அறைக் கதவுத் திறக்கப்பட்டது, டாக்டர் புவனேஸ்வரியும், டாக்டர் குணாவும் உள்ளே நுழைந்தனர். புவனேஸ்வரியின் கையில் ஒரு ப்லாஸ்டிக் கவர் தன்னுள்ளே ஏதோப் பொருளைத் தாங்கியவாறு இருந்தது. குணாவின் கையில் சில ஃபைல்கள் இருந்தன. அதனை மேசையில் வைத்துவிட்டுத் திரும்பி சங்கருடன் நின்று கொண்டனர். சங்கர் ஒருக் காலைக் கீழே ஊன்றி சற்று சாய்வாக மேசையின் மேல் அமர்ந்தார். புவனேஸ்வரியும் மேசையின் மேல் சற்று சாய்ந்து நின்று கொண்டார். சங்கரின் வலது பக்கம் புவனேஸ்வரியும் இடது பக்கம் குணாவும் நின்று கொண்டனர்.
அறையின் அமைதியை புவனேஸ்வரிக் கலைத்தார், சற்குணபாண்டியன் குடும்பத்தினரைப் “ம்ம்ம்ம் இப்ப சொல்லுங்க என்னப் பேசனும்? எல்லாத்தையும் இங்கயே இப்பவேப் பேசி முடிச்சிடலாம்.” என்றார்.
“என்னப் பேசனுமா? ஏம்மா நடந்த அம்புட்டெயும் நீ பாத்த தான? இந்தப் பொசக்கெட்டப் பய எங்கூட்டுப் பொம்பளகளப் பார்த்து விரல நீட்டிப் பேசுறேய்ன், இதப் பாத்துப்புட்டு இவனச் சும்மா விட்டுப்புட்டுப் போவ நாங்கன்ன பொண்டுகப் பயலுகளா? எனத் தனது நாற்காலியில் இருந்து எகிறிக் கொண்டு வினவினார் சிங்கவேலு.
“ம்ம்ம்ம் குணா பேசினதுத் தப்புன்னா, அதுக்கு முன்னாடி உங்க வீட்டுப் பொண்கள்ப் பேசினதும் தப்பு தான் இல்லையா?” என வினவினார் புவனேஸ்வரி.
“இந்த வியாக்கியானாம் எல்லாம் எங்கக்கிட்டப் பேச வேண்டாய்ம் டாக்டுரம்மா! எங்க வீட்டுப் பொண்டுங்கச் சரியாத்தேன் கேள்விக் கேட்டாய்ங்க! எங்கக் குடும்ப சாடைக் கொஞ்சம் கூடயில்லாதப் புள்ளய எங்கூட்டுப் புள்ளன்னு சொல்றத நம்ப நாங்க என்னக் கூறில்லாதப் பயலுகளா?” என வினவினான் செந்தூரபாண்டியன்.
“எங்க பொண்டுங்கள இவய்ன் எப்புடி மருவாதக் கொறவாப் பேசலாம்? இவன வெட்டுனாத்தேன் எங்க மனசு ஆறும்” எனச் சீறினான் ராசவேலு.
“கண்டிப்பா குணாவ வெட்டனும் தான், உங்க வீட்டுப் பொண்டுங்களப் பார்த்து விரல் உயர்த்திப் பேசினத சும்மா விட முடியுமா? கூடாது இல்லையா சித்தப்பா?” என சங்கரிடம் வினயமாக வினவினார் புவனேஸ்வரி.
சங்கர் குணாவைப் பார்த்துக் கண்ணடித்து “நீ சொல்லித் தப்பாகுமா புவனாம்மா? குணாவ வெட்டுறது தான் சரி. என்ன குணா உங்கள வெட்டிடலாமா?” என நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு வினயமாக வினவினார்.
குணா “வெட்டுறதுன்னு முடிவாயிடுச்சி பொசுக்குன்னு போயி சேருர மாதிரி ஒரேப் போடாப் போடச் சொல்லுங்க சார். போகும்போது வலியில்லாமப் போயி சேந்துக்குறேன்.”
“ஹா ஹா ஹா ஹா ஹா” என அந்த ஹால் அதிர சிரித்திவிட்டு “சரி, உங்க கடைசி ஆசைய சொல்லுங்க நிறவேத்திடுவோம்?” என்றார் சங்கர் கண்களில் விஷமச் சிரிப்புடன்.
