தில் அவனை கடந்து சென்றாள்.



அவள் முகத்தையே விழியகற்றாது பார்த்திருந்தவன் அவள் கண்களில் தோன்றிய ஏக்கத்தையும் சடுதியில் மின்னிய கோபத்தையும் சந்தோஷத்துடன் குறித்துக் கொண்டான்.



தன்னை தாண்டி செல்ல முற்பட்டவளின் கையை மென்மையாய் பற்றினான். உள்ளுக்குள் சிலிர்ப்பொன்று ஓடி மறைய பதறிப்போய் அவனிடமிருந்து கரத்தை விடுவிக்க முயல அவளின் முயற்சி கண்டு தானாகவே அவள் கைகளை விடுவித்தான்.



“கோபமா இருக்கியா...”



‘நான் எதுக்கு இவன் மேல கோபப்படனும்.. அது என்ன தேவைக்கு... இவனா வந்தான் காதலிக்கிறேன்னு சொன்னான் அப்றோம் காணாம போய்ட்டான்... இப்போ மறுபடியும் வந்திருக்கான்.. இவன் மேல கோபப்பட்டு நான் என்னத்த கிழிக்க போறேன்... அம்மா சொல்லற மாதிரி படிச்சி கிழிச்சாலும் பரவாயில்ல...’ மனதினுள் முனங்கினாள்.



“கேள்வி கேட்டா பதில் சொல்லணும்... இப்பிடி உம்முன்னு இருந்தா என்ன அர்த்தம்...”



‘பதில் சொல்ல பிடிக்கலேன்னு அர்த்தம்... இது கூட தெரியாமலா இவன் இவ்ளோ தூரம் நெட்டகொக்கு மாதிரி வளர்ந்திருக்கான்...’



“உன்கிட்ட தான் பேசுறேன்... பதில் சொல்ல மாட்டியா...”



“தயவு செஞ்சு முதல்ல வழி விடுங்க.. எனக்கு டைம் ஆச்சு நான் வீட்டுக்கு போகணும்...”



“நான் கேட்ட கேள்விக்கான பதில் இது இல்லையே... முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு அப்றோம் வீட்டுக்கு போகலாம்...”



“நீங்க யாரு... நான் எதுக்கு உங்ககிட்ட பதில் சொல்லணும்... தேவையில்லாம வழியோட போற பொண்ணுக்கிட்ட தகராறு பண்றீங்களா..” அவளின் அவனை காணாத தவிப்பு ஏக்கம் நொடியில் கோபமாய் உருமாறியது.



“ரெண்டு மாசமா உன்னை பார்க்க வராதனால கோபமா இருக்கியா... இல்லன்னு பொய் மட்டும் சொல்லாதே...”



“நான் எதுக்கு உங்ககிட்ட கோபப்படணும்... அதுக்கெல்லாம் எனக்கு நேரமில்ல... இப்போ நான் வீட்டுக்கு போகணும் வழி விட போறீங்களா இல்லையா....” கோபத்துடன் பொரியும் போதே கருமேகங்கள் சூழ்ந்த வானம் மழையை பொழிந்தது.



மழை வலுக்கவும் செய்வதறியாது தவித்தவள் பயத்தில் அவனை தாண்டி செல்ல முற்பட வழியில் இருந்த கல் தடுக்கி விழ பார்த்தவளை நொடியில் தன கரங்களில் தாங்கிக் கொண்டான் ரோஹன்.



“ஏய்.. பார்த்து போக மாட்டியா...” கடிந்து கொண்டவன் அவளை தள்ளி நிறுத்தினான். அவள் தான் அச்சத்திலும் கூச்சத்திலும் முகம் லேசாய் சிவக்க தலை குனிந்து நின்று கொண்டாள். பெரும் மழை கொட்டிய போதும் அங்கிருந்து அகலும் எண்ணம் மனதை தாக்கவில்லை மாறாக அவன் தொடுகை அவளுள் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.



அதை உணர்ந்தவன் போல் அவள் முகத்தையே காதலுடன் பார்த்தவன் “முக்கியமான வேலையா வெளியூர் போயிருந்தேன்... அதான் பார்க்க வரமுடியல...”



வலுத்த மழையுடன் கூடிய மௌனமான நேரத்தில் அவன் காந்த குரல் மென்மையாய் அவள் செவியை நிறைத்ததில் தானாகவே அவள் தலை அசைந்து அவன் கருத்தை ஏற்றுக் கொண்டது.



“பிடிச்சிருக்கா...”



என்ன சொல்வதென புரியாத நிலையில் மழையில் நனைந்தபடி நின்று கொண்டிருந்த ஷாஷி தவிப்புடன் அவனை நிமிர்ந்து நோக்கினாள்.



அவளின் தவிப்பை உணர்ந்தாற்போன்று “சரி போ... வீட்டுக்கு போய் டேப்லெட் போட்டுக்கோ... பீவர் வந்திடும்...” அக்கறையுடன் மொழிந்தவன் அவள் அங்கிருந்து செல்லும் வரை அவளையே பார்த்திருந்தான்.



“இந்த மழைக்குள்ள எதுக்குடி ஓடி வந்த... எங்கயாவது நின்னு வந்திருக்கலாம்ல...” கவலையுடன் கூடிய அன்னையின் வார்த்தைகள் கூட அவள் செவியை எட்டவில்லை.



ஈர உடையை களைந்து வேறு உடைக்கு மாறியவள் தலையை துவட்டி காய வைத்து மாத்திரை ஒன்றை போட்டுக் கொண்டாள்.



அன்றிலிருந்து இன்று வரை அவன் அவள் வாய் வார்த்தைக்காக காத்திருக்க அவளோ அதை சொல்ல முடியாமல் தவித்த வண்ணம் தன் விழிகளில் நேசத்தை நிரப்பி அவனை பார்த்துக் கொள்வாள். ஆனால் அவளை பின்தொடர்வதை அவன் இன்னமும் நிறுத்திக் கொள்ளவில்லை.



வகுப்பு முடிந்து வீடு செல்லும் வரை அவளை பின்தொடர்ந்து செல்வான். அவள் பத்திரமாய் செல்கிறாளா என்பதை கண்காணிக்க. இப்படியே கண்ணாம்பூச்சி ஆட்டமாய் சென்று கொண்டிருகின்றது அந்த பதின் வயது பெண்ணின் காதல் கதை.



கதை முடிந்த சமயம் பள்ளி விடுவதற்கான மணியோசை கேட்க மூவரும் ஓட்டமும் நடையுமாய் வகுப்பை அடைந்து தங்கள் பைகளை எடுத்துக் கொண்டனர்.



ஆங்கில தின போட்டியில் பங்கு பற்றியதில் முழு நேர பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருக்க வகுப்பிற்கு செல்வதற்கு கூட அவர்களுக்கு நேரமிருக்கவில்லை.



“பாய் டி ஷாஷி.. ஷிக்கு பாய் டி... பார்த்து பத்திரமா போங்க....” தோழிகளுக்கு கையாட்டி விடைகொடுத்தாள்.



“நாங்க போய்க்குவோம்... நீ பத்திரமா போய்க்கோ.. பாய் டி...” பாலாவிடம் விடைபெற்று புறப்பட்டு சென்றனர் அவர்களிருவரும்.



பாலாவின் வீடு சற்று தொலைவில் இருப்பதால் அவள் வீட்டுக்கு செல்வது ஆட்டோவில் தான் என்பதால் அதற்காய் பள்ளி வாசலில் நின்று காத்திருந்தாள். இன்னும் சில மாணவர்கள் உடன் நின்றிருந்தனர்.



அதேநேரம் பாலாவின் வருகைக்காக தவமிருந்தவன் அவளை பார்த்தும் மனதும் உடலும் பரபரப்பாக அவளை பார்த்த வண்ணம் தன் பைக்கில் அமர்ந்து நண்பர்களுடன் உரையாடுவது போல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.



தலை குனிந்து நின்றிருந்த பாலாவிற்கு தன்னை ஏதோ துளைப்பது போல் இருக்க பார்வையை உயர்த்தி பார்த்தாள். அவன் தான் நின்று கொண்டிருந்தான். அவள் போகுமிடமெல்லாம் பின்தொடர்ந்து வரும் ஆசாமி தான் சன்ன சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான். அவனை பார்த்து பல்லை கடித்தவள் ‘பொறுக்கி ராஸ்கல்...’ வசைபாடினாள்.



அவளுக்கென்று சில கனவுகள் இருந்தது. படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும்.. கை நிறைய சம்பாதிக்க வேண்டும். நிம்மதியான வாழ்வு. மிக முக்கியமாய் பெற்றோர் தனக்கு பொருத்தமானவனை தெரிவு செய்வர் என்ற நம்பிக்கை அவளுள் அதிகமே உண்டு.



காதலில் ஈடுபாடு வரவில்லை. அந்த வயதும் அவளுக்கு இல்லை என்றாலும் இன்னும் அந்த உணர்வுகள் அவள் நெஞ்சத்தை தாக்கவில்லை.



“என்னடா மச்சான்... உன் ஆளு உன்னை நிமிர்ந்து கூட பார்க்காம தலை குனிஞ்சு நிக்குது...”



“அவ எப்போவும் அப்பிடித்தாண்டா... அவளோட இந்த குணம் தான் எனக்கு அவகிட்ட ரொம்ப பிடிச்சது...” பார்வை ரசனையுடன் அவள் முகத்தை தழுவ ஆசையுடன் உரைத்தான் மஹத்.



சில நாட்களுக்கு முன்பு தான் அவளை பார்த்தான். பார்த்ததும் பிடித்து விட்டது. தனக்கானவள் என்பதை முடிவு செய்து கொண்டவன் அவள் போகும் வழியெல்லாம் நிழலாய் பின்தொடர்ந்தான்.



“எப்போடா காதலை சொல்லப்போற... சீக்கிரம் சொல்லிடுடா.. இல்லன்னா கிளி பறந்து போய்டும்...”



“சொல்லணும் மச்சான்... கூடிய சீக்கிரம் சொல்லிடுவேன்...” நெஞ்சை தடவிக் கொண்டு உரைத்தவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் ஆட்டோவில் ஏறி அமர்ந்தவள் வீட்டை அடைந்திருந்தாள்.



ஆயிரம் பேர் வழியில் இடைப்பட்டாலும் அவள் நெஞ்சம் அவனுக்குத்தான்.



இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தா தான் என்ன

ஏன் அவசரம் என்ன அவசரம் நில்லு பொன்னே

இன்னும் பேச கூட தொடங்கலையே

நெஞ்சமும் கொஞ்சமும் நெறயலை

இப்போ என்ன விட்டு போகதே என்ன விட்டு போகதே

இன்னும் பேச கூட தொடங்கலையே

நெஞ்சமும் கொஞ்சமும் நெறயலை

இப்போ மழை போல நீ வந்தால் கடல் போல நான் இருப்பேன்


சிதறும்...
 
Last edited:

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...
முதல் அத்தியாயம் எப்பிடி இருக்கின்னு ஒரு வரியிலாவது உங்கள் கருத்தை சொல்லுங்கள்....
அப்போ தான் எனக்கு உற்சாகமா இருக்கும்...
இன்னும் பெட்டரா எழுதவும் முடியும்...
அதனால் உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்...

(உங்கள் மனதில் தோன்றியதை சொல்லுங்கள்...)

நன்றி...
:smile1:
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிதற வைத்த செம்பாவையாள்.



அத்தியாயம் 02



“காலைல செம்ம தூக்கம்டி ஸ்கூலும் இல்லையா எதுக்கு வெட்டியா காலங்கார்த்தால எழுந்துக்கனும்னு தூங்கினேன்... என் அம்மாக்கு மூக்கு வேர்த்திடிச்சு... பூரிக்கட்டை பறந்து வந்து நடுமண்டைல நச்சுன்னு விழுந்திச்சு... அப்போ எழுந்தவ தான் ஐஞ்சு நிமிஷம் கூட ரெஸ்ட் எடுக்க விடாம ரொம்ப வேலைவாங்கிட்டாங்கடி என்னை பெத்த அம்மா...” ஷிக்கு புலம்ப,



“அட நீ வேற உனக்காச்சும் பூரிக்கட்ட எனக்கு அம்மிக்கல்லு வந்து விழுந்திருக்கும் ஜஸ்ட்டு மிஸ்ஸு இல்ல இந்நேரத்துக்கு டெட்பாடி தான்”



“ஹா ஹா... எவ்ளோ வயசானாலும் மோர்னிங் மம்மி கிட்ட திட்டு வாங்காம வேக்கப் ஆனா அந்த நாள் நல்லாவே இருக்கிறதில்ல சோ இதுக்காக நாம பெருமைபட்டே ஆகணும் மை டியர் ஷாஷி...”



“அது என்னவோ உண்மைதான்...” ஆமோதிப்பாய் தலையசைத்து அதை ஏற்றுக் கொண்டாள் ஷாஷி, “சரி அத விடு நைட் சீரியல் பார்த்தியா நான் பார்க்கல.. மம்மி படி படின்னு படிச்சப்றம் தான் எழ விட்டிச்சு...... என்னாச்சு ரெண்டு பேரும் இப்போவாச்சும் சேர்ந்தாங்களா... வில்லி யாருன்னு கண்டுபிடிச்சிட்டாங்களா...”



“அதுங்க ரெண்டும் இந்த ஜென்மத்தில சேராதுடி... இதுக்குத்தான் இந்த சீரியல் பார்க்ககூடாதின்னு சொல்றது... ஒரு தடவை பார்த்தா அடுத்தடுத்து பார்க்கணும் போலவே இருக்கும்... பார்க்கலேன்னா என்ன நடந்திச்சோன்னு டென்ஷனா இருக்கும்... தொடர்ந்து பார்த்தா இவங்க எப்போ சேருவாங்க இவங்க இப்போ பிரிவாங்கன்னு கடுப்பா இருக்கும்...” மிகப்பெரிய உண்மையை வெகு சாதாரணமாய் புட்டு புட்டு வைத்தாள் ஷிக்கு. அதை கேட்டு மீண்டும் ஆமோதிப்பாய் தலையசைத்தாள் ஷாஷி. தோழிகளின் உரையாடலை சிறு புன்னகையுடன் பார்த்திருந்தாள் பாலா.



இத்தனையும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான மாலை நேர வகுப்பில் அமர்ந்து தான் உரையாடிக் கொண்டிருந்தனர். ஒரு மர பெஞ்சில் இரண்டாவது வரிசையில் மூன்று தோழிகளும் அமர்ந்திருந்தனர். இந்த வருடம் கடுமையாய் படித்தே ஆகவேண்டும்.. இது தான் அவர்களின் முக்கியமான வருடமும் கூட.



பாலாவின் செவிகள் தோழிகளின் பேச்சில் கவனமாய் இருந்தாலும் மனமோ நில்லாமல் எதை நோக்கியோ ஓடிக் கொண்டிருந்தது. பழைய குப்பை கிளறப்பட்டது போல் அதை நினைக்கும் போதே நெஞ்சினுள் தடக்தடக் என ரயில் ஓடும் ஓசை. இதயம் வழமைக்கு மாறாய் வேகமாய் துடித்தது. கைகளில் சிறு நடுக்கம்.. கண்களில் சிறு கலக்கம்.



கைக்குட்டையால் முகத்தில் துளிர்த்த வியர்வை துளியை யாரும் அறியாமல் ஒற்றி எடுத்துக் கொண்டாள்.



யாரும் பார்க்கவில்லை என அவள் நினைத்திருக்க அவளையே பார்த்திருந்த அவன் கண்களுக்கு அது தப்பவில்லை. அவளை உற்று நோக்கினான். வழமைக்கு மாறாய் அவள் கண்களின் எட்டிப்பார்த்த ஒருவித பாவனை காரணமின்றி சிவந்திருந்த கன்னங்கள் அவனை யோசனைக்குள்ளாக்கியது.



அவள் வயதையொத்த மாலைநேர வகுப்பிற்கும் வரும் அவள் தோழன் தான். ஆனால் வேறு பள்ளியில் பயில்கிறான். அதனால் தானோ என்னவோ பெரிதாய் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்வதில்லை.



தேவைக்கு மட்டும் சில வார்த்தைகள். ஷிக்கும் ஷாஷியும் அவனிடம் நன்றாகவே பழகுவர். பாலாவிற்கு அது பழக்கமில்லை. ஒரு வித சங்கடத்துடன் கூடிய தயக்கம். அவளின் தயக்கம் உணர்ந்து அவளை சீண்டுவதிலே அவன் பொழுது போய்விடும்...



இப்போது அவள் முகத்தை பார்த்தவன் யோசனையுடன் ஷாஷியையும் ஷிக்குவையும் நோக்கினான். இருவரும் பேச்சில் மும்முரமாய் இருக்க ‘இதுகள...’ பல்லை கடித்தவன் புத்தகத்தின் ஓரத்தில் சிறு துண்டை கிழித்து அதை உருண்டையாக்கியவன் ஷாஷியை நோக்கி குறிபார்த்து எறிய அதுவோ அவளுக்கு அருகில் இருந்த பாலாவின் மேல் போய் விழுந்தது.



திடீரென தன்னில் எதுவோ விழவும் திடுக்கிட்டவள் அது புத்தகத்தின் தாள் என்பதை உணர்ந்து எங்கிருந்து வந்திருக்கும் என்பதை கணக்கிட்டவளாய் பார்வையை திருப்ப அங்கு அசடு வழிந்து தலையை தட்டிக் கொண்டிருந்த ஹர்ஷா விழுந்தான். அவள் அவனை புரியாமல் நோக்க அவனுமே அவள் மீது விழும் என்பதை அறிந்திறாததால் சிறு சங்கடத்துடன் அவளை பார்த்திருந்தான்.



அவன் முகத்தை பார்த்தவள் ‘என்ன’ எனும் விதமாய் புருவத்தை உயர்த்தினாள்.



அதை பார்த்து ஆசுவாசப்பட்டவன் அவளின் கேள்விக்கு பதிலளிக்காது அவள் புறம் ஆட்காட்டி விரலை நீட்டி பின் கட்டை விரலை மட்டும் உயர்த்தி ‘உனக்கு என்னாச்சு’ என இதழசைத்தான்.



அதை கேட்டு திடுக்கிட்டவள் சடுதியில் தன் முகத்தில் தோன்றிய உணர்வுகளை மறைத்துக் கொண்டாள். அவன் கண்டுகொள்ளும் முன்னமே.



ஆட்காட்டி விரலை தன்னை நோக்கி நீட்டி பின்பு கை விரல்களை அசைத்தவள் ‘எனக்கு ஒன்னுயில்ல’ என அவனைப் போலவே இதழசைத்தாள்.



அதற்குள் பாலாவின் புறம் திரும்பிய ஷாஷியும் ஷிக்குவும் இவர்களின் நயன பாஷையை பார்த்து வாயை பிளந்து ‘என்னடா நடக்கிது இங்க..’ என இருவரையும் மாறி மாறி பார்த்து வைத்தனர்.



“டேய் தம்பி... என்னடா பண்ற... அவ உனக்கு அக்கா முறையாகனும்... இனிமே இப்பிடி சிக்னல் காட்றத பார்த்தேன் தொலைச்சிடுவேன்... தொலைச்சு...” அவனை விட சில மாதங்கள் முன்னால் பாலா பிறந்ததால் வேண்டுமென்றே அவனை ஓட்டினாள் ஷாஷி. கூடவே ஒப்புக்கு சப்பாய் ஷிக்குவும்.



“அடச்சி சும்மாயிரு... அவன் என் தம்பிடி.. அவனை போய்....” பாலாவும் தோழிகளுடன் தன்னை இணைந்து கொண்டாள்.



“ஹம்மோ மூணு பேரும் கூட்டு சேர்ந்திட்டீங்களா இனி நான் வாயை தொறப்பேன்...” பாவனையுடன் கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டு முன்னால் திரும்பிக் கொண்டான். தோழிகள் மூவருக்கும் வெடித்து கிளம்பியது சிரிப்பு.



அதற்குள் ஆசிரியர் வந்து விடவே அத்தனை நேரம் மீன் சந்தை போல் சலசலத்துக் கொண்டிருந்த இடம் நொடியில் மயான அமைதியாக வகுப்பை கவனிக்க ஆரம்பித்தனர். கணித வகுப்பு என்பதாலோ என்னவோ மாணவர்கள் சந்தேகம் கேட்பதும் ஆசிரியர் நிவர்த்தி செய்வதுமாய் நேரம் ஓட மாலை ஐந்தரை மணிக்கெல்லாம் வகுப்பு நிறைவடைந்திட மீண்டும் மீன் சந்தை உருமாற சலசலத்தபடி வெளியேறினர்.



“இன்னிக்கு என்னடி படிச்சோம்... ஒன்னும் மண்டைக்குள் ஏறமாட்டேங்கிது” வெளியில் வந்த ஷாஷி புலம்ப அவளை சந்தேக கண் கொண்டு பார்த்தனர் ஷிக்குவும் பாலாவும்.



“சார் சொல்லித்தரும் போது எதடி பராக்கு பார்த்திருந்த...”



“அப்பிடியில்லடி உனக்கு தான் தெரியுமே.. எனக்கு சுட்டுப்போட்டாலும் மேத்ஸ் மட்டும் மண்டையில ஏறாதின்னு... அதுக்கு சொன்னேன்...”



“கீழ விழுந்தாலும் மீசையில மண் ஒட்டலேங்கிற மாதிரி நல்லத்தான்டி சமாளிக்கிற ஆனா பாரு எங்களுக்கு அப்போவே காது குத்திட்டாங்க நீ ஒன்னும் புதுசா குத்த வேணாம்...” தன்னுடன் பாலாவையும் கூட்டு சேர்த்துக் கொண்ட ஷிக்கு “அப்பிடித்தானேடி” பாலாவை பார்க்க, தோழியின் பார்வையில் “அப்பிடியே தான்..” என்றாள்.



‘அது’ என்று தலையை சிலுப்பிக் கொண்டு ஷாஷியை மிதப்பாய் பார்த்தாள் ஷிக்கு.



ஷாஷி ‘என்னை காப்பாத்தேன்’ என்பது போல் பாலாவை பாவமாய் நோக்க அவளின் பாவனையில் ‘அச்சோ’ பரிதாபம் கொண்டவள் “சரி சரி போனா போகுது விடு ஷிக்கு பாவம் அவ... அவளே காதலிக்கிறவன் கிட்ட காதலை சொல்ல முடியாம தவிக்கிறா.. நீயும் சும்மா சீண்டாத பாவம் பொண்ணு...”



