நினைவு-29
அலைபேசியின் தொடர் அழைப்பில், அலைபேசி யாருடையதென்று தெரியாமாலேயே அழைப்பை உயிர்பித்த சஹானா,
“என்ன கல்யாணப்பொண்ணு, நோ..நோ.. என்ன மிஸஸ்.அஜய் ரித்விக் ஹாப்பி மேரிட் லைஃப்”என்ற நக்கல் தொனியில் அதிர்ந்து இருக்கையை விட்டே எழுந்துவிட்டாள்.
“ர.. ராம்?” என்று அவளது நாக்கு தந்தியடிக்க,
“எஸ், நானேதான் உன்னோட ராம். பரவாயில்லையே பேரெல்லாம் நியாபகம் வச்சிருக்க?” என்று அவனும் குரோதத்துடன் வினவ,
“நீங்க எப்படி கால் பண்ணுனீங்க?இது யாரோட ஃபோன்?” என சஹானா குழப்பத்துடன் வினவ,
“ஏன், இதையும் உன் அண்ணன்கிட்ட போட்டுக்குடுக்கலாம்னு பார்க்குறியா?” பற்களை கடித்தான்.
“நான் எங்க போட்டுக்கொடுத்தேன்? நான் அண்ணாகிட்ட எதுவுமே சொல்லல” என்று சஹானா பதற,
“நீ சொல்லாமலேயா, அஜய் அந்த நம்பர்ல என்ன ட்ரேஸ் பண்ணுனான்? என் காதல பறிச்சது மட்டுமில்லாம அர்ஜூன வச்சு என்ன துரத்திக்கிட்டே இருக்கான். அவன் கையில மட்டும் நான் மாட்டுனேன், சாவு கன்ஃபார்ம்” என்று ஆதங்கத்துடன் கூறியவன்,
“எப்படிடி என்ன காதலிச்சுட்டு அவன கல்யாணம் பண்ணிக்க முடிஞ்சது உன்னால, அப்போ என்னை எதுக்குடி காதலிச்ச? இப்படி நான் ஓடி ஒளியறதுக்கா?” என்று உண்மைபோலவே ஆதங்கப்பட,
“அய்யோ ராம், நீங்க என்ன சொல்லிறீங்க? எனக்கு எதுமே புரியல. நீங்க கால் பண்ணினத நான் யார்கிட்டயுமே சொல்லல” சஹானா மீண்டும் சொன்னதையே திரும்ப கூற,
“போதும் நிறுத்து. உன் புருசன்கிட்ட சொல்லி வை, என் வழியில கிராஸ் பண்ண வேண்டாம்னு. அர்ஜூன்கிட்ட சொல்லி கேஸ வாபஸ் வாங்க சொல்லு. இல்லன்னா, உன் தாலியோட ஈரம் காயுறதுக்கு முன்னாடியே அதை உன் கழுத்துல இருந்து இறக்க வேண்டி வரும். பார்த்துக்க” அவன் எச்சரிக்க, சஹானாவோ நொடியில் அதிர்ந்து கழுத்தில் தொங்கிய தாலியை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள்.
‘பிடிக்காமல் தான் கட்டிக்கொண்டேன்; ஆனால், அவனுக்கு ஒண்ணுனா எனக்கு ஏன் பதறனும்?’என்று அவளது மனது யோசிக்கும் போதே அலைபேசியின் குரல் தடைசெய்தது.
“சஹி பேபி, என் காதலுக்கு துரோகம் செஞ்சிட்டு இன்னைக்கு அவன்கூட தாம்பத்திய வாழ்க்கைல சேர்ந்து வாழத் தயாராகிட்டல்ல? உன்னால எப்படிடி முடிஞ்சிது...!” அனுதாபக் குரலில் அவளை குழப்பியவன் திருப்தியுடன் இணைப்பைத் துண்டித்தான்.
அதிர்ச்சியில் செய்வதறியாது சஹானா அமர்ந்திருக்க உள்ளே நுழைந்தனர் தோழிகள்.
