என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்....
அத்தியாயம் 1
“ஓம் கௌசல்யா ஸுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம்
தைவமாஹ் நிகம்...”
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் தெய்வீக குரலில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் அந்த இல்லத்தில் மெதுவாக இசைத்து கொண்டு இருந்தது. அது சென்னையில் நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் பகுதி.
“சூர்யா… சூர்யா… எழுந்திரிடாமா இன்னைக்கு இன்டெர்வியூ இருக்கு சீக்கரம் எழுப்பிவிட சொன்ன இல்ல டா, எழுந்திருடாமா டைம் ஆச்சு பாரு...” எழுப்பிக் கொண்டிருப்பவர் காயத்ரி, அவ்வீட்டின் தலைவி. சிவரத்தினத்தின் மனைவி. இவர்களின் மூத்த மகள் தான் சூர்யா.
சூர்யா, வயது 25. படிப்பு M.Sc(ஹோம் சயின்ஸ் ), பால்வண்ணம்... 5 அடி உயரம், அதனால் சற்று பூசினார் போன்று இருக்கும் உடல்வாகு இடைத்தாண்டும் கூந்தல், வட்டமுகம், சிறியதும் பெரியதும் இல்லாத அளவான விழிகள் (black browny eyes), தன்னை கடந்து செல்பவர்களை கவனிக்க வைக்கும் மிதமான அழகு.
இளையவன் ஜீவரத்னம், வீட்டின் கடைக்குட்டி வயது 22 MBA படித்து கொண்டிருப்பவன் 6 அடி உயரம் இக்கால இளைஞர்களில் நானும் ஒருவன் என சொல்லும் அளவிற்கு நாகரிகமான தோற்றம்.
தமக்கை பால்வண்ணம்… தம்பி வெண்மையும் கருமைக்கும் இடைப்பட்ட நிறம். இந்த விஷயத்தில் காயூ மேல் செம காண்டு இவனுக்கு. சூர்யா தாயின் நிறத்தை கொண்டும், இவன் தந்தை நிறத்திலும் பிறந்திருந்தான். (தம்பி, இது ஜெனட்டிக் ப்ரோப்ளம். நீ ஏன் காயூ மேல பொங்குற)
காலை 9 மணியளவில் சூர்யா, குளித்து முடித்து இளநீல நிற சேலையில் தங்கநிற கரையிட்டு அதற்கு பொருத்தமான மாட்சிங் தங்கநிற ரவிக்கையில், தளர பின்னிய கூந்தல் அதில் ஒற்றை ரோஜா அளவான ஜிமிக்கி, புருவங்களுக்கு மத்தியில் சேலையின் வண்ணத்தில் பொட்டு கழுத்தில் ஒற்றை தங்கசங்கிலி என மிதமான ஒப்பனையுடன் தயாராகி வந்தவளை கண்கலங்க பார்த்திருந்தார் காயத்ரி.
“அம்மா, நான் ரெடி இந்த ஜீவா கிளம்பிட்டானா..? டிபன் ரெடியா” எனக் கேள்விமேல் கேள்வி கேட்ட மகளின் குரலின் நிகழ்வுக்கு திரும்பினார் காயூ.
“குட் மோர்னிங் பூசணி” (யாருன்னு யோசிக்கிறீங்களா..? ரொம்ப யோசிக்காதீங்க நம்ம சூர்யாவிற்கு ஜீவா வைத்த பெயர் தான் இது)
அவனை முறைத்துக்கொண்டே தன் அன்னை வைத்த காலை சிற்றுண்டியினை சாப்பிட்டுக் கொண்டுருந்தாள் சூர்யா.
“குட் மார்னிங் மா, அப்பா எங்க?” எனக் கேட்டுக் கொண்டே ஜீவா சாப்பிட அமர்ந்தான்
“உங்கப்பா… வாக்கிங் போயிட்டு அப்படியே மார்க்கெட் போய்ட்டு வரேன்னு சொன்னார் டா” என காயூ கூற,
“ஐயையோ...! ஒரு ரிட்டையர்டு பேங்க் மேனேஜரை போய் இப்படி மாத்திட்டியே காயூ. இது நியாயமா..? தர்மமா..?” என வம்பு பேசி கொண்டிருந்தவனின் மண்டையில் நங்கென்று ஒன்று வைத்து, “வாடா, எனக்கு இன்டெர்வியூ பதினோரு மணிக்கு உன் கதாகலஷேபம் முடிச்சி நீ என்னை ட்ராப் பண்றதுக்குள்ள இன்டெர்வியூ முடிஞ்சிட போகுதுடா சீக்கிரம்” என்றாள் சூர்யா.
