All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உதயாவின் "பழிக்குப் பழி" - கதை திரி

anandhie

Member
ரஞ்சனி தனது வேக நடையுடன் அந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் நுழைந்தாள்.

பத்திரிக்கை கூட்டம் ரஞ்சனியை சூழ்ந்துகொண்டது. இதற்கு தயாராகவே வந்தவள் சற்றும் எரிச்சல்படவில்லை, பயப்படவுமில்லை. அவளது நடை நிற்கவுமில்லை.

புகைப்பட ஒளி சரமாரியாக அவள் மேல் விழுந்தவண்ணமிருந்தது. அவள் முன்னோக்கி நகர, கூட்டம் பின்னோக்கி நகர்ந்து அவளுக்கு வழிவிட்டது. ஒரு கட்டத்தில் கூட்டம் இரண்டாகப்பிரிய, இப்போது ரஞ்சனிக்கு நேர் எதிரில், ஜார்ஜ் பிரணவை தூக்கிக்கொண்டு நின்றான். இருவரும் ஒரே மாதிரியான சூட்டில் மிடுக்காய் இருந்தனர்.

ஜார்ஜின் முகத்தில் வெற்றியின் பூரிப்பு இருந்தது. டாடி, மா... என அவனது குரலில், மொத்த அரங்கமும் வியந்து பார்த்தது. ரஞ்சனி, ஏதும் சொல்லாமல், ஜார்ஜ் அருகே வந்து நின்றாள். முதலில் பிரணவை கையில் வாங்கிக்கொண்டாள்.

கேக்கை வெட்டி இனிதாக பிறந்தநாள் கொண்டாடினர். ரஞ்சனி எதுவும் பேசவில்லை. மோனலிசா ஓவியம் போல் அமைதியாகிவிட்டாள். எதையும் வெளிக்காட்டவில்லை.

ஜார்ஜ் ரஞ்சனியின் கையை விடவில்லை. அவளும் தடுக்கவில்லை. பிரணவை விழாமுடியும் வரை தரையில் இறக்கவும் இல்லை.

விருந்து முடிந்து அனைவரும் வெளியேறத் தொடங்கினர். ஜார்ஜின் கை இப்போது ரஞ்சனியின் தோள்களுக்கு மாறி இருந்தது.

ஜார்ஜ் ரஞ்சனியை கை அணைப்பில் வைத்திருக்க, ரஞ்சனி தூக்கிய ஜார்ஜை அணைத்து வைத்திருந்தாள். இன்னும் புகைப்பட ஒளி அவர்கள் மீது சில சமயம் விழுந்து கொண்டுதான் இருந்தது.

கோட்டையை அணிவகுத்திருந்த அனைத்து காரும் சென்றுவிட்டது, ரஞ்சனி காரைத் தவிர...

ரஞ்சனி... நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன் என ஜார்ஜ், ரஞ்சனியின் கன்னத்தில் முத்தமிட்டான். ரஞ்சனி அமைதியாகவே இருந்தாள். ஜார்ஜ் புன்னகையுடன் அவளது உதட்டை நெருங்கினான்.

பலியாவாளா?? பலிகொடுபாளா??
semaiya iruku mam episode
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாற்பத்தி எட்டாம் பகுதி..

ரஞ்சனி ஜார்ஜைப் பார்த்து லேசாக சிரித்து அவனது முத்தத்தை தவிர்த்தாள்.

ஜார்ஜ், ரஞ்சனியை இடையோடு அணைத்து, முன்னேறத் துடித்தான். ரஞ்சனி கண்களால் பிரணவை சுட்டிக்காட்ட, ஜார்ஜ் ஓ... சாரி வா அவன படுக்க வைக்கலாம் என உள்ளே படுக்கையறைக்கு வழிகாட்டினான்.

ரஞ்சனி ஒரு தீர்மானத்துடன் பிரணவை தூக்கிக்கொண்டு ,அவன் பின்னே நடந்தாள்.

தைரியத்தை பலரிடம் பலவாறு காட்டியிருந்தாலும், இன்று தான் நடந்துகொள்வது சரிதானா?? சரிவருமா?? என நினைத்தவாறு அவனுடன் நடந்தாள் ரஞ்சனி.

ரஞ்சனி, ஜார்ஜின் படுக்கையறைக்குள் நுழைந்ததும், மனதின் வீரியத்தை கண்ணில் காட்டாமல் மறைக்க பெரும்பாடுபட்டாள்.ஒரு முறை மூச்சை இழுத்துவிட்டு மன அழுத்தத்தை குறைத்தாள்.

பிரணவை கட்டிலில் ரஞ்சனி கிடத்தியதும், ஜார்ஜ் ரஞ்சனியை பின்னிருந்து அணைத்தான். அவனை கொன்றுவிடு!! என்று சொன்ன மனதை, பெரும்பாடுபட்டு அடக்கினாள்.

ம்சூ... எவ்வளவு அழகான கௌனை, இப்படி மறைத்திருக்கிறாய், என்றவன், அவளது கோட்டை பின்னிருந்து கழற்ற, இப்போது சிலையாகி நின்றான் ஜார்ஜ்.

ரஞ்சனி இந்த ஒரு தருணத்திற்குத்தானே காத்திருந்தாள். சட்டென அவன் பாதி உருவிய கோட்டை முழுதாக கழற்றி அவளது உடலை காட்டினாள்.

ஜார்ஜ் இரண்டெட்டு பின்னால் நகர்ந்தான். ஆனால் முகம் அதிர்ச்சியிலிருந்து, அருவறுப்பிற்கு மாறி இருந்தது.

இது.. இது.. என்ன அலர்ஜியா?? என்றான்.

ஜார்ஜின் இந்த பாவனை ரஞ்சனிக்கு போதுமானதாக இருந்தது.

ரஞ்சனி, அவன் எதைக் கேட்கிறான் என புரிந்தும், புரியாதது போல, எது??? என ஜார்ஜை நோக்கி சிரித்தவாறு முன்னேறி நடந்தாள்.