“சார் கண்டிப்பா நிறவேத்துவிங்களா? உங்கள நம்புறேன் சார்! இந்தப் பாண்டியன் குடும்பம் மொத்தமும் மதுரை செண்டரல் ஜெயில்லக் கல்லு ஒடைக்கிறதையும், வரிசையில நின்னு சோறு வாங்கிறதையும், நைட்டுக் கொசுக் கடிலத் தூங்காமா விழிச்சி இருக்கிறதையும், நான் சொர்கத்தில இருந்து ரம்ப, ஊர்வசி, மேனக இவங்கள எல்லாம் கட்டிப்புடிச்சிட்டு கண் குளிரப் பாக்கனும் சார்! வேறப் பெரிய ஆசையெல்லாம் எனக்கு இல்லை சார்!” என்றான் குணா குறும்பாக.
“குணாஅஅஅ” என அடக்க மாட்டாமல் கண்களில் நீர் வரச் சிரித்தார் சங்கர். புவனேஸ்வரி பொங்கிய வெடிச் சிரிப்பை மென்று அடக்க முடியாமல் உதட்டைக் கடித்து அடக்கினார். பாதுகாப்பு படையினர் கூடக் கொஞ்சம் இலகுவாகப் புன்னகைத்தனர். குணா லேசாக முகம் சிவந்து வெட்கம் மேலிடத் தனது பார்வையைத் திருப்பிக் கொண்டு “ஐயோ மேடம் என்ன பத்தி என்ன நினப்பாங்க?” என அசடு வழிய நினைத்தான்.
“குணா உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?” என கணக்காரியமாக வினவினார் சங்கர்.
“இல்லையெ சார்! அந்தக் கொடுப்பனை எல்லாம் இந்த ஜென்மத்தில எனக்கு இல்லை போல சார்” என்றான் குணா பாவமாக.
“சுசுசுசுச்ச்ச்சூசுசுசு” எனச் சூள் கொட்டினார் சங்கர் போலியாக.
“என்னங்கடா? எங்களப் பாத்தாக் கேனப் பயலுக மாதிரித் தெரியுதா” எனக் கர்ஜித்தான் சுந்தரபாண்டியன்.
“என்ன குணா இவங்களப் பாத்தா கேனப் பயலுக மாதிரியாத் தெரியுது?” என அப்பாவியாக வினவினார் சங்கர்.
“சிரிப்பு மூட்டாதிங்க சார், இவங்க கேனப் பயலுகளா? மத்தவங்களத் தான் இவங்க கேனயனா ஆக்குவாங்க! இவங்க கொலகாரப் பயலுங்க சார்!!” என அழுத்திச் சொன்னான் குணா.
“யாரப் பாத்துடாக் கொலகாரப் பயலுங்கன்னுச் சொன்ன?” என ஒருமித்தக் குரலில் கத்தினர் சற்குணபாண்டியன் குடும்பத்து ஆண்மக்கள், சற்குணபாண்டியனைத் தவிர. அவர் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தார்.. பெண்களும் தங்கள் இருக்கையை விட்டு ஆவேசமாக எழுந்தனர்.
“உங்களப் பாத்து தாண்டா சொன்னேன்! உங்க வீட்டுப் பொம்பளங்களப் பாத்து நான் விரல் ஒசத்தினதுக்கு, என்ன வெட்டியத் தீருவேன்னு சொன்ன நீங்க, கொலகாரப் பயலுங்க தானே? அது மட்டுமா எங்க மேடம இந்தம்மா ‘அவ நாக்க இழுத்து வச்சி அறுத்துப்புடுவேனு’ சொல்லிச்சி. இந்தப் பெரிய மனுசி ‘அவ தலை மயித்துப் படிச்சித் தர தரனு இழுத்துட்டு வாங்கடானு’ சொன்னுது. இந்த மாதர் குலத் திலகம் ‘அவளைக் கருவருக்கனும் ஆத்தானு’ சவுண்டு விட்டிச்சி. எல்லாத்துக்கும் மேலே இதோ இருக்கானே இவன், நல்லா பாத்துக்குங்க சங்கர் சார்! இவன் இங்கயே மேடமக் கண்டந்துண்டம்மா வெட்டி வீசிடுவானாம்!!! வண்டிக்குள்ள, முதுகுக்குப் பின்னே எப்போதும் கர்சீஃப சொறுவி வச்சிருக்க மாதிரி அறுவாவ சொறுவி வச்சிருக்க நீங்க கொலகாரப் பயலுங்க இல்லாம, அமைதிக்கு நோபில் பரிசு வாங்கின நெல்சன் மண்டேலாவாடா? ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு ஞாபக மறதி ஆகாதுடா!!!“ எனப் பரிகாசித்தான் குணா.