“ஏய் பூசணி, அதான் எல்லா லெவலும் பினிஷ் பண்ணிடல்ல... அப்புறம், இது என்ன திடீர்னு லாஸ்ட் ரௌண்ட்…” என ஜீவா கேட்க, “தெரியலைடா, போய் பார்த்தா தான் தெரியும்” எனக் கூறினாள். (அவளுக்குமே அந்த கேள்விக்கு விடை தெரியாதே)
“அம்மா, கிளம்பறோம்... அப்பா வந்தா சொல்லிடுங்க. நான் இன்டெர்வியூ முடிச்சிட்டு கால் பண்றேன் மா… நான் கால் பண்ண பிறகு அப்பாவை கிளம்பி வர சொல்லுங்க. முன்னாடியே வந்து வெய்ட் பண்ண வேண்டாம்” எனக் கூறி செல்லும் மகளை பெருமை, வருத்தம், ஏக்கம் கலந்த பார்வை பார்த்தார் காயத்ரி.
பெருமை… என் மகள் அழகி என்று.
வருத்தம்… இந்த அழகே என் மகளுக்கு எதிராய் உள்ளதே.
ஏக்கம்… என் மகளுக்கு நல்ல வாழ்க்கை அமையுமா..?
அவன் உயிரானவள்...
அத்தியாயம் 2
சென்னை...
தன் முன் வானை முட்டும் அளவிற்கு உயர்ந்திருந்த கட்டிடத்தை விழிவிரிய பார்த்திருத்தாள் சூர்யா. “கமல் டவர்ஸ்” பதினோரு மாடி கட்டிடம்... “தி கமல் குரூப் ஆப் இண்டஸ்ட்ரிஸ் அண்ட் கம்பெனிஸ்” இந்நிறுவனத்தின் கீழ் (கமல் ஹோட்டல்ஸ், கமல் ஃபுட் ப்ரோடக்ட்ஸ், கமல் இம்போர்ட் அண்ட் எக்ஸ்ப்போர்ட்ஸ்) என மேலும் பற்பல... இது சென்னையில் இயங்கும் அவர்களின் தொழில்களுக்கான சென்னை தலைமையகம்.
அந்த கட்டிடத்தினை படப்படப்புடனும், லேசான பயத்துடனும் பார்த்திருந்தாள் சூர்யா.
வண்டியினை பார்க்கிங்கில் விட்டு வந்த ஜீவா, தன் அக்காவின் நிலைக் கண்டு உள்ளுக்குள் கலங்கினாலும் உடனடியாக தன்னை மீட்டு கொண்டு.
தன் தமக்கையின் தோளில் தட்டி, “ஏய்... பூசணி, நிஜமாவே இன்டெர்வியூல உன்னை செலக்ட் பண்ணாங்களா இல்ல சும்மா கதை விட்டியா செக்யூரிட்டி வேற ஒரு மாதிரி பார்க்கிறார் பாரு. உண்மைய சொல்லு… இந்த கம்பெனி தானா... இல்ல, வேற கம்பெனியா... ம்...சொல்லு...” எனப் பேசியவனை, முறைத்துவிட்டு தனக்கு அவர்கள் அனுப்பிய மெயில் மற்றும் மெசேஜ் காட்டி, “என்னையென்ன உன்னை மாதிரி நினைச்சியா… போடா லூசு... நெட்ட கொக்கு” என இன்னும் பலப்பல பட்ட பெயர்களால் அவனை திட்டிவிட்டு அவன் முகம் பார்க்க.
