All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

16 என் கலாப காதலா

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
16 கலாப காதலா
சித் பர்த்டே பார்ட்டி அமர்க்களமாக நடைபெற சிறிது நேரத்திலேயே அங்குள்ள சூழ்நிலை பூர்ணிக்கு பழக்கியது...
நிகழ்ச்சி முடிந்து இரவு மூன்று மணி அளவில் மூவரும் சித்தார்த் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்...
" வெல்கம் டூ அவர் சீவிட் ஹோம் டியர் "
என சித் பூர்ணி கைபிடிக்க
அவனின் வீட்டினை கண்ட பூர்ணி அதிர்ச்சி யுடன் சற்று பயந்தும் போனாள்....
" இவ்வளவு பெரிய வீட்டுல நீங்க மட்டும் தனியாவா இருக்கிங்க "
" நீயும் கூட இரு நாம இரண்டு பேரும் சேர்ந்து இருக்கலாம் "
அவளை பார்த்து கண்ணடித்து கூற
" டேய் போதும் வாங்கடா உங்க இம்ச தாங்க முடில "
என அஜய் கத்த
தன்னிலை அடைந்த இருவரும் உள்ளே சென்றனர்..
" நேத்து லவ் பண்ணதுங்கலாம் ரொமன்ஸ் பண்ணி சுத்துங்க நாமலும் ஒன்ன லவ் பண்ணுறமே ஏதாச்சும் கேக்குறால பாரு "
என முனுமுனுக்க
" என்ன மச்சான் எதாவது பேசுனியா "
" ஒன்னுமே இல்ல மச்சான் போங்க போய் தூங்குங்க "
அஜய் சென்று ஒரு அறையில் படுக்க
பூர்ணி தயங்கிபடி அந்த வீட்டிறிருந்த ஹாலில் நின்று கொண்டு இருந்தாள்...
" பூர்ணி வா நம்ப ரூம்க்கு போகலாம் "
அப்போதும் தயங்கியபடி நிற்க அவளது தயக்கத்திற்கான காரணம் அறிந்தவன்..
முறைப்புடன்
" நான் ஒன்னும் அவ்வளவு மோசமானவன் இல்ல நம்பி வரலாம் "
அவனின் கோபம் அறிந்தவள் ஒன்றும் பேசாமல் அவன் கைபிடித்து அறைக்கு சென்றாள்...
உள்ளே சென்றவளின் எதிரில் ஆளுயர பூர்ணி போட்டோ ஒன்று கண்ணில் பட்டது...
ஆச்சரியமாக
" இந்த போட்டோ "
" உன் போட்டோ தான் ஏன் அடையாளம் தெரியலயா "
" அதலா தெரியுது உங்களுக்கு ஏது "
" உன் போன் வாட்ஸ்அப் டிபி யா வைச்சுறுந்த அதான் இது "
அவள் அதனை உற்று பார்க்க அவளை பின்னிருந்து அணைத்தவன்
" எப்படி இருக்க என் ராட்சசி "
" கொஞ்சம் சுமாரா தான் இருக்க "
" போடி இந்த ஃபோட்டோ பார்த்து விழுந்தவன் தான் இன்னும் எழுந்திரிக்கல "
பேசி கொண்டே அவளது இடையை இறுக்க
அவனின் செய்கையை அறிந்தவள்
" யாரோ ஒருந்தவங்க நான் அவ்வளவு மோசம் இல்லனு சொன்னாங்க "
" ரொம்ப மோசம் இல்ல தான் கொஞ்சம் மோசமானவன் தான் "
என சிரிக்க
தன்னவளை தன் பக்கம் திருப்பி நெருக்கமாக நின்று தாடை பிடித்து
" பர்த்டே பாய்க்கு கிஃப்ட் இல்லையா "
அவனின் சட்டையை பிடித்து
" என்ன வேணும் "
" சத்தமே இல்லாமல் ஒரே ஒரு முத்தம் "
அவனின் கண்ணை பார்த்தவள் கண்ணால் சம்மதம் தர தன் இதழ் கொண்டு தன்னவள் இதழை சிறை பிடித்தான்....
நீண்ட நேரம் கழித்து தன்னிலை அடைந்தவன் அவளை விடுத்து
" இதுக்கு மேல இங்க இருந்தா ரொம்ப மோசமானவனா மாறிடுவேன் மா நான் அஜய் கூட தூங்குறேன் நீ இங்க படுத்துக்கோ "
அவன் சென்றவுடன் நடந்ததை நினைத்து ஒரு பக்கம் வெட்கமும் மறு பக்கம் சந்தோஷமும் இணைய மறுநாளை நினைத்து கொண்டு உறங்கினாள்.....
