All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தனசுதாவின் "என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்" ,,💞💞💞💕💕💕- கதை திரி Rerun

Status
Not open for further replies.

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

"என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்"..... கதையோட அத்தியாயம் 15 & 16 போட்டுடேன்... டியர்ஸ் rerun story தான்...


கதையை படிக்கிறீங்களா... புடிச்சி இருக்க... கூடவே
உங்க நிறை குறைகளையும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க...

[/URL][/URL]


தனசுதா...
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 17



ஒரு நிமிடம் சூர்யாவிற்கு என்ன நிகழ்ந்ததென்று புரியவில்லை. சற்று தெளிவிற்கு வந்த பின் அவள் உணர்ந்தது கதகதப்பான தேக சூட்டையும்... அவனின் இதயதுடிப்பையும் (என்னடா அவன் 6அடி... இவ 5அடி எப்படின்னு யோசிக்கிறீங்களா உபயம் அவளின் ஹீல்ஸ் செப்பல் ஹி..ஹி)



அப்பெண்ணை பின் தொடர்ந்தவன் அவள் தடுமாறி விழுந்ததையும், ஒரு ஆண் அவளை தூக்கிவிட நெருங்குவதையும் கண்டவுடன் கூட்டத்தினுள் நுழைந்து நழுவ பார்த்தவனை அறிந்து கொண்ட ஹரிஷ், தங்களின் பாதுகாப்பிற்காக வந்தவர்களிடம் கண்களினால் செய்கை செய்ய அவர்களும் அவனை பின்தொடர்ந்தனர்.



முதலில் தான் இழுப்பட்ட பதட்டத்திலும் பயத்திலும் நேத்ரனிடம் ஒன்றியவள், அந்நிய ஆண்மகனின் அணைப்பில் இருக்கின்றோம் என்ற எண்ணம் தோன்றாமல் அவனின் பரந்து விரிந்த மார்பின் திண்மையிலும், அவனின் பிரத்யேக வாசத்திலும், மெல்ல மெல்ல... நேத்ரனின் அணைப்பில் நெகிழ தொடங்கினாள் சூர்யா.



சூர்யாவின் நிலை இப்படி இருக்க அவளின் ஒற்றை பார்வைக்கும், சிறுபுன்னகைக்கும் மனம் தடுமாறும் நேத்ரன், அவளை பாதுகாக்கும் பொருட்டே அணைத்திருந்தாலும் அவளின் பெண்மையின் மென்மையிலும், அவள் மேனியின் வாசத்திலும், கூந்தலின் பட்டுப்போன்ற ஸ்பரிசத்திலும், சூர்யாவின் நெருக்கம் தந்த தைரியத்திலும் அவனின் கைகள் அவளை ஆக்டோபஸாய் தன்னுள் சுருட்டிக் கொண்டன.

காவலனாக இருந்தவன் காதல் கள்வனாக மாறி தன்னிலை மறந்து இன்னும் என்ன செய்திருப்பானோ ஒரு பெண்ணின் அலறல் குரல் இருவரையும் நிகழ்விற்கு கொண்டுவந்தது.



கீழே விழுந்தவள் எழும்ப முயற்சிக்க அவள் கால் மடங்கி விழுந்ததினால் வலிக்க, கையில் சிராய்த்து லேசாக ரத்தம் வர வலியில் அவள், “ஸ்... ஆ... அம்மாஆஆஆஆ...” என கத்த,



அந்த குரலில் முற்றும் தன் மாயவலையில் இருந்து விடுப்பட்டாள் சூர்யா.



தன் உயிரின் மெய் தீண்டிய பரவசத்தில் தன்னை மறந்து நேத்ரனும், தனக்கே உரிய இடத்துக்கு வந்து சேர்ந்தது போல் உணர்ந்து நேத்ரனின் அணைப்பில் தன்னிலை மறந்து சூர்யாவும் இருக்க அவர்களின் இணக்க நிலையை ஒருவன் படம் பிடித்ததை இருவரும் அறியவில்லை.



புகைப்படம் எடுத்தவன் வேறு யாரும் இல்லை. இவர்களை பின்தொடர்ந்து வருபவன் தான்.

இதனை அறிந்த ஹரிஷும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. காரணம் சூர்யாவின் முகம் தெளிவாக தெரியவில்லை. அதைவிட இது கமலநேத்ரன் என சத்தியம் செய்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். ஆகவே இப்புகைப்படம் இருவரையும் எந்த விதத்திலும் பாதிக்காது என நினைத்து அவனின் நோக்கம் என்ன என அறிய காத்திருந்தான்.



“ஸ்...ஆ...அம்மாஆஆஆஆ...” என அந்த குரலில் முற்றும் தன் மாயவலையில் இருந்து விடுப்பட்ட சூர்யா, அப்பெண்ணின் குரல் தனக்கு பரீட்சையமானது போல் இருக்க அவளை காண வேண்டி நேத்ரனிடம் இருந்து விலக முயற்சிக்க.



இவ்வளவு நேரம் தன் அணைப்பில் எந்த வித மறுப்புமின்றி இருந்தவள்… ‘இப்ப ஏன் விலகுறா’ என மனத்திற்குள் எண்ணி கொண்டு சூர்யா முகம் பார்க்க, (டேய், உனக்கே இது ஓவரா இல்ல என்னமோ ஹனிமூன் கொண்டாட வந்து பொண்டாட்டி கோச்சிக்கிட்டு விலகுற மாதிரி சீன் போடுற).

அவளின் முகத்தில் அருவெறுப்போ, பிடித்தமின்மை போன்ற எந்த எதிர்மறை உணர்வும் இல்லாது... வெட்கத்தில் கன்னங்கள் செம்மை பூசிக்கொண்டு, இதழ்களில் மென்னகையுடன், விழிகளில் கிறக்கமும் மயக்கமும் போட்டிப்போட சொக்கி இருந்தவளை பார்த்தவனின் உதடுகளில் புன்னகை பூக்க ‘உனக்கு என் மேல விருப்பம் இருக்கு டாலி, அது உனக்கு புரியலியா..? இல்ல உன்னோட பாஸ்ட்ல கடந்து போன கசப்பான நிகழ்ச்சிகளினால் என்னை நெருங்க பயப்படுறியான்னு எனக்கு தெரியலை…? ஆனா உன்னோட வாயாலையே “ ஐ லவ் யூ” சொல்ல வைக்கலை என் பெயர் கமலநேத்ரன் இல்லடி என் செல்ல தர்பூஸ்’ என மனத்திற்குள் கூறிக் கொண்டவன்.



அவளை முழுவதும் தன் அணைப்பில் இருந்து விலக்காமல் ஒருபக்கமாக தன் இடது தோள்வளைவிற்குள் இருத்தி கொண்டு “என்ன” என்பது தன் புருவத்தினை ஏற்றி இறக்க.



ஏற்கனவே அவனின் அணைப்பில் வெகுநேரம் இருந்ததினால் அவன் முகம் காண முடியாமல் நாணம் தடுக்க மேலும் அவனின் இச்செய்கையில் மங்கையவள் முகம் குங்குமமாக சிவந்து போனது.



அதற்குள் ஹரிஷ் தனியாக எழமுடியாமல் கஷ்டப்பட்ட அப்பெண்ணை அணைவாக பற்றி அங்கிருந்த திண்டு போன்ற அமைப்பில் அமரவைத்து அவளுக்கு பருக நீர் குடுத்தான்.



தண்ணீர் அருந்திவிட்டு “ தேங்க்ஸ்” என்றவளின் விழிகள் அவ்விடத்தினை பலமுறை சுற்றி சுற்றி பார்த்தன. இவள் அந்த வெள்ளையனை தான் தேடுகின்றாள் என ஹரிஷின் துப்பறியும் மூளை கூற, அவள் வலி தாங்காமல் தமிழில் கத்தி இருந்தாலும் அவளிடம் ஆங்கிலத்திலேயே தன் உரையாடலை தொடங்கினான்.



கருமைக்கும் வெள்ளைக்கும் இடைப்பட்ட நிறம், சராசரி உயரம், களையான முகம், முதுகுவரை படரும் அடர்ந்த கருங்கூந்தல், அதிகபடியான சதைப்பற்றில்லா தேகம், அழகிய கண்கள், சிவந்த அதரங்கள் என வியக்க வைக்கும் பேரழகி இல்லை என்றாலும் மற்றவரை திரும்பி பார்க்க வைக்கும் அழகி.



பரவாயில்லை பொண்ணு அழகா தான் இருக்கா என்ன இருந்தாலும் நம்ம ஊர் பொண்ணுங்க அழகே தனியென அந்நேரத்திலும் ஜொள்ளியது அவனின் மனம் (தம்பி, இது மட்டும் அவளுக்கு(ஜெயஸ்ரீ) தெரிஞ்சுது பார்க்குற உன்ற கண்ண புடுங்கி காக்கைக்கு போட்டுடுவா பயப்புள்ள அமைதியா இருக்கேன்னு தப்பு கணக்கு போடாதே). இவளுக்கும் அந்த வெள்ளைக்காரனுக்கும் என்ன சம்பந்தம் என அப்பெண்ணை தன் கூர் விழிகளால் அளவெடுக்க அதற்கு அவன் கண்களில் அணிந்திருந்த சன்கிளாஸ் துணைபுரிந்தது. ( முன்னபின்ன தெரியாத பொண்ணை குறுகுறுன்னு பார்த்தா கன்னம் வீங்கறது உறுதி என்னதான் உதவி செஞ்சாலும்)



“ யாரை தேடுறீங்க உங்க கூட யாராவது வந்தாங்களா மிஸ்...” என்றான் ஹரிஷ்.



“ இ...இல்ல... ந... நான்... தனியாத்தான் வந்தேன். என் பெயர் ஜெயஸ்ரீ” என்றாள்.



அந்த குரலிலும் பெயரிலும்... சூர்யாவின் கவனம் அவர்கள் புறம் திரும்ப அவளின் பார்வை சென்ற திசை நோக்கிய நேத்ரன், ஹரிஷ் அப்பெண்ணிடம் பேசி கொண்டிருப்பதை கண்டு சூர்யாவோடு அவர்கள் அருகில் செல்ல அப்பொழுதும் நேத்ரன் சூர்யாவினை தன் கைவளைவிற்குள்ளே தான் வைத்து கொண்டான். ( அம்மா சொல்ற பேச்சை தட்டாத புள்ளையாம்... அவளை தனியா விடாம பார்த்துக்குறாராம். உன் கடமையுணர்ச்சி பார்த்து எனக்கு புல்லரிக்கிது).



அவர்களின் அருகில் சென்றதும் அப்பெண்ணின் முகம் பார்க்க தன் சத்தோஷத்தினை அடக்க முடியாமல் “ஜெய்” என கூவிக் கொண்டே அவளை கட்டிக் கொண்டாள் சூர்யா. தன் தோழியினை கண்ட மகிழ்ச்சியில்.



ஆம்... சூர்யாவும், ஜெயஸ்ரீயும் கல்லூரி தோழிகள். UG , PG ஒன்றாக படித்தவர்கள்.



ஜெயஸ்ரீ, PG (M.Sc.ஹோம் சயின்ஸ் ) இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கும் பொழுது அவர்களின் உறவினர்களின் திருமணத்திற்கு வந்த அவளுடைய பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிட, அவர்கள் வசதியாக வாழ்ந்தார்கள் தான் ஆனால் பெரிதாக எந்த சேமிப்பும் இல்லை. அவர்கள் குடியிருந்த வீடு மட்டுமே அவர்களின் சொத்து. அந்த வீட்டில் அன்னை தந்தை இல்லாது, அவளால் தனியாக இருக்க முடியவில்லை. ஆதலால், வீட்டை வாடகைக்கு விட்டுட்டு மாடியில் உள்ள அறையில் தங்கிக் கொண்டு மீதம் உள்ள நாட்களை கடத்தி தன் படிப்பையும் முடித்தாள். சூர்யாவிற்கும் ஜெயஸ்ரீக்கும் சென்னையில் ஆனால் வெவ்வேறு ஹோட்டல்களில் வேலை கிடைக்க சூர்யாவின் திருமண ஏற்பாடுகள், விவேக்கினால் ஏற்பட்ட பிரச்சனை என அவள் வாழ்வில் நடந்த குளறுபடிகளால் அவள் யாரோடும் நட்பு பாராட்டவில்லை. அப்படியே இருவரின் நட்பும் தொடர்பில்லாமல் போக பல மாதங்கள் கழித்து அதுவும் அந்நியத் தேசத்தில் தன் நட்பை கண்டதில் இருவரின் உணர்வுகளையும் விவரிக்க முடியா வண்ணம் இருந்தது அவர்களின் மனநிலை.



எப்பொழுதும் வாய் ஓயாமல் பேசுபவள், அமைதியாக இருப்பதை கண்டு அவளை தன் அணைப்பில் இருந்து விலக்கி முகம் பார்க்க கண்களில் கண்ணீர் மடைத் திறந்த வெள்ளமாக பெறுக அவளின் கண்ணீர் கண்ட சூர்யா, “என்னாச்சு ஜெய், விழுந்தது ரொம்ப வலிக்குதா.?” என கேட்க.



இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த நேத்ரனும், ஹரிஷும் பார்வையினை சுழற்றி ஒருமுறை தங்களை சுற்றி காண.



ஹரிஷ், மெதுவாக நேத்ரனின் காதுகளில் சூர்யாவையும் அவனையும் புகைப்படம் எடுத்ததை பற்றி கூற... நேத்ரனின் முகம் ஒரு நொடி இறுகினாலும் மறுநொடி அவனின் முகத்தில் விஷம புன்னகை தோன்றியது.

இதனை கண்ட ஹரிஷ், “என்ன…?” என வினவ பிறகு சொல்வதாக சொல்லிவிட்டு அந்த உளவாளியிடம் இருந்து அந்த கைபேசியை கைப்பற்றும் படி கூற ஹரிஷ் , தன் கட்டை விரல் உயர்த்தி சரி என்பது போல் செய்கை செய்தான்.



“ குண்டுஸ்... ஸ்ஸ்ஸ்ஸ்...” என சூர்யாவை மீண்டும் கட்டிக் கொண்டாள் ஜெயஸ்ரீ. ( நேத்ரனுக்கோ காதில் புகை வராத குறை தான்). “ உன்னை இங்க பார்த்தது எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை குண்டுஸ், அவ்வளவு சந்தோஷமா இருக்கு. ஆமா நீ எப்ப பாரீஸ் வந்த..? வீட்டுல அம்மா, அப்பா, ஜீவா எல்லாரும் எப்படி இருக்காங்க…? உன்னை பார்த்ததும் எனக்கு அடிபட்ட வலியெல்லாம் கூட காணாம போயிடுச்சு… இட்ஸ் கான்… போயிந்தி…” என தன் உள்ளத்தில் எழும் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துவது என தெரியாமல் சுற்றுப்புறம் மறந்து தோன்றியது எல்லாம் பேசிக் கொண்டிருந்தாள் ஜெயஸ்ரீ.



ஜெயஸ்ரீ கூறிய குண்டுஸ்சை சூர்யா, முதலில் கண்டுக் கொள்ளவில்லை.(ஏனெனில் எப்பொழுதும் ஜெயஸ்ரீ அவளை பெயர் சொல்லி அழைத்ததைவிட குண்டுஸ்... என அழைப்பதே அதிகம். அதற்கு சூர்யாவிடம் வாங்கிக் கட்டி கொள்வது தனிக்கதை). இப்பொழுது நேத்ரனும், ஹரிஷும் உடன் இருக்க, ‘எருமை, எப்படி கூப்பிடுது பாரு இவங்க ரெண்டு பேர் முன்னாடியும் என் மானம் போகுது’ என மனத்திற்குள் ஜெய்யை வறுத்தெடுக்க.



ஜெயஸ்ரீ, சூர்யாவை குண்டுஸ் என சொல்வதை கேட்ட நேத்ரன் ‘என் டாலி அப்படி ஒண்ணும் குண்டு இல்ல... கொஞ்சமே கொஞ்சம் பூசினா போல இருக்கா எப்படி இருந்தாலும் என் செல்லம் சோஓஓஓஓ கியூட்... தான்' என ஜொள்ளிக்கொண்டிருக்க (உனக்கு, இந்த ரணக்கலத்திலயும் ஒரு குதூகலம்).



ஹரிஷோ செம்ம கடுப்பில் இருந்தான் ‘இவ கொத்தவரங்கா மாதிரி இருந்திட்டு, என் தங்கச்சியை போய் குண்டுஸ்… குண்டுஸ்னு கூப்பிடுறா’ என மனத்திற்குள் ஜெயஸ்ரீயை தாளித்து கொண்டிருந்தான்.



மதிய வேலை கடந்து கொண்டிருப்பதை உணர்ந்த ஹரிஷ், நேத்ரனை காண அவனோ சூர்யாவை பார்த்துக் கொண்டிருக்க ‘இவனை எதிர்பார்த்தா இன்னைக்கு நம்ம சோத்துல மண்ணுதான்...’ என மனத்திற்குள் சொல்லிக்கொண்டவன் சூர்யாவிடம் “சூர்யாம்மா, இவங்க உனக்கு…” என அவன் மீதியை சொல்லும் முன், “ஆமாண்ணா, இவ என்னோட பிரெண்ட் ஜெயஸ்ரீ, சென்னைல என்னோட ஒண்ணா படிச்சவ” மேற்கொண்டு இன்னும் பேச வாய் திறந்தவளை.



“ சூர்யாம்மா எல்லாம் இங்கேயே இப்படியே பேசணுமா…? வாங்க நம்ம ரூம்க்கு போய் பேசலாம்” என்றான் ஹரிஷ் .



சூர்யாவும், “ஆமாம் வா ஜெய் போகலாம்...” என அழைக்க, தயக்கமாய் பார்த்தவளை, “ஜெய் நீ தனியா தானே வந்திருக்க…? இந்த நியூ இயர் நாம சேர்ந்து கொண்டாடலாம் டா வா” என சூர்யா மெதுவாக காதில் சொல்ல.



அந்நேரம் ஹரிஷின் அலைபேசியில் மெசேஜ் வர,

அது என்னவென பார்க்க அந்த வெள்ளையனை தொடர்ந்து சென்றவர்கள் அவனை பிடித்து விட்டதாகவும் அவன் குடித்திருப்பதாகவும் அவனும் ஜெய்யும் ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள் என்றும் அவளை தான் காதலிப்பதாகவும் இன்று அவளிடம் தன் காதலை சொல்ல வந்ததாக கூறியதாகவும். அவனை என்ன செய்வது…? என கேட்டு செய்தி அனுப்பி இருக்க.



அதனை படித்தவன் ‘இவளை பார்த்தா லவ் சொல்ல வந்தவனை பார்த்து பயந்துபோற அளவுக்கு கத்துக்குட்டியா தெரியலை... இவகிட்ட லவ் சொல்றவன் தான் பயப்படணும்’ என மனத்திற்குள் நினைத்து கொண்டான். தன் எதிர்காலம் பற்றி அறியாமல்.



இனிமே அந்த பொண்ணுகிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணுறேன். அது பண்றேன் இது பண்றேன் அப்படின்னு அவ பின்னாடி சுத்தக்கூடாது என அவனுக்கு (வெள்ளையனுக்கு) கொஞ்சம் புரியற மாதிரி புத்தி சொல்லி ( லைட்டா ரெண்டு தட்டு) விட்டு விடும்படி அவர்களுக்கு பதில் அனுப்பினான்.



பெரும் தயக்கத்திற்கு பிறகே ஜெய் சூர்யாவிடம் “கிளம்பலாம்…” என சொல்ல… சூர்யா ஜெயஸ்ரீயிடம் “நடக்க முடியுமா ஜெய்…?” என கேட்க…



எழ முயன்றவள் மீண்டும் அமர்ந்துவிட சூர்யா, “என்ன ஜெய், கால் ரொம்ப வலிக்குதா...?” என கேட்டுக் கொண்டே அவளின் கால்களை பார்த்தவள்.

“நல்லவேளை கால் வீங்கவில்லை... சாதாரண சதை பிசகு தான்” என கூறி, “ஜெய், கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி வண்டி வரைக்கும் நடக்க முடியுமா..? பாருடி, இல்லனா நான் போய் கார்ல இருக்குற பர்ஸ்ட் எயிட் கிட் எடுத்துகிட்டு வரேன்” என்றாள்.



இவர்கள் இருவரும் பேசுவதை கவனிந்த ஹரிஷ் சூர்யாவிடம், “ஒரு நிமிஷம் இரும்மா...” என கூறி ஜெயஸ்ரீ காலினை பரிசோதிப்பதற்க்காக அவளின் காலினை பிடிக்க வலியையும் மீறி ஒரு சிலிர்ப்பை ஜெயஸ்ரீயால் உணர முடிந்த்து.



இவனோ ‘என் நேரம்... இவ காலயெல்லாம் பிடிக்கணும்னு இருக்கு’ என மனத்திற்குள் புலம்பிக்கொண்டே தன் ஓவர்கோட்டில் இருந்து ஒரு சிறு பௌச்சை (pouch) எடுக்க அதனினுள் ஒரு பர்ஸ்ட் எயிட் பாக்ஸே குடியிருத்த்து. அந்த பௌச்சில் இருந்து வலி நிவாரணி கிரீம் எடுத்து அவளின் கணுக்காலில் இருந்து பாதம் வரை நீவி விட ஆரம்பித்தான்.



சிறிது நேரம் நீவி விட்டவன்... ஜெயஸ்ரீயிடம், “இப்ப கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோங்க” என கூறி பாதங்களை அழுந்த பற்றி ஒருமுறை சுழற்றி விரலை பற்றி இழுக்க “களுக்” என சத்தம் கேட்க. அதில் திருப்தியுற்றவனாய் மீண்டும் கணுக்காலில் இருந்து பாதம் வரை நீவி விட்டு விரல்களில் சொடக்கு எடுத்துவிட்டான்.



“ம்... முடிஞ்சது இப்போ எழுந்திரிக்க முடியுத பாருங்க…? இன்னும் வலி இருக்கா…?” என கேட்டுக் கொண்டே… அவளின் கையில் உள்ள காயத்திற்கும் மருந்திட்டு அவனே அவளின் கரம் பற்றி எழுப்பி விட்டான்…



நேத்ரனோ ‘என்னடா நடக்குது…?’ என பார்த்து கொண்டிருக்க.



ஜெயஸ்ரீயை சூர்யா மெதுவாக நடத்தி செல்ல… ஹரிஷின் அருகில் வந்த நேத்ரன் அவனின் கைகுட்டையினை எடுத்து நீட்ட “எதற்கு…?” என புரியாமல் பார்த்தவனை “ரொம்ப வழியுது…” துடைச்சிக்க என்று கிண்டலாக கூறனான் நேத்ரன்.



அதற்கு “போடா…” என கூறிய ஹரிஷ், அந்த உளவாளி எங்கே என பார்க்க அவனும் இவர்களை தொடர, நேத்ரனை பெண்களோடு செல்ல சொல்லியவன் சற்று பின் தங்க அந்த உளவாளியோ சூர்யாவினையே குறிவைத்து சென்றதால். ஹரிஷ் பின்தங்கியதை அவன் பெரிதாக கண்டு கொள்ளாமல். தன் அலைபேசியினை பார்த்து கொண்டே நடக்க.



பின்தங்கிய ஹரிஷ் சற்று வேகமாக படிகளில் இறங்கியவன். அவனை தெரியாமல் இடிப்பது போல் இடித்து விட… அவன் கைகளில் இருந்த அலைபேசி தவறி விழுந்த்து. இதற்காகவே காத்திருந்தது போல் இவர்களின் பாதுகாவலர்களில் ஒருவன் விரைந்து வந்து அலைபேசியினை கைபற்றி இருந்தான்.



ஹரிஷ் அந்த உளவாளியிடம் மன்னிப்பு கூறிவிட்டு தங்களின் வண்டி நோக்கி சென்று கொண்டிருந்தவனிடம் வந்த பாதுகாவலனோ அவனை கடந்து செல்பவனை போல் அலைபேசியினை ஹரிஷிடம் ஒப்படைத்தான்.

ஒருவழியாக அனைவரும் ஹோட்டலுக்கு திரும்ப,

முதல் ஆளாக அறைக்குள் நுழைந்த நேத்ரனிடம் பிரேமா “சூர்யா எங்கே…?” என கேட்க அதற்குள் அறையில் நுழைந்த சூர்யா பிரேமாவினை “அத்தம்மா…” என கட்டிக்கொண்டாள். அவரும், “என்னடா, எல்லாம் நல்லா சுத்தி பார்த்தீங்களா..? உன்னை தனியா விட்டுட்டு இவனுங்க அரட்டை அடிச்சிக்கிட்டு வரலையே…? என கேட்க.

இதனை கேட்டுக் கொண்டு வந்த ஹரிஸோ, அதெல்லாம் தனியா விடலை ( நல்ல ஹட்ச் டாக் மாதிரி உங்க பையன் நல்ல பாலோ பண்ணான் என நினைத்து கொண்டான்).



அவள் உயிரானவன்...





அத்தியாயம் 18



அப்பொழுது அங்கு புதிதாக ஒரு பெண் வரவே அதுவும் கைகளில் அடிபட்டு காணவே பிரேமா ஹரிஷிடம்… “ யார்…?” என கேட்க.



ஹரிஷோ “அது எப்படி என்னை பார்த்து கேட்பீங்க…? அது எப்படி நீங்க என்ன பார்த்து கேட்கலாம்…?” என கரகாட்டகாரன் கவுண்டர் மணி ரெஞ்சுக்கு வசனம் பேச, இதனை பார்த்து நேத்ரன் வாய்விட்டு சிரிக்க… சூர்யா ஹரிஷ் சொல்லிய பாவத்தில் வந்த சிரிப்பை அடக்க முடியாமல் வாய்மூடி சிரிக்க ஜெய்ஸ்ரீயோ ‘இந்த லூஸு எதுக்கு இப்படி சீன் போடுது’ என ஹரிஷை மனத்திற்குள் தாளித்து கொண்டிருந்தாள்.

ஹரிஷ் பேசியதில் கடுப்புற்ற பிரேமா, அவனை அருகே அழைத்து ரெண்டு சாத்த இதனை பார்த்த சூர்யா “ ஐய்யோ அத்தம்மா, பாவம் அண்ணா...” என்றவள் “இவ என் பிரெண்ட் பேரு ஜெயஸ்ரீ…” என அறிமுகம் செய்து வைக்க, ஜெய் ஸ்ரீயோ எழ முடியாமல் எழுந்து வணக்கம் சொல்ல.



“பசிலிக்கா… போய்ட்டு கீழ வரும் பொழுது இவளை பார்த்தோம் கால் தடுக்கி கீழ விழுந்திட்டா, பெருசா எந்த அடியும் இல்ல சின்ன சின்ன சிராய்ப்பு அப்புறம் கால் கொஞ்சம் பிசகிடுச்சி. இவளுக்கு யாரும் இல்ல தனியா கஷ்டப்படுவா அதான் நம்ம கூட இன்னைக்கு இருக்கட்டும்ன்னு அழைச்சிக்கிட்டு வந்தேன்…” என கூற.



பிரேமாவோ ஜெயஸ்ரீயிடம், “ ரொம்ப வலி இருக்கா..?” என கேட்க, அதற்கு ஜெய் “இல்லம்மா, இப்ப வலி பரவாயில்லை” என கூறியவளிடம், “அப்பா, அம்மா எல்லாம் சென்னைல இருக்காங்களா.?” என கேட்க.



சூர்யா கவலையாய் அவளின் முகம் பார்க்க அவளோ கண்கள் கலங்க இதழ்களில் வெற்று புன்னகையுடன், “ இல்லம்மா, அவங்க ரெண்டு பேரும் சொர்க்கத்துக்கு ஷிப்ட் ஆயிட்டாங்க” என சொல்ல.



ஒரு நிமிடம் அவள் கூறியது புரியாமல் பார்த்தவர் புரிந்ததும், “ சா…சாரிம்மா…” என வருத்தத்துடன் பிரேமா கூற.



“ ஐய்யோ..! நீங்க ஏம்மா, சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு அம்மா அப்பா இறந்து ஒரு வருஷம் மேல ஓடிபோயிடுச்சி. நான் சென்னைல ஒர்க் பண்ண இடத்துல இங்க அனுப்பி வச்சாங்க. இங்க வந்து ஆறு மாசம் ஆகபோகுது. எல்லாம் இந்த குண்டுஸ் பண்ண வேலை சொல்றதை சரியா சொல்லலை அவளை மாதிரியே எல்லாம் அரைகுறை” என கூறி கண்சிமிட்டி சிரிக்க.



“ யாருடி…?அரைகுறை நீதாண்டி அரைகுறை எருமை, பன்னி” என சொல்லி அவளை சரமாரியாக அடிக்க.



இவர்கள் இருவரும் சண்டைபோட்டு கொண்டிருக்க நேத்ரனும், ஹரிஷும் பிரேமாவிடம் சொல்லிக்கொண்டு ரெபிரேஷ் ஆக தங்கள் அறைக்கு சென்றார்கள்.



செல்லும் பொழுது அமைதியாக வந்த ஹரிஷை, நேத்ரன் “ ஏன்டா,ஒருமாதிரி இருக்க…?” என கேட்க.



“ ஒண்ணுமில்ல டா, அந்த பொண்ணு ஸ்ரீ... ஜெயஸ்ரீ பாவம் இல்லடா, அம்மா, அப்பா யாருமே இல்லாம இருக்குறது எவ்வளவு கொடுமையான விஷயம்ன்னு என்னைவிட யாருக்கும் தெரியாது கமல், எனக்கு நீ, அப்பா, அம்மா எல்லாம் இருந்ததுனால பெருசா எதுவும் தெரியலை. பட் அது சின்ன பொண்ணு… பொண்ணுங்க எப்போவுமே யாரையாவது சார்ந்து தான் இருப்பாங்கன்னு சொல்லுவாங்க. அது எந்தளவுக்கு உண்மைன்னு எனக்கு தெரியாது. ஆனா வீட்டுல ஒரு பெண் அவ யாரா வேணா இருக்கலாம் மே பி அம்மா, மனைவி, சகோதரி, மகள் அப்படி ஒரு ஜீவன் அந்த வீட்ல இல்லைன்னா அந்த வீட்ல உயிர்ப்பே இருக்காது கமல், இது நான் என் அனுபவத்தில் உணர்ந்த விஷயம். அவங்கதான் நம்மோட நம்மளை இயக்கம் சக்தி. இதை பல பேர் புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க” என்ற ஹரிஷின் குரல் கரகரப்புடன் ஒலிக்க. தன் நண்பனின் துயரம் போக்க தன்னோடு அணைத்து கொண்டான் நேத்ரன்.



“ அந்த ப்ளடி வைட் டாக், இன்னைக்கு அவளை ஃபாலோ பண்ணவே தான் அவ விழுந்து அடிப்பட்டுகிட்டா, நாம அங்க அவளை பார்த்தோம். இங்க அழைச்சிக்கிட்டு வந்துட்டோம். இல்லனா அவளோட நிலைமை நினைக்கவே பதறுதுடா” என்றவனை தோள் தட்டி ஆறுதல் படுத்தி, “நீ இப்படியே பேசிக்கிட்டிருந்தா அங்க சாப்பாடு காலியாயிடும்டா” என்ற நேத்ரனை வெட்டவா? குத்தவா? என பார்க்க.



“ நான், எவ்வளவு பீல் பண்ணி பேசிக்கிட்டு இருக்கேன் போடா “ என்ற ஹரிஷை, பார்த்து கண்சிமிட்டி சிரித்த நேத்ரன்.



“நீயெல்லாம் அதுக்கு செட் ஆகமாட்ட கோவப்பட்டு, சென்டியா பேசுறதுக்கெல்லாம் ஒரு லுக் வேணும் அதெல்லாம் இந்த மூஞ்சிக்கு செட் ஆகாது…” என கூறியவனின் வயிற்றில் குத்துவது போல் செய்த ஹரிஷ் அவனை கட்டி கொண்டவன். “ நிஜமாவே ஐ யம் ப்ளஸ்ட் ...” என்ற ஹரிஷின் குரல் நெகிழ்திருந்தது.



“ மறந்துட்டேன் பாரு… இந்தா டா அவனோட மொபைல் ஆமா இதை வச்சி என்னடா பண்ண போற..? “என்றவனை பார்த்து “வெய்ட் பண்ணு…என செய்கை செய்த நேத்ரன்.