“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி... நானும் அவர்கிட்ட சொல்லலாம்னு நினைக்கிறேன்.. ஆனா முடியல... அவரும் இப்போ சொல்லுவேன் அப்றோம் சொல்லுவேன்னு எதிர்பார்க்கிறாரு... தொண்டவரைக்கும் வார்த்தை வருது.. ஆனா சொல்ல முடியல.. இப்போ இந்த காதல் தேவையான்னு கூட தோணுது... ஆனா அவர என்னால மறக்கமுடில... வீட்டில தெரிஞ்சா என்னாகும்ன பயம் வேற... காத்திருந்து ஏமாந்து போறாரு...” கண்களில் திரண்ட நீருடன் பாலாவின் கையை இறுக பற்றிக் கொண்டாள்.



தோழிகள் இருவரும் ஷாஷியின் வலியுணர்ந்து அவளை ஆறுதலாய் தேற்றினர். பாலாவிற்கு ஷாஷியின் பேச்சு அதுவும் ‘காத்திருந்து ஏமாந்து போறாரு’ என்ற வரி நெஞ்சுக்குள் புயலை உண்டாக்க மனதினுள் புதையுண்ட நினைவுகள் மேலெழ அதை தாங்கும் திராணியின்றி மூச்சடைத்தது.



‘காத்திருந்து ஏமாந்து போற வலியை எனக்கு கொடுத்திடாத...’ அந்த வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் செவியில் ஒலித்து அவளை திண்டாட செய்தது. மறக்க முடியாமல் இதயத்தின் ஆழத்தில் பொதித்து வைத்த வார்த்தைகள் தோழியின் பேச்சில் சுருட்டிக்கொண்டு கிளம்பும் சூறாவளியாய் உள்ளிருந்த அத்தனையையும் வெளித்தள்ளிக் கொண்டு மேலெழும்பியது.



இதற்கு மேலும் இங்கு நிற்க முடியாமல் பதட்டத்துடன் நிமிர்ந்தவள் ஆட்டோ வந்திருக்கவும் ‘எப்போவும் லேட்டா வாரவரு இன்னிக்கு நேரத்தோட வந்திருக்காரு.. அதுவும் நல்லதுக்கத்தான்....’



“சரிடி... பார்த்து போங்க... ஷாஷி எதபத்தியும் கவலைபடாத... இப்போதைக்கு படிப்பு தான் நமக்கு முக்கியம்.. அதில மட்டும் கவனத்த வச்சுக்கோ.... இந்த காதல் வேணாம்னு சொல்லல... கொஞ்ச நாளைக்கு நல்லா படி... நல்ல மார்க் எடுத்தா தான் நம்ம பேரெண்ட்ஸ் சந்தோஷ படுவாங்க... என்ன நான் சொல்றது புரியுதா... ஷிக்கு இவளுக்கு எடுத்து சொல்லு... பத்திரமா போங்க... வீட்டுக்கு போனதும் போன் பண்ணுங்க என்ன...” நல்ல தோழியாய் அக்கறையுடன் உரைத்தவள் வீட்டிற்கு புறப்பட்டாள்.



வீட்டிற்கு வந்ததும் வழியில் எதிர்பட்ட அண்ணியிடம் கூட பேச்சு கொடுக்காது தன் அறையினுள் நுழைந்து கதவை மூடி தாளிட்டவள் கதவிலே சாய்ந்து நின்று கொண்டாள்.



மறந்த ஒன்று என்பதை விட மறக்க வேண்டும் என நினைத்த ஒன்று மீண்டும் நினைவு வந்ததில் பேதை பெண்ணவள் துவண்டு போனாள். நெஞ்சுக்குள் போர் முரசு கொட்டுவது போல் இருந்தது.



எத்தனை முயன்றும் மறக்க முடியாமல் தவித்து இப்போது தான் கொஞ்சமாய் மீண்டிருந்தாள். அது கூட அந்த கடவுளுக்கு பொறுக்கவில்லை போலும்... நினைவு படுத்தி விட்டானே.. கண் மூடி நின்றவளின் விழியில் இருந்து கண்ணீர் சொரிந்தது. துடைக்கும் எண்ணம் கூட இல்லாமல் கட்டிலில் வந்து விழுந்தவளின் மனமோ அந்த வார்த்தைகளை கூறியவனின் நினைவை கனத்த மனதுடன் அசைபோட்டது.



@@@கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன்பு..



மாளிகை இல்லாவிடினும் அழகாய் வடிமைக்கப்பட்ட மாடி வீடு. தோட்டம் முழுவதும் வண்ண மலர்களாலும் தோரணங்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க வீடும் அதே தோரணையில் அழகாய் அலங்கரிக்கப்பட்டிருந்தது.



வீடு முழுவதும் அலங்காரத்திற்காய் சிகப்பு பிங்க் என விதவிதமான திரைச்சிலைகள் தொங்கவிடப்பட்டிருக்க அதே நிறத்தில் பலூன்களும் தன் பங்குக்கு தொங்கிக் கொண்டிருந்தன. இடையிடையே மலர் தோரணங்கள் சொருகி இருக்க வீடு முழுவதும் மின் விளக்குகளின் ஒளியில் பிரகாசமாய் மின்னியது. பார்க்குமிடமெல்லாம் கண்ணை கவர்ந்தது.



நிச்சயதார்த்த விழா இனிதே நடந்து முடிந்திருக்க மணமக்களின் வழக்கப்படி மாப்பிள்ளை வீட்டிற்கும் பெண் வீட்டிற்கும் இடையே நடைபெறும் சங்கீத் பங்சன் ஆரம்பமாகி இருந்தது.



"ச த நிரி ஆ… ச த ஆ…
கமதநித நிரிச நிபக ரிகமகப ரிகபச
கம தத நிநி சநிதப ரிகமதப ரிச ஆ… ஆ…
கம தத நிநி நிகரிகசரிச ஆ… ஆ… ஆ…"




மருதாணியிட்ட கைகள் அதில் குடிகொண்டிருந்த வளையல்கள் துள்ளிக்குதித்து ஓடிய கால்கள் அதில் ஒய்யாரமாய் வீற்றிருந்திருந்த கொலுசுகள் அவளின் சிவந்த மேனியை எடுப்பாய் தழுவிய டிசைனர் லெஹெங்கா என அழகு தேவதையாய் மின்னினாள் மதுபாலா.



தமையனின் திருமணத்தில் கலகலப்புடன் வலம் வந்தவளை உறவுக்கார பெண்கள் மாப்பிள்ளை வீட்டு சார்பாய் நடனமாட சொல்லி வற்புறுத்த சிறு சிணுங்கலுடன் ஆடிக் கொண்டிருந்தவர்களுடன் இணைந்து கொண்டாள்.



"கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு
வினாவும் வினாவும் உன் நெஞ்சில் இருக்கு
கனாவே கனாவே உன் கண்ணில் இருக்கு
வினாவும் வினாவும் உன் நெஞ்சில் இருக்கு




வீட்டுக்குள் மான்கள் படையெடுத்தோட
பச்சை கிளி கூட்டம் பாட்டுக்கள் பாட
திருமண வீடு திக்கு முக்கு ஆட"






சுற்றி இருந்தவர்கள் கை தட்டி ஆர்பரிக்க பாலாவிற்கு வெட்கம் பிடுங்கி தின்றது. ஒற்றை கை கொண்டு தன் முகத்தை மறைத்துக் கொண்டவள் ஒளிந்து மறைந்து ஓடிக் கொண்டிருந்த சித்தி பெண்ணை இழுத்து தன்னுடன் நிறுத்திக் கொண்டாள்.



"குயிலே நடத்து ஒரு குட்டி கலாட்டா

சுவை இல்லை ஒரு சண்டை இல்லாட்டா
துள்ளி வரும் ஆறு என்றும் தேங்குவது இல்லை


திருமண வீடு என்றும் தூங்குவது இல்லை
பாட்டிகள் எல்லாம் தாவணி போட
தாத்தாக்கள் எல்லாம் ஜீன்ஸ் உடன் ஆட
வாண்டுகள் எல்லாம் கை கொட்டி பாட"




ஆடலும் பாடலும் கைவந்த கலையாயினும் சுற்றியுள்ள சுற்றத்தார் முன்பு சிறு வெட்கத்துடன் அவள் கைகளை சுழற்றி மயக்கும் மோகன புன்னகையுடன் ஆடிக் கொண்டிருந்தவளை விட்டு கண்களை அகற்ற முடியாமல் தானும் அவர்களுடன் இணைந்து அவளருகில் நெருங்கி போவதும் விலகி வருவதுமாய் மதுவை சுற்றும் வண்டினை போல் மாதுவை சுற்றி வந்தது அந்த ஆண் வண்டு.



ஆறடிக்கும் சற்று குறைவான உயரத்தில் தான் இருந்தான். சிரிக்கும் கண்களும் சிந்தும் இதழ்களும் அவனை அழகாய் காட்டியது. மாநிறத்து மேனி. அவனின் வசீகரிக்கும் புன்னகைக்கு முன் சற்று மங்கித்தான் போனது. காதில் சிறு கடுக்கன். கழுத்தில் பாசிமணி மாலை. அதை மறைத்திருந்த குர்தியின் சால்வை. கையில் கருப்பு பட்டிகள் அழகுக்காய்.



"ஊரும் உறவும் இங்கு ஒன்று பட்டாலே

வீடு வாசல் அது ரெண்டு படாதோ
தேனின் முகத்தில் ஒரு ஈ ஒட்டாதே
எங்கள் அகத்தின் துயர் நில்லாதே
காற்றுக்கு கவலை ஓ… பட தெரியாதே
மருதானி பூசி மஹாராணி ஆவோம்
வர்ணங்கள் கோர்த்து வானவில் செய்வோம்

(ஓ) வாழை மரம் சேலை கட்டாதோ கட்டாதோ
வாசலெல்லாம் விண்மீன் கொட்டாதோ கொட்டாதோ


நாதஸ்வரங்கள் மழை கொட்டாதோ கொட்டாதோ
நாடி நரம்பில் இன்பம் சொட்டாதோ சொட்டாதோ
ஆகாயம் கையில் எட்டாதோ எட்டாதோ
தெய்வம் வந்து கதவை தட்டாதோ தட்டாதோ
தேவதைகள் பல்லாண்டு பாடாதோ பாடாதோ
திருமணமே சொர்கம் என்று ஆகாதோ ஆகாதோ


விண்ணும் மண்ணும் கூடி (ஓ) வாழ்த்தட்டுமே

மன மக்கள் வாழ்க மங்களம் வாழ்க…


மன மக்கள் வாழ்க மங்களம் வாழ்க…"



தமயனை பார்த்து குறும்பாய் சிரித்து அண்ணியை சொந்த்துடன் கிண்டல் செய்து இருவருக்கும் கண்ஜாடை காட்டி திருமண விழாவுக்கான குதூகலத்துடன் ஆடிப்பாடி கொண்டிருந்த பாலாவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யன். அவளின் கடைக்கண் பார்வைக்காக தவமிருந்தான்.



‘ஏய் திருடி... என்ன கொஞ்சம் பார்த்தா தான் என்ன...’ அவன் இதயத்தை கொய்தவளை செல்ல பெயர் வைத்து ஆசையுடன் அவள் பார்வைக்காய் காத்திருந்தான்.



இவனின் தவிப்பு அவளை எட்டியதோ இல்லை எதேர்ச்சியாய் திரும்பினாளோ இவன் இருந்த புறம் திரும்பிய பாலா அவனிற்கு அருகில் நின்றிருந்த அத்தை மகளை பார்த்து கையாட்டி சிரித்து வைத்தாள்.



முத்துப்பல் வரிசை போல் அழகாய் மின்னிய அவளின் தெத்து பற்களும் புன்னகை சிந்தும் போது மின்னல் போல் சிதறி மறைந்த கன்னத்து குழியும் நிமிடத்தில் அவனை நிலை குலைய செய்ய போதுமாய் இருந்தது.



‘ஹையோ கொல்றாளே...’ இடது பக்கமிருந்த இதய பகுதியை அவஸ்தையுடன் தடவிக் கொடுத்தான்.



அத்தை மகளை பார்த்த வண்ணம் கைகளை தட்டிக் கொண்டே அவளருகில் வர இவளின் வருகையில் ஆர்வமாய் காத்திருந்தவன் இவள் நெருங்குகையில் மேனியில் கமிழ்ந்த வாசனையில் சொக்கிக் போனான்.



“இங்க என்ன பண்ற நிஷா, வா வந்து எங்க கூட ஜாயின் பண்ணிக்கோ...” கை பிடித்து இழுத்து செல்ல முயல அவள் மறுக்க இவள் முறைக்க, அவை மொத்தமும் அவனுள் அழகுற சேமிக்கப்பட்டது.



“என்னடி... எதுக்கு இப்பிடி பண்ற.. வர போறியா இல்லையா...” பற்றிய கையை விடாமல் இழுக்க அதை செயல்படுத்த முடியாமல் விரித்து விட்டிருந்த துப்பட்டா நழுவி விழுந்து வைக்க சிறு சுனங்களுடன் அதை விசிறி தோளில் போட்டுக் கொண்டாள்.



அதுவோ ஆசை நாயகனின் முகத்தில் பட்டு அவனை மெய்மறக்க செய்து அழகிய சதியாய் அவன் கழுத்து மறைவில் கிடந்த பாசி மணியில் சிக்குண்டது.



பாலா, நிஷாவை இழுத்துக் கொண்டு முன்னேற இவன் அவளின் மெல்லிய துப்பட்டாவினை விடுவிக்க மனமில்லாமல் அவளின் இழுப்புக்கு செல்ல ஆண் மகனின் அசட்டு காதல் அழகாய் அரங்கேறியது பல பேர் முன்னிலையில்.



வெளிவேலையாய் ஆர்யனை தேடிய அவன் மாமன் மகன் ரித்விக் அவன் செல்லும் கோலத்தை கண்டு தலையில் அடித்தவனாய் அவனருகில் சென்று முதுகில் ஒரு போடு போட்டான்.



“மச்சான்... என்ன பண்ற.. உன் காதல் சீனை இங்கயும் விட்டு வைக்கலையா...”



அதில் சுய உணர்வுக்கு மீண்டவன் தான் நின்ற கோலத்தை கண்டு தலையில் அடித்தவனாய் அசட்டு சிரிப்புடன் அவனை பார்த்தான்.



அதற்குள் முன்னே சென்ற பாலா பின்னால் யாரோ இழுப்பது போல் இருக்க நிலை தடுமாறி சடுதியில் நிலையாய் நின்று கொண்டவள் பின்னால் திரும்பி பார்த்தாள்.



ரித்விக்கின் அதட்டலில் தன்னில் மாட்டிக் கொண்டிருந்த அவளின் துப்பட்டாவை விடுவித்துக் கொண்டிருந்த ஆர்யன் மிருதுவாய் அதை விடுவித்து நிமிர அறியா பார்வையுடன் அவனையே புரியாமல் புருவ சுழிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் பாலா.



"போற போக்கில் ஒரு லுக்க உட்டு
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே
பாரபட்சமா காமம் கூட வச்சி செஞ்சிட்டாளே
ஃபர்ஸ்ட்டு லுக்க வச்சி பொக்குன்னுதான்
ஒன்னு வச்சிட்டாளே ஒன்னு வச்சிட்டாளே
லவ்வு புக்கு ஒன்னு நெஞ்சிக்குள்ள ஓப்பன் செஞ்சிட்டாளே
ஓரப்பார்வையாளே என்னை செஞ்சிட்டாளே
என்னை செஞ்சிட்டாளே என்னை செஞ்சிட்டாளே
காதல் அம்பு உட்டு என்னை செஞ்சிட்டாளே
என்னை செஞ்சிட்டாளே வச்சி செஞ்சிட்டாளே "




இத்தனை நேரம் அவள் பார்வைக்காய் தவமிருந்தவன் அவள் தன்னை பார்த்தும் ஒரு நொடி திகைத்து போனவன் மறுநொடி கவர்ச்சியாய் புன்னகை சிந்தினான்.



அதை பார்த்து சிறு மருட்சியுடன் இதழ் சுழித்தவள் அவன் கையில் இருந்த தன் துப்பட்டாவை பிடித்து இழுத்துக் கொண்டு திரும்பி திரும்பி அவனை பார்த்த வண்ணம் தன் வீட்டினருடன் சென்று நின்று கொண்டாள்.



மறுநாள் திருமணத்தின் போதும் இதே கதை தான். அவள் போகுமிடமெல்லாம் நிழலாய் அவளை பின்தொடர்ந்தான். முதலில் அதை அறியாதவள் அதன் பின்பே அவனின் செயலை கண்டு பயத்துடன் மணமேடையில் நின்று கொண்டிருந்த தன் குடும்பத்தினருடன் நின்று கொண்டாள்.



“பாலா ஸ்டோர் ரூமில் வெள்ளிகின்னம் ஒன்னு இருக்கு எடுத்திட்டு வாடா...” கலையரசி உரைக்க,



“ம்ச்... மா... இப்போவும் என்னைய சும்மா இருக்க விட மாட்டியா...” சிணுங்கிக் கொண்டு மறுத்தாள்.



“அதே தான் நானும் சொல்றேன்... இப்போ கூட ஒழுங்கா ஒரு வேலை பார்க்க மாட்டியா...” மகளிற்கு மட்டும் கேட்கும் விதத்தில் கோபமாய் முணுமுணுக்க, அதில் பல்லை கடித்தவள் காலை தரையில் உதைத்துக் கொண்டு ஸ்டோர் ரூம் நோக்கி சென்றாள்.



‘இதுக்குள்ள எங்கேன்னு போய் நான் தேடுவேன்... இந்த அம்மாவ...’ சிறு எரிச்சலுடன் அடுக்குகளில் தேடிக் கொண்டிருந்தவளின் முன் திடுமென குதித்தான் ஆர்யன்.



முதலில் யார் என தெரியாமல் பயத்தில் அலற போனவளின் வாயை தன் கரம் கொண்டு மூடியவன் “ஷ்.. ஷ்.. நான் தான்...” என்க,



“நீ தான்னா... அமெரிக்கா ப்ரெசிடெண்டா...” பயத்தில் இருந்தவள் வாயை மூடியிருந்த அவன் கரத்தை தட்டி விட்டு எரிச்சலுடன் மொழிந்தாள்.



சட்டென யாரிடத்திலும் பேசிறாதவள் அவனிடத்தில் தன் இயல்பை காட்டி விட்டாள்.



அதை கேட்டு புன்னகை சிந்தியவன் “அப்பிடியும் வச்சிக்கலாம்...” குறும்பாய் சிரிக்க,



அதில் கோபம் கொண்டவளுக்கு தற்போது பயம் பிடித்துக் கொண்டது. வெளியில் திருமணத்திற்கு வருகை தந்தவர்கள் இருக்க இந்த அறைக்குள் அந்நிய ஆணுடன் தான் இருப்பதை பார்த்தால் அவ்வளவு தான்.. சங்கூதிடுவாங்க... மனதிற்குள் பயத்துடன் புலம்பியவள் அவனை பயத்துடன் பார்த்தாள்.



அதை பார்த்தவனுக்கு ஏனோ திடுமென விபரீதமாய் அவளை சீண்டும் ஆசை முளைத்தது.



பார்த்து முழுதாக சில நாட்கள் கூட முடியாத நிலை தான். ஆனால் அவன் மனதில் அழகுற பதிந்து விட்டாள். மறக்க முடியவில்லை. கனவிலும் நனவிலும் பெரிதும் இம்சிக்கிறாள். அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன் அவள் இந்த பக்கம் வரவும் தானும் அவளுடன் உள்ளே நுழைந்து விட்டான். காதலை சொல்லிக் கொள்வோம் என்ற எண்ணம்.



முன்பிருந்த தைர்யம் போய் சிறு பயத்துடன் “ப்ளீஸ் கொஞ்சம் வெளிய போறீங்களா... யாராச்சும் பார்த்தா தப்பாகிடும்...” இதழை கடித்துக் கொண்டு முணுமுணுத்தாள். முகத்தில் வியர்வை துளிகள் கூட அரும்பி விட்டது.



“ஏன் பார்த்தா என்ன... இதில் தப்பாவதற்கு என்ன இருக்கு...”



“இல்ல... ப்ளீஸ்...” கண்கள் வேகமாய் சுழன்று அறைக்கதவை நோட்டமிட்டது. யாராவது வந்து விடுவார்களோ என்ற பயம்.



“முடியாதுன்னா...” கண்சிமிட்டி கூறியவன் மெதுவாய் அவள் புறம் நகர்ந்தான்.



அதில் முகம் வெளிற அதிர்ந்த நெஞ்சத்துடன் பின்னால் நகர்ந்தாள். அவன் முன்னேற இவள் பின்னால் நகர ஒரு கட்டத்தில் அங்கிருந்த மர அலுமாரி அதற்கு மேல் அவளை நகர விடாமல் தடுத்து அதில் ஒன்ற செய்தது. அச்சத்தில் பல்லி போல் அதில் அப்பிக்கொண்டு நின்றாள்.



அதில் வெற்றி சிரிப்புடன் சிறு அடி இடைவெளியில் வந்து நின்றவன் அவளை பார்த்து கண்சிமிட்ட அவளோ அச்சத்தில் அங்கிருந்து விலகி செல்ல பார்க்க அதை தடுக்கும் விதமாய் தன் இடது கரத்தை அலுமாரியில் ஊன்றிக் கொண்டான்.



அதில் மிரண்டவள் மறு பக்கமாய் செல்ல முயல வலது கரம் கொண்டு அதையும் அடைத்து விட்டான்.



“எ..என்ன.. ப்..ப..பண்றீங்க... நான் போகணும் வழி வி..விடுங்க...” வாய் குழறியது.



“நான் என்ன பண்ணேன்... ஒன்னும் பண்ணவில்லையே... சும்மா தானே இருக்கேன்... நீ வேணா போய்க்கோ...” தன் மனதிற்கு பிடித்தவள் தன் கை கிட்டும் தூரத்தில்; அவள் வாசனையை முகரும் தூரத்தில் நிற்கிறாள் என்ற எண்ணமே அவனை மயக்கம் கொள்ள செய்ய மயக்கத்துடன் கூறினான்.



அவனின் பேச்சில் அவனை முறைத்தவள் ‘இப்பிடி நந்தி மாதிரி வழி மறிச்சு நின்னா நான் எப்பிடி போறதாம்... அண்ணியோட தம்பின்னு பார்க்காம கன்னத்தில ஒரு அப்பு அப்பினா தான் சரி...’ கோபமாய் மனது முணுமுணுத்தது.



அதற்குள் அறை வாசலில் பேச்சுக் குரல்கள் கேட்க இன்னும் வேகமாய் நெஞ்சம் அதிர அதற்கு மேல் தாமதிக்காமல் தன் வெண்டை பிஞ்சு விரல் கொண்டு ஆண் மகனின் வலுவான மாராப்பை பிடித்து உந்தி தள்ளினாள்.



மயக்கத்தில் இருந்தவன் எதிர்பாராத செயலில் நிலை தடுமாற அதை சாதகமாக்கி அவனிடமிருந்து விலகியவள் அங்கிருந்து நகர அவள் பிரிந்து செல்வதை விரும்பாதவனாய் அவளை தக்க வைத்துக் கொள்ள துடிக்கும் இதயத்தின் ஓலத்தை தடுக்க முடியாமல் தன்னையும் மீறி முன்னேறியவளின் கை பிடித்து இழுத்தான்.