ஜார்ஜின் நடை பின்னோக்கி வேகமெடுத்தது. ஒரு கட்டத்தில், ஜார்ஜ் கத்திவிட்டான். நில்!!!

நீதான படுக்கைக்கு அழைத்தாய். நான் வந்துவிட்டேன், ஏன் உனக்கு நடுங்குகிறது??

உன் உடம்பு ஏன் வரிக்குதிரை கோடுபோல கையில், முதுகில், முன்புறத்திலுமா???

ஓ... ஆம்!! சந்தேகமே வேண்டாம் எல்லா இடங்களிலும் உள்ளது.அதற்கும் நீ என்னிடமிருந்து விலகிப்போவதற்கும், என்னசம்பந்தம் ஜார்ஜ்.

அது... அது எப்படி நிகழ்ந்தது??

அது ஒருவிபத்தில் ஏற்பட்ட காயம் என்றாள் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல்.

பொய். விபத்தில் இப்படி அடிபட வாய்ப்பே இல்லை என்றான் ஜார்ஜ்.

விபத்தென்றால் சாலை விபத்தல்ல, இரண்டு கால் மனிதனால் எனக்கு உண்டானது என்றவள், திரும்பவும் கோட்டை மாட்டிக்கொண்டாள்.

அப்படியானால் நீ கற்பளிப்பிற்கு ஆளானவளா??? எத்தனை பேர்??

இது எனது தனிப்பட்ட விசயம். இதை நீங்கள் தெரிந்து கொள்ளும் அவசியம் இல்லை என்றவள், பிரணவை தூக்கி தோளில் போட்டுக்கொண்டு கதவை நோக்கி நடந்தாள்.

இப்படி ரஞ்சனி எடுத்தெரிந்து பேசிவிட்டு வெளியேறும் போதெல்லாம், கையைப்பிடித்து தடுப்பவன், இன்றோ அவள் போனால் போதும் என கதவை திறந்துவிட்டு, விலகி நின்றான்.

ரஞ்சனி, நினைத்ததை சாதித்த திருப்தியில் அவனை கடந்து சென்றாள். சற்றே திரும்பி ஜார்ஜைப் பார்த்து இருக்கமாக சிரித்தவள்.

என்னைத்தேடி வந்து தொல்லை செய்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். என் மகனை பார்க்க வரவே கூடாது. அப்படி மீறி நீங்கள் வரும்பட்சத்தில், நீங்கள் பார்த்த எனது உடலின் காயங்கள், உங்களால்தான் ஏற்பட்டது என அனைத்து பத்திரிக்கைகளிலும் பேட்டி தருவேன் என்றாள் ரஞ்சனி.

இதைக்கேட்ட ஜார்ஜ் சீற்றத்தில் பல்லைக் கடித்தான்.

முடியாது என நினைக்க வேண்டாம். நாம் இருவர் மட்டுமே இங்கிருப்பது, ஊரறிந்த ரகசியம். நீங்கள் என் கைகளை விடாமல் பிடித்திருந்ததும் பலரின் கேமராவில் பதிவாகி இருக்கிறது.

நீங்கள் அதை மோகத்தினால் செய்திருக்கலாம். நான் என்மீதுள்ள வெறியால் செய்ததாக உங்களை நாறடித்துவிடுவேன் என சுட்டுவிரலை நீட்டி மிரட்டியவள், தனது வேகநடையில் வெளியேறினாள்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வீட்டிற்கு ரஞ்சனி வரும் முன், விழாவில் எடுத்த புகைப்படங்கள் தொலைக்காட்சியிலும், இணையதளத்திலும் வெளியாகி இருந்தது.

ரஞ்சனி நடு இரவில், வீட்டுக்குள் பிரணவை தோளில் தூக்கியவாறுவர, கூடத்தில் அனைவரும் கூடிஇருந்தனர்.

லதாவை ராஜன் எதுவும் பேசக்கூடாது என ஏற்கனவே கூறியதால், கோபத்தில் அமர்ந்திருந்தார்.

நிவிஷன் நந்தினியை ஏற்கனவே ரஞ்சனி விசயத்தில் தலையிடக்கூடாது என்றதால் அவளும் பேசவில்லை. ஆனால் நடந்த உண்மை தெரியாதவள், மிகுந்த சந்தோசத்தில் இருந்தாள்.

பிரணவை படுக்கையில் கிடத்திதிவிட்டு, கூடத்திற்கு வந்தவள், எனக்கு தூக்கம் வருது, பிளீஸ் நீங்களும் தூங்கினா நல்லா இருக்கும் என்றவள், யாருடைய பதிலையும் எதிர்பார்க்காமல் தனது அறைக்கு சென்றுவிட்டாள்.

மறுநாள் பத்திரிக்கை அனைத்திலும் முக்கியச் செய்தி, ஜார்ஜ் டேசியா காதல் பற்றிய அதிகாரப் பூர்வமான தகவல் வெளியானது.

நந்தினி குழப்பமுடன் நிவிஷனைப் பார்த்தாள். அதில் இரவு தொலைக்காட்சியிலும், இணையத்திலும் தவறான செய்தி வெளியிட்டதற்கு மன்னிப்பும் இருந்தது.

நந்தினி, ஒரே நாள்ல ஜார்ஜ் இப்படி மாறுவார்னு நான் நினைச்சு கூட பாக்கல, அப்படி என்னதான் நேத்து நடந்துங்க என்றாள் நிவிஷனைப் பார்த்து...

நிவிஷன் தோளைக்குலுக்கினான். ரஞ்சனிக்குத்தான் வெளிச்சம் என்றான்.

ஏன்?? ஜார்ஜீடமும் விவரம் கேட்கலாமே!! என்றவள், ஜார்ஜீற்கு அழைத்தாள். மறுமுனையில் ஜார்ஜீன் செகரெட்ரி எடுத்து, அவர் முக்கிய வேலையாக இருப்பதாகவும், நீங்கள் அழைத்தாக தெரிவிக்கப்படும் என்றாள்.