அந்த அலைபேசியை ஆராய தொடங்கினான். அதில் நிறைய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இருந்தன. அதில் இருந்து இவர்கள் இருவரின் புகைப்படங்களை மட்டும் தன் அலைபேசிக்கு மாற்றியவன், அந்த உளவாளியின் அலைபேசியில் உள்ள அணைத்து தகவல்களையும் அழித்துவிட்டான். அவன் யாருடன் எல்லாம் தொடர்பு கொண்டு தகவல் அனுப்பியுள்ளான் என பார்க்க.



அந்த உளவாளி விவேக்கின் எண்ணிற்கு சூர்யா, நேத்ரன் இருவரின் படங்களை அனுப்பியது கண்டு நேத்ரனின் உதடுகளில் விஷம புன்னகை மிளிர அதனை கண்ட ஹரிஷ், என்னவென்று வினவ அவனிடம் அலைபேசியை நேத்ரன் காண்பிக்க.



தமிழ், ஆங்கிலம் என்ற மொழி பாரபட்சம் இன்றி... அந்த விவேக்கை திட்டினான் ஹரிஷ்.



“ அவனுக்கு எதுக்குடா இந்த வேலை அவன் செஞ்ச வேலைக்கு கோப படாம சிரிக்கிற நீ…? அவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா அடுத்தவங்க பெர்மிசென் இல்லாம இப்படி படம் எடுக்க சொல்லிருப்பான் நானும் தான்டா டீடெக்ட்டிவ் (நீயா சொல்லிகிட்டா தான் உண்டு) இப்படி ஒரு கேவலமான காரியத்தை நான் இதுவரை செஞ்சதில்லை” என பொறிந்தவனை.



“ ஏய்… ரிலாக்ஸ் இன்னைக்கு உனக்கு ரொம்ப கோவம் வருது எதுக்கும் டாக்டர் கிட்ட கன்சல்ட் பண்ணு” என்றவனை நோக்கி சோபாவின் குஷன் பறக்க அதனை அழகாக கேட்ச் பிடித்தான் நேத்ரன்.



“ இந்த பிக்சர்ல மை டால், செம்ம கியூட்டா இல்ல...” என்றவனை கொலைவெறியில் நோக்கிய ஹரிஷ், நேத்ரனின் முகத்தில் தோன்றிய பாவத்தில் அவன் அருகில் சென்று அவனின் தோளினை தொட்டு “யூ மீன்” (you mean) என்றவனிடம்.



“யெஸ்... ஐ மீன், வாட் யூ மீன் இட் ( yes, I mean, what you mean it)” என்ற நேத்ரன், “ ஹரி, இந்த போட்டோவை பார்த்தா அவனுக்கு எப்படி இருக்கும்..? இதில் ரியா முகத்தை பார் எவ்வளவு சந்தோஷமா, இயல்பா என்னோட கைக்குள்ள பொருந்தி இருக்கா…? இது அவனோட ஈகோவிற்கு விழுந்த அடியா தான் நினைப்பான்.



அவனால சூர்யாகிட்ட நெருங்க முடியலை அப்படிங்கறதுக்காக தான் வேற யாரும் அவளை நெருங்க விடாம செய்தான். ஏன்னா விவேக்கிற்கு தெரியும் சூர்யாவா யாரையும் நெருங்க விட மாட்டா அந்தளவிற்கு அவளோட மனசை காயப்படுத்தி இருக்கான். இது நான் அவனுக்கு தந்திருக்கிற சின்ன சாம்பிள்” என்ற நேத்ரனின் முகமும் குரலும் இறுகி இருந்தது.



ஹரிஷ், தன் கைகளில் அழுத்தம் குடுக்க சற்று சமன்பட்ட நேத்ரன், “இந்த நியூ இயர்ல இருந்து என் டாலி லைப்ல ஒன்லி ஹாப்பினஸ் மட்டும் தான். அவளை வருத்த படாம பார்த்துக்குவேன்” என்றவனின் உதடுகளில் புன்னகை மீண்டிருந்தது.



இங்கே இவர்கள் சந்தோஷத்தில் திளைக்க... அங்கே அடிப்பட்ட நாகமாய் சிறீக் கொண்டிருந்தான் விவேக்.

ஆண்கள் இருவரும் வெளியேறியதை கூட, அறியாது ஜெயஸ்ரீயை மொத்தி கொண்டிருந்தாள் சூர்யா.



“ஏய் குண்டுஸ், கை வலிக்குதுடி” என ஜெயஸ்ரீ கத்தவே அவளை விட்டு விலகியவளை பிரேமா, அதிசயமாய் பார்த்தார்.(பின்ன வந்ததில இருந்து அடக்க ஒடுக்கமா இருந்தவ இப்படி திடீர்னு அக்ஷன் குயினா மாறினா இப்படித்தான் )



அவரின் பார்வையில் வெட்கி சுற்றும் முற்றும் பார்க்க அங்கே நேத்ரனும் , ஹரிஷும் இல்லாதது கண்டு நிம்மதியடைய( ஐய்யோ..! ராசாத்தி மொத ஷோ பார்த்ததே அவங்க தான்).



“ அத்தம்மா, அது வந்து இவ என்னை கிண்டல் பண்ணவும். நான் எப்பவும் போல அடிச்சிட்டேன் சாரி அத்தம்மா” என்ற சூர்யாவின் குரலில் கலக்கத்தினை அறிந்த பிரேமா.



“சூர்யாம்மா, என்கிட்ட சொல்லவே இல்ல பார்த்தியா…? சும்மா ஜாக்கிசான் தங்கச்சி மாதிரி பின்னி பெடலெடுக்குற நீ இப்படி அடிப்பேன்னு முன்னாலையே தெரிஞ்சிருந்தா இந்த ஹரிஷையும், நேத்ரனையும் கொஞ்சம் கவனிக்க சொல்லி இருப்பேன். ரெண்டும் என் பேச்சை கேட்க மாட்டுறானுங்க”...



“நானும் எவ்வளவு நாளா சொல்லிக்கிட்டு இருக்கேன் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு ஒருத்தனும் காதுல வாங்குறதே இல்ல. இந்த தடவை அவங்க ஓகே சொல்றாங்களோ இல்லையோ தை பிறந்ததும் நேத்ரனோட தாத்தாகிட்ட சொல்லி கல்யாண ஏற்பாடு பண்ண சொல்லணும்...” என கூறிக் கொண்டே சூர்யாவின் முகத்தில் வந்து போகும் உணர்வுகளை கவனித்தார்.



பிரேமாவின் கேலியில் முதலில் சூர்யாவின் கலக்கம் மறைந்து அவளிதழில் புன்னகை பூக்க… அடுத்து அவர் நேத்ரனின் திருமணம் பற்றிய விஷயம் சொன்னவுடன். அவள் முகத்தில் தோன்றிய புன்னகை மறைந்து அவ்விடத்தில் ஏக்கமும், வருத்தமும் குடிக்கொள்ள. ஏனென்று தெரியாமல் அவளின் இதயத்தில் ஒரு வலியெடுக்க. அது எதனால் என அவள் அலசி ஆராய முற்பட கிடைத்த விடையோ அவளுள் சந்தோஷத்திற்கு பதில் துக்கத்தையே தோற்றுவித்தது.



தான் இருக்கும் நிலையில்… தான் நேத்ரனின் மீது கொண்ட அன்பு எப்படி நிலைக்கும், எவ்வாறு தன் காதல் நிறைவேறும்... அதைவிட இந்த விஷயம் அறிந்து விவேக் கூறும் பொய்களை நம்பி நேத்ரன் என்னை நம்பாமல் கேள்வி கேட்டாலோ…?, இல்லை சிறு பார்வை பார்த்தாலோ தன்னால் தாங்கிக்கொள்ள முடியுமா..? என்ற மனத்தின் கேள்விக்கு முடியவே முடியாது என்ற பதில் தான் கிடைத்தது.



அதனால் தன் மனத்தினை எந்த சூழ்நிலையிலும் வெளிப்படுத்த கூடாது, கூடுமானவரை நேத்ரனை விட்டு விலகி இருக்க வேண்டும் என முடிவு செய்தாள். விதியோ நீ முடிவு செய்திட்டா போதுமா அப்புறம் நான் எதுக்கு இருக்கேன் என சிரித்து,



சூர்யாவின் முகப்பாவனையை ஒருவர் மகிழ்ச்சியுடன் பார்க்க, மற்றவளோ யோசனையோடு பார்த்து கொண்டிருந்தாள்.



சூர்யாவின் மனத்தினை அறியவே பிரேமா , அவ்வாறு கூறினார். ஏனெனில் அவருக்கு தெரியும் நேத்ரன், இதுவரை அவனின் காதலை கண்டிப்பாக சூர்யாவிடம் வெளிப்படுத்தி இருக்க மாட்டான் என்று.



மூன்று வருடங்களாக அவளை காதலித்தவன். அவளின் திருமண அழைப்பிதழை கண்டு மனத்திற்குள் அனலில் இட்ட புழுபோல் துடித்தானே அன்றி அவளை கைப்பற்ற நினைக்கவில்லை. காரணம் அவளின் காதலுக்கு (அப்படி நினைத்து கொண்டு) மதிப்பளித்து ஒதுங்கி இருந்தவன். இப்பொழுது அவளின் மனநிலை அறிந்து பின்பு அவளிடம் தன் காதல் சொல்ல தயங்குவான் என அறிந்திருந்தார் தன் மகனை பற்றி நன்றாக தெரிந்தவராய்.



ஒரு புறம் பிரேமாவிற்கு, தன் மகனின் நடவடிக்கைகளில் (சூர்யாவின் மீது நேத்ரன் கொண்ட நேசமும், அவளின் மனஉணர்வுகளுக்கு மதிப்பளித்து பொறுமை காப்பது) என ஒரு பெண்ணாய் அவர் பெருமை கொண்டாலும் தன் மகனின் தவிப்பை கண்டு அந்த தாயுள்ளமும் வருந்த தான் செய்தது. அதன் பொருட்டே பிரேமா, சூர்யாவிடம் நேத்ரனின் திருமண ஏற்பாட்டை பற்றி பேசியது. அவர் எதிர்பார்த்தது போல் சூர்யாவின் முகத்தில் குழப்பம் குடிக்கொள்ள தன் மகனின் வாழ்வில் இனி பிரச்சனை இல்லை. கூடிய விரைவில் தன் மகன் அனைத்தையும் சரி செய்து விடுவான் என அந்த தாயுள்ளம் மகிழ்ச்சிக் கொண்டது.



யோசனையோடு பார்த்தது வேறு யாரும் இல்லை. நம்ம ஜெயஸ்ரீ தான், ‘இவ்வளவு நேரம் நல்ல தானே இருந்தா இந்தம்மா கல்யாண பேச்சை எடுத்தவுடனே தௌசன் வாட்ஸ் லைட் மாதிரி பிரைட்டா இருந்த முகம் திடீர்னு பியூஸ் போன பல்பு மாதிரி ஆயிடுச்சு. ஒரு வேளை அந்த வீணா போனவன் கூட ஒருத்தங்க இருந்தாங்களே அவங்களை லவ் பண்றாளோ…? அதுக்கு ஏன் இவ்வளவு பீல் பண்றா…? அவரும் இவளை விரும்புற மாதிரி தான் இருந்தது அவருடைய செய்கை எல்லாம் ஒரு நிமிஷம் இவளை விட்டு அப்படி இப்படி நகரலை ...’ ( ஐய்யோ..! நீ செம்ம ஷார்ப் ஜெய், இது உனக்கு புரியுது. உன் பக்கத்தில இருக்க மங்குனிக்கு புரியலையே நேத்ரா, உன் நிலைமை ரொம்ப குஷ்டம் ச்சீ...ச்சீ... கஷ்டம். உனக்கு இந்த பெட்ரமாக்ஸ் லைட்டே தான் வேணுமா..? நல்லா யோசிச்சிக்கோ).



தோழிகள் இருவரும் சென்று ரெபிரேஷ் செய்து கொண்டு வந்தனர். ஜெயஸ்ரீக்கு சூர்யாவிடம் கேட்க ஆயிரம் கேள்விகள் இருந்தாலும் தற்போது உள்ள அவளின் மனநிலையினை கருத்தில் கொண்டு எதுவும் கேட்க வில்லை.



ஹரிஷும் நேத்ரனும் வர அவர்கள் காத்திருக்க… இருவரும் வர தாமதம் ஆகவே, பிரேமா சாப்பிடும் நேரம் ஏற்கனவே கடந்திருக்க. அனைவரும் ஒன்றாக சாப்பிடலாம் என்று கூறியவரை உருட்டி மிரட்டி உணவுண்ண வைத்தாள் சூர்யா.



இவர்கள் செய்யும் அனைத்து கலாட்டாகளையும் புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்த தங்கம்மாவிடம் வந்த ஜெயஸ்ரீ, அவரின் அருகில் அமர்ந்து கொண்டாள்.



அவள் முகத்தில் உள்ள சோர்வை கண்டுக் கொண்ட பிரேமா. தங்கம்மாவிடம் கண்காட்ட தங்கம்மா அவளுக்கு பழரசம் கொண்டு வந்து கொடுக்க.



“ தேங்க்ஸ்…” என கூறி பருகினாள் ஜெயஸ்ரீ. பிரேமாவிற்கு அவளின் அலட்டல் இல்லாத இந்த குணம் பிடிக்க, அவள் எங்கு தங்கியுள்ளாள்…? எங்கே என்ன வேலை பார்க்கிறாள்…? போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.



இவர்களின் பேச்சிலும், அறை கதவு திறக்கும் சத்தத்திலும் நிகழ்விற்கு வந்த சூர்யா.



அங்கு ஹரிஷோடு சிரித்து கொண்டு வந்தவனை விழி விரித்து பார்த்து கொண்டிருந்தாள் சூர்யா. அவனை காணாத வரை சூர்யாவின் பேசிற்கு தலையாட்டும் அவளின் மனம் நேத்ரனை கண்டவுடன் அவளின் கண்களும், மனமும் அவள் வசம் இருப்பதில்லை.



அறைக்குள் நுழைந்ததும் சூர்யாவினையே நேத்ரனின் கண்களும் தேட, தன்னை ஒரு வித ஏக்கத்தோடு நோக்கும் தன்னவளின் பார்வையில் அவனின் கண்கள் பளிச்சிட்டன.



'நேத்ரா, என்னடா உன் டாலி பார்வை எல்லாம் புதுசா இருக்கு அய்யோ டாலி, நீ சாதாரணமா பார்த்தாலே நான் விங்ஸ் இல்லாம பறப்பேன் இப்படி கண்ண விரிச்சி பார்த்த. நடக்குற எதுக்கும் என்னைய குத்தம் சொல்ல கூடாது... அப்புறம் இப்ப கஷ்டப்பட்டு மெயிண்டன் பண்ற நல்லவனை பேக் பண்ணி அனுப்பிட்டு உன்னோட காதல் கள்வனாய் மாறி உன்னை மொத்தமா கொள்ளை அடிச்சுடுவேன்’ என மனத்திற்குள் தன் டாலியுடன் செல்லம் கொஞ்சி கொண்டிருந்தான். பாவம் அவனுக்கு தெரியவில்லை அவன் டாலி, அவனுக்கு இன்னும் சிறிது நேரத்தில் அதிர்ச்சி தர போகிறாள் என்று.



ஆளை விழுங்கும் பார்வை பார்த்தவள், நேத்ரனும் தன்னை பார்ப்பதை உணர்ந்து சட்டென்று தன் பார்வையினை விலக்கி கொண்டவள், ‘உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல சூர்யா, என்ன முடிவு பண்ணினா…?, இப்ப என்ன செஞ்சிக்கிட்டு இருக்க…? என தன்னை தானே திட்டியவள். அதன் பிறகு மறந்தும் அவனின் முகத்தினை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.



அவன் உயிரானவள்...


 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

"என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்"..... கதையோட அத்தியாயம் 17 & 18 போட்டுடேன்... டியர்ஸ் rerun story தான்...


கதையை படிக்கிறீங்களா... புடிச்சி இருக்க... கூடவே
உங்க நிறை குறைகளையும் கொஞ்சம் சொல்லிட்டு போங்க...



தனசுதா...
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 19



‘கொஞ்சம் முன்னவரை அப்படி பார்த்தா…? இப்ப என்னடன்னா நிமிர்ந்து கூட பார்க்க மாட்டிங்குறா’ மொத்தத்தில் நேத்ரன் மண்டை காய்ந்து போனவன் குழப்பத்தில் இருக்க.



நேத்ரனும், சூர்யாவும் உணவினை அளைந்து கொண்டிருக்க ஜெய்யும், ஹரிஷும் என்ன பிரச்சனை…?, யார் எப்படி போனால் நமக்கென்ன…? நமக்கு சோறு தான் முக்கியம் என்பது போல் உணவருந்திக் கொண்டிருந்தனர்.



உணவருந்தி முடித்த பிறகும் தோழியின் முகம் தெளியாததை கண்ட ஜெய்.

“ சூர்யா வர்றீயா அப்படியே கொஞ்சம் தூரம் ஒரு வாக் போயிட்டு வரலாம்…?” என கேட்க.



ஏதோ யோசனையில் இருந்தவள் முதலில் சரி என சொல்ல, பின்பே நினைவு வந்தவளாக “ஜெய் கால் வலிக்கும் வேணும்ன்னா ஜஸ்ட் இங்க பால்கனில உட்கார்ந்து பேசலாம்” என கூற.



‘ ஷப்பா ஒரு வழியா கொஞ்சம் தெளிஞ்சிட்டா...’ என நினைத்து கொண்டு, “நாம என்னடி ஓடி புடிச்சா விளையாட போறோம் ஒண்ணும் கால் வலிக்காது. அதுவும் இல்லாம ஒரே இடத்துல இப்படி உட்கார்ந்து இருக்கக் கூடாது. மெதுவா நடக்கலாம் எனக்கு ஒண்ணும் இல்லை…” என்றாள் ஜெயஸ்ரீ.



ஹரிஷோ ‘இப்ப எதுக்கு இவ வெளிய போகணும் சொல்றா கூட சூர்யாவும் எதற்கு..? திரும்பவும் எதையாவது புதுசா (பிரச்சனையினை ) கொண்டு வரவா..?’ என அவளை மனத்திற்குள் வறுத்துக் கொண்டிருந்தான்.



சூர்யா, பிரேமாவிடம் சொல்லிக்கொண்டு புறப்பட நேத்ரன் அவளையே குழப்பதோடு பார்த்துக் கொண்டிருந்தான்.



‘சரளமாக அவனோடு பேசியதில்லை என்றாலும் தேவைக்கு பேசுபவள், ஒரு தலையசைப்பு சிறு புன்னைகை என விடைபெறுபவள் இப்பொழுது முற்றும் தன்னை தவிர்ப்பதை எண்ணி நேத்ரன் வருத்தமுற்றான்’.



‘சற்று நேரத்திற்கு முன்பு அவனின் மனம் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தது என்ன…? இப்பொழுது அவன் மனம் துன்பம் கொண்டு துவளுவதென்ன…?’ இவை அனைத்தும் அவன் காதல் கண்மணியின் விழிகள் செய்யும் வேலை.



இங்கே நோயும் அவளே... மருந்தும் அவளே... காதலில் மட்டும் தான் இந்த விந்தை நிகழும்.



நேத்ரனின் முகத்தினை கண்ட ஹரிஷ், யோசனைக்கு உள்ளானான் சற்று நேரத்திற்கு முன்பு வரை தாமரை மலராய் விகசித்த முகம் இப்பொழுது வாடி இருப்பதன் காரணம் புரியாமல் நேத்ரனிடம் கண்களால் என்னவென கேட்க. அவனோ சூர்யாவினை சுட்டிக்காட்ட அப்பொழுது தான் சூர்யாவின் முகமும் தெளிவில்லாமல் இருப்பதை கண்டவன். ஜெய்யும், சூர்யாவும் வெளியேற அப்படி என்னதான் ரகசியம் பேசுகிறார்கள் என தன் தொழிலுக்கே உரிய புத்தி தலைதூக்க நேத்ரனிடம் தன்னை பின்தொடர சைகை செய்துவிட்டு, அவர்கள் பேசுவது கேட்கும் தூர இடைவெளியில் பின் தொடர்ந்தனர் நண்பர்கள் இருவரும்.



அறையில் இருந்து வெளியேறியவர்கள் சற்று தூரம் அங்குள்ள லாபியில் நடக்க அங்கிருந்த தூண்களின் அருகில் இருக்கைகள் போடப்பட்டிருந்தது. நியூ இயர் கொண்டாடத்திற்காக அதில் ஒரு இருக்கையில் சூர்யாவும், ஜெயஸ்ரீயும் அமர சற்று நேரம் அமைதியில் கழிய இருவருக்கும் இடையில் உள்ள மௌனத்தை முதலில் கலைத்த ஜெயஸ்ரீ,



“ நீ பாரீஸ் வந்து எவ்வளவு நாள் ஆகுது…? இந்த பேமிலிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்…? அதெல்லாத்தையும் விட முக்கியம் உங்க பேமிலி எப்படி உன்னை இவ்வளவு தூரம் தனியா அனுப்பினாங்க…? என வரிசையாக தன் மனத்தில் தோன்றிய கேள்விகள் அனைத்தையும் சூர்யாவிடம் கேட்க.



ஹரிஷ் மைண்ட் வாய்ஸ், சரியான கேள்விக்கு பிறந்தவளா இருப்பாளோ…? என நினைக்க அவனின் தலையினை தட்டினான் நேத்ரன். ஏனென்று பார்த்தவனை, “ உன் மைண்ட் வாய்ஸ் ரொம்ப கேவலமா இருக்கு” என சிரிக்க அவனை முறைத்துக் கொண்டே தோழிகளை கவனிக்க ஆரம்பித்தான்.



“ அடியேய், கொஞ்சம் கேப் விட்டு கேளுடி. என்ன இவ்வளவு நேரம் இதெல்லாம் கேட்கலாமா வேணாமான்னு பட்டிமன்றம் நடத்துனியா ஜெய்…?” என்ற சூர்யாவின் கேள்விக்கு.



“ நான் ஏண்டி பட்டிமன்றம் நடத்தணும் அவங்க எல்லாரும் இருந்தாங்க அதனால கேட்கலை நீ என்னை டைவர்ட் பண்ணாத ஒழுங்கா பதில் சொல்லு...”



“ நான் உங்க வீட்டுக்கு வரும் போதெல்லாம் காயூ, உன்னோட படிப்பு முடிச்சதும் கல்யாணம் செய்யணும்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க. நாம ஸ்டடிஸ் முடிச்சி கிட்ட தட்ட ரெண்டு வருஷம் முடிய போகுது சொல்லு சூர்....யா...?” என்றவளின் கேள்வியில் சூர்யாவின் கண்களில் நீர்த்திரள கண்டவள் அவளின் தோள் பற்ற.



கண்களில் வலியுடன், “கல்யாணமா எனக்கா..? அதெல்லாம் இந்த ஜென்மத்தில் நடக்காது ஜெய்,
அந்த ரோக், அப்படி நடக்கவும் விட மாட்டான்...” என கூறி கண்ணீர் விடுபவளை என்ன சொல்லி தேற்றுவது என புரியாமல் நின்றாள் ஜெய்.



சூர்யா, சொன்ன விஷயம் அவளுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியாத நிலை. ஆனால் தோழியின் வாழ்வில் ஏதோ சிக்கல் என்று மட்டும் அறிந்து கொண்டாள்.



சூர்யா தன்னிலை சொல்லி கண்ணீர் விடும் பொழுது, நேத்ரனின் உடல் விறைக்க தொடங்கியது. அவனின் கோபம் அறிந்த ஹரிஷ், “கமல், கண்ட்ரோல் யுவர் செல்ப் சூர்யாவை பேச விடு அவளோட மனசில் இருக்குற எல்லா வலியும் வெளிய வரட்டும் அப்பதான் சூர்யா மனத்தில் உள்ள இறுக்கம் குறையும் சோ ப்ளீஸ், கொஞ்சம் அமைதியா இரு “ என கூற.



தன்னவளின் கண்ணீர் துடைத்து, ஆறுதல் சொல்ல முடியாத தன்னுடைய நிலையினை அறவே வெறுத்தான் நேத்ரன்.



இன்னும் அழுது கொண்டிருப்பவளை பார்த்து, “நானெல்லாம் உன்னளவுக்கு புத்திசாலி இல்ல குண்டுஸ்… கொஞ்சம் தெளிவா சொல்லு” என ஜெய் சொல்ல.



அவள் சொல்லிய பாவனையில் சிரித்துவிட்டாள் சூர்யா.



“ ஹா... இப்பதான் என் குண்டுஸ் பார்க்க அழகா இருக்கா…” என கூற.



“ லவ் யூ ஜெய் ...” என கட்டிக்கொண்டாள் சூர்யா. அவளும் “மீ டூ…” என அணைத்து கொண்டாள்.



ஹரிஷோ, “என்னடா நடக்குது அங்கே…? உன்கிட்ட சொல்ல வேண்டிய டயலாக் எல்லாம் தங்கச்சி அந்த ஓட்டகசிவிங்கி கிட்ட சொல்லுது…” என்றவனின் முதுகில் ரெண்டு அடி போட்டு, “சும்மா ரன்னிங் கமெண்ட்ரி குடுக்காதே அங்க நடக்குறத வாய மூடிக்கிட்டு பாருடா” என்றவனின் நிலையோ காதில் புகை வராத குறை தான்.



சூர்யா, தான் வேலைக்கு சென்றது, தன் திருமண ஏற்பாடு, விவேக்கினால் தன் வாழ்வில் நிகழ்ந்தவை என எல்லாம் சொல்லி முடித்தாள்.

கேட்டுக் கொண்டிருந்த ஜெயஸ்ரீயின் விழிகளில் கண்ணீர் நிறைத்தது என்றால் நேத்ரனின் கண்களும், முகமும் கோபத்தில் கோவைபழம் என சிவந்தன.



“ இப்படியும் ஒருத்தன் இருப்பானா..? சரியான சாடிஸ்ட்” என்றாள் ஜெய் வெறுப்புடன், “எப்படி சூர்யா, அவன்கிட்ட இருந்து தப்பிச்ச..?”.



“ அவனோட அப்பா, அம்மா தலையிட்டதுனால கொஞ்சம் அடங்கினான். ஆனா மறைமுகமா பலவித தொல்லை கொடுப்பான். வேற எங்கேயும் என்னால வேலைக்கு சேர முடியாத படி செஞ்சான். ஆனா எப்படின்னு தெரியலை இந்த இடத்துல அவனால ஒண்ணும் பண்ண முடியலை அடங்கி இருக்கான்…” என்ற சூர்யாவை.



ஜெய், ஆச்சர்யமாக பார்த்து கொண்டே, “அப்போ நீ இங்க வேலைக்கு தான் வந்திருக்கியா..? நான் அவங்க உன்னோட சொந்தம் அப்படின்னு நினைச்சேன்” என்றாள்.



சூர்யாவோ, ‘அவ்வளவு அதிர்ஷ்டம் எனக்கில்லை’ என மனத்திற்குள் மறுகினாள்.

சூர்யாவின் அமைதி கண்டு என்னவென வினவ... ஒன்றும் இல்லை என தலை அசைத்தவள், “இவங்க சொந்தமா வேணா இல்லாம இருக்கலாம். ஆனா கண்டிப்பா அம்மா, அப்பாவுக்கு தெரிஞ்சவங்களா இருக்கணும். இல்லன்னா எங்க வீட்டில் என்னை இவ்வளவு தூரம் அனுப்ப மாட்டாங்க” என்றாள் சூர்யா.



‘ இதெல்லாம் விவரமா புரிஞ்சிக்கோ ஆனா என்னோட மனசை மட்டும் புரிச்சிக்காதடி தர்பூஸ்’ என மனதோடு அவளுடன் ஊடல் கொண்டான் நேத்ரன்.



“ அதுசரி உன் அத்தம்மா, அவங்க ரெண்டு பேரோட கல்யாணமும் சீக்கிரமா பண்ணனும் அப்படின்னு சொன்ன உடனே உன் முகம் ஏன் மாறி போச்சு…?” என்றவுடன், “அதெல்லாம் ஒண்ணும் இல்லை” என பதட்டத்துடன் சூர்யா மறுக்க அவளை நம்பாத பார்வை பார்த்தாள் ஜெயஸ்ரீ.



“ எனக்கு, என்னமோ அவரு உன்னை லவ் பண்றாருன்னு தோணுது…” என்றதும், சூர்யாவின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். ஆனால் அது பொய்யோ என நினைக்கும் படி, அடுத்த நொடி அவளின் முகம் இருண்டது.



சூர்யாவை மனத்திற்குள் வைது(திட்டி) கொண்டிருந்தான் நேத்ரன்.



‘பாருடி பப்ளிமாஸ், வந்து முழுசா ஒருநாள் கூட ஆகலை அதுக்குள்ள உன் பிரெண்டுக்கு தோணிருக்கு உனக்கு மட்டும் ஏண்டி எதுவுமே தோணலை…’.



“ நீ நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல ஜெய். அவர் எல்லார்கிட்டையும் பேசி பழகுற மாதிரி தான், என் கிட்டையும் பழகுறார்” என்றாள், தனக்கே கேட்காத சிறு குரலில்.



சூர்யாவின் பதிலில் ஜெயஸ்ரீ, கடுப்பானாளோ இல்லையோ நேத்ரன் கடுப்பின் உச்சத்திற்கு சென்றுயிருந்தான்.



“மகட... மட்டி... மக்கு... லூஸு தானாவும் புரியாது அடுத்தவங்க சொன்னாலும் புரிய மாட்டிங்குது...” என இம்முறை வாய்விட்டே புலம்பினான் நேத்ரன்.(ஐய்யோ! நல்லா இருந்த புள்ளைய இப்படி தனியா புலம்ப விட்டுட்டாளே).



“ ஏன்டா, புலம்புற என் தங்கச்சி எவ்வளவு வெள்ளந்தியா இருக்கு பாரு…” என கூறிய ஹரிஷின் தலையில் 'நங்' என கொட்டினான் நேத்ரன்.



தலையினை தடவிக் கொண்டே, “பாவி வலிக்குது டா” என்ற ஹரிஷிடம், தன் மூடிய உதடுகளின் மேல் சுட்டு விரல் வைத்து பேசாதே என சைகை செய்தவன், ‘உன் தொங்கச்சி சிக்கலை நீதான் சிக்குன அதனால அவ பேசனதுக்கு உனக்கு பனிஷ்மெண்ட்’ என தனக்குள் கூறிக்கொண்டான் நேத்ரன். (டேய், சூர்யா பக்கத்தில் இருந்தா கொட்டியா இருப்ப. உன்னோட ஸ்டைல் ஆப் பனிஷ்மெண்ட்டே வேற மாதிரி இருந்திருக்காது பேசுன அவளோட வாயை தானே பினிஷ் பண்ணிருப்ப என நேரம் காலம் தெரியாமல் மனசாட்சி குரல் எழுப்ப).



“எல்லார்கிட்டையும் பழகுற மாதிரி தான் பழகுறாரா..? எப்படி காலையில் உன்னை இறுக்கி அணைச்சிக்கிட்டு நின்னாரே அது மாதிரியா…? எல்லார்கிட்டையும் நடந்துகிறார் கீழ விழுந்து அடிப்பட்டது எனக்கு. ஆனா உனக்கு என்னமோ அடிப்பட்ட மாதிரி அணைச்சு பிடிச்சுக்கிட்டு இருந்தார்” என ஜெய்யின் கேள்விகளுக்கு சூர்யாவினால் பதில் சொல்ல இயலவில்லை.



ஜெய் சொல்ல சொல்ல சூர்யாவிற்கு காலையில் நேத்ரனின் கைச்சிறையில் கட்டுண்டு இருந்ததை நினைக்க நினைக்க வெட்கத்தினால் அவளின் கன்னங்கள் செங்காந்தள் மலராய் சிவந்து போனது.



தன் உணர்வுகளை ஜெய் அறிய கூடாது என தன் முகத்தினை திருப்பிக் கொண்டாள் சூர்யா.



‘ வெள்ள பன்னி, என்னமா கதைவிடுறடி. நான் அவர் பேர் சொன்னவுடன் முகத்தில் என்ன ஒரு பிரைட்னெஸ் மோர்னிங் நடந்ததை சொல்லவும் அப்படி ஒரு ப்ளஷ்(blush) உன்னோட கன்னத்தில். என்கிட்டயே மறைக்க பார்க்குறியா இருடி... இப்ப என்ன சொல்றேன்னு பார்க்குறேன்’ என சூர்யாவினை மனத்திற்குள் கருவிக்கொண்டே.