அதை எதிர்பாராதவள் இழுத்த வேகத்தில் அவனின் தேக்கு மர தேகத்தில் தன் இளமை மோத திருமணத்திற்காய் அணிந்திருந்த பட்டு வேஷ்டி சட்டையில் மேல் பட்டனை திறந்து விட்டிருந்தவனின் முடிகள் அடர்ந்த பரந்த மார்பில் தன் செவ்விதழ் மோத நிலை குலைந்து நின்றாள்.



முதல் தடவையாய் அறிந்த ஆணின் ஸ்பரிசம் அவளை எங்கோ ஆழ்கடலுக்குள் அமிழ்த்தியது போல் இருந்தது. மூச்சு திணறலாய் வெளிப்பட்டது.



பட்டும்படாமலும் அழுந்த மோதிய அவள் இதழ் முத்தம் அவனை பற்றியெரிய செய்ய இதுவரைக்கும் பல பெண்களின் பின்னால் சுற்றி பல பேரிடம் காதல் வசனம் பேசி பொழுதை கழித்தவன் இப்போது முதல் தடவை தன் மனதை தொட்ட பெண்ணின் ஸ்பரிசத்தில் தன்னை மறந்து கிறங்கிப்போய் கிடந்தான்.



“முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் ளிப்பு எனக்கு பாணி பூரி


குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி
முத்தம் கொடுத்த மாயக்காரி
உன் ளிப்பு எனக்கு பாணி பூரி
குச்சி ஐஸா கரைஞ்சு போறேனே
ஹையோ ஜாலி
பேபி என்ன உசுப்புற உசுப்புற
ஸ்வீட்டி நெஞ்ச பெசையுறியே
மூணாம் பிறை உதட்டுல உதட்டுல
மயக்குறியே மனச இப்போ
கெடுக்குறியே அடடடா...”



சிதறும்....

 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'சிதற வைத்த செம்பாவையாள்'



அத்தியாயம் 03


qtRDxBZ__400x400.jpg


“பாலா கதவை மூடிட்டு உள்ள என்னடி பண்ற...” கதவு தட்டும் ஓசையுடன் அன்னையின் குரலும் கேட்க தலையை உலுக்கிக் கொண்டவள் “என்னம்மா...” எரிச்சல் குரலில் சீறியபடி கதவை திறந்தாள்.



“எதுக்கிடி கத்துற வெளிய சொந்தக்காரங்க வந்திருக்காங்க நீ பாட்டுக்கு ரூமுக்குள்ள அடைஞ்சி இருந்தா வந்தவங்க என்ன நினைப்பாங்க... ட்ரெஸ் மாத்திட்டு வெளிய வா அடவச்ச கோழி மாதிரி ரூமுக்குள்ளேயே அடைஞ்சி கிடக்காம...” எரிந்து விழுந்தவர் சிறு முறைப்புடன் சென்று விட்டார்.



சட்டென கண்களில் சூழ்ந்து கொண்ட கண்ணீரை பெரும்பாடு பட்டு உள்ளிழுத்து கொண்ட பாலா முகத்தில் புன்னகையை படர விட்டுக் கொண்டாள்.



சில வேளைகளில் வயதுக்கு மீறிய முதிர்ச்சியுடன் இருப்பவள் சிறு நேரங்களில் குழந்தையாய் மாறி விடுவாள். சட்டென உணர்ச்சிவசப்படும் குழந்தை. நொடியில் கட்டுக்குள் கொண்டு வரும் வித்தையும் கை வந்த கலை. இப்போதும் அது தான் கைகொடுத்தது.



குளியலறைக்குள் நுழைந்து முகம் கழுவி வந்தவள் அலுமாரியை திறந்து எதை உடுத்துவது என குழம்பிப் போய் நின்றாள்.



“இந்த ரெட் கலர் உனக்கு ரொம்ப மேட்சா இருக்கு...” செவியில் அவள் மனதை சலனப்படுத்தியவனின் குரல் அபஸ்வரமாய் ஒலித்தது.



காதல் என்ற உணர்வே இல்லாமல் தான் இருந்தாள். தெளிந்த நீரோடை போல். அதை குலைப்பதற்காவகே வந்தவன் போல் அவள் மனதை அம்பு விட்டு அசைத்து விட்டானே அவன். காதலில் நம்பிக்கையே இல்லாமல் இருந்தவளுக்கு தற்போது அந்த காதல் தனக்கும் வராமலே இருந்திருக்கலாம் என்றே தோன்றியது.



மீண்டும் அந்த நாள் நினைவு.



அவள் அண்ணன் ஆதியின் மனைவியான அதாவது அவளது அண்ணி மீராவின் வீட்டில் இருந்து விருந்திற்கு அழைத்திருக்க கலையரசியும் மார்த்தாண்டமும் உறவினர்கள் வீட்டிலிருப்பதால் வரமுடியாது போக சம்பிரதாயத்திற்காய் மகன் மருமகளுடன் பாலாவையும் அனுப்பி வைத்தனர்.



அவளுக்குமே உள்ளுக்குள் சிறு ஆசை. அவளையும் அறியாமல் அவனை பார்ப்போமா எனும் கள்ளத்தனம். தன்னை நினைத்தே ஆச்சரியமும் கூட. காரணம் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாய் அவள் பின்னே ஒருத்தன் நாயாய் பேயாய் அலைந்து கொண்டிருக்க அவனை நிமிர்ந்தும் பாராதவள் இவனை எதற்காய் தேடுகிறோம் என துடிக்கும் இதயத்துடன் தனக்குள்ளே கேள்வி எழுப்பிக் கொண்டாள்.



காதலை மதிப்பவள் தான். ஆனால் தான் என்று வரும் போது அவளுக்கு அந்த காதல் வெறும் பொய்யாய் தான் தோன்றியது. பெற்றோர்களை துறக்க செய்யும் காதல் என்ன காதலோ என்ற உள்ளூர நினைப்பு கொண்டவள்.



அதற்கு மாறாய் அவளது வயது அவளையும் அதில் தள்ள முயன்றது. அதில் விளைந்த ஈர்ப்பு அவன்பால் அவளை ஈர்த்து தொலைத்தது.



“பாலா எப்பிடிம்மா இருக்க வாங்க.. மாப்பிள்ளை வாங்க... மீரா மாப்பிள்ளையையும் பாலாவையும் வீட்டுக்குள்ள அழைச்சிட்டு வாம்மா... சம்பந்தியும் வந்திருக்கலாம்...” மீராவின் தாயாரான மங்கை அவர்கள் மூவரையும் உபசரித்த வண்ணம் சமையல் அறைக்குள் சென்று ஜூஸ் எடுத்து வந்து கொடுக்க வரவேற்பறையில் இருந்த இருக்கையில் அமர்ந்து மூவரும் பருகினர்.



சிறிது நேரத்தில் பாலா வீட்டினுள் இருக்க முடியாமல் தோட்டத்து பக்கமாய் சென்றாள். இதுவரைக்கும் அவள் அண்ணியின் வீட்டுக்கு இரண்டொரு முறை தான் வந்திருக்கின்றாள். அதிலே மீராவின் குடும்பத்தினருக்கு பாலாவை பிடித்து போய்விட்டது. அவளுமே பாசக்காரி என்பதால் சட்டென அவர்களுடன் ஒண்டிக்கொண்டாள்.



தோட்டத்து பூச்சாடிகளில் ரோஜாக்கள் மலர்ந்து இருக்க அந்த சிகப்பு ரோஜாக்களை மென்மையாய் வருடிக் கொடுத்தாள். மென்மையான அதன் ஸ்பரிசம் அவளுக்கு அவனை நினைவு படுத்தியது.



இருந்தும் அதை மறைத்துக் கொண்டு ரோஜாக்களை பார்த்திருந்தவளின் காதில் “இந்த ரெட் கலர் உனக்கு ரொம்ப மேட்சா இருக்கு...” சிறு இடைவெளி விட்டு அவள் மேல் படாத தூரத்தில் நின்று உரைத்தவனின் குரல் அவளை அதிர செய்ய பயத்தில் துள்ளி குதித்தாள்.



நெஞ்சுத்துடிப்பு அபரிதமாய் இருக்க முகத்தினில் துளியாய் வியர்வைகள். பனி படர்ந்த ரோஜா இதழ்கள் போல். நெஞ்சத்தின் துடிப்பிற்கேற்ப அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு அவளது செப்பு இதழ்களும் துடித்தது.



துடிக்கும் இதழ்கள் அவனை வா வாவென அழைப்பது போல் இருக்க அவசரமாய் விலகி நின்று கொண்டான். முதல் தடவை அவளை தொட்டது போல் மீண்டும் தொட முயற்சிக்கவில்லை. அவளின் முதல் ஸ்பரிசமே ஆயுளுக்கும் போதுமானதாய் இருந்தது ஆடவனுக்கு.



இவனின் வருகையை எதிர்பாராதவள் விழிகளை விரித்து கணநேரத்தில் அவனை தன் கண்களுக்குள் நிறைத்துக் கொண்டாள். ஒரு சில நொடிகள் தான்... இருந்தும் ஆழமாய் பதிந்து விட்டான்.



சடுதியில் தன் பார்வையை மாற்றிக் கொண்டவள் அங்கிருந்து செல்ல முயற்சிக்க “மது ப்ளீஸ்..” போக விடாமல் கை நீட்டி தடுத்தான்.



“டோன்ட் கால் மீ மது...”



“சரி கூப்பிடல... பேபின்னு சொல்லட்டுமா... இல்ல ஸ்வீட்ஹார்ட்... அதுவும் இல்லன்னா ஹனி... ம்... அது தான் உனக்கு பொருத்தமாவும் இருக்கும்... இனி நான் உன்னைய ஹனி ன்னு தான் கூப்பிடுவேன்...”



“லூசுத்தனமா உளராம வழி விடுங்க... நான் போகணும்...”



“ஏய் ஹனி... நான் என்ன உன்னைய கட்டிபிடிச்சிருக்கேனா... நான் இவ்ளோ தூரம் தள்ளி தான்மா நிற்கிறேன்...” ஒரு அடி இடைவெளியை நூறு மீட்டர் இடைவெளி அளவுக்கு சொல்லியவனை பார்த்து கடையோரத்தில் பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அரும் பாடுபட்டு வெளி வராமல் காத்தவள் அவனை முறைத்து வைத்தாள்.



அவளின் முறைப்பை கூட ஆசையாய் ரசித்தவன் ‘இப்பிடி முறைக்கும் நீ ஒரு நாள் என்னை காதலுடன் பார்ப்பாய் ஹனி... அந்த நாளுக்காக நான் காத்திருக்கேன்...’ அவஸ்தையுடன் எண்ணிக் கொண்டான். காதல் கொடுத்த அவஸ்தை அது.



அதை நினைத்து பார்த்தவளின் கண்கள் குளம் கட்டியது. உடைப்பெடுக்காமல் உள்ளிழுத்து கொண்டாள். வேண்டாவெறுப்புடன் சிகப்பு நிற சுடிதாரை கையில் எடுத்தவள் அதை மென்மையாய் தடவிக் கொடுத்தாள். ஒற்றை துளி கண்ணீர் அதில் பட்டு சிதறிப்போனது. அவள் மனதில் உதித்த காதலை போன்று.



அதற்குள் கலையரசி மீண்டுமொருமுறை குரல் கொடுக்க அதற்கு மேலும் தாமதிக்காமல் அந்த ஆடையை உள்ளே வைத்தவள் கைக்கு கிட்டியதொன்றை எடுத்து அணிந்து கொண்டு வெளியில் வந்தாள்.



வெளிர் நீல நிறத்தில் இருந்த சுடிதார் வெகு பொருத்தமாய் அவள் உடலை தழுவி இருந்தது. நீண்ட கார் கூந்தலை தூக்கி போனி டெயில் போட்டிருந்தாள். அதற்கும் அடங்க மறுத்த சில முடிகற்றைகள் அவள் கன்னத்தில் இடம்பிடித்து ஒதுங்கிக் கொண்டன அழகுக்காய். ரூஜ் தடவாமல் சிவந்து கிடந்த கன்னங்களும் விழியில் தீட்டியிருந்த மையும் அழகுக்கலை நிபுணர்களின் கைவண்ணமின்றியே மிளிரச் செய்திருக்க அழகு தேவதையாய் நடந்து வந்தாள்.



அந்தி சாயும் நேரத்தில் திறந்திருந்த ஜன்னல் வழியால் வந்த மஞ்சள் பூசிய சூரிய ஒளியின் கலவையில் அவள் அழகு மேலும் கூடித்தான் போயிற்று.



அதே நேரம் வீட்டிற்குள் நுழைந்தான் ஆர்யன். நேர் எதிரே இருவரும். யாரை பார்க்க கூடாதென மனதிற்குள் சபதமெடுத்திருந்தாளோ விதி மீண்டும் அவனை அவள் கண் முன்னே நிறுத்தி இருந்தது. சற்று நேரத்தின் முன் தன் விழிகளில் இருந்து வந்த கண்ணீருக்கு இவன் தகுதியானவன் தானா என்று அவனை பார்த்த வண்ணம் எண்ணியவளுக்கு அது இல்லை என்று தான் தோன்றியது.



ஆயிரம் பேரை காதலித்தவனுக்கு தானும் ஆயிரத்தில் ஒருத்தி தான் என்ற எண்ணமே அவளை சுக்கு நூறாய் உடைக்க மறக்க நினைத்தும் முடியாமல் உள்ளத்தில் பூத்த முதல் காதல் ஆழமான வடுவாய் மீண்டும் அவள் நெஞ்சத்தை கிழித்தது.



அந்த வடுவினால் உண்டான வலி காதலாய் பார்க்க வேண்டியவனை வெறுப்புடன் தழுவியது. தன் கண்ணீருக்கு சிறிதும் தகுதியற்றவன் என்ற அகந்தையுடன்.



அவனோ சிறிதும் சலனமில்லாமல் அவளை பார்த்து தன் ஆக்மார்க் புன்னகையை சிந்தியவன் அவளை பார்த்த வண்ணமே வரவேற்பறையில் இருந்த சோபாவில் போய் அமர்ந்து கொண்டான்.



அவனை பார்த்த பின்பு தான் அவளுக்குமே இன்றைய உறவினர்களின் வருகைக்கான காரணம் நினைவில் வந்தது. அவளது அண்ணி மீராவின் வயிற்றில் அவர்களது வீட்டு வாரிசு உயிர்பெற்றிருக்கிறது அல்லவா.. அதை எப்படி மறந்து போனாள்.



எல்லாம் இவனால்... அவளையும் மீறி அவள் பார்வை அவன் புறம் திரும்பியது. அவனும் அவளை தான் பார்த்திருந்தான். அதை பார்த்து படக்கென தலையை திருப்பிக் கொண்டவள் அண்ணனின் அறைக்குள் நுழைந்து அண்ணியை வெளியே அழைத்து வந்தாள். அவளது பிறந்த வீட்டினர் தங்கள் மகளின் தாய்மையை அறிந்து பூரிப்புடன் வந்திருந்தனர்.



அவர்கள் ஒன்றாய் ஐக்கியமாகி விட அங்கிருக்க முடியாமல் சமையல் அறைக்குள் நுழைந்தவளை பார்த்து “என்னடி ஆடி அசஞ்சு நிக்கிற போ போய் வந்தவங்களுக்கு ஸ்நாக்ஸ் எடுத்திட்டு போய் கொடு...” என்று அங்கிருந்த தட்டுக்களை காட்ட மீண்டும் அவனை பார்க்க வேண்டுமா என வெறுப்புடன் எண்ணிக் கொண்டவள் தாயின் சொல்லை மீற முடியாமல் அதை கைகளில் ஏந்திக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தவள் அங்கு அவனை காணாது நிம்மதி பெருமூச்சுடன் ஒவ்வொருவராய் கொடுத்துக் கொண்டு வந்தாள்.



அதுவும் பொறுக்காத கடவுளோ மீராவின் தாயாரான மங்கையின் வாயால் அவளுக்கு வேட்டு வைத்தது.

“பாலாம்மா... ஆர்யா போன் பேசிக்கிட்டே வெளிய போய்ட்டான் நீ இதை எடுத்திட்டு போய் அவனுக்கு கொடும்மா...” என அன்புக்கட்டளை இட, அதை மறுக்க முடியாமல் “சரிங்கத்த...” ஒட்ட வைத்த சிரிப்புடன் தலையசைத்தவள் வெளியில் அவனை தேடி சென்றாள்.



‘போன் பேசிக்கிட்டே போனானாமா எல்லாம் சுத்த டிராமாவா தான் இருக்கும் அவனே பொல்லாத பிராடு... அவனுக்கு நடிக்கவா கத்து கொடுக்கணும்... பிராடு... பிராடு...’ இருக்கும் கோபத்தை எல்லாம் வைத்து அவனை வசைபாடியவள் அவனை காணாது சுற்றும் முற்றும் தேடினாள்.



“என்னைத்தான் தேடிக்கிட்டு இருக்கியா...” பின்னால் இருந்து அவன் குரல் கொடுக்க ஒரு நொடி அவன் வசீகரமான குரலில் நெஞ்சம் வேகமாய் அதிர திகைத்து நின்றவள் மறுநொடி அதற்காய் தன்னையே நிந்தித்து கொண்டு அவன் புறம் திரும்பினாள்.



“இப்போ எதுக்காக இந்த டிராமா...” ஏளனமாய் வந்தது அவள் வார்த்தைகள்.



அது புரியாமல் புருவம் உயர்த்தியவன் “என்ன டிராமா... என்ன சொல்றா... எதையும் புரியும் படியா சொல்ல மாட்டியா...”



அவன் என்னமோ அவள் சொல்வது புரியாமல் சாதாரணமாய் தான் கூறினான் ஆனால் அவளுக்கோ அவன் எரிந்து விழுவது போல் இருக்க அவளையும் மீறி மனம் அவனின் குறும்பான பேச்சிற்காய் ஏங்கியது. உடன் சேர்த்து கண்களும் கலங்கியது.



எல்லாமே சில காலம் தானோ என்ற எண்ணம். தாயின் மிகையான பாசம் சிறு வயதில் தான்.. அதன் பின்பு அது கண்டிப்புடன் கூடியதாய் மாறிவிடும். காலத்தை நினைத்த பயத்தினால் கூடிய கண்டிப்பு அது. உடன் பிறந்தவர்களின் பாசம் திருமணம் வரையிலும் தான். அதன் பின்பு அது அவர்களுக்கு உரிமையானவர்களுக்கு சொந்தமாகி விடும். ஒவ்வொன்றும் காலம் செல்ல செல்ல மாறிவிடும் போல என்று எண்ணியவளுக்கு அவன் காதலின் நினைவு வந்தது.



அது வேறு ஒரு அழகிய நங்கையை காணும் வரை தான். அதன் பின்பு அதுவும் மாறிவிடும்.. இந்த உலகில் மாற்றமில்லாத ஒன்றே கிடையாதா... அதை தான் மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது என்று சொல்வார்களோ... துக்கத்துடன் எண்ணிக் கொண்டாள். கலங்கிய கண்களை அவனுக்கு கட்டாமல் மறைத்துக் கொண்டவள் தட்டுகளை அவன் முன்பு நீட்டினாள்.



“எடுத்துக்கோங்க” முன்பும் அவனுடன் சாதாரணமாய் உரையாடியது கிடையாது தான் என்றாலும் அதில் சொந்தம் என்ற உறவு முறைக்கான உரிமை இருந்தது. இன்றோ அவள் குரல் அந்நிய தன்மையுடன் வெளிவந்தது.

நீட்டி வெகு நேரமாகியும் அவன் எடுக்கும் வழியை காணாது சலிப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள். கூர்பார்வையுடன் அவளை தான் அளந்து கொண்டிருதான். ஊசியாய் உடலை தைத்த பார்வை. அதில் அருவருப்புடன் முகத்தை சுழித்து கொண்டாள்.



“உங்க புது காதலியை பார்த்தாலும் தேவலை...” வெடுக்கென கூறிவிட்டாள்.



அதில் கண்களில் சிறு மின்னலுடன் அவளை பார்த்தவன் “உனக்கு எப்பிடி தெரியும்...” அவன் குரலில் என்ன இருந்தது என கண்டுபிடிக்க முடியாத ஒரு குரலில் கூறியவனை வெறுப்புடன் தழுவி மீண்டது அவள் விழகள்.



‘ஊருக்கே உன் காதல் லீலை தெரியும்எனக்கு தெரியாம இருக்குமா... பிராடு... பெரிய காதல் மன்னன் ஜெமினி கணேசன்னு நினப்பு... நினைப்பு தான் பொழப்ப கெடுக்குமாம்...’ வறுத்தெடுத்து விட்டாள்.



“கேட்டேனே...” அவள் பதிலை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் அவன் வினவ,



“எனக்கு தெரிஞ்சதை எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு எந்த அவசியமும் இல்ல... தயவு செஞ்சு இதை எடுத்தீங்கன்னா நான் உள்ளே போய்டுவேன்.. வெட்டியா உங்க கூட பேசிக்கிட்டு இருக்க எனக்கு நேரம் கிடையாது...” வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்பது போல் நறுக்கென வார்த்தைகளை விட,



அதில் முகம் கோண “எனக்கு வேணாம்...” என்றான் ஒரு மாதிரி குரலில்.



‘அப்பிடியா ரொம்ப நல்லதா போய்டிச்சு...’ மனதினுள் எண்ணிக் கொண்டவள் “அதை முன்னாடிய சொல்றதுக்கு என்ன...” சிடுசிடுப்புடன் கூறியவள் தட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.



‘காலை கையை பிடிச்சு எடுன்னு கெஞ்சுவேன்னு நினைச்சிருப்பான்... அதெல்லாம் என்கிட்ட நடக்காது...’ போகும் போது அவனை வெட்டும் பார்வை பார்க்கவும் தவறவில்லை.



“என்னம்மா சாப்பிட்டானா...” மங்கையின் குரலில் அவர் புறம் திரும்பியவள்,



“இல்லத்த... எடுங்கன்னு சொன்னேன் பசியில்ல வேணான்னு சொல்லிட்டாரு...” அதே ஒட்ட வைத்த சிரிப்புடன் கூறியவள் படிக்க வேண்டும் என்ற கூற்றுடன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள். பள்ளியின் இறுதி வருடம்.. பரீட்சை நெருங்கிக் கொண்டு இருந்தது. அறைக்குள் நுழைந்தவள் அவர்கள் கிளம்பும் போது தான் வெளியில் வந்தாள்.