நந்தினி அதிர்ச்சியில் சரியென்று கூட சொல்லாமல் போனை கட் செய்தாள்.

நிவிஷன் நந்தினியின் அதிர்ச்சியிலிருந்து சில விஷயங்களை யூகித்தான். இருந்தும் நந்தினியே சொல்லட்டும் என காத்திரிந்தான்.

ஜார்ஜுக்கு செகரட்ரி இருக்காங்களா?? எத்தனையோமுறை இதற்கு முன்னாலும் பேசி இருக்கிறேன், ஆனால் இப்படி ஜார்ஜ் ...என யோசித்தவள், ஜார்ஜிற்கு ஏதும் ரஞ்சனிமேல் கோபமா இருக்குமோ??? என்றாள்.

நிவிஷன், எனக்கு அப்படி தோனல, அவங்க பிரேக்கப் பண்ணிக்கிட்டாங்க, சரியா சொல்லணும்னா, ரஞ்சனி, தனது வாழ்க்கையிலிருந்து ஜார்ஜை விலக்கிவிட்டாள் என்றான்.

அப்போது லதாவும், ராஜனும் அங்குவர, நிவிஷன் வார்த்தைகளைக் கேட்டு நிம்மதியுற்றனர்.

மறுநாள் ஒரு கவரை ரஞ்சனி பிரணவிடம் நீட்டினாள். என்னம்மா இது என்றான் ஆசையாக அவன்.

பரிசு என்றாள் ரஞ்சனி.

பிரணவ் பரிசு என்றதும், சந்தோசத்தில் துள்ளினான். இப்பவே பிரிச்சுக்குடுங்க என்றான்.

நானும் நீயும் பிரிச்சா உடச்சுடுவோம், அதனால பாட்டீட்ட குடு அவங்க பிரிச்சு தருவாங்க என்றாள்.

பிரணவ் அதை தூக்கிக்கொண்டு லதாவிடம் ஓடினான்.

பாட்டி பிரிங்க என்றான்.அம்மா எனக்கு பரிசு தந்திட்டாங்க என்றான் மழலையில்..

அவரும் ஆர்வமாகப் பிரிக்க அதனுள் பவித்ரனின் புகைப்படம் இருந்தது.

அதைப் பார்த்து பிரணவ் யார் பாட்டி இது?? என்றான்.

அவர் யோசனையோடு, உன் அப்பா என்றார்.

பிரணவ் முகத்தில் சந்தோசம் குழுமியது. அதை தூக்கிக்கொண்டு யாழிடம் ஓடி, மை டாடி என ஆரம்பித்தவன், வீட்டில் அனைவரிடமும் காண்பித்து என் அப்பா!!என அறிவித்தவன், அதை கட்டிக்கொண்டு முத்தமிட்டான்.

நந்தினி ரஞ்சனியின் பனிப்போர் தொடர்ந்தது. ரஞ்சனி சொந்த நாட்டிற்கு திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்துவிட்டாள்.

நந்தினி, நிவிஷனிடம் சொல்லிப்புலம்பினாள். பேசவே இல்லீங்க, எவ்வளவோ திட்டீருக்கேன், அப்பல்லாம் திருப்பிகூட திட்டினதில்லை. ஆனா இப்ப ...??

நான் அவ நல்லாஇருக்கணும்னு ஆசைபட்டது தப்பா?? என் முகத்த நேரக்கூட பாக்குறதே இல்ல, ஊருக்கு போறதக்கூட லதாமாதான் சொன்னாங்க என்றாள்.

நிவிஷனால் நந்தினியை ஆறுதல் படுத்தமட்டுமே முடிந்தது. சரி நீயே போய் பேசு என்றான் இறுதியாக...

மாட்டேன். எனக்கும் ரோசம் இருக்கு. என்ன அடிச்சதுக்கு ஒருவார்த்தைகூட மன்னிப்பு கேக்காதவகிட்ட நான் பேசமாட்டேன் என்றாள் நந்தினி.

சரி அப்ப விடு டி!! என்றான் நிவிஷன்.

ஏங்க, ரஞ்சனி ரொம்ப மாறீட்டாங்க, எல்லாரையும் அடிக்க பழகி இருக்கா?? இது என்ன பழக்கம்னு நீங்க சத்தம்போடுங்க என்றாள்.

நானா?? என விழித்தான் நிவிஷன்.

நீங்கன்னா அவ நின்னு பதிலாச்சும் சொல்லுவா?? எம்பொண்ணாடிய எதுக்கு அடிச்சன்னு நல்லா கோபமா கேளுங்க, என்றாள் நந்தினி.

அது நடந்து ஒருமாசம் ஆகப்போகுது, அது எதுக்கும்மா?? இப்ப...

ஒருமாசமா ஆகப்போகுது... பாருங்க அப்ப ஒருமாசமா மூஞ்சியத்தூக்கி வைச்சிட்டு இருக்கா?? இது நல்லாவா இருக்கு... என்றாள் நந்தினி.

கதவைத் தட்டும் ஓசை கேட்க, நிவிஷன் சென்று கதவைத் திறந்தார். கூடத்தில் ரஞ்சனி நின்றிருந்தாள்.

சாரி!! இரவு தாமதமாகிவிட்டது. தொல்லை செய்துவிட்டேனா?? என மெல்லிய புன்னகையில் கேட்டாள் ரஞ்சனி.

ஐயோ!! எதுக்கு இவ்வளவு பார்மல், நோ பிராப்ளம் என்றான்.

இதைக்கேட்ட நந்தினி பல்லைக்கடித்தாள். திட்ட சொன்னா சிரிச்சிட்டு இருக்காரு... என பொருமினாள்.

நீங்களும் உங்க மனைவியும் எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கீங்க.. நன்றி, நான் ஊருக்கு கிளம்ப அலைந்ததில் உங்களிடம் சொல்லமுடியாமல் போய்விட்டது. நாளை விடியற்காலையில் இங்கிருந்து சென்றால் பிளைட் பிடிக்க வசதியாக இருக்கும், மிக்க நன்றி என்றாள்.