“ சரி அவர் விரும்புறார் பழகுறார் இதெல்லாம் விடு நீ அவரை விரும்புறியா..? இல்லையா..? பொய் சொல்லாம உண்மைய சொல்லு குண்டுஸ்” என்ற ஜெய்யின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் கண்கள் கலங்க தலை குனிந்து நின்றவளிடம்.



“ சொல்லு குண்டுஸ்…?” என மறுபடியும் கேட்டு சூர்யாவின் தோளினை பற்றி உலுக்க.



இனியும் மறைக்க இயலாது என தன் மனத்தினை கூற தொடங்கினாள் சூர்யா.



“ ஆமா, ஜெய் எனக்கு த.... நேத்ரனை பிடிச்சிருக்கு...” என சூர்யா கூற. இதை கேட்டு கொண்டிருந்த நேத்ரனின் மனநிலையினை சொல்ல வார்த்தைகளே இல்லை. தன்னவளின் மனத்தில் தான் பதிந்திருக்கிறோம் என்ற நினைவே அவன் சிறகில்லாமல் வானத்தில் பறக்க போதுமானதாக இருந்தது. ( ரொம்ப பறக்காதே உன் டாலி, சொல்றத முழுசா கேளு உனக்கு அப்ப புரியும்).



“ அவரை எப்ப, எப்படி விரும்ப ஆரம்பிச்சேன்னு எனக்கு தெரியலை... என்னோட காயம்பட்ட மனசுக்கு ஏதோ ஒருவிதத்துல அவர்கிட்ட இருந்து எனக்கு ஆறுதல் கிடைச்சிருக்கு… அவரோட அம்மா கிட்ட அவர் காட்டுன பாசம், இத்தனை நாள் ஒரே வீட்டுல ஒண்ண இருந்திருக்குறோம் தப்பா ஒரு பார்வை பார்த்தது இல்லை. ( ஐய்யோ! டாலி அவன் வீட்ல இருக்கும் நேரமெல்லாம் உன்ன சைட் அடிக்கிறது தான் அவனோட வேலையே உனக்கு சமத்து பத்தலை கண்டுபிடிக்க) வேலைகாரங்க கிட்டையும் அவர் கடுமையா நடந்து நான் பார்த்ததில்லை. இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம். ஆனா…? எது என்னை அவர் பக்கமா செலுத்துச்சுன்னு எனக்கு சரியா சொல்ல தெரியலை... ( உனக்கு எது தெரிஞ்சிருக்கு. இது தெரியலைன்னு பீல் பண்ற).

ஆனா, இந்த காதலால் எந்தவித நன்மையும் அவருக்கும் ஏற்பட போறதில்லை.( அதை நீ முடிவு பண்ண கூடாது ). வீணா மனகஷ்டமும், சங்கடமும் தான் மிஞ்சும்...” என்றவளின் பேச்சை கேட்ட நேத்ரனுக்கு அதிர்ச்சியும் ஆற்றாமையும் ஒருங்கே தோன்றின.

( பார்த்தியா, ரொம்ப சந்தோஷபட்ட உன் டாலிகிட்ட ஓப்பனிங் எல்லாம் நல்லா இருக்கும். பட் பினிஷிங் சொதப்பிக்கும்).



“ அந்த விவேக் பத்தி உனக்கு தெரியாது ஜெய், தான் நினைச்சதை சாதிக்க எந்த லெவலுக்கு வேணா இறங்குவான். அவன் சொல்றதை மத்தவங்க நம்பி இவரை கேள்வி கேட்டாலும் சங்கடம். ( ஐய்யோ! சூர்யா உனக்கு தான் உன் மாமனை பத்தி தெரியலை அவனை யாரும் அவ்வளவு ஈஸியா கேள்வி கேட்க முடியாது. அப்படியே யாராவது கேள்வி கேட்டாலும் அவன் பதில் சொல்ற மேதட்டே(method) வேற)

நேத்ரன், என்னை நம்பாமல் ஒரு வார்த்தையோ ஒரு பார்வையோ பார்த்து இதெல்லாம் உண்மையான்னு கேட்டுட்டாருனா என்னோட அவர் மீதான காதலுக்கும் நான் உயிரோட இருக்குறதுக்கும் அர்த்தமே இருக்காது…” என்றவளின் வார்த்தைகளை கேட்டு ஜெயஸ்ரீ, பதறி போனாள் என்றாள்.



நேத்ரனோ, துடிதுடித்து போனான் தன்னவளின் வார்த்தைகள் தந்த வலியால், ‘அது எப்படி டி, நான் உன் சந்தேகப்படுவேன்னு நீ என் மேலயும் என் காதல் மேலயும் சந்தேகப்படலாம்…?’ என மனதோடு அவளிடம் சண்டையிட்டு கொண்டிருந்தான்.



“ அவரோட கோபத்தை கூட நான் தாங்கிடுவேன். ஆனா வெறுப்பை என்னால நினைச்சிக்கூட பார்க்க முடியலை இப்ப எப்படி இருக்கோமோ அப்படியே இருந்திட்டு போறேன். வெறுமையா இருந்த என் மனசுல இனிமே என் நேத்ரனோட நினைவுகள் என் உயிர் உள்ளவரை என் உணர்வுகளோடு என்னைக்கும் பசுமையா இருக்கும். விவேக்கினால் அந்த நினைவுகளை என்கிட்ட இருந்து என்ன முயற்சி செஞ்சாலும் பிரிக்க முடியாது...” என கூறியவளின் குரலில் வலியும், வெறுமையும் நிறைந்திருந்தது.



“ அவருக்கு என் மேல் விருப்பம் இருக்குதா இல்லையான்னு தெரியலை... (அடிப்பாவி, இவ்வளவு நேரம் ஜெய் விம், சோப்பு, சபீனா எல்லாம் போட்டு விளக்கு...விளக்குன்னு ... விளக்கினா.... நேத்ரனுக்கு உன் மேல் விருப்பம் இருக்குனு இப்படி பொசுக்குனு இருக்கா இல்லையானு தெரியலை அப்படிங்கிற. உன்னை என்ன பண்ணினா தகும்).





ஆனா என்னோட ஒரே பதில் இல்ல அப்படிங்கிறது தான்” என்றவளை பார்த்து ஏளனமாய் சிரித்தது விதி. நீ என்ன முடிவு பண்ணாலும் அதெல்லாம் இன்னைக்கே ஒரு முடிவிற்கு வந்திடும்.

அனைத்தையும் கேட்ட நேத்ரனின் மனநிலை... மகிழ்ச்சி, கோபம், அதிர்ச்சி என பலதரபட்ட உணர்வுகளால் ஆட்பட.. தன் கேசத்தினை கோதிவிட்டு தன் உணர்வுகளை சமன்படுத்த முயற்சிக்க அது வெறும் முயற்சியாகவே இருந்தது.



தன் கண்களை முடி, நீண்ட பெருமூச்சினை வெளியேற்றிய நேத்ரன்.



‘ எந்த சூழ்நிலையிலையும் என் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க பழகிய என்னை நிலை தடுமாற செய்ய உன்னால் மட்டும் தான் டாலி முடியும். என் புத்தியும், மனசும் எப்பவும் என் சொல்படி ஒரே நேர்கோட்டில் பயணிக்கும். உன் விஷயத்தில் மட்டும் ரெண்டும் எதிர் எதிர் பக்கம் பயணிக்குது. நீ என்னை விரும்புறதையும் சொல்ல மாட்ட நானே வந்து சொன்னாலும் நீ, நோ.... சொல்லுவியா..? தர்பூஸ்”.



நீயே... உன் வாயால நேத்ரன், “ யூ ஆர் மை லவ் அண்ட் லைப்... ஐ கேனாட் லிவ் வித்தவுட் யூ...” (

you are my love and life....I cannot live without you.... ) அப்படின்னு சொல்ல வைக்கிறேன்.... உனக்காக மத்தவங்க கிட்ட மட்டும் இல்ல டாலி, உனக்காக உன்கிட்ட கூட நான் சண்டையிடுவேன்’ என மனத்திற்குள் சொல்லிக்கொண்டான்.



அவன் மனத்திற்குள் சொல்லிக்கொண்ட நேரத்தில் தேவதைகள் “ததாஸ்து” என வாழ்த்தியது போலும்.



அவன் சொன்ன அனைத்தும் இன்றே நடக்க போவதை அறியாமல் சூர்யாவின் மனத்தினை வெளிக்கொணர என்ன செய்வது…? என சிந்தித்துக் கொண்டிருந்தான்.



அவன் உயிரானவள்...









vvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv





அத்தியாயம் 20



தோழிகள் இருவரும் தாங்கள் அறையை விட்டு வெளிவந்து வெகுநேரம் ஆகி விட்டதை உணர்ந்து மீண்டும் அறைக்குள் செல்ல.



இவர்களின் வரவிற்காகவே காத்திருந்ததை போல் பிரேமா, “ எங்கடா போய்ட்டீங்க...? சரி கிளம்புங்க... இங்க நடக்குற ஸ்ட்ரீட் சோஸ் பார்க்க போகலாம்...” என கூற தோழிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



இருவர் மனநிலையும் எப்படி இந்த பயணத்தினை மறுக்கலாம் என சிந்தித்தது.



சூர்யாவோ, இப்பொழுது இருக்கும் சூழலில் தன்னையும் மீறி தன் மனநிலையினை நேத்ரனிடம் வெளிப்படுத்தி விடுவோமோ... என பயந்து அவனின் அருகாமையினை தவிர்க்கும் பொருட்டு

இந்த பயணத்தினை மறுக்க.



ஜெயஸ்ரீயோ, மீண்டும் எங்கே அந்த கயவனிடம் மாட்டிக்கொள்வோமோ, இவர்கள் அனைவர் முன்னிலையில் தன்னிடம் தவறாக நடந்து கொள்வானோ... என பயந்து இந்த பயணத்தினை மறுக்க நினைக்க.



அதற்குள் பிரேமா, ஜெயஸ்ரீயின் கையில் ஒரு பேக் கொடுத்து, “உனக்கு டிரஸ் இதுல இருக்கு... போய் மாத்திக்கிட்டு வாடா. சூர்யா, இந்தா உனக்கும் இதுல டிரஸ் இருக்கு. சீக்கிரம் போய் ரெடி ஆகுங்க. தங்கம்மா, நீயும் சீக்கரம் ரெடி ஆகு” போகலாம் என அனைவரையும் கிளம்ப.



“ அத்தம்மா, அவளுக்கு தான் டிரஸ் இல்ல எனக்கு எதுக்கு…?” என தயங்கி தயங்கி கேள்வி கேட்டு கொண்டிருந்தவளிடம்.



“ ஷ்...அத்தம்மா, வாங்கி கொடுத்தா வாங்கிக்கணுமே தவிர கேள்வி எல்லாம் கேக்க கூடாது. சரி சீக்கிரம் சீக்கிரம்” என இருவரையும் பிடித்து தள்ளாத குறையாக அறைக்குள் அனுப்பி வைத்தார் பிரேமா.



வேறுவழி அறியாது, சூர்யாவும், ஜெயஸ்ரீயும் கிளம்பும் முயற்சியை மேற்கொள்ள. இருவரில் முதலில் தயாராகிய சூர்யா, ஜெய்யிடம் “ கால்வலி இப்ப பரவாயில்லையா...” என கேட்டாள்.



“ பரவாயில்லை ...” என கூறி, ஜெய்யும் தயாராக தோழிகள் இருவரும் தயாராகி வரவும் நேத்ரனும், ஹரிஷும் ரெடி ஆகி வரவும் சரியாக இருந்தது.



பெண்கள் இருவரும் ஒரே போல் அனார்கலி சுடிதார் அணிந்திருந்தனர். நிறங்களில் மட்டுமே வேற்றுமை. சூர்யாவினுடையது கடல் நீல நிறம் என்றால் ஜெயஸ்ரீயின் உடை கடல் பாசி நிறம் கொண்டதாக இருந்தது. இருவருக்கும் அவ்வுடை பாந்தமாக பொருந்தியது.



அறைக்குள் நுழைகையிலேயே சூர்யாவினை கண்டுகொண்ட நேத்ரன், எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவனைவளின் அழகில் மயங்கினாலும் உடனே தன்னை சமன் செய்து கொண்டவன்.



‘ அந்த விவேக் பத்தியெல்லாம் யோசிச்சு என் மேல உள்ள காதலை மறைக்க நினைக்கிற இல்ல, இப்போ இந்த செகண்ட்ல இருந்து, நீ என்னை மட்டுமே நினைக்கணும். நினைக்க வைக்கறேன் டி என் செல்ல தர்பூஸ்...’ என மனத்திற்குள் அவளிடம் சபதம் மேற்கொண்டான்.



அறைக்குள் வந்ததில் இருந்து நேத்ரனையே பார்த்துக் கொண்டிருந்தாள் சூர்யா. அவனோ, இவள் இருக்கும் திசையை கூட திரும்பியும் பார்க்கவில்லை. ஹரிஷோடு பேசிக் கொண்டிருந்தான்.



ஹரிஷோ, ‘என்ன பயபுள்ளைக்கு இன்னைக்கு நம்ம மேல பாசம் ஓவர்ப்ளோ ஆகுது…?. இது நல்லதுக்கு இல்லையே’ என மனத்திற்குள் எண்ணிக் கொண்டு.



நேத்ரனின் அருகில் நெருங்கி, “என்ன மச்சான், ரொம்ப பாசமா பேசுற... இதுல ஏதாவது உள்குத்து இருக்கா…” என கேட்க.



ஹரிஷின் தோளில் கைபோட்டு அணைத்து கொண்டு மெதுவாக வாய் அசைத்து, “நண்பேன்டா” என கூறியவன்



“ சும்மா உன் தங்கச்சி கிட்ட கொஞ்சம் விளையாடி பார்க்கலாம்ன்னு தான்...” என்றான் நேத்ரன்.



“ என்னடா சொல்லுற...” என ஹரிஷ் பாவமாய் பார்க்க.



“ ஒரு குட்டி பனிஷ்மெண்ட், காதலை மறுப்பேன் / மறைப்பேன் என சொன்னதிற்கான தண்டனை. சிம்பிள்ஆ சொல்லணும்னா லவ் நான்- அக்ஸெப்டிங் பனிஷ்மெண்ட்” (love non-accepting punishment) என கூறி கண் சிமிட்டினான் நேத்ரன்.



ஹரிஷோ, நேத்ரனை ஒரு விளங்காத பார்வை பார்க்க.



“ அது ஒண்ணும் இல்ல மச்சான், உன் அருமை தங்கச்சி என்ன சொன்னா…? அவளா வந்து என்னை லவ் பண்றேன்னு சொல்லமாட்டாளாம். நான் என் காதலை சொன்னாலும் ஒத்துக்க மாட்டாளாம். ஆனா தூரத்தில் இருந்துகிட்டே என்னை முறைச்சு முறைச்சு பார்த்து சைட் மட்டும் அடிப்பாளாம் என்னைய என்ன லூஸுன்னு நினைச்சிகிட்டாளா உன் தொங்கச்சி”(இல்லையா பின்ன).



“ இவளை பார்த்த நாள்ள இருந்து பைத்தியக்காரன் மாதிரி இவ நினைப்பாவே நான் சுத்திக்கிட்டு இருக்கேன். இவ என்னடான்னா கண்ட கழிசடையை எல்லாம் நினைச்சு பயந்துகிட்டு எனக்கு நோ சொல்லுவேன்ன்னு சொல்லுவா. அதை தெரிஞ்சும் நான் சும்மா இருக்கணுமா..?



இந்த நியூ இயர் ஈவினிங் புல்லா அவளோட நினைப்பு, யோசனை எல்லாம் முழுக்க முழுக்க என்னை பத்தி மட்டும் தான் இருக்கும். இருக்கணும் அதுக்கு தான் இந்த பனிஷ்மெண்ட்”



‘ டேய், அவ என்னை லூஸுன்னு நினைக்குறாளா அப்படின்னு நீயே கோவப்படுற இப்ப உன்னை நீயே பைத்தியக்காரன்னு சொல்லிக்கிற இதுல சூர்யாவுக்கு பனிஷ்மெண்ட் அது இதுன்னு உளருற ஐய்யோ! இவனுங்க போதைக்கு நம்மளை ஊறுகாய் ஆக்குறானுங்களே



எவன் கூட வேணா பிரெண்ட்ஷிப் வச்சிக்கலாம். இந்த லவ் பண்றவன் கூட மட்டும் பிரெண்ட்ஷிப் வச்சிக்கவே கூடாது. இப்ப நான் இவன் சொன்னதுக்கு ஆமாம் சொன்னாலும் அடி விழும். இல்ல சொன்னாலும் அடி விழும் அதுனால ஹரி, சைலேண்டா இருந்து எஸ் ஆயிடு இல்ல சிக்கி சின்னா பின்னம் ஆயிடுவ.



ஏதோ பனிஷ்மெண்ட் பத்தி சொல்லிகிட்டு இருந்தான் இல்லையா அது என்னன்னு கேட்டு அவனை டைவெர்ட் பண்ணிவிடு’ என தன் மனத்திற்குள் கூறிகொண்டான் ஹரிஷ்.



நண்பனின் அமைதி கண்ட நேத்ரன், “ என்னடா, சைலேண்டா இருக்க மைண்ட் வாய்ஸ் ரொம்ப லென்த்தா போகுதோ” என கேட்க.



“ஹி...ஹி...” என அசடு வழிய சிரித்து வைத்தவன், “அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லை டா, ஏதோ பனிஷ்மெண்ட் அப்படின்னு சொன்னீயே அதைப்பத்தி யோசிச்சிக்கிட்டு இருத்தேன்” என்றான் ஹரிஷ்.



நேத்ரனோ, அவனை மேல் இருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன் “நம்பிட்டேன்…” என்றான்.

ஹரிஷோ, ‘ இதுக்கு இவன் எதுவும் சொல்லாமலே இருந்திருக்கலாம். இதுக்கு மேல சைலெண்ட இருந்தா நம்மளை இன்னும் கேவலமா வச்சி செய்வான். அதுக்குள்ள நாமளே ஸ்டார்ட் பண்ணிடுவோம்’ என தனக்குள் சொல்லிக்கொண்டவன்.



“ அது என்ன பனிஷ்மெண்ட் கமல், அப்புறம் சூர்யா இந்த ஈவினிங் புல்லா உன்னைய மட்டும் நினைக்குற மாதிரி என்ன செய்ய போற “ என கேட்க.



நேத்ரனோ, கண்களில் விஷமமும் உதடுகளில் வசீகர புன்னகையும் தவழ, “நான் எதுவும் செய்யாமல் இருந்தாலே போதும். உன் பாசமலரோட ஃபுல் அட்டென்ஷனும் என் மேலதான் இருக்கும்” என்று கூற.

“ சும்மா கதை விடாத டா…” என கூறி நம்பாத பார்வை பார்த்தான் ஹரிஷ். “ நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கை இல்லைன்னா கொஞ்சம் அப்படி பாரு. உன் பாசமலர் என்ன பண்ணிக்கிட்டு இருக்குதுன்னு” என்றான் நேத்ரன்.



அங்கே சூர்யாவோ, நேத்ரனை பார்ப்பதும் பின் நிலம் பார்ப்பதுமாக இருக்க... குழம்பிய ஹரிஷ், “என்னடா நடக்குது இங்கே…? என நேத்ரனிடம் வினவ.



“ உன்னோட அருமை தொங்கச்சி, இங்க வந்த நாள் முதல் அவ ஏதாவது புதுசாவோ, இல்ல ஸ்பெஷலாவோ டிரஸ் பண்ணா நான் அவளுக்கு நல்லா இருக்கு அப்படின்னு காம்ப்ளிமெண்ட் பண்ணுவேன். ( ஜொள்ளு விட்டத எப்படி டீசெண்ட சொல்லுது பாரு பக்கி. நீ அவ சாதாரண டிரஸ் போட்டாலே காம்ப்ளிமெண்ட் பண்ணுவ). இன்னைக்கு அம்மணி போட்டு இருக்குறது புது டிரஸ், இதுவரைக்கும் நான் உன் உடன்பிறவா சகோதரியை பார்த்து, ஒரு ஸ்மைல்லோ, பார்வையால் ஒரு அஃப்ரிசியஷன்னோ பண்ணலை. அதான் மேடம், என்னைய நொடிக்கு ஒருதரம் பார்க்குறாங்க” என



“ டேய், அப்படின்னா இந்த ஈவினிங் புல்லா நீ சூர்யாவை பார்க்கவோ, பேசவோ மாட்டியா…?” என ஹரிஷ் கேட்க.



“ ஷாக்க...குறை... ஷாக்க... குறை...நான் சொன்னேனா அப்படின்னு அவ என்கிட்ட எதிர்பார்க்குற ரியாக்ஷன் கொடுக்க மாட்டேன் தட்ஸ் ஆல்...” என கூலாக சொன்னவனை.



“ஏன்டா, அவளை கஷ்டப்படுத்த மாட்டேன், வருத்தப்பட விடமாட்டேன் அப்படி இப்படின்னு ஆயிரம் மாட்டேன் சொல்லிட்டு இப்ப என்னடா பண்ணிக்கிட்டு இருக்க” என சிறு கோபமும், ஆற்றாமையுமாக கேட்டான் ஹரிஷ்.

கண்களில் சிறுவலியுடன் ஹரிஷை நோக்கியவன், “சூர்யாவை உனக்கு நான் சொல்லி தானே தெரியும். இந்த ஷார்ட் பீரியட்லையே உனக்கு அவ மேல இவ்வளவு பாசம் இருக்கும் பொழுது

கிட்டத்தட்ட ஐஞ்சு வருஷம், அதுவும் அவளுக்கும் சேர்த்து நானே காதல் பண்ணினேன். அவளுக்காக அவளையே இழக்க தயாரானேன். மத்தவங்க அவளை கஷ்டப்படுத்தினாலே துடிச்சு, தவிச்சு போற நான், ஏன் அவ கிட்ட இப்படி நடந்துகிறேன்னு ஒரு நிமிஷம் யோசிச்சு பாருடா...”



“ அவளுக்கு என்னோட நினைவுகள் மட்டும் போதுமாம். ஆனா எனக்கு அவளோட நினைவுகள் மட்டும் போதாது. என் டாலி மொத்தமா எனக்கே எனக்குன்னு வேணும். ஏன்ன இத்தனை வருஷம் அவளோட நினைவுகளோடு வாழ்ந்துகிட்டு இருக்க எனக்கு மட்டும் தான் தெரியும் அது எவ்வளவு கஷ்டம், வேதனையை கொடுக்கும்னு அந்த வலியை ஒரு நாளும் என் டாலி அனுபவிக்க நான் விடமாட்டேன். இந்த கொஞ்ச நேரமே நான் பார்க்காம, பேசாம தவிக்கிறா இனிமே லூஸுதனமா... யாருக்காகவும் என்னை விட்டு போகணும்னோ, பிரியணும்னோ யோசிக்க கூடாது. யோசிக்க என்ன அப்படி ஒரு நினைப்பே அவளுக்கு வரக்கூடாது அதுக்கு தான் இந்த பனிஷ்மெண்ட்...”



“ நான் இப்படி நடந்துகிறதுக்கு காரணம் அவ மனசுல நான் இருக்கேன் அப்டின்றதுனால தான். இதே ரியா மனசுல நான் இல்லைனா, நானும் எப்பவும் போல அவகிட்ட இருந்திருப்பேன்...” என்றான் கரகரப்பாக குரலில். அவனுடைய குரலிலேயே அவன் உணர்ச்சி வசப்பட்டுள்ளான் என்பதை அறிந்து கொண்ட ஹரிஷ், “ சாரி மச்சான்” என கூறி நேத்ரனின் தோளில் தட்டியவன்.



நேத்ரனின் மனநிலையினை மாற்றும் வண்ணம், “ஆமா, கமல் இந்த டிரஸ் கீழ இருக்குற ஷாப்ல நீயும் நானும் தானே போய் எடுத்துக்கிட்டு வந்தோம், இரு நான் போய் சூர்யா கிட்ட டிரஸ் நல்லா இருக்கா அப்படின்னு கேட்டுகிட்டு வரேன்” என நகர போனவனை.

“ நீ, ஒரு ஆணியும் புடுங்க வேணாம் உனக்கும் எனக்கும் மட்டும் தான் தெரியும் அது நாம வாங்கிட்டு வந்ததுன்னு அவங்களை பொறுத்த வரைக்கும் அது அம்மா வாங்கி கொடுத்தது தான். சோ நீ உன் திருவாயை மூடிக்கிட்டு சும்மா இருந்தாலே போதும்” என்றான் நேத்ரன்.



“ நீ வாங்கி தந்ததுன்னு தெரிஞ்சா சூர்யா எவ்வளவு சந்தோஷப்படும்... விடுடா நான் போய் சொல்லிட்டு வரேன்” என்றவனை. கடுப்புடன் பார்த்து, “ அந்த நொன்னைக்கு தான் வேண்டாம்ன்னு சொல்றேன். டிரஸ் நான் தான் வாங்கி கொடுத்தேன்னு தெரிஞ்சா அந்த சந்தோஷத்தில் இப்ப நான் அவகிட்ட காட்டுற இந்த ஒதுக்கம்(விலகல்) பெருசா தெரியாது. அதுனால இதை அவகிட்ட சொன்ன உன்னை கொன்னே போட்டுடுவேன் புரியுதா..?” என்றான் நேத்ரன்.



இங்கே இவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க சூர்யாவோ ஜெயஸ்ரீ கையினை சுரண்டி, “என்னடி அவங்க ரெண்டு பேரு மட்டும் தனியா பேசிக்கிறாங்க…?” என்றவளை,

முறைத்து பார்த்த ஜெய், “ இதுல உனக்கு என்னடி பிரச்சனை” என கேட்க.



‘ ஒண்ணும் இல்லை’ என சூர்யா தலையாட்டினாலும் இன்னமும் அவள் முகம் தெரியாததை கண்டு.



‘ மோச புடிக்கிற நாயை முஞ்ச பார்த்தாலே தெரியாது. அந்த அண்ணன் வந்ததில் இருந்து இவ பக்கம் பார்க்கலை. அதுக்கு தான் இந்த வாட்டம், வருத்தம் எல்லாம் நாம சொன்னா அவனை பத்தி தெரியாது அது அப்படி இல்ல, இது இப்படி நொள்ளன்னு ஆயிரம் காரணம் சொல்லுவா இப்ப என்ன செய்றான்னு பார்ப்போம்’ என மனத்திற்குள் சூர்யாவினை நொடித்து கொண்டாள் ஜெயஸ்ரீ.



அங்கு வந்த பிரேமா மற்றும் தங்கம்மா இருவரும், “சரி எல்லாரும் ரெடியா கிளம்பலமா…?” என கேட்கவும். அனைவரும் அறையை விட்டு வெளியேற தன் தாயின் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு நேத்ரனும் வெளியேற அவர்கள் சென்றது.



Sacre coeur தெருக்காட்சி....

பாரீஸ் தெருக்காட்சிகளின் மூன்றாவது பகுதி, மாண்ட்மார்டெர் நகரில் Sacre coeur சுற்றியுள்ள சதுரங்களில் நடைபெறுகிறது. சாம்பஸ்-எலிஸஸ் மீதுள்ளதைவிட, இது மிகவும் அமைதியானது மற்ற இடங்களை போலில்லாமல், இது நகரத்தின் அற்புதமான பரந்த பார்வையை வழங்குகிறது. வானவேடிக்கைகள் எதுவும் மலைமீது இல்லை என்றாலும் மற்ற இடங்களில் காணலாம். அக்கம் பக்கத்தில் கார்ப்ரேட்டுகள், பார்கள் மற்றும் கிளப் நள்ளிரவுக்கு பிறகு நடக்கின்றன.



அங்கு சென்றதும், சூர்யா சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு செல்ல முன் வர, “ வேண்டாம் சூர்யா, நானே தள்ளிக்கிட்டு வரேன்” என நேத்ரன் மறுக்க.



‘ இப்ப இவர் என்னை என்னன்னு கூப்பிட்டார் சூர்யானா…? ஏன் எப்பவும் ரியான்னு தானே கூப்பிடுவார்…? என்ன ஆச்சி இவருக்கு ஏன் இப்படி எல்லாம் நடந்துகிறார்…?’ ( அடிப்பாவி, நியாயமா அவன் ரியான்னு கூப்பிட்டா தான் கோபப்படணும். சூர்யான்னு கூப்பிட்டா சந்தோஷபடணும். நீ என்னமா உல்டாவா ரியாக்ட் பண்ற).



தங்கம்மாவும், ஹரிஷும் முன்னால் செல்ல, ஜெயஸ்ரீயும், சூர்யாவும் இடையில் வர அவர்களுக்கு பின்னால் நேத்ரன் ,பிரேமா தொடர அவர்கள் அங்குள்ள கடைகளை பார்த்த வண்ணம் முன்னேறி சென்றனர்.



முன்னிரவு நேரம் நெருங்கியவுடன் அங்குள்ள ஒரு ரெஸ்டாரண்டில் உணவு உண்டபின் பிரேமாவும், தங்கம்மாவும் கிளம்புவதாக கூற, சூர்யா அவருடனே வருவதாக சொல்லவும், ஜெயஸ்ரீயும் தானும் இப்படியே கிளம்புவதாக சொல்ல. பெண்கள் இருவரையும் நண்பர்கள் முறைத்து கொண்டிருந்தனர்.



இருவர் சொல்வதையும் மறுத்த பிரேமா சூர்யாவிடம், “ இன்னும் இங்க பார்க்க வேண்டியது நிறைய இருக்கு...” என்றும் ஜெயஸ்ரீயிடம், “இந்த நேரத்தில் செல்ல வேண்டாம், தங்களுடனே புத்தாண்டை கொண்டாடுமாறு சொல்லிவிட்டு நால்வரையும் நள்ளிரவு நெருங்கும் முன் ஹோட்டலுக்கு வருமாறும். அங்கு நடைபெறும் புத்தாண்டு கொண்டாடத்தில் கலந்து கொள்ளுமாறும் சொல்லி விடைபெற்றார்.





அவன் உயிரானவள்...






 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 21



நேத்ரனோ, ஹரிஷிடம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்மாறு சொல்லிவிட்டு, தன் அன்னை மற்றும் தங்கம்மாவுடன் நடக்க சூர்யாவும் நாற்காலியில் இருந்து எழ, என்னவென பார்த்த நேத்ரனிடம், வண்டி வரை வருவதாக சொல்லவும், அவன் மறுக்க நினைக்க. பிரேமாவோ, சரிவா என அழைக்க… ஜெய் பாதி சாப்பாட்டில் இருந்ததால், அவளையும் ஹரிஷையும் தவிர்த்து இவர்கள் நால்வர் மட்டும் கிளம்பினர்கள்.



ஏற்கனவே, வண்டி ஓட்டுனருக்கு அழைத்து சொல்லி இருந்தான் நேத்ரன். இவர்கள் உணவருந்திய இடத்திற்கு எதிரில் வண்டி நின்றிருக்க ஓட்டுநர்க்கு அழைத்து கேட்க, “புத்தாண்டு கொண்டாட்ட கேளிகைகளால் நெரிசல் ஏற்பட்டு உள்ளதாகவும், வண்டியினை திருப்ப முயன்றால் நெரிசலில் சிக்கிக்கொள்ள நேரும்” என கூற.

அவரை அங்கேயே இருக்க சொன்னவன், அச்சாலையை கடந்து பிரேமா, மற்றும் தங்கம்மாவை அழைத்து சென்று வண்டியில் ஏற்றிவிட்டு ( மாற்று திறனாளிகள் பயன்படுத்தும் வழியினை உபயோகித்து) ஹோட்டலை அடைந்ததும் தனக்கு அழைக்கும்மாறு சொல்லிவிட்டு அவர்களிடம் விடை பெற்று திரும்ப சாலையினை கடந்து வர.



அப்பொழுது பாதையில் கட்டுப்பாடு இல்லாமல் ஒரு கார் வர நேத்ரன், அதனை கவனிக்கவில்லை. ஏனெனில் அவன் நடைபாதையில் நடந்து வர, அப்பாதையில் வண்டி வரும் என அவன் எதிர்பார்க்கவில்லை. மேலும் வாகன நெரிசல், கேளிக்கை, கொண்டாட்டங்கள் காரணமாக ஒரே சத்தம், எனவே தன்னை நோக்கி வரும் ஆபத்தினை நேத்ரன் உணரவில்லை.