“ஷ்ஷப்பா.... முழிச்சுட்டியாமா, மணி இப்போ மூணாகிடுச்சி, சாப்பிட வா”என்று பூஜா அழைக்க,
“எனக்கு பசிக்கல, சாப்பாடு வேண்டாம்” சஹானா மறுக்க,
“உனக்காக அங்க அஜய் அண்ணா சாப்பிடாம வெயிட் பண்ணுறாங்க, மிது கூட”என்று அழைக்க அலைபேசியை மறந்தவளாக பூஜாவுடன் சென்றாள். சஹானாவிடம் எந்திரத்தனத்தை கண்ட அஜய், அவளை நெருங்கி,
“சஹி பேபி, ஆர் யூ ஓகே? நல்லா தூங்குனியா?” வினவ,
‘எல்லாம் இவனால தான்; செய்றதெல்லாம் செஞ்சிட்டு ஆர் யூ ஓகேவாம்’ மனதில் எண்ணியதோடு,கோபம் கனன்ற விழிகளுடன் கணவனை முறைத்தவள்,
“ஒன் கிரேட் ரிக்வெஸ்ட், டோட்டல் ஃபேமிலியே இங்க தான் இருக்காங்க, சோ, கொஞ்சம் சிரிச்சமாதிரி இரு. மாமாவை முறைக்குறதெல்லாம் நம்ம பெட்ரூம்ல போய் வச்சிக்கலாம்” என அஜய் கண்ணடிக்க, சுற்றத்தார் தம்மை கவனிப்பதை உணர்ந்து வரவழைக்கப்பட்ட செயற்கை புன்னகையுடன் சாப்பிடுவதைத் தொடர்ந்தாள்.
சஹானாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, வரவேற்பை இரு நாட்களுக்கு தள்ளி வைத்திருக்க, உணவருந்தி முடித்ததும் இளையவர்கள் மணமக்களுடன் சில விளையாட்டுகளைத் தொடர்ந்தனர்.
இரவு, மணி ஏழைத் தொடவும், சஹானாவையும், மிதுனாவையும் அழைத்து பெரியவர்கள் அடுத்து நடைபெறவிருக்கும் சடங்கிற்குத் தயாராகச் சொல்ல, சஹானாவோ பயத்தில் தாயின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். சஹானாவின் பயத்தை உணர்ந்த அஜய்யோ அலைபேசியுடன் தனியே செல்ல, சஹானாவை ரேணுகா சமாதானப்படுத்தியதோடு,சில அறிவுரைகளையும் கூற ஆரம்பித்தார்.
அலைபேசியுடன் தாயிடம் வந்த அஜய்,
“அம்மா, நான் கொஞ்சம் வெளியே போறேன். ஒரு கிளைண்ட அர்ஜென்டா மீட் பண்ணனும்” என்று கிளம்ப எத்தனிக்க, அனைவரும் அவனை ஆச்சரியத்துடன் நோக்க,
அவனது தாய் ராகிணியோ, “அஜய் நில்லு, இன்னைக்கு தான் உனக்கு கல்யாணம் நடந்திருக்கு, சில சடங்குலாம் இருக்கு; எங்கேயும் போக வேண்டாம்; ராகுல், இவனை கூட்டிட்டு போய் ரெடியாக சொல்லு” சிறிய மகனுக்கு அறிவுறுத்திவிட்டு பெரிய மகனுக்கு ஏவினார்.
“அம்மா, ப்ளீஸ். போய்ட்டு ஒன் அவர்ல வந்திருவேன். இப்போ விட்டா அவர் நைட் டெல்லிக்கு போய்டுவாருமா.”மேலும் கேட்க,
“அஜய், நாளைக்கு நீ அவரை டெல்லிக்கு இல்லனா டென்மார்க்குக்கே போய் பாரு. எதுக்கும் ஒரு நேரம் காலம் இருக்கு; ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணினா மட்டும் போதாது. சாந்தி முகூர்த்தத்துக்கு நேரம் குறிச்சாச்சு; அதுக்கு ரெடியாகுற வேலைய பாரு;” தன் பேச்சு முடிந்து விட்டது என்று கூற,
அவனோ கடுப்பில், “எனக்கு இந்த நல்ல நேரம், சம்பிரதாயத்துலல்லாம் நம்பிக்கையில்லனு உங்களுக்கு தெரியும்ல?” என்க,
“டேய் அஜய், நானும் உன்கூட வர்றேன்டா”என்று ஷ்யாமும் சம்மணில்லாமல் ஆஜராக, ‘இவன் ஒருத்தன், நேரம் காலம் புரியாம’என்று மனதிற்குள் ஷ்யாமை தாளிக்க,
“ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் சொல்றேன், சடங்கு, சம்பிரதாயங்கள்ல உங்களுக்கு நம்பிக்கை வேண்டாம்; எங்க திருப்திக்காக நாங்க செய்றோம், அதுக்கு கட்டுப்படுறது உங்க வேலை, அதுக்கும் மேல உங்கள நாங்க கட்டாயப்படுத்த போறதில்ல; உங்க உறவ முன்னோக்கி கொண்டுபோறதும், போகாததும் நீங்க ரெண்டு பேரும் சம்பந்தப்பட்ட விஷயம்; அதுல நாங்க தலையிடமாட்டோம். இப்போ போய் ரெடியாகு; திவ்யா, அவங்கள ரெடி பண்ணு” நீளமாக கூறியவர், தொடர்ந்த வேலைகளை கவனிக்க சென்றுவிட்டார்.
