All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருபத்தி நான்காம் பகுதி...

ரஞ்சனி எப்போதும் போல கடைக்கு செல்ல ஆரம்பித்தாள். எப்போதும் ஒரு பெண்ணாக சிறிது பாதுகாப்புடன் இருப்பவள், இப்போது அந்த பாதுகாப்பு வளையத்தை அதிகப்படுத்தினாள்.

பவித்ரன் அன்று, ரஞ்சனி வீட்டிலிருந்து வெளியானதும், மிகுந்த கோபத்தில் இருந்தான்.

இனி அவளாக மன்னிப்பு கேட்டால்கூட எனது வாழ்க்கையில் அவளுக்கு இடமில்லை என தனக்குள் பலமுறை சொல்லிக்கொண்டான்.

இதில் ஒருமாதம் கடந்த நிலையில் பவித்ரனுக்கு மிகப் பெரிய ஆர்டர் கிடைத்தது.


அது அவனுக்கு மிகுந்த சந்தோசமளித்தது. ஆர்வமாக வேலைசெய்தான். அதன் பலன் பன்மடங்கு லாபமானது. அவன் பல புதிய முறைகளை அலுவலகத்தில் முறைப்படுத்தினான்.

அழகிய அமைப்பில் அதே சமயம் நவீன முறையில் மாறிப்போனது பவித்ரன் அலுவலகம்.

பவித்ரன் எப்போதும் போல் இரண்டு மணிநேரம் தொழிற்சாலையில் கழித்தான். தொழிலாளிகள் மத்தியில் தனி மதிப்பைப் பெற்றான்.

அவன் தனது தொழிலிலேயே மூழ்கிப்போனான். சத்யாதேவியின் இறப்பிற்குபிறகு அவன் சம்பாதித்த லாபம் அவனில் தன்னம்பிக்கையை அதிகரித்தது.

தான் செல்லும் வழி சரியானது, என ஒருவனுக்கு உணர்த்துவது, அந்த முறையில் அவன் உயரும் பொழுதுதான். அதை நன்றாக உணர்ந்தான் பவித்ரன்.

ஞாயிறு ஒருநாள் மட்டுமே வீட்டிற்கு சென்றான். மற்ற தினங்களில் உணவு , உறக்கம் எல்லாமே அலுவலகம் என்றானது.

பவித்ரன் மனது உண்மையில் சந்தோசத்தில் திளைத்திருக்கவேண்டும், ஆனால் அவன் சந்தோச தருணத்தில் அடிக்கும் சிகிரெட்டைக்கூட மறந்தான்.

மது பவித்ரனிடம் வார கூட்டத்திற்கு கையெழுத்து வாங்க வந்தாள்.

பவித்ரன் யோசனையாக அமர்ந்திருந்தான். சார்.. சார். சாஆஆஆர் என பலமுறை அழைத்தும், தனது யோசனையிலிருந்து வெளியில் வராதவனாக இருந்தவனை, லேசாக தோளைத்தொட்டு உலுக்கினாள் மது.

டாலி... என சிரிப்புடன் திரும்பியவன் முன் ரஞ்சனியின் முகம் தெரிய, மனதில் மகிழ்ச்சி பரவியது. பலைவனம் ஒரு நிமிடம் பனிமலையாக மாறியதை உணர்ந்தான்.

எல்லாம் ஒரு நொடிதான் , மறுநொடி ரஞ்சனிமுகம் மறைந்து, மதுமுகம் தெரிய அவனது முகம் கூம்பியது.

என்ன.. மது என்றவனிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு சென்றாள் மது.

மது வெளியேறியதும் பவித்ரன் எவ்வளவு தடுத்தும் ரஞ்சனியைப் பற்றி மனது பயணிப்பதை தடுக்க முடியாமல், இதயம் மகிழ்வதை தடுக்கமுடியாமல் அமர்ந்திருந்தான்.

ரஞ்சனியை முதலில் பார்த்தது முதல், அவளது கோபம், பேச்சு, சிரிப்பு, கேலி, ஆளுமை, வெறுப்பு, வெட்கம், என மனம் முழுவதும் அவளது அழகிய பல முகங்களின் ஊர்வலமே.

போனை கையில் எடுத்தவன், தனது தீர்மானம் ஞாபகம் வர போனை திரும்ப வைத்து விட்டான்.

இனி வேலைசெய்ய முடியாது என கருதியவன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான். ரஞ்சனி வீட்டிற்கு...