எதற்கு நன்றி?? என திரும்பவும் கேட்டான் நிவிஷன். உள்ளே கைநீட்டி மனைவியை அழைத்தான்.

நந்தினி அருகில் வரவும், ரஞ்சனி நீங்களும் உங்க மனைவியும் செய்த உதவிக்கு என்றாள், நந்தினியை தவிர்த்து நிவிஷனை மட்டும் பார்த்து.

இது தவறு.. என்றான் நிவிஷன் , நந்தினியின் தோளில் கைபோட்ட வண்ணம். நீங்கள் இதை என்மனைவியிடம் கூறுவதுதான் முறை என்றான் நிவிஷன்.

நந்தினி நிவிஷன் அணைப்பில் மிடுக்காய் நின்றாள்.

ரஞ்சனிக்கு நந்தினியைப் பார்த்து சிரிப்பு வந்துவிட்டது. சிறுபிள்ளை ஆசிரியரிடம் புகார் செய்வது போல செய்திருக்கிறாள் என நினைத்தவள், நந்தினியின் புறம் திரும்பி, நீங்களும் உங்கள் கணவரும் எனக்கும், என்குடும்பத்திற்கும் செய்த உதவிக்கு நன்றி என்றாள்.

நந்தினி நிவிஷன் காதில், என்னங்க அதையும் சொல்ல சொல்லுங்க என்றாள்.

என்னவென நிவிஷனுக்கு புரியவில்லை. ஆனால் ரஞ்சனிக்கு அதைக்கேட்டு இன்னும் சிரிப்பு வந்தது.

நாங்க நாளைக்கு காலையில கிளம்புறோம் நந்தினிமேடம். இது போதுமா என்றாள் ரஞ்சனி.

நந்தினி நிவிஷன் கையை தட்டிவிட்டு, ரஞ்சனியின் தோள்களை கட்டிக்கொண்டாள். போகாத டீ,!! இங்கேயே இரு பிளீஸ் என அழுதுவிட்டாள்.

நிவிஷன் நந்தினி கையை தட்டிவிட்டதும், சற்றே தடுமாறி, அவளின் சைகைப் பார்த்து சிரித்தான்.

ரஞ்சனி, வேலை இருக்கு நந்தினி!! இவ்வளவு நாள் இங்க இருந்ததே அதிகம் எனும் போது லதாவும் ராஜனும் அங்கு வந்தனர்.

லதா, அப்பா சமாதானமாயாச்சா!! இத முன்னாடியே செஞ்சிருந்தா என்காது நந்திகிட்ட இருந்து, கொஞ்சம் நிம்மதியா இருந்திருக்கும். என்றார்.

நிவிஷன், நீங்களுமா, நானும் தான் என இருவரும் நந்தினியைப் பார்த்தனர்.

நாளைக்கு கிளம்புறோம் நிவிஷன், ஒரு பையன் எப்படி இருக்கணுமோ அப்படியே இருக்கீங்க, என்றார் ராஜன்.

நந்தினி என்னசொன்னாலும் தலையாட்டுறேனே அதுனாலயா சார் என்றான் நிவிஷன்.

நந்தினி நிவிஷன் விலாவில் இடிக்க, இதை விட்டுட்டனே சில பல அடிகளும் தான் என்றான் நிவிஷன் புன்னகையுடன்.

பிரணவ நல்லா பாத்துக்கோ!! நந்தினி ஆண்டிய கேட்டான்னா உடனே கூட்டீட்டு வந்துடு என்றாள் நந்தினி.

அத்தனைக்கு தலையசைத்துவிட்டு ரஞ்சனியும், மற்றவர்களும் உறங்கச் சென்றனர்.

பலியாவாளா?? பலிகொடுப்பாளா??
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாற்பத்தி ஒன்பதாம் பகுதி...

ரஞ்சனி அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள். சிங்கம் திரும்பியதில், கடை சற்று பயபக்கியுடன், நடந்தது.

ராஜா முகத்தில் சோகம் தெரிய, என்ன ராஜா!! என்ன பிரச்சனை என்றாள் ரஞ்சனி??

ராஜா, ஒன்னுமில்லை மேடம், ஒன்னுமில்லையே!! என்னாச்சு மேடம்?? என திணறினான்.

ரஞ்சனி கண்கள் கூறாக அவனையே பார்க்க, யாரும் ஏதும் சொன்னாங்களா?? மேடம் என்றான் பதற்றத்தில்..

யாரு?? என்றாள் ரஞ்சனி...

யாருமில்லையே!! யாரு... யாரு என உளறினான் அவன்.

ரஞ்சனி, ராஜாவை எதிரில் உள்ள நாற்காலியில் அமரச்சொன்னாள்.

நடந்து வரும் வழியிலே அவனுக்கு கால்கள் இடறியது.

நாற்காலியில் அமர்ந்தவன், சட்டென ஞாபகம் வந்தவனாக எழுந்தான். பேமெண்ட் ரிசிப்ட் இன்னும் வரல, அத என்னனு செக் பண்ணீட்டு வரேன் என்றான்.

பரவால்லை, உட்காருங்க என்றாள் ரஞ்சனி.

வேறு வழியில்லாமல், அமர்ந்தவன், படபடப்பாகவே இருந்தான்.

எதிரில் இருந்த தண்ணீர் டம்ளரை சுட்டி, முதல்ல தண்ணி குடிங்க என்றாள்.

தண்ணீர் குடித்து சற்று அமைதியானதும், ரஞ்சனி பேசினாள். சொல்லுங்க என்றாள்.

என்னப் பத்தி நீங்க தப்பா நினைக்கக்கூடாது. நான் எந்த தவறான எண்ணத்தோடும் இல்லை என பீடிகையுடன் ஆரம்பித்தான்.

கடையில் எந்தவித குளறுபடியும் இல்லை. கணக்குகள் மிகத் தெளிவாக இருந்தது. இவன் எதைப்பற்றி கூற வருகிறான் என யோசித்தாள் ரஞ்சனி.