முதலில் அந்த வண்டியை கண்ட சூர்யா, யாரோ தவறாக வருகிறார்கள் என நினைக்க, அவ்வண்டி நடைபாதையில் பயணிக்க தன் உலகமே ஒரு நொடி ஸ்தம்பித்ததாக உணர்ந்தாள்.



தன்னவனுக்கு ஆபத்து என தெரிந்ததும் மற்ற எதை பற்றியும் சிந்திக்காது தன் உயிரை காப்பது ஒன்றே குறியாக அவனை நோக்கி ஓடினாள் சூர்யா.



“ த... தனு...தனுஊஊஊஊ...” என அவள் அவனை அழைத்த அழைப்புகள் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்போல் வீணாக,



அவ்வழைப்புகள் அவனை சென்றடையும் முன் அவ்வண்டி பெரும் சத்தத்துடன் நேத்ரனின் அருகில் உள்ள கம்பத்தில் மோதியதை கண்டாள்.



நேத்ரனுக்கும் அந்த கம்பத்திற்கும் உள்ள இடைவெளி ஒரு சில அடி தூரமே இருக்க, அந்த வாகனம், மோதியதினால் தனக்கு வெகு அருகில் கேட்ட சத்தத்தில் திரும்பிய நேத்ரன், ஒரு நிமிடம் அதிர்ந்து தான் போனான். மறுநிமிடமே, தன்னை சுதாரித்து கொண்டவன், அந்நிலையிலும் தன்னவளின் மேல் கவலை கொண்டு அவள் என்ன செய்கிறாள் என காண திரும்பியவனின் மீது மலர் பந்தென விழுந்தாள் சூர்யா.



நேத்ரனுக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என புத்தி உரைத்தாலும் மனம் நடுங்கவே செய்தது. நிகழ்ந்ததை நினைத்து.



ஓடிவந்த சூர்யா, அதே வேகத்தில் எக்கி அவனின் கழுத்தினில் தன் கைகளை மாலையாக்கி அவன் முகம் தன் மார்பில் புதையும் படி அணைத்திருந்தாள். அவ்வளவு இறுக்கமாக இருந்தது அவளின் அணைப்பு.



அவளைவனின் நலத்தினை அறியவும். எந்த வித இடரும் அவனை நெருங்காமல் காப்பது போல ... மேலும் தன்னுள் இறுக்கி கொண்டாள்.

அவனை விட்டு விலக வேண்டும் என எண்ணியவள் விரும்பியே அவனுள் சரண் புகுந்தாள்.

ஒருநிமிடம்... என்ன நடந்தது என புரியாமல் நின்றவனை நிகழ்விற்கு கொண்டுவந்தது.



சூர்யாவின் இறுகிய அணைப்பும்... அவள் உச்சரித்த பெயரும்... அவளின் முத்தமும் தான்.



சூர்யா, நேத்ரனை அணைத்த வேகத்தில் நின்ற இடத்தல் இருந்து ரெண்டடி பின்னால் சென்றவன், பின் சுதாரித்து நின்று, தன்னை அணைத்திருப்பவளை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு, அவள் உச்சரித்த பெயரும், தன்னவளின் கண்களில் கண்ணீருக்கு இணையாக பொங்கி வழிந்த காதலை கண்டு... இந்த அணைப்பும், தவிப்பும் தனக்கானது என கர்வம் கொண்டவன், தன்னுடைய இத்தனை வருட காத்திருப்பு வீண்போகவில்லை என்ற மகிழ்வில், “மை கியூட் டாலி...” என கூறி அவளை மேலும் தன்னோடு இறுக்கி கொண்டு... அவளின் அணைப்பில் திளைத்தான் அவளின் உயிருக்கு உயிரானவன்...



“ தனு...தனு... தனு…” என உதடுகள் அவன் பெயரை உச்சரித்து கொண்டிருக்க அவளின் விழிகள் கண்ணீர் சரம் தொடுக்க.

அவன் நலமாக உள்ளதை தன் மனத்திற்கு உணர்த்தும் பொருட்டு... அவனின் கேசம், நெற்றி, கன்னம், தோள்கள் என தன் நடுங்கும் கைகளால் தடவி கொடுத்து கொண்டிருந்தவள். அவன் கேசத்தை கோதி கொண்டிருந்த கைகளால், அவனின் தலையினை தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்து கொண்டாள். அவளின் செய்கை தொலைந்ததாக (இழந்து விட்டதாக) எண்ணிய பொம்மை திரும்பவும் கிடைக்க பெற்ற குழந்தை எப்படி அதனை தன்னோடு இறுக்கி கொள்ளுமோ… சூர்யாவும் அத்தகைய மனநிலையில் இருந்தாள்.



அந்நேரம், அவளுக்கு தன் வாழ்வில் நடந்த பிரச்சனைகள், விவேக் பற்றிய கவலை, தான் செய்து வைத்திருந்த தீர்மானம் என எதுவும் நினைவில் இல்லை. சூர்யாவின் ஒட்டு மொத்த நினைவு, உணர்வு, உயிர், உலகம் என அனைத்துமாக இந்நிமிடம் நிறைந்திருந்தது நேத்ரன் அதாவது அவளின் தனு… மட்டுமே.



தன்னவனின் நேசத்தினை மறுக்க நினைத்தவள், தன்னுடைய காதலை மறைக்க முடிவு செய்தவள், தற்பொழுது நடந்த நிகழ்வால்... எங்கே தன்னுயிரானவனை இழந்து விடுவோமோ என்ற பதட்டத்திலும், பயத்திலும் தான் என்ன செய்கின்றோம்… என்ன சொல்கிறோம் என அறியாமல். தன் மனத்தினை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் சூர்யா. அவளவனின் கியூட் டாலி.



“ த... தனு… ஒ… ஒரு நி...நிமிஷம் எ… எனக்கு உ...உயிரே போ...போயிடுச்சு …. தெ...தெரியுமா..? உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சோன்னு ரொ... ரொம்ப ப... ப...பயந்துட்டேன். ஏன் என்னை தனியா விட்டுட்டு போனிங்க..?” என கூறிக் கொண்டே அவனின் பின்கேசத்தினை இறுக்கி பிடித்து, “ ப்ளீஸ் இனிமே இப்படி என்னை தனியா விட்டுட்டு போகாதீங்க…” என கூறிக் கொண்டே முன்னிலும் இறுக்கமாக அவன் முகத்தினை தன் மார்பில் புதைய செய்தவள், அவனின் உச்சியில் தன் முதல் முத்திரையை பதித்தாள். அவனின் உயிரானவள்...



அவளின் வாய்மொழியிலும்... இதழ் முத்தத்திலும் உயிர் மெய் என இரண்டும் சிலிர்த்த நேத்ரன், தன் அணைப்பை இன்னும் இன்னும் இறுக்கினான்.



முதலில் நேத்ரனின் அணைப்பில் நெகிழ்ந்தவள், அவனின் அணைப்பு இறுக இறுக… அதில் தன்னிலை அடைந்த சூர்யா, சுற்றுப்புறம் உரைக்க தான் இருக்கும் நிலை உணர்ந்து நாணம் மேலிட...

தன் அணைப்பில் இருந்து நேத்ரனை விலக்க முற்பட அவனோ, இத்தனை நேரம் தன்னவளின் மார்பு சூட்டின் கதகதப்பில் பூனை குட்டியாய் அவளின் அணைப்பில் சுகம் கண்டவன், அவ்வணைப்பின் சுகத்தினை இழக்க விரும்பாதவன் போல்… தன் முகத்தினை விலக்காமல் இடமும் வலமும் அசைத்து தன் விருப்பமின்மையை தெரிவித்து… மீண்டும் அவளின் பெண்மையின் மென்மையில் முகம் புதைக்க முயல.



நேத்ரனின் செய்கையில் கூச்சம் நெட்டி தள்ள இம்முறை அவனின் தோள்களில் கரம் வைத்து, தரையில் பாதம் பதிக்க முற்பட... அவளின் கால்கள் சமவெளியை அடையாமல் காற்று வெளியில் துழாவியது.



காரணம்… சூர்யா, நேத்ரனை நோக்கி ஓடிவந்து அவனின் உயரத்திற்கு எம்பி தோளில் தன் கைகளை மாலையாக்கி அணைத்ததால் சிறிது தடுமாறியவன், அவளை தன் உயரத்திற்கு தூக்கி தன்னோடு அணைத்த பிறகே சமாளித்து நிற்க முடிந்தது. அவள் அவனை நோக்கி வந்த வேகம் அப்படி...



அவளுடைய தேகம் மொத்தமும் அவளைவனின் உடலோடு உரசி கொண்டிருக்க இதுவரை அதனை உணராதவள், உணர்ந்த நொடி முதல் அவளை வெட்கமும், கூச்சமும் ஆட்கொள்ள… நேத்ரனின் செவியின் அருகில் தன் இதழ்களை கொண்டு சென்று, மிகவும் மென்மையான குரலில், “ ப்ளீஸ், கீழே இறக்கி விடுங்க…” என கூற.



சூர்யாவின் கெஞ்சலில் அவளின் முகத்தினை நிமிர்ந்து பார்க்க… தன் கரங்கள் மொத்தமாக அவள் மென்னுடலை தாங்கி நிற்பதினால் வெட்கம் கொண்டு தன் முகம் நோக்காமல் விழி தாழ்த்தி இதழ்கள் துடிக்க கன்னங்கள் சிவக்க தன்மீது சாய்ந்து இருந்தவளின் மலர்முகம்… அந்த கள்வனை இன்னும் இன்னும் பித்தம் கொள்ள செய்ய.



இத்தருணத்தினை விட்டால்… தன் காதலை சொல்ல மற்றொரு சிறந்த தருணம் வாய்க்காது என எண்ணிய நேத்ரன்.



சூர்யாவை மொத்தமாக கீழ் இறக்கி விடாமல், தன் முகத்திற்கு அருகாமையில் அவளின் தாமரை வதனத்தை கொண்டு வந்து தன் ஒட்டு மொத்த காதலையும் கண்களில் தேக்கி உயிர் உருகும் குரலில், “ டாலி... கொஞ்ச நேர முன்ன உன்னோட உயிரே போயிடுச்சுன்னு சொன்ன இல்ல… அப்படி ஒரு விஷயம் என்னை மீறி எப்பவும் நடக்காது டாலி.



பிகாஸ் “யுவர் பிரீத் இஸ் பாண்டட் வித் மை ஹார்ட் பீட்... அண்ட் மைன் இஸ் இன் யூவர்ஸ்”.... (your breath is bonded with my heart beat and mine is in yours).... உன்னை பார்த்த நாள் முதல்... மை ஹார்ட் டெல்ஸ் தட் யூ ஆர் மை சோல் மேட்... ஐ… ஐ லவ் யூ டாலி... ஐ லவ் யூ டில் மை லாஸ்ட் பிரீத்...” என கமலநேத்ரன் தன் காதலை, அவளின் விழி பார்த்து உரைக்க.

தன்னவன் காதல் உரைத்த தருணத்தினை பொக்கிஷமாய் தன் மனத்தில் சேமித்து வைத்து கொண்டாள் சூர்யா.



அவன் கண்களில் தெரிந்த தன் மீதான காதலில் உயிர் கசிய உள்ளம் உருக நின்றாள் பாவை. அவனின் காதலில் கர்வமும், கலக்கமும் ஒருங்கே கொண்டாள் பேதை.



கர்வம்...! அவன் காதல் தன்னிடத்தில் என்பதால்.

கலக்கம்...! இத்தகைய காதலை இழந்து விடுவோமோ என்று.



இந்த அலைப்புறுதலுக்கு ஒரு முடிவு வேண்டும். இனியும் தன்னால் இந்த மன அழுத்தத்தினை தாங்க முடியாது என எண்ணி, தன் வாழ்வில் நடந்தவைகளை பற்றியும், அந்த விவேக் பற்றியும் கூற வருகையில்.



இவ்வளவு நேரமும் தன்னவளின், முகத்தில் வந்து போகும் உணர்வுகளை பார்த்து கொண்டிருந்தவன்.



தன் காதல் கேட்டு, சூர்யாவின் முகம் பூவாய் மலர்ந்ததும், சிறிது நேரத்தில் அவளின் மதி முகத்தில் கலக்கம் சூழவும், பின்பு தீவிர யோசனைக்கு பிறகு அவளின் அதரங்கள் அசைய முற்படும் பொழுது, சூர்யாவின் இதழ்களை உரசியும் உரசாமலும் தீண்டிய நேத்ரன், “இப்ப எதுவும் சொல்லாத டாலி, நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். எனக்கு என்ன ஆச்சோன்னு நீ துடிச்ச துடிப்பும், தவிப்பும் உன்னோட காதலை எனக்கு சொல்லிடுச்சு. எனக்கு உன்னோட காதல் புரிஞ்ச மாதிரி உனக்கு எப்ப என்னோட காதல் புரியுதோ அப்ப உன்னோட பதிலை சொல்லு…” என கூறித் தனக்கு தானே ஆப்பினை வைத்து கொண்டான் நேத்ரன்.



(டேய், அவளே இப்பதான் ஒரு முடிவுக்கு வந்து அந்த விளங்காதவனை பத்தி சொல்ல வந்தா, அதையும் கெடுத்த உன்னோட காதலை சொன்னியே.... தெளிவா சொன்னியா பார்த்த நாள் முதல அப்படின்னா நீ அவளை பார்த்தது 5 வருஷத்துக்கு முந்தி அவளுக்கு தெரிஞ்சி இப்ப கொஞ்ச நாள் முந்தி)



“அதுக்குன்னு ரொம்ப நாள் எல்லாம் வெயிட் பண்ண வைக்காத டாலி... நியூ இயர் ஸ்டார்ட் ஆகுறதுக்குள்ள சொல்லிடு” என கூறி கண்சிமிட்டியவன், அவளின் மூக்கோடு மூக்குரசினான் அவளின் இதய கள்வன்.



அவன் கூறிய பாவனையில் சூர்யாவின் முகத்தில் மெல்லிய புன்னகை மிளிர... ஏற்கனவே அவன்பால் வீழ்ந்த மனதை மேலும் வீழ்த்தியது அவனின் மென் உரசல். அவன் முத்தமிட்டிருந்தால் கூட இத்தகைய உயர்அழுத்த மின்சாரம் தாக்கியிருக்காது... அவனுடைய உதடுகள் பட்டும் படாமலும் உரசியதால் ஏற்பட்ட மென்தீண்டல் அவளின் உயிர் வரை சென்றுச் சிலிர்க்க வைத்தது.



சூர்யாவின் விழிகளில்... காதல் கரைபுரண்டோட மெல்ல அவன் தலை நிமிர்த்தி தன் கரங்களினால் கன்னங்களை தாங்கி கண்ணோடு கண்ணோக்கி,

“ வாய் வார்த்தையாய் சொன்னா தான் உங்கள் மீதான என்னோட காதல் உங்களுக்கு தெரியுமா தனு…” என கேட்க.



ஏற்கனவே, சூர்யாவின் தன்மீதான நேசத்தினை, அவள் வாய்மொழியாக அறிந்தத்தினாலும் அவளின் விழிமொழியில் தெரிந்த அளவிடமுடியா காதலிலும்... நேத்ரனின் தலை மறுப்பாக இடம் வலம் என அசைக்க.



அதில் மென்னகை சிந்தியவள், “ அப்புறம் எதுக்கு என்னோட காதலை சொல்ல சொல்லி கேட்டு, எனக்கு டைம் கொடுத்தீங்க…?” என சூர்யா வினவ.



“ அது... வந்து டாலி, நான் லவ் சொன்னதும் பஸ்ட் நீ ஹாப்பி ஆன உடனே முகத்தை ஒரு மாதிரி வச்சிக்கிட்டு யோசிச்சியா அதான் எங்க ஏதாவது நெகடிவ்வா, இல்ல மனசு சங்கடப்படுற மாதிரி எதையாவது சொல்லிடுவியோன்னு தான் இப்ப சொல்லாத அப்புறம் சொல்லுன்னு சொன்னேன்” என நேத்ரன் தன்னிலை விளக்கம் தர.



“ அது என்ன விஷயம் அப்படின்னு உங்களுக்கு தெரிஞ்சிக்க வேண்டாமா..?” என்றாள் சூர்யா.

அவள் முடிக்கும் முன்பே “வேண்டாம்…” என பட்டென்று கூறிய நேத்ரன், “ அந்த விஷயத்தை பத்தி யோசிக்கும் பொழுதே உன் முகம் வாடி போச்சு உன்னை சங்கடப்படுத்துற எந்த விஷயமும் நீ, எனக்கு சொல்லவேண்டாம். அதுவும் இப்ப நான் தெரிஞ்சிக்க விரும்பல. அதுவும் இல்லாமல் இன்னைக்கு உன்னோட மனசுல வேற எந்த விஷயத்திற்கும் இடம் இருக்க கூடாது. நான், என்னோட காதல் இது மட்டும் தான் உன் மனசு முழுக்க இருக்கணும்…” என நேத்ரன் கூறியவுடன். சூர்யாவின் விழிகளில் இருந்து ரெண்டு சொட்டு கண்ணீர் சிந்த, அதற்கு எதிராக பெண்ணாளின் இதழ்களில் புன்னகை பூத்தது.



“ ம்ச்… இப்ப எதுக்கு இந்த கண்ணீர்” என கேட்டுக்கொண்டே, தன் கன்னங்களினால் அவளின் கன்னம் தொட்ட விழிநீரை துடைக்க சூர்யாவின் கன்னங்கள் இரண்டும் ரோஜாவாய் சிவந்தது.



நேத்ரனும், சூர்யாவும் சென்று வெகுநேரம் ஆகியும் திரும்பாமல் இருக்க அவர்கள் சென்ற பாதையில் ஏதோ விபத்து நடந்ததாக அறியவும். அந்த பாதுகாவலனின் தகவல் ஹரிஷை அடையவும் சரியாக இருக்க ஹரிஷும், ஜெயஸ்ரீயும் இவர்கள் இருக்கும் இடம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.



ஏற்கனவே நேத்ரன், சூர்யாவை தூக்கி கொண்டிருப்பதை அவ்வழியில் போவோரும் வருவோரும் ஒரு புன்னகையுடன், “கியூட் அண்ட் பியூட்டிபுல் கப்பில்ஸ்” என கடந்து செல்ல, புகைப்படம் எடுக்க முயன்றவர்களிடம், “ப்ளீஸ் நோ பிக் “என நேத்ரன் சொல்ல, பலர் சாரி சொல்லி சென்றுவிட ஒரு சிலர் புகைப்படம் எடுக்க, அங்கிருந்த நேத்ரனின் பாதுகாவலர்கள், சூர்யா அறியாமல் அவர்களை அப்புறபடுத்தினர்.



ஆம் நேத்ரனும் சூர்யாவும், பிரேமா மற்றும் தங்கம்மா இருவரையும் வழியனுப்ப வருகையிலே அவர்கள் நால்வரையும் பின் தொடர்ந்து வந்தவர்கள் இருவரில் ஒருவனை சூர்யாவிற்கு அரணாக நிற்க சொல்லிவிட்டு, மீதம் உள்ளவனை பிரேமா, தங்கம்மா இருவருக்கும் பாதுகாப்பாக அனுப்பி வைத்தான். தன் தாய் தந்தை இருவரும் விபத்துக்குள்ளாகி, உற்ற நேரத்தில் உதவி கிடைக்காமல், அதனால் தன் தந்தையினை இழந்ததில் இருந்து தன் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு அவன் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய தவறுவதில்லை.

சூர்யாவை நோக்கி வந்து கொண்டிருந்தவன் மீது தான் கார் தன் கட்டுப்பாட்டை இழந்து மோத வந்தது.



அவள் உயிரானவன்...







அத்தியாயம் 22



நேத்ரனும், தனக்கு பின்னால் கார் வருவதை கவனிக்க வில்லை. ஏனெனில் நேத்ரனுக்கு முதுகு காட்டி சூர்யாவையும் அந்த உளவாளி மீது பார்வை பதித்திருந்தவன், சூர்யாவின் பதட்டம் கண்டே திரும்ப, அப்பொழுது தான் நேத்ரனை தொடரும் ஆபத்தினை அறிந்து தன்னுடைய தொலைபேசியில் இருந்து தொடர்பு கொள்ள,நேத்ரனும், வந்த அழைப்பை தன்னுடைய ப்ளூடூத் மூலமாக எடுக்க சொன்ன தகவலில் உடனே சுதாரித்து கடைசி வினாடியில் ஒதுங்க அந்த கார் அந்த கம்பத்தில் மோதியது.



இத்தகவலை ஹரிஷுக்கு தெரிவித்து விட்டு அந்த பாடிகார்ட், அவ்வாகனம் நோக்கி செல்ல அதன் உள்ளே ஒருவன் நன்றாக குடித்து விட்டு முழு போதையில் வண்டி ஓட்டியுள்ளான். அவனை அங்கிருந்த காவலர் வசம் ஒப்படைத்துவிட்டு தன் வேலையினை தொடர்ந்தான் அந்த பாதுகாவலன்.



தூரத்திலேயே ஹரிஷும், ஜெயஸ்ரீயும் வருவதை கண்டுவிட்ட சூர்யா. நேத்ரனிடம், மீண்டும், “அண்ணாவும், ஜெய்யும் வராங்க ப்ளீஸ் இறக்கி விடுங்க” என கூறிக் கொண்டே அவன் கைகளில் இருந்து இறங்க முயற்சி செய்ய அவளின் முயற்சி முயற்சியாக மட்டுமே இருக்க, அவனிடம் இருந்து அவளால் ஒரு இன்ச் கூட விலக முடியவில்லை என்பதைவிட அவன் விலக அனுமதிக்க வில்லை.



சூர்யா, அவனை என்னவென பார்க்க அவனும் அவளை பதில் பார்வை பார்த்து, “என் பெயர் சொல்லி சொல்லு ரியா டாலி…” என தன் நெற்றி கொண்டு அவள் நெற்றியோடு முட்டி கூற.



ஷ்... என தன் நெற்றியை தேய்த்துக் கொண்டே கண்கள் சுருக்கி இதழ் குவித்து அவனின் தாடை தாங்கி, “ப்ளீஸ்…நேத்ரன்” என சொல்ல.



“ யாரு டாலி, நேத்ரன்… எனக்கு அந்த பேர் பிடிக்கலை. கொஞ்சம் முன்ன செல்லமா, கிக்கா ஒரு பேர் சொல்லி கூப்பிட்ட இல்ல. அந்த பேர் சொல்லி கூப்பிடு நான், உன்னை இறக்கி விடுறேன்” என பேரம் பேசினான் அந்த தொழிலதிபன்.



சூர்யாவோ, இவன் செய்யும் சேட்டையில் வெட்கி, மாட்டேன் எனும் விதமாக மறுப்பாய் தலை ஆட்ட.



“ அப்ப, நானும் இறக்கி விட மாட்டேன். அவங்க வர வரைக்கும் ஏன் வெயிட் பண்ணிக்கிட்டு…? நாமே அவங்க கிட்ட போகலாம் வா” என கூறி நடக்க அரம்பித்தவனின் செயலில் பதறி போனவளாக சூர்யா, அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி, கால்களை உதறி என அவளின் மறுப்பை தெரிவிக்க.



அவன் எதையும் கண்டுகொள்ளவில்லை என அறிந்து கடைசியில், அவனின் சட்டை காலர்களை இறுக பற்றி கொண்டு, “ தனு... இறக்கி விடுங்க அவங்க பார்த்துட போறாங்க” என்ற சூர்யாவின் குரல் சிணுங்கலாய் ஒலிக்க. மனமே இல்லாமல் அவளை மெது மெதுவாய் கீழ் இறக்கி விட்டான் அவளின் அன்புக்குரியவன்.



நேத்ரன், சூர்யாவினை இறக்கிவிடவும் ஹரிஷும் ஜெயஸ்ரீயும் இவர்களை நெருங்கவும் சரியாக இருக்க.



நேத்ரனின் அருகில் வந்த ஹரிஷ், “ ஏன்டா, உனக்கு எதுவும் ஆகலையே” என அணைத்து கொள்ள.



“ டேய், எனக்கு ஒண்ணும் இல்ல இப்ப தான் உன் தங்கச்சி ஸ்டாப் பண்ணா நீ எதையாவது செஞ்சி அவளை மறுபடியும் ஸ்டார்ட் பண்ண வைக்காதே” என ஹரிஷை அணைத்தவாறே கூறியவன்.



தன் கைகளை தலைக்கு மேல் தூக்கி சோம்பல் நெட்டி முறித்தான். அவனின் செயலை பார்த்த ஹரிஷ் “ என்னடா, ஹெர்குலஸ் மாதிரி உலகத்தையே தூக்கி சுமந்துகிட்டு இருந்த மாதிரி பலமா நெட்டி முறிக்குற” என.



நேத்ரனோ, உதடுகளிள் புன்னகை அரும்ப, “ஆமாம் டா, நானும் இவ்வளவு நேரமும் என் உலகத்தை தூக்கி சுமந்து கிட்டு தான் இருந்தேன். அந்த ஹெர்குலஸ் முதுகுக்கு பின்னாடி தோளில் சுமப்பான். ஆனா நானோ முன்னாடி என் நெஞ்சில் சுமந்தேன்…” என கூறி சூர்யாவினை பார்த்து கண்சிமிட்ட.



சூர்யாவோ, ‘ ஐய்யோ..! இவருக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்ல அண்ணாவும், ஜெய்யும் இருக்கும் பொழுது என்ன பேச்சு பேசறார். அதுவும் பத்தாதுன்னு கண்ணை வேற அடிக்குறார்…’ என நேத்ரனை மனத்திற்குள் திட்டி கொண்டிருந்தாலும் தன்னவனின் கூற்றில் மனம் மகிழ தான் செய்தது.



ஜெயஸ்ரீயோ, ‘இவ முகம் அழுத மாதிரி இருந்தாலும் பிரைட்டா இருக்கு. இந்த அண்ணன் வேற சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசுறாங்க. ஒண்ணும் புரியலை இந்த குண்டுஸ், தனியா சிக்கட்டும் என்னன்னு ஒரு என்குயரி பண்ணிக்கலாம்’ என தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்.



கிட்டத்தட்ட ஹரிஷும் இவ்வாறே எண்ணினான்.( இது தான் மேட் போர் ஈச் அதர் அப்டிங்கிறதோ)



ஹரிஷ், நேத்ரனிடம், “சுத்தி பார்க்கலாமா..? இல்ல ஹோட்டலுக்கு திரும்பலாமா..?” என கேட்க அவனோ, சூர்யாவினை பார்க்க, சூர்யாவோ ஜெய்யிடம் கேட்க.



அவளோ, “ஹோட்டலுக்கே போகலாம் “ என கூற.

அனைவரும் அவர்களின் வண்டி நோக்கி சென்றனர்.



விவேக், ஏற்பாடு செய்த உளவாளியோ, அவர்களை ஒரு புகைப்படம் கூட எடுக்க முடியாமல் திண்டாடினான்.



அந்நேரம் அவனுக்கு அழைத்த விவேக், “ வாட் ஹாப்பன்? இன்னும் ஏன் எனக்கு ஒரு பிக் கூட சென்ட் பண்ணலை” என அவனிடம் காய்ந்து கொண்டிருந்தான். எங்கே அவன் அவர்களை புகைப்படம் எடுக்க தொடங்கும் போது சொல்லி வைத்தது போல் தடங்கல்களும், பிரச்சனைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வர அவன் மட்டும் என்ன செய்வான். இதில் சற்றுமுன் சூர்யாவும், நேத்ரனும் இருந்த நிலையினை இவனிடம் சொன்னால் மேலும் காய்வான் அதனால் உண்மையை மறைத்து, “ இங்க கூட்டம் ஜாஸ்தி சார், அதனால என்னால பிக் எடுக்க முடியலை… அவங்களும் கிளம்பிட்டாங்க” என கூற.

அங்கே விவேக்கோ, “ஷிட் அவ கிளம்பிட்டா அப்படின்னு சொல்ல தான் நான் உனக்கு இவ்வளவு செலவு செய்றேனா போ… ஹோட்டலுக்கு போய் அவங்க நெருக்கமா இருக்க மாதிரி உள்ள புகைப்படம் எடுத்து அனுப்பு. எனக்கு வேணும் “ என அவனை ஒருவழி ஆக்கி கொண்டிருந்தான் விவேக்.( ஐய்யோ..! விவேக் நீ என்னதான் தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் அப்படி ஒரு போட்டோ உன்னோட உளவாளியால எடுக்க முடியாது ).



அந்த உளவாளியோ தயங்கி தயங்கி, “சார், அவங்க ஹோட்டல்குள்ள எல்லாம் போக முடியாது. ஏன்னா இன்னைக்கு நியூ இயர் இவ் செலேப்ரஷன் சோ, அங்க தங்கியுள்ள கெஸ்ட் மற்றும் இன்வைட் பண்ணவங்களுக்கு மட்டும் தான் என்ட்ரி அல்லோவெட்...” என திக்கி திணறி சொல்லி முடிக்க.



அந்த பக்கம் கேட்டுக் கொண்டிருந்தவனோ கோபம் கண்ணை மறைக்க பேசிக் கொண்டிருந்த அலைபேசியை தூக்கி அடித்திருந்தான். அது சுவற்றில் மோதி உயிர் விட்டிருந்தது.

இங்கே விவேக்கோ, அடிபட்ட புலியாய், சீற்றம் கண்டு உறும அங்கே சூர்யாவும், நேத்ரனும் தங்களுக்கான புது உலகத்தில் மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

சூர்யா, நேத்ரன், ஹரிஷ், ஜெயஸ்ரீ என அனைவரும் ஹோட்டல் வந்த பின்பு பெண்கள் இருவரும் அறைக்கு செல்ல முற்பட, நேத்ரனோ, “வாங்க எல்லாரும் நியூ இயர் பார்ட்டில கலந்துகிட்டு கொஞ்ச நேரம் இருந்திட்டு போகலாம்” என கூற( அவனிற்கு இன்னும் சிறிது நேரம் சூர்யாவோடு நேரம் செலவிட விருப்பம் கொண்டு எதை பற்றியும் யோசியாமல் அவ்வாறு சொல்ல).



ஹரிஷ் அதிர்ச்சியுடன் நேத்ரனை காண அவனோ இவ்வுலகத்திலேயே இல்லாமல் இருக்க, ‘இவன் என்ன நினைச்சி சூர்யாவையும், இந்த குச்சி சிப்ஸையும் பார்ட்டி ஹால்குள்ள அழைச்சிக்கிட்டு போறான்னு தெரியலையே பார்ட்டி ஸ்டார்ட் பண்ணலைன்னா தப்பிச்சோம். ஸ்டார்ட் ஆகி இருந்தது அவ்வளவுதான்’ என தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.



ஜெயஸ்ரீயோ, ‘அவன் அவன் தண்ணி போட்டு பண்ற சேட்டையெல்லாம் பார்க்கணுமா கடவுளே’ என மானசீகமாக தலையில் அடித்து கொள்ள.



சூர்யாவோ, இது போன்ற பார்ட்டிகளில் கலந்து கொள்ளாததினாலும் இங்குள்ள கலாசாரத்தினை வாய்மொழியாகவே கேள்வி பட்டதினால் எந்தவித பயமும் இல்லாமல் சென்றாள்.



பார்ட்டி ஹால் நெருங்க நெருங்க நேத்ரன், சூர்யாவின் கரம் பற்ற, ஹரிஷோ ஜெயஸ்ரீயை ஒட்டி நடந்து வந்தான்.



அவர்கள் அனைவரையும் ஹாலின் வாசலுக்கே வந்து வரவேற்றார் ஹோட்டலின் மேலாளர்.

“ தங்களுக்கு எந்த வித சிறப்பு கவனிப்பும் தேவையில்லை” என மறுத்த நேத்ரன், அவரை அவரின் வேலையினை பார்க்க சொல்லி அனுப்பிவிட்டான்.

ஹரிஷோ, மனம் கேளாமல் நேத்ரனை நெருங்கி, “கமல் கண்டிப்பா நாம பார்ட்டி அட்டெண்ட் பண்ணனுமா” என கேட்க.



