ராட்சசனா? ரட்சகனா? - 02
அந்த தார் சாலையில் மிதமான வேகத்தில் கார் பயணித்து கொண்டிருக்க.. அதன் உள்ளிருந்தவர்களின் நினைவு அலைகளோ வெவ்வேறு விதமாக அடித்துக் கொண்டரிந்தது.. சந்தீப்பின் எண்ணமோ, தன் நண்பன் எந்தவொரு அநியாயமும் அந்த பெண்ணிற்கு செய்துவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருக்க, அதற்கு மாறாக அவளை எவ்வாறெல்லாம் இம்சிக்க வேண்டும் என்று ரிகான் மனதில் நினைத்து கொண்டு வந்தான்.
பூமியோ நம்ம வாழ்க்கையில் என்னடா நடக்குது, இவன் பாட்டிற்கு வந்தான்.. என்னை கடத்தினான், என்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் தாலி கட்டினான் என்று நினைத்து கொண்டிருக்க, இதை அவன்கிட்டே கேளு பாரக்கலாம் என்ற மனதின் பேச்சிற்கு கட்டுப்பட்டு அவனை ஓரக் கண்ணால் பார்க்க அவனோ உர்ரென்று அமர்ந்திருந்தான் ஐய்யோ இவன் என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி இருக்கான் என்று நினைத்தவளுக்கு சட்டென்று சிரிப்பு வந்துவிட.. வாய்விட்டு சிரித்துவிட்டாள்... அவனோ பார்வையாலே அவளை பஸ்மமாக்க, சட்டென்று தன கையை வைத்து வாயை பொத்தி கொண்டு ஜன்னல் பக்கம் தன்னுடைய பார்வையை பதித்தவாறு திரும்பிவிட்டாள்.. ரியானுக்கோ ஏகத்துக்கும் உள்ளுக்குள் எரிந்துக் கொண்டது.
அந்த அரண்மனை போன்ற வீட்டின் முன்பு அந்த கார் நிற்க.. அதனுள் பயணித்தவர்களும் காரில் இருந்து வெளியே வந்தனர்.. சரிடா ரிகான் நான் அப்படியே பைக்கில் வீட்டிற்கு கிளம்புறேன். நீ கொஞ்சம் ஒழுங்கா நடந்துக்க என்று தன் நண்பனை எச்சரிக்கை செய்து விட்டே நகர்ந்தான் சந்தீப்.
பூமியோ இன்னும் அந்த வீட்டையே
பார்த்தவாரு இருந்தாள். அம்மாடி இந்த வீடு என்ன இவ்ளோ பெரிசா இருக்கு.. இத்தனைக்கும் நம்ம வீடும் பெரிசு தான்.. ஆனால் இது அதைவிட பெரிசா இருக்கே என்று வாயை பிளந்தாவரே ஆவென்று பார்த்து கொண்டிருக்க.. ஏய் வாயை மூடு.. உன் வாயில் உலகமே தெரியுது.. உள்ளே வா என்றழைத்தான் ரிகான். இவளோ அவனை கண்டு அப்பாவியாக ஒரு லுக்கை விட, ஏய் என்ன அது தான் உள்ளே வா என்று சொல்லிட்டேனே அப்புறம் என்ன கனவில் மிதந்திட்டு இருக்க.. மகாராணிக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைக்கனுமோ என்று நக்கலாக கூறியவனுக்கு தன் தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமாம் என்று சொல்ல ரிகான் முகமோ கோபத்தில் செந்தனலாக சிவந்தது..
உள்ள வா என்றவன் தன் கோபத்தை கட்டுப்படுத்த தன் கைகளை இறுக்கமாக மூடிக் கொண்டான்..
அவள் அப்போதும் அசையாமல் நிற்க, இப்போ உள்ள வர போறியா இல்லையா என்று பல்லை கடிக்க..