எம்மேல எந்த தப்பும் இல்லை ரஞ்சனி மேடம், நான் காதலைத்தான் சொல்லப்போனேன். கைகலப்பாகிவிட்டது. ஆனால், அவளது நெற்றியில் போட்ட தையலுக்கும் எனக்கும் எந்தவிதமான நேரடி சம்பந்தமும் இல்லை. அவள் முதலில் புகார் கொடுத்திருந்தாலும், நீங்கள் என பக்க ஞாயத்தையும் கேட்க வேண்டும் என்றான்.

புகார் கொடுத்தது... என ரஞ்சனி யோசிக்க, தேவி எந்த வித புகாரும் கொடுக்கவில்லையா???!!!! என்றான் முழித்தவாறு.

அடுத்த இரண்டு நிமிடத்தில் தேவி ரஞ்சனியின் அறையில் இருந்தாள். அவளது நெற்றியில் காயத்திற்கான பிளாஸ்திரி இருந்தது.

எப்படி காயமானது என ரஞ்சனி தேவியிடம் கேட்க, அவளோ வீட்டுல கதவுல இடுச்சுக்கிட்டேன் என்றாள்.

ரஞ்சனி அதே கேள்வியை, ராஜாவிடமும் கேட்க, அவன் தேவியை குழப்பமாய் பார்த்தவாறு, எனக்கும் அவளுக்கும் சின்ன வாக்குவாதம், அவள் கராத்தேயில் வேகமாக என்னை அடிக்கவர, நான் அவளது கையை பிடித்துவிட்டேன். என்னிடமிருந்து கையை உருவ அவள் முயற்சிக்கும் போது, அவள் தலை பக்கத்திலிருந்த அலுமினியப்பெட்டியில் இடித்துவிட்டது என்றான்.

ரஞ்சனி, இப்போது தேவியை கூர்ந்து பார்த்தாள். சாரி மேடம் என்றவள், வேறேதும் பேசவில்லை. கலங்கமான கண்களை பெருமுயற்சி செய்து மறைத்துக்கொண்டிருந்தாள்.

ரஞ்சனி ராஜாவிடம், பில் வரலனு சொன்னீங்களே, போய் செக் பண்ணுங்க என்றவள், வா என தேவியுடன் வெளியேறினாள்.

தேவி, ராஜாவைப் பார்த்தவாறு கடந்து சென்றாள். தேவியின் பார்வையில் இருந்தது என்ன என்பது அவனுக்கு புரியவில்லை. ஆனால் ஏனோ மனம் கலங்கினான்.

ரஞ்சனி கடையின் உணவகத்திற்குள் நுழைந்ததும், அங்கிருந்த பணியாளர்கள், ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டனர். இன்று யாருக்கு ஆப்போ என்ற ரீதியில், தான் எதிலும் மாட்டிவிடக்கூடாது, என்ற பயத்தில் இருமடங்கு கவனமாக வேலை செய்தனர்.

ரஞ்சனி எதிரில் தேவி அமர, உடனே என்ன வேண்டும் என ஒருவன் ஓடிவந்தான். இரண்டு காபி, நான் சொல்லும்போது எடுத்துவந்தால் போதும் என்றுவிட்டு, தேவியிடம் திரும்பினாள்.

ராஜாவால் உனக்கு ஏதும் தொல்லையா?? எனக்கேட்டாள் ரஞ்சனி.

தேவி, ச்சே, அப்படி எல்லாம் ஒன்றுமில்லை மேடம் என்றாள்.

தேவி இவ்வாறு அமைதியாக இருப்பதால் பிரச்சனை தீராது. உனக்கு தேவையானது என்ன என்று சொன்னால், நான் பார்த்துக் கொள்கிறேன். பிறகு உன் விருப்பம் என்றவள், காபி!! என ஒரு சத்தமிட அடுத்த நொடி டேபிளில் இரண்டு காபி இருந்தது.

ரஞ்சனி காபி அருந்த ஆரம்பித்தாள். தேவி மெதுவாக பேச ஆரம்பித்தாள். நானும் ராஜாவும் ஒருவரையொருவர் காதலிக்கிறோம். அவர் என்னிடம் தன் காதலை சொல்லிவிட்டார். ஆனால் எனக்குவிருப்பம் இருந்தும், நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாள்.

ரஞ்சனி காபி அருந்திய வண்ணம் கதைகேட்க ஆரம்பித்தாள். முதலில் எங்கள் பேச்சு சுமூகமாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது என்னால், அவரை காதலிக்கவும் முடியாது, கல்யாணத்திற்கு நான் தகுதியானவளும் இல்லை.

ரஞ்சனி புருவத்தில் சற்றே முடிச்சுவிழுந்தது. என் அப்பா இறந்தபின், நான் வீட்டின் அப்பாவாகிவிட்டேன். தம்பி படித்துக்கொண்டிருக்கிறான். அம்மா இப்போதுதான் சோகத்திலிருந்து தேறி வருகிறார்கள். என் சம்பாத்தியம் என் குடும்பத்திற்கு இன்று அத்யாவசியம். நான் அவரின் காதலை ஏற்றுக் கொண்டாளோ, இந்த வேலையை விட நேரிடும், கணவன் மனைவியாக இங்கே வேலை பார்க்கக் கூடாது என்று கடையில் சட்டம் இருக்கிறது என ரஞ்சனியை ஏறிட்டுப் பார்த்தாள் தேவி.

ரஞ்சனி, தேவியின் முன்னிருந்த காபிகப்பை காட்ட, தேவி, ரஞ்சனியின் முகத்தை ஆர்வமாக பார்த்தவாறு, காபியை கையிலெடுத்தாள்.

எனக்கு தெரியாம கடையில காதல்.... என்றவள் வேறேதும் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டாள்.

அவளது வேக நடையை கடையின் ஊழியர்கள் திக்கென்ற மனதில் பார்த்துக்கொண்டிருந்தனர்.