மறுநாள்
" சித்து சித்து எழுந்திரிங்க "
" ஏய் மச்சான் சும்மா இரு டா "
என சித் அவளின் கையினை தட்டி விட்டு தூங்க
" மச்சானா சித்து நான் பூர்ணி எழுந்திரிங்க "
என அவனை உலுக்க
கண்களை கசக்கி கொண்டு எழுந்தவன் முன்பு எழில் ஓவியமாக பூர்ணி நின்றாள்...
" வாவ் காலையிலேயே என்ன ஒரு தரிசனம் "
" ம்ம் அதலா இருக்கட்டும் எழுந்து கிளம்புங்க "
" இரேன் டி என் பட்டு புடவையில எவ்வளவு அழகா இருக்கா கொஞ்சம் நேரம் ரசிக்க விடேன் "
" எல்லாம் அப்புறம் ரசிக்கலாம் எழுந்திருச்சு குளிங்க "
பிடித்து குளியல் அறையில் தள்ளிவிட்டு சிரிப்புடன் அவன் அணிய வேண்டிய ஆடைகளை எடுத்து வைத்துவிட்டு சென்றாள்...
குளித்து முடித்து வந்தவன் கட்டில் மேல் இருக்கும் ஆடைகளை கண்டு சிரிப்புடன் எடுத்து பார்க்க அதனை கண்டு
" பூர்ணிணிணி....... "
கத்த
பதறிய பூர்ணி வேகமாக அவனது அறைக்கு வந்தாள்....
" என்னாச்சு ஏன்‌ இப்படி கத்துறிங்க "
" என்ன டி இது "
என கையில் இருந்த ஆடையை தூக்கி காட்ட
" பார்த்தா தெரியல டிரஸ் "
" அது தெரியுது எனக்கு ஏன் எடுத்த "
" கோயில் போலானு வேஷ்டி சட்ட எடுத்தேன் "
" நீ எடுத்தது தப்பு இல்லமா அது எனக்கு போட தெரியுமானு கேட்டியா "
அர்த்தம் புரிந்தவள் உதட்டை மடித்து சிரித்து
" கட்ட தெரியாதா "
" தெரியாது "
என கூற
" சரி கொடுங்க நான் கட்டி விடுறேன் "
" போடி மாட்டேன் "
" அடங்கப்பா ரொம்பதான் சரி நான் சொல்றேன் அதுபடி கட்டுங்க "
" நீ திரும்பி சொல்லு நான் கட்டுறேன் "
அவள் திரும்பி நின்று கொண்டு கூற ஒருவாறாக அவன் கட்டி முடித்தான்...
திரும்பியவள் சரி செய்து அவனை ஆண்மகனே அழகு அதுவும் வேட்டி சட்டையில் சொல்லவா வேண்டும் சொக்கி நின்றவளை சொடுக்கிட்டு அழைத்தான்...
" இப்படியே பார்த்துட்டு இருந்தா நடக்க போற எதுக்கும் நான் பொறுப்பில்ல "
அவன் கூறியபின் அவசரமாக திரும்பியவள் " சரி கிளம்பலாம் "
என கூறி அவன் கைபிடித்து வெளியே அழைத்து வந்தாள்...
டைனிங் டேபிளில் அவனை உட்கார வைத்தவள்
" ஏதோ சுமாரா தான் செய்சேன் ஓவரா ஓட்டாமா சாப்பிடனும் "
" நீ விஷத்த கொடுத்தா கூட சாப்பிடுவேன் ‌"
" விஷம்லா இல்ல அத விட கொஞ்சம் கொடுமை தான் இருக்கும் "
அவளின் உணவு சுமாராக இருந்தாலும் போதும் வீட்டு சாப்பாடு அதுவும் தன்னவளின் கையில் அவனுக்காக சமைத்தது என சித் ஒன்று கூட விடாமல் சாப்பிட்டான்....
இருவர் கிளம்பி கோயில் சென்று வர நல்ல தரிசனம் சித் நினைத்து இருந்தால் உள்ளே சென்று சாமி பார்த்து இருக்கலாம் ஆனால் பூர்ணி விடவில்லை மக்களோடு மக்களாக நின்று காத்திருந்து சாமி கும்பிட்டால் தான் திருப்தி என கூற அதன்படியே அவனும் நடந்தான்....
" முடிஞ்சுதா "
" ம்ம் முடிஞ்சுது நல்ல சாமி தரிசனம் "
" சரி சரி வீட்டுக்கு போய் டிரஸ் மாத்திட்டு அஜய் லஞ்ச் கூப்பிட்டான் போலாம் "
சரி என இருவரும் வீடு சென்று உடை மாற்றி விட்டு அஜய் சொன்ன ரெஸ்ட்ராண்ட் வர அஜய் அவர்களுக்காக காத்திருந்தான்...
" எங்க டா போன "
" வையிட் அங்கே பார் "
என வாசலை காட்ட அங்கு நித்யா வந்தாள்...