அவன் கேட்கும் பாவத்தினை புரிந்து கொள்ளாமல், “ வாடா, கொஞ்ச நேரம் இருந்திட்டு கிளம்பி போகலாம்” என கூறி முன்னேற, (ரைட் கட்டதுரைக்கு இன்னைக்கு கட்டம் சரி இல்லை அம்மா, பார்ட்டி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அட்டெண்டென்ஸ் போட்டுட்டு போக சொன்னாங்க. இப்ப உள்ள என்ன நிலமையோ..? கடவுளே நீ தான் காப்பத்தணும் என கூறி நேத்ரனை பின் தொடர்ந்தான்).



அங்கே உள்ளே சென்றதும் ஒன்றும் புரியாமல் பார்க்க அங்கு விரிந்த காட்சிகளை கண்டு நேத்ரன், தன்னை தானே நொந்து கொண்டான். காரணம் பார்ட்டி ஆரம்பித்து மதுபானம் அனைவர் கரங்களையும் அலங்கரித்து அவர்கள் ஹோட்டலின் நியூ இயர் கொண்டாடத்திற்காக பார்ட்டி அந்த ஹாலில் நடைபெற்று கொண்டிருந்தது.

அங்கே ஆண் பெண் பேதம் இல்லாது அனைவரும் கேளிக்கையில் திளைத்திருக்க ஒருசிலர் இடை மற்றும் தோள் அணைத்தும் பலர் இதழ் அணைத்தும் தங்களின் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டிருந்தனர்.



மற்றைய சமயமாக இருந்தால் சூர்யா, இந்த நிகழ்வுகளை எளிதாக கடந்து சென்றிருப்பாள். ஆனால் இப்பொழுதோ காலையில் தொடங்கி சற்று நேரத்திற்கு முன் வரை நிகழ்ந்தவைகளாலும் அதுவும் நேத்ரன் அவளின் இடையினை அணைத்து கொண்டிருக்கையில் சூர்யாவோ அவ்வரங்கத்தில் இயல்பாக இருக்க முடியாமல் தவிக்க.



அவளின் உடல் மொழியினை புரிந்து கொண்டவன், அவளின் காதில் தன் உதடுகள் உரச, “ சாரி பார்ட்டி ஆரம்பிச்சு இருக்கும்ன்னு நினைக்கலை டாலி வெளிய போகலாமா...?” என கேட்க.



ஏற்கனவே உணர்வுகளின் தாக்கத்தில் அவள் தவிக்க அதற்கு இன்னும் தூபம் போடுவது போல் நேத்ரனின் உதடுகளின் உரசலும், அவனின் வெப்ப மூச்சுகளும் என அவள் கன்னங்கள் சூடேற பால் வண்ண கன்னங்கள் சிவக்க இதற்கு மேல் இங்கிருந்தால் தன் வசம் இழந்துவிடுவோம் என பயந்து நேத்ரனின் கேள்விக்கு பதிலளிக்காமல் அவ்விடம் விட்டு சென்றாள்.



நேத்ரனும் அவளை பின்தொடர, அவளோ தோட்டத்தில் உள்ள நீச்சல்குளம் அருகில் நின்றிருந்தாள், அவன் அவளை நெருங்கும் வேளையில், புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு வானவெடிகள் வெடிக்க அச்சத்தத்தில் பயந்து அவள் பின்னால் செல்ல, நேத்ரன் அவளை தன் பக்கமாக இழுக்க, மொத்தமாக அவன் மார்பின் மீது வந்து விழுந்தாள் சூர்யா.



ஏனெனில், இன்னும் ஒரு அடி அவள் எடுத்து வைத்திருந்தால் சூர்யா, நீச்சல் குளத்தில் வீழ்ந்திருப்பாள்.



அந்த பயத்தில் அவளின் உடல் நடுங்க நேத்ரனோ, தான் இழுத்ததினால்தான் பயத்தில் நடுங்குகிறாள் என எண்ணி கொண்டு, “ ரியா, ஈசி நான் தான், ஒண்ணும் இல்லை” என கூறி அவளின் முதுகை தடவி கொடுக்க சற்று ஆசுவாசம் ஆனதும். அவனின் முகம் பார்க்க, அந்நேரம் அவனும் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.



அங்கே பல வண்ண விளக்குகளால் அந்த தோட்டம் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருக்க, அதில் இருந்து வரும் பலவண்ண ஒளி, சூர்யாவின் முகத்தில் மோதி வர்ணஜாலம் புரிந்தது.



மொத்தமாக தன் கைக்குள் அடங்கி இருக்கும் பெண்ணவளை காண காண நேத்ரனின் உள்ளம் தன்வசம் இழக்க தயாரானது.



அவனின் கரங்களில் ஒன்று அவள் இடை அணைத்திருக்க... முதுகை நீவிய கரம், அவள் மதிமுகத்தில் படர்ந்திருக்கும் கூந்தலை ஒதுக்கி காதில் சொருக, அச்சிறு தீண்டலும் தாங்காது விழி மூடி இதழ்கள் துடிக்க நின்றாள் சூர்யா.



சற்றுநேரத்திற்கு முன்பு அவளிட்ட முத்தம் நினைவிற்கு வர அதற்கு பதில் தர நேத்ரன் பேரவா கொண்டு அவளின் முகம் நோக்கி குனிந்து.



சூர்யாவின், காது மடலில் மென்முத்தம் பதித்தவன் மீசை ரோமங்கள் உரச, “ஐ நீட் யுவர் பிரீத் போர் மை ஹார்ட் ( என் இதயத்திற்கு உன் சுவாசம் உயிர் மூச்சு வேண்டும்) ப்ளீஸ் டாலி…” என பட்டினும் மென்மையான குரலில் கேட்க.



விழிமூடி இருந்தவள், அவனின் குரலில் வசீகரிக்க பட்டு விழி திறந்து அவனை பார்க்க, அவள் விழிகளில் தனக்கான காதலும், தாபமும் வழிய... இதற்குமேல் வாய்வார்த்தைகள் தேவை இல்லை என அவன் உதடுகள், பெண்ணவளின் இதழ்களில் தங்களுடைய காதல் காவியத்தினை எழுத துவங்கியது.



இவர்கள் நிலை இப்படி இருக்க ஹரிஷும் ஜெயஸ்ரீயின் நிலைமையோ...



அங்கே கூட்டத்தில் ஒருவன் ஜெய்யிடம், “ ஹாய் பியூட்டி, கம்ஆன் லெட்ஸ் டான்ஸ் வித் மீ” என கேட்க... இங்குள்ள பழக்க வழக்கங்கள் அறிந்தமையால் புன்னகை முகத்துடன், “ நோ, ஐ அம் நாட் இன்டெர்டெஸ்டேட்” எனக் கூறி விலக முழு போதையில் இருந்தவனோ... ஜெய்யின் கை பற்றி இழுக்க, அதில் வெகுண்ட ஹரிஷ், அந்த வெளிநாட்டவன் பற்றிய அவள் கையின் முழங்கையை பற்றி, “ஹேய்… லீவ் ஹேர்... ஷி இஸ் மைன்” என கூறி அவனின் கையினை உதறிவிட்டு விட்டு ஜெயஸ்ரீயை பிடித்த பிடி விடாமல் ஹாலை விட்டு அழைத்து இல்லை இழுத்து கொண்டு வந்தான்.



ஹரிஷ் நடந்து கொண்டது கொஞ்சம் அதிகப்படியானது என்றாலும் ஏனோ ஜெயஸ்ரீயின் மனத்திற்கு அவனின் வார்த்தைகளும் அவனின் செய்கையும் சற்று இதமாகவே இருந்தது.



தாய், தந்தை இழந்து எல்லா முடிவுகளையும், பிரச்சனைகளையும் சுயம்புவாய் நின்று சமாளித்தவளுக்கு, தனக்கு ஆதரவாகவும் தன்மீது அக்கறையுமாக ஹரிஷ் நடந்து கொண்டதில் மகிழ்ந்தாள் பாவை.



அதனால் தன் கரம் பற்றி ஹரிஷ் இழுக்க அங்கே அவ்விடத்தில் மறுப்போ எதிர்ப்போ தெரிவித்தால் முறையாகாது என அவனின் செயலுக்கு உடன்பட்டு தானும் அந்த அரங்கத்தில் இருந்து வெளியேற, ஹரிஷோ, கோபத்தின் உச்சியில் இருந்தான்.



காலையில் ஒருத்தன், லவ் ப்ரொபோஸ் பண்றேன்னு இவ பின்னாடியே வந்தான், இப்ப என்னடானா இன்னொருத்தன்,“ ஹாய் பேபி... கம் டான்ஸ் வித் மீ” அப்படின்னு சொல்லி கையை பிடிக்குறான். இந்த லூஸும் சிரிச்சிகிட்டே ஐ அம் நாட் இன்டெர்டெஸ்டேட்னு சொல்லுது. ஏன் இன்டெர்டெஸ்டேட்ஆ இருந்தா அவன் கூட போய் டான்ஸ் ஆடுவாளோ…?( டேய், அவ ஆடுறா இல்ல அது அவ இஷ்டம் உனக்கு என்ன மேன் கஷ்டம் இதுல). எதனால் இந்த கோவம், ஆத்திரம் என புரியாமல் ஹரிஷ், தன் மனதோடு போராட.



ஹரிஷ் பற்றிய கரம் வலியெடுக்க அவனின் கோபம் தெரியாமல் புரியாமல் ஜெயஸ்ரீயோ,

“விடுங்க ஹரிஷ்,கை வலிக்குது” என கூற.



உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்த ஆத்திரம் பற்றி எரிய ஜெய்ஸ்ரீயின் வார்த்தைகள் போதுமாயிருக்க. அந்த வெளிநாட்டவனிடம் காண்பிக்க முடியாத கோபம் எல்லாம் இவள் புறம் திரும்ப.



“ ஏன் அவன் பிடிச்சுக்கிட்டு இருக்கும் பொழுது வலிக்கலை. நான் பிடிச்சா வலிக்குதா..?” என வார்த்தைகளை கடித்து துப்ப, அவன் என்ன கூறினான் என புரிய ஜெயஸ்ரீக்கு சில நொடிகள் தேவைப்பட்டது.



புரிந்ததும் அவள் கண்களில் கனல் தெறிக்க ஒருவித நிமிர்வுடன் அவனை பார்த்தவள், பதில் பேசாது ஹரிஷ் கரத்தில் இருந்து தன் கையினை விடுவிக்க முயற்சிக்க.



ஜெயஸ்ரீயின் இச்செய்கை... ஹரிஷின் கோப அக்னிக்கு இன்னும் நெய் வார்ப்பது போல் ஆக,

“ என்னடி, திமிரா கேட்டா பதில் சொல்ல மாட்டியோ..?” என சீற, ( ஆடு, வான்டெட்ஆ வந்து பிரியாணி போட சொல்லுது).



ஹரிஷை நேருக்கு நேராக பார்த்து, “ஆமா பிடிச்சிருந்தது” (அவன் கை பிடிக்கிறப்போ நீங்க என்மேல காட்டுன அக்கறை, உங்களோட கோபம் இதெல்லாம் பிடிச்சுது). முன்னதை சத்தமாகவும் பின்னதை மனத்திற்குள் சொன்னாள்.



“நீங்க என் கை புடிச்சிக்கிட்டு இப்படி கேக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கலை அது மட்டும் இல்ல அருவெறுப்பாவும் இருக்கு” ( உங்களோட போய் அந்த குடிகாரனை கம்பேர் பண்ணி இப்படி கேள்வி கேட்குறீங்களே ஹரிஷ் என நினைத்தவளின் முகம் பிடித்தமின்மையினை காட்ட).



அவளின் முகத்தினையே பார்த்துக் கொண்டிருந்தவன், அவளின் பேச்சிலும், அவளின் முகபாவத்திலும் தன்னிலை இழந்தவனாக, “என்னடி சொன்ன…? அருவெறுப்பா இருக்கா இருக்கும் டி... இருக்கும்” என கூறிக் கொண்டே ஜெயஸ்ரீயின் தோள்களை பற்றி ஆவேசம் வந்தவன் போல் உலுக்க.



“ நான், கை பிடிச்ச அசிங்கமா அருவெறுப்பா இருக்குன்னு சொன்னல்ல” என கூறி கொண்டே அவளை இன்னும் நெருங்கி அவளின் முகம் பற்றி கண், மூக்கு, கன்னம் என எந்தவித பாகுபாடு இன்றி முகம் முழுக்க முத்தம் பதித்தான்.



ஹரிஷின் இந்த செய்கையினை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஜெயஸ்ரீ, முதலில் அதிர்ந்தாலும், பின் அவனை தன்னிடம் இருந்து பிரிக்க செய்த முயற்சிகள் யாவும் வெற்றிகரமாக தோல்வியை தழுவ.



முதலில் கோபத்திலும், ஆத்திரத்திலும் அவளை முரட்டுத்தனமாக முத்தமிட்டு கொண்டிருந்தவன், கொஞ்சம் கொஞ்சமாக வன்மையினை கைவிட்டு மென்மைக்கு வந்து அவளின் உதட்டில் இளைப்பாற, அவனின் கைகளோ அவளை மேலும் மேலும் தன்னில் இறுக்கிக்கொண்டது.



அவன் உயிரானவள்…




 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 23



ஹரிஷ், ஜெயஸ்ரீயை முத்தமிட ஆரம்பிக்கும் போகுதே அவளின் உடல் விறைத்தவள். தன்னை மீட்டுக் கொள்ள இவனுடன் போராட முடியாமல் போக மூச்சு திணற நிற்க முடியாமல் அவன் கைகளிலேயே துவள தன்னிலை குறித்து அவளின் விழிகள் உவர்நீர் சொரிய, அந்த நீரின் சுவை அறிந்த பின்பே தன்னிலை சற்று மீண்டவன். தன் அணைப்பினை சற்று தளர்த்த, இதற்காகவே காத்திருந்தது போல் சக்தி எல்லாம் வடிந்து போய் இருந்தவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு பலம் வந்தததோ வில்லில் இருந்து புறப்படும் அம்பென அவனில் இருந்து பிரிந்தவள்.



கண்களில் கனல் தெறிக்க அவனின், கன்னத்தில் ஓங்கி விட்டாள் ஒரு அறை.



ஆரம்பத்தில் கோபம் கொண்டு முரட்டுத்தனமாய் முத்தமிட்டாலும் நேரம் செல்ல செல்ல அவளில் மூழ்க தொடங்கியவன், அவள் தனக்கு அறிமுகமாகி இன்னும் முழுதாக ஒரு நாள் கூட ஆகவில்லை என எண்ணாமல்... அவளை மொத்தமாக தன்னில் உணர முயன்றவனுக்கு, அவளின் எதிர்ப்புகளை உணர முடியவில்லை.



பெண்ணவளின் கண்ணீரின் சுவை உணர்ந்து அதிர்ந்தவன், அவளின் அதிரடியில் மொத்தமாக தெளிந்தான்.

ஜெயஸ்ரீயின் கண்ணீரில் அவன் உள்ளம் கலக்கம் கொண்டது உண்மை. ஆனால், அவள் தன்னை அறைந்ததை ஏற்கமுடியாது. அவனின் ஆண் என்ற அகங்காரம் அடங்காது.



“ ஏய்…” என அவளை அடிக்க கை ஓங்க அப்பொழுதுதான் ஜெயஸ்ரீயின் தோற்றம் அவன் கண்ணிலும் கருத்திலும் விழ துணுக்குற்றவன், இரண்டு அடி பின்னால் நகர்ந்தான்.



ஜெய்யோ, விழிகள் சிவந்து கன்னம் எங்கிலும் கண்ணீரின் தடம், இதழ்கள் அவனிட்ட முத்தத்தில் கன்றி சிவக்க தலை கலைந்து, அவளின் மேலாடை (துப்பட்டா), இருவருக்கும் நடந்த தள்ளுமுள்ளில் தரையில் விழுந்து கிடக்க சுழல் காற்றில் சிக்கிய மலரென வாடி போய் இருந்தது அவளின் தோற்றம். ஆனால் அவளின் முகத்தில் மட்டும் கோபத்தின் கனல் கொழுந்து விட்டெறிந்தது.



“ ச்சீ... உன்னை அடிச்சதும் கோபம் வருதோ…? கொஞ்ச நேரத்துக்கு முந்தி நீ செஞ்ச காரியத்துக்கு எனக்கு எவ்வளவு கோபம் வரும் இன்னும் எத்தனை காலத்துக்கு தான் பெண்களை கஷ்டப்படுத்தவும் பழிவாங்கவும் திமிர அடக்குறேங்குற பேரில் அவங்களோட உடம்பை காயப்படுத்துறோம்ன்னு பெண்களோடு மனசை கொல்லுவீங்க…?

உங்களுக்கு எல்லாம் ஏன் புரிய மாட்டிங்குது. மருத்துவத்தில் எப்படி ஒரு மனுஷனோட மூளை செயல் இழந்தாலோ பாதிக்கப்பட்டாலோ அவங்களை பொணத்துக்கு சமம்னு சொல்றாங்களோ...”



“ அதே மாதிரி தான் ஒரு பொண்ணோட மனசை பாதிக்கிற எந்த விஷயமும் அவளோட உணர்வுகளை கொன்னுடும். உணர்வு இல்லைன்னா அவளும் ஜடம் மாதிரி தான் கிட்ட தட்ட பொணம் மாதிரி தான்...”



“தனி மனித உரிமை பத்தி பேசுற நீங்க, ஏன் ஒரு பெண்ணோட விருப்பம் இல்லாம அவளோட கைவிரல் நகத்தை தொடுறது கூட தவறுன்னு உங்களுக்கு எல்லாம் ஏன் தெரிய மாட்டிங்குது…?” இவ்வளவு நேரம் கோபம் கொண்டு பேசியவள், சற்று குரல் தழுதழுக்க, “ ஆனா ஹரிஷ், நீங்க இப்படி செய்வீங்கன்னு நான் நினைச்சிக்கூட பார்க்கலை. காலையில் என்னால நடக்க முடியலைன்னு தெரிஞ்சு என்னை அணைவா பிடிச்சுக்கிட்டு நடந்தாலும். அதில் இருந்த உங்க கண்ணியம் என் காலில் சுளுக்கு எடுக்கும் போதும் ஒரு பெண்ணை தீண்டுறோம்னு ஒரு தப்பான பார்வையோ, தொடுகையோ இல்லாத உங்க அணுகுமுறை ஏன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அந்த வெள்ளைக்காரன் என் கை பிடிச்சு இழுக்கும் பொழுது, எனக்கு ஆதரவா நீங்க பேசுனது எல்லாம், எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருந்தது”.



“ ஆனா...? ஆனா...? அதுக்கு அப்புறம் ஏன்டா, அப்படி செஞ்ச..?” எனக் கூறிக் கொண்டே மீண்டும் மீண்டும் அவனின் கன்னத்தில் அறைந்தவளின் விழிகளில் கண்ணீர் பெருகியது.



இவள் அடிக்க தொடங்கவும் தான் ஹரிஷ் என்ற சிலைக்கு உயிர் வந்தது. அவளின் தோற்றம் பார்த்து உறைந்து நின்றவனை, ஜெயஸ்ரீயின் கேள்விகள் ஒவ்வொன்றும் அவனின் இதயத்தை ஈட்டியென துளைக்க அவனின் உள்ளம் ரத்த கண்ணீர் சிந்த கண்கள் இரண்டும் வெந்நீர் சிந்தியது.



ஜெயஸ்ரீயின் கேள்விகளில் ஒன்றுக்கு கூட அவனால் பதில் கூறமுடியவில்லை என்பதை விட அவனிடம் பதில் இல்லை என்பது தான் உண்மை.



ஹரிஷிற்கு, தன்னை குறித்தே அவமானமாகவும், வெட்கமாகவும் இருந்தது. தானா ஒரு பெண்ணிடம் இப்படி நடந்துக் கொண்டோம்…? என நினைக்க நினைக்க அவன் உள்ளம் அவனை காறி உமிழ்ந்தது.

‘ தான் ஏன் அவளிடம் அவ்வாறு நடந்து கொண்டோம்…? என யோசிக்க... யோசிக்க... அந்த அயல்நாட்டவன் மீதிருந்த கோபமும் ஸ்ரீ கூறிய பதிலால் விளைந்த ஆத்திரமும் தான் இவற்றுக்கு எல்லாம் காரணம் என நினைக்க நினைக்க அவனின் மனம் ஆறவில்லை. தன் மனம் அவ்வளவு கேவலமானதா..? எந்த உரிமையில் அவகிட்ட இந்த மாதிரி வரம்புமீறி நடந்துகிட்ட. அந்த வெளிநாட்டவன் மீது வந்த கோபம் சரி இவள் கூறிய பதிலில், ஏன் உனக்கு இவ்வளவு ஆத்திரம்…? பசிலிக்காவிலும் இவளை பின்தொடர்ந்தவனை அடித்து விரட்டினாய். இதற்கெல்லாம் என்ன அர்த்தம் எதன் அடிப்படையில் எந்த உரிமையில் இதை எல்லாம் செய்கின்றாய்...?’ என்ற அவனின் மனத்தின் கேள்விக்கு...



சற்றும் யோசிக்காமல், அவளை, ‘யாரும் தப்பா பார்க்குறதோ, நெருங்குறதோ எனக்கு பிடிக்கவில்லை.. அதான் அது மட்டும் இல்லாமல் அவளின் நிராகரிப்பை என்னால தாங்க முடியலை. அதெப்படி என்னை அவ அப்படி சொல்லலாம்ன்ற ஆத்திரம் எல்லாம் சேர்த்து இப்படி ஒரு காரியம் பண்ணிட்டேன் தப்பு தான்’ என தன் மனதோடு பேசியவன்.



சட்டென கண்கள் மின்ன தன் நெற்றியினை நீவி கொண்டவன், ‘அப்படின்னா…? அப்படின்னா…? நான் ஸ்ரீயை, என்னுடையவளாய் நினைக்கவே தான் அவகிட்ட இவ்வளவு கோபத்தோடும், உரிமையோடும் நடந்துகிட்டு இருக்கேன். அதை எப்படி அவளுக்கு சொல்லி புரிய வைப்பேன். புரிஞ்சிக்குவாளா..?’ என ஆயாசமாக உணர்ந்தவன்…



‘ ஐய்யோ..! எனக்கு தனியாயெல்லாம் வில்லன் வேண்டாம். எனக்கு நானே வில்லன் வேலை பார்த்து இருக்கேன்…’ என மானசீகமாக தன் தலையில் அடித்து கொண்டவன் ஜெயஸ்ரீ, எங்கே…? என பார்க்க.



ஹரிஷை, தன் கைகள் ஓயும் வரை அடித்தவள், தன் சக்தியெல்லாம் வடிந்து கால்கள் துவள… அந்த புல்தரையிலேயே கால்களை மடித்து அமர்ந்து தன் கைகளினால் கால்களை கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்து அழுதுக் கொண்டிருந்தாள்.

அவளின் நிலை கண்டு ஹரிஷ், தன்னை தானே நொந்து கொண்டான்.



அவளை நோக்கி அடி எடுத்து வைக்க அவனின் கால்களில் அவளின் மேலாடை மிதிப்பட ஹரிஷிற்கு அவளின் மனத்தினையும், உணர்வுகளையும் தன்னுடைய செயலால் இதுபோல் தன் காலில் இட்டு மிதித்து காயப்படுத்தியது போல் தோன்ற நடுங்கும் கரங்களால் அந்த மேலாடையினை எடுத்து கொண்டு ஜெயஸ்ரீயை நெருங்க.



ஹரிஷ் நெருங்கும் அரவத்தில் முகம் மூடி அழுது கொண்டிருந்தவள், விலுக்கென நிமிர அவனின் நெருக்கம் உணர்ந்து அவள் சற்று பின்னால் நகர அவளின் விலகளில் இவன் உள்ளம் துடித்தது.



ஜெயஸ்ரீக்கு, இன்னமும் ஹரிஷ் செய்த செயலை ஏற்க முடியவில்லை. “ இவ அனாதை தானே…? இவளை என்ன பண்ண யார் கேக்க போறா அப்படிக்கிங்ற நினைப்பு தானே ஹரிஷ் உங்களுக்கு…?” என கண்களில் கண்ணீருடன் கேட்க.



அக்கேள்வியில் முற்றிலும் மனம் உடைந்து போனான் ஹரிஷ். ஏற்கனவே ரணமாய் வலிக்கும் இதயத்தில் கூர்மையான கத்தி கொண்டு திருகியது போல் இருந்தது அவளின் வார்த்தைகள்.



ஹரிஷ், கண்கள் கலங்க அவளின் முன் மண்டியிட்டவன், “ ஸ்ரீ... ஸ்ரீ... ப்ளீஸ் அப்படி சொல்லாதே சத்தியமாய் நான் அப்படி நினைக்கலை டா , சாரி ஸ்ரீமா, நான் செஞ்சது சரின்னு சொல்லலை. நீ என்னை அவொய்ட் பண்ணதை என்னால தாங்கிக்க முடியலை. என்னவோ கோபம், ஆத்திரம் அறிவிழந்து அப்படி நடந்துகிட்டேன். இன்னும் வேணும்னா நாலு அடிக்கூட அடிச்சிக்க ப்ளீஸ் ஸ்ரீ... அழாத ...” என பலவாறு சமாதானம் கூறியும் அவளின் அழுகை நிற்கவில்லை.



ஹரிஷிற்கோ, அவளின் கண்ணீரை காண காண தன் மீதே அளவு கடந்த வெறுப்பு வந்தது. இப்பொழுது அதை பற்றி எல்லாம் சிந்தித்து கொண்டிருக்க நேரம் இல்லை. முதலில் அவளின் கண்ணீரை நிறுத்த வேண்டும் என யோசித்தவனின் கண்கள் பளிச்சிட்டன. ‘ இது அராத்து பேபி, கெஞ்சுனா மிஞ்சும். சோ... நோ அமைதி ஒன்லி அதிரடி...’ என மனத்திற்குள் கூறி கொண்டவன்...



உதடுகளில் புன்னகை பூக்க, “ ஸ்ரீமா, ப்ளீஸ் இனிமே இப்படி செய்யமாட்டேன்னு சொல்லமாட்டேன்..? வேணா உன் மனசு கஷ்டப்படுற மாதிரி நடந்துக்க மாட்டேன்னு வேணா ப்ரோமிஸ் பண்றேன்” என கூற.



இவன் என்ன சொல்றான் என ஜெயஸ்ரீ புரியாது அவனை பார்க்க, கண்சிமிட்டி, “பின்ன என் பொண்டாட்டிக்கு, என்னை தவிர யார் உம்மா... தருவா” என ஹரிஷ் கூறியதும்.

முதலில் என்னவென புரியவில்லை ஜெயஸ்ரீக்கு, புரிந்தவுடன் கோபம் கொண்டு எழ முயன்றவளின் கரம் பற்றி தடுத்தவன்.



“ ப்ளீஸ்... அம்மு கொஞ்சம் உட்காரு எதுக்கு இந்த கோபம் உ...உனக்கு என்னை பி...பிடிக்கலையா..?” என ஹரிஷ் கேட்க.



“ பிடிக்குது... பிடிக்கலை… பிரச்சனை இல்லை ஹரிஷ்… எதுக்கு இந்த பொண்டாட்டி etc... எல்லாம் என்ன வாழ்க்கை பிச்சை போடுறீங்களா..? இல்ல நீங்க என்கிட்ட நடந்ததுக்காக வருத்தப்பட்டு வாழ்க்கை தர்றீங்களோ..? இது ரெண்டுமே கல்யாண வாழ்க்கைக்கு சரியான அடிப்படையா இருக்காது. உங்க உளறலை கேட்க நான் ஆள் இல்ல...” என கோபமாக சொல்லி கிளம்ப தயாரானாள் ஜெயஸ்ரீ.



அவள் கூறியதை கேட்டு ஹரிஷ், வாய் விட்டு சிரிக்க அவனின் சிரிப்பில் மேலும் கோபம் கொண்டு, “ இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்த சிரிப்பு” என கேட்க.

அவளின் முன் தன் வலக்கையினை அசைத்து சற்று இருக்கும் படி சொன்னவன், கஷ்டப்பட்டு சிரிப்பினை அடக்கிக் கொண்டு.



“ ஐய்யோ..! ஸ்ரீகுட்டி, நான் என்னமோ உன்னை ‘சுவாகா’ பண்ணிட்ட மாதிரியும் அதனால பாவப்பட்டு பரிதாபப்பட்டு உனக்கு லைப் கொடுக்குற மாதிரியும் பேசுற. நான் ஜஸ்ட் ஒரே ஒரு ஹக் அண்ட் குட்டியா ஒரே ஒரு உம்மா அதுவும் அரைகுறையா இதுக்கெல்லாம் யாரும் பீல் பண்ணி கல்யாணம் பண்ணிக்க கேட்க மாட்டாங்க...” என.



ஹரிஷ் கூறிய விதத்தில் ஜெயஸ்ரீக்கு, கோபமும் வெட்கமும் வர, ‘பரதேசி ... பண்றதையெல்லாம் பண்ணிட்டு பேச்சை பாரு...’ என மனத்திற்குள் அவனை திட்டி தீர்த்தாள்…



“ எல்லாரும் லவ் பண்றேன் இல்ல கல்யாணம் பண்ணிகலாமான்னு கேட்டுட்டு ஓகே சொன்னதுக்கு அப்புறம் இதெல்லாம் பண்ணுவாங்க எனக்கு கொஞ்சம் ரிவெர்ஸ் ஆயிடுச்சு வேற ஒண்ணும் இல்ல” இதை சொல்லும் பொழுது ஹரிஷின் கண்களில் விஷமமும் குரலில் உல்லாசமும் நிறைந்து இருந்தது.

“ அண்ட் போற வர பொண்ணுங்களை எல்லாம் கட்டிபுடிச்சு முத்தம் கொடுக்குற ரோக், ரோட்சைடு ரோமியோ இல்லை நான்...” என சொன்னவனின் குரல் மட்டும் அல்ல முகமும், உடலும் கூட இறுகி போய் இருந்தது.



அந்த குரலில் உள்ள கடினத்திலும் அவன் முகத்தில் இருந்த இறுக்கத்திலேயே, அவனின் கோபத்தை அறிந்தவளின் உடல் நடுங்கி போய் அமர்ந்திருந்தாள்.



தன்னவளின் உடல் நடுக்கத்தினை அறிந்து கொண்டவன், முகத்தையும், குரலையும் இயல்பாக்கி கொண்டு, மீண்டும், “என்னை பிடிக்கலையா..?” என கேட்க.



மாநிறத்தில், ஆறடிக்கு குறையாத உயரமும், களையான முகமும், கருத்து அடர்ந்து, முன்னால் சாதாரணமாகவும் பின்னாடி ஒட்ட வெட்டிய சிகையும், உடற்பயிற்சியினால் அகன்ற மார்பும் திண்மையான தோள்களும், ஒட்டிய வயிறும் என ஆண்மையின் நிமிர்வோடும், கம்பீரத்தோடும், தன் அருகில் இருப்பவனை பார்த்து, ‘இவனை போய் யாராவது பிடிக்கலைன்னு சொல்லுவாங்களா..? கேக்குது பாரு கேனத்தனமா லூஸு’ என தன் மனத்திற்குள் கூறிக்கொண்டவள் அவனை சற்றும் நிமிர்ந்து பார்த்தாள் இல்லை.



அதில் மனசுணக்கம் கொண்டவன்,

கரகரத்த குரலில், “யாருமில்லாத இந்த அனாதைய ஏன் கட்டிக்கணும்னு யோசிக்கிறியா ஸ்ரீமா…?” என ஹரிஷ் கூறியவுடன்.



சட்டென்று நிமிர்ந்து ஹரிஷின் முகம் பார்த்தவளின் விழிகளில் வந்து போன பாவனையின் அர்த்தம் கண்டறிய முடியாமல் தடுமாறினான் அந்த துப்பறிவாளன்.



“ ஆமா... இவருக்கு யாருமே இல்ல... ஆனா எனக்கு மட்டும் ஒரு ஊரே சொந்தம் பாருங்க…” என ஜெய் வெடுக்கென கேட்க, ஹரிஷின் கண்களில் ஒரு மின்னல்.