தங்களறைக்கு வந்த அஜய்யிடம், “அது யாருடா இந்த டைம்ல புது கிளைண்ட்?” என்று தன்னை சீண்டிய ஷ்யாமின் கைகளை முறுக்கியவன்,
“உன்னை.... சும்மா ஒரு பிட்ட போட்டேன். நான் எதுக்கு சொல்றேன்னு தெரிஞ்சும் சொதப்பிட்டு, கேள்வியா கேக்குற?”என்று கேட்க,
“அடேய் கிராதகா, விடுடா வலிக்குது ; ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்கு போறவனை ஃபர்ஸ்ட் எய்டு ரூமுக்கு அனுப்பிடாத” என்று கத்த, அவனது கைகளை விடுவித்தவனிடம் கார்த்திக்,
“ஏன் அஜய், உனக்கு இதுல விருப்பமில்லையா?” தயக்கத்துடன் விசாரிக்க, இதை ஏதும் கண்டுகொள்ளாமல் அஜய்யின் படுக்கையை அலங்கரித்துக் கொண்டிருந்த அர்ஜூன், ஆதியைப் பார்த்தவன்,
“நீ வேற, உன் தங்கச்சி சும்மாவே அந்த முறை முறைச்சா; உங்கம்மா வேற அறிவுரைங்கிற பேர்ல அவளுக்கு சலங்கை கட்டி விட்டிருப்பாங்க; இதுல இந்த அரேஞ்ச்மெண்ட்ஸ்லாம் பார்த்துட்டு வேப்பில்லை எடுக்காத குறையா ஆடப்போறா” என்று சலிப்புடன் அமர்ந்தவனைப் பார்த்து நண்பர்கள் சிரிக்க, தெளியாத கார்த்திக்கின் முகத்தைப் பார்த்த அஜய்,
“மச்சான், நீ இவ்ளோ ஃபீல் பண்ணுற அளவுக்கு ஒண்ணுமே இல்ல; அவளுக்கு ஆக்ஸிடெண்ட் நடந்து ஒன் மன்த் தான் முடிஞ்சிருக்கு, இன்னும் அவ கம்ளீட்டா கியூர் ஆகல; மேரேஜ் முடிச்சே ஆகணும்னு முடிச்சேன்; பட், இப்போ இதல்லாம் தேவையா? அதான் அப்படி சொன்னேன்” என்று கூற, அதை கேட்டுக்கொண்டிருந்த ஷ்யாமிற்கோ தலைசுற்றாத குறை.
“டேய் நல்லவனே, உனக்கு முன்னாடி என் மிதுவ பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சது நான்; நீ என்னன்னா அதுக்கு அப்புறம் பார்த்து, எனக்கும் சேர்த்து அவ்ளோ ரொமான்சையும் பண்ணி என்னை வெறுப்பேத்திட்டு, என்னமோ நல்லவன் மாதிரி பேசுறியா?” என்றபடி அஜய்யின் வயிற்றில் குத்த,
அர்ஜூன் தான், “சோ வாட் அஜய், அதான் மேரேஜ் லைஃப் லீட் பண்ணுறதுல சானுக்கு எந்த பிராப்ளமும் இல்லனு டாக்டர் சொல்லிட்டாங்களே” கூற,
“இருந்தாலும், அவ இன்னும் முழுமையா என்னையோ என் குடும்பத்தையோ ஏத்துக்கல; கொஞ்ச நாள் போகட்டும்டா; ப்ளீஸ் கார்த்தி, டோன்ட் திங்க் டூ மச்; கிவ் சம் ஸ்பேஸ் டு அஸ். பட், கண்டிப்பா சஹி நல்லா இருப்பா” முடித்துக்கொண்டான்.