இல்ல இன்னும் ஆரத்தி எடுக்கலையே, கல்யாணம் ஆனால் வீட்டிற்குள் போகும் போது ஆரத்தி எடுப்பாங்களே நான் கூட எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு அக்கா புதுச கல்யாணம் செஞ்சிட்டு வந்தபோது ஆரத்தி எடுத்து தானே உள்ளே அழைச்சாங்க நான் பார்த்து இருக்கனே என்றவள் பேசிக் கொண்டே போக.. அவள் கையை இறுக்கமாக பிடித்து உள்ளே இழுத்துச் செல்ல முயன்றான் ரிகான்.. அவள் உள் நுழையும் முன்னே அந்த வீட்டில் வேலை செய்யும் பொன்னி இருவருக்கும் ஆரத்தி எடுக்க.. கடுகடுப்போடு நின்றிருந்தவன் அருகில் புன்னகை பூத்த முகத்தோடு நின்றிருந்தாள் பூமிகா.. பின்பு தன் ராட்சனோடு தான் வாழப் போகும் வீட்டில் தன் முதல் படியை எடுத்து வைத்தாள் ராட்சசனின் அவள்...
பொன்னி அக்கா அம்மா என்ன செய்றாங்க என்ற ரிகானின் கேள்விக்கு.. அதுவா தம்பி அம்மா இப்போ தான் சாப்பிட்டாங்க ரூமில் தான் ஓய்வு எடுக்குறாங்க என்றவளுக்கு சிறு தலையசைப்பை கொடுத்து அந்த அறையை நெருங்கினான். ஏய் இங்க பாரு நான் என்ன சொன்னாலும் மண்டைய மட்டும் ஆட்டுற வேற எதாச்சும் பேசுன அவ்ளோ தான் என்று அவளை மிரட்டி தன் தாயிடம் இழுத்துச் சென்றான்..
அங்கே புன்னகை முகத்தோடு கையில் ஒரு புத்தகத்தோடு வீற்றிருந்தார் அமிர்தவள்ளி.. பெயரில் இருக்கும் அமிர்தம் போன்று தான் அவர்.. உள்ளே நுழைந்தவன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் தன் தாயை கண்டவுடன் அவன் முகம் வேதனையை காட்டியது. தன் தாயிற்கு அதனை காட்டாமல் மறைத்தவன் , தன் தாரத்திடம் அதனை மறைக்க முடியவில்லை.
வா கண்ணா.. கல்யாணம் எல்லாம் சரியா முடிஞ்சது தானே என்று புன்னகையுடன் கேட்க அவனும் மெல்ல தன் தலையை ஆட்டினான். ஏன் கண்ணா.. லவ் பண்ணது ஓ.கே.. அதுக்காக அவங்க வீட்டில் சம்மதிக்கல என்றதுக்காக இப்படி அவசரமா கல்யாணம் செய்தது என்னவோ எனக்கு சரியா படல.. ஆனால் பொன்னு பார்க்க மகாலட்சுமி மாதிரி இருக்கா என்று சிரித்து விட்டு பூமிகாவை பார்த்து கிட்ட வாடா மா என்றழைக்க அவளும் ரிகானை பார்த்து கொண்டே அவரிடம் சென்றாள்.. ஆமா உன் பெயர் என்ன மா என்று அவள் கன்னம் தொட்டு கேட்டவரின் பேச்சில் சிறிதும் வஞ்சம் இல்லை.. அவளோ அமைதியாக ரிகானை பார்த்தாள். எதுக்கு மா இப்போ அவனை பார்க்கிற.. லவ் பண்ற பொன்னு பேருக் கூட சொல்லையா என்று தானே.. அவன் அப்படி தான் மா.. அவன் லவ் பண்ணுவான் என்று நான். நினைக்கவேயில்ல, "நான் மட்டும் நினைச்சேன என்ன என்று தன் மனதிலே கவுன்டர் கொடுத்த பூமிகா" வெள்ளந்தியாக புன்னகைத்தவரை கண்டு இவளும் லேசாக புன்னகைத்தாள்.
அம்மா இவ்ளோ பேசுறாங்க அப்போ கூட எதாச்சும் வாயை திறக்கிறால பாரு என்று வாய்க்குள்ளே முனங்கியவன், அம்மா அவப் பேரு பூமிகா என்றுச் சொன்னவனின் வார்த்தை அவள் உயிர் வரை சென்று சிலிர்க்க வைத்தது. அம்மா நீங்க ரெஸ்ட் எடுங்க.. இன்னைக்கு நைட் நீங்க டிரிட்மென்டுக்கு கேரளா போனும் தானே.. உங்க கூட பொன்னி வருவா என்னால் இப்போது என் வேலையை விட்டு வர முடியல சாரி ம்மா எனறான் ரிகான்..