தேவி, காபியை அப்படியே வைத்துவிட்டு ரஞ்சனியின் பின் ஓடினாள்.

ராஜா ஏற்கனவே வேலை ஓடாமல், அமர்ந்திருக்க, ரஞ்சனி தனது வேக நடையில் , தனது அறைக்குள் நுழைய, அவனுக்கு பகீரென்றது.

தேவி, மேடம் வெறி சாரி என்றாள். ராஜா பதற்றமாக எழுந்து நின்றான்.

ரஞ்சனி தேவியிடம், என்னிடம் சொன்னதை ராஜாவிடம் சொல் என்றாள்.

தேவி, ரஞ்சனி மீதுள்ள பயத்தில் மடமடவென ஒப்பித்தாள்.

இப்போது ரஞ்சனி பேச ஆரம்பித்தாள். நான் கடையின் ஒழுக்கத்திற்காக போட்ட சட்டத்தை மாற்ற முடியாது. அதனால் ஒருவர் கட்டாயம் வெளியேற வேண்டும். யார் என நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றாள்.

ராஜா நான் வேலையை விட்டுவிடுகிறேன் என்றான். தேவிக்கு அழுகைவந்ததே தவிர, வேலையை விட முடியவில்லை.

அப்படியானால் நீங்கள் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்துவிட்டீர்கள். அப்படித்தான!!என்றதும் தான் இருவருக்கும் உரைத்தது. ராஜாவும் தேவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, ரஞ்சனிக்கு சிரிப்புவந்துவிட்டது.

ராஜா நீங்க போக வேண்டாம். தேவி என்னோட அப்பா கடைக்கு போகட்டும் என்றாள் ரஞ்சனி. தேங்க்ஸ் மேடம் என ரஞ்சனியின் கைகளைபிடித்து கண்ணீர்விட்டாள் தேவி.

நீ மனதில் போட்டு குழப்பாமல், ராஜாவிடம் நேரடியாக பேசினால், அவரே எல்லாவற்றையும் சரி செய்திருப்பார். ராஜாமீது எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்ததால்தான், நா இப்படி ஒரு கேள்வி கேட்டேன்.

அழாதே!! கல்யாணம் எப்போ?? என்றாள் ரஞ்சனி.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராமசாமி உடல் நலம் குறைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரஞ்சனி மருத்துவமனைக்கு சென்று மருத்துவருடன் பேசினாள். உடல் நலம் தேற வழி இருப்பதாகவும், ஆனால் அவர் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மறுப்பதாகவும் மருத்துவர் கூறினார்.

ரஞ்சனி, யோசனையுடன் ராமசாமியை சந்திக்கச் சென்றாள்.

ரஞ்சனியைப் பார்த்ததும், ராமசாமி வருத்தம் ஆனார்.

அவரது பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்தவள், என்ன ராமசாமி, குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறீங்களாமே!! நீங்க நல்லா தெம்பா முன்னமாதிரி ஆகணும்னு ஆசையில்லையா?? எனக் கேட்டாள் ரஞ்சனி.

ராமசாமி உடனே வேண்டவே வேண்டாம்!! என்றார். இப்பவே சுகர் கூடிப்போச்சாம், இதயமும் கோளாறாயிடுச்சு, இப்படியே விட்டா நான் ஒரு மூனுமாசத்துல போய் எம்பொண்ணாட்டியோட சேந்திடுவேன். தேவையில்லாத செலவு எதுக்கு?? என்றார்.

அப்படீனா வாழ வேண்டாம்னே...முடிவு பண்ணீட்டீங்க??

இல்ல, கமலாவோட நினைப்பாவே இருக்கு, முழுசா ஐஞ்சு வருசம் பிரிஞ்சிருந்துட்டேன். இதுக்கும் மேல தனியா வாழ விருப்பமில்லை. அதான் அவளோடவே போகலாம்னு முடிவு பன்னீட்டேன் என்றார்.

இது என்ன பைத்தியக்காரத்தனம் ராமசாமி.

இது உங்களுக்கு புரியாதுமா, என்னோட வாழ்க்கையில் பல கஷ்டங்களில் என்னுடன் இருந்தவள், நான் பயங்கர முரடனாக இருந்தேன், சிலசமயம் கோபத்தில் அவளை அடித்துக்கூட இருக்கிறேன். வறுமையில் இருவரும் பட்டிணி கிடந்திருக்கிறோம். முதன் முதலில் எனது சம்பாத்யத்தில் அவளுக்கு ஒரு வளையல் வாங்கிக்கொடுத்தேன். அவள் முகத்தில் சந்தோசம் , அப்பா!! என இன்று அதை நினைத்து புல்லரித்தார்.

அத்தணைக்கும் அது வெறும் கண்ணாடி வளையல்தான். ஆனால் அதன்பின்தான் என்வாழ்க்கையில் முன்னேற்றம் ஆரம்பித்தது. இப்போது வறுமையில்லை. கடின உழைப்பில்லை. நிம்மதியாகவே இருக்க வேண்டும். ஆனால் என் மனைவியின் துணை அதிகமாக தேடுகிறது. போதும் என முடிவெடுத்துவிட்டேன். இந்த வயதில் தற்கொலை செய்து கொண்டு மற்றவர்களை சிக்கலில் சிக்கவைக்க விரும்பவில்லை. எனவே இப்படியே இறந்துவிடலாம் என முடிவெடுத்து விட்டேன் என்றார்.

ஏன் ராமசாமி?? மனைவி ஒருவர் மட்டும் தான் துணையா?? நண்பர்கள்??? ஏன் என்னை நீங்கள் உங்கள் மகளைப்போல ஒருநாளும் பார்க்கவில்லையா?? எல்லாரையும் விட்டுச்செல்வதுதான் முடிவா?? என்றாள் ரஞ்சனி.

நான் உங்களை என் அப்பா போலத்தான் பார்க்கிறேன். நீங்கள் இப்படி சொன்னதும், உங்களுக்கான என் கடமையை ஒழுங்காக செய்யாததைப்போல உணர்கிறேன் என்றாள் ரஞ்சனி.