அவனது பேச்சில் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட, அஜய்யைத் தவிர மற்றவர்கள் வெளியேறினார்கள்.
*****
தாயின் அறிவுரைகளில் மலைத்துப் போய் நின்ற சஹானாவை அழைத்த ராகிணி கடவுளை வணங்க சொல்ல, அதை செய்துவிட்டு அவரிடமும் ஆசிர்வாதம் வாங்கிய சஹானாவின் நெற்றியில் முத்தமிட்டவர்,
“சானு, உங்கம்மா சொன்ன மாதிரி தான் நீ நடந்துக்கனும்னு நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்; உன்னோட ஹெல்த், இப்போ உன்னோட மனநிலை எல்லாம் எனக்கு புரிஞ்சாலும், என் பையன் மேல நம்பிக்கை இருக்கு, அவன் உன்னை நல்லா பார்த்துக்குவான்னு; உன் மேலயும் நம்பிக்கை இருக்கு, உன் கழுத்துல தொங்குற இந்த மாங்கல்யத்துக்கு நீ மதிப்பு குடுப்பேன்னு.” பட்டும் படாமலும் எடுத்துக் கூறி சஹானாவை அனுப்பி வைக்க,
ஷ்யாமின் தாயோ மிதுனாவிடம், “சீக்கிரம் ஒரு பேரனையோ, பேத்தியையோ எங்க கையில குடுத்துட்டு அப்புறமா என்ன வேணாலும் சண்ட போட்டுக்கோங்கமா நீயும் உன் புருசனும்”என்று ஆசிர்வதித்து அனுப்பி வைத்தனர்.
‘இனி எதையும் சந்தித்து தான் ஆகனும்’என்று மனதை திடப்படுத்தியவாறு அஜய்யின் அறையில் சஹானா நுழைய, அவனில்லாத வெற்று அறையே வரவேற்றது. ‘எங்க போனான் இந்த டெர்மினேட்டர்’ என்று அவனுக்கு வைத்த பெயருடன் அறையை சுற்றி பார்வையை ஓட்டினாள்.
“ஒருவேளை அந்த கிளைண்ட பார்க்க ஓடிட்டானோ?”என்று வாய்விட்டே கூறியவள்,
நேர்த்தியாக இருந்த அவனது அறையை கண்டவள், “பரவாயில்ல, இந்த டெர்மினேட்டர் அவன் ரூமையும் நல்ல நீட்டா தான் வச்சிருக்கான்” தனக்குத் தானே பேசியவளின் பார்வையில் விழுந்தது அவர்களது நிச்சயதார்த்த புகைப்படம். மூன்றடியில், அஜய்யில் மடியில் சஹானா அமர்ந்திருக்க இருவரும் கண்களில் காதலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்த அந்த காட்சியை புகைப்பட கலைஞர் தத்ரூபமாக படம்பிடித்திருக்கிறார்.
தன்னை மீறி அந்த புகைப்படத்தில் லயித்திருந்தவளைக் கலைத்தது அஜய்யின் குரல்.
“நிஜம் நான் இங்க இருக்குறப்போ, நிழலை சைட் அடிக்குறியே ஸ்வீட்டி” அவளறியாமல் அவளை அணு அணுவாய் ரசித்தவாறே கூற, அவனோ அப்போதுதான் குளித்திருப்பான் போலும், மேற்சட்டை இன்றி அரைக்கால் சட்டையுடன் தலையை துவட்டிக் கொண்டிருந்தான்.
