அத்தியாயம் 20
என்னை காத்திருக்க வைக்கவாவது நீ என் காதலியாக வேண்டும்...
கடைசிவரை வராமல் போனால் கூட பரவாயில்லை..
நீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது நீதானா....
தொட்டால் சிணுங்குவதில்லை...
முத்தம் கேட்டால் வெட்கம் தருவதில்லையே..நீயா..
கவிதை சொன்னால் நெஞ்சில் சாய்வதில்லையே நீயா...
இவ்வளவு அருகில் இருந்தும் உன் வாசம் இல்லையே நீயா.....
வேண்டாம் நீயே வைத்துக்கொள்...
புகைப்படத்திலெல்லாம் நீ இருக்க முடியாது...
அவள் அதை டைப் செய்து அது லோட் ஆகிக்கொண்டிருக்க , அவள் நெட்வோர்க்கை திட்டிக்கொண்டடே மொபைலை பார்த்துக்கொண்டிருந்தாள் ,அது லோட் ஆவதற்குள் அதை பிடிங்கி கையை பின்னால் மறைத்தான்.
பின்னே அவனின் மல்லிப்பூ மொபைலில் டைப் செய்த வார்த்தைகளுக்கு கூகுள் ஆண்டவர் கொடுக்கும் பதில்களை அறிந்தவன் ஆயிற்றே....
“ ஏய் எழுந்து வீட்டுக்கு போ நீ என்ன பண்ணாலும் உன்னை நான் கட்டிக்க மாட்டேன் “ என்றான்.அவனை எழுந்து வேக மூச்சிகளுடன் முறைத்துவிட்டு “ அதுக்கு ஏன்டா ஜக்குவ ஹார்ஸா ஹேண்டில் பண்ற, அவனை கொடு நான் போறேன்.
“ஏய் போடி நொய் நொய்ங்காம தட்டு ,டம்ளர்கெல்லாம் பேரு வச்சிக்கிட்டு ,எனக்கு ஒரு கால் பண்ணனும் பேசிட்டு தரேன் “ என்று அவளை நிற்கவிடாமல் துரத்தினான்.
அவள் சென்றவுடன் அவள் மொபைலில் ஹிஸ்டிரியை டெலிட் செய்தவனுக்கு அப்பாடி என்று இருந்தது.”இந்த அடாவடி ரங்கம்மா தன்னை ஒரு வழி செய்யாமல் விடமாட்டா போலவே” என்று பெருமூச்சி விட்டுக்கொண்டே மொபைலை எடுத்துக்கொண்டு அவளின் வீட்டிற்கு விரைந்தான்.
அங்கே தன்னை தலையால் தண்ணி குடிக்க வைத்த அவனின் ரௌடி ரங்கம்மா அங்கே உள்ள பொடுசுகளுடன் பூஸ்ட் விளையாடிக்கொண்டிருந்தாள்.
“அங்க எவளோ பெரிய வேலைய பண்ண பார்த்துட்டு இங்கே பாப்பா மாறி விளையாடுறாள் பாரேன் என்று எண்ணியவன் ,இவள் எல்லாத்தையும் அர்த்தம் உணர்ந்து ,புரிஞ்சி பண்ணுவாளா இல்லை குழந்தைதனமா பண்ணுவாளா தெரியலையே” என்று குழம்பி போனான்.
மொபைலை கொடுக்க வந்தவனை பிடித்து உட்காரவைத்து அவனை அடுத்த ஒரு மணிநேரம் ஸ்கோர் எழுத வைத்துவிட்டாள் அவனின் மல்லிப்பூ.இன்னும் 10 தினங்களில் புது கட்டுமான நிறுவனத்தின் அனைத்துமாய் அமரப்போகுபவனை அகலி அல்லக்கையாய் மாற்றியிருந்தாள்.
ஆம் அவன் சொந்தமாக ஆரம்பிக்கும் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி எல்லா வேலைகளும் முடிந்த தயாராக திறப்பு விழா மட்டும் என்று நிலையில் இருக்கிறது. ஒரு மருத்துவமனை கட்டும் ஒப்பந்தமும் கையேழுதாகிவிட்டது.
தன்னால் தனியாக நிர்வகிக்க முடியாது என்று சந்தோஷையும் தன்னுடன் பார்ட்னராக்க முடிவு செய்து அவனிடம் சொன்னதற்கு” என் பங்கிற்கான தொகையை தருவதாக இருந்தால் தான் இல்லையென்றால் “working partner “ வேலை செய்வதாக கூறிவிட்டான்.
அவன் பெங்களூரில் தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் பிராஜெக்ட் இன்னும் 15 நாட்களில் முடியபோவதாகவும் அதன் பின் சிங்கப்பூரில் நடக்கும் ஒரு கான்பிரென்ஸ் முடித்துவிட்டு விஷ்வாவின் கம்பெனிக்கு வருவதாக கூறினான். விஷ்வாவும் தன் தன்மான சிங்கத்தின் குணம் அறிந்து சரி என்று ஒத்துக்கொண்டான்.
6 அடியில் உள்ள விஸ்வா ஒரு மணிநேரம் காலை மடக்கி கீழே உட்கார்ந்ததால் கால் எல்லாம் மரத்து போய் வலிக்க தான் தோற்று போனதால் எல்லாரும் தன்னை ஏமாற்றி ஜெயித்துவிட்டதாக தன்னை விட 15 ,20 வயது சின்ன பசங்களிடம் சரிக்கு சமமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் தன் மல்லிப்பூவின் மேல் அவள் ஸ்கோர் எழுத கொடுத்த போனாவையும் நோட்டையும் போட்டவன் காலை தாங்கிக் கொண்டே வந்து தன் வீட்டின் சோபாவில் காலை நீட்டி படுத்துவிட்டான்.
அவன் கண்களை மூடிய 2 நிமிடத்திற்குள் “ மாமா” என்ற கூவளுடன் ஓடிவந்தவள் அவனின் அருகில் வந்தவள் “ மாமா ஏன் காலை தாங்கி தாங்கி வந்த”என்க.
“ச்ச்சு “என்று அழுத்தவன் “எனக்கு கால வலிக்குது கொஞ்சம் வாய மூடிக்கிட்டு போறியா” என்க..
( எப்படி கேட்பா பாரு உன் பேச்சை).
“காலை வலிக்குதா” என்று கேட்டவள் அவன் அவன் காலிற்கு கீழே அமர்ந்து கொண்டு அவன் காலை மெதுவாக
பிடித்துவிட்டாள்.” மாமா நீ கொஞ்ச நேரம் தூங்கு ,நான் கால் அமுக்கி விடுகிறேன்’ என்றாள்.
அவனா வேண்டாம் என்று சொல்வான் அவனாக தொடவில்லை என்றாலும் அவளின் ஒவ்வொரு தீண்டலையும் அவன் ஓராயிரம் முறை எதிர்பார்ப்பவன் அல்லவா ,அவன் வாயை தவிர அவனின் அனைத்து உறுப்புகளும் அவளின் மல்லிப்பூக்கு அடிமையல்லவா அவன் நல்ல வாகாக படுத்துக்கொண்டு அவளை பார்க்க இல்லை சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டான்.
எல்லாமே அவனவளுக்கு அம்சமாக அமைந்திருந்தது.அதுவும் துளி மேக்கப் இல்லாமல் ,
கடுகளவு கருப்பு பொட்டு மட்டுமே அவள் முகத்தில் எக்ஸ்ட்ராவா இருப்பது.ஆனாலும் அவள் அவ்வளவு அழகு கள்ளம் கபடம் இல்லாமல் இருக்கும் அவளின் பிஞ்சி முகம் பார்க்க பார்க்க அவனுக்கு மட்டும் அல்ல யார்க்கும் தெவிட்டாது.
“ஏன் அகலி ஒரு த்ரெட்டிங் கூட பண்ண மாற்ற” என்று கேட்டான்.
“ அய்யோ மாமா அது ரொம்ப வலிக்கும் ,அப்பறம் ஒரு தட பண்ணிட்டோம்னா அதுவே பழக்கமா போயிடும், நம்மால பார்லர்க்கெல்லாம் அலைய முடியாது,
பேசிக்காவே நான் ஒரு வாழபழ சோம்பேறி,நான் காலையில எழுந்து பல்லு விலக்கி ,குளிக்குறதுக்குள்ள நான் அப்பத்தாட 1000 தட திட்டுவங்குவேன் மாமா, அப்பறம் அன்னைக்கு கூட அப்பத்தா” என்று ஆரம்பிக்க
“ கொஞ்சம் வாய மூடுறிய ஒரு கேள்வி கேட்டா ஒரு மணி நேரம் பேசுவ,இதுக்குதான் உன்ட பேசுறதே இல்ல” என்று கூற.
“முசுடு,இவன் கேட்டதுக்குதான பதில் சொன்னேன் என்று மனசுக்குள் முணு முணுத்தவள் வாயை இறுக்க மூடிகொண்டு தன் வேலையை தொடர்ந்தாள்.
கொஞ்ச நேரம் அனுமார் மாதிரி வாயை வைத்துக்கொண்டு காலை பிடித்துத்துக்கொண்டிருக்கும் அகலியை சிரிப்பு போங்க பார்த்தவன் “ ஏய் வாலு ,நாளைக்கு உன் கருவாயன் வரான் போல எங்க ஊர் சுத்த போற” என்றான்.
“ தெரியல மாமா , வந்ததுக்கு அப்பறம்தான் முடிவு பண்ணனும் ,அப்பறம் போறீங்க இல்லை, போறோம், நீயும் வரணும்”என்று சோர்வான குரலில் சொன்னவள் நீட்டி இருக்கும் அவன் காலை கட்டிக்கொண்டு அப்படியே சோபாவின் கீழே உட்கார்ந்த படியே தூங்கி போனாள் .
