All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருபத்தி ஆறாம் பகுதி...

பவித்ரன் இரவு எட்டு மணியளவில் தாஜில் காத்திருந்தான். அப்போது கமிஷ்னர் பாண்டியன் டீசர்டில் சாதாரணமாக வந்தார்.

பாண்டியன் ஹலோ.. பவித்ரன்!! என்ற அட்டகாசமான குரலுடன் அவனது முன்னால் வந்து நின்றார்.

பவித்ரன் முதல்முறை அவரைப் பார்க்கிறான், எனவே சிறிய ஹலோவுடன் முடித்துக்கொண்டான்.

உணவு வகைகளை ஆர்டர் செய்தவர், அவனிடம் என்ன விசயம் என்றார்? நிதானமாக.

நான் மனைவியைப் பார்க்க நேற்றிலிருந்து முயற்சிக்கிறேன். ஆனால் அவளது இருப்பிடமோ, தொடர்பு எண்ணோ கிடைக்கவில்லை, அந்த வகையில் முயற்சிக்கும்போதுதான் உங்களது எண் கிடைத்தது என்றான்.

ம்ம்...

உங்களுக்கு ரஞ்சனி இருப்பிடம் தெரியும் என்பது என் அனுமானம் என கேள்வியாய் அவரை நோக்கினான்.

அவரோ அவனிடம் வேறொரு கேள்வி கேட்டார். அந்தக் கேள்வி அவனை உறைய வைத்தது.

உனக்கு ஆனந்த் என்ற நந்து உயிருடன் இருப்பது தெரியுமா? அவனுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் தமிழகத்தின் ஒரு முக்கியப்புள்ளியின் ஒரே மகளுடன் இது உனக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிள்ளை சரிதானே???

பவித்ரனின் முகம் கேள்வியிலும் அதிர்ச்சியிலும் உறைந்தது.

சுதாரித்தவன், உங்களுக்கு ஆனந்தைப் பற்றி எவ்வாறு தெரியும் என்றான்.

ரஞ்சனியின் கடைகுடோனில் அவனை கொன்றிருப்பேன். ரஞ்சனிதான் பாவம் என தடுத்தாள். அவன் உங்களையும் ஏமாற்றியிருக்கிறான் என்பதை ரஞ்சனி மூலம் அறிந்தேன்.

ரஞ்சனி வேறென்ன சொன்னாள்???..

ஆனந்த் இறந்ததாக சிலர் கூறுகிறார்கள், ஆனால் உயிருடன் இருப்பானோ என எனக்கு சந்தேகமாக உள்ளது, எதற்கும் விசாரியுங்கள் என்றாள். ஏன்??? என்றார் பாண்டியன்.

பவித்ரன் , ஒன்றுமில்லை, நீங்க சொல்லுங்க, என்றான்.

ராஸ்கள் அடுத்தது பெரிய இடத்துல நுழைஞ்சு பிடிக்க முடியாத உயரத்துல இருக்கான் என பவித்ரன் முன் ஆனந்தின் திருமணப் பத்திரிக்கையை தூக்கிப்போட்டார்.

நான் பாத்துக்கிறேன் என பவித்ரன் அதனை எடுத்து வைத்துக் கொண்டான்.

சரி நான் கிளம்புறேன் என்று எழுந்தவரிடம், பவித்ரன், சார் ரஞ்சனி முகவரி?? என்றான் அவசரமாக..

அவரோ எதற்கு?? என்றார் நிதானமாக , அவனை சீண்டும் நோக்கில்,

பவித்ரன், இதென்ன கேள்வி? அவள் என் மனைவி... என் குழந்தையை சுமப்பவள், நான் அவளது கணவன் என்றான் கடுப்பில்...

ம்ம்.. இதுதான் எனக்குத் தெரியுமே, எதற்காக?? இவ்வளவு நாள் கிட்டத்தட்ட சில மாதங்கள் கழித்து ரஞ்சனியின் முகவரி, என்றார் விடாப்பிடாயாக...

அப்போது எங்களுக்குள், சிறு மனஸ்தாபம் அதனால் அவளைக் காண வரவில்லை என்றான்.