“வரேன் சம்பந்தி... பாலா வரோம்மா... மீரா உடம்ப பார்த்துக்கோ... வேளாவேளைக்கு நல்லா சாப்பிடு... வாந்தி வருதின்னு சாப்பிடாம இருந்திடாத...” மகளின் நலனில் அக்கறை கொண்ட தாயாய் பாசத்துடன் கூற அதை கேட்டு அவரை சொந்தத்துடன் கடிந்து கொண்டார் கலையரசி.



“என்ன அண்ணி இது மீரா உங்களுக்கு மட்டும் பொண்ணில்ல எனக்கு அவ மக மாதிரி தான் நான் பார்த்துக்க மாட்டேனா நீங்க கவலை படாம இருங்க... நாங்க பார்த்துக்கிறோம்...” மங்கையின் கைகளை பற்றி உரிமையுடன் கூறினார்.



அதை புன்னகையுடன் பார்த்திருந்தாள் பாலா. மீரா தன் அத்தையான அம்மாவை நெகிழ்ச்சியுடன் பார்த்தாள். திருமணம் முடிந்த இத்தனை வருடங்களில் ஒரு நாள் கூட அவளை அதட்டியோ திட்டியோ எதுவும் செய்தது கிடையாது. பாலாவை கூட அதட்டி பார்த்திருக்கிறாள் ஆனால் அவளை... அன்பான சொந்தம் கிடைப்பதும் தாய் போன்ற மாமியார் கிடைப்பதும் ஒவ்வொரு பெண்களும் செய்த அதிர்ஷ்டம் தான். தானும் அதிஷ்டக்காரி தான் என சந்தோஷத்துடன் எண்ணிக் கொண்டாள்.



அனைவரும் விடைபெற்று கிளம்பியிருக்க உள்ளே செல்ல முயன்ற பாலாவை “பாலா தோட்டத்து பக்கம் துணி காயவெச்சிருக்கேன்... மழை வர மாதிரி இருக்கு எடுத்து வா...” கூறியவாறு கலையரசி வீட்டினுள் செல்ல,

“ம்மா... என்னால முடியாது... வேணும்னா நீயே போய் எடுத்திட்டு வா... நான் படிக்கணும்...”



“உன்னை யாருடி படிக்க வேணாம்னு சொன்னா.. துணிய எடுத்து வச்சிட்டு நீ தாராளமாய் போய் படிம்மா... உன்னை யார் தடுத்தா... நான் ராத்திரி சமையலை கவனிக்கணும்.. நீ எடுத்து வச்சிட்டு போய் படி...”



‘கலையரசி நீ என்னைய ரொம்ப படுத்திற... ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீ என்கிட்ட வசமா சிக்க போற அன்னிக்கு குருமா பண்ணாம விட மாட்டேன்...’ செல்ல கோபத்துடன் மனதினுள் சுணங்கிக் கொண்டவள் தோட்டத்து பக்கமாய் நடந்தாள்.



போகும் போதே சிறிதாய் தூறல் ஆரம்பித்திருக்க அவசரமாய் அனைத்தையும் கைகளில் அள்ளிக்கொண்டவள் உள்ளே செல்ல எத்தனிக்கும் போது மழை வலுக்க ஆரம்பிக்க அதற்கு மேல் சென்றால் துணிகள் மொத்தமும் நனைந்து விடும் என்பதால் தோட்டத்தினுள் அமைக்கப்பட்டிருந்த சிறு குடிசையினுள் நுழைந்து கொண்டாள்.



அங்கிருந்த கதிரை ஒன்றில் துணிகளை வைத்தவள் அப்போது தான் அப்போது தான் விடுபட்டிருந்த சுடிதாரை பார்த்தாள்.



நாளைய வகுப்பிற்கு செல்வதற்காய் துவைத்து வைக்க கூறி தாயிடம் கொடுத்தது நினைவு வர ‘அச்சோ’ தலையில் தட்டிக் கொண்டவள் மழையை பொருட்படுத்தாமல் ஓடிச்சென்று அதை கைகளில் எடுத்துக் கொண்டவள் மீண்டும் குடிசையினுள் ஓடி வர தொப்பலாய் நனைந்திருந்தாள்.



ஓடிப்போய் ஓடி வந்த வேகத்தில் நெஞ்சாங்கூடு ஏறி இறங்க ஓடிய வேகத்தில் சிலுப்பிக் கொண்டிருந்த கூந்தலில் இருந்து சொட்டு சொட்டாய் இறங்கிய மழைத்துளி நெற்றி வழியாய் தடம்பதித்து அவள் நெஞ்சுக்குழிக்குள் சூடாய் இறங்கிச் செல்ல தொண்டைக்குழி பதட்டத்தில் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்க உடலோடு ஒட்டியிருந்த உடையோ அவள் இளமையை அப்பட்டமாய் வெளிச்சம் போட்டு காட்டியது.



திடீரென அவள் உள்ளே நுழைந்ததையே ஜீரணிக்க முடியாமல் அவஸ்தைபட்டவன் அவள் தோற்றத்தில் மொத்தமாய் நிலைகுழைந்து போனான். அவளின் இளமை அங்கங்கள் அவனுள் உறங்கிக்கிடந்த அவளை காதலித்தவனை தட்டி எழுப்ப விழித்துக் கொண்டவனோ அவளிடமிருந்து பார்வையை திருப்ப முடியாமல் அவள் அழகில் கட்டுண்டு கிடந்தான்.



அந்த சிறு குடிசையினுள் அவனும் இருப்பதை அறியாதவளாய் தலை குனிந்த வாக்கிலே கையில் இருந்த சுடிதாரை அங்கிருந்த கயிற்றில் விரித்து போட்டவள் கூந்தலின் சொட்டு சொட்டாய் இறங்கும் ஈரம் உணர்ந்து முடியை விரித்து விட்டாள்.



அதுவோ மயில் தொகையை ஈரம் படிந்த இடங்களில் அழகாய் படிந்து அவள் அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது. அதை பார்த்தவன் பொங்கி எழுந்த இளமை உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்களால் அவளை விழுங்கிக் கொண்டே மெதுவாய் அவளருகில் நெருங்கினான்.



கொட்டும் மழை அதனுடன் கூடிய காற்று மென்மையாய் அவளை நடுங்க செய்ய இரு கைகளாலும் உடலை குறுக்கிக் கொண்டவள் தலையை சிலுப்பிக்கொண்டே மழையை வேடிக்கை பார்க்க மறுபுறம் திரும்பி நின்று கொண்டாள்.



அவன் இருப்பதோ தன்னை நெருங்கி வருவதோ எதையும் அவள் அறிந்தாளில்லை. மழையோசையின் சத்தத்தின் முன்பு அவனின் காலடியோசை மெலிதாகவே கேட்க அதுவோ அவள் காதில் சென்றடையவில்லை.



தன் மனம் கவர்ந்தவளின் அழகை கண்களால் பருகிக் கொண்டே அவளருகில் சென்றவன் அவள் மறுபுறம் திரும்பிக் கொள்ளவும் முதலில் எரிச்சல் பட்டவன் பின்பு பெண்ணவளின் பின்னழகை கண்டு சொக்கித்தான் போனான்.



அவளை தொட்டு தழுவ பரபரத்த கைகளை கட்டுப்படுத்த முடியாமல் அவளருகில் பட்டும்படாமலும் நெருங்கி நின்றவன் அவள் மேனியில் கமழ்ந்த நறுமணத்தில் கண்கள் சொருக அதை ஆழ்ந்து அனுபவித்தவன் அதற்கு மேலும் தாக்குபிடிக்க முடியாமல் பின்னிருந்து இடையழுத்தி அவளை தனக்குள் இறுக்கிக் கொண்டான்.



பின்னால் இருந்து எதுவோ அசையும் அசைவுணர்ந்து திரும்ப எத்தனித்தவள் யாரோ தன்னை இறுக்கி அணைக்கவும் முகம் வெளிற நெஞ்சு உளற பயத்தில் அலறப்போனவளின் வாயையும் தன் கரம் கொண்டு மூட உடல் திமிர அவனின் பிடியிலிருந்து வெளிப்பட முற்பட தாபத்தில் இருந்தவனோ அதை நொடியில் தகர்த்த செயலிழந்து போனவளின் உடலும் தொய்ந்து போனது.



பெண்மையின் மென்மையில் கரைந்து போனவன் அதன் பின்பு தான் அவள் உணர்வற்று கிடப்பதை பார்த்து அவளை தன் புறம் திருப்பினான். கண்கள் சொருக கிட்டத்தட்ட மயக்கநிலைக்கு செல்ல இருந்தவள் கண்முன்னே தெரிந்த தன் மனதை திருடியவனின் முகத்தை கண்டதும் தான் நிம்மதி கொண்டவளாய் அவனை ஆரத்தழுவி கொண்டாள். பயத்தினில்.. ஆறுதலுக்காய்.. உடல் அழுகையில் குலுங்கியது.



அதில் தன் தவறு புரிய கோபத்தில் கண்களை மூடி மூச்சிழுத்து விட்டவன் ஆறுதலாய் அவள் தலையை தடவிக் கொடுத்தான்.



“ஹனி நான் தான்... எதுக்கு அழற... ப்ளீஸ் அழாதடா... என்னை மன்னிச்சிடு... ஹனி...” எத்தனை முயன்றும் அவனால் அவள் அழுகையை தடுத்து நிறுத்த முடியவில்லை.



“ஏன்டா இப்பிடி பண்ண... அன்னைக்கு சொன்னியே காத்திருந்து ஏமாறும் வலியை கொடுத்திடாதன்னு... ஆனா எனக்கு அதையும் விட அதிகமா வலிச்சது... ஏன் அப்பிடி பண்ண...” மரியாதையை கைவிட்டு தன்னிலையில் இன்றி பிதற்ற ஆரம்பித்திருந்தாள்.



“எல்லா பொண்ணுங்களும் என்ன ஆசைபடுவாங்க தெரியுமா... நம்மள மட்டும் காதலிக்கும் பசங்க தான் நம்ம வாழ்க்கை முழுசுக்கும் வேணும்னு ஆசைபடுவா... நானும் அப்பிடித்தான் ஆசைப்பட்டேன்... ஆனா... எனக்கு மட்டும் ஏன் இப்பிடியெல்லாம் நடக்கிது... நான் என்ன யாரும் கேக்காததையா கேட்டிட்டேன்... இல்லையே.. ஆனா நான் கேட்டது மட்டும் கிடைக்கவேயில்ல...” மனதின் ரணம் வார்த்தைகளில் பிரதிபலித்தது.



அதை மௌனமாய் கேட்டுக் கொண்டான். விளக்கம் கொடுக்கவோ ஆறுதல் கூறவோ அவனுக்கு தகுதியில்லை. அவள் மேல் எந்த தப்பும் இல்லையே.. அனைத்தும் தன் மீது எனும் போது என்னவென்று அவளிடம் சொல்வது... அதுவே அவனின் மௌனத்தை உடைக்க மறுத்தது.



சலனமின்றி இருந்தவளை சலனபடுத்தியவன் அவன் தானே. தான் இவளை பார்க்காமலே இருந்திருக்கலாம் என்றே அவனுக்கு தோன்றியது. அவள் வாழ்க்கையில் வராமலே இருந்திருக்கலாம்.. தான் வந்ததால் தானே பெண்ணவளுக்கு இத்தனை வேதனை.



‘என்னை மன்னிச்சிடு ஹனி... நான் உன் வாழ்க்கையில் வந்திருக்கவே கூடாது. தப்பு பண்ணிட்டேன்.. நான் இப்பிடித்தான்னு தெரிஞ்சிருந்தும் உன்கிட்ட அப்பிடி பேசியிருக்க கூடாது தான்... ஐயம் ரியல்லி சாரிடி... இனிமே நான் உன் முன்னாடி வரவே கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிறேன்...’ நெஞ்சுக்குள் நமநமத்த வலியுடன் மனதினுள் எண்ணிக் கொண்டான்.



அப்போதும் பெண்ணவளின் புலம்பல் நின்றபாடாய் இல்லை... “உன்ன எவ்ளோ காதலிச்சேன் தெரியுமாடா... ரொம்ம்ம்மம்ம்ம்ப... சொல்ல முடியாத அளவுக்கு... ஆனா நீ... என் மனசில என்ன இருக்கின்னு தெரியாமலேயே வேற பொண்ண தேடி போய்ட்டல்ல... ஆனா நான் அப்பிடி கிடையாது... இனிமேல் எனக்கு காதலே வரக்கூடாதுன்னு தான் தினமும் வேண்டிக்கிறேன்... காதல் என்கிற வார்த்தையே சுத்த பொய்... அந்த வார்த்தை நான் மனசார வெறுக்கிறேன்...” வாய் குழறலாய் வார்த்தைகளை கொட்ட மழையும் சிறிது குறைய ஆரம்பிக்க இதற்கு மேலும் தான் இங்கிருப்பது உசிதமல்ல என்று எண்ணியவன் மழை நீரை பிடித்து அவள் முகத்தில் தெளித்தான்.



முகத்தில் நீர் துளிகள் பட்டதும் சுரணை வர கருமணிகள் லேசாய் உருண்டோட மெதுவாய் கண்களை மலர்த்தினாள். நெஞ்சுக்குள் ரயிலோடும் ஓசை... எம்பி குதிப்பது போல் வேகமாய் துடித்தது. கண்கள் மீண்டும் சொக்குவது போல் இருக்க கண்களை தேய்த்துக் கொண்டு நிமிர்ந்தவள் தன் முன் நின்றவனை பார்த்து அதிர்ந்து பின்பு நடந்தது நினைவு வர ஆக்ரோசத்துடன் அவனை உறுத்து விழித்தவள் அடுத்த நொடி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள்.



அவள் நிலைக்கு திரும்பியதும் அவளை விட்டு விலக எத்தனித்தவன் எதிர்பாராத நேரத்தில் அவள் ஓங்கி அறையவும் அவனையும் மீறி அவன் செய்த செயலின் தீவிரம் மறந்து ஆண் எனும் ஈகோ தலை தூக்க கோபத்தில் அவளை அறைவதற்கு கையை ஓங்கினான்.



ஆனால் மறுநொடியே ஓங்கிய அவன் கைகள் தொய்ந்து விழுந்தது நெஞ்சை சுருக்கென பதம் பார்த்த பெண்ணவளின் வார்த்தைகளில்..



“காதலிக்கிறதுக்கு இன்னொருத்தி மத்ததுக்கு எல்லாம் நானா என்னை என்னன்னு நினைச்ச ப்ராஸ்டிட்யூட்னா...” வயதுக்கு மீறிய வார்த்தை தான்... அதை சொல்லும் போதே அவளுக்கு உடலெல்லாம் கூசியது. காதல் கொடுத்த வலி வரம்பு மீறி பேச செய்தது. அவனோ அதை கேட்டு துடித்து போய் விட்டான்.



‘என்ன வார்த்தை சொல்லிவிட்டாள் பாவி... எப்பிடிடி இப்பிடியெல்லாம் பேசிற... இதுக்கு பேசாம நீ என்னை கொன்னிருக்கலாம்... பாவி...’ மனம் குமுற அவளை வெற்றுப்பார்வை பார்த்தவன் “இன்னொரு வாட்டி இப்பிடி பேசாத....” கரகரப்புடன் கூறியவன் வேகத்துடன் விரைந்து சென்று விட்டான்...



செல்லும் அவனையே இமைக்காமல் பார்த்திருந்தவளின் விழிகளில் இருந்து கரகரவென கண்ணீர் துளிகள் வழிந்தோடியது. அவன் உருவம் தேய்ந்து மறையும் வரை பார்த்திருந்தவள் உதட்டை கடித்து வெடித்து சிதறிய அழுகையை அடக்கிக் கொண்டாள்.



“தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உனதாகும் அன்பே போ

இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ

தனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன் உயிர் வேண்டாம் தூரம் போ”




சிதறும்....
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....

அடுத்த அத்தியாயத்தை பதிவு பண்ணிட்டேன்...
பார்த்திட்டு தயவு செஞ்சு கதை எப்பிடி இருக்கின்னு கமென்ட் பண்ணுங்க ப்ளீஸ்....
கதை இன்னும் ஸ்டார்ட் ஆகலை... இனிமே தான் ஓரளவுக்கு விறுவிறுப்பு ஆரம்பமாகும்...

so please tell something

drop your comments...

ஷம்லாவின் "சிதற வைத்த செம்பாவையாள்" -கருத்து திரி
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'சிதற வைத்த செம்பாவையாள்'



அத்தியாயம் 04




aditya-roy-kapoor-1.jpg



“ஹோஓஓஓஓ” இருகைகளையும் வாயருகே வைத்து உதடு குவித்து கூவியவர்களின் சத்தத்தில் ஒரு கணமேனும் அதிர்ந்து தான் போயினர் அங்கிருந்த ஆசிரியர்கள். அதை எல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையை கடந்திருந்தனர் சிட்டுக்குருவியாய் சுற்றித்திரிந்த மாணவர்கள் அத்தனை பேரும்.



இன்றுடன் பொதுத்தேர்வு முடிவடைந்து விட்டது. கடைசி பரீட்சையையும் எழுதி முடித்து விட்டனர். இனி உட்கார்ந்து படிக்க வேண்டியதில்லை என்ற எண்ணமே அவர்களுள் இன்பத்தின் ஊற்றினை சுரக்க அதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர் அத்தனை மாணவர்களும்.



இனி அவர்கள் உல்லாச வானில் சிறகடித்து பறக்கலாம் என்ற எண்ணத்தின் களிப்பு ஒவ்வொரு மாணவியர்களின் முகத்திலும் அப்பட்டமாய் பிரதிபலித்தது. இத்தனை நாள் அவர்கள் பட்ட கஷ்டம் இன்றுடன் தீர்ந்து போனதில் எக்ஸாம் ஹாலை அதகளப்படுத்திக் கொண்டிருந்தனர்.



“வேணாம் மச்சி வேணாம் இந்த செமெஸ்டர் எக்ஸாமு...

ஆது ரிசல்ட் வரும் போது நம்ம கவுக்கும் குவாட்டரு...

கடல போல படிப்பு ஒரு சால்ட் வாட்டரு...

ஆது கொஞ்சம் கரிக்கும் போதே நாம தூக்கி போடணும்...

பிரெண்ட மாதிரி பிட் அடிச்சா டார்ச்சர் இல்லடி...

நாமும் படிச்சிட்டு பண்ணா ஜீன்ஸு அவுளும்டி...

கண்ண கலங்க வைக்கும் டீச்சர் வேணாம்டி...

நமக்கு பிட் பேப்பர் தூக்கி போடும் ‘நண்பி’ போதும்டி...”



மேசையில் தாளம் போட்டவாறே ஷாஷி பாட உடன் சேர்ந்து கை தட்டி ஆர்ப்பரித்த அத்தனை பேரும் உரத்த குரலில் பின் பாட்டு பாட ஆரம்பித்தனர்.



ஆசிரியர்களின் முறைப்பை பெற்றாலும் அதை நினைத்து வருந்தும் நிலையில் யாரும் இல்லாததால் தங்களது கடைசி நாளை பெரும் கொண்டாட்டமாய் கொண்டாடிக்கொண்டு இருந்தனர்.



இடையில் ஆடிப்பாடி ஓடி மகிழ்ந்து களைத்துப் போய் அமர்ந்திருந்தவர்களுக்கு அத்தனை நேரம் இருந்த உற்சாகம் சற்று வடிவது போலவே இருந்தது. இன்னும் சில மணித்துளிகள் அதன் பின்பு சந்திக்கும் வாய்ப்பு என்பது சற்று அரிது தான். கிட்டத்தட்ட பதினோரு ஆண்டு பழக்கம் ஒரு பரீட்சையின் முடிவில் சிதறிப்போனது.



“இன்னிக்கு கடைசி நாள்... இதுகப்ரம் எப்போ பார்ப்போம்னு கூட தெரியாதில்ல...” சொல்லும் போதே அந்த பெண்ணின் கண்கள் கலங்கிப் போனது.



அனைவருள்ளும் அந்த எண்ணம் தான் ஆனால் வெளிகாட்டாமல் உள்ளுக்குள் அடைத்து வைத்திருந்தனர். தன் சோகத்தால் தன் நண்பர்கள் வருந்தி விடக்கூடாது என உள்ளுக்குள் அடைத்து வைத்தது ஒரு மாணவியின் பேச்சில் சீறிக் கொண்டு வெளியில் வந்தது. அனைவரது கண்களிலும் கண்ணீரின் சாயல்.



“அதெல்லாம் பார்த்து பேசலாம் செல்லம் நீ உன் வாட்சாப் நம்பர மட்டும் கொடு நீ எந்த மூலைல இருந்தாலும் நான் போன் பண்ணி உன்னைய கலாய்க்கிறேன்” ஷாஷி சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள்.



அனைவரது முகத்திலும் புன்னகையின் சாயல். அவர்களது வகுப்பு மாணாக்கள் வட்டமாய் கூடி அமர்ந்திருந்தனர். ஒருவரது முகத்தை மற்றவரால் இலகுவாக பார்க்க முடிந்தது. பார்க்கும் போது அந்த முகங்களில் தெரிந்த தவிப்பையும் சிரிப்பையும் ஒருங்கே காணமுடிந்தது.



“இப்போ எதுக்கு எல்லாரும் உலகமே அழிஞ்சாட்டம் சேட் வயலின் வாசிக்கிறீங்க... இப்போ நான் எமோசனல் ஆகிற மூடிலே இல்ல, கடைசி நாள்னாலே பிரிவொன்றை சந்திந்தோமும் மனசே மனசேயும் தானா ஏன் பிரிஞ்சு போனா நாம பழகின நாட்களும் நம்மா பிரெண்ட்ஷிப்பும் இல்லாம போய்டுமா... சுத்த ஹம்பக் அவங்க படம் ஹிட் ஆகணும்னு கடைசில பாட்டு போறாங்க அதுக்காக நாமளும் பிரியும் போது அதே பாட்ட பாடிட்டு சோகமாத்தான் பிரிஞ்சு போகணும்னு யாரும் சொல்லல... நாம மறக்கவே முடியாதளவுக்கு இந்த நாள் இருக்கணும் பின்னாடி திரும்பி பார்க்கும் போது நம்ம முகத்தில சிரிப்பு வரணும் அழுகை வரக்கூடாது...” எமோசனல் ஆகக்கூடாது என்றவளே இறுதியில் உணர்ச்சிவசப்பட்டு விட்டாள்.



“செல்லம்... வை பேபி... வை பீலிங்க்ஸ்மா...” உதடு பிதுக்கி ஷாஷியை கிண்டலடித்தாள் ஷிக்கு.



“ஓடிப்போய்டு இல்ல கொன்னேபுடுவேன்...” தன்னை கிண்டலடித்தவளை புன்னகையுடன் அதட்டியவள் மறுகணம் அவள் கரத்தை அழுத்தமாய் பற்றி இறுக்கிக் கொண்டாள். ஒரு கரம் ஷிக்குவின் கரத்தை அழுத்தமாய் பற்றியிருக்க மற்றது பாலாவின் பிடியில் அழுத்தமாய் சிக்கி இருந்தது.