சற்குணபாண்டியன் குடும்பத்தினர் அதிர்ந்து நின்றனர், அவர்கள் மனதில் ஓடியது ஒரே வாக்கியம் தான் “எப்புடித் தெரிஞ்சுது? நாமப் பேசினெது அம்புட்டும் ஒத்தெ வார்த்தெ மாறாமாச் சொல்லுறானே? எப்புடித் தெரிஞ்சுது இந்தப் பொசக்கெட்டப் பயலுக்கு?” அவர்களுக்கு வேர்த்துவிட்டது, புவனேஸ்வரியின் உயரம் அவர்களை அச்சுறுத்தியது. சற்குணபாண்டியன் புரிந்து கொண்டார் தங்களைச் சுற்றி சதி வலைப் பின்னப்பட்டு அதில் தங்களை விழுவிக்கவும் செய்தாயிற்று.
“ஓ” என வெகு அமைதியாகச் சொன்னார் சங்கர். மேசையை விட்டு மெதுவாக இறங்கி பெண்கள் இருக்கும் இடத்திற்கு சென்றார். “வாராய்ன் வாராய்ன் பனை மரத்துலெப் பாதி ஒசரம் இருக்கவன் வாராய்ன்” என மனதிற்குள் பயந்து நடுங்கினார் சுந்தரவல்லி.
சங்கர் சுந்தரவல்லியையும், வடிவாம்பாளையும் தாண்டி அங்கயற்கண்ணியிடம் சென்று நின்றார். அங்கயற்கண்ணிக்கு ஈரக்குலை நடுங்கியது. சங்கர் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு குணாவிடம் திரும்பி “குணா இவதான என் மகள கருவறுக்கனும்னு சொன்னவ?” என வினவினார். குணா ‘ஆமாம்’ எனத் தலையாட்டினான்.
சங்கரின் நோக்கம் புரிந்து, டாக்டர் புவனேஸ்வரி வேகமாக சங்கர் அருகில் சென்று “சித்தப்பா, இவங்களப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சில்ல.. அவங்களுக்கும் என்னப் பத்தி, உங்களப் பத்தி நல்லாத் தெரிஞ்சிருக்கும். இவங்க இப்ப பல்லுப் புடுங்கினப் பாம்புங்க. ஒன்னும் செய்ய முடியாது, இவங்கள விட்றுங்க. இப்ப நமக்கு முக்கியம் அந்தக் குழந்த தான் சித்தப்பா.” என்றார். சங்கரும் மையமாகத் தலையாட்டி விட்டு அவளுடன் மேசைக்கு நகர்ந்தார். அந்தப் பெண்களை முறைக்கவும் தவறவில்லை.
“போயிட்டேய்ன் அப்பாடா” என நிம்மதி பெருமூச்சி விட்டார் அங்கயற்கண்ணி. “அந்த சிறுக்கி வரலன்னா அடிச்சிருப்பானோ? ஆத்தி அப்புடி அடிச்சிருந்தேய்ன் நாளக்கி எங்க வீட்டுலெ எனக்குப் பால் ஊத்திருப்பாய்ங்க! ச்ச்ச்” என மனதிற்குள் புலம்பினாள் அங்கயற்கண்ணி.
சங்கர் நேராக சற்குணபாண்டியனிடம் வரவும் தன் இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டார். “சோ!! எங்க வீட்டுப் பொண்ணக் கண்டந் துண்டம்மா வெட்டிப் போட்டுட்டுப் நீங்க எல்லாம் கை வீசிட்டுப் போவிங்க? என்னோட இடத்தில நீங்க இருந்தா என்னப் பண்ணுவிங்க சற்குணபாண்டியன்?? நீங்க என்ன செய்விங்களோ அதை நானும் செய்றேன், சரியா? இல்லை இவங்க அந்த மாதிரிப் பேசலைன்னுச் சொல்லப் போறிங்களா? அந்த அளவுக்கு நீங்க முட்டாள் இல்லைன்னு நான் நினைக்கிறேன்? நீங்க என்ன நினைக்கிறிங்க? பதில் சொல்லுங்க சற்குணபாண்டியன்.” என அழுத்தமாக வினவினார் சங்கர்.