ரஞ்சனியின் கைகளை இறுக்கப்பற்றிக்கொண்டவர், உன்னை என் மகள் போல நினைப்பதால்தான், என்னால் வாழமுடியவில்லை என்றார் கண்ணீருடன்.

எனக்கு இந்த வயதில் என்துணையைத்தேடி மனது அலையும்போது, நீ இந்த வயதில் தனிமரமாக நிற்பதை தினமும் பார்க்கும் கொடுமை எனக்கு வேண்டாம் என்றார்.

நான் எப்படி தனிமரமாவேன். எனக்கு என் பையன் இருக்கிறானே!!

கண்ணீருடன் நிமிர்ந்தவர், எனக்கும் ஒரு மகன் இருந்தான். நல்லவனாகத்தான் வளர்த்தேன். எப்படி மாறிப்போனான் என்று உனக்கு நன்றாகவே தெரியும்.

எனக்கு எதுவும் பிரச்சனையில்லை ராமசாமி. யார் எப்படி மாறினாலும் எனக்கு ஒன்றுமில்லை. நான் நன்றாகத்தான் இருக்கிறேன். நன்றாகத்தான் இருப்பேன். என்னை நினைத்து நீங்கள் கவலைப்படும் நிலையில் நானில்லை என்றாள் ரஞ்சனி.

ராமசாமி அவளது கையைவிட்டுவிட்டார். என்மகன் அவன் மனைவியின் பேச்சைக்கேட்டு என்னை தண்டித்தான். நீ கணவனுடன் வாழாமல் என்னை தண்டிக்கிறாய். விட்டுவிடுமா!! உன்னுடன் பேசி என்னால் ஜெயிக்கமுடியாது. இந்த கிழவன் பேசுவதை கேட்கும் நிலை உனக்குமில்லை என அந்தப்பக்கம் திரும்பிக்கொண்டார்.

ரஞ்சனி கட்டிலின் மறுபுறம் வந்து ராமசாமி முன் நின்றாள். சரி என்ன செய்யணும்னு சொல்லுங்க நான் செய்றேன். ஆனா அதுக்கு முன்னாடி நீங்க சிகிச்சைக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும் என்றாள் கறாராக.

ராமசாமி சற்று நிமிர்ந்து அமர்ந்தார். நீ நல்லா..., புருசன் குழந்தைகள்னு கலகலப்பா இருக்கணும். அதுபோதும்!! என்றார்.

நான் பவித்ரனைவிட்டு விலகிவிட்டேன். அது எதனால் என உங்களுக்கே நன்றாகத் தெரியும். இரண்டாவது கல்யாணம் செய்து கொள்ளும் விருப்பம் எனக்கில்லை. என்ன செய்யலாம்?? நீங்களே சொல்லுங்கள்! என்றாள் ரஞ்சனி.

பவித்ரனை விட்டுவிலகி விட்டாய். அவனுடனான காதலை... யும் விட்டு விலகிவிட்டாயா?? என பட்டென கேட்டார் ராமசாமி.

ரஞ்சனி பல்லைக்கடித்தாள்.

உன் கோபம் எனக்கு புரிகிறது. சிறிய தவறுக்கே தண்டனை கொடுக்கும் நீ, உன்னை இந்தளவிற்கு கஷ்டப்படுத்திய பவித்ரனை ஒன்றுமே செய்யவில்லை ஏன்??? நான் கூட ஒருமுறை அவரை திட்டி இருக்கிறேன். ஆனால் நீ இதுவரை எதுவும் செய்ததாக எனக்கு தெரியவில்லை. ஏன்?? என நேரடியாகக் கேட்டார் ராமசாமி.

எனக்கு சில கொள்கை இருக்கிறது. உதவி செய்தவர்களை தண்டிக்கக்கூடாது. அனாதைகளை தண்டிக்கக்கூடாது.

இதில் பவித்ரன் இரண்டாவது ரகம் என்றாள் ரஞ்சனி.

ராமசாமி, அவர் எப்படி அனாதையாவார், மனைவி, மகன் இருக்கும்போது அவர் எப்படி அனாதையாவார் எனக் கேட்டார்.

மனைவியா??? என முறைத்தாள் ரஞ்சனி.

ராமசாமி தொடர்ந்தார். நமக்கு பிடித்தவர்களை காக்க, நம் மனது ஆயிரம் காரணம் தேடும். அதுவே இந்த அனாதை என நான் நினைக்கிறேன் என்றார் ராமசாமி.

நீங்கள் அப்படி நினைக்கும் பட்சத்தில், அவருக்கு சரியான தண்டணை கொடுத்துவிடலாம். எனக்கு உங்கள் விருப்பம்தான் முக்கியம் என்றவள். உங்கள் பேச்சை நான் கேட்டுவிட்டேன். என் பேச்சை நீங்கள் கேளுங்கள். மருத்துவருடன் ஒத்துழையுங்கள் என்றுவிட்டு, மடமடவென வெளியேறினாள்.

அவள் வெளியேறியதும், உள்ளறையிலிருந்து லதா வெளிப்பட்டார். என்ன ராமசாமி, கொம்பு சீவி விட்டுட்டீங்க, இப்ப, தகராறு பண்ணப் போய்டாளே!! என படபடத்தார் லதா.

ராமசாமி சிரித்தார். ரஞ்சனி ஒரு அற்புதமான பெண், கடுமையாகத் தான் இருப்பாள். ஆனால் யாரையும் நிலைகுலைய விட மாட்டாள். இதற்கு நானே ஒரு சாட்சி. எந்த சம்பந்தமும் இல்லாத எனக்காக ஒடிவந்து பார்க்கிறவள், நிச்சயம் பவித்ரனை தண்டிக்க மாட்டள்.

ஆனால் பவித்ரனால் அவளுக்கு ஏதும் ஆபத்து வந்தால், ஏற்கனவே ... என லதா கவலையாக பேச வர, ராமசாமி ச்சே.. ச்சே..என மறுத்தார்.