மூவரும் வெளியில் உற்சாகமாக காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குள் பெரும் சோகமே மையம் கொண்டிருந்தது. அது அவர்கள் பிடியின் அழுத்தத்தில் அழகாய் வெளிப்பட்டது.



விடியும் வரை தெரியாது கண்டது கனவு என்று!

பிரியும் வரை தெரியாது பாசம் எவ்வளவு ஆழம் என்று!



இத்தனை நாட்களில் அது அவர்களுக்கு புரிந்து இருந்தாலும் இன்று அது இன்னும் அழுத்தமாய் புரிந்தது அவர்களுக்கு. இனி வாழ்க்கை முறையே மாறிவிடும். மூவருக்கும் மூன்று விதமான கனவு.



மென்மையுடன் தயக்கமும் கொண்ட பாலாவிற்கு சிறு வயது முதலே வக்கீல் ஆகவேண்டும் என்பதே லட்சியம்... கனவு... அதை ஒருவித வெறி என்று கூட சொல்லலாம். ஆர்ப்பாட்டத்தின் மறுவடிவாய் இருக்கும் ஷாஷிக்கு ஆசிரியர் ஆவதே வாழ்நாள் லட்சியம்... கலகலப்பாய் சுற்றி திரியும் ஷிகாவின் கனவோ மருத்துவம்... மகப்பேறு மருத்துவராவதே அவள் இலக்கு.



மற்றவர்களின் கவனத்தை ஈர்க்காமல் மூவரும் மைதானத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த கல்மேடை அவர்களை நட்புடன் வரவேற்றது. அருகருகில் அமர்ந்து கொண்டனர். கோர்த்த கைகள் இன்னும் விலகியிருக்கவில்லை. அவர்கள் நட்பின் ஆழத்தை போல் அழுத்தமாய் பின்னிப்பிணைந்து இருந்தது.



முதல் நாள் பள்ளியில் அவர்கள் மூவரும் அறிமுகமாகிக் கொண்டதே இந்த மைதானத்தில் தான். இதே கல்மேடையில் தான் அமர்ந்திருந்தனர். மூவரும் மூன்று விதமான யோசனையுடன்.



சிறுவயது பாலா கண்களில் மிரட்சியுடன் தன் வயதொத்தவர்களை பார்த்திருக்க அதே கல்மேடையில் அமர்ந்திருந்த ஷிக்கு தனக்கு தெரிந்த யாரையும் காணவில்லையே என சலிப்பில் அமர்ந்திருக்க அவர்களுக்கு நேர்மாறாய் யாரை தன்னுடன் சேர்த்துக் கொள்ளலாம் எனும் ஆர்வத்துடன் ஒவ்வொருவரையும் கூர்மையாய் தன் குண்டு விழிகளால் அளந்து கொண்டிருந்தாள் ஷாஷி.

அன்று அவர்கள் மனதில் பூத்த சிறு பூ இன்று மணம் வீசும் மலர்த்தோட்டமாய் உருமாறி இருந்தது. பள்ளியின் ஒவ்வொரு சுவற்றிலும் அவர்களின் கடந்த கால நினைவலைகள்.



பாடவேளையில் யாருக்கும் தெரியாமல் கள்ளத்தனமாய் வெளியில் வந்து பள்ளி தோட்டத்தில் தேசிக்காய் திருடி அதை எச்சில் ஊற உண்ட நாட்கள்...



பரீட்சை அறையில் விடை தெரியாமல் விழி பிதுங்கி யாருமறியாமல் பிட் அடித்த கள்ளத்தனமான நாட்கள்... அதை ஆசிரியரிடம் கூற முயன்ற மாணவர்களுக்கு பிட் பேப்பரை காட்டி தங்கள் வழிக்கு கொண்டு வந்த ஜோரான நாட்கள்...



பள்ளி விழாக்களில் ஆடிப்பாடி மகிழ்ந்த நாட்கள்... அதற்காய் ஆசிரியரிடம் திட்டு வாங்கிய கொடுமையான நாட்கள்... அதிபருக்கு பயந்து ஓடி ஒளிந்த திகிலான நாட்கள்...



ஜூனியர் மாணவர்களை கலாய்த்து அனுப்பிய கலகலப்பான நாட்கள்... சீனியர் மாணவர்களிடம் அசிங்கப்பட்ட கடுப்பான நாட்கள்... பள்ளி வாசலில் நின்று சைட் அடித்த ரகசிய நாட்கள்... காதல் கடிதம் நீட்டிய வெளி மாணவர்களை ஓட ஓட விரட்டிய தில்லான நாட்கள்...



இப்படி வரிசை கட்டிக்கொண்டு செல்லுமலவிளான எத்தனையோ நாட்கள் அவர்கள் மூவரின் வாழ்க்கையிலும் கடந்து சென்றிருக்கின்றன... அவர்கள் பழக ஆரம்பித்த இந்த பதினோரு வருடங்களும் அவர்கள் வாழ்க்கையின் பசுமையான நாட்கள் தான்... மறக்க முனைந்தாலும் நினைவு பெட்டகத்தில் அழகாய் ஒட்டிக்கொண்ட நாட்கள்...



பழைய நினைவுகளில் தங்களை தொலைத்தவர்கள் எங்கோ வெட்கத்துடன் இசைமீட்டிய புல்லினத்தின் ஓசையில் நிகழ்காலத்திற்கு திரும்பினர்.



அதை நினைத்தபடியே அருகிலிருந்த சித்தியின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பாலாவின் வழியை மரித்தான் அவன். அவளை நிழலாய் தொடர்ந்து கொண்டிருந்தவன்... அவளின் காதலுக்காய் காத்திருப்பவன்... அவளின் அழகை ரசிக்காமல் குணத்தை கொண்டு அவள் மேல் பித்தானவன். இன்று தன் பித்தத்தை தெளிய வைக்க அவளிடம் காதலை யாசகமாய் கேட்டு வந்திருந்தான்.



இரண்டு வருடங்களுக்கு முன்பு அவனை பார்த்து மனதினுள் பொறுக்கி என்று அர்ச்சனை செய்தவள் இன்று அதை சொல்லமுடியாமல் அவனை திகைப்புடன் பார்த்திருந்தாள்.



அன்று மனிதர்களின் மனதை படிக்க தெரியாதவளாய் இருந்தாள் இன்று அதை தெளிவாய் புரிந்து கொள்ளும் அளவிற்கு தன்னை செப்பனிட்டிருந்தாள். வக்கீல் ஆவதற்கு தேவையான திறமைகளை இப்போதே கொஞ்சம் கொஞ்சமாய் தன்னுள் விதைத்துக் கொண்டிருந்தவளுக்கு அவன் கண்களில் இருந்த நேர்மை அது வெளிப்படுத்திய காதல்... அதை புரிந்து கொள்ள முடிந்தது...



அதே நேரம் இதே காதல் பார்வையால் அவள் தகுதியற்ற ஒருவனை ஏறிட்டதும் பெண்ணவள் நினைவில் வந்து கலங்க செய்தது. அன்று அனுபவித்த அதே வலி இன்றும் சற்று குறைவில்லாது அவள் நெஞ்சத்தை தாக்கியது. அவனை மறக்கத்தான் நினைக்கிறாள் ஆனால் ஏதோ ஒரு வகையில் அவன் நினைவு அவளுள் கனன்று கொண்டு தான் இருக்கின்றது... மறக்க முடியாமல் அவனை மீண்டும் நினைவு படுத்தும் விதமாய்...



தன் மனம் கவர்ந்தவளை கண்களால் ஆசைதீர பருகியவனின் பார்வை அவள் முகத்தை தாண்டி கீழிறங்கவில்லை.. பெண்ணவள் மனமறியாமல் அவளை பார்வையால் கூட தீண்ட விரும்பவில்லை அந்த ஒருதலை காதலன்...



ஒன்றரை வருடத்திற்கு முன்பு அவள் பள்ளி வாசலில் ஆசைதீர பார்த்தது தான் அதன் பின்பு இன்று தான் அவளை முழுமையாய் பார்க்கிறான். இடைப்பட்ட வருடத்தில் அவளின் அழகு இன்னமும் கூடித்தான் இருந்தது. அத்துடன் கண்களில் இருந்த நேர்மையும் தைரியமும் அவள் அழகுக்கு இன்னும் அழகு சேர்த்தது.

அதை தான் அவன் விரும்பினான்... பெண்ணவளின் நயங்கள் வெளிப்படுத்தும் நேர்மையும் தைரியமும் தான் அவனை அவள் பக்கமாய் சுண்டி இழுக்கின்றது. பாரதி கண்ட புதுமை பெண்ணாய் அன்று இருந்ததை விட நிமிர்வாய் நின்றவளின் தோற்றம் அவனுள் சொட்டு சொட்டாய் இறங்கியது. அதில் அவன் காதல் மனம் பெண்ணவளை நினைத்து பெருமை கொண்டது.



அத்தனை நேரம் பின்னால் மறைத்து வைத்திருந்த பூங்கொத்தை எடுத்து அவள் முன் புன்னகையுடன் நீட்டினான். அவள் படிப்பிற்கு தன்னால் இடையூறு வரக்கூடாதென இடைப்பட்ட நாட்களில் விலகி இருந்தவன் அவள் பரீட்சை முடிவடைந்து விட்டது என்பதை கேள்விப்பட்டவனாய் அவள் முன் தோன்றி இருந்தான். தன் காதலை வார்த்தையில் வடிப்பதற்காய்...



*****



அதே நேரம் தன் முன் நின்றவனை வெட்கம் பாதி தயக்கம் பாதி என இரண்டும் கலந்த கலவையான பார்வை பார்த்தவண்ணம் தடதடக்கும் இதயத்துடன் நின்றிருந்தாள் ஷிகா.



இத்தனை நாள் தூரத்தில் பார்த்து ரசித்து தனக்குள் நிரப்பிக் கொண்டவன் இன்று தன் கண் முன் நிற்பதை நம்பமுடியாத பிரமிப்பும் அவள் கண்களில் அப்பட்டமாய் தெரிந்தது. நாம் நேசிப்பவர்கள் நம்மை நேசித்தால் எந்தளவுக்கு மகிழ்வோமோ அப்படி ஒரு மகிழ்ச்சியில் தான் திளைத்திருந்தாள்.



அவள் முன் நின்றிருந்த ஆர்யன் அவள் பார்வையில் கசிந்த காதலில் செய்வதறியாது தவித்தான். அவன் அவளை பார்த்தது ஒரு கலை நிகழ்ச்சி ஒன்றில் தான். அவனின் கல்லூரியில் தான் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தான் ஷிகாவும் ஒரு போட்டி நிகழ்ச்சிக்காய் சென்றிருந்தாள்.



அந்த நாள் இருவரது மனக்கண்ணிலும் விரிந்தது.



“நல்லாத்தான் ப்ராக்டீஸ் பண்ணியிருக்கேன் ஆனாலும் ஒருமாரி டென்ஷனா தான் இருக்கு....” என உதட்டை குவித்து மூச்சிழுத்து விட்டாள் ஷிகா.



அவளை பார்த்து சிரித்த ஷாஷி “ஏதோ இப்போ தான் முதல்வாட்டி போறமாறியே சீன் காட்டுறியே மை டியர் ஷிக்கு...” கலாய்க்க,,



“அதானே இத்தோட நாலாவது தடவையா போற இப்போ என்ன டென்ஷன்... நீ கவலையே படாத ஷிக்குங்கிற உன் பெயர கேட்டாலே எல்லாரும் சிக்கி சின்னாபின்னமாகி போய்டுவாங்க... சோ டோன்ட் வொர்ரி...” பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கியபடி பாலா அவளை வார அங்கு வெடிச்சிரிப்போன்று கிளம்பியது.



அதற்குள் தலைமை ஆசிரியர் போட்டிக்காக செல்பவர்களை அவசரமாய் வரும்படி அழைக்க தோழிகளின் வாழ்த்தோடு புறப்பட்டு சென்றாள் ஷிகா. அவளோடு இரண்டு தலைமை ஆசிரியர்கள் உட்பட பத்து மாணவர்களும் சென்றனர்.



காலை ஒன்பது மணியளவில் அந்த கல்லூரியினுள் நுழைந்தவர்கள் மதியம் ஒரு மணியளவில் தான் தங்கள் நிகழ்ச்சிகள் முடிந்து ஓய்வாய் அமர்ந்திருந்தனர். இன்னும் சில மணித்துளிகளில் ரிசல்ட் அறிவிப்பதால் அதை பெற்றுக் கொண்டே செல்வோம் என ஆசிரியர்கள் உரைத்திருக்க வெட்டியாய் அமர்ந்திருந்த மாணவர்கள் ஆசிரியர்களின் கடுமையான சொற்பொலிவாற்றலின் பின் அந்த கல்லூரியை சுற்றிப்பார்க்க ஆரம்பித்தனர்.



அவர்களை போல் வேறு பள்ளியில் இருந்து வந்த மாணவர்கள் அங்கிருந்த ஆடிடோரியத்தினுள் செல்வது கண்டு இவர்களும் கூட்டமாய் உள்ளே நுழைந்தனர்.



“மச்சி நீ பாடித்தான் ஆகணும் தங்கச்சிய நினைச்சாவாது பாடித்தொலடா... உன் கிட்டார் கூட ரெடியா இருக்கு...” கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கிணங்க ஆர்யனின் தோழன் ஆதர்ஸ் நண்பனை பெரும்பாடு பட்டு கரைக்க முதலில் கரையாதிருந்தவன் தன்னவளை நினைவு படுத்தவும் கிட்டாரை கையில் ஏந்திக் கொண்டு மேடையேறி விட்டான்.



அவனது கல்லூரி மாணவர்கள் ஆர்யன் மேடையோரவும் கத்தி கூச்சலிட்டு அவனை ஆரவாரப்படுத்த அவர்களை பார்த்து கையாட்டி சிரித்தவன் கண்களை மூடி தன்னவளை கண்முன்னே கொண்டு வந்தான்.



அவள் தன் முன்னே நிற்பது போல் கற்பனை செய்து கொண்டவனின் கைகளில் கிட்டார் உயிர்பெற அவனிதழ்களில் இசை உயிர்பெற்றது.



மது அவளை நினைத்து மது அருந்தாமலே போதையானவன் மதி மயங்கிப்போய் பாட ஆரம்பிக்க அவன் கண்கள் தன்னவள் நிற்பதாய் கற்பனை செய்து கொண்ட இடத்தில் அவன் தன்னை பார்த்து பாடுவதாய் எண்ணி உள்ளம் தடுமாற அவனையே விழியகலாமல் பார்த்த வண்ணம் நின்றிருந்தாள் ஷிகா.



“கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்பராகம் என்னவென்று காட்டுவேன்
சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை
எங்கேயோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக
கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே...


அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே


ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அடைந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
பூவாடை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே


அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே”




அன்று அவன்பால் தடுமாறியவளின் உள்ளம் இன்னும் அவள் கட்டுக்குள் வரவில்லை. அது எப்போதோ அவனிடம் சரணடைந்து விட்டது. அதை எண்ணிப் பார்த்தவள் அவனை காதலுடன் நோக்கினாள்.



அவனோ தன்னவளிடம் வேறு ஒருத்தியை காதலிப்பதாய் கூறிக்கொண்டு அவளை மறக்கவும் முடியாமல் நினைக்கவும் முடியாமல் அவள் பின்னால் நாய்க்குட்டியாய் செல்லும் நெஞ்சத்தினை தடுக்கும் வகையறியாது செய்வதறியாது நின்று கொண்டிருந்தான்.



அன்று மதுபாலாவின் வார்த்தைகளில் அடிபட்ட உள்ளத்துடன் அங்கிருந்து புறப்பட்டவன் தான் அதன் பின்பு அவளை பார்க்க முயற்சிக்கவில்லை. தன்னால் தன்னவள் உயிர் உருகுவதை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. அவன் வேண்டுமென்றா அதையெல்லாம் செய்தான்... அவளுக்காகத்தானே... அவளுக்காகத்தான் அவளை விட்டு விலகியிருக்கிறான்..



அதை யாரிடமும் அவன் சொல்லப்போவதில்லை. அவளிடமும் கூட.. அவன் மரணிக்கும் போது அதுவும் அவன் காதல் நெஞ்சத்தோடு மண்ணோடு மண்ணாய் மக்கிப்போய்விடும்...



மனதினுள் வேறு ஒருத்தியை நினைத்திருப்பவனுக்கு இப்பவையாளின் பார்வை சங்கடத்தை மூட்டியது. முன்பென்றால் இவளின் ஆர்வப்பார்வையில் இவளிடம் கடலை வறுக்க ஆரம்பித்திருப்பான். ஆனால் இப்போதிருப்பது மதுபாலாவின் காதலால் மட்டுமே உயிர்படைபவன். வேறு பெண்ணின் பார்வை கூட தன்னில் விழுவதை அவன் விரும்வில்லை.



அவன் இப்படியே இருந்துவிட முடியாது தான். இருந்து விடவும் அவன் குடும்பத்தில் விடமாட்டார்கள் தான். அதற்குள் காலம் என்ன செய்யுமென்று யாரிவார் என்பதால் இப்போதைக்கு அவன் அதை பற்றி யோசிக்கவில்லை.



ஆனால் இந்த பெண்... இவளை என்ன செய்வது என புரியாமல் முதலில் குழம்பியவன் இறுதியில் அவளை சந்தித்து பேச முடிவு செய்துஇதோ ஒருவழியாய் அவளை சந்தித்தும் விட்டான்.



ஆர்யனின் நண்பனான ஆதர்ஸின் வீட்டின் அருகினில் தான் ஷிகாவின் வீடும் அமைந்திருந்தது. தினமும் நண்பனின் வீட்டிற்கு வரும்போதெல்லாம் அவளின் பார்வை தன் மேல் படிவதை பார்த்து முதலில் கண்டுகொள்ளாமல் விட்டவன் நாளாக ஆக அவள் பார்வையில் வழிந்த காதலில் நண்பனின் வீட்டிற்கு வருவதை கூட நிறுத்தி விட்டான்.



ஆனால் விதி மீண்டும் அவர்களை சந்திக்க வைத்து அவள் காதலை அவனுக்கு புரிய வைத்திட முனைய அதற்கு மேல் பொறுமைகாக்க முடியாமல் நண்பனின் வீட்டிற்கு வந்தவன் தன் பைக் சத்தத்தில் வெளியில் வந்தவளை பேச வேண்டும் என அங்கிருந்த பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தான். முதலில் தயங்கியவள் பின்பு ஒத்துக் கொண்டாள்.



*******



அன்னையும் தந்தையும் உறவினர் வீட்டுக்கு சென்றிருக்க அவளின் செல்லத்தம்பி மாலைநேர வகுப்பு சென்றிருக்க வீட்டில் தனியாக இருக்க முடியாமல் பாட்டியின் வீட்டிற்கு கிளம்பினாள் ஷாஷி.



இரண்டு தெரு தள்ளி பாட்டியின் வீடு அமைந்திருக்க மாலை நேரத்து மதிமயங்கும் காற்றினை சுவாசித்துக் கொண்டு இறுதி நாள் பள்ளியின் நினைவும் அதனுடன் கூடிய தன் தோழிகளின் நினைவும் எழ உள்ளுக்குள் எட்டிப்பார்த்த கவலையை வெளிக்காட்டாமல் உல்லாச நடையுடன் சென்றவளின் நடை பாதியில் தடைப்பட்டது அங்கு நின்றிருந்தவர்களை பார்த்து.



காதில் கடுக்கன்... கழுத்தில் விதவிதமான சங்கிலி... முள்ளம்பன்றியின் மயிர்கால்கள் போல் சிலுப்பிக் கொண்டிருந்த தலைமுடி பாதி பிய்ந்து தொங்கிய பேன்ட்.. என கிட்டத்தட்ட ரௌடிகளின் தோற்றத்தில் நின்றிருந்தவர்களின் கைகளில் பாதி புகைப்பட்ட நிலையில் இருந்த சிகரட்.



தோழிகளின் யோசனையூடே நடந்து வந்ததில் அவர்களின் அருகில் நெருங்கி இருந்தாள். முதலில் கவனியாதவள் புகையின் நெடியில் தான் நிமிர்ந்து நோக்கினாள். இவளையே வைத்த கண் வாங்கமால் வெறித்துக் கொண்டிருந்தனர்.



உள்ளுக்குள் சிலீரிட்டது. பயத்தில் கண்கள் கலங்கியது. கண்ணீர் துளி கன்னத்தில் இறங்காமல் இமைசிமிட்டி சரி செய்து கொள்ள முயன்றாள். பீதியில் கைகால்கள் நடுங்கின. நிற்க கூட திராணியற்றவளாய் தன் முன் நின்றிருந்தவர்களை பார்த்தவளின் மனமோ இங்கிருந்து எப்படி செல்வது என்பதை வேக வேகமாய் சிந்தித்தது.



ஆள்நடமாட்டமில்லாத தெரு. உரத்த குரலில் கத்தினாலும் யாரும் வரமாட்டார்கள். அவளுக்கிருந்த பயத்தில் சத்தம் போட்டு கூப்பாடு போடும் நிலையிலும் அவள் இல்லை. தேவையில்லா நேரத்தில் வாய் கிழிய பேசுபவள் இன்று தேவையான நேரத்தில் பேசாமடந்தையாய் சிலையாய் சமைந்து நின்றாள்.



ஆளில்லாத தெருவினுள் சிகரட்டில் கலந்த போதையை முகர்ந்து கண்கள் சொருக போதையில் நின்றிருந்தவர்கள் தங்கள் முன் நின்ற பூப்போன்றவளை கசக்கி முகர துடிக்கும் வண்டாய் காமவெறியில் அவளை பார்த்தனர்.



அவர்களின் பார்வை தன் உடலில் அசிங்கமாய் வலம் வருவதை அருவருப்புடன் பார்த்தவளுக்கு அங்கிருந்து நகர சொல்லி மனம் கட்டளையிட அதை செயற்படுத்த முடியாமல் கால்கள் வலுவிழந்து தோய்ந்து கொண்டிருந்தது.



அதில் அச்சத்தோடும் அருவருப்பில் தகிக்கும் உடலின் பாரத்தை தாங்கமுடியாமலும் செய்வதறியாமல் நின்றிருந்தவளின் தோளின்மேல் படிந்தது ஒரு கரம்.



“காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே
யோசனை ஓ… மாறுமோ ஓ… பேசினால் ஓ… தீருமோ ஓ…
உன்னில் என்னை போல காதல் நேருமோ
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்
என் இளமையின் தனிமையை நீ மாற்று எந்நேரமே அன்பே
நான் பிறந்தது மறந்திட தோணுதே
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே
காதல் ஆசை யாரை விட்டதோ
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ
ஓ… காதல் தொல்லை தாங்கவில்லையே
அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே..”