தனது தீர்மனம் அனைத்தையும் தூக்கிஎரிந்துவிட்டான், சந்தோசமாக....
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சென்னை சென்ரலில் இறங்கிய பவித்ரன், தன் எதிரில் சற்று தொலைவில் சென்ற உருவத்தைப் பார்த்து உறைந்து நின்றான்.

ஒரு நிமிடம் தன்கண்ணை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் நின்றவன், பின் சுய நினைவு பெற்று அந்த உருவத்தின் பின்னே ஓடினான்.

அவனுக்கு ஆட்டம் காட்டிவிட்டு அந்த உருவம் கூட்டத்தில் மறைந்து சென்றது.

அதே நேரம் அவனுக்கு ரஞ்சனியை முதலில் கண்காணிக்க சொன்ன ஏஜென்சியில் இருந்து போன் வந்தது.

அவர்கள் சொன்ன செய்தி, அவன் உடல் சக்தி மொத்தத்தையும் உறுஞ்சியது.

அவனது கண்கள் கலங்கி அங்கிருந்த ஒரு இருக்கையில் தொப்பென அமர்ந்தான்.

தன்னை தாண்டிச்சென்றவர்கள், சிலர் தனது அதிர்ச்சி முகத்தை கவனித்து சென்றதையும் அவன் உணரும் மனநிலையில் இல்லை.

அவன் மனம் ரஞ்சனியின் அருகாமைக்கு மிகவும் ஏங்கித் தவித்தது. முதலில் அவளை பார்க்கும் ஆவளில் வந்தவன், இப்போது, மனதில் எழுந்த குற்ற உணர்வு அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டி அவளிடம் உடனே செல்! என கட்டளையிட்டது.

வேகமாக கிளம்பியவன் மணியைப் பார்த்துவிட்டு, அவளது அலுவலகத்திற்கு விரைந்தான்.

ரஞ்சனியின் கடைக்குள் பவித்ரன் காலடி எடுத்து வைக்கவும், அங்குள்ள சில கண்காணிப்பாளர்கள் அவனை சுற்றி வளைக்கவும் சரியாக இருந்தது.

இந்தக் காட்சி ரஞ்சனியின் அலுவலக அறையில் ஒளிபரப்பப்பட்டதும், இரண்டு கால்கள் மடமடவென கீழ்தளம் நோக்கிவிரைந்தது.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் கடையின் பின்பக்க அறையில் உட்காரவைக்கப்பட்டான். அவனைச் சுற்றி கண்காணிப்பாளர்கள் சிலர் நின்றிருந்தனர்.

சாரி சார்!!! சாரி என்ற அழைப்போடு ராஜா உள்ளே நுழைந்தான். தற்போது அந்த கடை முழுவதையும் நிர்வாகிப்பது அவன் தான்.

அவனை நிமிர்ந்து பார்த்த பவித்ரனின் விழிகள் கேள்வியாய் சுருங்கியது.அதை கண்டு கொண்ட ராஜா , கண்காணிப்பாளர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு பவித்ரன் புறம் திரும்பினான்.

மேடம்.. இல்ல சார். எங்கிட்ட பொறுப்பை கொடுத்து விட்டு மேடம் போயிட்டாங்க என்றான்.

பவித்ரன், என்ன ராஜா??? ராஜாதான உங்க நேம்... எனவும், யெஸ் சார் என்றான் ராஜா பணிவாக..
என்ன நடக்குது இங்க, என்ன எதுக்கு இங்க கூட்டீட்டு வந்திருக்காங்க, என்றான் பவித்ரன்.

அது மேடம் ஆர்டர் சார்.

எது? என்ன இங்க கூட்டீட்டு வந்து ஒக்கார வைக்கிறதா??

இல்ல சார்... அது கடைக்கு உள்ள உங்கள அனுமதிக்கக் கூடாது என மேடம் சொல்லீட்டாங்க, ..

ஓஓஓ. எங்க உங்க மேடம்??

அது யார் கிட்டையும் சொல்லக் கூடாது, னு

உங்க மேடம் சொல்லீட்டாங்களா???

ஆமா சார்.


ஏன்???

தெரியல சார், மேடம் யார் மேலயாவது சந்தேகப்பட்டாளோ, அல்லது மேடமை ஏமாத்தினாலோ அவங்க மேல ஆக்சன் எடுப்பாங்க, அடுத்து அவங்க போட்டோவ நாட் அலவ்டு(not allowed) லிட்ல ஒட்டீடுவாங்க என்றான் ராஜா.