சற்குணபாண்டியன் ஆழ மூச்சிழுத்துக் கொண்டு தொண்டையை செறுமியவர். “இங்கெ இப்ப நடந்ததப் பத்தி நான் பேசல.. என் வீட்டு மக்கப் பேசினெதெல்லாம் தப்புத்தென். எதோக் கோவத்திலப் பேசுப்புட்ட வார்த்தையக் கட்டிக்கிட்டுத் தொங்கிட்டு இருந்தா எப்புடி? அவய்ங்க அப்புடிச் சொன்னாங்ய்கதேன்.. ஆனா செஞ்சாய்ங்களா? நாந்தேன் அவய்ங்கள செய்ய விட்டெனா? எங்களுக்கும் சட்டம் தெரியும்க! இப்ப பிரச்சனை அது இல்லை! பொறந்தப் புள்ள மேல இன்னும் சந்தேகம் தீரலியே? அத தீக்க வேண்டியது டாக்டுரம்மா கடமதேன். என் பொஞ்சாதி சொன்ன வெதம் வேணா தப்பா இருக்கலாய்ம், ஆனா அவக் கேட்டக் கேள்வி சரிதேன்.. இல்லன்னு சொல்லிப்புடுங்கங்கப் பாப்போய்ம்? வீட்டுலப் பிரசவம் பாத்தா வீட்டுப் பொம்பளய்ங்க இருப்பாய்ங்க. இங்கெ அப்புரசன் ரூமுக்குள்ள நாங்க யாரும் இல்லயே! பொறவு எப்புடி நம்ப முடியும்? அந்தப் புள்ளயும் எங்கக் குடும்பெ சாடையில்லியெ?” என வரிசையாகக் கேள்விகளைக் அடுக்கி, தான் ஒருத் தேர்ந்த தொழிலதிபர் என்பதை நிருபித்தார் சற்குணபாண்டியன்.
சங்கர் ‘நீ தான் இவர்களின் புத்தியைத் தெளிய வைக்க வேண்டும்’ என்பது போல் திரும்பி டாக்டர் புவனேஸ்வரியைப் பார்த்தார். புவனேஸ்வரி குணாவிடம் “குணா கேரி ஆன்” என்றார். தொலைக்காட்சியும் வி.சிஆரும் உயிர்ப்பிக்கப் பட்டது. அந்தக் கவரைப் பிரித்து ஒரு காணொளி கேசெட்டை வெளியே எடுத்து, வி.சிஆருக்குள் செலுத்தப் பட்டது.
“படம் காட்டவா இம்புட்டு அலப்பறை?” என அனைவரும் மனதிற்குள் எண்ணினர். சற்குணபாண்டியனின் மனதிற்குள் அபாய மணி ஒலித்தது! எதோ தங்களுக்குப் பாதகமானது நடக்கப் போகிறது என அவரது உள்மனது அவருக்கு அறிவுறுத்தியது. அவர் பயந்தது போல் தான் அங்கு நடந்து கொண்டிருந்தது.
தொலைக்காட்சியில் படம் ஓட ஆரம்பித்தது. முதலில் சற்று மசமசப்பாகத் தெரிந்தது. பின்னர் ஒரு பெண் படுத்திருப்பதும் அவரின் மேலே பச்சை நிறப் போர்வைப் போர்த்தப் பட்டிருப்பது, அவரின் முகத்துக்கு மேலே வெகு அருகில் விளக்குகள் எரிவதும் தெரிந்தன. தொலைக்காட்சியில் வெகு அருகில் அந்தப் பெண்ணின் முகம் தெரிந்தது. அனைவருக்கும் புரிந்தது அந்தப் படம் யாரைப் பற்றியது என்று. தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டப் பெண் “நிலவழகி” தான்.
“ஆத்தா அழகி” எனக் கதறிவிட்டார் வடிவாம்பாள்.
“ஷ்ஷ்ஷ்ஷ், இந்தப் படம் முடியிற வர சத்தம் கேக்க கூடாது, மீறிக் கேட்டுச்சி” என அதட்டினார் சங்கர். வடிவாம்பாள் தனது அழுகையை மென்று விழுங்கினார் “கட்டயிலப் போறவய்ன்” எனத் தனது மனதிற்குள் சங்கரை அர்ச்சித்தார்.
“குணா டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம், ஸ்பெசிஃபிக் சீன்க்குப் ஃபொர்வட் பண்ணுங்க” என்றார் டாக்டர் புவனேஸ்வரி. குணாவும் அவ்வாறேச் செய்தார். படம் மறுபடியும் ஓடியது. நிலவழகி தலையில் கட்டுடன் மயக்க நிலையில் இருப்பது நன்றாகத் தெரிந்தது. உடல் முழுக்க அங்கிகளை அணிந்து கொண்டு நிலவழகியை சூழ்ந்திருந்தனர் டாக்டர்களும், நர்சுகளும்.