“ அதுக்கு ஏன் அம்மு பீல் பண்ற…? நமக்கு தனி தனியா சொந்தம் இல்லைன்னா என்ன…? நாம ரெண்டு பெரும் சேர்ந்து ஒரு ஊரையே உருவாக்குற அளவிற்கு நம்ம குடும்பத்தை ரெடி பண்ணுவோம். நீ என்ன சொல்றடா…?” என கண்சிமிட்டி உதடுகளில் புன்சிரிப்புடன் கூற.



அவன் கூறிய விதத்தில் சிரிப்பு வந்தாலும் சிரிக்காமல் முகத்தினை அவனிற்கு காட்டாமல் வருவித்து கொண்ட சாதாரண குரலில், “இங்கே கல்யாணத்திற்கே வழிய காணோம். இதுல குடும்பம், குழந்தைன்னு ஒரு ஊரையே ரெடி பண்றாங்களாம் போய் ஆகுற வேலைய பாருங்க...” என ஸ்ரீ கூற.



“ மச்... போ அம்மு, நீ இன்னும் வளரவே இல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டா தான் குழந்தை பிறக்குமா என்ன..? இதுலையும் கொஞ்சம் ரிவேர்ஸ் மேதட் ட்ரை பண்ணலாமா…?” என கேட்க. அவ்வளவுதான் அவனை சரமாரியாக அடிக்க தொடங்கினாள் ஜெயஸ்ரீ.



“ எரும... எரும ரிவேர்ஸ் மேதட் ரிவேர்ஸ் சைக்காலஜி… இனிமே இப்படி ஏதாவது உன் வாயில் இருந்து வரட்டும் அப்புறம் இருக்கு உனக்கு, கல்யாணம் வேண்டாம் சொன்னா ஏதாவது சமாதானம் பண்ணுவேன்னு பார்த்தா, பக்கி கல்யாணம் பண்ணிகலைனாலும் பரவயில்லை குழந்தை பெத்துக்கலாம்னு சொல்லுவியா…? இனிமே இப்படி பேசுவியா..? பேசுவியா…? என கேட்டுக் கொண்டே அடிக்க.

ஹரிஷோ, “ வேண்டாம் அம்மு, வலிக்குது டீ அப்புறம் நானும் அடிப்பேன்” என்றான்.



“ ஓ..! அடிப்பியா…?” என அதற்கும் இன்னும் நான்கு மொத்து மொத்தினாள்.( டேய், அவ தான் எல்லாத்துக்கும் அடி பின்றான்னு தெரியுது இல்ல. அப்புறம் என்னத்துக்கு அவ கிட்ட வான்டெட்டா போய் வாயக் கொடுத்து வாங்கி கட்டிக்கிற).



ஒருக்கட்டத்திற்கு மேல் ஜெயஸ்ரீயால் கைகளை அசைக்க முடியவில்லை. ஹரிஷை, அடிக்கும் வேகத்தில் தன்னிலை கவனிக்க தவறி விட்டாள் ஜெயஸ்ரீ. புல்வெளியில் அமர்ந்து இருந்தவனை அடிக்கிறேன் பேர்வழி என அவனின் மீது விழுந்து அடிக்க, ஹரிஷ் வேண்டாம் என சொல்லியும் கேட்காமல் அவள் அடிக்க அவளின் இரு கைகளையும் இறுக பற்றி கொண்டவன் அவளோடு புல்வெளியில் புரண்டான்.





அவள் உயிரானவன்…



அத்தியாயம் 24



“ ஏய் அம்மு குட்டி, எப்ப நாம கல்யாணம் பண்ணிக்கலாம்…?” என ஹஸ்கி வாய்ஸில் கேட்க.



“ எரும, பன்னி, நகர்ந்து போடா...” என அவனின் மீதே மொத்தமாக சாய்ந்து படுத்துக்கொண்டே கூறியவளை தன் இருகைகளையும் கோர்த்து தலைக்கு அணைவாக வைத்து கொண்டு அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தவன்.



“ அம்மு, கொஞ்சம் கண்ண திறந்து பார்த்து சொல்லு…? யார்… யார்…? மேல இருந்து எழணும்னு” என்றான் குரலில் விஷமம் வழிய.



அவன் குரலில் கண்திறந்தவள், அவளிருக்கும் நிலை உணர்ந்து பதறி விலக போனவளை, கரம் பற்றி தடுத்தவன் மீண்டும், “சொல்லு அம்மு நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்…?” என கேட்க. “ “ நான் இன்னும் உங்க மேல கோபமா இருக்கேன் ஹரிஷ்...” என்றாள்.



“ அது ஒரு பக்கம் இருக்கட்டும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு” என்றான் விடப்பிடியாக.



“ நான் எப்ப உங்களை பிடிச்சிருக்குன்னு சொன்னேன் ஹரிஷ்…?” என.



“நீ பிடிக்கலைன்னும் சொல்லலை ஸ்ரீமா...”



“ அதெப்படி உங்களுக்கு தெரியும். சும்மா எல்லாம் தெரிஞ்ச மாதிரி வாய்க்கு வந்ததை பேசாமல் வாங்க ரூம்க்கு போகலாம்” என.



“ உனக்கு என்னை பிடிக்கும்ன்னு எனக்கு எப்போவோ தெரிஞ்சிடுச்சி அம்மு” என கூறிக் கொண்டே எழுந்து அமர்ந்தவன், அவளையும் தன் அருகில் அமர்த்தி கொண்டான்.



உள்ளுக்குள் திடுக்கிட்டாலும் நமக்கு தெரியாம கோபத்தில் எதையாவது உளறிட்டோமோ என யோசிக்க.



அவளின் முகத்தில் தோன்றிய பாவனையில் அவளின் தோளோடு தோள் உரசி, “ ரொம்ப யோசிக்காத உன் வாய் சொல்லலை உன்னோட இந்த கண்ணு காட்டி கொடுத்திடுச்சு அம்மு...” என கூறி அவளின் கண்களை தன் சுட்டு விரல் கொண்டு சுட்டி காட்ட.



அவன் கூறியதை கேட்டு தன் இதழ்களை சுழித்து அவனுக்கு பழிப்பு காட்டியவள், அவன் தோளில் இடித்து கொண்டு நகர்ந்து உட்கார.



அவளின் சிறுப்பிள்ளைத்தனமான செய்கையில் கவர பெற்றவன், அவளின் முகத்தினை நிமிர்த்தி, “நான் சொன்னது உண்மை அம்முமா...”.



“ நான் உனக்கு முத்தம் கொடுக்கும் போது நீ ஏன் அம்மு என்னை விலக மட்டும் போராடுனியே தவிர என்னை காயப்படுத்த முயற்சிக்கலை. நான் ஒண்ணும் உன் கையையும், காலையும் கட்டி போட்டுட்டு கிஸ் பண்ணலையே. உனக்கு தான் தற்காப்பு கலை தெரியுமே பேபி...”.



“ என்னோட செய்கையில் உனக்கு ஒரு பெண்ணா கோபமும் ஆத்திரமும் வந்தது கொயட் நேச்சுரல் அதுக்கு நீ ரியாக்ட் பண்ண பட் என்னை ஹர்ட் பண்ணலை பண்ணனும்னு நினைக்கலை. பிகாஸ், தெரிஞ்சோ தெரியாமலேயோ என் மேல உனக்கு “ல்தகா சைஆ” இருந்திருக்கு...” என.



ஹரிஷ் முதலில் கூறியதை கேட்ட ஜெயஸ்ரீ, அவனை மனத்திற்குள் மெச்சி கொண்டாள். பரவாயில்லையே… பயப்புள்ள இந்த ரணக்கலத்திலயும் தெளிவா தான் யோசிச்சி இருக்கு, ‘ஐ லைக் யூ டா செல்லகுட்டி’ என மனதோடு கூறிக்கொண்டவள்.



அவன் கடைசியாக சொன்னதை நினைத்து திரு திரு வென முழிக்க.

“ என்ன அம்மு, உனக்கு என் மேல “ல்தகா சைஆ” இருக்குன்னு நான் சொன்னவுடன், யெஸ் டார்லிங் நானும் உன்னை “ன்றேகிக்லிதகா” சொல்லி இறுக்கி அணைச்சி ஒரு உம்மா தருவேன்னு பார்த்தா இப்படி ஒரு ரியாக்ஷன் தர ஐ அம் சோ டிஸ்அப்பாயிண்ட்டட்...” என சோகம் போல் சொல்ல.



ஜெயஸ்ரீக்கு, மற்றது புரிந்ததோ இல்லையோ ஹரிஷ் சொன்ன, “இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரு” புரிய.



“ஹரிஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...” என பற்களை கடிக்க, “இவ்வளவு வாங்கியும் உமக்கு திரும்பவும் உம்மா கேக்குதா..? உங்களை என்ன பண்றேன் பாருங்க” என சுற்றும் முற்றும் பார்க்க.



“என்னம்மா, பார்க்குற…? என ஹரிஷின் கேள்விக்கு.



“ ஒண்ணு புரியாத மாதிரி பேச வேண்டியது இல்ல தத்து பித்துன்னு உளற வேண்டியது அதான் உங்களை அடிச்சி அடிச்சி என் கை தான் வலிக்குது. ஏதாவது கட்டை கிடைக்குமானு பார்க்குறேன் ரெண்டு சாத்த” என ஜெயஸ்ரீ கூற,



“ உனக்கு புரியலைனா அயித்தான் கிட்ட கேளு நான் சொல்லி தரேன். அதுக்குன்னு நோ வைலென்ஸ். நான் சொன்னதை அப்படியே திருப்பி படி, “ல்தகா சைஆ... காதல் ஆசை...” “ன்றேகிக்லிதகா... காதலிக்கிறேன்…” கொஞ்சம் மாத்தி சொன்னேன், உனக்கு புரியலை இப்ப புரிஞ்சிடுச்சா என கேட்க…



அவளோ, “ ஓ..! நல்லா புரிஞ்சிடுச்சே இதை கூட ரிவெர்சில் சொல்லி என்னை குழப்பி விடுங்க. இன்னைக்கு தொலைஞ்சீங்க இனிமே ரிவேர்ஸ் வேர்சன் பத்தி திங்க் பண்ணுவீங்களா..?” என மறுபடியும் நன்றாக மொத்தினாள்.



அமர்ந்த வாக்கிலேயே அடிக்கும் அவளை இழுத்து மொத்தமாக தன்னுள் பொதிந்து கொண்டவன்.



அவளின் காதருகில் குனிந்து, “சொல்லு அம்மு, நாம கல்யாணம் பண்ணிக்கலாமா..?” என கேட்க.



ஜெயஸ்ரீயும், மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல், “ம்...” என கூற அவளின் முகம் நோக்கி குனிய அவனின் எண்ணம் புரிந்தவள், இம்முறை விரும்பியே அவனின் செய்கைக்கு உடன்பட அவளின் இதழில் மென்முத்தம் பதித்தவன்.



“ தேங்க்ஸ் அம்மு, உன்னோட இந்த நம்பிக்கையை என் வாழ்நாள் முழுக்க காப்பாத்துவேன்” என்றவனின் குரல் கரகரப்பில் கண் திறந்தவள், அவனின் கலங்கிய கண்களை கண்டு அவனை தன்னில் இறுக்கி அணைத்தவள், அவனின் காதுகளில் மெதுவா, “ரிஷி நானும் உங்களை 'ன்றேகிக்லிதகா’ ” என கூற.



அவள் சொன்ன சொல் அவனின் செவி வழி நுழைந்து உயிரில் கலக்க அவளை மேலும் மேலும் தன்னுடன் இறுக்கி அணைத்து கொண்டான் ஹரிஷ்.



பெண்ணவளின் மென்னிதழில் கவியெழுத தொடங்கிய நேத்ரனுக்கு, அதனை நிறைவு செய்யும் எண்ணம் சிறிதும் இல்லாமல் தொடர கடந்து சென்ற ஐந்து வருட தன் காதலையும், தன் தவிப்பையும் இந்த ஒற்றை இதழ் முத்தத்தில் ஈடுசெய்ய நினைத்தான் போலும்.



நேத்ரனின் தொடர் முத்த தாக்குதலில் மூச்சு காற்றுக்கு தவித்த சூர்யா, அவன் மார்பில் கரம் பதித்து தன்னில் இருந்து விலக்க முயன்றாள்.



சூர்யாவின் முயற்சி அறிந்தும் நேத்ரன் அவளின் மலர் இதழில் உள்ள தேனை பருகும் வண்டாக மாறி அவளின் இதழ்களிலேயே மீண்டும் மீண்டும் மூழ்கினான்.



ஒரு கட்டத்திற்கு மேல் நிற்க முடியாமல் கால்கள் துவள சூர்யா, நேத்ரனின் மார்பிலேயே சரிய அவளின் இதழ்களை விருப்பமே இல்லாமல் விடுதலை அளித்து அவளின் கழுத்து வளைவில் முகம் புதைத்து கொண்டு பெண்ணவளின் வாசத்தை ஆழ்ந்து சுவாசித்து, தன்னுள் நிரப்பி கொண்டான். அந்த கள்வன்...

சுவசாத்திற்கு தவித்தவள் சுவாசம் கிடைத்ததும் தன்னை சிறிது சமன் செய்து கொண்டவள், தன் கழுத்தடியில், நேத்ரனின் வெப்ப மூச்சிகளையும் அவனின் ஈர உதடுகளின் சிறு சிறு மென் முத்தங்களை உணர்ந்து சூர்யாவின் தேகத்தில் மெல்லிய நடுக்கம் பரவ,அதனை உணர்ந்து நேத்ரன், அவளை தன்னோடு அரவணைத்து கொண்டான்.



இந்நிலையிலும் தன் உணர்வினை புரிந்து கொண்டு அதற்கு மதிப்பளித்து தன்னை அரவணைத்து கொண்ட தன்னவனின் தன்மையில் சூர்யாவின் உள்ளம். அவனிடம் தன்னை மொத்தமாக ஒப்புவிக்க விருப்பம் கொண்டது.

அக்கணம் அவளுக்கு அவளின் பிரச்சனையோ, விவேக் பற்றிய பயம் என எதை பற்றியும் அவள் நினைக்கவில்லை என்பதை விட நினைவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், சூர்யாவின் நினைவில் அனைத்துமாக இருந்தது அவளின் தனு மட்டுமே...



அதன் விளைவாக நேத்ரனின் முதுகில் கையிட்டு அவனை மேலும் தன்னோடு அணைக்க அவளின் இணக்க நிலை, அவனை இன்னும் இன்னும் முன்னேற சொல்ல அவளின் கூந்தலில் விரல் நுழைத்து இறுக்கி கொண்டவன், அவளின் பிறை நெற்றியில் இருந்து ஆரம்பித்து கண், மூக்கு, காது, கன்னம் என முத்த ஊர்வலம் நடத்தியவன், மீண்டும் அவளின் இதழ் தேனை பருக ஆசைகொண்டு அவளின் இதழ்களை தன்னுடைய உதடுகளால் சிறை செய்ய அவனின் மற்றொரு கரமோ பெண்ணவளின் மென்மையை உணர பேராவல் கொண்டு அவளின் மேனியில் வலம்வர தொடங்கியது.



சூர்யாவின், பலவீனமான மறுப்புகள் எல்லாம் பலம் இழந்து போக நேத்ரனோ தன் கரம் உணர்ந்ததை உதடுகள் கொண்டு ஸ்பரிசிக்க முயல, அவளின் இதழை விடுவித்து, அவளின் பெண்மையின் மென்மையில் முத்தமிட சூர்யாவின் தேகத்தில் சிறு நடுக்கம் பரவ தான் செய்தது.



என்னதான் பெண்ணவள், தன்னவனோடு ஒன்ற முயன்றாலும் முதல் முதலாக ஒரு ஆணின் ஸ்பரிசம் அவளை நடுக்கம் கொள்ள செய்ய அவள் தன்னையும் அறியாமல், “ப்ளீஸ் தனு” என முணுமுணுத்தாள்.



நேத்ரன், அவளின் இதழ்களுக்கு விடுதலை அளித்தும் அவனின் செவியில், சூர்யாவின், “ப்ளீஸ் தனு...” என்ற பலவீனமான குரல் கிணற்றுக்கு உள் இருந்து ஒலிப்பது போல் கேட்க.

அப்பொழுதுதான் தான் செய்து கொண்டிருக்கும் செயல் புரிந்து, தன் செயலால் தன்னவளின் மனதை காயப்படுத்தி விட்டோமோ என சூர்யாவினை பார்க்க, அந்நேரத்தில் அவனுக்கு அவனோடனான அவளின் இணக்க நிலையை மறந்து போனான்.



ஆனால் அவளோ, அவனின் இதழ் ஒற்றலில் விழிகள் மூடி இதழ் துடிக்க... கன்னங்கள் செம்மையுற்று அவளின் கூந்தல் முடிகள் கலைந்து ஓரிரு இழைகள் அவளின் மதி முகத்தில் விளையாட, பெண்ணவளின் முகத்தில் எந்த வித வருத்தமும், வலியோ இல்லை என அறிந்தவன்.



தன் கரங்களில் துவண்டு இருந்தவளை காண காண நேத்ரனுக்கு, சற்று முன்பு தோன்றிய குற்றஉணர்ச்சி மறைந்து அங்கே தாபமும் மோகமும் குடிக்கொள்ள, இப்பொழுதே… இந்நொடியே சூர்யாவினை தன்னவளாக ஆட்கொள்ள அவனின் ஒவ்வொரு அணுவும் துடித்த.



ஆனால், அது தன்னுயிரானவளுக்கு நன்மையாகாது என்றும் அவள் தன் மீது வைத்த காதலுக்காக தன்னையே என்னிடம் ஒப்புவிக்கும் பொழுது தானும் அவளின் காதலுக்கு மதிப்பளிக்க வேண்டும் என பெரும் முயற்சி செய்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்தியவன்.

தன்னவளின் நெற்றியில் மென் முத்தம் பதிக்க, அதில் தன்னுணர்வு பெற்றவள், நேத்ரனை விளங்கா பார்வை பார்த்தாள். ஏற்கனவே உணர்வுகளின் பிடியில் சிக்கி உணர்ச்சி பிழம்பாக இருந்தவள் நிற்க முடியாமல் மீண்டும் அவனின் மார்பிலேயே சரிய தன்னவளின் இந்த சிறுசெய்கை ஒன்றே நேத்ரனை முற்றிலும் தன் வசம் இழக்க போதுமானதாய் இருக்க முயன்று தன்னை மீட்டவன்.



சூர்யாவினை தன் கைகளில் ஏந்த அதில் ஓரளவு சுயம் பெற்றவள், தன் இரு கைகளையும் மாலையாக்கி அவனின் கழுத்தை வளைத்து அவனின் நெஞ்சில் முகம் புதைத்து கொண்டு அவனை மேலும் சோதனைக்கு உள்ளாக்கினாள்.



அவளை தூக்கிக் கொண்டு அங்கிருந்த சாய்வு இருக்கையை நோக்கி நடந்தவன். அவளின் உணர்வுகளை சமன் செய்யும் பொருட்டு சூர்யாவின் காதுகளில், “ டாலி, நானே ரொம்ப கஷ்டப்பட்டு நல்லவனா இருக்க ட்ரை பண்றேன். நீ இப்படி எல்லாம் என்னை டெம்ப்ட் பண்ண அப்புறம் நான் இடம், பொருள் எல்லாம் பார்க்க மாட்டேன்” என கேலி போல் சொன்னாலும் அவனின் குரலில் உள்ள கரகரப்பு சொன்னது அவன் முயன்று தன் உணர்வுகளை கட்டுப்படுத்துவதை.



கண்களில் குறும்பு மின்ன சூர்யா நேத்ரனிடம், “உங்களை யார் நல்லவனா இருக்க சொன்னாங்க…?” என கேட்க, (ஐய்யோ..! சூர்யா, அவனே எப்படா சான்ஸ் கிடைக்கும் என காத்துகிட்டு இருக்கான். அவன் கிட்ட போய் வான்டெட்டா வாக்குமூலம் குடுக்குறியே உன்னை என்ன பண்ணலாம்).



அவளின் குறும்பை கண்டு கொண்டவன், “யாரும் சொல்லலை டாலி, மத்தவங்க சொல்றது எனக்கு முக்கியமும் இல்லை. ஆனா எனக்கு நீ ரொம்பவே முக்கியம் அதைவிட உன் மனசு ரொம்ப முக்கியம்” என்றவனை கண்கள் கலங்க பார்த்திருந்தாள்.



அந்நேரம், சூர்யாவிற்கு மற்றவர் சொல்வதை கேட்டு தன்னை கேவலமாய் பார்க்கும் ஒருவன், வன்மத்தோடு தன்னை நோக்கும் ஒருவன் என அவளின் மனக்கண்ணில் பிம்பங்கள் வலம் வர அவளின் உடல் அக்காட்சிகளை கண்டு லேசாக உதறல் எடுக்க முயன்று தன்னை சரி செய்தவளின் காதுகளில் நேத்ரனின் உதடுகள் ஹஸ்கி குரலில்,

“ எனக்கு லிமிடெட் மீல்ஸ் எல்லாம் செட் ஆகாது செல்லம் நமக்கு எப்பவுமே அன்லிமிடெட் தான் செட் ஆகும்… ஆற அமர ரசிச்சு ருசிக்கிறது தான் எனக்கு பிடிக்கும்” என இன்னும் அச்சில் கோர்க்க முடியாத பலவற்றை அவளின் செவியில் சொன்னவன் பார்வை கொஞ்சமும் வெட்கமின்றி பெண்ணவளின் மேனியில் ரசனையோடு பார்வையாலேயே அவளை கொள்ளையிட தொடங்கினான்.



சூர்யாவினை ஏந்தி இருந்தவனுக்கு அவளின் உதறல் கண்டு அவள் ஏதோ பழைய நிகழ்வை நினைத்து மனம் வருந்துகிறாள் என கண்டு கொண்டவன், அதில் இருந்து அவளை மீட்கும் பொருட்டே அவளை சீண்டி சிவக்க வைத்தான். அதில் அவனின் சுயநலமும் அடங்கியுள்ளது.



அவளின் மனத்தில் தானும் தன்னுடைய நினைவுகளும் மட்டுமே முன்னிலை வகிக்க வேண்டும் என விரும்பினான். அவனின் விருப்பம் நிறைவேறி அவனுடைய முயற்சியும் வெற்றி அடைந்தது.



அதுவரை மனகலக்கம் கொண்டவள், நேத்ரனின் சீண்டலிலும், அவனின் பார்வையிலும், அந்த கொடும் நினைவுளை மறந்து அவ்விடத்தில் நேத்ரனே மொத்தமாய் இடம் வகிக்க அவன் கூறியவற்றால் முகம் சிவந்து அவன் மீது பொய் கோபம் கொண்டு…



“ ச்சீ... தனு, நீங்க ரொம்ப ... ரொம்ப பேட் பாய் ஆயிட்டீங்க ம்ச்... என்னை இறக்கி விடுங்க நானே நடந்து வரேன் ....” என சூர்யா அவனின் நெஞ்சில் இருந்து முகம் நிமிர்த்தி கூற.



“ நான் நல்லவனா இருக்க ட்ரை பண்றேன்னு தான் சொன்னேன். ரொம்ப நல்லவன்னு சொல்லலை டாலி” என அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன் அவளை தன் மடியில் அமர்த்திய படி அவளின் நெற்றியில் தன் நெற்றியை கொண்டு முட்டி கூற.



நேத்ரன் கூறியவற்றை கேட்டு சூர்யா, ஆ ... வென வாய் திறக்க அவளின் செய்கையில் கவர பட்டவன்.



“ ஒய்..! கியூட்டி, என்ன குல்கந்த் கிஸ் வேணுமா..?” என திறந்திருந்த அவளின் அதரங்களை வருடிய படி கேட்க அவனின் கையை தட்டி விட்டவள், திறந்திருந்த வாயினை மூடிக்கொண்டாள். தன் கை கொண்டு மூடிய வாய்க்குள் ஏதோ முனங்க,

அவளின் வாயினை மூடிய கரங்களை விலக்கி, என்னவென நேத்ரன் வினவ, “அது என்ன தனு, குல்கந்த் கிஸ் அப்படின்னா என்ன..?” என கேட்க.

( வேணா டாலி, அவன் ஏதோ வில்லங்கமா சொல்ல போறான் எஸ் ஆயிடு).



நேத்ரனோ, அவளின் இதழ்களை வருடிக்கொண்டு, “அது ஒண்ணும் இல்லை டாலி, என்னோட சின்ன வயசுல எங்க தாத்தா ஒரு ஸ்வீட் கொடுப்பாங்க. ஹனில ரோஸ் பெடல்ஸ் அண்ட் கற்கண்டு போட்டு நல்லா ஊற வச்சி செய்வாங்க ரோஸ் ஆல்ரெடி சாஃப்ட் ப்ளஸ் கற்கண்டு கூட ஹனி வேற வாயில போட்டா அப்படியே கறைஞ்சி காணாம போய்டும். அது போல் உன்னோட லிப்ஸ் ரொம்ப சாப்ட் அண்ட் ஸ்வீட் அந்....ம்ம்ம்ம்ம்ம்ம் “ இன்னும் என்னவெல்லாம் சொல்லி இருப்பானோ, அதற்குள் நேத்ரனின் வாயினை தன் கைகொண்டு மூடி இருந்தாள் சூர்யா.



அவன் கூறிய விளக்கத்தில் அவளின் முகம் ரோஜாவை விட அதிகமாக சிவந்திருந்தது.



அவன் உயிரானவள்…
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 25



“ தனுஊஊஊஊ... உங்க சேட்டை வர வர கூடி போச்சு… போங்க நான் ரூம்க்கு போறேன்” என கூறி அவனிடம் இருந்து எழப்போனவள். அப்பொழுது தான் அவளின் பார்வை தன் கைகடிகாரத்தில் பதிய அதுவோ அதிகாலை இரண்டு மணி என கூறியது.



“ ஐய்யோ..! தனு, அத்தம்மா நாம இவ்வளவு நேரம் ஆகியும் வரலைன்னு கவலை பட்டுட்டு இருப்பாங்க. வாங்க போகலாம்… ஹரிஷ் அண்ணாவும், ஜெய்யும் ரூமுக்கு போய்ட்டாங்களான்னு தெரியலையே…” என சூர்யா பதற.



“ ரிலாக்ஸ் டாலி, உன் அத்தம்மா கிட்ட நாம வர லேட் ஆகும் அதனால தங்கம்மாவையும் அவங்களையும் ரூம் லாக் பண்ணிக்கிட்டு தூங்க சொல்லிட்டேன். உனக்கும் ஜெய்ஸ்ரீக்கும் வேற ரூம் அலோட் பண்ண சொல்லிட்டேன். ஓகே வா சோ அவங்களை பத்தி எல்லாம் யோசிக்காம கொஞ்சம் என்னை கவனி கியூட்டி...” என கூறி அவளின் இடையில் கரம் பதித்து தன்னோடு இறுக்கி கொண்டான்.



ஜெயஸ்ரீயும், அவ்வாறே அங்கே ஹரிஷிடம் புலம்பி கொண்டிருந்தாள்.



“ ரிஷி, சூர்யாவும் அண்ணாவும் போய் ரொம்ப நேரம் ஆயிடுச்சு, நம்மளை தேடிக்கிட்டு இருக்க போறாங்க…? பாவம் போன் பண்ணி எங்க இருக்காங்கன்னு கேளுங்க…?” என்றவளை.



ஹரிஷோ, ‘லூசாப்பா நீ…’ என்பது போல் பார்த்து வைக்க, அவனின் பார்வையில் அவள் குழப்பியவள் ‘என்னவென…?’ பதில் பார்வை பார்க்க.



“ ஸ்ரீம்மா, உன் பதட்டம் எனக்கு புரியுது, பட் என் தங்கச்சி வேணா நம்மள தேடுவா, ஆனா…? என் பிரெண்ட் விட்டது தொல்லைன்னு நினைச்சு சந்தோஷமா இருப்பான். இப்ப நான் கால் பண்ணா எனக்கு கரடி பட்டம் கான்பார்ம் டா, செல்லம்” என அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு சொல்ல.



அவன் கூறிய பாவத்தில் சிரிப்பு வந்தாலும் சிரிக்காமல், முகத்தினை சாதாரணம் போல் வைத்துக் கொண்டு, “ இந்த வாய் இல்லைன்னா உன்னையெல்லாம் நாய் கவ்விண்டு போய்டும்” என மனத்திற்குள் நொடித்து கொண்டவள்.



“அந்த அண்ணா அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்க அவங்க எல்லாம் ரொம்ப டீசெண்ட் எல்லாரையும் உன்னை மாதிரி நினைக்க கூடாது” என அந்த “ரொம்ப டீசெண்ட்…” என்ற வார்த்தையில் அதிக அழுத்தம் கொடுத்தாள் ஜெயஸ்ரீ.



“ அம்முக்குட்டி, யாரு…? அவன் டீசெண்ட்டஆஆஆஆ...?” என இழுத்து கூறியவன், “உனக்கு அவனை இந்த 24மணி நேரம்தான் தெரியும். ஆனா எனக்கு அவனை KG படிக்கிற காலத்தில் இருந்தே தெரியும். அதுவும் இல்லாம காதல்லையும், காதலிகிட்டயும் (பொண்டாட்டி கிட்டையும்) டீசெண்ட் எல்லாம் பார்க்க கூடாது. ஒரு சில நேரம் கட்டிபுடிச்சி கெஞ்சி, கொஞ்சணும் பல நேரத்தில் கொஞ்சம் கூட யோசிக்காம காலுல விழுந்திடணும் அப்ப தான் லைப் ஸ்மூத்தா, ஹாப்பியா இருக்கும்” என விளக்கம் கூறியவனை கண்டு.



‘ ரொம்ப விவரம் தான்’ என ஹரிஷை மனத்திற்குள் மெச்சி கொண்டவள், “ இதுல நீ எதை பலோ பண்ணுவ ரிஷி…?” என ஸ்ரீ கேட்க.



ஹரிஷோ, அவளை கெத்தாக பார்த்து, “நானெல்லாம் ஆம்பிளை சிங்கம் அம்மு” என மீசையை முறுக்கி விட்டு கொண்டே, “அதனால கொஞ்சம் கூட யோசிக்காம காலில் விழுந்துடுவேன்” என கூறி கண்சிமிட்டி சிரிக்க,( நீ பொழச்சிப்ப ராசா).



அவன் சொல்லிய விதத்தில் ஜெயஸ்ரீ சிரித்து கொண்டே, “யூ ஆர் சோ ஸ்வீட் ரிஷி” என கூறி அவன் கன்னங்கள் இரண்டையும் தன் கைகளால் கிள்ளி முத்தமிட.



“ ஸ்ரீம்மா, இது போங்கு ஆட்டம்” என்றவனை ஜெயஸ்ரீ புரியாமல் பார்க்க.



“ பின்னஎன்ன, உன் கையால் கிள்ளி உன் கைக்கே முத்தம் கொடுத்ததுக்கு பதிலா ஸ்ட்ரயிட்டா கன்னத்திலேயே தந்து இருக்கலாம். இல்லைன்னா பதில் சொன்ன வாய்க்காவது கொடுத்து இருக்கலாம்” என மிகவும் வருத்தம் போல் கூற.

அவனை முறைக்க முயன்று தோற்றவளின் முகம் வெட்கத்தில் சிவக்க, அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் விழிகளை தாழ்த்தி, “ஏன் கொடுத்தது எல்லாம் பத்தாதா..?” என தனக்கே கேட்காத குரலில் கூற.



அது சரியாக ஹரிஷ் காதில் கேட்டு வைக்க, “ ஐய்யோ..! ஸ்ரீ, அதெல்லாம் நான் கொடுத்தது நீ கொடுக்கல காதல்ல கணக்கு எல்லாம் பார்க்க கூடாது தான் இருந்தாலும் நியாயம்ன்னு ஒண்ணு இருக்குல்ல அதுனால ஒன்னே ஒண்ணு இங்கே கொடு ஸ்ரீம்மா...” என தன் உதடுகளை சுட்டிக்காட்ட,( டேய், அவளே இப்பதான் கொஞ்சம் நார்மல் மொடுக்கு வந்திருக்கா அவளை மறுபடியும் சந்திரமுகியா மாத்திடாத டா).



ஜெயஸ்ரீயோ, “ ஒண்ணு என்ன ரிஷி, ஒன்பது தரேன்” என தன் கைகளை தேய்க்க.



அவளின் கைகளை பற்றிக் கொண்டு, “ வேணாம் அம்மு, நீ என்னை அடிச்சின்னா நான் உன்னை கடிப்பேன்” என அவளின் சிவந்த அதரங்களை பார்த்து ஹரிஷ் கூறனான் அந்த திருடன்.