ஓ... அது உங்களது குடும்ப விசயம், என்னிடம் ரஞ்சனி சொன்னது இது தான், நான் போவது யாருக்கும் தெரிய வேண்டாம். நாங்கள் செய்து கொண்டிருக்கும் பிசினசில் ஆளில்லை என தெரிந்தால், நிறைய திருட்டுகள் அரங்கேறும், எனவே யார் வந்து கேட்டாலும் எதுவும் பகிரவேண்டாம். நான் எந்த நேரத்திலும் வருவேன். இதுதான்...

அது வெளியாட்களுக்கும், ஊழியர்களுக்கும், நான்...அதற்குள் பலமாக பாண்டியன் சிரித்துவிட பவித்ரன் பாதியில் பேச்சை நிறுத்தினான்.

பவித்ரன் உங்களிடம் என்னை பேசவேகூடாது என ஸ்ரிட் ஆர்டர். நான் தான் இதை கொடுப்பதற்கு வந்தேன் என அவனிடம் ஒரு கவரை நீட்டினார்.

அது பவித்ரனுக்கும் ரஞ்சனிக்குமான விவாகரத்து கடிதம்.

பவித்ரன் முகம் பாறைபோல் இருகியது.

அவனது மனநிலையை புரிந்துகொண்ட பாண்டியன், நான் ரஞ்சனிக்கு சப்போர்ட் பண்றேன்னு நினைக்காதீங்க, அவ ரொம்ப சரியான ஆளு, நல்லது பண்ணவங்களுக்கு நல்லது பண்ணாம ஓய மாட்டா, அதேமாதிரிதான் கெட்டது பண்ணவங்களுக்கும், ஆனா உங்ககிட்ட தான் அவ எதையும் செய்யாம விலகீட்டா! அதுவே என்னப் பொறுத்தவரை நல்லது தான் கலங்காதீங்க. ஆல்த பெஸ்ட் என்றவரை நிமிர்ந்து பார்த்தவன்,

இதைவிட ஒரு அவமானம் எனக்கு வேறென்ன?? என்றான் கடுமையான கோபத்தில்...
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் அவனது வீட்டில் ரஞ்சனிக்கும் தனக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என நம்பமுடியாமல், கண்முன் இருக்கும் நீதிமன்ற அணையை நம்பாமல் இருக்கவும் இயலாமல், தவித்தான்.

உண்மையில் தனிமையை அவன் உணர்வது இப்போதுதான். தனது தந்தை இறந்தபோதும், ஏன் அன்னை இறந்து, தனியாளாய் நிர்வாகத்தை கிட்டத்தட்ட ஆறுமாதம் நடத்தியபோதும் கூட அவன் இவ்வாறு உணரவில்லை.

ஏனோ, ரஞ்சனி தன்னைவிட்டு சென்றபின் அவன் அனாதையாக உணர்கிறான்.

என்னை வெறுத்தாலும், அடித்தாலும் அதை என்பக்கத்திலிருந்து செய்யேன் ரஞ்சனி, என பக்கத்திலில்லாத ரஞ்சனியிடம், ஏன்? என்னை அனாதையாக்கிச் சென்றாய் என கத்தி கத்தி ஒரு பைத்தியம் போல சண்டையிட்டான்.

அவன் ஒரு கையை வீசியதில் பக்கத்தில் டேபிளில் இருந்த கமிஸ்னர் கொடுத்த ஆனந்தின் திருமணப் பத்திரிக்கை கீழே விழுந்தது.

அன்று சென்னை சென்ரலில் அவனுக்கு துப்பறிவு நிறுவனத்திலிருந்து வந்த தகவலும் ஞாபகம் வந்தது.

அன்று ஊட்டியில் பவித்ரனை சுட்டதும் பவித்ரன் சந்தேகித்தது ரஞ்சனியைத்தான். அவளை போட்டு பாடாய் படுத்தியும் விட்டான்.

ஆனால் அதன்பின் ஏனோ அவளின் நடவடிக்கையும், பேச்சும் பவித்ரனை யோசிக்க வைக்க அவன் துப்பறிவு நிறுவனத்தை நாடினான்.