சட்டென்று நிலவழகியின் அடிவயிறுக் கிழிக்கப்பட்டுக் குருதி வெளியேறுவதுத் தெரிந்தது. வடிவாம்பாளுக்கு மயக்கமே வந்துவிட்டது. பின்னே தன் அருமை மகள் வயிறுக் கிழிந்துக் குருதிப் பெருகியிருக்கும் கோலம் காண எந்தத் தாய்க்குத் தான் காணச் சகிக்கும்?
அறையின் அமைதியை புவனேஸ்வரிக் கலைத்தார், சற்குணபாண்டியன் குடும்பத்தினரைப் “ம்ம்ம்ம் இப்ப சொல்லுங்க என்னப் பேசனும்? எல்லாத்தையும் இங்கயே இப்பவேப் பேசி முடிச்சிடலாம்.” என்றார்.
“என்னப் பேசனுமா? ஏம்மா நடந்த அம்புட்டெயும் நீ பாத்த தான? இந்தப் பொசக்கெட்டப் பய எங்கூட்டுப் பொம்பளகளப் பார்த்து விரல நீட்டிப் பேசுறேய்ன், இதப் பாத்துப்புட்டு இவனச் சும்மா விட்டுப்புட்டுப் போவ நாங்கன்ன பொண்டுகப் பயலுகளா? எனத் தனது நாற்காலியில் இருந்து எகிறிக் கொண்டு வினவினார் சிங்கவேலு.
“ம்ம்ம்ம் குணா பேசினதுத் தப்புன்னா, அதுக்கு முன்னாடி உங்க வீட்டுப் பொண்கள்ப் பேசினதும் தப்பு தான் இல்லையா?” என வினவினார் புவனேஸ்வரி.
“இந்த வியாக்கியானாம் எல்லாம் எங்கக்கிட்டப் பேச வேண்டாய்ம் டாக்டுரம்மா! எங்க வீட்டுப் பொண்டுங்கச் சரியாத்தேன் கேள்விக் கேட்டாய்ங்க! எங்கக் குடும்ப சாடைக் கொஞ்சம் கூடயில்லாதப் புள்ளய எங்கூட்டுப் புள்ளன்னு சொல்றத நம்ப நாங்க என்னக் கூறில்லாதப் பயலுகளா?” என வினவினான் செந்தூரபாண்டியன்.
“எங்க பொண்டுங்கள இவய்ன் எப்புடி மருவாதக் கொறவாப் பேசலாம்? இவன வெட்டுனாத்தேன் எங்க மனசு ஆறும்” எனச் சீறினான் ராசவேலு.
“கண்டிப்பா குணாவ வெட்டனும் தான், உங்க வீட்டுப் பொண்டுங்களப் பார்த்து விரல் உயர்த்திப் பேசினத சும்மா விட முடியுமா? கூடாது இல்லையா சித்தப்பா?” என சங்கரிடம் வினயமாக வினவினார் புவனேஸ்வரி.
சங்கர் குணாவைப் பார்த்துக் கண்ணடித்து “நீ சொல்லித் தப்பாகுமா புவனாம்மா? குணாவ வெட்டுறது தான் சரி. என்ன குணா உங்கள வெட்டிடலாமா?” என நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டு வினயமாக வினவினார்.
குணா “வெட்டுறதுன்னு முடிவாயிடுச்சி பொசுக்குன்னு போயி சேருர மாதிரி ஒரேப் போடாப் போடச் சொல்லுங்க சார். போகும்போது வலியில்லாமப் போயி சேந்துக்குறேன்.”
“ஹா ஹா ஹா ஹா ஹா” என அந்த ஹால் அதிர சிரித்திவிட்டு “சரி, உங்க கடைசி ஆசைய சொல்லுங்க நிறவேத்திடுவோம்?” என்றார் சங்கர் கண்களில் விஷமச் சிரிப்புடன்.
“சார் கண்டிப்பா நிறவேத்துவிங்களா? உங்கள நம்புறேன் சார்! இந்தப் பாண்டியன் குடும்பம் மொத்தமும் மதுரை செண்டரல் ஜெயில்லக் கல்லு ஒடைக்கிறதையும், வரிசையில நின்னு சோறு வாங்கிறதையும், நைட்டுக் கொசுக் கடிலத் தூங்காமா விழிச்சி இருக்கிறதையும், நான் சொர்கத்தில இருந்து ரம்ப, ஊர்வசி, மேனக இவங்கள எல்லாம் கட்டிப்புடிச்சிட்டு கண் குளிரப் பாக்கனும் சார்! வேறப் பெரிய ஆசையெல்லாம் எனக்கு இல்லை சார்!” என்றான் குணா குறும்பாக.