அவள் தம்பி ஜீவாவோ புன்சிரிப்புடன் அவளின் தோளில் கைபோட்டு, “இப்ப டென்ஷன் போயிடுச்சா கா... கவலைப்படாம போய் பாரு என்ன விஷயமானாலும் எனக்கு இல்ல அப்பாக்கு கால் பண்ணு. இல்ல உனக்கு ரொம்ப டென்ஷனா இருந்தா, நான் வேணும்னா இன்டெர்வியூ முடியும் வரை வெயிட் பண்ணட்டுமா, சொல்லுக்கா “ என
தன் தம்பியின் அன்பில், கண்களில் இருந்து கண்ணீர் வர பார்க்க, முயன்று அதை தடுத்து, “நீ இன்னும் அந்தளவுக்கு வளரலடா தம்பி “ ( ஏன்மா, வளர்ரத பத்தி நீயெல்லாம் பேசுற… காலகொடுமைடா சாமி) கிண்டல் போல் கூறினாள்.
தயங்கி நின்றவனை, “நான் இன்டெர்வியூ பினிஷ் பண்ணிட்டு, உனக்கு மெசேஜ் இல்ல கால் பண்றேன். அப்பாவுக்கு கால் பண்ணி வர சொல்லி அவர்கூட போறேன் தனியா போகமாட்டேன். ஓகே... வாடா, சமயத்துல நீ எனக்கு தம்பியா இல்ல அண்ணனானு எனக்கே டவுட் வருது முடியல “ என அலுத்து கொள்வது போல் கூறினாலும் அதில் பெருமையே மேலோங்கி இருந்தது தன் உடன் பிறந்தவனின் பாசத்தினை எண்ணி.
“சரி கா, ஆல் தி பெஸ்ட் … எனக்கு மறக்காம கால் பண்ணு ஓகே வா...” என கூறி, அத்தொழில் வளாகத்தினுள் செல்லும் தன் அக்காவை ... பார்த்து கையசைத்துவிட்டு தன் வண்டியை எடுத்து கொண்டு கிளம்பி விட்டான் ஜீவா
சூர்யாவும், “சரி… பை… டா… பார்த்துப் போ” என்றவள், அவ்வளாகத்தினுள் சென்று, அங்கிருந்த ரிசெப்ஷனிஸ்ட் பெண்ணிடம், தன்னை அறிமுகம் செய்துக் கொண்டு தான் வந்த காரணத்தினை கூறினாள்.
அப்பெண் அவளிடம், “ப்ளீஸ் வெயிட் அ மினிட் மேம் “ என சொல்லி சூர்யாவை அங்கிருந்த இருக்கையில் அமர சொன்னாள்.
தொலைபேசியில் சூர்யா வந்த விஷயத்தினை தெரிவிக்க, “ஓகே சார், அனுப்புறேன்...” எனக் கூறி தொலைபேசியினை துண்டித்து சூர்யாவை நோக்கியவள்,
“மேம்… ப்ளீஸ் கோ டூ 3ர்ட் ப்ளோர், மீட் அவர் ஹச்.ஆர் மேனேஜர் மிஸ்டர் கிருஷ்ணா...” என
ரிசெப்ஷனிஸ்ட் பெண்ணிடம் நன்றி தெரிவித்துவிட்டு 3வது தளம் செல்ல மின்தூக்கி நோக்கி சென்றாள் சூர்யா.
மிஸ்டர் .கிருஷ்ணா (ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜர் ) சென்னை பிரான்ச்... என தன் எதிரில் இருந்த பெயற்பலகை தாங்கிய கதவில் மெதுவாக இருமுறை தட்டி, “ மே ஐ கம் இன்” என அனுமதி கேட்டு உள் நுழைந்தாள் சூர்யா.