அவர்கள் ஆறுமாதம் கழித்து இன்றுதான் கண்டறிந்து கூறினர். அவர் குற்றவாளி என அறிவித்தது, ஆனந்தை.

பவித்ரன் அதை நம்பி இருக்க மாட்டான். ஆனால் சற்று முன் அவன் பார்த்ததும் துறத்தியதும் ஆனந்தை அல்லவா!!!.

ஆனந்தை நல்லவன் என நம்பி, நட்புகொண்ட தன் மடமையை நினைத்து வெட்கினான். அதைவிடக் கொடுமை, அழகான, அறிவான ,காதல் கொண்டு மணந்த பெண்ணை, தனிமையில் துன்புறுத்தி, இழிவான ஆணாக நடந்து கொண்டது.

பவித்ரன், தான் செய்த தவறின் அளவை முழுதாக உணர்ந்தான். ரஞ்சனியை தவறாக எண்ணும் போதும், அவளை ஒருகையால் அடித்தவன், மனம் வருந்தி மறுகையால் அணைத்தவன், இன்று தவறு முழுவதும் தன்மீது என தெரிந்ததும், உயிர் போகும் வலியை அனுபவித்தான்.

ரஞ்சனி, எனக்கான தண்டனையை கொடுத்து விடு, இல்லாமல் போனால், நான் குற்ற உணர்ச்சியிலே வெந்துவிடுவேனோ என பயமாக இருக்கிறது என தனக்குள் உளண்றான்.

பவித்ரனுக்கு ரஞ்சனி இல்லாத பிரிவு துன்பத்தை தந்தாலும், எதையும் தீரவிசாரிக்காமல் செயல்படுவது தவறு என்ற தத்துவத்தையும் உணர்த்தியது.

பவித்ரன் திரும்பவும் துப்பறிவு நிறுவனத்தை நாடினான் , ஆனந்தின் விவரமறிய,

பவித்ரனின் மூலை இதேவகையில் ரஞ்சனியைப் பற்றியும் நீ அறிந்து கொள்ளலாமே என வலியுருத்தியது. ஆனால் மனமோ, இப்போது உனக்கும் அவளுக்கு என்ன உறவிருக்கிறது, அவளைப்பற்றி தெரிந்துகொள்ள, என இடித்துரைத்தது.

பலியாவாளா? பலிகொடுப்பாளா?
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருபத்தி ஏழாம் பகுதி...

ரஞ்சனி லண்டனுக்கு வந்துவிட்டாள். அதற்கு காரணம் ரஞ்சனியின் தோழி நந்தினி. திருமணத்திற்கு முன் ரஞ்சனியின் வாழ்க்கையைப் பார்த்து திருமணம் என்ற ஒன்று தேவையா என யோசிக்க ஆரம்பித்தவளை, ரஞ்சனிதான் மாற்றினாள்.

இருந்தும் ரஞ்சனி நீ தனியாக பவித்ரனுடன் இருந்த தருணங்கள் தான் அவரை எல்லை மீறி தவறு செய்யவைத்ததாக நான் கருதுகிறேன். நீ என்ன துன்பப்பட்டனு எனக்கு நீ சொல்லாம போனாலும், உன்னோட மனதும், உடலும் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று உன்னை பார்த்த உடன் தெரிந்து கொண்டேன்.

எனக்கு என்னவோ மனதின் ஒரு மூலையில், ரஞ்சனிக்கு ஊட்டிபோலத்தான் உனக்கு லண்டன் என ஒரு எண்ணம் தோன்றுகிறது. எனக்கு அவருடன் தனியாக செல்ல, ஒரு பழக்கமற்ற ஆணுடன் தனித்து செல்ல பயமாகத்தான் உள்ளது என்றாள் நந்தினி.

ரஞ்சனி, எனக்கும் பவித்ரனுக்கும் மனதுஒத்துப்போகவில்லை. நீ ஏன் ஒரு எடுத்துக்காட்டாக என் பெற்றோரையோ, உன் பெற்றோரையோ எடுத்துக்கொள்ளக்கூடாது? என்றாள்.