அவள் காலை கட்டிபிடித்து இருப்பதால் அவளின் பாடாத இடம் பட்டி அவனை இம்சிக்க அவள் அசந்து தூங்கும் வரை பொறுமையை இழுத்து பிடித்தவன் அவளிடமிருந்து காலை மெதுவாக விலக்கியவன் அவளுக்கு எதிரில் உட்கார்ந்து அவளை பார்த்தான்.
அவளின் கன்னத்தில் மெதுவாக கை வைத்தவனின் கைகள் உணர்ச்சி வேகத்தில் நடுங்கியது அவனுக்கு தெரிந்த அவளுக்கு என்றுமே தெரிய போகாத அவனின் காதலான முதல் தொடுகை.
“ சரியான சோவை டி , 5 நிமிஷம் கால் அமுக்குறதுக்கு இப்படி சோர்ந்து போற” என்று அவளை கொஞ்சியவன்
“ நீ இல்லாமல் நான் எப்படி டா இருப்பேன்,அந்த வாழ்க்கை எனக்கு நரகம் ஆகிடும் ,நொடிக்கு நொடி செத்து போவேன்,நிம்மதி இல்லாமல் அலையுவேன், சுயம் தொலைப்பேன் ஆனால் என் சுயநலத்துக்காக உன்னை நான் எப்படி கஷ்டப்படுத்துவேன்
,என்னை விட 2 வயசு அதிகம் உள்ள என் அண்ணியே என் அம்மாகிட்ட அவ்வளோ கஷ்டப்படுறாங்க,ஆனால் உனக்கு வயசு மட்டும்தான் ஆகிருக்கு மற்றபடி குழந்தைதான்,அங்க வந்தா நீ எப்படி தாங்குவ, உன் குணம் குறையாம,இதே வெள்ளை மனசோடு கடைசி வரைக்கும் இருக்கணும், உன் கருவாயன் என்னை விட எல்லாவற்றிலும் உயர்வான ராஜா குமாரனை இல்லை இல்லை அதை விட சிறந்த ஒருத்தனை உனக்காக தேடி கண்டுபுடிச்சி தருவான், உன்னை கொண்டாடுவான்,ஏனோ அவளை இன்னொருவனுடன் இணைத்து பேசும் போது அவனுக்கு தொண்டை கமரியது.
எனக்கு நீ கொடுத்த இந்த நினைவுகள் மட்டும் போதும்டா என் ஆயுள் முழுக்க” என்று கூறியவனின் கண்களை தாண்டி கண்ணீர் வடிந்தது.
அவள் நெற்றியில் அழுந்த முத்தம் கொடுத்தான்.அந்த முத்தத்தில் எல்லா உணர்வுகளையும் தாண்டி அவள் கிடைக்காத வலியே அதிகம் இருந்தது.
அசௌகரியமாக படுத்திருந்தவளை தூக்கி சோபாவில் படுக்கவைத்தவன் அவள் எழுவதற்கு லேசாக சினுங்கும் வரை அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தவன் அவள் விழிக்கும் நேரம் அங்கிருந்து நகர்ந்தான்.
மறுநாள் வீட்டுக்குள் ஆர்ப்பாட்டமாக “ மாமா,மாமா” என்று ஏலம் போட்டுக்கொண்டே தனியே நுழைந்தவளை “ உன்னிட்ட எத்தனை தட சொல்றது இப்படி சத்தம் போட கூடாது ,குதிக்க கூடாதுன்னு ,சந்தோஷ் எங்க “ என்றான்.
“ வவ்வ்வ்வவ்வே” என்று அவனுக்கு ஒழுங்கு காண்பித்தவள் “ கருவாயனுக்கு வேற எதோ வேலை இருக்காம், ஒரு 2 மணி நேரத்துக்கு அப்பறம் ஜாயின் பண்ணிக்கிறானா போற இடத்தை பிங் பண்ண சொன்னான்” என்றவள் அவன் கையைபிடித்து இழுத்துக்கொண்டு வெளியே செல்ல
அவள் இழுத்த இழுப்பிற்கு வெளியே சென்றாலும் “ தன்னிடம் சொல்லாமல்,தனக்கு தெரியாமல் எங்கே போயிருப்பான்” என்று யோசித்தவன் சந்தோஷிற்கு கால் செய்ய போகவே அவன் மொபைலை பறித்தவள்” அந்த அற மண்டயனுக்கு அப்புறமா கால் பண்ணிக்கலாம் நீ வா” என்று முதுகில் இரண்டு கையை வைத்து அவளை லிஃட்டின் பக்கம் தள்ளினாள்.
(உனக்கு சொல்லாமல் அவன் எங்க போவான். உன் தங்கச்சியை டாவு அடிக்கதான் போவான்)
அவனும் “சரி சரி” என்று சிரித்துக்கொண்டே அவள் தள்ளும் பக்கம் சென்றான்.
ஜனனியை பார்க்க சென்ற சந்தோஷ் எப்பொழுதும் கையை மட்டும் பிடித்துக்கொள்பவன் இன்று அவள் அருகில் அமர்ந்து தோளை சுற்றி கையை போட்டுக்கொண்டான்.எப்பொழுதும் ஒரு வித எச்சரிக்கை உணர்வோடு இருக்கும் தன் பிளாக்கி இன்று இத்தனை பேர் பார்க்க பீச்சில் தன் மேல் கையை போட்டிருப்பது ஜனனிக்கு ஆச்சரியமே..
அவளும் வாய்ப்பை விடாமல் அவனோடு நன்கு உரசிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.இருவருக்கும் உள்ளுணர்வு ஏதோ சொல்ல எதுவும் புரியாமல் அமைதியாக களித்தனர் அரை மணி நேரத்தை.
(அது உங்களுக்கு புரிஞ்சா எனக்கு வேலையே இல்லையே இந்த உள்ளுனர்வின் பெயர் இது தான் உங்களின் கடைசி சந்திப்பு என்பதே என்று சிரித்தது விதி )
பின் அவள் கையை அழுந்த பிடித்துக்கொண்டு “ தக்காளி இனி உன்னை பார்க்க சிங்கப்பூர் போய் அந்த கான்பிரென்ஸ் முடிஞ்சத்துக்கு அப்பறம்தான் முடியும் ,அதுவரைக்கும் டாக்டர் அம்மா ஒழுங்கா எல்லாருக்கும் ஊசி போட்டுட்டு பத்தரமா ,சரியா” என்றான்.
அவளும் அவனை பிரிய போகிறோம் என்று கண்களில் கண்ணீர் மல்க வார்த்தை வராமல் வெறும் தலையாட்டினாள்.இருவரும் காதலர்கள் என்றுதான் பெயர்.ஆனால் அதிகம் பார்த்து கொள்வது இல்லை,போனில் அதிகம் பேசிக்கொள்வது இல்லை,எந்த அழகிய வரம்பு மீறலும் இல்லை ஆனாலும் இருவர் மனதிலும் டன் கணக்கில் காதல் நிரம்பி வழிந்தது.
இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க 1 மணி நேரம் கழித்து சந்தோஷ் கிளம்பினான். மனமே இல்லாமல் அவனுக்கு விடைகொடுத்தாள் அவன் 10 அடி செல்லும் வரை அவன் முதுகை பார்த்து கொண்டு நின்றவள் அதற்கு மேல் தாங்காமல் ஓடிச்சென்று அவன் பின்னால் அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
அவனுக்கும் அதே நிலைமைதான் அவளை தன்னிடமிருந்து பிரித்து முன்னே கொண்டுவந்தவன் “ இங்க பாரு தக்காளி இன்னும் அதிகபட்சம் 1 மாசம்தான் அதுக்குள்ள நானே உன் அண்ணகிட்ட உன்னை பொண்ணு கேட்பேன் அப்படியே அவன் கொடுகமாட்டேன் அப்படி சொன்னாலும் அத்தான் உன்னை அலேக்கா தூக்கிட்டு போயிடுவேன் அதனால வருத்தபடாம இருக்கணும் ,அப்பறம் இப்படி பூசணிக்காய் மாறி இருந்த அத்தானுக்கு தூக்கிட்டு ஓடுறது ரொம்ப கஷ்டம்,அதனால கொஞ்சம் உடம்பை குறைக்கனும் சரியா” என்று அதை இதை கூறி அவளை சிரிக்க வைத்துவிட்டே சென்றான்.
போகும் போது அவன் யோசனையெல்லாம் தேனுக்குட்டி விஷ்வாவை இன்னும் 1 மாதத்தில் சரி கட்டிவிடுவாள என்பதுதான் அவளின் செய்கைக்கு அவனிடம் எந்த கோபமும் இல்லை என்றாலும் அவளுக்கு பாசிடிவாகவும் எதுவும் அவன் செய்யவில்லை.
ஆனால் அவனுக்கு தேனுக்குட்டியின் கள்ளம் கபடம் இல்லாத அன்பின் மீது அபார நம்பிக்கை இருந்தது.அது எப்படியும் தன் நண்பனை மாற்றிவிடும் என்று.
அங்கே விஷ்வா அவளை “snow land” அழைத்துக்கொண்டு சென்றான்.அங்கே பனியில் விளையாடும் அகலியை காதல் பொங்க பார்த்துக்கொணடிருந்தான் .
பிளாக் கலர் ஸ்கர்ட் வைட் கலர் செமி காலர் ஷர்ட் போட்டுக்கொண்டு அங்கே குழந்தையோடு குழந்தையாக விளையாடும் தன் வளர்ந்த குழந்தையை விழி வேர்க்க பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒரே ஈரமாக இருக்கும் அந்த இடத்தில் குதித்து குதித்து விளையாடிக்கொணடிருந்தவள் கால் வழுக்கி விழவே பதறி அடித்துக்கொண்டு அருகில் சென்றான்.