“யெஸ், கம் இன் மிஸ் சூர்யா… என அவளுக்கு அனுமதி வழங்கியவன், ப்ளீஸ் டேக் யுவர் சீட்” எனப் புன்னகை முகமாக வரவேற்றான் கிருஷ்ணா…
“தேங்க்ஸ்” எனக் கூறி, சிறு படபடப்புடன் அவன் கை காட்டிய இருக்கையில் அமர்ந்தாள் சூர்யா…
“என்ன மிஸ் சூர்யா, எல்லா லெவல்களிலும் நாம் செலக்ட் ஆயிட்டோம், பட் இந்த லாஸ்ட் ரவுண்டு இன்டெர்வியூக்கான பர்பஸ் என்னனு யோசிக்கிறீங்களா..? நத்திங் டூ வொரி... உங்க ப்ரொபையில்ல... நீங்க ‘இன்டெர்ஸ்டெட் டூ கோ அப்ராட்’ அப்படின்னு மென்சென் பண்ணி இருந்தீங்க...ஆர் யூ சூர்..? அபௌட் தட்..? அந்த விஷயமா பேச தான்... உங்களை வரச் சொன்னேன் “ என.
“ஆமா சார்… எனக்கு வெளிநாடு போறதுக்கு விருப்பம் தான்” என்றாள் சூர்யா...
“ஹான் சூர்யா, நோ சார் ஜஸ்ட் கால் மீ கிருஷ்ணா” என…
“ஓ...ஓகே… கிருஷ்ணா, எனக்கு வெளிநாடு போறதுல எந்தவித பிரச்சனையும் இல்லை…”என
“அண்ட் ஒன்மோர் திங்க், நீங்க எம்.எஸ்.ஸி. ஹோம் சயின்ஸ், உங்களை எங்க ஹோட்டல் மேனேஜ்மேன்ட் பேஸ்டு கேட்டகிரிக்கு தான் செலக்ட் பண்ணோம். பட் சில ரிசென்ஸ்னால நீங்க எங்க பாஸ் மிஸ்டர் கமலநேத்ரன்... அவருடைய ஹவுஸ் மெயின்டனிங்க் அண்ட் அவரோட அம்மா, ஷீ ஹாஸ் சம் ஹெல்த் இஸ்யூஸ் அவங்களுக்கு கம்பானியன் பிளஸ் டயட் அண்ட் நியூட்ரிஷினியஸ்ட் ஆகவும் இருக்கணும். அண்ட் ஒன் மோர் கண்டிஷன் நீங்க அட்லீஸ்ட் 2 இயர்ஸ் ஒர்க்கிங் காண்ட்ராக்ட் அக்ரீமெண்ட் சைன் பண்ணனும், இஃப் யூ ஆர் இன்டெரெஸ்ட்டேட் நாம மேற்கொண்டு பேசலாம்” என்றான்.
கிருஷ்ணா பேச பேச சூர்யா மனத்தில் பல சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு பக்கம் வெளிநாடு செல்வது நிம்மதியாகவும், ஹோட்டல் அல்லாது முதலாளியின் வீட்டில் வேலை என்றதும் கொஞ்சம் குழப்பமாகவும் இருந்தது. இந்த வேலையினால் புதிதாக எந்த பிரச்சனையும் வரக்கூடாது என அவள் வேண்டி கொண்டாள்.
“வெளிநாட்டுல இல்லாத கம்பானியனா அப்படின்னு நீங்க திங்க் பண்ணலாம்... பட், எங்களோட பாஸ்சோட அம்மாவுக்கு, நல்ல தமிழ் பேசுற தமிழ் கலாச்சாரம் தெரிந்த தமிழ் பொண்ணு தான் வேணுமாம்...”
சூர்யா மனத்திற்குள் இந்தம்மா, ' வேலைக்கு ஆள் எடுக்குறாங்களா...? இல்ல இவங்க வீட்டுக்கு மருமகளுக்கு ஆள் செலக்ட் பண்ணுறாங்களா?‘ என எண்ணினாள்.
“ஹலோ… ஹலோ… சூர்யா, என்ன யோசனை ஆர் யூ ஆல்ரைட்..? நீங்க அங்க போய் ஒர்க் பண்ண இன்ட்ரெஸ்ட் இருக்கா?” கிருஷ்ணா கேள்வியாக சூர்யாவை நோக்கினான்.
“கிருஷ்ணா, ஒரே ஒரு கொஸ்டின், ஏன் இந்த ப்ரோபோசல்க்கு என்னை செலக்ட் பண்ணீங்க அண்ட் ஒய் திஸ் அக்ரீமெண்ட்..?”