பவித்ரன் முறைத்த முறைப்பில், தலை குனிந்த ராஜா, சாரி சார், இது இங்க இருக்குற முறை, அததான் சொன்னோன்.

பவித்ரன், அன்று தான் அனுமதியின்றி ரஞ்சனி அறையில் நுழைந்து அவளை சொடுக்கிட்டு கூப்பிட்டதையும், அவள் இன்முகமாய் தன்னுடன் இளைந்ததையும் நினைத்துப் பார்த்தான்.

ரஞ்சனியை இப்படி மாற்றியது, தன்னுடைய நடவடிக்கை தான் என தெளிவாக விளங்கியது. கூடவே, இனி ரஞ்சனியை காணவே இயலாதோ ,என்ற எண்ணம், பவித்ரனின் மனதை வாள் கொண்டு அறுத்தது.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Engalukaga vanthathuku nandri sis, mudincha varam 2 epi kudunga sis, epi mudium pothu next epi enna day la varum nu sollunga sis, nanga rombo nalla wait pannurom athan sis
I will try ma, but im not sure, but i will post 1 for 1 week regularly
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருபத்தி ஐந்தாம் பகுதி...

பவித்ரன் ரஞ்சனியைக் காண அவள் வீட்டிற்கு சென்றான். அங்கு வாட்ச்மேன் தவிர வேறு எவரும் இல்லை.

அந்த காவல் காரனும் கிட்டத்தட்ட ராஜாவைப்போலத்தான், எதைக்கேட்டாலும் யாரிடம் சொல்லக்கூடாது என ரஞ்சனிமேடம் சொல்லிருப்பதாக கூறினான்.

நான் ரஞ்சனியின் கணவன் என பவித்ரன் சினந்தான்.

காவல் காரன், அப்படினா நீங்க பவித்ரன் சாரா?, என்றான்.

பவித்ரன், ம்.. இப்போதாவது சொல் என்றான்.

மன்னிச்சிடுங்க சார், உங்ககிட்டத்தான் வாயே திறக்கக்கூடாதுனு மேடம் சொன்னாங்க, ஆமா சார் கல்யாணங்கட்டின பொண்டாட்டி ஐஞ்சே நாள்ல, ஓடிவந்து, கண்காணாத இடத்துக்கு ஓடீட்டாங்களே, அப்படி என்னா சார் பண்ணீங்க???

அவன் கேட்ட கேள்வி பவித்ரனை சுருக்கென தைத்தது.

பவித்ரன், அவசியம் தெருஞ்சுக்கனுமா?? என்றான்.

ஆமா சார். சொன்னீங்கன்னா, எனக்கும் கெல்ப்பா இருக்கும், எப்பொண்டாட்டி பேஜாருசார், வருசத்துக்கு ஒருதரம் அவங்க அம்மாவீட்டுக்கு கூட போமாட்டுது,

பவித்ரன் அந்த காவல்காரனை கூர்ந்து பார்த்தான். வயது ஐம்பதை நெருங்கியிருக்கும். ஆனால் மனைவியை அவன் இங்கே கிண்டலாக சொன்னாலும், சொல்லும்போது அவன்முகம் பிரகாசமடைகிறது. அவன் வார்த்தைகளில் என்மனைவி என்னைவிட்டு செல்லமாட்டாள் என்ற கர்வம் தெரிகிறது.

ஐம்பதைக் கடந்த தம்பதியரின் ஈர்ப்பு கூட, ரஞ்சனிக்கு என்மேல் இல்லையா? நான் உன்னை தேடுமளவு நீ என்னை தேடவில்லையா? உன் மனதில் நான் பதியவே இல்லையா? என மனதில் மருகினான் பவித்ரன்.

ஆனால், எதிரே உள்ள கிழவனிடம் அதற்கு மாறாக இதை நீங்கள் ரஞ்சனியிடம் கேட்கவில்லையா?? ஏன் எதற்காக ஐந்தேநாட்களில் வந்தாய்?? என, என்றான் கண்களில் குறும்புடன்.

பவித்ரன் நினைத்தது போலவே, ரஞ்சனி என்றதும், ஐயயோ, நான் அவ்வளவுதான் செத்தேன் என்றார் அவர்.

அடுத்ததாக, ராஜன் நகைக்கடைக்கு சென்றான் பவித்ரன்.

அங்கு அந்த நகைகடையை மூன்றுவருடம் லீசில் விட்டுச்சென்றிருந்தார் ராஜன்.