“குணாஅஅஅ” என அடக்க மாட்டாமல் கண்களில் நீர் வரச் சிரித்தார் சங்கர். புவனேஸ்வரி பொங்கிய வெடிச் சிரிப்பை மென்று அடக்க முடியாமல் உதட்டைக் கடித்து அடக்கினார். பாதுகாப்பு படையினர் கூடக் கொஞ்சம் இலகுவாகப் புன்னகைத்தனர். குணா லேசாக முகம் சிவந்து வெட்கம் மேலிடத் தனது பார்வையைத் திருப்பிக் கொண்டு “ஐயோ மேடம் என்ன பத்தி என்ன நினப்பாங்க?” என அசடு வழிய நினைத்தான்.
“குணா உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?” என கணக்காரியமாக வினவினார் சங்கர்.
“இல்லையெ சார்! அந்தக் கொடுப்பனை எல்லாம் இந்த ஜென்மத்தில எனக்கு இல்லை போல சார்” என்றான் குணா பாவமாக.
“சுசுசுசுச்ச்ச்சூசுசுசு” எனச் சூள் கொட்டினார் சங்கர் போலியாக.
“என்னங்கடா? எங்களப் பாத்தாக் கேனப் பயலுக மாதிரித் தெரியுதா” எனக் கர்ஜித்தான் சுந்தரபாண்டியன்.
“என்ன குணா இவங்களப் பாத்தா கேனப் பயலுக மாதிரியாத் தெரியுது?” என அப்பாவியாக வினவினார் சங்கர்.
“சிரிப்பு மூட்டாதிங்க சார், இவங்க கேனப் பயலுகளா? மத்தவங்களத் தான் இவங்க கேனயனா ஆக்குவாங்க! இவங்க கொலகாரப் பயலுங்க சார்!!” என அழுத்திச் சொன்னான் குணா.
“யாரப் பாத்துடாக் கொலகாரப் பயலுங்கன்னுச் சொன்ன?” என ஒருமித்தக் குரலில் கத்தினர் சற்குணபாண்டியன் குடும்பத்து ஆண்மக்கள், சற்குணபாண்டியனைத் தவிர. அவர் தீவிர யோசனையில் ஆழ்ந்திருந்தார்.. பெண்களும் தங்கள் இருக்கையை விட்டு ஆவேசமாக எழுந்தனர்.
“உங்களப் பாத்து தாண்டா சொன்னேன்! உங்க வீட்டுப் பொம்பளங்களப் பாத்து நான் விரல் ஒசத்தினதுக்கு, என்ன வெட்டியத் தீருவேன்னு சொன்ன நீங்க, கொலகாரப் பயலுங்க தானே? அது மட்டுமா எங்க மேடம இந்தம்மா ‘அவ நாக்க இழுத்து வச்சி அறுத்துப்புடுவேனு’ சொல்லிச்சி. இந்தப் பெரிய மனுசி ‘அவ தலை மயித்துப் படிச்சித் தர தரனு இழுத்துட்டு வாங்கடானு’ சொன்னுது. இந்த மாதர் குலத் திலகம் ‘அவளைக் கருவருக்கனும் ஆத்தானு’ சவுண்டு விட்டிச்சி. எல்லாத்துக்கும் மேலே இதோ இருக்கானே இவன், நல்லா பாத்துக்குங்க சங்கர் சார்! இவன் இங்கயே மேடமக் கண்டந்துண்டம்மா வெட்டி வீசிடுவானாம்!!! வண்டிக்குள்ள, முதுகுக்குப் பின்னே எப்போதும் கர்சீஃப சொறுவி வச்சிருக்க மாதிரி அறுவாவ சொறுவி வச்சிருக்க நீங்க கொலகாரப் பயலுங்க இல்லாம, அமைதிக்கு நோபில் பரிசு வாங்கின நெல்சன் மண்டேலாவாடா? ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு ஞாபக மறதி ஆகாதுடா!!!“ எனப் பரிகாசித்தான் குணா.
சற்குணபாண்டியன் குடும்பத்தினர் அதிர்ந்து நின்றனர், அவர்கள் மனதில் ஓடியது ஒரே வாக்கியம் தான் “எப்புடித் தெரிஞ்சுது? நாமப் பேசினெது அம்புட்டும் ஒத்தெ வார்த்தெ மாறாமாச் சொல்லுறானே? எப்புடித் தெரிஞ்சுது இந்தப் பொசக்கெட்டப் பயலுக்கு?” அவர்களுக்கு வேர்த்துவிட்டது, புவனேஸ்வரியின் உயரம் அவர்களை அச்சுறுத்தியது. சற்குணபாண்டியன் புரிந்து கொண்டார் தங்களைச் சுற்றி சதி வலைப் பின்னப்பட்டு அதில் தங்களை விழுவிக்கவும் செய்தாயிற்று.
