All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் “ரகசியமாய்...” கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதா டாக்ஸ்...

நலம்... நலம் அறிய ஆவல்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க?? ரொம்ப நாள் கழிச்சு திரும்பி வந்து இருக்கேன். நீங்க கேட்டுகிட்டே இருந்த கதையோட வந்து இருக்கேன்.

கதை போடாத பொழுது அடிக்கடி ஆன்லைன்ல வர முடியல. அதுனால என்னை டாக் பண்ணின பதிவுல கண்ணுல பட்டத்துக்கு எல்லாம் ரிப்ளை பண்ணிட்டேன். ஏதாவது விட்டு இருந்தா இந்த பச்ச மண்ணை உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு மன்னிச்சிடுங்க.

எல்லாரும் கடந்த சில மாதங்களாக லாக் டவுனில் நமக்கே தெரியாமல் மன அழுத்தத்தில் இருக்கிறோம்.. அந்த மன அழுத்தம் முழுசும் குறைஞ்சு என்னைக்கு திரும்ப பழைய மாதிரி நிலைமைக்கு திரும்புவோம்னு எல்லாரையும் போல நானும் காத்துகிட்டு இருக்கிறேன். இந்த கொரானாவால் பாதிக்க பட்டு இருப்பவர்கள் அதிகம். அதைவிட நெருகிய உறவுகள், நட்புகளை இழந்து தவிப்பவர்களும் அதிகம். எப்படி ஆறுதல் சொல்வதே என்று தெரியாத ஒரு நிலை தான். மிக நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கும் இழப்புகளில் இருந்து மீண்டு வர முடியாமல் இருபவர்களுல் நானும் இருக்கேன். கடந்து வர முடியாமல் மனம் தவிக்கிறது. வேறு வழி இல்லாமல் கடந்து வர வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இந்த நிலை மாற பிராத்தனைகள் பல கடவுளிடம்.

"ரகசியமாய்!!!" - என்னுடைய ஐந்தாவது கதையை வரும் வியாழன் முதல் (ஜூலை 22) ஆன்லைனில் பதிவிட போகிறேன். செய்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று தினங்களில் பதிவிடப்படும்.

இந்த கதையை பொறுத்தமட்டில் இது ஒரு ரகசியங்கள் நிறைந்த, திருப்பங்கள் கொண்ட ஒரு கதை களம். (கதை முழுசும் விளையாட்டு தான்... சீக்ரெட் விளையாட்டு...).

விதியின் ஜாலத்தில் சில நேரங்களில் எண்ணிலடங்கா ரகசியங்கள் யாரும் அறியாமல் மறைந்த கிடக்கின்றன. மறைந்த கிடக்கின்ற பல ரகசியங்களில் இருந்து தங்களுக்கு தேவையான ரகசியகளை கண்டறிய நம் மாந்தர்களின் தேடுதல் வேட்டையே கதையின் களம். என்னுடைய நாலு கதைக்குமே இவங்க தான் ஹீரோ, இவங்க தான் ஹீரோயின் சொல்லி தான் ஆரம்பிச்சேன். ஆனால் இந்த கதையில அப்படி சொல்ல முடியாது. ஏன்னா கதையோட களம் அப்படி.

இந்த கதையில கீழ் இருக்கிற ஐந்து பேருமே ஒரு விதத்தில நம்பளோட மனசுல இருப்பாங்க. ஐவரே இந்த கதையில் நம்முடன் சேர்ந்து பயணிக்க போகும் மாந்தர்கள்.

வருண் சார்வரிக்
அங்கித் பிரியன்
துவன்யா கிருஷ்ணக்குமார்
விருஷா
அன்றில் பிரியா


எல்லாரும் ரெடி ஆகிக்கோங்க... வியாழகிழமையில இருந்து திரும்பவும் நம்ப மீட் பண்ணலாம்.

இந்த கதைக்களம் முழுவதும் முழுக்க முழுக்க கற்பனையே... கற்பனையை தவிர வேறு எதுவும் இல்லை..

எப்பொழுதும் போல இந்த கதைக்கும் உங்களது ஆதரவை தாருங்கள். உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கும்..

ஸ்ரீநிதா…
 

Attachments

Shalini M

Bronze Winner
புது கதைக்கு வாழ்த்துக்கள் ஶ்ரீ... 🌷🌷🌷

எப்போ எபி போட போரிங்க..... update படிக்க வெயிட்டிங்......😍😍😍😍😍😍💃💃💃💃💃💃
 

Shalini M

Bronze Winner
ஶ்ரீ ரகசியமாய் டைட்டில் வித்தியாசமா அழகா இருக்கு....😍😍😍😍

அந்த pic எல்லா ரகசியத்தையும் ஒழிச்சு வச்சிருக்கு போலையே..... என்னவா இருக்கும் ...🤔🤔🤔.....

கதைல அப்படி என்ன எல்லாம் ரகசியம் ஒளிஞ்சுருக்கு ........ கதாப்பாத்திரம் பெயர் எல்லாம் ரொம்ப யுனிக் அஹ் இருக்கு......

ஆக மொத்தம் இந்த கதைல யாரு ஹீரோ ஹீரோயின் ne தெரியாம என்ன ரகசியம் எல்லாம் இருக்குனு எங்களை சுத்தல் ல விட போரிங்க ....... அதானே ஶ்ரீ......😤😤😤😤😤😤😤

வெயிட்டிங் ஃபார் தி அப்டேட் ஶ்ரீ..... ....💓💓💓💓💓
 
Top