சிதறும்....


plz drop ur valuable comments...

ஷம்லாவின் "சிதற வைத்த செம்பாவையாள்" -கருத்து திரி
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'சிதற வைத்த செம்பாவையாள்'



அத்தியாயம் 05



கையில் சிகப்பு ரோஜாக்கள் அடங்கிய பூங்கொத்துடன் தன் முன் நின்றவனை பார்த்து என்ன செய்வது என புரியாமல் ஒருவித இயலாமை கலந்த தடுமாற்றத்துடன் பார்த்திருந்தாள் மதுபாலா.



தன்னவளை காதலுடன் பார்த்த மஹத் இதழ்களில் தவழ்ந்த மென்மையான புன்னகையுடன் தன் கையில் இருந்த ரோஜாக்களை பார்த்தவன் அதை பார்வையால் வருடினான். அது தன்னவளையே வருடிக் கொடுப்பது போல் அத்தனை பரவசமாய் அவனுள் இறங்கியது.



இரண்டு வருட காத்திருப்பினை வார்த்தையால் வடிக்க எண்ணினான்... காதலின் காத்திருப்பு சுகமாய் இருப்பினும் ஒருவித வலியில் அவன் குரல் கரகரப்பாய் ஒலித்தது.



“இரண்டு வருசமா காத்திருந்தேன்... இப்போ தான் சொல்றதுக்கான சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு...” சன்ன சிரிப்புடன் ஒரு கையால் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.



“முதல் தடவையா உன்னை பார்க்கும் போதே எனக்காக பொறந்த பொண்ணுன்னு தான் தோனிச்சு... இதுவரைக்கும் யாரை பார்த்தும் கூட இந்த மாதிரி தோணது இல்ல... பர்ஸ்ட் டைம் ஏதோ ஸ்ட்ரக் ஆன மாதிரி...” அதற்கு மேல் எப்படி சொல்வது எனப் புரியாமல் பின்னங்கழுத்தை அழுந்த தடவிக் கொடுத்தவன் அலைபாய்ந்து கொண்டிருந்த தன்னவளின் விழிகளை உற்று நோக்கினான்.



“நான் உன்னை எவ்வளவு காதலிக்கிறேன்னு சொல்ல விரும்பிறேன் மது... இதுவரைக்கும் நான் இப்பிடி இருந்ததே கிடையாது... கண்ணை மூடி என்னால தூங்க முடில.. கண்ணை திறந்தா நீ என் பக்கத்தில இருக்கிற மாதிரி பீல் பண்றேன்... இதை எப்பிடி சொல்றதுன்னு கூட தெரில... நீ என்னை சுத்தி இருக்கிற மாதிரி ஒவ்வொரு நிமிசமும் என் கண்கள் உன்னை தேடுது மது... ஆயிரம் பேர் உன்னை விரும்பினாலும் என்னோட அன்பு அதையும் விட ஒருபடி அதிகமா இருக்கும்னு மட்டும் சொல்ல தோணுது... என்னால உன்னை மறக்க முடியல மறக்கவும் விரும்பல... நீ எனக்கு மட்டும் சொந்தம்னு மனசு துடிக்குது... நான் உன்னை ரொம்ப விரும்பிறேன் மது.. நான் சாகும் போது கூட இந்த காதல் அப்பிடியே இருக்கணும்னு நான் ஆசைபடுகிறேன்... even after that... அதுக்கு பிறகும் கூட...”



அழகான அழுத்தமான ஆழமான காதல். தன் மனதிலுள்ளதை காதலுடன் எடுத்துரைத்தவன் அவள் விழிகளிலிருந்து பார்வையை அகற்றவில்லை. அந்த கண்கள் அவனை ஆழ்கடலுக்குள் அமிழ்த்துவது போலிருந்தது. அதில் விரும்பியே தொலைந்து போனான் அந்த காதல் பித்தன்.



அவன் நீட்டிய ரோஜாக்களை வாங்காது அவனையே இமைக்காமல் பார்த்திருந்தவளுக்கு அவன் காதலின் ஆழத்தை உணர முடிந்தது. இப்படி ஒரு காதலை தான் அவள் அவனிடம் கொண்டாள். ஆனால் அவன் தகுதியற்று போய்விட்டானே. அதை நினைக்கும் போதே அடிவயிற்றுக்குள் இருந்து எதுவோ மேலெழுந்து தொண்டைக்குள் அடைப்பது போல் அவஸ்தையாய் இருந்தது. கண்களில் கண்ணீரின் சாயல். அடக்கிக் கொண்டாள்.



தகுதியற்ற ஒருவனை காதலித்ததும் அவள் பிழை தான் அந்த வலியை தினம் தினம் அனுபவிப்பதும் அவள் பிழை தான். ஆனால் மறக்க முடியவில்லையே.. அவள் அவன் மேல் கொண்ட காதலுக்கு சமாதியும் கட்டி விட்டாள். ஆனால் அதுவோ சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனீக்ஸாய் மீண்டும் மேலெழும்பி அல்லவா வருகின்றது.



அந்த காதலர் தினத்தன்று அவன் வாய் வார்த்தையாய் காதலை சொல்ல வேண்டும் என்று கூட அவள் எதிர்பார்க்கவில்லை மாறாய் அவன் கண்களில் தன்னை கண்டவுடன் தோன்றும் மின்னலுடன் கூடிய காதல் பார்வைக்காய் தான் தவமிருந்தாள். ஆனால் அவன் அன்றைய நாளின் பரிசாய் தனக்கு பெரும் அதிர்ச்சியை கொடுப்பான் என அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லையே. எதிர்பாராதது நடப்பது தான் வாழ்க்கையோ.



அன்றைய நாளின் நினைவில் பொங்கிப் பெருகிய அழுகையை கூட வேறொருவனின் முன் அழ மனமற்று தனக்குள் அடக்கிக் கொண்டாள்.



தான் அவன் மேல் கொண்ட காதலுக்கு சற்றும் குறைவில்லா காதல் தான் தன் மீது இவன் கொண்டதும் என தெள்ளத்தெளிவாய் பெண்ணவளுக்கு புரிந்தது. அவன் கண்களை உற்று நோக்கினாள்.



தன் பதில் என்னவாய் இருக்குமோ என்ற பதற்றமும் தவிப்பும் ஒருங்கே மின்ன அவளையே பார்த்திருந்தான். அதை நினைத்து சோபையாய் புன்னகை சிந்தியது அவள் இதழ்கள்.



அவளுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம் போலும். அவள் நேசித்தவன் அவளை துறந்து செல்ல அவளை நேசிப்பவன் அவளுக்காய் எதையும் துறக்கும் நிலையில் இருக்க அவளுக்கு அந்த காதல் மேலே பற்றற்று போய்விட்டது. அவளுக்கு அவள் மன்னவன் கொடுத்த வலியை அவள் தன் முன் நிற்பவனுக்கு கொடுக்க போகின்றாள். உண்மையாய் நேசித்த இரு நெஞ்சமும் காதல் வாதையில் வாடப்போகின்றது. பெண்ணவள் முன்னமே அந்த வலியை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றாள்.



அடைபுற்ற தொண்டையை லேசாய் செருமிக் கொண்டாள். கண்களில் துளிர்த்த நீரை இமை சிமிட்டி சரி செய்து கொண்டாள்.



“அழகா இருக்கீங்க.. நல்லா பேசுறீங்க...” அளவான புன்னகை சிந்தியது இதழ்கள்.



“ரொம்ப காதலிக்கிறீங்கன்னு புரியுது... ஆனா அதை ஏத்துக்கத்தான் முடில... I already love someone else” அவன் மனம் படப்போகும் பாட்டை உணர்ந்தவளாய் மென்மையாய் உரைத்தாள்.



ஆர்வத்துடன் அவள் பதிலுக்காய் காத்திருந்தவன் பெண்ணவள் மொழிந்ததை கேட்டு காதலெனும் கண்ணாடி சில்லு சில்லாய் உடைய உடைந்து போய் அவளை பார்த்தான். அன்பிற்கு ஏங்கும் அடிபட்ட குழந்தையாய் அவள் காதலுக்காய் ஏங்கி அவளை ஏக்கத்துடன் தழுவி மீண்டது அவன் விழிகள்.



வேறு ஒருத்தனை காதலிக்கும் பெண்ணை அதற்கு மேல் ஒரு நொடி கூட பார்க்க கூடாது என மனம் எடுத்துரைக்க தன் விழிகளை விலக்கிக் கொள்ள முனைந்தான். காதல் நெஞ்சமோ இனி பார்க்கவே முடியாத ரசிக்காவே முடியாத பெண்ணவள் முகத்தை ஆழமாய் தனக்குள் பதிப்பது போல் உற்று நோக்கியது. விலக்கிக் கொள்ள முடியவில்லை. தன்னவள் தனக்கு இல்லை என்ற எண்ணமே அவனை உடையச் செய்ய அவனால் அதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.



இருந்தும் தன் வேதனையை மறைத்துக் கொண்டு இறுதியாய் ஒரு முறை அவள் விழியோடு விழி கலந்தவன் அதில் இருந்த உண்மை நான் எந்த நேரத்திலும் பொய் சொல்லா மாட்டேன் என்பது போல் இருக்க அவள் கண்களில் இருக்கும் நேர்மையும் உண்மையும் விரும்பி பெண்ணவளை நேசித்தவன் இன்று தன் காதலை கொன்ற அந்த உண்மையை பெரிதும் வெறுத்தான்.



“all the best...” தன் காதல் தோற்று போன நேரத்திலும் கூட பெண்ணவள் காதல் ஜெய்க்க வேண்டும் என்பதற்காய் தன் மனவேதனையை மறைத்துக் கொண்டு கூறியவன் சடுதியில் அங்கிருந்து கிளம்பி விட்டான்.



அவள் கண்கள் பேசும் உண்மையைத்தான் வெறுத்தானே ஒழிய பெண்ணவளை அவனால் வெறுக்க முடியவில்லை. முதல் காதல் அவனுள் ஆழமாய் அழுத்தமாய் பதிந்து போனது. காலம் மாறினாலும் அதன் வடு மாறாது.



செல்லும் அவனை சில கணங்கள் பார்த்திருந்தவள் பாதி வழியிலே வீட்டிற்கு திரும்பி விட்டாள். வாய் விட்டு அழவேண்டும் போல் இருந்தது.



“டேய் ஏன்டா ஒருமாரி இருக்க என்னதான் ஆச்சு... சிஸ்டர் கிட்ட உன் காதலை சொன்னியா... சிஸ்டர் என்ன சொன்னா...” வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த நண்பனை உலுக்கிக் கொண்டிருந்தனர் மஹத்தின் தோழர்கள்.



“அவன் கொஞ்ச நேரம் ப்ரீயா இருக்கட்டும் நீங்க வெளியில போங்க நான் ஜாய்ன் பண்ணிக்கிறேன்...” மற்ற நண்பர்களை வெளியில் அனுப்பி விட்டு அவனருகில் வந்து அமர்ந்தான் அகில். அவனின் உயிர்த்தோழன்.



“சிஸ்டர் என்ன சொல்லுச்சுடா...” நண்பனின் கரத்தை ஆதரவாய் பற்றிக் கொண்டு கேட்டான்.



அதில் அவனை நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் இருந்து அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீர் உடைப்பெடுக்க அவன் மடி சாய்ந்து கொண்டவன் காத்திருந்த காதல் கொடுத்த வலியை தாள முடியாமல் கதறி அழுதான்.



“வேற ஒருத்தனை காதலிக்கிறாளாம்டா... என்னால தாங்கிக்க முடில மச்சான்... உனக்கு தெரியும்ல நான் எந்தளவுக்கு அவளை காதலிச்சேன்னு.. வலிக்குதுடா.. செத்துடலாம் போல இருக்கு... என்னால அவளை மறக்க முடியாதுடா இங்க வச்சிருந்தேன்...” இதயத்தை தொட்டுக் காட்டி கதறிய நண்பனின் கதறலை அவனால் தாங்கிக் கொள்ளமுடியவில்ல. எப்போதும் சிரித்த முகமாய் அமைதியுடன் கூடிய அட்டகாசத்துடன் வலம் வரும் நண்பனின் அழுகையை அவனால் கண்கொண்டு பார்க்க முடியவில்லை.



“மச்சி அழாதடா... அவ இல்லன்னா இந்த உலகத்தில வேற பொண்ணே இல்லையாடா உன் அழகுக்கு வசதிக்கு முக்கியமா உன் குணத்துக்கு ஏத்தமாதிரி பொண்ணு கண்டிப்பா உனக்கு கிடைப்பா மச்சி.. அழாதடா என்னால தாங்கமுடில...” அழுகுரலில் கூறினாலும் இன்றுடன் அவன் இந்த நிகழ்வை மறக்கட்டும் இன்றே மொத்தமாய் அழுது முட்டிக்கட்டும் என்பது போல் அவன் தோளையும் தடவிக் கொடுத்தான்.



துக்கத்திலும் தோள் கொடுப்பான் தோழன் அதை மெய்ப்பித்தான் அந்த உண்மையான தோழன்.



அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் குறைய அகிலை நிமிர்ந்து பார்த்தவன் “என்கிட்ட என்ன இல்லன்னுடா அவ என்னை பிடிக்கலன்னு சொன்னா...” பரிதாபமாய் கேட்டான்.



“அவளுக்கு கண்ணு இல்லடா இல்லன்ன உன்னை போய் பிடிக்கலன்னு சொல்லுவாளா..” கோபத்தில் அவன் கடுகடுக்க, அவனை முறைத்து வைத்தான் மஹத்.



“அவளை மரியாதை இல்லாம பேசாதடா... அவளை காதலிச்சது என்னோட இஷ்டம் மாதிரி அவ வேறொருத்தனை காதலிக்கிறதும் அவளோட இஷ்டம் தானே மச்சான். நான் அவளை காதலிக்கிறேங்றதுக்காக அவளும் என்னை காதலிக்கனும்னு எந்த அவசியமும் இல்லையே.. கடவுள் இன்னார்க்கு இன்னார்னு எப்போவே தீர்மானிச்சிட்டான் போல.. அதான் விதிப்படி நடக்குது...” தன் வேதனையை விழுங்கிக் கொண்டான்.



காலத்தின் கைகளில் அனைவரும் பொம்மைகளே... அது ஆட்டுவிக்க நாம் ஆடவேண்டும்... அது தான் விதி என்கையில் யாரால் அதை மாற்றி அமைக்க முடியும்..



*****



வெட்கத்தில் சிவந்த கன்னங்கள்... கண்களில் கசிந்த காதல் என தன்னையே விழியகற்றாமல் பார்த்த பெண்ணவளை பார்த்து தொண்டையை செருமினான் ஆர்யன்.



‘சே... இப்பிடியாடி பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்க்கிற மாதிரி பார்த்து வைப்ப... கொஞ்சங்கூட அறிவேயில்லடி உனக்கு...’ தன்னை கடிந்து கொண்டவள் மானசீகமாய் தலையில் தட்டி பார்வையை விலக்கிக் கொண்டாள்.



அதில் ஆசுவாசமாய் மூச்சுவிட்டவன் “உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்...”



“ஷிகாயா... என் பெயர்... பெயரை சொல்லியே கூப்பிடுங்க... அதான் முன்னாடியே சொன்னீங்களே பேசனும்னு எதுவா இருந்தாலும் பரவாயில்ல சொல்லுங்க...” சிறு தயக்கம் இருந்தாலும் தன் மனம் கவர்ந்தவனிடம் பேச வேண்டும் என்ற ஆவல் உந்தி தள்ளியதில் படபட பட்டாசாய் பேசுபவள் அவனிடமும் அப்படியே பேசினாள்.



அவள் பேச்சில் இளம் புன்னகையினை சிந்தியவன் “என்ன படிக்கிறீங்க...” என்றான். எப்படி ஆரம்பிப்பது என புரியாமல் பேச்சினை ஆரம்பித்தான்.



“பிளஸ்டூ எக்ஸாம் எழுதிட்டேன்...”



அதை கேட்டதும் ஆடவனுக்கு தன்னவளின் நினைவு தான் வந்து தொலைத்தது. மறக்கத்தான் முயல்கிறான் ஆனால் முடியவில்லையே. அவளும் எக்ஸாம் எழுதியிருப்பா... எப்பிடி எழுதினால்னு தெரியலையே... முதலில் கலங்கியவனின் இதழ்கள் பின்பு புன்னகை சிந்தியது. அவள் தான் பெரும் படிப்பாளி ஆயிற்றே... அதெல்லாம் நன்றாக எழுதி நல்ல மார்க் எடுத்து விடுவாள்... தன்னவள் நினைவில் பெருமிதம் கொண்டது ஆடவனது காதல் நெஞ்சம்.



“என்னங்க...” ஷிகா மெல்லிய குரலில் அழைக்க தன்னவள் நினைவில் இருந்தவனுக்கு அவள் குரல் செவியினை தீண்டவில்லை.



மீண்டும் அவள் அழைக்க அதில் நினைவு கலைந்தவன் அவளை நோக்கி திரும்பினான்.



“பேசனும்னு சொன்னீங்களே... நேரமாயிடிச்சு வீட்ல தேடுவாங்க...” என்ன நினைப்பானோ என்ற தவிப்புடன் மெல்லிய குரலில் முணுமுணுப்பாய் கூறினாள்.



“அதுவந்து... தயவுசெய்து இனிமே என்னை இப்பிடி பார்க்காதீங்க... நான் விரும்புற பொண்ணு மட்டுந்தான் என்னை உரிமையா பார்க்கனும்னு ஆசைபடுறேன்...” என்றான் சிறு புன்னகையுடன்.



ஷிகா அவன் சொல்ல வருவது புரிந்தும் புரியாமலும் குழப்பத்துடன் அவனை நோக்கினாள்.



“புரில...”



“நான் ஒரு பொண்ணை விரும்பிறேன்... அவ மட்டும் தான் என்னை ஆர்வமா பார்க்கனும்னு ஆசைபடுறேன்...” அவள் பார்க்கவே மாட்டாள் என்று தெரியும் இருந்தும் பார்த்திட மாட்டாளா என்ற அடி ஆழ்மனதின் ஏக்கம் வார்த்தையாய் வெளிப்பட்டது.



அதை கேட்டு உள்ளம் துடிக்க அவனை பார்த்தாள். நெஞ்சுக்குள் எதுவோ உடைவது போல் இருந்தது. அவனை பார்த்து பார்த்து காதலை வளர்த்தாலே. ஏன் அவனுக்கு என்னை பிடிக்கவில்லை. ஒருவேளை அந்த பெண் அத்தனை அழகோ.. அழகை பார்த்து தான் ஆண்களுக்கு காதல் வருமா.. ஏன் தான் அழகாயில்லையா.. ஏன் இவருக்கு என்னை பிடிக்கவில்லை. அன்று கல்லூரியில் என்னை பார்த்து பாடினாரே... இப்போது ஏன் மாற்றிபேசுகிறார்... ஒருவேளை என்னை சீண்டிப்பார்க்க விளையாடுகிறாரோ...



உள்ளுக்குள் பல கேள்விகள் ஓட இறுதியாய் தோன்றிய கேள்விக்கு விடையறிய அவனை பார்த்தவள் “பொய் தானே சொல்றீங்க...” ‘பொய் என்று சொல்லிவிடுங்களேன்’ என ஊமையாய் கதறிய நெஞ்சத்துடன் அவனை தவிப்புடன் ஏறிட்டாள்.



அவளை பார்க்க பாவமாய் இருந்த போதிலும் உண்மை அது தானே. அவன் மதுவை தானே உயிருக்குயிராய் நேசிக்கிறான். இதோ அவளை விட்டு விலகிய பின்னும் கூட அவள் மேல் கொண்ட காதலை மறக்க முடியாமல் துடிக்கிறானே... அந்த காதல் பொய்யில்லையே.



முதல் முதலாய் அவள் இதழ் பட்ட சட்டையை இன்று வரையிலும் பத்திரமாய் வைத்திருக்கிறானே அது பொய்யில்லையே. அவளின் கண்ணீர் கரைகள் பட்ட சட்டையை பார்த்து தினமும் வேதனை கொள்கிறானே அது பொய்யில்லையே. அவள் பார்த்து மகிழ்ந்த ரோஜா செடிகளை தினமும் பார்த்து மகிழ்கிறானே அதுவும் பொய்யில்லையே.





இப்படி அனைத்தும் பொய் இல்லை எனும் போது அவளிடம் எப்படி அதை பொய் என்பான். பொய் என்று வாய் வார்த்தையாய் கூட சொல்லமுடியவில்லையே அவனால். பொய்க்காக கூட அவனால் அதை பொய் என்று சொல்லமுடியவில்லை.



பெண்ணவள் மட்டுமல்ல ஆடவனும் கூட நித்தமும் அந்த உயிர்வாதையை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றான். அது சத்தியமான உண்மை.



“முன்ன பின்ன தெரியாத பொண்ணுக்கிட்ட பொய் சொல்லமாட்டேன்.” அவளை அந்நியப்படுத்திக் கூறினான்.



அதில் உதடு துடிக்க அவனை பார்த்தவளுக்கு அழ வேண்டும் போல் இருந்தது.



அவள் அவனை அந்நியமாய் நினைக்கவில்லையே. தன்னவாய் தானே அவள் அவனை நினைக்கின்றாள். அவனை பார்த்த நாள் முதல். தினம் அவன் நினைவில் தானே உழல்கிறாள். இரவின் தூக்கத்தில் அவனை நினைப்பவள் மறுநாள் விடியலில் அவன் நினைவுடன் தானே கண்களை திறக்கின்றாள். இப்படி ஒவ்வொரு நொடியும் அவள் அவன் நினைவில் இருக்க அவனோ அவளை பார்த்து நீ யாரோ நான் யாரோ என்கிறான்.



அதை ஜீரணிக்க முடியவில்லை அவளால். தோழிகளிடம் கூட கூறாமல் பொத்தி பொத்தி வளர்த்த காதலை ஒரு நொடியில் சுக்குநூறாய் உடைத்து விட்டானே.



“உங்களுக்கு ஏன் என்னை பிடிக்கல... நீங்க விரும்பிற பொண்ணு என்னை விட அழகா இருப்பாங்களா...” ஏக்கமாய் வெளிவந்தது அவள் வார்த்தைகள்.



ஏக்கத்துடன் கேட்டவளிடம் ‘ஆம்’ என பட்டென்று சொல்லமுடியவில்லை அவனால். உதடு துடிக்க கண்கள் கலங்க அவள் நின்ற தோற்றம் ஏனோ அவனை அசைத்துப் பார்த்தது. மனதினுள் அழுத்தமாகவும் பதிந்தது.



“ப்ளீஸ் சொல்லுங்க” அவன் அமைதியினை தாங்கமுடியாமல் கேட்டாள்.



“ஆமா ரொம்ப அழகா இருப்பா...” இருந்தும் சொல்லிவிட்டான். அது பெண்ணவள் கன்னத்தினில் கோடாய் கண்ணீரை இறங்க செய்தது.