படிக்கட்டுகளுடன் கூடிய அவனது வெற்று மேலுடம்பில் ஒரு சில நீர்த்திவளைகள் ஒட்டிக்கொண்டிருப்பதை பார்த்தவள், சங்கடத்தில் முகத்தைத் திருப்பியவாறு,
“என்ன இது, இப்படியா அரைகுறை டிரஸ்ஸோட ரூமுக்குள்ள நிப்பீங்க? டீ-சர்ட் போடுங்க” என்று சிடுசிடுக்க,
“இதென்னமா வம்பா போச்சு, பெட்ரூம் குள்ள மட்டும் தான் இப்படி நிக்க முடியும்; ஆமா மேடம் எதுக்கு இங்க வந்திருக்கீங்க?” சீண்டினான் அவளை.
“எ..எதுகுன்னா என்ன சொல்லுவேன்?”
“எதுக்கு வந்தியோ அத சொல்லு”இவனும் விடாமல்,
“இனி இந்த ரூம்ல உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கோ, அதே ரைட்ஸ் எனக்கும் இருக்கு” என்று மார்பில் தொங்கிய தாலியைத் தூக்கி அவனிடம் காட்டினாள்.
“ஓ.... அப்போ அதே ரைட்ஸ நானும் எடுத்துக்கலாமா?” குறும்புடன் அவன் வினவ, அவனைக் கண்டு உதட்டை சுழித்தவள் படுக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.
“டேப்லட்ஸ் போட்டியா?”
“ம்ம்... ரொம்பத்தான் அக்கறை” என்று ந்நொடித்துக் கொண்டவள்,
“என்ன, உங்க கிளைண்ட பார்க்க போகலையா?” என்று அவள் கேட்க,
“அது... நாளைக்கு போகணும்” சமாளித்தான்.
“உங்கம்மாகிட்டயும் கூட பொய் சொல்வீங்களா?” என்று அவள் கேட்க,
“நான் சொன்னது பொய் தான்னு உனக்கு எப்படி தெரிஞ்சிது?” அவளிடமே மறு கேள்வி கேட்டான்.
“நான் என்ன யாருமே அதை உண்மைனு நம்பியிருக்கமாட்டாங்க” அவளும் சமாளித்தவளுக்கு ஸ்ரீராமின் அழைப்பு நினைவில் வர,
“ஏதோ என்மேல அக்கறை இருக்குற மாதிரி பேசுனா, அவங்கள மாதிரி நானும் நம்பிருவேன்னு நினைச்சிங்களா?” கத்தியவள்,
“எனிவே, நீங்க ஆசைப்பட்டது மாதிரி என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க; எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை தான்; ஆனா, நான் இந்த மாங்கல்யத்தையும், அதனால வந்த இந்த உறவையும் மதிக்குறேன்.” என்க, அவனும் கேள்வியாக புருவம் உயர்த்த,
“எவ்வளோ உன்கிட்ட கெஞ்சுனேன், இப்போ மேரேஜ் வேண்டாம்னு. நான் கல்யாணம் வேண்டம்னா சொன்னேன்? இப்போ வேண்டாம்னு தானே சொன்னேன். என்னால என்னோட பாஸ்ட்ட கடந்து வர முடியல; கொஞ்சமாவது காது குடுத்து கேட்டியா? என் அண்ணனை உன் கன்ட்ரோல்ல வச்சிட்டு இப்போ என் வாழ்க்கைல நடந்த இந்த முக்கியமான நிகழ்வையும், அது மூலமா கிடைச்ச இந்த உறவுகளையும் நான் ஏத்துக்க முடியாம திணறுறதுக்கு காரணமே நீ தான்” தழுதழுத்த குரலில் கூறினாள்.
“நான் என் வீட்டுல எப்படி இருந்தேனோ, அது மாதிரி தான் இங்கேயும் இருப்பேன். என் மனசு முழுக்க இப்போ குழப்பங்கள் மட்டும் தான் இருக்கு. அதுக்காக, என்னை வைஃப்னு சொல்லிக்கிட்டு ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக்காதே.”என்றாள் கட்டிலை சாடை காட்டியவாறு.
“நான் மட்டும் பேசிட்டு இருக்கேன், எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்?” என்று வினவினாள் முந்தானையின் நுனியை விரல்களில் சுருட்டியவாறே.