நல்லதையே நினையுங்கள். ரஞ்சனி கோபக்காரியே தவிர முட்டாளில்லை என்றார் ராமசாமி.

சற்று யோசித்த லதாவிற்கும், இது சரியே எனப்பட, ராமசாமியிடமும், மருத்துவரிடமும் நன்றி கூறிவிட்டு வந்தார்.
 

Uthaya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரன் இரவு தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென செல் ஒலித்தது.

மது பேசினாள். சரக்கு ஏற்றிச்சென்ற லாரி விபத்துக்குள்ளாகி எரிந்துவிட்டதாக தகவல் கொடுத்தாள்.

ஏற்றிச் சென்ற பொருளோ, நூல்!! முழுவதும் நாசமாயிற்று. அத்துடன் சரக்கு வந்து சேரும் என வாக்களித்த இடத்திலும் பதில் சொல்ல வேண்டும்.

பணியாளர்களை இருமடங்கு வேலைவாங்கி கூடுதல் சம்பளம் கொடுத்து நூல் உற்பத்தி செய்யப்பட்டது.

அது லாரியில் ஏற்றும் முன்பே, குடௌனில் எரிந்து நாசமாயிற்று.

இன்சூரன்ஸ்காரர்கள் விசாரித்து பணம்தர கால தாமதமாகும் என்றனர்.

அடுத்தடுத்த அடிகள் பவித்ரனின் கழுத்தை நெறித்தது.

தொழிலில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை. அடுத்தடுத்த விபத்துக்கள் தொழிலாளர்கள் மத்தியில் சலனத்தை எழுப்பியது.

தொழிலாளர்கள் கூட்டத்தில் பேசியவன். இது நம் தொழிற்சாலை, இதில் இழப்பு என்னுடையது. இதை எப்படி சரி செய்வது என்பது எனக்குத் தெரியும். இதை சாத்தியப்படுத்த என்னுடன் உங்கள் ஒவ்வொருவரின் பத்து விரல் கொண்ட கைகளும் வேண்டும். நாம் வீடு உடைந்துவிடவில்லை. சிறு கல்லடி விழுந்திருக்கிறது. அவ்வளவுதான்!! என பேசி சலசலப்பை குறைத்தான்.


சார்! மெட்டீரியல் வாங்கணும் என பேக்டரி மேனேஜர் வந்து நிற்கும்போது, பவித்ரன் திணறித்தான் போனான்.

எதாவது பிராப்பர்டீஸ் விற்று செய்யலாம் என முடிவெடுத்தான். பவித்ரனின் நிலையை புரிந்துகொண்ட மேனேஜர் அவனுக்கு அலோசனை வழங்கினார். நீங்கள் சொத்துக்களை விற்பதற்கு பதிலாக, கம்பெனி ஷேரை விற்கலாமே!! என்றார்.

பவித்ரனுக்கு அது சரி என்று பட, இருபது சதவீதம் விற்றனர்.

ஆனால் தொழிற்சாலையில் பாம் வைத்திருப்பதாக தகவல் வர, பெரிய கலோபரம் ஆனது. அன்று பாம் எதுவும் வெடிக்கவில்லை. ஆனால் இரண்டு நாள் வேலை நின்றதில், சொன்ன தேதியில் பணியை முடிக்காததில், பவித்ரன் திட்டியதில், பலருக்கு மனக்கசப்பு உண்டானது.

தொழில் சற்று இறங்கு முகம் காட்ட ஆரம்பித்தது. சிறு பிரச்சனைகள் எல்லாம் பூதாகரமானது.

வருடத்திற்கு ஒருமுறையான சம்பள உயர்வு காலதாமதமானதில் வேலை நிறுத்தம் அறிவித்தனர்.

மீண்டும் இருபது சதவீதம் ஷேரை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டான் பவித்ரன்.

எல்லாவற்றையும் சரிகட்டி, மீண்டும் உற்பத்தியை ஆரம்பித்தான்.

ஒருவாரம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தொழிற்சாலை இயங்கியது. பவித்ரன் அப்பாடா!! என மூச்சுவிடும் முன் ...

அன்று பவித்ரன் ஆலைக்குள் நுழையும் போதே ஏதோ சரியில்லை என அவனுக்கு தோன்றியது. காரைவிட்டு இறங்கியதும், மது அழுதுகொண்டே ஓடி வந்தாள்.

என்ன மது ?? என்னாச்சு?? ஏன் அழற?? எனக்கேட்டான் பவித்ரன்.

மது, நோட்டீஸ் போடில் என்னோட பெயரை... நான் இனிமேல் ... என எல்லாவற்றையும் பாதியோடு நிறுத்தி அழுதாள்.

பவித்ரன் வேகமாக தொழிலாளர்கள் நோட்டீஸ் போடுக்கு சென்றான். அங்கு மதுவின் மடியில் பவித்ரன் படுத்திருப்பது போன்ற புகைப்படம் ஒட்டப்பட்டது. அதை கிழித்து குப்பையில் போட்டான்.

யூனியன் லீடரை கூப்பிட்டு, இதை யார் செய்தது?? என கடுமையில் கேட்டான் பவித்ரன்.

அவனோ, சார் அது வந்து, உங்களை பார்க்க அம்மா உள்ள உக்காந்து இருக்காங்க, அவங்கதான்... என இழுத்தான்.

யாரது??

ரஞ்சனி அம்மா....என்றதும், பவித்ரனின் கால்கள் தனது அறையை நோக்கி விரைந்தது.

பவித்ரன் தனது அறைக் கதவை திறந்ததும் எதிரில் நின்ற ரஞ்சனியைத் தவிர மற்றவர்கள் அவன் கண்ணுக்கு தெரியவில்லை.

டாலி.... என்றவாறு ரஞ்சனியை நோக்கி விரைந்தவன், அவளை பட்டென கட்டிக்கொண்டான். உடல் இறுக..., மனமுருக...

பலியாவாளா?? பலி கொடுப்பாளா??
 
Top