கண்ணா இப்போ எதுக்கு நீ வருத்தபடுற, இப்போ தான் உனக்கு திருமணமாச்சு அதனால் நீ பூமிக்கூட என்ஜாய் பண்ணு சரியா என்று சொல்லிவிட்டு மாத்திரை சாப்பிட்டதால் உறங்க சென்றுவிட்டார். ரிகானுக்கோ பூமியின் பெயரை கேட்டவுடன் அவன் முகம் பாறை போன்று இறுகியது.. இதை யாரு கவனிக்க வேண்டமோ அவள் சரியாக கவனித்துவிட்டாள். அய்யோ இவன் மூஞ்சு என்ன முன்னுறு கிலோ மீட்டருக்கு போகுது இன்னைக்கு சங்கு தானா நமக்கு என்று அவன் முகத்தை கண்டு எச்சில் விழுங்க.. அவனோ வேக நடையுடன் வெளியே சென்றான். அவனை பின் தொடர்ந்து வெளியே வந்தவளை பார்த்து விட்டு இன்னைக்கு நைட்டு இருக்குடி உனக்கு என்று வார்த்தையை கடித்து துப்பியவன், தன் கார் சாவியை எடுத்து வெளியே கிளம்பிவிட்டான்.
அவன் வெளியே சென்றவுடன் எப்படியோ இந்த ராட்சசன் போயிட்டான். ஆனால் இவனை எங்கையோ பார்த்த மாதிரியே இருக்குதே.. இவன்கூட நான் ஏற்கனவே பழகின பீல் வருதே.. என்று யோசிக்க மண்டை வலி வந்தது தான் மிச்சம்.. ஏய் பூமி இல்லாத மூளையை வைச்சு அதிகம் யோசிக்காத என்று மனது எச்சரிக்கை செய்ய, அப்பபோதைக்கு அந்த நினைவை புறம் தள்ளினாள்.
ஆனால் அவங்க கிட்ட நம்ம லவ் பண்ணி இருக்கோம்னு புளுகி வைச்சிருக்கான்.. சரியான புளுகுமூட்டை.. இன்னும் என்னென்ன சொல்லி வைச்சிருக்கானோ என்று ஒரு பெரு மூச்சை விட்டாள் பூமிகா.
இருந்தாலும் அவங்க அம்மா பார்க்க அப்பபடியே அண்ணபூரணி மாதிரி இருக்காங்க ஆனால் இவன் எதுக்கெடுத்தாலும் வல்லு வல்லுனு குரைக்கிறது.. என்றவள் அவன் சிடுசிடுப்பு முகத்தை நினைத்து சிரித்துக் கொண்டாள். உண்மையில் இவளுக்கு அவனை கண்டால் பயமென்றெல்லாம் சொல்ல முடியாது. அவள் வீட்டிலே அநேக பேரை இதுப்போன்று பார்த்துவிட்டாள்..
இந்த ராட்சசன் வேற நைட்டு வந்து கவனிச்சுக்கிறேன் சொல்லிட்டானே.. போனது தான் போனான், கடங்காரன் சோறு போட்டிட்டு போக்க கூடாது. அவள் வயிறு கூப்பாட போட, இதற்கு மேலும் தாங்காது என்று சமையற்கட்டில் நுழைந்து பூனை போன்று உருட்டிக் கொண்டிருக்க.. அங்கே வந்துச் சேர்ந்தாள் பொன்னி..
"சின்னம்மா என்ன வேணும்.."
ஐயோ அக்கா என்ன பூமினே கூப்பிடுங்க.. நான் உங்களை விட வயசில் சின்னவ தான் என்று அழகாக புன்னகை சிந்தியவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தாள் பொன்னி.. ரிகான் தம்பி சரியான ஜோடியை தேர்ந்தெடுத்திருக்காரு. குணத்திலும் நீ அழகு தான் தாயி என்றவர் அவளை நெட்டி முறித்துவிட்டு அவள் சாப்பிட மீன் குழம்பை வைக்க அதை ஒரு பிடிபிடி பிடித்தாள்.
காரில் சென்றவன் நேராக சென்றது அவனுக்கு பிடித்த இடமான கடற்கரைக்கு தான்.. அவன் பர்சில் இருந்த புகைப்படத்தை கைகளால் வருடியவனின் மனமோ, மறக்க முயன்ற அவன் வாழ்வின் இருண்ட பகுதியை கண்முன்னே காட்டியது.. அப்படியே எழுந்து தன்னுடைய பூட்ஸ்களை அகற்றியவன், கடற்கரை மணலில் ஓட ஆரம்பித்து விட்டான். அவன் மனம் லேசாகும் வரை ஓடியவன், தன்னுடைய கடிகாரத்தில் நேரம் பார்க்க மணி இரவு ஏழு என்று காட்ட, வேக வேகமாக தன் காலணிகளை அணிந்து கொண்டு தன்னுடைய BMW காரில் வீட்டை நோக்கி சீறிப்பாய்ந்தான்..