“ஓ” என வெகு அமைதியாகச் சொன்னார் சங்கர். மேசையை விட்டு மெதுவாக இறங்கி பெண்கள் இருக்கும் இடத்திற்கு சென்றார். “வாராய்ன் வாராய்ன் பனை மரத்துலெப் பாதி ஒசரம் இருக்கவன் வாராய்ன்” என மனதிற்குள் பயந்து நடுங்கினார் சுந்தரவல்லி.
சங்கர் சுந்தரவல்லியையும், வடிவாம்பாளையும் தாண்டி அங்கயற்கண்ணியிடம் சென்று நின்றார். அங்கயற்கண்ணிக்கு ஈரக்குலை நடுங்கியது. சங்கர் அவளை ஏற இறங்கப் பார்த்துவிட்டு குணாவிடம் திரும்பி “குணா இவதான என் மகள கருவறுக்கனும்னு சொன்னவ?” என வினவினார். குணா ‘ஆமாம்’ எனத் தலையாட்டினான்.
சங்கரின் நோக்கம் புரிந்து, டாக்டர் புவனேஸ்வரி வேகமாக சங்கர் அருகில் சென்று “சித்தப்பா, இவங்களப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சிடுச்சில்ல.. அவங்களுக்கும் என்னப் பத்தி, உங்களப் பத்தி நல்லாத் தெரிஞ்சிருக்கும். இவங்க இப்ப பல்லுப் புடுங்கினப் பாம்புங்க. ஒன்னும் செய்ய முடியாது, இவங்கள விட்றுங்க. இப்ப நமக்கு முக்கியம் அந்தக் குழந்த தான் சித்தப்பா.” என்றார். சங்கரும் மையமாகத் தலையாட்டி விட்டு அவளுடன் மேசைக்கு நகர்ந்தார். அந்தப் பெண்களை முறைக்கவும் தவறவில்லை.
“போயிட்டேய்ன் அப்பாடா” என நிம்மதி பெருமூச்சி விட்டார் அங்கயற்கண்ணி. “அந்த சிறுக்கி வரலன்னா அடிச்சிருப்பானோ? ஆத்தி அப்புடி அடிச்சிருந்தேய்ன் நாளக்கி எங்க வீட்டுலெ எனக்குப் பால் ஊத்திருப்பாய்ங்க! ச்ச்ச்” என மனதிற்குள் புலம்பினாள் அங்கயற்கண்ணி.
சங்கர் நேராக சற்குணபாண்டியனிடம் வரவும் தன் இருக்கையில் இருந்து எழுந்துக் கொண்டார். “சோ!! எங்க வீட்டுப் பொண்ணக் கண்டந் துண்டம்மா வெட்டிப் போட்டுட்டுப் நீங்க எல்லாம் கை வீசிட்டுப் போவிங்க? என்னோட இடத்தில நீங்க இருந்தா என்னப் பண்ணுவிங்க சற்குணபாண்டியன்?? நீங்க என்ன செய்விங்களோ அதை நானும் செய்றேன், சரியா? இல்லை இவங்க அந்த மாதிரிப் பேசலைன்னுச் சொல்லப் போறிங்களா? அந்த அளவுக்கு நீங்க முட்டாள் இல்லைன்னு நான் நினைக்கிறேன்? நீங்க என்ன நினைக்கிறிங்க? பதில் சொல்லுங்க சற்குணபாண்டியன்.” என அழுத்தமாக வினவினார் சங்கர்.