“லுக் சஹி, உனக்கு வந்த அம்னீசியா எனக்கு ப்ராப்ளம் இல்ல; ஆனா, உனக்கு அம்னீசியாவோட சேர்த்து என்மேல வெறுப்பும் வந்திருக்கு. அந்த வெறுப்போட, கடமைக்காக அடுத்தவங்க சொல்றதுக்காக இந்த அழகான தாம்பத்திய வாழ்க்கைய தொடருரதுல எனக்கும் விருப்பமில்லை”
“அப்போ எதுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுத்து உன்னை கல்யாணம் பண்ணினேன்னு யோசிக்குறியா? உன்னை முதன்முதலா பார்த்த நாள்ல இருந்து இப்ப வரைக்கும் உன்னை லவ் பண்ணுறேன், இனியும் பண்ணுவேன்;யூ ஆர் மைன்; அதனால நீ எப்பவும் என்னோட வேவ்லென்த்க்குள்ள தான் இருக்கனும்”என்றவனை ‘இவன் லூஸா’என்பதை போல் பார்த்தவளது கன்னங்களை தன் கைகளில் தாங்கியவன் அவளது நெற்றியில் முத்தமிட்டு,
“சஹி பேபி, தாம்பத்தியம் ஒரு அழகான நிகழ்வு; அதுக்கு கடமை வேண்டாம், காதல் தான் வேணும்;இப்போ உன் மைண்ட்ல, நான் உன் காதலனாவோ, கணவனாவோ, ஏன் ஒரு மனுசனா கூட இல்லன்னு எனக்கு நல்லாவே தெரியுது. விருப்பமில்லாத ஒருத்தியை பார்வையால கூட சீண்டுறது எனக்கு பிடிக்காது:என்றவன் ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றி,
“இப்போ சொல்றேன் சஹானா நல்லா கேட்டுக்கோ, ஒரு மனைவியா எனக்கு நீ செய்ய வேண்டிய சில விஷயங்களை கண்டிப்பா நீ செய்யனும். ஆனா, உன் விருப்பமில்லாம இந்த தாம்பத்தியத்துக்கான முதல் படியை நான் கண்டிப்பா எடுத்து வைக்கமாட்டேன்” என்றான் உறுதியாக.
அவளோ அவனை ஆச்சரியத்தில் பார்க்க,சற்று நேரம் அங்கே அமைதி மட்டுமே ஆட்சி செய்தது.
“என்ன ஆச்சரியமா பாக்குற? எனக்கும் தெரியும், நானும் உணர்ச்சியுள்ள ஒரு சாதாரண மனுசன் தான்; ஆனா, எனக்கு என் காதல் மேல நம்பிக்கையிருக்கு” என்றவன், சற்று முன் சஹானா பார்த்துக் கொண்டிருந்த புகைப்படத்தை கைக்காட்டியவன்,
“அதோ, அந்த போட்டோ இருக்குற மாதிரி ஒரு காதல் பார்வையை இப்போ உன்னால பார்க்க முடியுமா?” கண்களை ஆழ்ந்து நோக்கி கேட்டவன்,
“எனக்கு மட்டுமே உரிமையான அப்படி ஒரு காதல் பார்வையை என்னைக்கு உன் கண்ணுல நான் பார்க்குறேனோ அன்னைக்கு நான் உன்னை முழுமனசோட எடுத்துப்பேன், அதுக்கு உன் பெர்மிஸன் கூட எனக்கு தேவையிருக்காது” என்று ஆழ்ந்து கூற,
அவனை சீண்டிப் பார்க்கும் எண்ணம் எழ, “ஒருவேளை அப்படி ஒரு சிச்சுவேஸன் அமையலன்னா...?” கேட்டாள் சஹானா.
“கண்டிப்பா வரும், இப்போ வேணும்னா ஒரு டிரைல் பார்க்கலாமா?”என்று கண்ணடித்தவன், சட்டென்று அவள்புறமாக திரும்ப, அதில் மிரண்டு விழித்தவளை பார்த்து சிரித்துக்கொண்டே,
“அதெல்லாம் தானா நடக்கும், இப்போ நீ டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து தூங்கு; உன்னோட டிரஸ் எல்லாம் அங்க இருக்கு”என்று உடைமாற்றும் அறையை காண்பித்தவன் மடிக்கனிணியை எடுத்துக் கொண்டு அமர்ந்துவிட்டான்.