புறங்கையால் அதை துடைத்துக் கொண்டவள் “அது தான் அன்னைக்கு அந்த பாட்டை பாடினீங்களா...”



‘ம்’ தலையாட்டி ஆமோதித்தான்.



“அவங்களும் உங்களை காதலிக்கிறாங்களா...”

இதற்கு என்ன பதிலை சொல்வதென்றே அவனுக்கு தெரியவில்லை. அவள் அவனை அளவுக்கு அதிகமாய் காதலிக்கிறாள் தான். ஆனால் இப்போது காதலிக்கிறாளா என்றால் அது கேள்விக்குறி தான். ஆனால் காதலித்தது உண்மை தானே. அதற்கும் ஆமோதிப்பாய் தலையசைத்தான்.



அதை கேட்டு உள்ளம் துடிக்க கேட்டுக் கொண்டவள் “நாம காதலிக்கிறவங்கள விட நம்மள காதலிக்கிறவங்க கிடைச்சா வாழ்க்கை சந்தோசமா இருக்கும்னு சொல்லுவாங்க...”



அதை கேட்டு அத்தனை நேரம் இருந்த இலகுத்தன்மை மறைய சிறு கடுமையுடன் அவளை பார்வையிட்டவன் “அதை நானும் உனக்கு சொல்லலாமில்லையா...” என்றான் கண்டிப்புடன்.



“என்னால உங்களை மறக்க முடியாதே...” அவன் கோபம் அவளை பாதிக்க தவிப்புடன் கூறினாள்.



“என்னாலையும் என் காதலியை மறக்கமுடியாது..” கண்டிப்புடன் கூறினான்.



“காலம் எதையும் மாத்தக்கூடியது...” காதல் தோல்வி கொடுத்த வலியில் வார்த்தையை விட்டாள்.



“ஏய்...” அதை கேட்டு சுறுசுறுவென கோபம் பொங்க அவளை அறைவதற்கு கையை ஓங்கி விட்டான்.

“இனியொரு வாட்டி இந்த மாதிரி பேசின பொண்ணுன்னு கூட பார்க்கமாட்டேன்... அடிச்சி பல்லை கழட்டிடுவேன்... இனிமேல் கொண்டு என் கண்ணு முன்னாடி பட்ட” விரல் நீட்டி எச்சரித்தவன் மறுநொடியே அங்கிருந்து கிளம்பி விட்டான்.



சீறிக்கொண்டு சென்ற வண்டியின் வேகத்திலே அவன் கோபம் பெண்ணவளுக்கு புரிந்தது. அதனால் கவலையுடன் அவன் செல்லும் வழியை பார்த்தாள். ‘இத்தனை வேகத்துடன் செல்கிறாரே... கடவுளே நீ தான் காப்பாத்தணும்’ அவன் மேல் அவள் கொண்ட அளவில்லா காதல் அவன் வேகத்தினை பார்த்து பயத்துடன் கடவுளிடம் வேண்டிக் கொண்டது.



‘நான் என்னைக்கும் உங்களை மறக்க மாட்டேங்க... ஒரு நாள் இல்ல ஒரு நாள் நீங்களே என்னை தேடி வருவீங்க... அந்த நாளுக்காக காத்திருப்பேன்...’ மனதினுள் காதலுடன் எண்ணிக் கொண்டாள்.



ஆர்யன் மதுபாலாவின் மேல் கொண்ட காதல் எத்தனை உண்மையோ அதே போல் தான் ஷிகா அவள் மேல் கொண்ட காதலும்.



விதி யாரை இணைக்கப்போகின்றதோ.....



****



தன் பின்னால் நின்றவனை பாய்ந்து கட்டிக் கொண்டாள் ஷாஷி. உடல் அழுகையில் குலுங்கியது. அதிர்ந்த நெஞ்சம் இன்னும் சமன்படவில்லை. அவனை தழுவி இருந்த கைகளின் நடுக்கத்தை அவனால் உணரமுடிந்தது. ஆறுதலுடன் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டவள் அவள் தலையை வருடிக் கொடுத்தான்.



ஷாஷியின் ஒவ்வொரு அசைவையும் கவனிக்க தன் நண்பர்கள் இருவரை அவள் வீட்டின் முன் காவல் காக்க சொல்லியிருந்த ரோஹன் நண்பர்கள் அவள் தனியாய் எங்கோ செல்கிறாள் எனக்கூறவும் அவளை சந்தித்து பேசுவதற்காய் அவள் வீட்டின் அருகில் வந்துவிட்டான்.



நண்பர்களிடம் அவள் சென்ற வழியை கேட்டறிந்து சென்றவன் அங்கு அவள் அசையாது நிற்பதையும் அவள் முன் நின்றவர்களையும் பார்த்து விபரீதம் புரிய அவளருகில் சென்று தோளில் கை பதித்து தன் புறம் திருப்பி இழுத்து அணைத்துக் கொண்டான்.



“ஒன்னுயில்லடா... பேபி அழாத நான் தான் இருக்கேன்ல... என்னை மீறி யாராவது உன்மேல கை வைக்க விட்டிடுவேனா... பாருடா...” அவள் முகத்தை நிமிர்த்தியவன் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டான்.



அவன் நிமிர்ந்து பார்த்தவள் “நீங்க மட்டும் வரல்லைன்னா...” அந்த நினைவே அவள் நெஞ்சத்தை உலரச்செய்ய நடுக்கத்துடன் நின்றிருந்தாள்.



அதில் மீண்டும் அவளை இழுத்தணைத்து தனக்குள் புதைத்துக் கொண்டவன் “அதான் நான் வந்திட்டேன்ல அழாதடா...”



“ம்ம்...” முணுமுணுப்புடன் தலையசைத்தவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.



“குட் கேர்ள்...” சிரிப்புடன் அவள் நெற்றியில் மோதியவன் இருகைகளாலும் அவள் முகத்தை தாங்கினான்.



“இனிமே நீ என்னைக்கும் அழ கூடாது... நீ அழுதா என்னால தா..ங்க முடியாது பேபி...” குரல் கரகரக்க கூறியவனின் காதல் அவளை பிரம்மிக்க வைத்தது.



இதற்கு இன்னமும் இருவரும் தங்கள் காதலை பரிமாறிக்கொள்ளவில்லை. ஆனால் ஒருவரின் காதலை மற்றவர் முழுமையாய் உணர்ந்திருந்தனர். சொல்லாத காதல் செல்லாது என்பதை இவர்கள் இருவரினது காதலும் உடைத்தெறிந்து இருந்தது. இங்கு இவர்களின் சொல்லப்படாத காதல் விருட்சகமாய் ஓங்கி வளர்ந்திருந்தது.



“என்னை பிடிச்சிருக்கா பேபி...” கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு மழை நாளில் தான் அவளிடம் கேட்டிருந்தான். அன்று என்ன சொல்வதென தெரியாமல் பயத்தில் ஓடிப் போய்விட்டாள்.



இரண்டு வருடங்களுக்கு பின் அன்றிருந்த காதல் சிறிதளவும் குறைவில்லாமல் இருக்க அதே கேள்வியை மீண்டும் தன்னவளிடத்தில் கேட்டான்.



அன்று சொல்ல முடியாது பயத்தில் தவித்தவள் இன்று வெட்கத்தில் அவன் முகம் காண முடியாமல் தலை குனிந்தாள். வெட்கத்தில் செந்நிறமாய் மாறிய அவளின் முகத்தை ஆவலுடன் பார்த்தவன் அதை மென்மையாய் தடவிக் கொடுத்தான்.



“பதில் சொல்லு பேபி...” கிசுகிசுப்பாய் ஒலித்தது அவன் குரல்.



அதில் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் சிறகடித்து பறக்க தொண்டைக்குழி காதல் அவஸ்தையில் ஏறியிறங்க இதயம் படபடப்பில் தாறுமாறாய் அடித்துக் கொண்டது.



‘ம்’ வெட்கத்துடன் லேசாய் தலையசைத்தாள்.



“இப்பிடி நாளா பக்கமும் தலையாட்டினா நான் என்னன்னு நினைக்க... பிடிச்சிருக்குன்னா இல்லை பிடிக்கலைன்னா...” விடையறிந்தும் குறும்பாய் கேட்டான் அந்த குறும்புக்காரன்.

“பிடிச்சிருக்குன்னு தான் அர்த்தம்...” அவனை போலவே முணுமுணுப்பாய் கூறியவள் வெட்கத்துடன் அவன் மார்பிலே சாய்ந்து கொண்டாள்.



அதில் வாய் விட்டு சிரித்தவன் “இதுக்கு ரெண்டு வருஷம் ஆயிடிச்சில்ல...” சிரிப்புடன் கூறினாலும் காத்திருந்த தவிப்பு அப்பட்டமாய் வெளிப்பட்டது. அதில் கவலையுடன் அவனை பார்த்தாள் ஷாஷி. அதில் தன் கவலையை மறந்தவன் “அதான் இப்போ சொல்லிட்டியே... ரொம்ப சந்தோசமா இருக்கு பேபி...” அவளை சமாதானப்படுத்தினான்.



மடியில் இருந்த தலையணையில் முழங்கையை வாகாய் சாய்த்து அதில் முகம் பதித்து இன்று மாலை நடந்த நிகழ்வுகளை முதலில் கசப்புடனும் பின்பு இனிமையுடன் எண்ணிப்பார்த்துக் கொண்டிருந்தாள் ஷாஷி.



அவள் மகிழ்ச்சியினை வடிக்க வார்த்தைகளே இல்லை என்பது போல் இருந்தது. அத்தனை சந்தோசத்துடன் இருந்தாள். தன்னவனிடத்தில் தான் காதலை சொல்லிவிட்டதில். இன்றே கூட மரணித்தாலும் அதை சந்தோசத்துடன் ஏற்க தயாராய் இருந்தது அவள் காதல் நெஞ்சம்.



மூன்று தோழிகளும் மூன்று விதமான மனநிலையில்.



ஒருத்தி காதல் தோல்வியில் துவண்டு கொண்டிருக்க இன்னொருத்தி காதல் நிறைவேற மனதோடு வேண்டிக் கொண்டிருக்க மற்றவளோ காதல் கூறிவிட்ட களிப்பில் இருந்தாள்.



இவர்கள் மூவருக்கும் விதி எதை வைத்து காத்திருக்கின்றதோ.



“போ போ என்

இதயம் தரையில் விழுந்து சிதறி போகட்டும்

போ போ என்

நிழலும் பிரிந்து என்னை தனிமை ஆக்கட்டும்

கோவம் உன் கோவம் என்

நெஞ்சை கொன்று போக

கண்கள் என் கண்கள்

கண்ணீரில் நனையுதே

போதும் போதும் எப்போதும் உன் நினைவுகள்

பாவம் என் உள்ளம் சொல்லாமல் கரையுதே

காயத்தை கண்டு கொண்டு பார்த்திட முடியும்

வலியை கண்டிட கண்கள் இல்லை..”



சிதறும்




plz drop ur valuable comments...

ஷம்லாவின் "சிதற வைத்த செம்பாவையாள்" -கருத்து திரி
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
'சிதற வைத்த செம்பாவையாள்'



அத்தியாயம் ௦6



ஆறு வருடங்கள் கடந்த நிலையில்...



நள்ளிரவு நேரம்... வானை பிளந்துகொண்டு பேய் மழை கொட்டிக் கொண்டிருக்க அதற்கு இணையாய் இடியோசையும் மின்னலொளியும் காதை கிழித்துக்கொண்டு கொண்டும் இருள் போர்வையை விலக்கி கண்களை தாக்கிக் கொண்டும் சென்றது.



இருள் போர்வையில் மின்விளக்கின் ஒளியில் அந்த இடம் பரபரப்பாய் காணப்பட்டது.



“ஹா... ஹல்... ஹலோ போலீஸ் ஸ்டேஷன்...” பதற்றத்துடன் அலைப்பேசியில் அழைப்பு போய் கொண்டிருந்தது.



அடுத்த சில நிமிடங்களில் கடமையே கண்ணியமாய் சைரன் ஒலியுடன் அந்த இடத்தை சூழ்ந்து கொண்டது போலீஸ் ஜீப்கள். அதனுடன் அவசரமாய் வரவழைக்கப்பட்ட ஆம்புலன்ஸ்.



ஜீப்பில் இருந்து இறங்கி கொட்டும் மழையில் குடையின் கீழ் நின்று கொண்டிருந்த மேலதிகாரியின் அருகில் பதட்டத்துடன் சென்றான் காளிதாஸ்.



“ரொம்ப கொடூரமா கொன்னிருக்கான் சார்... பத்து நிமிசத்துக்கு முன்னாடி தான் கொன்னுட்டு வெளிய போயிருக்காங்க...”



“கேஷவ் பத்தி தகவல் கிடைச்சதா?... CM ஓட பிரெண்டு... CM லைன்ல வந்திட்டு இருக்காரு... மேலிடத்தில இருந்து ப்ரெஷர் வந்துக்கிட்டே இருக்கு....”



“இல்ல சார் காம்பவுண்ட் முழுக்க தேடிப்பார்த்திட்டோம்... டியூட்டி ஸ்டாப்ஸ்கிட்டயும் விசாரிசிட்டோம்... எந்த தகவலும் கிடைக்கல... எல்லாரையும் ஹால்ல உக்காரவச்சிருக்கேன்... கூடிய சீக்கிரம் கண்டுபிடிச்சிடலாம் சார்...”



“சார்....” மழை நீரில் சறுக்கிக்கொண்டு சென்ற கால்களை தரையில் ஊன்றி கதறிக் கொண்டு ஓடி வந்தான் அவன்.



“சார்... கொன்னுட்டாங்க சார்... நல்ல.... நல்லவன்... நல்லவன் சார்... கொன்னுட்டாங்க... நல்லவனை... கொன்னுட்டாங்க...” ACP ரத்னவேலின் அருகில் சென்று ஒப்பாரி வைத்தான் அவன்.



அதற்குள் இரண்டு ஆண் செவிலியர்கள் ஸ்ட்ரச்சரில் இறந்தவனின் உடலை தள்ளிக்கொண்டு வந்தனர்.



சோவென பெய்ந்து கொண்டிருந்த மழையில் மூடியிருந்த வெள்ளை துணியின் மேலாய் ரத்தம் வடிந்து வெள்ளை நிற துணி சிகப்பாய் மாறிக் கொண்டிருந்தது.



துணியை அகற்றி அந்த உடலை பார்த்த ரத்னவேலின் கண்கள் ஒரு கணம் மூடித்திறந்தது. கொடூரமான மரணம். வெறி கிளம்பியது அவனுள். போலீஸ் வர்க்கத்திற்கே உரிய மூர்க்கத்தனமான வெறி.



அதற்கு மேல் உடலை வைத்திருக்காமல் ஆம்புலன்ஸில் ஏற்றி ஜிஹெச்சிற்கு கொண்டு செல்லப்பட்டது. அதை பார்த்திருந்த ரத்னவேலின் கண்கள் இதற்கு காரணமானார்களை கண்டுபிடிக்க வேண்டும் எனும் அதீத வெறியுடன் மின்னியது...



******



சில்லென்ற குளிர் உடலை ஊடுருவிச் செல்ல வழமைக்கு மாறான குளிர் உடலை துளைத்து நடுங்க செய்த போதிலும் ஈரப்பசையுடன் கூடிய அந்த இயற்கை காற்று உள்ளத்தினுள் புது வர்ணஜாலத்தை நிகழ்த்த அணிந்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை இன்னும் இறுக்கமாய் தன் உடலோடு பிணைத்துக்கொண்டு சூடு பறக்க தேய்த்த கைகளை மார்புக்கு குறுக்காய் கட்டிக் கொண்டு ஜன்னல் கம்பியில் தலை சாய்த்திருந்தாள் மதுபாலா.



இருபத்து நான்கு வயது இளம்பாவை. ஒய்லியான உடல்வாகு. முன்பைவிட அழகாய் மின்னிய செந்நிறத்து மேனி. படிப்பு கொடுத்த களை. முன்னை காட்டிலும் நேர் கொண்ட பார்வையும் தலைநிமிர்ந்த நடையும் அவள் அழகுக்கு மிகையாய் அழகு சேர்த்தது...



அதற்குள் பஸ் நின்றிருக்க தன் பையுடன் கீழிறங்கியவள் ஊட்டியின் குளுமையை ஆழ்ந்து அனுபவித்தாள். இத்தனை நாட்களாய் வேலை வேலையென ஓடிக் கொண்டிருந்தவளுக்கு இப்போது கிடைத்த ஓய்வு சற்று ஆறுதல் அளிப்பது போல் தான் தோன்றியது.



லோ காலேஜில் அவளுடன் ஒன்றாய் படித்த தோழி ஒருத்தியின் திருமணம். வருந்தி அழைத்திருந்தாள். மறுக்க முடியவில்லை. தந்தையிடம் ஒருவழியாய் சம்மதம் வாங்கியவளுக்கு தாயிடம் சம்மதம் வாங்குவது தான் பெரும்பாடாய் இருந்தது.



வக்கீல் தொழில்.. அவளுக்கு ஜூனியராய் ஐவர் அவளுடன் இருக்கின்றனர். குறுகிய காலத்திலே பெயர் சொல்லும்படியாக உயர்ந்திருந்தாள். அவள் பேச்சு அதில் இருக்கும் கடினம் நேர்ப்பார்வை என பாரதி கண்ட புதுமை பெண்ணாய் இருப்பவளை பார்த்தாலே அனைவருக்கும் சற்று நடுக்கம் தான்.



முன்பிருந்த கலகலப்பு சற்று குறைந்திருந்தது. பேச்சும் கூட. தேவைக்கேற்ப மட்டுமே இப்போதெல்லாம் பேசப் பழகி இருந்தாள். ஒருவனை தவிர.



அவள் அண்ணன் மகன் ஹர்ஷித். ஹர்ஷு கண்ணா... செல்லக்குட்டி.. பட்டுக்குட்டி... ஹரி... வித விதமாய் அவனை அழைத்து கொண்டாடுவாள். அவள் உலகமே அவன் தான். அவனை பார்த்தாலே தன்னை மறந்து விடுவாள். அத்தனை பாசம் அவன் மீது. அவனின் மழலை மொழியில் தன் ஜீவனையே இழந்து விடுவாள்.



பிறந்த அன்று அவனை கைகளில் தூக்கிய போது அவள் மனப்பாரம் அத்தனையும் கரைந்து போவது போல் தான் இருந்தது. அவன் சிரிப்பில் அவள் தூக்கம் தூரம் போய்விடுவது போலவே இருந்தது. அவன் ஒவ்வொரு செய்கையிலும் பெண்ணவள் புதிதாய் பிறந்தாள்.



இப்போது அவனுக்கு ஐந்து வயது. அனைவரையும் சமாதானப்படுதியவளால் அவனை தான் சமாதானப்படுத்த முடியவில்லை. அழுது கரைந்து விட்டான். அவனை பிரிந்து அவளால் எப்படி இருக்க முடியாதோ அது போல் தான் அவனும். ஒருநிமிடம் கூட அவளை பிரிந்து இருக்கவே மாட்டான். அவன் அழுத அழுகையில் மனம் கரைய தன் பயணத்தை நிறுத்த முயன்ற பாலாவை மீரா தான் வற்புறுத்தி அனுப்பிவிட்டிருந்தாள்.



அதை நினைத்து பார்த்தவள் தோழியின் வீட்டிற்கு போய் முதல் வேலையாய் ஹர்ஷுவிற்கு அழைத்து பேச வேண்டும் என எண்ணிக் கொண்டாள். இப்போதும் அழைக்கலாம் தான்... இரவு முழுவதும் போனை நொண்டிக் கொண்டே வந்ததில் அதன் பேட்டரி காலியாகி செயலிழந்திருந்தது.



“பாலா” சந்தோச மிகுதியில் தோழியை பார்த்து உற்சாக கூவலிட்ட படி ஓடிவந்து கட்டிக் கொண்டாள் ஆர்த்தி.



நினைவு வலை அறுபட “ஆரு” பதிலுக்கு தானும் அவளை கட்டிக் கொண்ட பாலா “கல்யாண வேலை எப்பிடி போகுது... அம்மா அப்பால்லாம் எப்பிடி இருக்காங்க...” பொதுவாய் விசாரிக்க, அதற்கு விடைகூறி சிரித்தவள் தோழியை காரில் ஏற்றிக்கொண்டு சலசலத்தபடி வர புன்சிரிப்புடன் காரில் சாய்ந்து அமர்ந்து அவள் பேசுவதை கேட்டுக் கொண்டாள் பாலா.



ஊட்டியின் கொண்டையூசி வளைவுகளில் லாவகமாய் சென்ற காரினுள் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்த பாலாவிற்கு இது புது அனுபவமாகவே தோன்றியது. இடைப்பட்ட இத்தனை வருடங்களில் படிப்பு வேலை என அதன் பின்னே ஓடிக் கொண்டிருந்ததில் வெளியில் செல்லவோ ஊர் சுற்றவோ நேரமில்லாது போய்விட்டது.



அவள் எடுக்கும் கேஸின் பின்னால் ஓடவே அவளுக்கு நேரம் பத்தாது இதில் எங்கே அவள் ஊர் சுற்றப்போவது.



ஆர்த்தியின் வீட்டின் முன் வண்டி நிற்க அதிலிருந்து இறங்கியவள் மகளின் வரவிற்காய் பதட்டத்துடன் வாயிலில் காத்திருந்த ஆர்த்தியின் அன்னையை ஓடிச்சென்று கட்டிக் கொண்டாள்.



ஆர்த்தி சென்னையில் கல்லூரியில் சேர்ந்த போது அடிக்கடி மகளை பார்க்க அங்கு வரும் பஞ்சவர்ணமும் மாணிக்கமும் அவளுக்கு இன்னொரு அம்மா அப்பா தான் என்பதால் அவர்களுடன் இலகுவாய் ஒட்டிக் கொள்வாள்.



“பஞ்சு என்ன இப்பிடி இளைச்சு போய்ட்ட... வேளாவேளைக்கு சாப்பிட மாட்டியா... பாரு இடுப்பு சதை கூட அரைக்கிலோ கொறஞ்சு போய்டிச்சு... இந்த ஆரு என்ன பண்றா உன்னை கவனிக்கிறத விட்டிட்டு” அவரை வம்பிழுத்த படி தன் லக்கேஜை வெளியில் எடுத்துக் கொண்டிருந்த தோழியின் அருகில் சென்று அதை தான் இறக்கி வைத்தவள் அவளின் காதை பிடித்து திருகியபடி அவளை தள்ளிக்கொண்டு வந்தாள்.