“ஏன்னா, நீங்க தான் ஒன்லி கேர்ள் கேண்டிடேட் வெளிநாடு போக இன்ட்ரெஸ்ட்டட் அப்படின்னு ஃபில் பண்ணி இருந்தீங்க அண்ட் நீங்க அன்மேரிட் அங்க போய் ஒர்க்ல செட்டில் ஆன கொஞ்ச நாள்ல நீங்க ஜாப் ரிசைன் பண்ணக்கூடாது இல்லையா ஜஸ்ட் ஃபோர் அவர் சேப்டி... அண்ட் இவ்வளவு டீடெயில்ட் எக்ஸ்பிளனேஷன் எதுக்குன்னா நீங்க ஒரு சிக் லேடிக்கு கம்பானியன் அண்ட் கேர் டேக்கரா இருக்க போறீங்க”.
“ஓகே… கிருஷ்ணா, நான் இந்த ப்ரோபோசல்க்கு அக்ஸப்ட் பண்றேன்…” என சூர்யா சொல்லவும் கிருஷ்ணா அவளை ஆச்சர்யமாக பார்த்தான்…
சூர்யா, அவன் பார்வை உணர்ந்து “என்ன கிருஷ்ணா, அப்படி ஆச்சர்யமா பார்க்கிறீங்க?” என
“இல்ல, வீட்டுல கேக்க வேண்டாமா... சாரி இட்ஸ் நாட் மை ஜாப் ஐ நோ, பட் ... ஜஸ்ட் அ க்யூரியாசிட்டி... டோன்ட் மிஸ்ட்கே மீ… என்றான் கிருஷ்ணா
“வீட்டுல சொல்லாம, அவங்க பர்மிஷன் இல்லாம, நான் அந்த ஆப்ஷன்ன ஃபில் பண்ணிருக்க மாட்டேன் கிருஷ்ணா” என சிறு முறுவலுடன் சூர்யா சொல்ல…
“ஓகே, சூர்யா கொஞ்சம் நேரம் நீங்க வெயிட்டிங் ரூம்ல இருங்க, நான் என் பாஸ்க்கு மெசேஜ் கன்வே பண்ணிட்டு… உங்ககிட்ட மத்த டீடெயில்ஸ் பத்தி டிஸ்கஸ் பண்றேன் ஓகே சீ யூ லேட்டர்” என்றான் புன்னகையுடன்.
“ஓகே தாங்க் யூ கிருஷ்ணா...” என்றவள் விடைபெற
பாரீஸ் மாநகரம்...
ஐரோப்பிய கண்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்த பிரான்ஸ் நாட்டின் தலை நகரமாக விளங்கும் அழகிய பாரீஸ் நகரம். அம்மாநாகரத்தில் பெயர் பெற்ற பல தொழில்களை கொண்டது “கமல் குரூப் ஆப் இண்டஸ்ட்ரிஸ் அண்ட் கம்பெனிஸ்” என்ற நிறுவனம். அந்நிறுவனத்தின், ஒரே வாரிசு “திரு.கமல நேத்ரன்...” வெளிநாட்டு வாழ் இந்தியன்.
பல இந்தியர்களை போல, இவன் தாத்தா திரு.கமல நாதன், தொழில் நிமித்தமாக பாரீஸ் நகரத்தில் குடியேறினார். காலப்போக்கில் தன் குடும்பம் மற்றும் தொழிலை இங்கேயே அமைத்து கொண்டுவிட்டார். இவர் தொடங்கிய “கமல் ஃபுட் ப்ரோடக்ட்ஸ்” என்று சிறிய அளவில் ஆரம்பித்த தொழில். இன்று உலகளவில் உயர்ந்ததிற்கு காரணம் கமல நேத்ரன் என்றால் அது மிகையில்லை. இவன் தாத்தா, தொடங்கியதை இவனின் தந்தை வளர்த்தார், இவன் பலமடங்காக பெருக்கினான்.