அதற்குள் முட்டிக்கையில் அடிப்பட்டு லேசாக ரத்தம் வர மிருதுவான கைகள் ஆதலால் கை முழுவதும் சிவந்து போக அழுகைக்கு தயாராக இருந்தவளை ஓடிச்சென்று தாங்கிக்கொண்டான்.
“ ஏன்மா இப்படி உன்னை நீயே புண்ணாக்கிகிற எவளோ டைம் சொல்றேன் குதிக்காத குதிக்காதனு பாரு ரத்தம் வருது” என்றவன் அவளை அருகில் உள்ள கிளினிக்கிற்குஅழைத்து சென்று முதலுதவி செய்து அழைத்து வந்தான்.
நம் நாயகிக்கு 5 நிமிடம் தானே வலி,கோபம் எல்லாம், ஒரு 5 நிமிடம் ஓவென அழுதவள் அடுத்து 6 வது நிமிடத்தில் அவனை வேறு எங்கயாவது அழைத்து செல்ல சொல்லி டார்ச்சர் செய்ய. ஆரம்பித்துவிட்டாள் .
விஷ்வாவிற்கு அந்த சின்ன காயத்திற்கே முகம் முழுவதும் சிவந்த நிற்கும் தன் குழந்தையை பார்க்க பார்க்க வேதனை அதிகமானது.
அவள்படுத்தி எடுக்கவே அதே மாலில் உள்ள இண்டோர் கேமில் உள்ள டேபிள் டென்னிஸ் விளையாட சொன்னவன் அவளை பார்த்தபடி அமர்ந்துவிட்டான்.
விஷ்வா அவளை snow land ல் காதல் போங்க பார்த்தது அவளிற்கு அடிப்பட்டதும் உயிர் தெறிக்க ஓடி அவளை தாங்கியது அதன் பின் நடந்த அனைத்தையும் இரு கண்கள் படம் பிடித்தது.
சிறிது நேரம் செல்ல தன் அருகில் யாரோ அமரும் அரவம் கேட்டு தலையை திருப்பி பார்த்தான்.அங்கே மினி ஸ்கர்ட் ,கிராப் டாப் அணிந்து கொண்டு எதையெல்லாம் காட்டக்கூடாதோ அதை எல்லாம் காட்டிக்கொண்டு அமர்ந்தாள் ரீனா.
அவள் அருகில் அமர்ந்ததும் ஏதோ அசிங்கத்தை கண்டது போல் முகத்தை சுழித்து கொண்டு எழுந்து தூரமாக நின்று அவளின் கோபத்தை இன்னும் அதிகமாக்கினான் .
அன்று ரீனா அவளிடம் கேட்டதிலிருந்து அவன் அவளை காணவில்லை .அதன் பின் அவளை பற்றி கல்லூரியின் வாயிலாக அறிந்தவனுக்கு ஒவ்வாமை அதிகரித்தது.ச்சி என்றானது அவளை நினைக்கும் போதே.
ஆனால் அவனுக்கு தெரியவில்லை அவளை அசிங்க படுத்திய அன்றிலிருந்து இன்று வரை அவன் மட்டும் அல்லாது அவன் குடும்பம் முழுவதும் அவளால் கண்காணிக்கப்படுவதும்.கண்ணனின் கல்யாணம்,ஜனனியின் காதல் என அனைத்தும்.
இன்று கூட விஷ்வா கொஞ்ச நாட்களாக அவன் ஒரு பெண்ணுடன் சுற்றிவதும் இன்று அவளுடன் வெளியில் வந்திருப்பது என அனைத்தும் .
அவனின் முகப்பாவனையை கண்டவளின் கோபம் பலமடங்கு எகிற எப்பொழுதும் தன்னை பார்ப்பவர்களின் கண்களில் பயம் இல்லை தன் மேனியை மொய்க்கும் அந்த ரசனை பார்வை ,இல்லை ஒதுங்கி போகும் பாவனையை மட்டுமே பார்த்தவளுக்கு இவனின் இந்த பார்வை எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல் ஆனது.
“ யாரு அந்த பொண்ணு நீ லவ் பண்ற பொண்ணா” என்றாள்.
ரீனா அகலியை பற்றி சொன்னதும் நொடியில் அவனின் முகம் மென்மையை கடன் வாங்கி தன்னவளை ஆசையோடு பருகியது.அவனின் ஒவ்வொரு செய்கையும் அவளின் கோபத்தை அதிகப்படுத்தியது என்றால் மிகை இல்லை.தன்னை பார்க்கும் போது அருவருக்கும் முகம் அவளை பார்க்கும் போது மட்டும் பிராகாசிக்குதே என்று.
கொதிக்கும் மனதை அடக்கி ” கேட்கிறேனே “ என்று அவள் உரும
அவள் உறுமல் கூட தன்னவளை மெய் மறந்து பார்ப்பதில் அவன் காதில் சாதரணமாக விழ தன் மல்லிப்பூவை பார்த்துக்கொண்டு “ ஆமா இவள் தான் என் காதலி,என் மனைவி,என் குழந்தை ,என் குலசாமி,என் உயிர்,என் உயிர்ப்பு,என் சந்தோசம் என யாரிடமும் கூறாத தன் காதலை கூறக்கூடாத நபரிடம் ஆழமாக கூறினான்.
அவன் இத்தனை நாட்களாக மனதில் ஆழமாக உருப்போட்டது அகலியிடம் மட்டும் தன் காதலை சொல்லக்கூடாது என்பதே.
அதற்கேற்ப அவனின் மனதும் மூளையும் அருகில் இருப்பது அகலி இல்லை என்று கிரீன் சிக்னல் கொடுக்க இது வரை யாரிடமும் சொல்லாமல் மூச்சி முட்ட யாரிடமாவது சொல்லலாம் என்று நிலையில் இருந்தவன் தன்னிலை மறந்து இவளிடம் கூறிவிட்டான்.
“ ஓ” என்று குரோதமாக சொன்னவள் அவளை வேணுனா கல்யாணம் பண்ணிக்க அதுக்கு முன்னாடி “ என்றவளின் அர்த்தம் புரிய அவளை கோபமாக பார்த்தான்.
ரீனா முடிவு செய்துவிட்டாள் எப்படியும் அவனின் அழிவு நிச்சயம் அது அவன் உயிர் எடுத்து அல்ல அவனின் மல்லிப்பூவின் உயிரை எடுத்து அதற்கு முன் அவன் வேண்டும் ரீனாவிற்கு முதல் தடவை அவன் அழகின் மேல் உள்ள ஆசையை போல் அல்லாமல் இப்பொழுது தான் நினைத்ததை நடத்தி முடிக்க வேண்டும் என்ற தன் அகங்காரத்தால்.தான் நினைத்தது நடக்காமல் போனால் எவ்வளவு அசிங்கம் என்பதால்.
அவளின் முக்கால் வாசி செயல்கள் இப்படியே தீர்மானிக்கபடுகின்றன நினைப்பிற்கும்,விருப்பத்துக்கும், வேண்டும் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இவள் நினைப்பு மட்டுமே இவளை அதலபாதளத்தில் தள்ளியது.
அவளின் வார்த்தையில் கோபமாக அவளை நோக்கி திரும்பியவன் “ உன்னை அடிக்கிறதுக்கு தொட்ட கூட பாவம், நீயெல்லம் இந்த பிறப்பு எடுத்து வாழ்றதுக்கு நாண்டுகிட்டு சாகலாம், அகலியை பார்த்து அந்த மாறி தேவதை பெண்கள் வாழும் இந்த பூமியில் உன்னை எல்லாம் ஏன் இந்த கடவுள் படைத்தானு அவன் மேல கோபம் கோபமா வருது, சீ நீயெல்லம் பெண்ணா என்று அவளின் ஒட்டு மொத்த கோபத்தையும் ஒரே நேரத்தில் இன்னும் ஏதெதோ பேசி அதிக்கப்படுத்திவிட்டான்.
ரீனா முடிவெடுத்து விட்டாள் தன்னை பெண்ணா என்று கேட்பவன் வாழ்க்கையில் இனி எந்த பெண்ணும் இருக்க கூடாது,தன் தொடுகையை அருவருப்பாக பார்ப்பவன் எந்த பெண்ணையும் தொடக்கூடாது, தன்னை திருமணத்திற்கு தகுதி இல்லாதவள் என்று சொன்னவன் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது,அவனை காதலாக,இல்லை கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணத்தோடு பார்க்கும் பெண்களுக்கு அந்த நினைப்பே இருக்க கூடாது என்று.
தன் மாமா யாருடனோ பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தவள் விளையாடுவதை விட்டுவிட்டு ஓடி வந்து அவன் கைகளில் தொங்கிக்கொண்டு “ மாமா யாரு இவங்க” என்றாள்.
ரீனாவின் மேல் அடங்காத கோபம்,அருவருப்பு இருந்த போதும் அகலி கையை பிடிக்கும் போது அவன் முகம் மென்மையாக மாறியதை ரீனா கவனித்தாள்.
அவன் கோபமாக பதில் பேசாமல் நிற்கவே இந்த “மாமா நமக்கு என்னைக்கு பதில் சொல்லியிருக்கு முசுடு” என்ற மனதிற்குள் யோசித்தவள் ரீனாவிடம்” ஹாய் அக்கா நான் அகலி வீர் மாமாவோட லவ்வாங்கி” என அவனை பார்த்து கண்ணடித்தாள்.
விஷ்வாவோ” இவள் அடங்கவே மாட்டாள் “ என்று இவளோ நேரம் இருந்த கோபம் ஆத்திரம் எல்லாம் பனிபோல் விலக சிரித்து கொண்டே அவள் தலையில் குட்டியவன் “ வாய அடக்கு அகலி” என்றான்.