“கல்யாணம் பண்ணிக்கப்போற பொண்ணு வெள்ளையும் சொள்ளையுமா இருந்தா மட்டும் போதாது ஒல்லியாவும் இருக்கணும்... நீ தின்னு தின்னு மாமூடை இப்பிடி உடம்ப வளர்த்து வச்சிருக்க... உன்னை கவனிக்க வேண்டியதால பஞ்சு எப்பிடி இளைச்சு போய்ட்டா... உன்னை பெத்த அம்மாவை இப்படித்தான் கொடுமை பண்ணுவியா... உன்னை பெத்தத தவிர அவங்க வேற என்ன பாவம் பண்ணாங்க...” வேலைப்பளு குறைந்ததில் இலகுவான மனதுடன் அவர்கள் இருவரையும் சீண்டி சிரிக்க வைத்தவள் தனக்காக ஒதுக்கப்பட்ட அறையினுள் நுழைந்து கொண்டாள்.



பாலாவின் கலகலப்பான பேச்சில் மகளின் திருமண வேளையில் பதட்டமாய் இருந்த பஞ்சவர்ணம் வாய்விட்டு சிரிக்க பாலாவின் பேச்சினை கேட்டுக் கொண்டு உள்ளே நுழைந்த மாணிக்கத்தின் முகத்திலும் சிரிப்பின் சாயல். காலங்கள் மாறினாலும் ஆளின் இயல்பான குணம் அவளுள் தான் ஒளிந்திருந்தது. வெளியுலகில் தன்னை கம்பீரமாய் காட்டிக் கொண்டவள் மனதளவில் இப்போதும் பதின் வயது குழந்தை தான்.



அறைக்குள் நுழைந்து முதல் வேலையாய் மொபைலை சார்ஜ் ஏற்றியவள் அண்ணிக்கு அழைத்தாள்.



அழைப்பை ஏற்ற மீரா அவள் குசலம் விசாரிக்க அவளோ “ஸ்டாப் ஸ்டாப்... அண்ணி முதல்ல ஹர்ஷுகிட்ட கொடுங்க...” என்க,



அதை கேட்டு சிரித்தபடி மகனிடம் செல்போனை கொடுத்த மீரா வெளியில் இருந்து கணவன் அழைக்கும் சத்தத்தில் வெளியேறி விட்டாள்.



“ஹர்ஷு கண்ணா எப்பிடி இருக்கீங்க.... காலைல என்ன சாப்டீங்க... மம்மி புவ்வா கொடுத்தாங்களா... எங்க பேபி சமத்தா சாப்பிட்டீங்களா...” கேள்விக்கணைகளை தொடுத்துக் கொண்டு செல்ல மறுமுனையில் இருந்து அவளின் கேள்வி ஒன்றிற்கும் பதில் வரவில்லை.



“என் செல்லக்குட்டிக்கு என்மேல கோபமா... அப்போ நான் போனை வைக்கட்டுமா...” அழுவது போல் அழுகுரலில் கேட்க, அதற்கு மேல் அவளிடம் பேசாமல் இருக்கமுடியவில்லை அந்த சின்ன சிட்டுக்கு..



“அழாத ஹெனி... நான் பேசுதேன்...” இன்னமும் மழலை மாறாத குரலில் கூறிச்சிரிக்க, அதை கேட்டு அலைபேசியின் வழியாலே தன் பாசமான முத்தத்தை அனுப்பி வைத்தாள்.



“உன் ஹெனி முத்தா கொடுத்தால்ல அப்போ நீங்களும் முத்தா கொடுக்கணும்ல... எங்க முத்தா கொடுங்க பார்க்கலாம்...” என சிறு குழந்தையாய் மாறி கெஞ்ச,



அதை கேட்டு தன் குட்டி இதழ்களை செல்போனில் ஒற்றி எடுத்த “உம்மா...” கொடுத்தான் ஹர்ஷு.



அந்த ஈரமுத்தத்தை தன் கன்னத்திலே உணர்ந்தது போல் தாய்மை பெருக்குடன் மகிழ்ந்து போனாள் அவள்.



“சரி.. பேபி மோர்னிங் என்ன சாப்டீங்க...”



“நான் நெதைய ஷாக்கி சாப்ட்டேன் ஹெனி...” குலுக்கிச் சிரித்தது அந்த குட்டி வாண்டு.



அதை கேட்டு தானும் சிரித்தவள் “நிறைய ஷாக்கி சாப்பிட கூடாது கண்ணா... இனிமே கொஞ்சம் தான் சாப்டனும்... என்ன ஓகேவா... ஷாக்கி கொடுத்த அம்மாக்கு ரெண்டு பஞ்ச் கொடுங்க.. போங்க....” என விரட்ட,



“அத்தோ ஹெனி... மம்மி ஷாக்கி தரல்ல... மாமு தான் மம்மி தெதியாம ஷாக்கி கொடுத்தா...” ரகசியம் போல் யாருக்கும் கேட்கா வண்ணம் மெல்லிய குரலில் கூற,



அதை கேட்டு முதலில் புரியாது விழித்தவள் பின்பு புரிந்ததற்கு அடையாளமாய் அவள் இதழ்கள் சன்ன புன்னகை சிந்தியது.



“அப்போ மாமுக்கு ரெண்டு பஞ்ச் கொடுங்க...” குறும்புக் குரலில் கூற, அதை கேட்டு “ம்ம்...” தலையாட்டிய வாண்டு தன் அருகில் செல்போனை ஸ்பீக்கர் மோடில் போட்டு ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த ஆர்யனின் மார்பில் இரண்டு குத்து குத்தி குலுங்கி சிரித்தான்.



அத்தனை நேரம் மௌனமாய் அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தவன் அக்காள் மகன் மார்பில் குத்தியதும் “பேபி... மாமு இனிமே ஷாக்கி வர தரமாட்டேன்...” என சிறுகுழந்தை போல் முறுக்கிக் கொள்ள,



அதில் எங்கே மாமன் ஷாக்கி வாங்கி தராமல் இருந்துவிடுவானோ என பயந்து சட்டென அவன் மடியில் ஏறிக் கொண்டவன் அவன் முகத்தில் தன் அச்சாரத்தை பதித்தான். ஈர இதழ்கள் முகத்தில் பட அதில் அருவருப்படையாமல் அதை பொக்கிஷமாய் சேமித்துக் கொண்டவன் சின்னவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்..



அதற்குள் ஆதி மகனை அழைக்க வர தந்தையை கண்டதும் உற்சாகம் கரைபுரண்டு ஓட தந்தையின் தோளில் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்ட ஹார்ஷித் அத்தையை மறந்தவனாய் தந்தையுடன் கீழிறங்கி சென்று விட்டான்.



ஹர்ஷித் சென்றதும் ஒரு நொடி தயங்கிய ஆர்யன் செல்போனை காதில் வைத்துக் கொண்டான்.



“எப்பிடி இருக்க ஹனி...” பல நாட்களின் பின்னான உரையாடல். ஒருவித தயக்கத்துடன் கேட்டான்.



அதில் மறுபக்கம் அமைதி காத்தது. இருந்தும் சுதாகரித்துக் கொண்டு “நான் நல்லா இருக்கேன் நீங்க...” என்றாள் சம்பிரதாயமாய்.



“ம்... ஐயம் குட்... அங்க ரொம்ப கூல் கிளைமேட்னு கேள்விப்பட்டேன் ஒன்னும் ப்ரோப்லேம் இல்லையே...” கேட்கலாமா வேண்டாமா என பல முறை யோசித்திருப்பான் போலும் என அவன் தயக்கத்துடனான கேள்வியிலே அதை புரிந்து கொண்டாள் பாலா.



“இல்ல.. நத்திங் டு வொர்ரி...” என்றவள் “உங்க பிசினஸ் எப்பிடி போகுது... எல்லாம் ஓகேவா...” அவளுக்குமே அடுத்த என்ன பேசுவது என்று புரியாததால் மனதில் தோன்றியதை கேட்டு விட்டாள்.



“யா... கொயிங் வெல்... அட்வகேட் மதுபாலா எடுத்து நடத்தின எந்த கேஸ் தோத்து போயிருக்கு...” சாதாரணமாய் உரைத்தாலும் அதில் பெருமையே நிரம்பி வழிந்தது.



அதை கேட்டு சங்கட புன்னகை பூத்தவள் “அப்பிடியெல்லாம் இல்ல... உங்க பக்கம் சாட்சி எல்லாம் பக்காவா இருந்தது சோ தீர்ப்பு உங்களுக்கு சாதகமா வந்திச்சு அவ்ளோ தான்... இதில நான் பண்ணது உங்களுக்கு சார்பா வாதடினது மட்டும் தான்..” தன்னடக்கத்துட கூறினாள்.



ஆர்யன் புதிதாக ஆரம்பித்த வியாபாரத்தில் சில குடைஞ்சல்காரர்கள் சிக்கல் வர அது கோர்ட் வரைக்கும் இழுத்தடித்துக் கொண்டு போகவே அவள் தான் அதற்கு சார்பாய் வாதாடி அதை மீட்டுக்கொடுத்தாள்.



அதை நினைவில் வைத்து தான் அவன் அப்படி கூறியது. அதற்கு மேல் என்ன பேசுவது என தெரியாததால் முதலில் சிறிது தயங்கியவள் “உங்க காதலி என்ன பண்றாங்க....” என்று கேட்டே விட்டாள்.



சில நாட்களாக மனதினை அரித்துக் கொண்டிருந்த கேள்வி. கேட்டதும் தான் ஓரளவுக்கு ஆறுதலாய் இருப்பது போல் இருந்தது.



அதை கேட்டு அதிர்ந்தவனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. அப்படி ஒருத்தி இருந்தாலாவது சொல்லிவிடலாம். அவனுக்குத்தான் அப்படி ஒருத்தியே இல்லையே. அவனின் உண்மையான முதல் காதல் அவள் தானே. இப்போது அப்படியொரு காதலி... என எண்ணும் சடுதியில் தோன்றி மறைந்தது அவள் முகம்.



ஆறு வருடங்களுக்கு முன் கண்ணீர் கரையுடன் தன் முகம் பார்த்தவளின் முகம் தான் மின்னி மறைந்தது. அதில் திடுக்கிட்டு போனவனுக்கு தன் மனதின் எண்ணத்தினை புரிந்து கொள்ளமுடியவில்லை.



ஆனால் அவன் இதழ்களோ அந்த வார்த்தையை உச்சரித்தது அவனையும் அறியாது...



“எனக்காக காத்திட்டு இருப்பா...”



*****



ரீலியன்ஸ் மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிடல்.. புகழ்பெற்ற மருத்துவமனை.. நம்பிக்கை என்ற வார்த்தைக்கு பெயர் பெற்ற மருத்துவமனை.



அந்த மருத்துவமனையின் ஐசியூயினுள் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்தாள் ஒரு இளம் வயது பெண். அவளால் அந்த வலியினை தாங்கிக்கொள்ள முடியவில்லை. திருமணமாகி இரண்டு வருடங்களின் பின் உண்டான கரு. அதனால் பல்லைகடித்து வலியை பொறுத்துக்கொண்டாள்.



மருத்துவர்கள் சிறிது பதட்டத்துடனே இருந்தனர். அப்போது அந்த அறைக்குள் நுழைந்தாள் அவள். அவளை பார்த்ததும் தான் அவர்களுக்கு போன உயிர் வந்தது போல இருந்தது. அந்த பெண்ணின் அருகில் சென்று அவளை பரிசோதித்தவள் குழந்தை சில நொடிகளில் வெளிவந்துவிடும் எனும் நிலையில் அவளின் கைகளை ஆறுதலாய் பற்றிக் கொண்டாள்.



வேலைக்கு சேர்ந்த இந்த ஒன்றரை வருடங்களில் பல கேஸ்களை பார்த்திருந்த அனுபவம் அவளை பெரிதும் மெருகேற்றி இருந்தது.



“பயப்படாதீங்க... காம்... மூச்சை இழுத்து விடுங்க... புஷ் பண்ணுங்க... அப்பிடித்தான்... பயப்படாதீங்க....” வலியில் துடித்தவளை ஆறுதல்படுத்தி குழந்தையை வெளியில் எடுத்து விட்டாள்.



குழந்தை வெளியில் வந்ததும் வலி பொறுத்துக் கொண்டவளின் கண்கள் அதற்கு மேல் திராணியின்றி மெதுவாய் மூடிக் கொள்ள மயக்கத்திற்கு சென்றுவிட்டாள். அந்த பெண்ணை பரிசோதித்து பார்த்து “நார்மல் வார்டுக்கு மாத்திடுங்க...” என்றுரைத்தப்டி ஐசியூயினுள் இருந்து வெளியேறினாள் ஷிகாயா.



தோழிகளால் செல்லமாய் ஷிக்கு.. ஷிகா என அழைக்கப்படும் ஷிகாயா இப்போது பேர்பெற்ற மகப்பேறு மருத்துவர்.



இவள் வருகைக்காக வராண்டாவில் காத்திருந்த அந்த பெண்ணின் கணவனை பார்த்தவள் அவன் முகத்தில் இருந்த தவிப்பையும் துடிப்பையும் பார்த்து அவனருகில் சென்றாள்.



“மிஸ்டர் ஹாரிஸ்... உங்க ரெண்டு குழந்தைங்களும் சேப்... பட் கொஞ்ச நாளைக்கு கவனமா பார்த்துக்கோங்க....” என்க,



“டாக்டர் ரெண்டா,...” அவன் இழுக்க,



“உங்க மனைவியையும் சேர்த்து சொன்னேன்....”



“ஓஹ்...” நிம்மதி பெருமூச்சுடன் “தேங்க்ஸ் டாக்டர்...” நட்புடன் கூறியவன் “பார்க்கலாமா..” தயக்கத்துடன் இழுக்க,



“நார்மல் வார்டுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க அப்போ போய் பாருங்க... நர்ஸ் குழந்தையை கொண்டு வருவாங்க....” என்றபடி கம்பீர நடையுடன் தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

தன் இருக்கையில் வந்து அமர்ந்தவள் அதில் கண்மூடி சாய்ந்து கொண்டாள். அந்த பெண்ணின் கதறலும் அவள் கணவனின் தவிப்பையும் பார்த்தவளுக்கு மனதினுள் ஏக்கமாய் இருந்தது.



தனக்காக அவனும் இப்படி துடிப்பானா என அலைபாய்ந்த மனதை கட்டும்படுத்தும் வழி தெரியாது எதற்கோ பயந்து இன்னும் இறுக்கமாய் கண்களை மூடிக் கொண்டவளின் விழியோரத்தில் இருந்து ஒற்றை துளியாய் கண்ணீர் சிதறியது.



கிட்டத்தட்ட ஏழு வருடக்காதல். நிறைவேறுமா என்று கூட தெரியாமல் மனதினுள் பொத்தி வைத்த காதல். இதோ இந்த நொடி கூட அவன் தன்னை தேடி வரமாட்டானா என ஏங்கிக் கொண்டு தான் இருக்கின்றாள். வருவானா அந்த நம்பிக்கை தான் நாளுக்குநாள் குறைந்து கொண்டே செல்கின்றது.



அறைக்கதவு தட்டப்படும் ஓசையில் நாசுக்காய் கண்களை துடைத்துக் கொண்டவள் “எஸ் கம் இன்” குரல் கொடுக்க அவள் அறையினுள் நுழைந்தாள் பவி. அவளின் தோழி. குழந்தைநல மருத்துவர். இதே மருத்துவமனையில் தான் அவளும் பணிபுரிகின்றாள்.



“ஷிகா... கான்டீன் போலாமா...” என்றபடி அங்கிருந்த இருக்கையில் அமர,



“அதுக்குள்ள பேஷண்ட்ஸ் பார்த்திட்டியா பவி...” சந்தேகமாய் தோழியை பார்த்து கேள்வியெழுப்பினாள்.



“ரஞ்சித் பார்த்திட்டு இருக்கார்... நான் சீக்கிரம் போகனும் இப்போ நீ வரபோரீயா இல்லையா...” படபடப்பாய் பொரிய, அவள் பேச்சு அவளின் பள்ளிக்காலத்தை நினைவு படுத்தியது. அதுவும் அவளின் உயிர்த்தோழிகள் பாலா.. ஷாஷி அவர்களை நினைத்ததும் அவளையும் அறியாமல் இதழ்களில் புன்னகை ஒட்டிக் கொண்டது.



“எதுக்குடி இப்போ தனியா சிரிக்கிற... எதுவும் பிரச்சினை இல்லையே...”



“இப்போ எதுக்கு ஓவர் சீன் க்ரியேட் பண்ற என்ன சொல்லணுமோ நேரடியா சொல்லு...” அவளின் அழுகுணி ஆட்டத்தை கண்டுபிடித்தவளாய் ஷிகா கடுப்புடன் கூற,



அதில் அசடு வழிந்தவள் “எப்பிடி டி கண்டுபிடிச்ச...” சோகமாய் கேட்டு வைத்தாள்.



“அதான் உன் மூஞ்சியிலே எழுதி ஒட்டியிருக்கே சொல்லு...”



“இல்லடி...”



“ஒன்னுயில்லையா அப்போ போ..”



“ப்ளீஸ்டி சொல்றத முழுசா கேட்டுத்தொலை... அதுக்கப்றம் நீ எவ்ளோ கடுப்படிச்சாலும் நான் கேட்டு தொலைக்கிறேன்...”



“ம்ம்” அவள் சொல்வதை கேட்கும் விதமாய் அவள் முகத்தை உற்று நோக்கினாள். அதில் அவளை முறைத்து வைத்த பவி ‘இவளை’ பல்லை கடித்துக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.



“விக்கிக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்காம்... அவன் பேரண்டஸோட உன் வீட்டுக்கு வர தயாரா இருக்கான்... நல்லா படிச்சிருக்கான்... உன்னை ரொம்ப விரும்புறான்.. முக்கியமா அவனும் உன்னை மாதிரியே டாக்டர்... அதுவும் பேமஸ் நியூரோலோஜிஸ்ட்... இதுக்கு மேலயும் நீ என்ன எதிர்பார்க்கிற...” காட்டத்துடன் கேட்டாள்.



அதை கேட்டு விரக்தி புன்னகை சிந்தியது அவள் இதழ்கள். இதற்கு மேலும் அவள் எதிர்பார்ப்பது இந்த விக்ரமிடத்தில் எதுவுமில்லை அவள் எதிர்பார்ப்பது வேறு ஒருவனிடத்தில் அல்லவா... ஆர்யன்... அவளுள் காதலை தோற்றுவித்தவன். காதல் என்ற உணர்வை உணர வைத்தவன். அவனிடம் தானே அவள் எதிர்பார்க்கின்றாள். அவன் காதலை. ஆனால் கிடைக்குமா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது. கிடைக்க வேண்டும் என காதல் மனம் ஏங்கியது.



‘கண்டிப்பா உங்க காதல் எனக்கே எனக்கானதா கிடைக்கும்... இப்போ கூட நான் உங்களுக்காகத்தான் காத்திருக்கேன்... எப்போ என்னை தேடி வருவீங்க...’ வேதனையுடன் எண்ணிக் கொண்டது அவள் உள்ளம்.



*****



“ஹாய் எவ்ரி படி
விஷ் யூ ஹேப்பி நியு இயர்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
காலேஜு டீன் ஏஜு் பெண்கள்
எல்லோருக்கும் என் மீது கண்கள்
இளமை இதோ இதோ
இனிமை இதோ இதோ
வாலிபத்தில் மன்மதன்
லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன்
ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள்
நிகர் ஏது் கூறுங்கள்
நான் பாடும் பாட்டை கேளுங்கள்
கைத்தாளம் போடுங்கள்”




விலையுயர்ந்த கார். அதில் அமர்ந்திருந்த மூவர். ஒலித்துக் கொண்டிருந்த பாடல். அதற்கேற்ப ஆடிய உடல். வாயில் அரைபட்டுக் கொண்டிருந்த ஸ்நாக்ஸ். ஆட்டமும் பாட்டமுமாய் மூவரும் உற்சாகமான மனநிலையில் காரில் அமர்ந்திருந்தனர். முகத்தில் ஆனந்த தாண்டவம்.. காணாததை கண்ட ஆர்பரிப்பு. சொல்ல முடியா உணர்வது. அப்படியொரு பெயரறியா உணர்வுக்குவியலில் தான் அவர்கள் மூவரும் சிக்கி இருந்தனர்.



“கேப்டன்”



“ஆன்...”



“அடுத்த ட்ரிப் எல்லாம் இந்த மாதிரி சின்ன சின்ன வண்டில வரக்கூடாது...”



“ம்ம்ம்”



“அடுத்த தடவ வரும்போது பி.எம்.டபுள்யூல தான் வரணும்...” ஒலித்த கொண்டிருந்த பாடலுக்கேற்ப உடல் தாளம் போட சிரிப்புடன் கூறினான் கணேஷ்.



“அப்படீங்கற...”



அட்டகாச சிரிப்புடன் அதை ஆமோதித்து தலையசைத்த கேப்டன் “முதல்ல லைசென்ஸ் வாங்குவோம் அப்றோம் விதவிதமா காரு... காரு ட்ரைவிங் சீட்டில சாரு... சாரு பக்கத்தில் உக்கார்ந்து பாரு...” பாவனையுடன் கையசைத்து கூற, அத கேட்டு அவர் முதுகில் தட்டினான் ஷக்தி. அத்தனை நேரம் பாடலுக்கேற்ப ஆடிக் கொண்டிருந்தவன்.



“கேப்டன்... ஓட்றவங்களுக்கு தான் லைசென்ஸு... உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்” என கலகலத்து சிரித்தான்.



அதை கேட்டு நமுட்டு சிரிப்பு சிரித்த கேப்டன் “ஒகே ஒகே ஒகே... ஹா ஹா ஹா....” வெடித்துச் சிரிக்க மற்ற இருவருக்கும் கூட வெடித்துக் கொண்டு கிளம்பியது சிரிப்பு.



சிரித்து முடித்து மூச்சு வாங்கியபடி ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவர்களின் முகத்தில் மர்மப்புன்னகை பூத்தது. மூவரின் பார்வையும் ஒருசேர தாங்கள் அமர்ந்திருந்த காரினை சுமந்து செல்லும் லாரி ட்ரக்கினை பார்த்தது. இதழ்க்கடையில் சிரிப்பு தவழ்ந்தது.



“சிறகுகள் வந்தது எங்கோ செல்ல

இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல

நினைவுகள் ஏங்குது உன்னை காணவே

கனவுகள் பொங்குது எதிலே அள்ள

வலிகளும் சேர்ந்தது உள்ள கெள்ள

சுகங்களும் கூடுது உன்னை தேடியே

உன்னை உன்னை தாண்டி செல்ல

கொஞ்ச காலம் கொஞ்ச தூரம்

கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ

உன்னை உன்னை தேடி தானே

இந்த ஏக்கம் எந்த பாதை இந்த

பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ”



சிதறும்...




plz drop your valuable comments bangarams

ஷம்லாவின் "சிதற வைத்த செம்பாவையாள்" -கருத்து திரி
 
Status
Not open for further replies.
Top