அதில் லட்ஜையுற்றவள் அமைதியாகிவிட, “என்ன அம்மு, சைலண்ட் ஆயிட்ட” ( அவளே அமைதியா இருந்தாலும் உனக்கு பொறுக்க மாட்டிங்குது). என கூறி பற்றிய அவளின் கையில் முத்தம் வைக்க அம்முத்தத்தில் பெண்ணவள் சிலிர்க்க, மேலும் அவளின் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைய முயன்றவனை தடுத்து, “ப்ளீஸ் ரிஷி அவங்களுக்கு கால் பண்ணி எங்க இருக்காங்கன்னு கேளுங்க…?” என்றாள் சிறுகுரலில்.



அவள் குரலில் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தவன், “என்ன ஸ்ரீமா, வாய்ஸ் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு என்னை பாரு மா...” எனக் கூறி அவளின் தாடை பற்றி தன் முகம் நோக்கி நிமிர்த்த, அவனின் கண்ணோடு கண்ணோக்க முடியாமல் விழி தாழ்த்தியவளை கண்டு தனக்குள் சிரித்து கொண்டவன், “என்ன டா, கன்னம் எல்லாம் சிவந்து கண்ணெல்லாம் கிறங்கி இருக்கு, உனக்கு வெட்கம் எல்லாம் பட தெரியுமா..?” என கேட்க.

அவ்வளவு தான் ஜெய்ஸ்ரீயை ஆட்கொண்டிருந்த மயக்கம் எல்லாம் பின்னங்கால் பிடரியில் இட ஓடி மறைய, அவ்விடத்தில் கோபம் குடியேற,

ஹரிஷ், தலையில் எம்பி 'நங்' என ஒரு கொட்டு வைத்தாள்.



“ ஸ்...ஹா சந்தேகமே இல்ல இது என் அம்மு குட்டி தான்” என்றவனை கேள்வியாய் பார்க்க.



“ அது ஒண்ணும் இல்லடா, கொஞ்ச நேரத்துக்கு முன்ன ரொம்ப அடக்கமா ஷாப்ட்டா பேசுனியா… அதான் சின்னதா ஒரு டவுட், நீ என் அம்முக்குட்டியா இல்ல ஏதாவது வெள்ளைக்கார மோகினி பேய் பிடிச்சிகிச்சான்னு ஒரு டெஸ்டிங் போட்டேன். நீ பாஸ் ஆகி கான்போர்ம் பண்ணிட்ட. நீ என் அராத்து பேபி அம்முக்குட்டி தான்” என கூறியவனை இடுப்பில் கைவைத்து கொண்டு பார்த்தாள் ஜெய்ஸ்ரீ.



ஹரிஷோ மேலும், “நீ டக்குனு இப்படி எல்லாம் மாறினா என் சின்ன இதயம் தாங்காது மா...” என கூறி அவனின் இடபக்க மார்பை இரண்டு கைகளால் தாங்கி கொள்ள, அவனின் அலப்பறையில் கோபம் கொண்டு முறைக்க முயன்று முடியாமல் சிரித்து கொண்டே, “போதும் ரிஷி, விளையாட்டு கால் பண்ணுங்க” என கூறினாள்.



“ எனக்கு கரடி பட்டம் வாங்கி கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டா… கால் பண்றேன், அவன் என்னை மானக்கேடா திட்ட போறான்” என புலம்பிக் கொண்டே நேத்ரனுக்கு அழைத்தான்.

**********************



இங்கு நேத்ரனோ, சூர்யாவினை தன் மடியில் அமர்த்தி, அவளை தன் கரங்களால் அணைத்து கொண்டு கண் மூடி அவளின் அருகாமையினை அனுபவித்து கொண்டிருந்தான். சூர்யாவின் மனநிலையும் அதே போல் தான் இருந்தது.



கடந்த ஐந்து வருடங்களாய் ஆழிப்பேரலையாய் அமைதி இல்லாது தவித்து கொண்டிருந்த அவனின் மனது, இன்று ஆழ்கடலாய் அமைதி கொண்டிருப்பதற்கு காரணம் தன்னுயிரானவளின் அருகாமையும் அவள் தன் மீது கொண்ட காதலும் என்றால் அது மிகையில்லை என்றே தோன்றியது கமலநேத்ரனுக்கு.



எல்லா வரமும் வாய்க்க பெற்றவன், தன்னவளின் மேல் கொண்ட காதலை மறக்கவும் முடியாமல் துறக்கவும் முடியாமல் இருதலை கொல்லி எறும்பென அவன் துடித்த தவித்த நாட்கள் ஏராளம்...



இழந்து விட்டதாக நினைத்த சொர்க்கம் மீண்டது போல் அவ்வளவு மகிழ்ச்சி கொண்டது நேத்ரனின் மனம்.

ஆக மொத்தத்தில் நேத்ரனின் வலிக்கும் அவளே காரணம் அவள் அறியாமல், அதே போல் அவனின் வலிக்கு மருந்தானாள் அவள் அறியாமலேயே...

அதீத மகிழ்ச்சியில் தான் செய்த தவறை கவனிக்க தவறினான் நேத்ரன்.



சூர்யாவினை கண்ட நாள் முதலாய் காதல் கொண்டதாக கூறியவன், அவளை ஐந்து வருடங்களுக்கு முன்பு பார்த்ததை சொல்ல மறந்து விட்டான். இதுவே பின்னாளில் அவர்களின் பிரிவிற்கு காரணமாக அமையும் என தொழிலில் அனைத்தையும் கணக்கிட்டு மிக துல்லியமாக செய்யும் அந்த வல்லுனனுக்கு தெரியாமல் போய் விட்டது தான் விதியோ.



நேத்ரனும், சூர்யாவும் தங்களின் மோன நிலையில் இருக்க. அவர்களின் அந்நிலையினை கலைப்பது போல் ஒலித்தது நேத்ரனின் அலைபேசி.



(அழைத்தது யார் என நான் சொல்ல வேண்டுமா, என்ன…?)



இந்நேரத்தில் தன்னை அழைக்கும் தைரியம் ஒருவனுக்கே உண்டு என எண்ணி கொண்ட நேத்ரன், புன்னகையுடன் கால் அட்டெண்ட் செய்து, “சொல்லு ஹரி, எங்க இருக்க…? என்னை ஹாலுக்குள் போக வேண்டாம்னு சொல்லிட்டு நீ நல்லா என்ஜோய் பண்ண போலிருக்கு…? ஆமா, ஜெயஸ்ரீ உன் கூட தானே இருக்காங்க…?” என தொடர் கேள்வி கேட்க.



...........



அந்த பக்கம் ஹரிஷ் மறுமொழி கூறத்திருக்கவும் “ஏன்டா, பேசாம இருக்க…?” என, நேத்ரன் மீண்டும் அவனை கேள்வி கேட்க…



“ ம்... வேண்டுதல் நீ நிறுத்துனா தானே டா, நான் பேசுறதுக்கு… கேப் விடாம கேள்வி கேட்டுட்டு பேசுற பேச்சை பாரு, கவலை படாதடா ராசா நீ என்னை கேட்ட ஒரு கேள்வியையும், நான் உன்னை திருப்பி கேட்க மாட்டேன். இப்ப நீங்க வர்றீங்களா..? இல்ல நாங்க வரட்டுமா..?” என ஹரிஷ் கேட்க.



“நண்பேன்டா, க...க... போ “ என சொல்லி சிரித்தவன், “நாங்க இங்க ஸ்விம்மிங் ஃபூல் கிட்ட தான் இருக்கோம். நீங்க ரெண்டு பேரும் வாங்க” என கூறினான் நேத்ரன்.



ஹரிஷோ, தன் குரலை தாழ்த்தி “ இந்த கேப்லையும் ரொமான்ஸ் பண்ண பார்க்குற அனுபவி டா “ என கூறி சிரித்துக் கொண்டே அழைப்பை துண்டித்தான்.



( அவன் ரொமான்ஸ் பண்ணான். நீ என்ன விரதமா காத்த)



ஹரிஷ், கூறிய விதத்தில் நேத்ரனின் முகம் சிவக்க ஒரு வெட்க முறுவலில் அவன் உதடுகள் நெளிய தன் வலக்கை கொண்டு தலை கோதி கொண்டான்.



அவனின் அனைத்து செயல்களையும் பார்த்து கொண்டிருந்த சூர்யாவிற்கு, அவனின் முக சிவப்பும், வெட்க முறுவலையும் காண காண அவளின் கண்களுக்கு அவன் இன்னும் இன்னும் பேரழகனாய் தோன்றினான். அதுவும் அவனின் வெட்க நகையில் மிச்சமே இல்லாமல் வீழ்ந்தாள் சூர்யா.



“ தனு, உங்க வெட்கம் ரொம்ப அழகா இருக்கு, ஒரு ஆண் வெட்கப்படுறதை இப்ப தான் முதல் தடவையா பார்க்குறேன்” என்றாள்.



“ ஏன் டாலி, ஆண்களும் மனிதர்கள் தானே. பெண்களுக்கு இருக்குற எல்லா வித உணர்வும் ஆண்களுக்கும் இருக்கும். பெண்கள் வெளிப்படுத்துறாங்க ஆண்கள் பெருசா எக்ஸ்பிரேஸ் பண்றது இல்ல அது தான் வித்தியாசமே தவிர இருவருக்கும் இருக்கும் உணர்வுகள் எல்லாம் சேம்” என நேத்ரன் சொல்ல.



“ ம்ச்... அப்படி யாரும் நினைக்குறது இல்லை தனு, மோஸ்ட்லி அப்படி நினைக்குறவங்க நூத்துக்கு பத்து பேர் இருந்தாலே அதிகம்” என கூறியவளின் குரலில் அவ்வளவு வருத்தம்...



அவளின் கையினை எடுத்து தன் கரங்களுக்குள் வைத்து பொதிந்து கொண்டவன், “ நம்மளோட இந்து மதத்துல பெண்ணை சக்தியா வழி படுறாங்க சக்தினா பவர், உயிர் வாழுறதுக்கான உந்து சக்தி… இப்படி என்ன வேணாலும் சொல்லலாம். ஒரு பெண் ஒரு ஆணோட லைப்ல அவசியம் மட்டும் இல்ல அவ அத்தியாவசியமும் கூட, க்ரிஸ்டியானிட்டில ஆதாமோட விலா எலும்பு கொண்டு தான் பெண்ணை உருவாக்கியதா சொல்வாங்க.



அப்படி பார்த்தா தன்னில் இருந்து உருவானவளை கேவலப்படுத்தினா அது தன்னை தானே கேவலப்படுத்திக்குறதுக்கு சமம் இதை எல்லோரும் புரிஞ்சுக்கிட்டாலே போதும்… அடுத்தவங்க வீட்டு பெண்ணுக்கு தீங்கு இழைக்கும் போது நம்ம வீட்டுலையும் பெண்கள் இருக்காங்கன்னு நினைச்சு பார்த்தாலே… நாட்டுல நடக்குற பாதி குற்றங்கள் காணாமல் போய்டும் டாலி, எல்லா ஆண்களும் தப்பானவங்க இல்ல. அதுலையும் ஒரு சில பேர் என்னை போல நல்லவர்களும் இருக்க தான் செய்யறாங்க டாலி...” என கூறி கண்சிமிட்ட.



சூர்யா, அவளின் துப்பட்டாவை நீட்ட என்னவென புரியாமல் பார்த்தவனை,“ ரொம்ப வழியுது தொடைச்சிக்கங்க” என.



நேத்ரனும், கர்ம சிரத்தையாய், “ ஓகே டாலி “ என அவளின் மேலாடை பிடித்து இழுத்தவன் மேல் மலர் செண்டேன மோதியவளை அணைத்து கொண்டவன், “தொடச்சி விடு டாலி...” என்றவனிடம் இருந்து தப்பும் வழி அறியாது, “ ஐய்யோ..! விடுங்க தனு அண்ணா வந்துட போறாங்க” என சங்கடமாய் அவள் சொல்ல.



தன் அணைப்பிலிருந்து அவளை விடுவித்தவன்… மீண்டும் அவளின் இடையில் கரம் கோர்த்து அணைத்து கொள்ள, “ ஷ்... தனு என்ன பண்றீங்க” என கோபம் போல் கேட்க வந்தவள், அது முடியாமல் போக கெஞ்சலாய் ஒரு பார்வை பார்க்க.



“ டாலி, இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன்… என் பொண்டாட்டியை நான் எப்படி வேணா அணைச்சிப்பேன் ஓகே வா..? உன் பாசமலர் கிட்ட சொல்லு இதெல்லாம் கண்டுக்க கூடாதுன்னு

அவன் கண்டுக்கவும் மாட்டான் டாலி” என முன்னிலும் இறுக்கமாக பற்றி கொண்டவன். “ வா, நாம கொஞ்சம் முன்னாடி போகலாம்” என நேத்ரன்

கூற.



அவர்கள் இருவரும் முன்னோக்கி சென்றனர். இவர்கள் இங்கே இப்படி வழக்கடித்து கொண்டு செல்ல ஹரிஷும் ஜெயஸ்ரீயும், இவர்கள் இருக்கும் நீச்சல் குளம் நோக்கி வர, இரு ஜோடிகளும் ஒரு வித மயக்கத்தில் இருந்ததினால் மற்றவர்களின் மாற்றம் அறிய முடியாமல் போயிற்று.



நேத்ரனும், ஹரிஷும் அவர்கள் ஏற்கனவே தங்கி இருந்த ஸூட்டில் ஓய்வெடுக்க, தோழிகள் இருவரும் இன்னொரு ஸூட்டில் ஓய்வெடுத்தனர்.

சென்னை...



விவேக், அந்த புகைப்படத்தில் உள்ள சூர்யா மற்றும் நேத்ரனின் நெருக்கத்தினை காண காண அவன் தன்னிலை இழந்தான். அதுவும் சூர்யாவின் முகத்தில் காணப்படும் மலர்ச்சி, மகிழ்ச்சி, அவள் கண்களில் இருக்கும் மயக்கம், நேத்ரனின் கரங்களில் அடங்கி இருக்கும் பாங்கு என பார்க்க பார்க்க... பற்றி எரிந்தது கூடவே தான் நெருங்குகையில் சூர்யாவின் முகத்தில் தோன்றும் அருவெறுப்பு கண்களில் தோன்றும் கோபம், விருப்பமின்மை என எல்லாம் அவன் மனத்தில் படமாக ஓடியது.



அவனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்க தன் முன் இருந்த மேஜையில் இரு கைகளையும் மூடி தன் பலம் கொண்டு குத்தியவன், “ நான் தொட்டா பெரிய பத்தினி மாதிரி என்னை அறைஞ்சு அசிங்கப்படுத்தின இன்னைக்கு அவன் தொட்டா மயங்கி கிறங்கி நிக்குற அவனை விட நான் எந்த விதத்தில் குறைஞ்சு போய்ட்டேன்…”



‘ மடையா அவனின்(அவங்களோட)அணைப்பையும் நெருக்கத்தினையும் மட்டும் பார்க்குற உன்னோட கண்ணுக்கு அவனோட காதல் தான் அவளை மயங்கி கிறங்கி நிக்க வைக்க காரணம்ன்னு தெரியலையா… இதெல்லாம் சொன்னாலும் உனக்கு புரியாது போடா’ என்று அவனை பார்த்து சொல்வது போல் கணினியில் நேத்ரனின் அணைப்பில் சிரித்து கொண்டிருந்தாள் சூர்யா.



அவள் உயிரானவன்...









அத்தியாயம் 26



சென்னை...



தான் ஏற்பாடு செய்த உளவாளியை அழைத்துப் பேசிய விவேக்கோ, அவன் சொன்னதை கேட்டு அடிபட்ட புலியாய் சீற்றம் கொண்டு உறுமியவாறு தன்னுடைய அறையின் நீள அகலத்தை அளந்துக் கொண்டிருந்தான்.



அதனை வெளியில் இருந்து பார்த்து கொண்டிருந்த தீபக்கோ, ‘போச்சா... இந்த போனும் போச்சா இப்ப உள்ள போகலாமா..? வேணாமா..? இன்னைக்கு நான் வீட்டுக்கு போன மாதிரிதான் அவனைவன் நியூ இயர் கொண்டாடிக்கிட்டு இருக்கான். நமக்கு தான் கேர்ள் பிரெண்ட் கூட கொண்டாடுற கொடுப்பினை இல்ல. அட்லீஸ்ட் பாய் பிரெண்ட் கூட கொண்டாடலாம்னு நினைச்சா அதுவும் இல்லாம போச்சு. எனக்கு மட்டும் எப்படித்தான் இப்படி புதுசு புதுசா பிரச்சனை வருதோ தெரியலையே...?’ என தன் மனதோடு புலம்பிக் கொண்டிருந்தவனை விவேக்கின் அழைப்பு நிகழ்விற்கு கொண்டுவர...



அறைக்குள் நுழைந்த தீபக்கிடம் விவேக், “என்னோட மொபைல் உடைஞ்சு போயிடுச்சு (பொய் சொல்லாத டா நீ தானே உடைச்ச தீபக் மைண்ட் வாய்ஸ்) நாளைக்கு மோர்னிங் அதே மாடல் மொபைல் எனக்கு வேணும் அண்ட் அந்த மொபைலில் உள்ள ஆல் போட்டோஸ் அண்ட் டேட்டாஸ் என்னோட ஸிஸ்டெம்க்கு ரீபிளேஸ் பண்ணிடுங்க. அதுல இருக்க சூர்யாவோட போட்டோவை மட்டும் பிரிண்ட் போட்டு அவங்க வீட்டுக்கு உடனே அனுப்பி வைங்க” என மூச்சு கூட விடாமல் தான் யோசித்தவைகளை சொல்லிக் கொண்டிருந்தான்.



‘ பக்கி, பரதேசி, இதை தான் இவ்வளவு நேரமா யோசிச்சியா..? யாரோ ஒருத்தன் கூட அவங்க பொண்ணு இவ்வளவு நெருக்கமா இருக்குறதை பார்த்தா பெத்தவங்க மனசு என்ன பாடுப்படும். அதுவும் நாடுவிட்டு நாடு போய் இருக்க பொண்ண பத்தி என்ன வில்லத்தனம் நீயெல்லாம் ரொம்ப நல்லா வருவ டா’ என தன்னால் முடிந்த மட்டும் விவேக்கினை தீபக் தன் மனத்திற்குள் தாளித்து கொண்டிருந்தான்.



தான் கூறியதிற்கு எந்த வித எதிர்வினையும் இல்லாமல் போக தீபக்கை ஏறிட்டு பார்த்த விவேக், அவனின் தீவிர யோசனை கண்டு தன் நெற்றி சுருக்கி, தன் மேஜை மீது தட்டினான் தீபக்கின் யோசனையை கலைக்கும் பொருட்டு...



அதில் தன் யோசனை கலைந்த தீபக், தன் முன்னே இருந்தவனை கண்டு, ‘ஐய்யோ..! தீபக், இப்படியா மாட்டுவ இப்ப எப்படி இவனை சமாளிக்க போற’ என மனதோடு புலம்ப ( என்னைக்கோ ஒரு நாள் உன் மைண்ட் வாய்ஸ்சை அவன் கேட்ச் பண்ண போறான் அன்னைக்கு இருக்குடி உனக்கு).



நெற்றி சுருக்கி முகத்தில் சற்றும் இறுக்கம் குறையாமல் விவேக், தீபக்கிடம், “என்ன யோசனை” என வினவ,



‘ ம்ம்.... உன் மண்டைய எதை கொண்டு உடைக்கலாம்னு யோசிக்கிறேன்’ என மனத்திற்குள் சொன்னவன், வெளியே முகத்தை அப்பாவி போல் வைத்து கொண்டு.



“அது ஒண்ணும் இல்லை சார், ஏற்கனவே அவங்க பேரெண்ட்ஸ் சூர்யா மேடம்க்கு கல்யாணம் பண்றது எப்படின்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க. இந்த நேரத்தில் நாம இப்படி ஒரு போட்டோ அனுப்பினா இதுதான் கிடைச்ச சான்ஸ் அப்படின்னு இந்த போட்டோல இருக்கிறவர்க்கே கல்யாணம் பண்ணி வெச்சிட்டா…?, பார்க்க அவரும் அழகா வேற இருக்காரு” என்றவன், விவேக்கின் பார்வையில் அனல் கூடுவதை அறிந்து தன்னுடைய பேச்சினை நிறுத்திக் கொண்டான்.



“ உண்மைய சொன்னா கசக்குது, நான் என்ன பண்ண முடியும்..?” என மெதுவே முணுமுணுத்தான்.



அவனின் முணுமுணுப்பில் நிமிர்ந்து பார்த்த விவேக்கினை கண்டு, “ ஓகே சார், நீங்க சொன்ன மாதிரி செஞ்சிடுறேன்…?” என கூறி அங்கு சிதறி கிடந்த போன் பாகங்களை எடுத்து கொண்டு வெளியேற சென்றவனை தடுத்த விவேக்.



“ டேட்டாஸ் அண்ட் போட்டோஸ் என் சிஸ்டம்க்கு மட்டும் மாத்துங்க மீதியை நான் அப்பறம் சொல்றேன்” என



“சரி” என ஒரு தலையாட்டலோடு வெளி வந்த தீபக், “ஷப்பா...” என ஒரு பெரும் மூச்சினை வெளியேற்றினான். “இவனை அந்த போட்டோ அனுப்ப விடாம தடுக்குறதுக்குள்ள முடியலடா சாமி” (அடங்கு டா,போட்டோ அனுப்பி இருந்தாலும் பெருசா எதுவும் நடந்திருக்காது).



‘ சூர்யா, ஏதோ என்னால முடிஞ்சதை செஞ்சு இந்த போட்டோ உன் வீட்டுக்கு அனுப்பாம தடுத்திட்டேன் ம்மா, கூடிய சீக்கிரம் ஒருத்தனை நீ கல்யாணம் பண்ணிக்க, ம்... வேற ஒருத்தன் எதுக்கு இந்த போட்டோல இருக்குறவரே நல்ல தான் இருக்காரு…? (டேய், நீ சொன்னாலும் சொல்லலைனாலும் அவனை (நேத்ரனை) தான் சூர்யா கல்யாணம் பண்ணிப்பா) அப்ப தான் இவன் (விவேக்) அடங்குவான்’ என எண்ணியவன், ‘முதல்ல டேட்டாஸை சிஸ்டம்க்கு ட்ரான்ஸ்பெர் பண்ணிடுவோம் இல்லைன்னா அதுக்கும் சத்தம் போட போறான்’ என தன் வேலையினை கவனிக்க தொடங்கினான் தீபக்.

விவேக்கோ, தீபக் சொன்ன, “கல்யாணம் பண்ணி வெச்சிட்டா…?” என்ற வார்த்தைகளே அவன் மனத்தினை ஆக்கிரமித்து இருந்தன.



“ ஏய் சூர்யா, உனக்கு கல்யாணமா… நோ…? நெவெர்…? கண்டிப்பா அப்படி நடக்க விட மாட்டேன். உன்னை யாரு ப்ரோடெக்ட் (protect) பண்ணுறாங்கன்னு எனக்கு தெரியலை. அது மட்டும் எனக்கு தெரியட்டும் அப்புறம் இருக்கு உனக்கு, இந்த விவேக் யாருன்னு காட்டுறேன்.

அந்த யூஸ்லேஸ் பெல்லோ உன்னோட முகத்தை மட்டும் நல்லா தெளிவா எடுத்து இருக்கான், பட் உன் கூட இருக்குறவன் முகம் சரியா தெரியலை. அவன் யாருன்னு கண்டு பிடிக்கிறேன்…? அவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்னு கண்டுபிடிக்குறேன்…?”



“ ஒருவேளை தீபக், சொன்ன மாதிரி இருந்தா ரெடியா இரு சூர்யா, உன்னோட ஆருயிர் காதலனை பிரிய “ஐ வில் மேட் யூ போத் செப்பரேட்” ( I will Made You Both Seperate) (போடா, சும்மா காமெடி பண்ணிக்கிட்டு உனக்கு நொண்ணன் ஒருத்தன் அங்க இருக்கான்). என்னோட வாழ்க்கைல இருந்த சந்தோசம் நிம்மதி அழிய காரணமா இருந்த உன்னோட லைப்ல எந்தவித நல்லதும் நடக்க விடமாட்டேன். இதுவரை என்னை யாரும் அவமானம் படுத்தியதோ அசிங்கபடுத்தியதோ இல்ல”



‘ அப்படி என்னை கேவலபடுத்தினவங்களை நான் சும்மா விட்டது இல்லை. ஆனா உன் விஷயத்தில் என்னை நீ ரொம்ப கேவலப்படுத்திட்ட இதை எல்லாம் விட என்னோட ஸ்டாப் முன்னாடி என்னை நீ கைநீட்டி அடிச்சதை என்னால மன்னிக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது. அந்த நிமிஷம் நான் எப்படி அவமானமா பீல் பண்ணேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். இட் ஹுர்ட்ஸ் மீ எ லோட் அதை நினைச்சி நான் எப்படி லைப்லாங் கவலை படுறனோ அதே மாதிரி உன்னையும் வருத்தப்பட வைக்கலை…? கண்டிப்பா உன் வாழ்க்கை முழுசும் வருத்தப்பட வைப்பேன்…?’ என தனக்குள் சபதம் எடுத்து கொண்டான் விவேக்.



(அட போடா, உன்னோட சபதத்தை எல்லாம் சக்கரை பொங்கல் ஆக்க ஒருத்தன் ஆல்ரெடி வந்தாச்சு. அது தெரியாம சும்மா சவுண்ட் விட்டுகிட்டு இருக்கான் )



தீபக், விவேக் கூறிய வேலைகளை முடித்து விட்டு அவனிடம் அறிவித்து விட்டு கிளம்பிவிட்டான். எங்கே இன்னும் சிறிது நேரம் நின்றாலும் அந்த போட்டோவை அனுப்ப சொல்லிவிடுவானோ என்று பயந்து கொண்டு.



விவேக், அந்த புகைப்படத்தினை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான். விவேக்கிற்கு அந்த புகைப்படத்தில் உள்ள சூர்யா மற்றும் நேத்ரனின் நெருக்கம் அவனை மேலும் மேலும் தன்னிலை இழக்க செய்தது.



“ நான் தொட்டா பெரிய பத்தினி மாதிரி என்ன அறைஞ்சு அசிங்கப்படுத்தின இன்னைக்கு அவன் தொட்டா மயங்கி கிறங்கி நிக்குற அவனை விட நான் எந்த விதத்தில் குறைஞ்சி போய்ட்டேன். சொல்லுடி “ ( மடையா அவனோட அணைப்பை மட்டும் பார்க்குற. அவனோட காதல் தான் அவள் மயங்கி கிறங்கி நிக்க வைக்க காரணம் இதெல்லாம் சொன்னாலும் உனக்கு புரியாது போடா).



“ எங்க அம்மாவால தான் நீ இப்படி அவனோட அணைப்பில் உன்னை மறந்து சந்தோஷமா இருக்க என்னோட மாம், இதுவரைக்கும் எதுக்கும் என்கிட்ட கோபப்பட்டதோ, வருத்தப்பட்டதோ இல்லை. யார் முன்னாடியும் தலைக்குனிஞ்சு நின்னது இல்ல, குறிப்பா மன்னிப்பு கேட்டது இல்ல

ஆனா, பத்து பைசாக்கு வக்கில்லாத உன்னோட குடும்பத்துகிட்ட என் மாம் தலைக்குனிஞ்சு நின்னதும் இல்லாம மன்னிப்பும் கேட்டாங்க…”



“ அவங்க சொன்ன ஒரு வார்த்தைகாக தான் இன்னமும் உன்னை நான் நேரடியா எதுவும் பண்ணாம விட்டு வச்சிருக்கேன். இல்லன்னா உன்னை எப்பவோ அசிங்கப்படுத்தி, தடம் தெரியாம அழிச்சி இருப்பேன்.



என்கிட்ட இன்னமும் என் மாம், பழைய படி பேச மாட்டுறாங்க. இது எல்லாத்துக்கும் காரணம் நீ…? நீ மட்டும் தான்…? என் அம்மா, முன்னாடி என்னை ஒரு பொறுக்கி ரேஞ்சுக்கு ஃபாம் பண்ணி காட்டி இருக்க” ( இல்லன்னா மட்டும் நீ அப்படியே உத்தம புத்திரன் ரொம்ப நல்லவன் பாரு ).



‘ நான் என்னைக்கு உன்ன நேரில் பார்க்குறனோ அன்னைக்கு தான் நீ உன் வாழ்க்கையில் கடைசியா சந்தோஷமா இருக்குற நாள் ஜஸ்ட் கவுண்ட் யுவர் டேஸ்’( தம்பி, அதே தான் உனக்கும் என்னைக்கி நீ நேத்ரன், கண்ணுல வான்டெட்டா போய் சிக்குறியோ அன்னைக்கு உனக்கு தீபாவளி தாண்டி) என மனத்தில் வன்மத்தினை வளர்த்துக் கொண்டான்.



பாரீஸ்...



புத்தாண்டின் முதல் விடியல் பனிபொழியும் இளங்காலை வேளையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தோழிகளின் அறையில் இருந்த தொலைபேசி இசைக்க.



சூர்யா, அதனை எடுத்து இவள் “ஹலோ” என்றதும் தொடர் முத்தமும் அதனை தொடர்ந்து, “வெரி... வெரி... ஹாப்பி நியூ இயர் டாலி” என்ற தன்னவனின் வாழ்த்தில் ஒரு கணம் உறைந்து நின்றாள் சூர்யா.

விவேக், அவளின் வாழ்வில் குறுக்கிடும் முன்பெல்லாம் மகிழ்வுடன் கொண்டாடிய புத்தாண்டுகள் மட்டும் இல்லை எல்லா திருநாளும் ஏதோ முற்பிறவியில் நடந்த நிகழ்வாகி போயிருந்தது. கடந்து போன ஆண்டுகளின் தாக்கத்தில்.



நேத்ரன் சொல்லிய புத்தாண்டு வாழ்த்து அவளின் விழிகளில் கண்ணீர் சரம் கோர்க்க அவளின் மனத்தில் பழைய நிகழ்வுகள் எல்லாம் வலம்வர தொடங்க.



நேற்றைய நினைவுகள் அனைத்தும் கனவா..? நினைவா..? என புரியாமல் தன்னவனின் அருகாமையில் எந்த ஒரு பிரச்சனையும் பெரிதாக தோன்றாமல் இருக்க பிரச்சனை என்ன எந்த ஒரு விஷயமும் நினைக்க தோன்றவில்லை என்பதை விட நினைவில்லை என்பது தான் உண்மை.



அவன் அருகாமை நீங்கியவுடன் பழையபடி அவளின் பயம், தயக்கம் எல்லாம் அவளை சூழ்ந்துக்கொள்ள இருவேறு மனநிலையில் சூர்யா தவிக்க, “செல்லம்மா, விஷ் பண்ணா ரிடர்ன் விஷ் பண்ணனும் டா” என்றவன் தொடர்ந்து அந்த பக்கத்தில் அமைதியாக இருக்க,



............



“சரி சீக்கரமா கிளம்புங்க கோயிலுக்கு போய்ட்டு வீட்டுக்கு போகலாம்” என்றான் அவள் தூக்க கலக்கத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு, நேத்ரன் அவளிடம் பதிலை எதிர்பார்க்காமல், “ சரி வெச்சிடவா” என கேட்க.



அதில் மீண்டவள், “ த... தனு, வெரி ஹாப்பி நியூ இயர் “ என வாழ்த்த, அவள் குரல் ஒலித்த த்வனியிலேயே அவளின் மனநிலை அறிந்தவன், “டாலி, கொஞ்சம் வெளிய வாடா, நான் காரிடர்ல தான் வெயிட் பண்றேன்” என அழைத்தான்.



“ இ... இல்ல தனு, நான் இன்னும் பிரேஷ் அப் ஆகலை” என இழுத்தவளை, “ ஓகே சீக்கிரம் பிரேஷ் அப், ஆயிட்டு வா, உனக்கு ரெண்டு நிமிஷம் தான் டைம் அதுக்குள்ள நீ வரலைன்னா நான் ரூம்குள்ள வந்துடுவேன்… ஓகே டாலி, யுவர் டைம் ஸ்டார்ட்ஸ் நவ்” என கூறி அழைப்பை துண்டித்தான் நேத்ரன்.