( அப்படியே அவள் கேட்டுட்டாலும்)
அக்கா நீங்க மாமா கூட படிச்சவங்களா,இல்லை வேலை பாக்குறீங்களா உங்க பேர் என்ன ,இந்த ட்ரெஸ்ல நீங்க பார்பி டால் மாதிரி அழகா இருக்கீங்க, என்று அவள் பாட்டுக்கும் ரீனாவின் கையை பிடித்துக்கொண்டு வழ வழ என போசிக்கொண்டே போக அப்பொழுதுதான் ரீனாவின் உடையை கவனித்தான் உண்மையில் அவனின் மல்லிப்பூ சொல்வது போல அவள் பார்பி மாதிரிதான் இருந்தாள். அவள் உடையிலும், தோற்றத்திலும் உள்ள குறைமட்டும் நம் கண்ணுக்கு தெரிய இவளுக்கு மட்டும் எப்படி
இவள் கண்ணுக்கு நல்லவைகள் மட்டும்தான் தெரியும் போல, வரம் வாங்கி வந்தவள் என் தேவதை என்று எண்ணிக்கொண்டான்.
“மாமா நான் இவளோ பேசுறேன் அந்த அக்கா எதுமே பேசாமல் போய்ட்டாங்க,உன் கூட இருக்குறவங்க எல்லாம் இப்படித்தான் இருப்பாங்களா உன்னை மாறியே அந்த அக்கா பேரு என்ன சொல்லு சொல்லு என்று அவனை ஒரு வழி பண்ணியவள் தெரிந்தே பின்னே அவனைவிட்டாள்.
பாவம் அவளின் வாழ்க்கையை புரட்டி போடும் பூகம்பம் தான் அது என்று அவளுக்கும் தெரியவில்லை அவனுக்கும் தெரியவில்லை .
ரீனா ஏதாவது செய்கையால்,பார்வையால் உணர்த்தி இருந்தால் கூட அவன் தன்னவளை அடை காத்திருப்பான்.அவள் சாதரணமாக இருக்கவும் இவளால் அகலிக்கு பிரச்சனை வரும் என்று அவனுக்கு ஒரு அறிகுறி கூட அப்பொழுது தெரியவில்லை.
அதன் பின் இருவரும் சந்தோஷை தேடி சென்றார்கள் அதன் பின் அவன் வாலை பிடித்துக்கொண்டே சுற்றினாள்.
“அவளோட கருவாயன் வந்தா மட்டும் நாம அவ கண்ணுக்கே தெரியமாட்டோம்” என்று அவன் செல்லமாக அழுத்துக்கொண்டான்.
அவனுக்கு எங்கே தெரிய போகிறது டன் கணக்கில் புருஷன் மீது காதல் இருந்தாலும் பொறந்த வீட்டில் இருந்த வரும் போது அவர்களுக்கு ஓடி ஆடி வேலை செய்து அவர்கள் கூட இருக்கும் சுகம்.
எல்லாம் முடிந்து வீட்டிற்கு சென்றனர்.தன் வீட்டில் சிறுது நேரம் ஓய்வு எடுத்தவன் புது ஆபிஸ் பற்றி பேச சந்தோஷை காண அங்கு சென்றான்.அங்கே அவன் ரெடியாகி கொண்டு இருப்பதை பார்த்தவன் “ எங்கடா கிளம்புற நாளைக்கும் உனக்கு லீவ்தான “ என்க
சந்தோஷ் “நாளைக்கு லீவு தான் விஷ்வா ஆனால் தேனுக்குட்டிய இன்னைக்கு கொண்ட ஊருல விடனும் அதான் இன்னைக்கு கிளம்புனாதான் பாப்பாவ வீட்டில விட்டுட்டு கிளம்ப சரியா இருக்கும்” என்றான்.
“ நீ எவளோ அலைவடா எங்க உன் பாப்பா “ ,அகலி” என்று அழைத்தவன் “ ஏற்கனவே அவன் உனக்காக வாரம் வாரம் இங்கேயும் அங்கேயும் அலையுறான் இதுல அவன் உன்னை ஊருல விட வேற வரனுமா” என்று அதட்டவே
“நான் தனியா பஸ்ல போறேன்னுதான் மாமா சொன்னான் சந்தோஷ்தான் கேட்க மாட்றான் “ என்க
“தனியாவா” என நினைத்தவன் அவளின் மாமாவை கோட்டைவிட்டான்.சிறிது நேரம் யோசித்தவன் “நாளைக்கு எனக்கு புதுகோட்டை போற வேலை இருக்கு நான் அகலியை தஞ்சாவூரில் இறக்கிவிடுறேன் அங்கேர்ந்து ராஜா வந்து அழைச்சுப்பான் இப்ப நீ போய் தூங்கு என்று அசதியாக நிற்கும் சந்தோஷை விரட்டினான்.அவனும் உடனே சென்று சுருண்டு தூக்கிவிட்டான்.பாவம் அவனுக்கும் வேலை நெட்டு கலண்டது
“ ஐ மாமா நீ வாரியா ஜாலி ஜாலி என்று அவன் கன்னத்தை வழித்துவாயில் போட்டுக்கொண்டாள்.
மறுநாள் முழுவதும் அவளின் அடாவடித்தனத்தில் பொழுது கழிய சந்தோஷ் பெங்களூர் புறப்பட்டான். இவர்களும் ஊருக்கு செல்ல அகலியை அழைக்க விஷ்வா வர அவனவள் அவனுக்கு முன் கோயம்பேடு சென்று இரண்டு டிக்கெட் எடுத்து கொண்டு அவனுக்கு கால் செய்துவிட்டாள் ” மாமா நான் டிக்கெட் எடுத்துட்டேன் நீ பாஸ்டான்ட் வந்துடு “ என்று.
“
உன்னை யாரு பஸ்ல கூப்பிட்டுகிட்டு போறேன்னு சொன்னா” என்பதற்குள் அவள் லைனை கட் செய்துவிட்டாள்.குள்ளவாத்து என்னை படுத்துறதுக்கே இந்த பிறவி எடுத்திருக்காள் போல” என்று திட்டிக்கொண்டே காரை கேயம்பேடு விரட்டினான்.
அங்கே உள்ள பஸ்சில் அமர்ந்து “subway surf” கேம் விளையாடிக்கொண்டிருந்தவளை அகலி வா காருல போகலாம் 10 மணிநேரம் பஸ் ட்ராவல்லாம் என்னால முடியாது” என்றான்.
“அப்ப நீ காருல வா நான் இதுல வரேன் என்றவள் மீண்டும் விளையாட தொடங்கிவிட்டாள்.உன்னை என்று பல்லைக்கடித்தவன் வேறு வழி இல்லாமல் அவன்தான் இறங்கி வரவேண்டியதாயிற்று.
டிரைவருக்கு கால் செய்து காரை எடுத்துக்கொண்டு காலையில் தஞ்சாவூருக்கு வருமாறு சொல்லிவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
அடுத்த 3 மணிநேரம் அவனிடம் தொன தொணத்தவள் அவன் கை சந்தில் ஒரு கையை விட்டு அவனின் ஒரு கையை பிடித்து கொண்டு அவன் தோள்பட்டையில் சாய்ந்து கொண்டு மறுகையால் அவனின் இடுப்பை பிடித்துக்கொண்டு தூங்கிப்போனாள்.
அவளின் தூக்கம் கலையாமல் அவளின் தோளை சுற்றி கைகளால் வலைத்தவன் தஞ்சாவூர் வரும் வரை சிறுது அசைவு இல்லாமல் அமர்ந்து இருந்தான்.
அதன் பின் அவளை ராஜாவிடம் ஒப்படைத்துவிட்டு அவன் தன் வேலையை முடித்துக்கொண்டு ஊர் வரவே அகலியும் ராஜாவுடன் சென்னை வந்து சேர்ந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் வேகமாக செல்ல விஷ்வாவும் புது கம்பெனி திறப்புவிழா முடிந்து 10 நாட்கள் ஆக சந்தோஷ் கான்பிரேன்ஸ் விஷயமாக சிங்கப்பூர் செல்வது 10 நாட்கள் முன்னாடி செல்ல வேண்டும் என்று ரீசேடுல்(reschedule) ஆக அவனால் வரமுடியாமல் போனது.
அகலியை அழைத்தற்கு “நீ எனக்கு லவ்க்கு ok சொன்னதான் வருவேன்” என்று முருக்கிக்கொண்டு செல்ல “ நீ வரவே வேண்டாம் “ என்று அவனும் நமட்டு சிரிப்புடன் சென்றுவிட்டான்.
“முசுடு இன்னொரு முறை கூப்பிடுகிறான பாரு “ என அவள் தான் புஸ் புஷ் என்று மூச்சி வாங்கிக்கொண்டு திரிந்தாள். அதுவும் அன்று மாலை வரையே அதன் பின் மீண்டும் மாமா புராணம்தான்.
இப்படியே நாட்கள் செல்ல அண்ணனும் அண்ணியும் நல்லாத்தான இருக்காங்க அம்மாவும் ஓரளவுக்கு ஒகே நம்ப மல்லிப்பூபற்றி அம்மாவிடம் பேசி பார்க்கலாமா என்று அவன் யோசித்து முடிப்பதற்குள் அவன் போன் ,ருக்கு இரண்டு மாத கர்ப்பிணியாக லாரியில் அடிப்பட்டு இறந்துவிட்டாள்,கண்ணன் சுயம் தொலைத்து அமர்ந்து இருக்கிறான் என்ற செய்தியை தாங்கி வந்து அவன் தலையில் இடியை இறக்கி வைத்து சென்றது.
வருவாள்..
என்னை காத்திருக்க வைக்கவாவது நீ என் காதலியாக வேண்டும்...
கடைசிவரை வராமல் போனால் கூட பரவாயில்லை..