காலை 7 மணி “கமல நாதன் இல்லம்” அது இல்லம் என சொல்ல முடியாது... அது ஒரு அரண்மனை போல் பிரம்மாண்டமாய் காட்சியளித்தது. தன் அறைக்கு அடுத்து உள்ள பால்கனியில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து தன் தொடைகளில் தன் கரங்களினால் முட்டுக் குடுத்து தன் தலையை தாங்கி கொண்டு தீவிர யோசனையில் இருந்தான். இந்த உலகம் போற்றும் , “தி கிரேட் பிசினஸ் ஐகான் அண்ட் வேர்ல்ட் பேமஸ் யங் பிசினஸ் மேன்” பல பெண்களின் கனவு நாயகன். மிஸ்டர். கமல நேத்ரன்.
திரு.சத்யமூர்த்தி மற்றும் பிரேமா அவர்களின் ஒரே மகன் சத்யா, அவர்கள் தன் தந்தையின் பெயரை தன் மகனுக்கு வைக்க வேண்டும் என்று “கமல நேத்ரன்” என பெயரிட்டார். கமல நேத்ரன், வயது 30 சராசரி ஆண்களை விட உயரம் , 6 அடிக்கு மேல், திராவிடன் என்றாலும் கருமை இல்லாத பாலுடன் தேன் கலந்த நிறம். திருத்தமான முகம், வசீகரிக்கும் கண்கள்… பொதுவாக பெண்களுக்கு தான் வசீகரிக்கும் கண்கள் உண்டு. ஆனால் இவன் கண்களினால் வசீகரிக்கபட்ட கன்னியர் பலர். கூர் நாசி, நிகோடின் தீண்டாத இதழ்கள், அவனின் உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு, கருமையான கேசம், மொத்தத்தில் இவனின் அழகிற்காகவும், பணத்திற்காகவும் இவன் பின்னால் சுற்றும் பெண்கள் பலர் உண்டு.
இவன் பெண்களை அறியாதவனும் இல்லை, அதே போல் பெண்கள் பின்னால் சுற்றுபவனும் அல்ல...
இப்படி உலகில் உள்ள அனைத்தையும் தன் கண்ணசைவில் நடத்தி காட்டும் வல்லமை கொண்டவன். ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருக்கும் காரணம் தான் என்ன..?
அவன் சிந்தனையை கலைப்பது போல் ஒலித்து கொண்டிருந்தது அவனின் அலைப்பேசி. அதில் ஒளிர்ந்த இந்திய தொலைப்பேசி எண்களை கண்டவன். ஏதோ அந்த கடவுளை கண்ட பக்தனை போல பரபரப்பு அவனை ஆட்கொண்டது. நொடியும் தாமதிக்காது அலைபேசியினை உயிர்ப்பித்து காதில் வைத்தான் கமல். தொழில் வட்டாரத்தில் அனைவருக்கும் அறிந்த தெரிந்த பெயர்.
“இட்’ஸ் இன்டெர்வியூ பினிஷ்ட்… கிருஷ்ணா?”.
........
“இஃப் ஷீ ஹாட் நோ கொரிஸ் அபௌட் ஹேர் ஜாப் டிஃபரெஸியேஷன்…?”
........
“ஓகே பிரிப்பர் ஆல் பேப்பர்ஸ் அண்ட் பினிஷ் ஆல் போர்மலிட்டிஸ் ஷீ வில் பி ஹியர் வித் இன் 10 டேஸ் மேக் அரேன்ஜ்மென்டஸ் ஆஸ் லைக் தட்
அண்ட் மெயில் ஹேர் போட்டோ அண்ட் ப்ரொபைல் டூ மீ”.
(இந்தியாவிற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் 4மணி 30 நிமிடங்கள் வித்தியாசப்படும்... நாம் முன்னோக்கி அவர்கள் பின்னோக்கி எ.க... அவர்களுக்கு (பிரான்சில்) காலை 7 மணியென்றால்.. நமக்கு (இந்தியாவில்) முற்பகல் 11.30 மணியாகும்).
பேசி முடித்தவன், தன் தலை முடியை அழுந்த கோதிக் கொண்டான்.
“மாம், எல்லாம் உங்களுக்காக தான் நீங்களாவது எனக்கு வேணும் மாம், ப்ளீஸ் கம் பேக் டூ மீ”
அவள் உயிரானவன்…