அவர்கள் நம் மூத்த தலைமுறை, இந்த தலைமுறையில், பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் பலமடங்கு பெருகி உள்ளது. உன் கணவரும் அந்த மாதிரித்தான் உன்னை துன்புறுத்தி.... என்றவளின் பேச்சு பாதியில் நின்றது, ரஞ்சனி முறைத்த முறைப்பில், ..

நான் எப்போது அப்படி சொன்னேன் என சீறினாள் ரஞ்சனி.

நீதான் எதையுமே கூறவில்லையே, இப்போதாவது சொல் என்னவானது என்றாள் நந்தினி.

நாம் இப்போது உன் திருமணத்தைப் பற்றி பேசுகிறோம் என நினைக்கிறேன். என்னது முடிந்துவிட்டது. முடிந்ததை தோண்டவும் கூடாது, அடுத்தவர் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொள்ளவும் கூடாது. இரண்டும் அறிவாளிகள் செய்யமாட்டார்கள்.

ஆனால், எதையும் பட்டுத்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதல்ல, அடுத்தவர் வாழ்க்கையின் அனுபவம் மூலமாகவும் அறியலாம். இது அறிவாளிகள் செய்யும் காரியம் தானே.

நல்லபேச்சு, ஆனால் இங்கே பொருந்தாது. பவியைப்போல் கண்டிப்பாக நிவிஷன் இருக்கமாட்டார்.

ஏன்?? என்றாள் நந்தினி.

என்னடி என்னிடம் கேட்கிறாய்? நீ அவருடன் பேசினாய் தானே , உனக்குத் தெரியவில்லையா? என்னுடன் பேசிய இரண்டு முறையும் ,எந்த ஒரு நேரத்திலும் குரலை உயர்தக்கூட இல்லை. என்ன ஒரு நிதானம். அவரைப்போய் பவித்ரனுடம் இணைத்துப் பேசுகிறாய், என்றாள் ரஞ்சனி.

என்னுடன் ஒருமுறை பவித்ரன் பேசும் போதும் கூட, அழகாக சிரித்துதான் பேசினார். ஆனால் நான் கணித்த பவித்ரன் தவறாகி விடவில்லையா?? உண்மையில் அவருடைய சிரிப்பும், பேச்சும் என் கண்களுக்கு பொய்யாக தெரியவில்லை. உன் வாழ்க்கை ஆரம்பிக்கும் முன்னே, ஆழ்பள்ளத்தில் விழும் என நான் எந்த ஒரு நொடியிலும் நினைத்தில்லை. இதெல்லாம் என் கண்முன்னே நடக்கும்போது எனக்கு திருமணம் செய்துகொள்ள பயமாக இருக்குமா?? இருக்காதா? என்றாள் நந்தினி விடாபிடியாக....

அதனால்???

திருமணம் செய்து கஷ்டம்படுவதற்கு பதில், செய்து கொள்ளாமலே இருக்கலாம்.என்றாள் நந்தினி.

இதை நீ யாருக்குச் சொல்கிறாய்?? என்றாள் ஒருமாதிரிக்குரலில் ரஞ்சனி.

எனக்குத்தான். நான் திருமணத்தை நிறுத்தப்போகிறேன் என்றாள் நந்தினி அறிவிப்பாக.

இப்போது நான் என்ன செய்தால், சரி என்பாய் என்ற ரஞ்சனியிடம், சற்றும் தாமதிக்காமல், நீ என்னுடன் சேர்ந்து லண்டன் வா என்றாள், ஒரே பிடிவாதமாக.

சரி, நான் யோசிக்கிறேன் என்ற ரஞ்சனியிடம் விடாபிடியாக , எனக்கு நாட்கள் குறைவாக இருக்கிறது, இப்போதே நீ வரமாட்டேன் என்று சொன்னால், திருமணத்தை நிறுத்த வசதியாக இருக்கும் என்றாள் நந்தினி.

சரி வருகிறேன் போதுமா?? ஆனால் இன்னொரு தரம் இப்படி பேசக்கூடாது என்ற ரஞ்சனி, சற்று தயங்கியவாறு, நான் திருமணத்திற்கு வரவில்லை என்றாள்.