நீ கொடுத்த புகைப்படத்தில் இருப்பது நீதானா....
தொட்டால் சிணுங்குவதில்லை...
முத்தம் கேட்டால் வெட்கம் தருவதில்லையே..நீயா..
கவிதை சொன்னால் நெஞ்சில் சாய்வதில்லையே நீயா...
இவ்வளவு அருகில் இருந்தும் உன் வாசம் இல்லையே நீயா.....
வேண்டாம் நீயே வைத்துக்கொள்...
புகைப்படத்திலெல்லாம் நீ இருக்க முடியாது...
அவள் அதை டைப் செய்து அது லோட் ஆகிக்கொண்டிருக்க , அவள் நெட்வோர்க்கை திட்டிக்கொண்டடே மொபைலை பார்த்துக்கொண்டிருந்தாள் ,அது லோட் ஆவதற்குள் அதை பிடிங்கி கையை பின்னால் மறைத்தான்.
பின்னே அவனின் மல்லிப்பூ மொபைலில் டைப் செய்த வார்த்தைகளுக்கு கூகுள் ஆண்டவர் கொடுக்கும் பதில்களை அறிந்தவன் ஆயிற்றே....
“ ஏய் எழுந்து வீட்டுக்கு போ நீ என்ன பண்ணாலும் உன்னை நான் கட்டிக்க மாட்டேன் “ என்றான்.அவனை எழுந்து வேக மூச்சிகளுடன் முறைத்துவிட்டு “ அதுக்கு ஏன்டா ஜக்குவ ஹார்ஸா ஹேண்டில் பண்ற, அவனை கொடு நான் போறேன்.
“ஏய் போடி நொய் நொய்ங்காம தட்டு ,டம்ளர்கெல்லாம் பேரு வச்சிக்கிட்டு ,எனக்கு ஒரு கால் பண்ணனும் பேசிட்டு தரேன் “ என்று அவளை நிற்கவிடாமல் துரத்தினான்.
அவள் சென்றவுடன் அவள் மொபைலில் ஹிஸ்டிரியை டெலிட் செய்தவனுக்கு அப்பாடி என்று இருந்தது.”இந்த அடாவடி ரங்கம்மா தன்னை ஒரு வழி செய்யாமல் விடமாட்டா போலவே” என்று பெருமூச்சி விட்டுக்கொண்டே மொபைலை எடுத்துக்கொண்டு அவளின் வீட்டிற்கு விரைந்தான்.
அங்கே தன்னை தலையால் தண்ணி குடிக்க வைத்த அவனின் ரௌடி ரங்கம்மா அங்கே உள்ள பொடுசுகளுடன் பூஸ்ட் விளையாடிக்கொண்டிருந்தாள்.
“அங்க எவளோ பெரிய வேலைய பண்ண பார்த்துட்டு இங்கே பாப்பா மாறி விளையாடுறாள் பாரேன் என்று எண்ணியவன் ,இவள் எல்லாத்தையும் அர்த்தம் உணர்ந்து ,புரிஞ்சி பண்ணுவாளா இல்லை குழந்தைதனமா பண்ணுவாளா தெரியலையே” என்று குழம்பி போனான்.
மொபைலை கொடுக்க வந்தவனை பிடித்து உட்காரவைத்து அவனை அடுத்த ஒரு மணிநேரம் ஸ்கோர் எழுத வைத்துவிட்டாள் அவனின் மல்லிப்பூ.இன்னும் 10 தினங்களில் புது கட்டுமான நிறுவனத்தின் அனைத்துமாய் அமரப்போகுபவனை அகலி அல்லக்கையாய் மாற்றியிருந்தாள்.
ஆம் அவன் சொந்தமாக ஆரம்பிக்கும் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி எல்லா வேலைகளும் முடிந்த தயாராக திறப்பு விழா மட்டும் என்று நிலையில் இருக்கிறது. ஒரு மருத்துவமனை கட்டும் ஒப்பந்தமும் கையேழுதாகிவிட்டது.
தன்னால் தனியாக நிர்வகிக்க முடியாது என்று சந்தோஷையும் தன்னுடன் பார்ட்னராக்க முடிவு செய்து அவனிடம் சொன்னதற்கு” என் பங்கிற்கான தொகையை தருவதாக இருந்தால் தான் இல்லையென்றால் “working partner “ வேலை செய்வதாக கூறிவிட்டான்.
அவன் பெங்களூரில் தற்போது வேலை செய்து கொண்டிருக்கும் பிராஜெக்ட் இன்னும் 15 நாட்களில் முடியபோவதாகவும் அதன் பின் சிங்கப்பூரில் நடக்கும் ஒரு கான்பிரென்ஸ் முடித்துவிட்டு விஷ்வாவின் கம்பெனிக்கு வருவதாக கூறினான். விஷ்வாவும் தன் தன்மான சிங்கத்தின் குணம் அறிந்து சரி என்று ஒத்துக்கொண்டான்.
6 அடியில் உள்ள விஸ்வா ஒரு மணிநேரம் காலை மடக்கி கீழே உட்கார்ந்ததால் கால் எல்லாம் மரத்து போய் வலிக்க தான் தோற்று போனதால் எல்லாரும் தன்னை ஏமாற்றி ஜெயித்துவிட்டதாக தன்னை விட 15 ,20 வயது சின்ன பசங்களிடம் சரிக்கு சமமாக சண்டை போட்டுக்கொண்டிருக்கும் தன் மல்லிப்பூவின் மேல் அவள் ஸ்கோர் எழுத கொடுத்த போனாவையும் நோட்டையும் போட்டவன் காலை தாங்கிக் கொண்டே வந்து தன் வீட்டின் சோபாவில் காலை நீட்டி படுத்துவிட்டான்.
அவன் கண்களை மூடிய 2 நிமிடத்திற்குள் “ மாமா” என்ற கூவளுடன் ஓடிவந்தவள் அவனின் அருகில் வந்தவள் “ மாமா ஏன் காலை தாங்கி தாங்கி வந்த”என்க.
“ச்ச்சு “என்று அழுத்தவன் “எனக்கு கால வலிக்குது கொஞ்சம் வாய மூடிக்கிட்டு போறியா” என்க..
( எப்படி கேட்பா பாரு உன் பேச்சை).
“காலை வலிக்குதா” என்று கேட்டவள் அவன் அவன் காலிற்கு கீழே அமர்ந்து கொண்டு அவன் காலை மெதுவாக
பிடித்துவிட்டாள்.” மாமா நீ கொஞ்ச நேரம் தூங்கு ,நான் கால் அமுக்கி விடுகிறேன்’ என்றாள்.
அவனா வேண்டாம் என்று சொல்வான் அவனாக தொடவில்லை என்றாலும் அவளின் ஒவ்வொரு தீண்டலையும் அவன் ஓராயிரம் முறை எதிர்பார்ப்பவன் அல்லவா ,அவன் வாயை தவிர அவனின் அனைத்து உறுப்புகளும் அவளின் மல்லிப்பூக்கு அடிமையல்லவா அவன் நல்ல வாகாக படுத்துக்கொண்டு அவளை பார்க்க இல்லை சைட் அடிக்க ஆரம்பித்துவிட்டான்.
எல்லாமே அவனவளுக்கு அம்சமாக அமைந்திருந்தது.அதுவும் துளி மேக்கப் இல்லாமல் ,
கடுகளவு கருப்பு பொட்டு மட்டுமே அவள் முகத்தில் எக்ஸ்ட்ராவா இருப்பது.ஆனாலும் அவள் அவ்வளவு அழகு கள்ளம் கபடம் இல்லாமல் இருக்கும் அவளின் பிஞ்சி முகம் பார்க்க பார்க்க அவனுக்கு மட்டும் அல்ல யார்க்கும் தெவிட்டாது.
“ஏன் அகலி ஒரு த்ரெட்டிங் கூட பண்ண மாற்ற” என்று கேட்டான்.
“ அய்யோ மாமா அது ரொம்ப வலிக்கும் ,அப்பறம் ஒரு தட பண்ணிட்டோம்னா அதுவே பழக்கமா போயிடும், நம்மால பார்லர்க்கெல்லாம் அலைய முடியாது,
பேசிக்காவே நான் ஒரு வாழபழ சோம்பேறி,நான் காலையில எழுந்து பல்லு விலக்கி ,குளிக்குறதுக்குள்ள நான் அப்பத்தாட 1000 தட திட்டுவங்குவேன் மாமா, அப்பறம் அன்னைக்கு கூட அப்பத்தா” என்று ஆரம்பிக்க
“ கொஞ்சம் வாய மூடுறிய ஒரு கேள்வி கேட்டா ஒரு மணி நேரம் பேசுவ,இதுக்குதான் உன்ட பேசுறதே இல்ல” என்று கூற.
“முசுடு,இவன் கேட்டதுக்குதான பதில் சொன்னேன் என்று மனசுக்குள் முணு முணுத்தவள் வாயை இறுக்க மூடிகொண்டு தன் வேலையை தொடர்ந்தாள்.
கொஞ்ச நேரம் அனுமார் மாதிரி வாயை வைத்துக்கொண்டு காலை பிடித்துத்துக்கொண்டிருக்கும் அகலியை சிரிப்பு போங்க பார்த்தவன் “ ஏய் வாலு ,நாளைக்கு உன் கருவாயன் வரான் போல எங்க ஊர் சுத்த போற” என்றான்.
“ தெரியல மாமா , வந்ததுக்கு அப்பறம்தான் முடிவு பண்ணனும் ,அப்பறம் போறீங்க இல்லை, போறோம், நீயும் வரணும்”என்று சோர்வான குரலில் சொன்னவள் நீட்டி இருக்கும் அவன் காலை கட்டிக்கொண்டு அப்படியே சோபாவின் கீழே உட்கார்ந்த படியே தூங்கி போனாள் .