வீட்டிற்குள் நுழைந்தவன் கண்டது எதையோ தன் தாயிடம் கெஞ்சிக் கொண்டிருக்கும் பூமிகாவை தான்.. புருவ முடிச்சுடனே அவர்களை நெருங்கியவன்.. என்னாச்சு மா என்று தன் தாயிடம் கேட்டாளும் அவனின் கண்கள் பூமிகாவையே அளந்துக் கொண்டிருந்தது. அது ஒன்னுமில்ல டா.. என் மருமகள் எனக்கு ஒத்தாசையா அவளும் என்கூட கேரளா வராலாம் என்றுச் சொல்ல.. அய்யோ இப்படி போட்டு கொடுத்திட்டயே அத்தை இன்னைக்கு நான் செத்தேன் என்று அவனையே பயத்துடன் பார்த்தாள்.. அவனுக்கோ நான் கேடினா இவ என்ன ஜில்லா கேடியா இருக்காளே என்று உதட்டில் தோன்றிய புன்னகையை அவள் பார்க்கும் முன்னே மறைத்தவன்.. தன் தாயிடம் நீங்க கிளம்புங்க மா நான் பார்த்துக்கிறேன் என்றவன் அவர்களை வழியனுப்பி விட, இவளும் வேறு வழியின்றி தன் அத்தையை வழியனுப்பி வைத்தாள்.. உள்ளே வந்தவளை கண்டவன்,
"எதுக்கு அம்மா கிட்ட அப்படி சொன்ன"
அது.. அது வந்து இப்போ இந்த வீட்டில் நீங்க நான் மட்டும் தானே இருக்கோம் என்று அவள் முடிக்கும் முன்னர் அங்கிருந்த நாற்காலி பறந்தது.. அவனின் கோபம் கண்டு இமைகளை படபடக்க அவனோ தன்னுடைய அறைக்கு சென்று, கதவை டொம்மென்று அடைத்துக் கொண்டான்..
இவளுக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை.. அப்படியே சோப்பாவில் அயர்வாக அமர்ந்தவள்.. நெடுநேரம் அப்படியே இருந்தாள்.. அய்யோ இன்னும் அந்த ராட்சசன் சாப்பிடலையே.. ரொம்ப பாவம் நம்மை திட்டவாச்சு அவனுக்கு தெம்பு வேணுமே, என்று உணவை அவனுக்காக தட்டில் போட்டு கொண்டு அவன் அறையை நோக்கிச் சென்றாள். என்னடி பூமி தைரியமா வந்திட்டு இப்படி அவன் ரூம்க்கு வாட்ச்மேன் வேலை செஞ்சிட்டு இருக்கியே நீ என்று தன்னையே கொட்டிக் கொண்டு.. கதவை திறக்க முயல, கதவு தானாக திறந்துக் கொண்டது. ஏதோ சிங்கத்தின் குகைக்குள் நுழைவது போன்று பூணை நடையிட்டு செல்ல அங்கே அவள் கண்ட காட்சியில், அவள் கண்கள் மட்டுமல்ல அவளின் வாயும் பிளந்தது.. அவனோ ஒரு பீர் பாட்டிலை காலி செய்துவிட்டு இரண்டாவதை குடித்துக் கொண்டிருந்தான்.
அடப்பாவி கடன்காரா.. என்ன டா மொட குடிக்காரன் மாதிரி இப்படி குடிக்கிற என்றவள் தான் கொண்டு வந்த சாப்பாட்டை அங்கே மேஜை மீது வைத்துவிட்டு, மெதுவாக கண்ணா என்றழைக்க..
ஏய் என்று கோபத்தில் கத்தியவன் அவளை நெருங்கி அவளின் தாடையை இறுக பற்றிக்கொண்டு இன்னொரு முறை அப்படி கூப்பிட்டாத என் அம்மா மட்டும் தான் என்னை அப்படி கூப்பிடனும் என்றவன், வலியில் முகம் சுருங்கியவளை கண்டு தன் இறுக்கத்தை தளர்த்தினான்.