******
ஷ்யாமின் அறையில் நுழைந்த மிதுனாவிற்கோ அதற்கு மேல் கால்கள் எட்டவில்லை. உள்ளே நுழைந்தவள் கூச்சத்தில் கதவின் அருகிலேயே நின்றுவிட்டாள். அவளுக்கு நேரே இருந்த சாய்விருக்கையில் அமர்ந்திருந்த ஷ்யாம் அவளை தலை முதல் கால் வரை அணு அணுவாய் ரசித்துப் பார்க்க, அவனது துளைக்கும் பார்வையில் முன்னேறவும் முடியாமல், திரும்பவும் முடியாமல் அங்கேயே நின்றுவிட்டாள் மிதுனா.
அவளை நோக்கி நடையிட்டவன், “என்ன மிது, இங்கேயே நின்னுட்ட?வா”என்று கதவை பூட்டிவிட்டு அவளை உள்ளே அழைத்துச் சென்று படுக்கையில் அமர வைத்தான்.
அவளோ நாணத்தில் நெழிய, அவனோ அவளையே பார்த்தபடி இருந்தான். பால் தம்ளரை அவனிடம் நீட்டிய மிதுனா,
“குடுக்க சொன்னாங்க..”என்றாள்.
“எனக்கு மில்க் பிடிக்காது, நீயே குடி”நகர முயல,
“இல்ல, இது சம்பிரதாயம்; நீங்க கொஞ்சம் குடிச்சுட்டு குடுங்க” மறுபடியும் அவன் புறம் நீட்ட,
“ஓ…” ராகமிட்டு வாங்கியவன், “கீழ எல்லாரும் இதான் சொல்லி அனுப்புனாங்களா? வேற என்ன சொன்னாங்க?” பாதி அருந்திய தம்ப்ளரை அவளிடம் நீட்டினான்.
“அ..அது…” அவள் தந்தியடிக்க,
“குடிச்சிட்டு, சொல்லு”
குடித்தவள், “ச..சந்தோஷமா இருக்கங்கன்னு சொன்னாங்க” நாணத்தில் கவிழ்ந்த தலையுடன் கூற, அவள் நெருக்கமும், அவள் சூடிய மல்லிகையின் மணமும் அவனை சூடேற்ற,
“ஓகே, எனக்கு வொர்க் இருக்கு; நீ தூங்கு”என்று திரும்பியவனை விழிவிரித்துப் பார்க்க, அவனோ அவளது பார்வையை உணர்ந்தாலும் உப்பரிகையில் போய் நின்று கொண்டான்.
அவன் பின்னூடே சென்றவள், “மாது, என் மேல உங்களுக்கு ஏதும் கோபமா?”என்றாள் வேக வேகமாக.
அவளது ‘மாது’என்ற விழிப்பில் கோபத்தை சற்று தணித்தவன், “பேசாம போய் படு மிதுனா” என்றான்.
“ப்ளீஸ் மாது, என்கிட்ட பேசுங்க, உங்களோட அவாய்டன்ஸ் என்னை ரொம்ப ஹர்ட் பண்ணுது” என்று கூற, அவனோ நம்பாத பார்வையை அவள் மீது வீச,
“என்ன சொன்ன,என்னோட செயல் உன்னை ஹர்ட் பண்ணுச்சா? அப்போ நீ பண்ணுனத என்னன்னு சொல்லுவ? அது சரி, நீ லவ் பண்ணனும்னா அதுக்கு ‘ஸ்டேட்டஸ்’ முக்கியம்ல?” என்று நக்கல் தொனியில் கேட்டவன் அறையின் உள்ளே சென்றுவிட்டான்.
“உன் கேரக்டரை வச்சு தான்டி உன்னை லவ் பண்ணுனேன்; எனக்கு தேவை உன்னோட மனசும், உன்னோட சம்மதமும் தான். அதுக்காக தான் அன்னைக்கு அவ்ளோ பேசுனேன். புரிஞ்சிக்கிட்டியா நீ? தகுதி, ஸ்டேட்டஸ்னு அத மட்டும் தான சொன்ன?” கத்தியவன் மிதுனா பேச வந்த எதையுமே காதில் ஏற்கவில்லை.