அவள் காலை கட்டிபிடித்து இருப்பதால் அவளின் பாடாத இடம் பட்டி அவனை இம்சிக்க அவள் அசந்து தூங்கும் வரை பொறுமையை இழுத்து பிடித்தவன் அவளிடமிருந்து காலை மெதுவாக விலக்கியவன் அவளுக்கு எதிரில் உட்கார்ந்து அவளை பார்த்தான்.
அவளின் கன்னத்தில் மெதுவாக கை வைத்தவனின் கைகள் உணர்ச்சி வேகத்தில் நடுங்கியது அவனுக்கு தெரிந்த அவளுக்கு என்றுமே தெரிய போகாத அவனின் காதலான முதல் தொடுகை.
“ சரியான சோவை டி , 5 நிமிஷம் கால் அமுக்குறதுக்கு இப்படி சோர்ந்து போற” என்று அவளை கொஞ்சியவன்
“ நீ இல்லாமல் நான் எப்படி டா இருப்பேன்,அந்த வாழ்க்கை எனக்கு நரகம் ஆகிடும் ,நொடிக்கு நொடி செத்து போவேன்,நிம்மதி இல்லாமல் அலையுவேன், சுயம் தொலைப்பேன் ஆனால் என் சுயநலத்துக்காக உன்னை நான் எப்படி கஷ்டப்படுத்துவேன்
,என்னை விட 2 வயசு அதிகம் உள்ள என் அண்ணியே என் அம்மாகிட்ட அவ்வளோ கஷ்டப்படுறாங்க,ஆனால் உனக்கு வயசு மட்டும்தான் ஆகிருக்கு மற்றபடி குழந்தைதான்,அங்க வந்தா நீ எப்படி தாங்குவ, உன் குணம் குறையாம,இதே வெள்ளை மனசோடு கடைசி வரைக்கும் இருக்கணும், உன் கருவாயன் என்னை விட எல்லாவற்றிலும் உயர்வான ராஜா குமாரனை இல்லை இல்லை அதை விட சிறந்த ஒருத்தனை உனக்காக தேடி கண்டுபுடிச்சி தருவான், உன்னை கொண்டாடுவான்,ஏனோ அவளை இன்னொருவனுடன் இணைத்து பேசும் போது அவனுக்கு தொண்டை கமரியது.
எனக்கு நீ கொடுத்த இந்த நினைவுகள் மட்டும் போதும்டா என் ஆயுள் முழுக்க” என்று கூறியவனின் கண்களை தாண்டி கண்ணீர் வடிந்தது.
அவள் நெற்றியில் அழுந்த முத்தம் கொடுத்தான்.அந்த முத்தத்தில் எல்லா உணர்வுகளையும் தாண்டி அவள் கிடைக்காத வலியே அதிகம் இருந்தது.
அசௌகரியமாக படுத்திருந்தவளை தூக்கி சோபாவில் படுக்கவைத்தவன் அவள் எழுவதற்கு லேசாக சினுங்கும் வரை அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தவன் அவள் விழிக்கும் நேரம் அங்கிருந்து நகர்ந்தான்.
மறுநாள் வீட்டுக்குள் ஆர்ப்பாட்டமாக “ மாமா,மாமா” என்று ஏலம் போட்டுக்கொண்டே தனியே நுழைந்தவளை “ உன்னிட்ட எத்தனை தட சொல்றது இப்படி சத்தம் போட கூடாது ,குதிக்க கூடாதுன்னு ,சந்தோஷ் எங்க “ என்றான்.
“ வவ்வ்வ்வவ்வே” என்று அவனுக்கு ஒழுங்கு காண்பித்தவள் “ கருவாயனுக்கு வேற எதோ வேலை இருக்காம், ஒரு 2 மணி நேரத்துக்கு அப்பறம் ஜாயின் பண்ணிக்கிறானா போற இடத்தை பிங் பண்ண சொன்னான்” என்றவள் அவன் கையைபிடித்து இழுத்துக்கொண்டு வெளியே செல்ல
அவள் இழுத்த இழுப்பிற்கு வெளியே சென்றாலும் “ தன்னிடம் சொல்லாமல்,தனக்கு தெரியாமல் எங்கே போயிருப்பான்” என்று யோசித்தவன் சந்தோஷிற்கு கால் செய்ய போகவே அவன் மொபைலை பறித்தவள்” அந்த அற மண்டயனுக்கு அப்புறமா கால் பண்ணிக்கலாம் நீ வா” என்று முதுகில் இரண்டு கையை வைத்து அவளை லிஃட்டின் பக்கம் தள்ளினாள்.
(உனக்கு சொல்லாமல் அவன் எங்க போவான். உன் தங்கச்சியை டாவு அடிக்கதான் போவான்)
அவனும் “சரி சரி” என்று சிரித்துக்கொண்டே அவள் தள்ளும் பக்கம் சென்றான்.
ஜனனியை பார்க்க சென்ற சந்தோஷ் எப்பொழுதும் கையை மட்டும் பிடித்துக்கொள்பவன் இன்று அவள் அருகில் அமர்ந்து தோளை சுற்றி கையை போட்டுக்கொண்டான்.எப்பொழுதும் ஒரு வித எச்சரிக்கை உணர்வோடு இருக்கும் தன் பிளாக்கி இன்று இத்தனை பேர் பார்க்க பீச்சில் தன் மேல் கையை போட்டிருப்பது ஜனனிக்கு ஆச்சரியமே..
அவளும் வாய்ப்பை விடாமல் அவனோடு நன்கு உரசிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.இருவருக்கும் உள்ளுணர்வு ஏதோ சொல்ல எதுவும் புரியாமல் அமைதியாக களித்தனர் அரை மணி நேரத்தை.
(அது உங்களுக்கு புரிஞ்சா எனக்கு வேலையே இல்லையே இந்த உள்ளுனர்வின் பெயர் இது தான் உங்களின் கடைசி சந்திப்பு என்பதே என்று சிரித்தது விதி )
பின் அவள் கையை அழுந்த பிடித்துக்கொண்டு “ தக்காளி இனி உன்னை பார்க்க சிங்கப்பூர் போய் அந்த கான்பிரென்ஸ் முடிஞ்சத்துக்கு அப்பறம்தான் முடியும் ,அதுவரைக்கும் டாக்டர் அம்மா ஒழுங்கா எல்லாருக்கும் ஊசி போட்டுட்டு பத்தரமா ,சரியா” என்றான்.
அவளும் அவனை பிரிய போகிறோம் என்று கண்களில் கண்ணீர் மல்க வார்த்தை வராமல் வெறும் தலையாட்டினாள்.இருவரும் காதலர்கள் என்றுதான் பெயர்.ஆனால் அதிகம் பார்த்து கொள்வது இல்லை,போனில் அதிகம் பேசிக்கொள்வது இல்லை,எந்த அழகிய வரம்பு மீறலும் இல்லை ஆனாலும் இருவர் மனதிலும் டன் கணக்கில் காதல் நிரம்பி வழிந்தது.
இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க 1 மணி நேரம் கழித்து சந்தோஷ் கிளம்பினான். மனமே இல்லாமல் அவனுக்கு விடைகொடுத்தாள் அவன் 10 அடி செல்லும் வரை அவன் முதுகை பார்த்து கொண்டு நின்றவள் அதற்கு மேல் தாங்காமல் ஓடிச்சென்று அவன் பின்னால் அணைத்துக்கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள்.
அவனுக்கும் அதே நிலைமைதான் அவளை தன்னிடமிருந்து பிரித்து முன்னே கொண்டுவந்தவன் “ இங்க பாரு தக்காளி இன்னும் அதிகபட்சம் 1 மாசம்தான் அதுக்குள்ள நானே உன் அண்ணகிட்ட உன்னை பொண்ணு கேட்பேன் அப்படியே அவன் கொடுகமாட்டேன் அப்படி சொன்னாலும் அத்தான் உன்னை அலேக்கா தூக்கிட்டு போயிடுவேன் அதனால வருத்தபடாம இருக்கணும் ,அப்பறம் இப்படி பூசணிக்காய் மாறி இருந்த அத்தானுக்கு தூக்கிட்டு ஓடுறது ரொம்ப கஷ்டம்,அதனால கொஞ்சம் உடம்பை குறைக்கனும் சரியா” என்று அதை இதை கூறி அவளை சிரிக்க வைத்துவிட்டே சென்றான்.
போகும் போது அவன் யோசனையெல்லாம் தேனுக்குட்டி விஷ்வாவை இன்னும் 1 மாதத்தில் சரி கட்டிவிடுவாள என்பதுதான் அவளின் செய்கைக்கு அவனிடம் எந்த கோபமும் இல்லை என்றாலும் அவளுக்கு பாசிடிவாகவும் எதுவும் அவன் செய்யவில்லை.
ஆனால் அவனுக்கு தேனுக்குட்டியின் கள்ளம் கபடம் இல்லாத அன்பின் மீது அபார நம்பிக்கை இருந்தது.அது எப்படியும் தன் நண்பனை மாற்றிவிடும் என்று.
அங்கே விஷ்வா அவளை “snow land” அழைத்துக்கொண்டு சென்றான்.அங்கே பனியில் விளையாடும் அகலியை காதல் பொங்க பார்த்துக்கொணடிருந்தான் .
பிளாக் கலர் ஸ்கர்ட் வைட் கலர் செமி காலர் ஷர்ட் போட்டுக்கொண்டு அங்கே குழந்தையோடு குழந்தையாக விளையாடும் தன் வளர்ந்த குழந்தையை விழி வேர்க்க பார்த்துக்கொண்டிருந்தான்.
ஒரே ஈரமாக இருக்கும் அந்த இடத்தில் குதித்து குதித்து விளையாடிக்கொணடிருந்தவள் கால் வழுக்கி விழவே பதறி அடித்துக்கொண்டு அருகில் சென்றான்.