நந்தினியின் கண்களில் கண்ணீர் முட்டியது. எங்கும் நிமிர்ந்து செல்பவள், இப்படி தலைகவிழ்ந்து தெரிந்தவர்களை சந்திக்க சங்கடப்படும் நிலையை எண்ணி, தனது திருமணத்திற்குக்கூட வரவில்லை என்கிறாளே என வருந்தினாள்.

திருமணத்தில் தெரிந்தவர்கள் ஏதும் கேட்டுவிட்டாளே ரஞ்சனி உடைந்துவிடுவாள். நிலைகுழைந்து இருப்பவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாத நந்தினி, சரி என தலையசைத்து விடைபெற்றாள்.

நந்தினியின் தலையசைப்பில் ரஞ்சனியின் மீதான புரிதலே மேலோங்கி இருந்தது. ரஞ்சனியை லேசாக அணைத்து விடைபெற நந்தினி ரஞ்சனி அருகில் வர ரஞ்சனி ஓரெட்டு பின்னோக்கிவைத்தாள்.

கண்களை சுருக்கிய நந்தினியிடம், என்ன இப்பவே லண்டன் கட்டிப்பிடி வைத்தியமா? என கிண்டலடித்து விடைகொடுத்தாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லண்டன் செல்கிறேன் என்று சொன்ன ரஞ்சனியை லதா முறைத்தார்.

ரஞ்சனி, அம்மா நந்தினிக்கு துணையா..., அவள செட்டில் பண்ணீட்டு வந்துடுறேன் என்றாள்.

உனக்கே மசக்க அதிகமா இருக்கிறதால, புதினாவும் , எலுமிச்சை சாறும் கொடுத்து தெளிய வச்சிட்டு இருக்கேன், நீ அவளுக்கு துணையா?? என்றார் லதா.



அவளுக்கு துணையா அவங்க அப்பா, அம்மாவ போகச்சொல்லு என்றார் லதா.

அவங்க இரண்டு பேரும் வாத்தியார் மா, மாசக்கணக்கா அவங்களால லீவு போடமுடியாது. அதனாலதான் என இழுத்தவளிடம் லதா உனக்கு வேலையில்லியா? அவங்க பரவாயில்லை, நீ சொந்தமா கடை நடத்துற விட்டுட்டு எப்படி?? போவ என்றார் லதா.

இரண்டு மாதம் மட்டும் தான் , கடைக்கு எல்லா ஏற்பாடும் செய்துவிட்டேன் என்றவளை, தனியாக அனுப்ப மனம்வரவில்லை லதாவிற்கு.

ஆனால், போகாதே என சொல்லவும் மனமில்லை. ஏனெனில் மிகவும் சோர்வாக இருந்தவள், தோழியை பார்த்த சந்தோசத்திலோ என்னவோ சிறிது உற்சாகமாக இருக்கிறாள், அதை கெடுக்கவும் கூடாது.

தனது பெண் தைரியசாலி என்று சொல்வதைவிட, சந்தோசமாக இருக்கிறாள் என்று சொல்வதுதான் பெற்றவர்களுக்கு சந்தோசமளிக்கும்.

எனவே தானும் வருவதாய் லதா கூறினார். ஆனால் அதன்பின் நடந்த சம்பவங்கள், பவித்ரன் தன்னை வீட்டில் நுழைந்து அடித்தது, அதுவும் தன் பெற்றோர் முன்னிலையில் இப்படி நடந்து கொண்டது, ரஞ்சனியை யோசிக்க வைத்தது. அவன் கைநீட்டும் தொலைவில் தான் இருப்பதை வெறுத்தாள். அவனை சந்திப்பதையோ, யாரேனும் தன் திருமணம் பற்றி விசாரிப்பதையோ வெறுத்தாள்.

யாரும் நேரடியாக அவளிடம் அவளது திருமணம் பற்றி கேட்காமல் போனாலும், எதேச்சியாக சந்திப்பவர்கள், தொழில் தொடர்பு உள்ளவர்கள் கண்களில் அந்தக்கேள்வி உள்ளதை அறிந்தே இருந்தாள்.

எனவே இரண்டு மாதம் என நினைத்தவள், இரண்டு வருடம் M.B.A, அங்கே படிப்பதற்கு சென்றுவிட்டாள், தாய் தந்தையுடன்.
 
Top