பவித்ரன், ராஜனை நீங்கள் தொடர்பு கொள்ள ஏதேனும் தொலைபேசி எண் கொடுத்தாரா? என்றான்.

தற்காலிகமாக, அந்த கடையை நிர்வாகம் செய்பவரோ, இருக்கிறது சார்! என இரண்டு தொலைபேசி எண்களை தந்தார்.

அதில் ஒன்று, ரஞ்சனி கடையின் நிர்வாக அதிகாரி ராஜாவுடையது. திரும்பவும் இவனா? என பவித்ரன் அடுத்த எண்ணை பார்த்தான்.

அது சென்னை கமிஷ்னர் செல்வபாண்டியன் உடைய தொலைபேசி எண்.

பவித்ரன் கமிஷ்னருக்கு அழைத்தான்.

ஹலோ, சார் நான் பவித்ரன், ராஜன் சார் கடைல இருந்து உங்க நம்பர் கிடைச்சது என்றான்.

பவித்ரன் ....?? ரஞ்சனி முன்னால் கணவரா??? என்றார், கமிஷ்னர்.

முன்னால் கணவரா? என்ற வார்த்தையில், பவித்ரன் மனமோ,அப்படியானால் ரஞ்சனி வேறுதிருமணம் செய்துகொண்டாளா? அப்படி திருமணம் செய்து கொள்ளாமல், நான் எப்படி முன்னால் கணவனாவேன். அதற்காகத்தான் என்னை தவிர்க்கிறாளா? யாரை திருமணம் செய்தாள் என பலவாறு யோசிக்க ஆரம்பித்தது.

ஆனால், கமிஷ்னரிடமோ, முன்னால் கணவன் அல்ல, இன்னாள் கணவன் என்றான், சற்று அழுத்தமாக.

அப்படியா??? சரி, சரி அப்படினா உங்களுக்கு விஷயம் தெரியாதுன்னு நினைக்கிறேன்.

என்ன விசயம்??? என்றான் பவித்ரன் ஒருவிய பரபரப்புடன்.

ஓகே பவித்ரன், எனக்கு கொஞ்சம் அவசரவேலை இருக்கு. சோ நீங்க இன்னைக்கு நைட் ப்ரியா இருந்தீங்கனா ஒரு எட்டு மணிக்கு தாஜ்ல மீட் செய்து பேசலாமா ?? என்றார் கமிஷ்னர்.

நன்றி சார் என பேசியை அணைத்தவன் மனம் குழம்பித் தவித்தது. என்ன விஷயம்?? என்ன நடந்தது ரஞ்சனி??? எங்க இருக்குற டாலி.... என மனசீகமாக ரஞ்சனியிடம் பேசினான்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் சென்னை கடற்கறையில் அமர்ந்திருந்தான். அது ஒரு ரம்மியமான மாலை வேலை.

சூரியன் தன் கதிர்களை சுருக்கிக்கொண்டு, நிலவின் குளுமைக்கு வழிவிட்டது.

பவித்தரனின் இடதுபுறம் ஒரு காதல் ஜோடி அமர்ந்திருந்தனர். அந்தப்பெண் கவலையாக அவள் காதலன் தோளில் சாய்ந்திருந்தாள். அவனோ தன் அறுதலை வார்த்தைகளாலும், லேசான அரவணைப்பாலும் தன் காதலிக்கு அளித்தான்.

அந்தக்காட்சி பவித்ரன் கண்ணில் விழ, பவித்ரன் மனது குற்றத்தில் குறுகுறுத்தது.

ஒருநாளும் தான் ரஞ்சனிக்கு ஆறுதலோ அல்லது இதுபோல் காமமற்ற காதலான அரவணைப்பையோ, அளித்ததில்லையே! என நினைத்தான்.

அவன் மனமோ, ரஞ்சனிக்கு நீ ஆறுதல் அளிக்கத் தேவையில்லை, அவளை சோதிக்காமல் இருந்தாலே போதுமானது. அவளது கண்ணீரை துடைக்கத் தேவையில்லை, கஷ்டப்படுத்தாமல் இருந்தாலே அது போதும், செய்தாயா? என இடித்துரைத்தது.

ரஞ்சனி என்னை மன்னித்துவிடு ! என மனதுக்குள் மருகினான். ஆனால் ரஞ்சனி அதைக்கேட்கவோ, ஆறுதல் அளிக்கவோ அவன் பக்கத்தில் இல்லை.