அதற்குள் முட்டிக்கையில் அடிப்பட்டு லேசாக ரத்தம் வர மிருதுவான கைகள் ஆதலால் கை முழுவதும் சிவந்து போக அழுகைக்கு தயாராக இருந்தவளை ஓடிச்சென்று தாங்கிக்கொண்டான்.
“ ஏன்மா இப்படி உன்னை நீயே புண்ணாக்கிகிற எவளோ டைம் சொல்றேன் குதிக்காத குதிக்காதனு பாரு ரத்தம் வருது” என்றவன் அவளை அருகில் உள்ள கிளினிக்கிற்குஅழைத்து சென்று முதலுதவி செய்து அழைத்து வந்தான்.
நம் நாயகிக்கு 5 நிமிடம் தானே வலி,கோபம் எல்லாம், ஒரு 5 நிமிடம் ஓவென அழுதவள் அடுத்து 6 வது நிமிடத்தில் அவனை வேறு எங்கயாவது அழைத்து செல்ல சொல்லி டார்ச்சர் செய்ய. ஆரம்பித்துவிட்டாள் .
விஷ்வாவிற்கு அந்த சின்ன காயத்திற்கே முகம் முழுவதும் சிவந்த நிற்கும் தன் குழந்தையை பார்க்க பார்க்க வேதனை அதிகமானது.
அவள்படுத்தி எடுக்கவே அதே மாலில் உள்ள இண்டோர் கேமில் உள்ள டேபிள் டென்னிஸ் விளையாட சொன்னவன் அவளை பார்த்தபடி அமர்ந்துவிட்டான்.
விஷ்வா அவளை snow land ல் காதல் போங்க பார்த்தது அவளிற்கு அடிப்பட்டதும் உயிர் தெறிக்க ஓடி அவளை தாங்கியது அதன் பின் நடந்த அனைத்தையும் இரு கண்கள் படம் பிடித்தது.
சிறிது நேரம் செல்ல தன் அருகில் யாரோ அமரும் அரவம் கேட்டு தலையை திருப்பி பார்த்தான்.அங்கே மினி ஸ்கர்ட் ,கிராப் டாப் அணிந்து கொண்டு எதையெல்லாம் காட்டக்கூடாதோ அதை எல்லாம் காட்டிக்கொண்டு அமர்ந்தாள் ரீனா.
அவள் அருகில் அமர்ந்ததும் ஏதோ அசிங்கத்தை கண்டது போல் முகத்தை சுழித்து கொண்டு எழுந்து தூரமாக நின்று அவளின் கோபத்தை இன்னும் அதிகமாக்கினான் .
அன்று ரீனா அவளிடம் கேட்டதிலிருந்து அவன் அவளை காணவில்லை .அதன் பின் அவளை பற்றி கல்லூரியின் வாயிலாக அறிந்தவனுக்கு ஒவ்வாமை அதிகரித்தது.ச்சி என்றானது அவளை நினைக்கும் போதே.
ஆனால் அவனுக்கு தெரியவில்லை அவளை அசிங்க படுத்திய அன்றிலிருந்து இன்று வரை அவன் மட்டும் அல்லாது அவன் குடும்பம் முழுவதும் அவளால் கண்காணிக்கப்படுவதும்.கண்ணனின் கல்யாணம்,ஜனனியின் காதல் என அனைத்தும்.
இன்று கூட விஷ்வா கொஞ்ச நாட்களாக அவன் ஒரு பெண்ணுடன் சுற்றிவதும் இன்று அவளுடன் வெளியில் வந்திருப்பது என அனைத்தும் .
அவனின் முகப்பாவனையை கண்டவளின் கோபம் பலமடங்கு எகிற எப்பொழுதும் தன்னை பார்ப்பவர்களின் கண்களில் பயம் இல்லை தன் மேனியை மொய்க்கும் அந்த ரசனை பார்வை ,இல்லை ஒதுங்கி போகும் பாவனையை மட்டுமே பார்த்தவளுக்கு இவனின் இந்த பார்வை எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல் ஆனது.
“ யாரு அந்த பொண்ணு நீ லவ் பண்ற பொண்ணா” என்றாள்.
ரீனா அகலியை பற்றி சொன்னதும் நொடியில் அவனின் முகம் மென்மையை கடன் வாங்கி தன்னவளை ஆசையோடு பருகியது.அவனின் ஒவ்வொரு செய்கையும் அவளின் கோபத்தை அதிகப்படுத்தியது என்றால் மிகை இல்லை.தன்னை பார்க்கும் போது அருவருக்கும் முகம் அவளை பார்க்கும் போது மட்டும் பிராகாசிக்குதே என்று.
கொதிக்கும் மனதை அடக்கி ” கேட்கிறேனே “ என்று அவள் உரும
அவள் உறுமல் கூட தன்னவளை மெய் மறந்து பார்ப்பதில் அவன் காதில் சாதரணமாக விழ தன் மல்லிப்பூவை பார்த்துக்கொண்டு “ ஆமா இவள் தான் என் காதலி,என் மனைவி,என் குழந்தை ,என் குலசாமி,என் உயிர்,என் உயிர்ப்பு,என் சந்தோசம் என யாரிடமும் கூறாத தன் காதலை கூறக்கூடாத நபரிடம் ஆழமாக கூறினான்.
அவன் இத்தனை நாட்களாக மனதில் ஆழமாக உருப்போட்டது அகலியிடம் மட்டும் தன் காதலை சொல்லக்கூடாது என்பதே.
அதற்கேற்ப அவனின் மனதும் மூளையும் அருகில் இருப்பது அகலி இல்லை என்று கிரீன் சிக்னல் கொடுக்க இது வரை யாரிடமும் சொல்லாமல் மூச்சி முட்ட யாரிடமாவது சொல்லலாம் என்று நிலையில் இருந்தவன் தன்னிலை மறந்து இவளிடம் கூறிவிட்டான்.
“ ஓ” என்று குரோதமாக சொன்னவள் அவளை வேணுனா கல்யாணம் பண்ணிக்க அதுக்கு முன்னாடி “ என்றவளின் அர்த்தம் புரிய அவளை கோபமாக பார்த்தான்.
ரீனா முடிவு செய்துவிட்டாள் எப்படியும் அவனின் அழிவு நிச்சயம் அது அவன் உயிர் எடுத்து அல்ல அவனின் மல்லிப்பூவின் உயிரை எடுத்து அதற்கு முன் அவன் வேண்டும் ரீனாவிற்கு முதல் தடவை அவன் அழகின் மேல் உள்ள ஆசையை போல் அல்லாமல் இப்பொழுது தான் நினைத்ததை நடத்தி முடிக்க வேண்டும் என்ற தன் அகங்காரத்தால்.தான் நினைத்தது நடக்காமல் போனால் எவ்வளவு அசிங்கம் என்பதால்.
அவளின் முக்கால் வாசி செயல்கள் இப்படியே தீர்மானிக்கபடுகின்றன நினைப்பிற்கும்,விருப்பத்துக்கும், வேண்டும் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. இவள் நினைப்பு மட்டுமே இவளை அதலபாதளத்தில் தள்ளியது.
அவளின் வார்த்தையில் கோபமாக அவளை நோக்கி திரும்பியவன் “ உன்னை அடிக்கிறதுக்கு தொட்ட கூட பாவம், நீயெல்லம் இந்த பிறப்பு எடுத்து வாழ்றதுக்கு நாண்டுகிட்டு சாகலாம், அகலியை பார்த்து அந்த மாறி தேவதை பெண்கள் வாழும் இந்த பூமியில் உன்னை எல்லாம் ஏன் இந்த கடவுள் படைத்தானு அவன் மேல கோபம் கோபமா வருது, சீ நீயெல்லம் பெண்ணா என்று அவளின் ஒட்டு மொத்த கோபத்தையும் ஒரே நேரத்தில் இன்னும் ஏதெதோ பேசி அதிக்கப்படுத்திவிட்டான்.
ரீனா முடிவெடுத்து விட்டாள் தன்னை பெண்ணா என்று கேட்பவன் வாழ்க்கையில் இனி எந்த பெண்ணும் இருக்க கூடாது,தன் தொடுகையை அருவருப்பாக பார்ப்பவன் எந்த பெண்ணையும் தொடக்கூடாது, தன்னை திருமணத்திற்கு தகுதி இல்லாதவள் என்று சொன்னவன் எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது,அவனை காதலாக,இல்லை கல்யாணம் செய்து கொள்ளும் எண்ணத்தோடு பார்க்கும் பெண்களுக்கு அந்த நினைப்பே இருக்க கூடாது என்று.
தன் மாமா யாருடனோ பேசிக்கொண்டு இருப்பதை பார்த்தவள் விளையாடுவதை விட்டுவிட்டு ஓடி வந்து அவன் கைகளில் தொங்கிக்கொண்டு “ மாமா யாரு இவங்க” என்றாள்.
ரீனாவின் மேல் அடங்காத கோபம்,அருவருப்பு இருந்த போதும் அகலி கையை பிடிக்கும் போது அவன் முகம் மென்மையாக மாறியதை ரீனா கவனித்தாள்.
அவன் கோபமாக பதில் பேசாமல் நிற்கவே இந்த “மாமா நமக்கு என்னைக்கு பதில் சொல்லியிருக்கு முசுடு” என்ற மனதிற்குள் யோசித்தவள் ரீனாவிடம்” ஹாய் அக்கா நான் அகலி வீர் மாமாவோட லவ்வாங்கி” என அவனை பார்த்து கண்ணடித்தாள்.
விஷ்வாவோ” இவள் அடங்கவே மாட்டாள் “ என்று இவளோ நேரம் இருந்த கோபம் ஆத்திரம் எல்லாம் பனிபோல் விலக சிரித்து கொண்டே அவள் தலையில் குட்டியவன் “ வாய அடக்கு அகலி” என்றான்.