“அன்னைக்கு மட்டும் உனக்கு சம்மதம்னு ஒரு வார்த்தை சொல்லியிருந்தா இன்னைக்கு இந்த நேரம் உன்கிட்ட இப்படி நிதானம் இல்லாம நான் கத்திட்டு இருக்கமாட்டேன்” என்று பற்களைக் கடித்துக் கொண்டு பேச,
“மாது, நான் சொல்லவர்றதை கொஞ்சம் கேளுங்க” அவள் கெஞ்ச,
“என்ன சொல்லப்போற? எனக்கு என் குடும்பம் தான் முக்கியம், என் வீட்டுல காதல்னா பிடிக்காது, இதானா?” என்று எகிற,
“எங்க வீட்டு சிச்சுவேசன் அப்படி, அதான் அன்னைக்கு அப்படி பேசிட்டேன். சாரி” வருந்த,
“நான் என்ன உன்னை உன் வீட்ட விட்டுட்டு என்கூட ஓடிவானு கூப்பிட்டேனா,இல்ல எனக்கு மட்டும் குடும்பம் இல்லையா என்ன?” என்று கேட்க, சற்று முன்னர் நாணம் சுமந்த அவளது விழிகளில் இப்போது கண்ணீர் நிற்காமல் வழிந்தது.
அவளது கண்ணீரை பார்க்க பிடிக்காதவன் அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு,
“அன்னைக்கு உன்கிட்ட கேட்டது உன்னோட சம்மதம் மட்டும் தான்; நீ அன்னைக்கு சரின்னு சொன்னா கூட உன்னோட ‘செல்ஃப்-எஸ்டீம் (self-Esteem)–க்கு முக்கியத்துவம் குடுத்து உன் வீட்டுல முறைப்படி பேசியிருப்பேன். இப்படி சானு வச்சு, உன் அண்ணனை பிடிச்சு கேம் பண்ணியிருக்கமாட்டேன்” என்றவனை விழிவிரித்து மிதுனா பார்க்க,
“உன்கிட்ட நான் எதிர்பார்த்தது காதல் தான்; அது நான் உன்கிட்ட கேட்ட அன்னைக்கு கிடைக்கல; உன் குடும்பத்துக்காக என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்ச; திரும்பவும் லூஸு மாதிரி, என்கேஜ்மெண்ட் அன்னைக்கும் உன் கண்ணுல அந்த காதலை தான் தேடினேன். எனக்குரிய எந்த வித எதிர்பார்ப்பும், தேடலும் இல்லாத ஒரு அலங்கார பொம்மை மாதிரி இருந்த உன்னை பார்த்ததுமே நான் தோத்துட்டேன்டி” என்றான் விரக்தியில்.
“அதுக்கப்புறமும், நீ என்னை தேடுன தான்; இல்லன்னு சொல்லல, உன்ன காதலிச்ச ஷ்யாம இல்ல, உன் ஃபியான்ஸி ஷ்யாம் மாதேஷை. என்னால அதைத்தான் கொஞ்சம் கூட ஏத்துக்க முடியலைடி இப்போ வரைக்கும்” என்றவன்,
“நான் உன்கிட்ட காதலை எதிர்ப்பார்த்தேன்; இப்போ வரை எதிர்பார்த்துட்டு தான் இருக்கேன். மனைவிங்கிற உரிமையை உனக்கு நான் குடுத்துட்டாலும், என் மனசு இன்னும் உன்கிட்ட இருந்து எதையோ எதிர்பார்க்குது; அது உனக்கு புரியுறப்போ, கண்டிப்பா நம்ம வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்கு நாம முன்னேறியிருப்போம்” என்றவன்,
“அதுவரைக்கும் எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும்; நான் உன்னை அவாய்டு பண்ணுறேன்னு மட்டும் நினைக்காத, சாரி”என்று அவன் கூற,
“நான் என்ன சொல்ல வர்றேன்னு கொஞ்சம் கேளுங்களேன்”என்று அவள் கூற,
அவளை பேச விடாமல் “இந்த பெட்லயே நீயும் படுத்துக்கலாம், குட் நைட்”என்று பேச்சை கத்தரித்துவிட்டு அவளுக்கு முதுகுக் காட்டி படுத்துக்கொண்டான்.
நினைவுகள் தொடரும்...!