" ஹேய் நித்யா "
என சித் கூற முதன்முறையாக நித்யாவை பார்த்தாள் பூர்ணி...
" ஹாய் சித் ஹேப்பி பர்த்டே "
என அவன் கையில் விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை அணிவித்தாள்....
" ஏய் இதலா எதுக்கு‌ "
" இட்ஸ் ஓகே டா us போனேன்ல அங்க வாங்கினேன் "
" நித்யா இது பூர்ணி "
" ஹாய் பூர்ணி ‌"
என நித்யா கை கொடுக்க
" ஹாய் "
என பூர்ணியும் கை குலுக்கினாள்....
" என்னா மச்சி ஸ்லைண்டா இருக்க "
என சித் அஜயிடம் கேட்க
" டேய் சும்மா இரு டா "
என சைகையால் பதில் சொன்னவனை பார்த்த நித்யா
" பின்ன பன்ன வேலைக்கு ஸ்லைண்டா தான இருக்கனும் "
" மறுபடியுமா இந்த தடவ என்ன பண்ணான் "
" காலையல எர்ப்போர்ட் வானு சொன்னா மதியம் வரான் "
சித் அவனை முறைக்க
" முறைக்காத டா தூங்கிட்டேன் நைட்டு புல்லா உன்கூட தான இருந்தேன் அதான் அசந்து போய் "
" எப்ப பாரு ஏதாவது ரிசன் சொல்றதே வேலையா போச்சு சித் இவனுக்கு "
" கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல எப்ப பாரு விளையாட்டு அலட்சியம் ச்ச "
என நித்யா சலித்து கொள்ள..
அஜய் முகத்தை கண்ட பூர்ணி
" அதான் தெரியாம செஞ்சிடேனு சொல்லாறான் ல அப்புறம் ஏன் அஜ்ஜூவ திட்டுறிங்க "
" ஏய் பூரி நீ சும்மா இரேன் டி அவங்க லவர்ஸ் என்ன வேணா பேசிப்பாங்க "
" என் முன்னாடி அஜ்ஜூ திட்டுனா எனக்கு பிடிக்காது "
" அப்படி சொல்லு அம்மு சும்மா சும்மா திட்டாதா டி உன்ன கேள்வி கேட்க என் அம்மு வந்துட்டா "
நித்யா அவனை முறைக்க
" அம்மு நீ ஏதோ வாங்கனும் சொன்னியே வா போலாம் "
என அவளை அழைத்து கொண்டு நழுவினான்...
அவர்கள் சென்றதை முறைத்து பார்த்த நித்யா விடம்
" சாரி நித்யா அஜய்யும் அவளும் ரொம்ப குளோஸ் ஆகிட்டாங்க அவ தெரியாம பேசிட்டா "
" ஏய் சித் கூல் அஜய் நிறைய பூர்ணிமா பத்தி சொல்லிருக்கான் ரொம்ப பாசக்கார பொண்ணு தான் "
" அஜய் அவள அம்முனு கூப்புடுறதுலே உனக்கு புரிஞ்சுறுக்கும் ஏன் இரண்டு பேரும் இவ்வளவு நெருக்கனு "
" பின்பு தெரியாதா அஜய் அவ்வளவு சீக்கிரம் யாரையும் அம்முனு கூப்பிட மாட்டானே எனக்கு புரியுது "
மாலை வர நித்யா அஜய் இருவரும் சொல்லி கொண்டு கிளம்பினர்...
" ஏய் நித்து "
" ஓய் "
" இங்க பாருடி "
" என்கிட்ட பேசாத அஜய் "
" சாரி டி இனி இப்படி பண்ண மாட்டேன் பிராமிஸ் "
" இதோட எத்தன பிராமிஸ் தான் பண்ணுவ "
" ஒவ்வொரு தடவ உன்கிட்ட தப்பு பண்ணி திட்டு வாங்கும் போதெல்லாம் சொல்லுவேன் "
" இந்த பேச்சுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல "
அந்த பக்கம் பார்த்து சிரிக்க
" அப்பாடா ஒரு வழியா சமாளிச்சுடேன் இனி கவல இல்லை "
என மனதில் நினைத்தை படித்தவள்
" நான் ஒன்னும் சமாதானம் ஆகல "
" என்னது சமாதானம் ஆகலயா "
" ஆமா ஆகல என்ன சமாதானம் பண்ணு "
அவளின் கண்களை நேருக்கு நேர் பார்த்தவன்
" பண்ணிட்டா போச்சு "
என அவளை நெருங்க
" மவனே கிட்ட வந்த கொண்ணுடுவேன் "
" நேத்து லவ் பண்ண அந்த சித் பையன்லா ரொமான்ஸ் பண்ணி சுத்துறான் நான் மூன்று வருசமா லவ் பண்ணுறேன் ஒன்னும் இல்ல "
என சலித்து கொண்டவனை இழுத்தவள் இதழ் கொண்டு அவனை அடக்கினாள்.....