( அப்படியே அவள் கேட்டுட்டாலும்)
அக்கா நீங்க மாமா கூட படிச்சவங்களா,இல்லை வேலை பாக்குறீங்களா உங்க பேர் என்ன ,இந்த ட்ரெஸ்ல நீங்க பார்பி டால் மாதிரி அழகா இருக்கீங்க, என்று அவள் பாட்டுக்கும் ரீனாவின் கையை பிடித்துக்கொண்டு வழ வழ என போசிக்கொண்டே போக அப்பொழுதுதான் ரீனாவின் உடையை கவனித்தான் உண்மையில் அவனின் மல்லிப்பூ சொல்வது போல அவள் பார்பி மாதிரிதான் இருந்தாள். அவள் உடையிலும், தோற்றத்திலும் உள்ள குறைமட்டும் நம் கண்ணுக்கு தெரிய இவளுக்கு மட்டும் எப்படி
இவள் கண்ணுக்கு நல்லவைகள் மட்டும்தான் தெரியும் போல, வரம் வாங்கி வந்தவள் என் தேவதை என்று எண்ணிக்கொண்டான்.
“மாமா நான் இவளோ பேசுறேன் அந்த அக்கா எதுமே பேசாமல் போய்ட்டாங்க,உன் கூட இருக்குறவங்க எல்லாம் இப்படித்தான் இருப்பாங்களா உன்னை மாறியே அந்த அக்கா பேரு என்ன சொல்லு சொல்லு என்று அவனை ஒரு வழி பண்ணியவள் தெரிந்தே பின்னே அவனைவிட்டாள்.
பாவம் அவளின் வாழ்க்கையை புரட்டி போடும் பூகம்பம் தான் அது என்று அவளுக்கும் தெரியவில்லை அவனுக்கும் தெரியவில்லை .
ரீனா ஏதாவது செய்கையால்,பார்வையால் உணர்த்தி இருந்தால் கூட அவன் தன்னவளை அடை காத்திருப்பான்.அவள் சாதரணமாக இருக்கவும் இவளால் அகலிக்கு பிரச்சனை வரும் என்று அவனுக்கு ஒரு அறிகுறி கூட அப்பொழுது தெரியவில்லை.
அதன் பின் இருவரும் சந்தோஷை தேடி சென்றார்கள் அதன் பின் அவன் வாலை பிடித்துக்கொண்டே சுற்றினாள்.
“அவளோட கருவாயன் வந்தா மட்டும் நாம அவ கண்ணுக்கே தெரியமாட்டோம்” என்று அவன் செல்லமாக அழுத்துக்கொண்டான்.
அவனுக்கு எங்கே தெரிய போகிறது டன் கணக்கில் புருஷன் மீது காதல் இருந்தாலும் பொறந்த வீட்டில் இருந்த வரும் போது அவர்களுக்கு ஓடி ஆடி வேலை செய்து அவர்கள் கூட இருக்கும் சுகம்.
எல்லாம் முடிந்து வீட்டிற்கு சென்றனர்.தன் வீட்டில் சிறுது நேரம் ஓய்வு எடுத்தவன் புது ஆபிஸ் பற்றி பேச சந்தோஷை காண அங்கு சென்றான்.அங்கே அவன் ரெடியாகி கொண்டு இருப்பதை பார்த்தவன் “ எங்கடா கிளம்புற நாளைக்கும் உனக்கு லீவ்தான “ என்க
சந்தோஷ் “நாளைக்கு லீவு தான் விஷ்வா ஆனால் தேனுக்குட்டிய இன்னைக்கு கொண்ட ஊருல விடனும் அதான் இன்னைக்கு கிளம்புனாதான் பாப்பாவ வீட்டில விட்டுட்டு கிளம்ப சரியா இருக்கும்” என்றான்.
“ நீ எவளோ அலைவடா எங்க உன் பாப்பா “ ,அகலி” என்று அழைத்தவன் “ ஏற்கனவே அவன் உனக்காக வாரம் வாரம் இங்கேயும் அங்கேயும் அலையுறான் இதுல அவன் உன்னை ஊருல விட வேற வரனுமா” என்று அதட்டவே
“நான் தனியா பஸ்ல போறேன்னுதான் மாமா சொன்னான் சந்தோஷ்தான் கேட்க மாட்றான் “ என்க
“தனியாவா” என நினைத்தவன் அவளின் மாமாவை கோட்டைவிட்டான்.சிறிது நேரம் யோசித்தவன் “நாளைக்கு எனக்கு புதுகோட்டை போற வேலை இருக்கு நான் அகலியை தஞ்சாவூரில் இறக்கிவிடுறேன் அங்கேர்ந்து ராஜா வந்து அழைச்சுப்பான் இப்ப நீ போய் தூங்கு என்று அசதியாக நிற்கும் சந்தோஷை விரட்டினான்.அவனும் உடனே சென்று சுருண்டு தூக்கிவிட்டான்.பாவம் அவனுக்கும் வேலை நெட்டு கலண்டது
“ ஐ மாமா நீ வாரியா ஜாலி ஜாலி என்று அவன் கன்னத்தை வழித்துவாயில் போட்டுக்கொண்டாள்.
மறுநாள் முழுவதும் அவளின் அடாவடித்தனத்தில் பொழுது கழிய சந்தோஷ் பெங்களூர் புறப்பட்டான். இவர்களும் ஊருக்கு செல்ல அகலியை அழைக்க விஷ்வா வர அவனவள் அவனுக்கு முன் கோயம்பேடு சென்று இரண்டு டிக்கெட் எடுத்து கொண்டு அவனுக்கு கால் செய்துவிட்டாள் ” மாமா நான் டிக்கெட் எடுத்துட்டேன் நீ பாஸ்டான்ட் வந்துடு “ என்று.
“
உன்னை யாரு பஸ்ல கூப்பிட்டுகிட்டு போறேன்னு சொன்னா” என்பதற்குள் அவள் லைனை கட் செய்துவிட்டாள்.குள்ளவாத்து என்னை படுத்துறதுக்கே இந்த பிறவி எடுத்திருக்காள் போல” என்று திட்டிக்கொண்டே காரை கேயம்பேடு விரட்டினான்.
அங்கே உள்ள பஸ்சில் அமர்ந்து “subway surf” கேம் விளையாடிக்கொண்டிருந்தவளை அகலி வா காருல போகலாம் 10 மணிநேரம் பஸ் ட்ராவல்லாம் என்னால முடியாது” என்றான்.
“அப்ப நீ காருல வா நான் இதுல வரேன் என்றவள் மீண்டும் விளையாட தொடங்கிவிட்டாள்.உன்னை என்று பல்லைக்கடித்தவன் வேறு வழி இல்லாமல் அவன்தான் இறங்கி வரவேண்டியதாயிற்று.
டிரைவருக்கு கால் செய்து காரை எடுத்துக்கொண்டு காலையில் தஞ்சாவூருக்கு வருமாறு சொல்லிவிட்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
அடுத்த 3 மணிநேரம் அவனிடம் தொன தொணத்தவள் அவன் கை சந்தில் ஒரு கையை விட்டு அவனின் ஒரு கையை பிடித்து கொண்டு அவன் தோள்பட்டையில் சாய்ந்து கொண்டு மறுகையால் அவனின் இடுப்பை பிடித்துக்கொண்டு தூங்கிப்போனாள்.
அவளின் தூக்கம் கலையாமல் அவளின் தோளை சுற்றி கைகளால் வலைத்தவன் தஞ்சாவூர் வரும் வரை சிறுது அசைவு இல்லாமல் அமர்ந்து இருந்தான்.
அதன் பின் அவளை ராஜாவிடம் ஒப்படைத்துவிட்டு அவன் தன் வேலையை முடித்துக்கொண்டு ஊர் வரவே அகலியும் ராஜாவுடன் சென்னை வந்து சேர்ந்தாள்.
நாட்கள் அதன் போக்கில் வேகமாக செல்ல விஷ்வாவும் புது கம்பெனி திறப்புவிழா முடிந்து 10 நாட்கள் ஆக சந்தோஷ் கான்பிரேன்ஸ் விஷயமாக சிங்கப்பூர் செல்வது 10 நாட்கள் முன்னாடி செல்ல வேண்டும் என்று ரீசேடுல்(reschedule) ஆக அவனால் வரமுடியாமல் போனது.
அகலியை அழைத்தற்கு “நீ எனக்கு லவ்க்கு ok சொன்னதான் வருவேன்” என்று முருக்கிக்கொண்டு செல்ல “ நீ வரவே வேண்டாம் “ என்று அவனும் நமட்டு சிரிப்புடன் சென்றுவிட்டான்.
“முசுடு இன்னொரு முறை கூப்பிடுகிறான பாரு “ என அவள் தான் புஸ் புஷ் என்று மூச்சி வாங்கிக்கொண்டு திரிந்தாள். அதுவும் அன்று மாலை வரையே அதன் பின் மீண்டும் மாமா புராணம்தான்.
இப்படியே நாட்கள் செல்ல அண்ணனும் அண்ணியும் நல்லாத்தான இருக்காங்க அம்மாவும் ஓரளவுக்கு ஒகே நம்ப மல்லிப்பூபற்றி அம்மாவிடம் பேசி பார்க்கலாமா என்று அவன் யோசித்து முடிப்பதற்குள் அவன் போன் ,ருக்கு இரண்டு மாத கர்ப்பிணியாக லாரியில் அடிப்பட்டு இறந்துவிட்டாள்,கண்ணன் சுயம் தொலைத்து அமர்ந்து இருக்கிறான் என்ற செய்தியை தாங்கி வந்து அவன் தலையில் இடியை இறக்கி வைத்து சென்றது.
வருவாள்..