சற்குணபாண்டியன் ஆழ மூச்சிழுத்துக் கொண்டு தொண்டையை செறுமியவர். “இங்கெ இப்ப நடந்ததப் பத்தி நான் பேசல.. என் வீட்டு மக்கப் பேசினெதெல்லாம் தப்புத்தென். எதோக் கோவத்திலப் பேசுப்புட்ட வார்த்தையக் கட்டிக்கிட்டுத் தொங்கிட்டு இருந்தா எப்புடி? அவய்ங்க அப்புடிச் சொன்னாங்ய்கதேன்.. ஆனா செஞ்சாய்ங்களா? நாந்தேன் அவய்ங்கள செய்ய விட்டெனா? எங்களுக்கும் சட்டம் தெரியும்க! இப்ப பிரச்சனை அது இல்லை! பொறந்தப் புள்ள மேல இன்னும் சந்தேகம் தீரலியே? அத தீக்க வேண்டியது டாக்டுரம்மா கடமதேன். என் பொஞ்சாதி சொன்ன வெதம் வேணா தப்பா இருக்கலாய்ம், ஆனா அவக் கேட்டக் கேள்வி சரிதேன்.. இல்லன்னு சொல்லிப்புடுங்கங்கப் பாப்போய்ம்? வீட்டுலப் பிரசவம் பாத்தா வீட்டுப் பொம்பளய்ங்க இருப்பாய்ங்க. இங்கெ அப்புரசன் ரூமுக்குள்ள நாங்க யாரும் இல்லயே! பொறவு எப்புடி நம்ப முடியும்? அந்தப் புள்ளயும் எங்கக் குடும்பெ சாடையில்லியெ?” என வரிசையாகக் கேள்விகளைக் அடுக்கி, தான் ஒருத் தேர்ந்த தொழிலதிபர் என்பதை நிருபித்தார் சற்குணபாண்டியன்.
சங்கர் ‘நீ தான் இவர்களின் புத்தியைத் தெளிய வைக்க வேண்டும்’ என்பது போல் திரும்பி டாக்டர் புவனேஸ்வரியைப் பார்த்தார். புவனேஸ்வரி குணாவிடம் “குணா கேரி ஆன்” என்றார். தொலைக்காட்சியும் வி.சிஆரும் உயிர்ப்பிக்கப் பட்டது. அந்தக் கவரைப் பிரித்து ஒரு காணொளி கேசெட்டை வெளியே எடுத்து, வி.சிஆருக்குள் செலுத்தப் பட்டது.
“படம் காட்டவா இம்புட்டு அலப்பறை?” என அனைவரும் மனதிற்குள் எண்ணினர். சற்குணபாண்டியனின் மனதிற்குள் அபாய மணி ஒலித்தது! எதோ தங்களுக்குப் பாதகமானது நடக்கப் போகிறது என அவரது உள்மனது அவருக்கு அறிவுறுத்தியது. அவர் பயந்தது போல் தான் அங்கு நடந்து கொண்டிருந்தது.
தொலைக்காட்சியில் படம் ஓட ஆரம்பித்தது. முதலில் சற்று மசமசப்பாகத் தெரிந்தது. பின்னர் ஒரு பெண் படுத்திருப்பதும் அவரின் மேலே பச்சை நிறப் போர்வைப் போர்த்தப் பட்டிருப்பது, அவரின் முகத்துக்கு மேலே வெகு அருகில் விளக்குகள் எரிவதும் தெரிந்தன. தொலைக்காட்சியில் வெகு அருகில் அந்தப் பெண்ணின் முகம் தெரிந்தது. அனைவருக்கும் புரிந்தது அந்தப் படம் யாரைப் பற்றியது என்று. தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டப் பெண் “நிலவழகி” தான்.
“ஆத்தா அழகி” எனக் கதறிவிட்டார் வடிவாம்பாள்.
“ஷ்ஷ்ஷ்ஷ், இந்தப் படம் முடியிற வர சத்தம் கேக்க கூடாது, மீறிக் கேட்டுச்சி” என அதட்டினார் சங்கர். வடிவாம்பாள் தனது அழுகையை மென்று விழுங்கினார் “கட்டயிலப் போறவய்ன்” எனத் தனது மனதிற்குள் சங்கரை அர்ச்சித்தார்.
“குணா டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம், ஸ்பெசிஃபிக் சீன்க்குப் ஃபொர்வட் பண்ணுங்க” என்றார் டாக்டர் புவனேஸ்வரி. குணாவும் அவ்வாறேச் செய்தார். படம் மறுபடியும் ஓடியது. நிலவழகி தலையில் கட்டுடன் மயக்க நிலையில் இருப்பது நன்றாகத் தெரிந்தது. உடல் முழுக்க அங்கிகளை அணிந்து கொண்டு நிலவழகியை சூழ்ந்திருந்தனர் டாக்டர்களும், நர்சுகளும்.
சட்டென்று நிலவழகியின் அடிவயிறுக் கிழிக்கப்பட்டுக் குருதி வெளியேறுவதுத் தெரிந்தது. வடிவாம்பாளுக்கு மயக்கமே வந்துவிட்டது. பின்னே தன் அருமை மகள் வயிறுக் கிழிந்துக் குருதிப் பெருகியிருக்கும் கோலம் காண எந்தத் தாய்க்குத் தான் காணச் சகிக்கும்?