" அடேய் அதை வாயிலே சொன்னா உனக்கு என்னடா.. ராட்சசா.. ராட்சசா" என்று மனதிலே அவனை திட்டிவிட்டு வெளியே பாவமாக முகத்தை வைத்துக் கொண்டாள்.. அடியேய் பூமி இவன் முன்னாடி இப்படியே அப்பாவியா மெயின்டன் பண்ணு, இல்லைனா சரக்குக்கு சைடிஸா உன்னை மாத்திடுவான் என்றவளின் மனக்குமுறலை சரியாக கணித்துவிட்டான் அவளின் ராட்சசன்..
ஏய் இப்படி மூஞ்சை அப்பாவியா வைச்சுக்கிட்டா அப்படியே உன்னை நம்பிடுவேன் பாரு.. "கீழே இருக்கும் போது என்ன சொன்ன.."என்று கோபத்தில் கத்தியவனிடம், "அது வந்து உங்ககூட த..தனியா இருக்கு பய..பயமா இருக்குனு சொன்னேன்" என்று வார்த்தை தந்தியடிக்க கூறியவளை கண்டு ஏளனமாக சிரித்தவன்.. அவள் புரியாமல் விழிக்க.. இல்லை உன்னலாம் போய் நான் தொடுவேனு நினைச்சியா.. நீயெல்லாம் இந்த வீட்டுக்கு வேலைக்காரியா இருக்க கூட தகுதி இல்லாதவ என்று அமிலமாக வார்த்தையை அவள் மீது வீசினான்.
அவளுக்கோ அவன் பேச்சில் முனுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்க்க.. இல்லை பூமி இவன் முன்னாடி அழக்கூடாது என்று தன் கண்ணீரை கட்டுபடுத்தியவளை கண்டவன், ஏய் என்ன இங்கேயே நிக்கிறதா ஐடியாவா.. போ.. போய் கீழே படு, என்று தலைகாணியை அவள் முகத்தின் மீது வீசியவன்.. மேஜையின் மீது இருந்த உணவை பார்த்தும் அதையெடுத்து சுவற்றில் தூக்கி எறிய அந்த கண்ணாடி தட்டை போன்றே அவளின் மனமும் சுக்குநூறாக உடைந்தது.
முதலில் அவன் பேசியதையெல்லாம் ஜாலியாக எடுத்துக் கொண்டவளால் இறுதியாக தன்னை வேலைக்காரியை விட கீழாக நினைத்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் கண்ணீர் வர.. பூமி இது உனக்கு தேவை தான்டி அவன் சாப்பிட்ட உனக்கென்ன சாப்பிடலனா உனக்கென்ன நீ மூடிக்கிட்டு ஹாலிலே இருந்திருக்க வேண்டியது தானே என்று ஒரு மனம் சொல்ல இன்னொரு மனமோ அச்சோ இன்னும் அவன் சாப்பிடவேயில்லையே என்றுச் சொல்ல.. ஏன்டி இவ்ளோ நேரம் உன்னை கழுவி கழுவி ஊத்தினானே அவனுக்காகவா நீ யோசிக்கிற என்று அவளையே காரி துப்பிக் கொண்டு உறங்கி விட்டாள்.
நள்ளிரவில் எழுந்தவன் அவளை நெருங்கி, அவளின் முகத்தையே வெறுத்து பார்த்து கொண்டிருந்தான் ரிகான். ஏன்டி அப்போ தான் என்னை நம்பல இப்போவும் என்னை நம்ப மாட்டியா என்று மனதிலே புலம்பினான்.. அவளின் மதிமுகத்தையே உற்று விழித்தவனின் உதடுகளோ
சுட்க்கி( chutki) என்று முணுமுணுக்க.. அந்த பெயரை உச்சரித்தவுடன் அவன் உதடுகள் புன்னகையால் விரிந்தது. அடுத்த நிமிடமே, அதை தன் உதட்டில் புதைத்தவன், இல்லை... இவள் என் சுட்க்கி இல்ல.. இவள்.. என் சுட்க்கி இல்லை என்று தன் மனதிற்கு கூறிக் கொண்டவனின் கண்கள் கோபத்தில் சிவந்தது...
* தொடரும்..
- சரண்யா
உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடவும்.. நன்றி லட்டுஸ்..
"ராட்சசனே என் ரட்சகனே!!❤" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
www.srikalatamilnovel.com