மறுநாள் காலை அயர்ந்து உறங்கிய சித்து ஃபோன் அழைக்க எடுத்தவன்
" ஹலோ யாரு "
" அண்ணா அண்ணா நான் பிரியா பேசுறேன் "
" பிரியா சொல்லுமா என்ன காலையிலே கால் பண்ணிருக்க "
" அண்ணா அது வந்து பூர்ணி பூர்ணி "
" பூர்ணி பூர்ணிக்கு என்னாச்சு "
" அவள நைட்டுலேந்து கானும்ணா "
" என்ன சொல்லுற நான் தான அவள ஹாஸ்டல இறக்கி விட்டேன் "
" ஆமானா உள்ள வந்த கொஞ்ச நேரத்திலே ஃபோன் வந்துச்சு பேச வெளியே போனா ஆனா அதுக்கு அப்புறம் வரல நாங்களும் நைட்டு புல்லா தேடுனோம் பட் சாரி ணா "
" ஓஓஓ காட் நைட்டே எனக்கு கால் பண்ணா என்ன "
" சாரிணா உங்க நம்பர் ரீச் ஆகல "
" நீ வை நான் வரேன் "
என்றவன் ஃபோன் வைத்துவிட்டு காரில் கிளம்பி அஜய்க்கு ஃபோன் அடித்தான்...
" மச்சி என்னடா காலையிலே "
" மச்சான் மச்சான் பூர்ணிய காணும் டா "
" என்னடா சொல்லுற "
நடந்ததை சுருக்கமாக சொன்னவன் அவனை கிளம்பி பூர்ணி ஹாஸ்டல் வர சொன்னான்....
" அண்ணா அண்ணா "
" பிரியா பூர்ணி பத்தி ஏதாவது தெரிஞ்சுதா "
" இல்லணா வார்டன் பேச்சிட்டு இருக்காங்க "
அஜய் சென்று வார்டனிடம் பேச விபரம் ஒன்றும் தெரியாததால் போலிஸ் செல்ல முடிவு எடுத்தான்...
உடைந்து உட்கார்ந்து சித்யிடம் சென்றவன்
" மச்சான் போலிஸ்ட போலாம் வா "
" போலிஸ் வேணாம் டா "
" டேய் வையிட் பண்ண வேணாம் நைட்டுலேந்து காணும் ஒன்னும் ஆகாது போலாம் வா "
இருவரும் தங்களை தேற்றி கொண்டு போலிஸ் ஸ்டேஷன் சென்றனர்...
" சார் வாங்க சார் நீ இங்க சொல்லியிருந்தா நாங்களே வந்து இருப்போமே "
என இன்ஸ்பெக்டர் அவனை அறிந்து அவனிடம் பேச
" சார் நாங்க பர்ஸ்னால் பேசனும் "
" சொல்லுங்க சார் எதாவது பிரச்சனையா "
" ஒரு பொண்ண காணும் நைட்டுலேந்து காணும் யாருக்கும் தெரியாம விசாரிக்கனும் "
" யாரு சார் தெரிஞ்ச பொண்ணா "
" சித் லவர் "
விசாரித்து டிடெயில் வாங்கியவன்
" சார் போட்டோ கொடுங்க சார் "
" மச்சி பூர்ணி போட்டோ கொடுடா "
சித் தனது மொபைலை எடுக்க எதார்த்தமாக அங்கு லாக்ப்பில் இருந்த ஒரு கையினை கண்டான...
மனம் உறுத்த அருகில் செல்ல பூர்ணிக்கு தான் போட்ட மோதிரம் தெரிய மெதுவாக அங்கு சென்றான்...
" மச்சான் எங்கடா போற "
அஜயிடம் கை காட்டியவன் கையின் அருகில் சென்ற மனம் முழுதும் அடித்து கொள்ள
" பூர்ணி "
என்றான்...
கம்பியின் அந்த பக்கத்தில் இருந்து எட்டி பார்த்த பூர்ணி
" சித் சித் "
என கூறி அழ
" பூர்ணி "
என கத்தியவன் " ஓபன் பண்ணுங்க ஓபன் பண்ணுங்க "
என கதவை ஆவேசமாக உலுக்க
இன்ஸ்பெக்டர் கண் அசைக்க அங்கிருந்த அதிகாரி லாக்அப் ஓபன் பண்ண
ஒடி வந்து அவனை அணைத்து கொண்டாள் பூர்ணி...
அவனது சட்டையில் முகம் பதித்து கதறியவளை தன்னோடு சேர்த்து இறுக்கி கொண்டவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது......
தொடரும்.....
 
Status
Not open for further replies.
Top