ஆனால் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் உட்கார்ந்திருந்த காட்சி லண்டனில் அவள்முன் இருந்த கணினித் திரையில் காணொலியாக ஓடிக்கொண்டிருந்தது.

அதை சிலவினாடிகள் கவனித்தவள், கணினியை அணைத்துவிட்டு, தன் ஏழுமாத கருவுடன் நடைபயிற்சிக்கு கிளம்பினாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் மனதில் திடுமென ராமசாமியின் நினைவு எழ, பவித்ரன் ராமசாமிக்கு அழைத்தான்.

ஹலோ, நான் பவித்ரன் எனவும் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ஏதேனும் கோளாறாக இருக்கும் என நினைத்தவன், திரும்பவும் அழைத்தான்.

பவித்ரன் ஹலோ எனவும், நீ எல்லா நல்லா இருப்பியாடா? நிமிந்து நடந்த பொண்ண, இப்படி கூனிக்குறுக வச்சு ஊரவிட்டே துரத்தீட்டயே! உனக்கு அப்படி ரஞ்சனி என்ன கெடுதல் பண்ணா?? என்றார் ராமசாமி.

ராமசாமியின் இந்த திடீர் தாக்குதல் அதிர்ச்சி அளித்தாலும், சமாளித்துக்கொண்டு, இல்ல ராமசாமி நீங்க தப்பா புருஞ்சுக்கிட்டீங்க, நான் ரஞ்சனி நேசிக்கிறேன், அதவிட முக்கியம் அவகிட்ட நான் பேசியே ஆகணும்..அவ எங்க இருக்கிறா???

நேசமா? அப்பா !! மத்தவங்கிட்ட உன்னோட கதைய விடு எனக்கு எல்லாம் தெரியும், ரஞ்சனி யார்கிட்டையும் எதுவும் சொல்லக்கூடாதுன்னு சொன்னதால பேசாம இருக்கேன். இல்ல நானே போலீஸ்ல புகார் கொடுத்துருப்பேன்.

இல்ல ராமசாமி நீங்க கோபமா இருக்கிறீங்க, நானும் சில நாட்கள் அப்படித்தான் இருந்தேன். அதன் விளைவுதான் என்மனைவிய தொலச்சுட்டு பைத்தியமா சுத்திக்கிட்டு இருக்கேன். ஆனா ரஞ்சனிய காயப்படுத்தனும்னு நான் என்றைக்குமே நினைச்சது இல்ல,

என்ன பேச வைக்காத பவித்ரன், நீ காயப்படுத்தாமலா அந்த வெள்ள சூடிதார் சிகப்பாச்சு, நான் தான் ரஞ்சனிய ஊட்டில இருந்து டிஸ்சார்ஸ் செஞ்சு சென்னைக்கு கூட்டீட்டு வந்தேன்.

அந்த சுடிதாரை நாங்க, புணத்த புதைக்கிறமாதிரி புதைச்சோம். உனக்கு மனசுன்னு ஒன்னு இருந்தா மாசமா இருக்கிற பெண்ணுகிட்ட இப்படி நடந்துக்க முடியுமா? இதுல நேசமாம்.

ரஞ்சனி கர்பமா??? ஏன் எங்கிட்ட அவ சொல்லல?? என்றான் மிகுந்த வலியில். ஏனெனில் ரஞ்சனி அதை சொல்லியிருந்தால், பவித்ரன் நிச்சயம் தன் மூர்கத்தை கைவிட்டிருப்பான்.

நீ ரஞ்சனிக்கு அந்த வாய்ப கொடுத்தியா??? துன்பத்துல இருக்குறவங்க தன்னோட இன்பத்தை எப்படி பகிர்ந்துப்பாங்க,


பிளீஸ், நான் ரஞ்சனிய உடனே பாக்கனும், அவகிட்ட மன்னிப்பு கேட்டே ஆகணும்,

தேவையில்லை, ரஞ்சனி இப்பத்தான் நிம்மதியான வாழ்க்கைய வாழ்றாங்க, அதை கெடுத்துறாத,

நான் என் மனைவியையும், குழந்தையையும் பாக்கணும், அவ நம்பர் குடுங்க.என்றான் பவித்ரன் சற்று அழுத்தமாக..

முடியாது என்றவர், பட்டென தொடர்பை துண்டித்தார்.

பவித்ரன், தொலைபேசியை வெறித்துப் பார்த்தான்.

பலியாவாளா? பலிகொடுப்பாளா??
 
Top