“ த...தனு...” என்ற அவளின் அழைப்புகள் எல்லாம் வீணானது. அந்த பக்கம் “பீப்...பீப்...” என ஒலி கேட்க கையில் வைத்திருந்த ரிசீவரை தன் நெற்றியோடு முட்டிக்கொண்டவள். தன்னவனின் பிடிவாதம் நினைவிற்கு வந்தவுடன், வேகமாக ரெடி ஆகி அவனை சந்திக்க சென்றாள்.



அவள் வரும் முன்பே அங்கு வந்து காத்திருந்தவன், அவளை கண்டதும் இருக்கரம் நீட்டி அவளை அணைத்து கொண்டு அவளுக்கு மீண்டும் ஒருமுறை புத்தாண்டு வாழ்த்து கூறினான்.



பதிலுக்கு வாழ்த்து கூறியவளிடம் “ டாலி, ஸ்வீட் எடுத்துக்கவா…?” என கேட்டவனை புரியாமல் பார்த்து நின்றவளின், முகம் நிமிர்த்தி தன் உதடுகளால் அவளின் இதழ்களை சிறைபிடிக்க அவனின் நீண்ட இதழ் முத்தத்தில் சற்று முன் அவளுக்கு தோன்றிய மனசுணக்கம் அனைத்தும் நீங்கிவிட அவளும் அவனுடன் ஒன்ற அவளின் நிலை அறிந்து பிரிய மனமே இல்லாமல் பிரிந்தவன்.



தன்னுடைய சொல்லாலும், செயலாலும் அவளின் மனநிலையினை முற்றிலும் மாற்றியிருந்தான் அந்த மாயகண்ணன்.



சற்று நேரம் இருவரும்... ஒருவர் அணைப்பில் ஒருவர் தன்னிலை மறந்து இருக்க முதலில் சுயம்பெற்ற சூர்யா… “தனு, நாம ரூமுக்கு வெளிய நிற்கிறோம் யாராவது வர போறாங்க…?” என அவனின் அணைப்பில் இருந்து வெளிவர பார்க்க.



“ஏன் டாலி, அது கொஞ்ச நேரத்திற்கு முன்ன நான் ஸ்வீட் கொடுக்கும் பொழுது நினைவில்லையா..?” என கேட்டு கண்சிமிட்டி சிரிக்க அந்த வசீகரனின் சிரிப்பில் வசீகரிக்கப்பட்டாலும் வெளியில், அவனிடம் ஊடல் கொண்டு, “ச்சீ... தனு உங்களுக்கு கொஞ்சம் கூட விவஸ்தையே இல்ல போங்க” என சிணுங்கினாள்.



“ ரியா டாலி, உன்கிட்ட ஆல்ரெடி சொல்லி இருக்கேன் இப்படி எல்லாம் சிணுங்க கூடாதுன்னு அப்பறம் என்னை தப்பு சொல்ல கூடாது” என கூறி மேலும் தன்னுடைய அணைப்பில் இறுக்கம் கூட்ட.



“ தனு, எ...என்ன பண்ணுறீங்க…?” என அவனை விலக்க பார்த்தவளிடம் “டாலி, இது பாரீஸ், இந்தியாவோ தமிழ்நாடோ இல்லை சோ, ஒன்மோர் ஸ்வீட் டாலி” என மீண்டும் அவளின் முகம் நோக்கி குனிந்தவனை தடுத்தவள், “தனுஊஊஊஊ... அதென்ன சும்மா சும்மா ஸ்வீட் ஸ்வீட்ன்னு சொல்லிக்கிட்டு போங்க… நான் அத்தம்மா கிட்ட போறேன் விடுங்க” என.



நெற்றி சுருக்கி அவளை பார்த்தவன், “ இது தப்பாச்சே…! நேத்து நைட் தானே ஸ்வீட்னா என்ன அதோட பேரு எல்லாம் விளாஆஆஆஆஆவாரியா விளக்கினேன். அதுகுள்ள மறந்து போச்சா…? நான் வேணா திரும்ப தியரி அண்ட் பிராக்டிக்கல் கிளாஸ் எடுக்கட்டுமா டாலி…?” என அவளின் இதழ்களை வருடி கொண்டே கேட்க.



அவனின் கைகளை தட்டிவிட்டவள், “அதெல்லாம் ஒண்ணும் வேணாம், நான் போய் அத்தம்மாவை பார்த்துட்டு வரேன்” என ஓரடி எடுத்து வைத்தவளை தடுத்து.



“ உன் அத்தம்மா, இன்னும் எழும்பலை. உனக்கு உங்க வீட்டுக்கு கால் பண்ணனும்னு தோணிச்சு தானே நான் விஷ் பண்ணும் பொழுது…? அதுனால தானே உன்னால உடனே எனக்கு பதிலுக்கு விஷ் பண்ண முடியலை, அவங்களுக்கு கால் பண்ணி பேசு டாலி” என



காதலியின் பார்வையில், சொல்லில், செயலில், உடல்மொழியில், அவர்களின் மனம் புரிந்து நடக்கும் காதலனோ கணவனோ கிடைப்பது அரிது. அப்படி கிடைத்தால் அப்பெண் பெரும் புண்ணியம் செய்தவளாக சொல்ல கேள்விப்பட்டிருகிறாள். ஆனால்…? இங்கே தன்னுடைய மௌனத்தை கூட சரியாக புரிந்து கொண்டு அதனை நிறைவேற்றும் அவனின் அன்பையும், காதலையும் தான் அடைந்ததை(பெற்றதை) நினைத்து பேசற்று போனாள் சூர்யா.



சற்று நேரத்திற்கு முன் தன்னுடைய வலிகளை நினைத்து, கண்ணீர் சிந்தியவளின் விழிகளில் சந்தோஷத்தில் நீர் சொரிய. முன் தினம் தான் வாய்மொழியாக சொன்னால்தான் ‘என் காதல் புரியுமா…?’ என கேட்டவள் அவனின் காதலில் கட்டுண்டு, “ஐ லவ் யூ தனு” என கூறி அவனை அணைத்து கொண்டாள். அவளின் அணைப்பில் நேத்ரனின் மனது அந்த வானையே வசப்படுத்தியது போல் உவகை கொண்டது.





அவன் உயிரானவள்...






 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 27

ஏனெனில்.... அவனின் காதலி அவனை.... முதல் முறையாக தானே அவனுக்கு முழுமனதோடு தந்த முதல் அணைப்பு அல்லவா...... நேற்றும் அவனை அணைத்தாள் தான்.... அது.... அவள் தன்னை மறந்த நிலையில்..... அவனின் உயிருக்கு ஆபத்து என்ற நினைவில்.... அவனை காக்கும் பொருட்டு அணைத்திருந்தாள்....



அவளின் அணைப்பில் வாகாக அடங்கியவன்.... மேலும் தன் கரங்கள் கொண்டு அவளின் இடையினை இறுக்கமாக அணைத்து கொண்டு.... அவளின் தோள்வளைவில் தன் முகம் பதித்து.... அவளின் காதுகளில் மெதுவாக.... டாலி.... இப்பவும் நாம ரூம்முக்கு வெளிய தான் இருக்கோம்... என சீண்டும் குரலில் கூற....


அதில் தன்னிலை உணர்த்தவள்.... அவனின் சீண்டல் புரிந்து.... அவனுக்கு இரண்டு அடி போட்டு.... அவனை விட்டு நகர....








நேத்ரனோ..... சூர்யாவை முழுதும் தன் அணைப்பில் இருந்து விலக்காமல்.... அவளின் தோளினை அணைத்து கொண்டு.... அவனின் அலைபேசியை நீட்ட.....

முகம் முழுவதும் மகிழ்ச்சி பொங்க.... அதனை வாங்கி தன்னுடைய தமையனுக்கு அழைத்தாள் சூர்யா....


இரண்டு ..... மூன்று..... ரீங் சென்ற பின் அழைப்பு எடுக்க பட்டது....

அங்கு எடுத்தவுடன்... சூர்யா... " ஹாப்பி நியூ இயர் ஜீவா" என குரலில் துள்ளலுடன் வாழ்த்த.....

மறுமுனையில் கேட்டு கொண்டிருந்தவனுக்கோ.... தன்னுடைய தமக்கையின் குரலில் உள்ள வேறுபாடு நன்றாக தெரிந்தது.... அதில் மகிழ்த்தவன்.... மேலும் அவளை வம்பிழுக்க....

லூஸு.... பூசணி..... மொபைல்ல எங்க வைச்ச.... நான் விஷ் பண்ண எத்தனை வாட்டி கூப்பிடுறது..... என பொறிய....

அவனின் வசவுகளில் கடுப்பானவள்... லூஸு, எருமை.... விஷ் பண்ண பதிலுக்கு விஷ் பண்ணாம .... திட்டுற.... போடா டாங்கி..... காயுகிட்ட போனை குடுடா பக்கி.....






காயத்ரி.... " எப்படி இருக்க.... சூர்யாம்மா .... நல்ல இருக்கியா".... என அவளின் நலம் விசாரிக்க.... அவரிடமும்.... தந்தை சிவவிடமும் கதை பேசி கொண்டிருந்தவள்...... மீண்டும் அலைபேசி ஜீவா கைகளில் வர அது தெரியாமல் தொடர்ந்து பேசி கொண்டே இருத்தவளின் காதுகளில்...


விஷ் யூ எ வெரி வெரிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ஹாப்பி நியூ இயர்.... பூசணி.... என்னைக்கும் நீ இதே சந்தோசத்தொட இருக்கனும்..... என ஜீவா வாழ்த்து கூற....






அப்பொழுது தான்.... தம்பியின் குரலில் உள்ள மாற்றம் பிடிபட....








ஜீவா..... அது..... அது.... வந்து என வார்த்தைகள் வராமல் சூர்யா தடுமாற....








நீ எந்த விளக்கமும் எனக்கு தர வேண்டாம் க்கா.... உன்னோட சந்தோசம் தான் எங்க எல்லாருக்கும் முக்கியம்.... டேக் கேர்.... நான் அப்புறம் பேசுறேன் என கூறி அழைப்பை துண்டிக்க....










நெடுநாள் கழித்து மகளின் குரலில் உள்ள மாற்றம்.... பெற்றவருக்கும் மகிழ்ச்சியை தர.... அவர்கள் கடவுளுக்கு தங்களின் நன்றியை சொல்ல சென்றனர்.... இனியும் தங்களின் செல்ல மகளின் வாழ்வு மேலும் சிறக்க வேண்டி.....








அலைபேசியையே பார்த்து கொண்டிருத்தவளை ..... நேத்ரனின் அழுத்தமான ஸ்பரிசம்.... நிகழ்விற்கு கொண்டு வர.... என்ன டாலி.... உங்க பேமிலிகிட்ட பேச சொன்ன.... அங்கேயே போய்ட்டிய... என கேட்க






தனக்கும்..... தமையனுக்கு நடத்த உரையாடலை சொல்ல.....






தன் ஒற்றை புருவம் உயர்த்திய நேத்ரன்.... என் மச்சான் செம்ம ஷார்ப் அண்ட் ஸ்மார்ட் என ஜீவாவிற்கு நற்சான்றிதழ் வழங்க.... அவனுக்கு பழிப்பு கட்டியவள்.... அவன் அசந்த நேரம்.... நான் அத்தம்மா கிட்ட போறேன்.... சீக்கிரம் போய் கிளம்பி வாங்க.... என அவன் தனக்கு சொன்னதை அவனுக்கு சொல்லிவிட்டு ஓடிவிட்டாள்......








தப்பிச்ச ஓடுற.... எப்படியும் என்கிட்ட மாட்டாமல போவே... அப்ப இருக்கு டாலி உனக்கு..... என தனக்குள் சொல்லி கொண்டான் நேத்ரன்.... உதட்டில் உறைத்த புன்னகையுடன்.... தன் வலகையினால் கேசம் கோதி கொண்டு தன்னறைக்கு சென்றவனை... ஹரிஷின் குறுகுறுபார்வை வரவேற்க....








என்னடா.... பார்வையெல்லாம் பலமா இருக்கு என்றவனிடம்










அப்படியே ஒரு ஐஞ்சு வயசு கம்மியானா மாதிரி இருக்க.... எப்படி மச்சான் இந்த மேஜிக்.... தங்கச்சி .... ஊருக்கு வந்தப்போ.... கூட.... கொஞ்சம் முகம் மட்டும் பிரைட்ட இருந்தது.... ஆனா, ஒவ்ர் நைட் .... அப்படியே செம்ம சேஞ்....






இப்படி உன்ன பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு மச்சான்.... வெரி... வெரி .... ஹாப்பி நியூ இயர் டா.... என நேத்ரனை வாழ்த்தி அணைத்து கொண்டவன்....






என் தங்கச்சிகிட்ட கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டன் பண்ணு.... உரசி உரசி சூர்யாவோட பிங்க் கலர் உன்னோட கன்னத்துக்கு வந்திடுச்சி பாரு.... என்றவனை முறைத்த நேத்ரன்...






சரி.... என்னோட கன்னம் சிவந்த கதை அப்பறம் பார்க்கலாம்.... நேத்து சாரோட கன்னம் ஏன் சிவந்து இருந்தது.... பிலோட் பண்ணாலும் பொண்ணுங்க கிட்ட ரெண்டு அடி டிஸ்டன்ஸ் ்மெயின்டன் பண்றவன்.... நேத்து .... ஜெயஸ்ரீ கூட அப்படியா இஷிண்டு வந்தியே அதுக்கு என்ன அர்த்தம்டா.... என்றவனை மேல் இருந்து கீழாக பார்த்த ஹரிஷ்....




நீ பிசினஸ் மேன் ஆகம.... டீடெக்ட்டிவ் ஆகி இருந்தின... எனக்கு ஒரு கேஸ்கூட கிடைச்சி இருக்காது.....( பயப்புள்ள .... கரெக்ட்ட நோட் பண்ணி இருக்கு)..... என்றவனை மேலும் நேத்ரன் முறைத்து பார்க்க.... அப்பார்வையின் பொருள்.... உன்னை நான் அறிவேன் என கூற...






சரி.... விடு....விடு.... மச்சான்.... இது வாலிப வயசு..... என ஹரிஷ் கூரிய பாவனையில்...... முறைக்கமுயன்று சிரித்து விட்டான் நேத்ரன்....






***************




ப்ரேமாவிடம் இருந்து அழைப்பு வர... ஹாப்பி நியூ இயர் கண்ணா... கிளம்பிடிங்களா.... நாங்க எல்லாரும் ரெடி என கூற....






தேங்க்ஸ் மா.... இதோ இன்னும் ஒரு பத்து நிமிஷம்.... நானும் ஹரிஷும் கிளம்பி வரோம்.... என அழைப்பை துண்டித்து.... தயாராக குளியலறை நோக்கி சென்றான் நேத்ரன்....








சொன்னது போல் தயாராகி வந்தவன்.... தன்னுடைய அன்னை மற்றும் அனைவருடன் பரீஸில் அருள்பளிக்கும் ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோவிலுக்கு சென்று இவ்வண்டின் தொடக்கம் எப்படி மனம் நிறைத்து ..... மகிழ்ச்சியாக ஆரம்பித்ததோ.... அதே போல் தன் வாழ்நாள் முழுவதும் தன்னவளின் அருகமையும்.... அன்பும்.... என்றும் கிடைக்க வேண்டிக்கொண்டான்.....








ஹரிஸோ..... தான் இழந்த அன்பை.... மொத்தமும் தன்னவளுக்கு திகட்ட திகட்ட தர வேண்டும் ... எந்த சூழ்நிலையிலும் தன்னவளின் காதலையும்.... நம்பிக்கையையும் தான் இழக்க கூடாது என வேண்டினான்....






ஜெய்ஸ்ரீயோ.... இழந்த சொந்தங்களின் மொத்த உருவமாய் கிடைத்த தன்னவனை என்றும் தான் பிரிய கூடாது என வேண்டினாள்....








வாழ்க்கையின் எந்த கணத்திலும்.... தன்னவன் தன்னை சந்தேகிக்க கூடாது என்றும்... தன்னுயிரனவனை எந்த சூழலிலும் பிரிய கூடாது என வேண்டிக்கொண்டவள்....



இனி எந்தவித பிரச்சனை வந்தாலும் தன்னவனின் துணையோடு எதிர் கொள்ளும் துணிவோடு சூர்யா.... நேத்ரனின் இல்லம் நோக்கி பயணப்பட்டாள்...


"மங்கையின் வேண்டுதல் பலிக்குமா, தலைவனின் துணையோடு தன் வாழ்வில் விளையாடும் வீணார்களுக்கு விடை சொல்வளா....?

அல்லது வஞ்சம் கொண்டு அலையும் வஞ்சகனின் வன்மத்தில் வஞ்சியின் வாழ்வு வீணாகுமா...!

விடை அடுத்த பாகத்தில்...





அவள் உயிரானவன்...
 
Last edited:

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்




என் உயிருக்கு உயிரானவ(ன்)ள்... பாகம் 2



அத்தியாயம் 28



நாட்கள் நிமிடங்களாய் கரைய,மேலும் ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில்...



பிரேமாவின் கால் கட்டுகள் அகற்றப்பட்டு அவர் ஸ்டிக்கின் உதவியால் நடக்க தொடங்கி இருந்தார். அதனால் வீட்டோடு இருந்த செவிலியை நிறுத்திவிட்டு முழுநேரமும் சூர்யாவும், ஜெயஸ்ரீயுமே ப்ரேமாவை பார்த்துக் கொண்டனர்.



ஆம் ஜெயஸ்ரீயும், இவர்களுடனே “கமலநாதன் இல்லத்தில்” தங்கி விட்டாள். முதலில் அவர்களோடு இருக்க சங்கடப்பட்டு மறுத்தவள், சூர்யாவின் உருட்டல் மிரட்டலிலும், பிரேமாவின் அன்பிலும், நேத்ரனின் கண்டிப்பிலும், அரை மனதாய் சம்மதித்தவளை முழுமனதாய் தலையாட்ட வைத்தது ஹரிஷின் கெஞ்சல் பிளஸ் கொஞ்சல்களே என்றால் மிகையில்லை...







அவர்களோடு தங்க யோசனையோடு சம்மதித்தவளை தனியாக அழைத்து சென்றவன், “ ஸ்ரீம்மா, நீ வேற எங்கையாவது தங்கி இருந்தா நீ நல்லா இருக்கியா..? பாதுகாப்பா இருக்கியா..? னு எனக்கு கவலையா இருக்கும் அதே கமல் வீட்டுல அம்மாவோட, சூர்யாகூட இங்கேயே நீ இருந்தா என்னால நிம்மதியா இருக்க முடியும் எந்த கவலையும் இல்லாம என்னோட வேலைய பார்க்க முடியும்” ( இப்பவும் நீ என்ன வேலை பார்க்குறேன்னு சொல்லாதடா).





“ ப்ளீஸ் , அம்முக்குட்டி, இப்பவே உன்னை என்னோட வீட்டுக்கு கூட்டிகிட்டு போய்டுவேன் அதுக்கு பிரேமாம்மா, ஒத்துக்க மாட்டாங்க அது உனக்கு கௌவுரவமாகவும் இருக்காது.

என்னால உன்னை உடனடியா கல்யாணம் பண்ணிக்க முடியாது காரணம் உனக்கே தெரியும் கமல், கல்யாணம் பண்ணி செட்டில் ஆகாம என்னால் எனக்கான லைப் ஸ்டார்ட் பண்ண முடியாதுடா” என கூறிய ஹரிஷின் குரல் கரகரப்புடன் ஒலிக்க அவன் கைகளை பற்றி அழுத்திய ஜெயஸ்ரீயின் கரங்களை மேலும் அழுத்தமாக பற்றியவன்,





“ உனக்கு தெரியும் இல்லடா, என்னோட சின்ன வயசுலேயே அம்மா தவறிட்டாங்கனு அப்ப இருந்தே என்னை தன் மகன் போல பார்த்துகிட்டது ப்ரேமா ம்மா தான், என்னை தனிமையை உணர விடாம செஞ்சதும் தன் குடும்பத்தை என் குடும்பமா நினைக்க வச்சது எல்லாம் கமல் தான், அவனோட நட்பால தான் இதெல்லாம் சாத்தியமானது. அப்படி பட்டவனுக்கு என்னால முடிஞ்ச ஒரு சின்ன நன்றிக்கடன் அவன் கல்யாணம், பண்ணி குடும்பமா சந்தோஷமா இருந்தாதான் என்னால நிம்மதியா சந்தோஷமா இருக்க முடியும் அதுவும் இல்லாம என் சத்யாப்பாவோட கடைசி ஆசையும் அதுதான் கமல், குடும்பம் மனைவி, குழந்தைங்கன்னு சந்தோஷமா இருக்கணும்னு அப்பதான் அவரோட ஆத்மாவும் நிம்மதியா இருக்கும் என்னை புரிஞ்சிப்ப தானே” என கூறி ஜெயஸ்ரீயை பார்த்த ஹரிஷின் கண்கள் சிறிதே கலங்கி இருக்க,







அவனின் மனகலக்கத்தினை புரிந்து கொண்டவள் அவனை தேற்றும் பொருட்டு, “சரி, ரிஷி உனக்கே எப்போ நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணுதோ அப்ப நாம கல்யாணம் பண்ணிக்கலாம் ஓகே நீ, மத்த வேலைக்கு ஆள் வச்சிக்கிட்டாலும் எனக்கு சாப்பாடு எவ்வளவு முக்கியம் அப்படினு நான் உனக்கு சொல்ல தேவையில்லை என்னால அதுல எல்லாம் ரிஸ்க் எடுக்க முடியாது சோ சீக்கிரம் நீ நல்லா சமையல் பண்ண கத்துக்கோ அதுவரை நான் தங்கம்மா, சமையலை பழகிக்குறேன்” என கூற,







முதலில் தான் கூறியவற்றை ஒத்துக்கொண்டத்தை நினைத்து மகிழ்ச்சியுற்றவன், அவள் தன்னை சமையல் செய்ய கற்றுக்கொள்ள சொல்லவும் சற்று திகைத்தவன், அவள், தங்கம்மாவிடம், சமையலை பழகிக்கிறேன் என கூற சந்தோசத்துடன்,





மற்ற அனைத்தையும் விடுத்து அவள் சமையல் பழகிக்கொள்வதாக சொல்லியவற்றை மட்டும் கருத்தில் கொண்டு, “ அம்முக்குட்டி, நிஜமா நீ தங்கம்மாகிட்ட சமையலை கத்துக்க போறியா..? “ என கேட்க,





ஹரிஷை நோக்கி ஒரு புரியாத பார்வை பார்த்தவள், “ நான் எப்போ ரிஷி, சமையல் கத்துக்குறதா சொன்னேன் உன்னதானே கத்துக்க சொன்னேன் “ என கூறி அவனிற்கு நெஞ்சுவலி மற்றும் வயிற்று வலியை ஒருங்கே வரவழைத்தாள் அவனின் சண்டி ராணி...



நெஞ்சு வலி தன்னை அவள் சமையல் கற்றுக்கொள்ள சொன்னதை நினைத்து வயிற்று வலி தானே சமையல் செய்து அதை தானே சாப்பிட்டால் தன்னுடைய எதிர்கால நிலைமையை நினைத்து அந்த நினைவில் அதிர்ந்து வாயடைத்து நிற்க... ( நம்ம ஹரிஷையும் வாய் பேசமுடியாம திகைக்க வைச்ச பெருமை நம்ம ஜெயஸ்ரீயையே சேரும்).







அவனின் அதிர்ந்த நிலையை கவனத்தில் கொள்ளாமல் ஜெயஸ்ரீயோ, “ நான் நம்ம கல்யாணம் வரைக்கும் தங்கம்மா கிட்ட என்ன என்ன ஸ்பெஷல் டிஷ்சஸ் இருக்கு சைவத்தில் எத்தனை வகை, அசைவத்தில் எத்தனை வகை , இருக்கு சமையலில் எத்தனை விதம், இருக்கு அப்படினு கேட்டு அந்த டீடெயில்ஸ் எல்லாம் பழக்க படுத்திக்குறேன்னு சொன்னேன் அப்ப தானே டெய்லி வெரைட்டி வெரைட்டியா சமைச்சு சாப்பிட முடியும் “ என அவள் கூற,



அவள் கூறிய பாவனையில் அதிர்ச்சியுற்ற ஹரிஷின் நாக்கு பாவம் , துக்கம் தாளாமல் மௌன கண்ணீர் வடிக்க, (அதாங்க சாப்பிட்ட டிஷ் எல்லாம் கண்முன்னே வந்து ஜொள்ளுவிட வைக்க)





நாக்குக்கு ருசியா சோறு போட்டா சொன்ன படி எல்லாம் செய்யும் புள்ளைய போய், 'நீயே சமையலை கத்துகிட்டு இனிமே நீதான் சமைக்கணும்னு' சொன்னவுடன், ஹரிஷின் உடம்பில் உள்ள எல்லா உறுப்பும் வேலைசெய்யும் திறனை இழந்து விட, ஜெயஸ்ரீயை பாவமாய் பார்த்தவன், அவளின் முகத்தில் உள்ள குறும்பை கண்டுக் கொண்டவன்,





முகத்தில் ஒளிகூட அப்பொழுதுதான் ஹரிஷிற்கு அவளின் படிப்பை பற்றி நினைவு வர பெற்றவன், (சூர்யாவும், ஜெயஸ்ரீயும் ஒரே படிப்பை படித்தவர்கள் இவர்களுக்கு சமைப்பதை பற்றி முழுதாக பயிற்சி கொடுக்கவில்லை என்றாலும் இவர்களின் படிப்பில் சமைத்தலும் ஒரு பிரிவே).







சற்று தெளிந்தவன் மனத்திற்குள், 'கொத்தவரங்கா கொஞ்ச நேரத்தில் என்னமா குழப்பி விட்டுட்டா நல்லவேளை கடைசி வரைக்கும் நம்ம வாய்க்கும் வயிறுக்கும் பிரச்சனை இல்ல அந்த ஒரு காரணத்திற்காக உன்னை நான் மன்னிச்சி விடுறேன் பொழச்சி போ' என கூற, ( ராசா, ஹரிஷு, இப்ப சொன்னதை அப்படியே கொஞ்சம் சத்தமா அவ, காதுல கேக்குற மாதிரி சொல்ற தைரியம் உனக்கு இருக்கா போடா பெருசா பேசவந்துட்டான்).







முகத்தில் புன்னகை தவழ, “அதுக்கு என்ன அம்முக்குட்டி, சமையல் தானே கத்துகிட்டா போச்சு அப்படியும் சமைக்க வரலைனா அழகா ஹாட் அண்ட் ஸ்பைசீயா ஒரு சமையல் காரியை வேலைக்கு வச்சிக்கிடலாம் வேளா வேளைக்கு வாய்க்கு ருசியா சாப்பாடும் கிடைக்கும். அப்படியே கண்ணுக்கு குளிர்ச்சியாவும் இருக்கும்” என கூற,





முதலில் அவன் சொல்வது புரியாமல் குழம்பியவள், புரிந்தவுடன், “பக்கி, பிராடு, உனக்கு சோறு போடுறதே பெரிய விஷயம் இதுல உன் மூஞ்சிக்கு ஹாட் அண்ட் ஸ்பைசீயா சமையல் காரி வேணுமா..?” என அந்த சமையல் காரியில் அழுத்தம் கொடுத்து அவனை மொத்த தொடங்கினாள் ஜெயஸ்ரீ.





சிலபல அடிகளை வாங்கிய பிறகு அவளின் கைகளை பற்றி அடிப்பதை தடுத்து நிறுத்தி அவளை தன் அணைப்பிற்குள் கொண்டுவந்தவன் அவளின் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவன், “ ஸ்ரீம்மா, எனக்கு அம்மா இருந்து சாப்பாடு ஊட்டி வளர்க்கலை. எனக்கு விவரம் தெரியறத்துக்கு முன்னாடியே அவங்க போய் சேர்ந்தாச்சு. அதனால வரபோற என் பெண்டாட்டி தான் எனக்கு அம்மாவா இருந்து சாப்பாடு ஊட்டிவிடணும் சோ, எனக்கு வரபோற பொண்டாட்டி எப்படி சமைச்சாலும் எனக்கு ஓகே அவ அதை எனக்கு அன்பா ஊட்டிவிட்டா போதும் அது விஷமாவே இருந்தாலும் எனக்கு அமிர்தம் தான்” என கூறியவனின் வாயில் ரெண்டு அடி போட்டாள் ஜெயஸ்ரீ.





“ லூஸு, எதுக்கு இப்போ தத்து, பித்துன்னு பேசுற..? “ என கூறி மேலும் அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.



“ உனக்கு என்ன சமைச்சு சாப்பாடு ஊட்டிவிடணும் என் கடைசி மூச்சு இருக்குற வரை உனக்கு நான் ஊட்டிவிடுறேன் அதுக்காக இதுமாதிரி எல்லாம் பேசாத ரிஷி, மனசுக்கு கஷ்டமா இருக்கு” என ஜெயஸ்ரீ வருத்தத்துடன் கூற,





“ ம்ச்... சாரி அம்மு, இனிமே இப்படி சொல்ல மாட்டேன். சரி நான் பேச வந்த விஷயத்தை விட்டுட்டு வேற எதை பத்தியெல்லாமோ பேசுறேன். உனக்கு இங்க தங்குறதுல எந்த வித மனக்கஷ்டமும் இல்லையே” என கேட்க,





இல்லை என தலையாட்டியவள், “ரிஷி, எனக்கு ஒரு வேலை மட்டும் அரேஞ்ச் பண்ணிக்குடு” என கேட்க ஹரிஷின் முறைப்பில் வாய் மூடிக்கொண்டாள்.





“ சூர்யாவே இங்க வேலைக்கு தானே வந்திருக்கா நான் மட்டும் இங்க சும்மா வெட்டியா இருக்க முடியுமா..? “ என முணுமுணுக்க,





“ சரி சரி கொஞ்ச நாள் சூர்யாக்கூட இருந்து அவளுக்கு ஹெல்ப் பண்ணு அப்புறம் கமல், கிட்ட சொல்லி வேற வேலை அரேஞ்ச் பண்றேன்” என ஹரிஷ் கூற,



“தேங்க்ஸ் “ என கூறியவள், அப்புறம் “ நீங்க என்னை பார்க்க அடிக்கடி வருவீங்க இல்ல “ என எதிர்ப்பார்ப்போடு வினவ,



யாரும் இல்லாமல் தனிமையில் இருந்தவனுக்கு, பெண்ணவளின் வார்த்தைகள் பெரும் இதம் அளிக்க,



“ கவலையே படாத அம்மும்மா, காலையில் உனக்கு குட் மோர்னிங் சொல்றதுல இருந்து குட் நைட் சொல்லிட்டு தான் நான் வீட்டுக்கு போவேன். நடுவுல வேணா கொஞ்சம் கொஞ்சம் வேலை பார்த்துக்குறேன் சரியா..? “ என கண்சிமிட்டி கேட்டவனிடம் சம்மதம் என தலையாட்டினாள் பாவை.





**************************





தான் இந்த வீட்டில் தங்க ஹரிஷ் கூறியவற்றையும் அவனின் சேட்டைகள் மற்றும் செல்ல சீண்டல்களை நினைக்க நினைக்க அவளின் இதழ்களில் புன்னகை பூக்க செய்ய கைகள் பூக்களை பறித்தாலும் மனம் முழுவதும் மன்னவன் வாசம் வீச தன்னை மறந்து நின்றவளை நிகழ்விற்கு,

வரவழைத்தது சூர்யாவின் குரல்...





தனிமையில் நின்று புன்னகைக்கும் ஜெயஸ்ரீயை கண்டு அவள் அருகில் வந்த சூர்யா, “ என்ன ஜெய், காலையிலேயே ஹரிஷ் அண்ணா கூட டூயட் பாட கிளம்பிட்டியா..? “ என அவளை வம்பிழுக்க,







“ஆமா குண்டுஸ், நான் உங்க அண்ணாகூட கிளம்பி போய்த்தான் டூயட் பாடணும் ஆனா உனக்கு வீட்டுக்குள்ளேயே கண்ணுக்கு எதிரவே ஆள் இருக்கு” என அவளை சீண்ட,



தோழிகள் இருவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தாலும் கைகள் மலர்களை கொய்து கொண்டிருக்க, பூஜைக்கு நேரம் ஆகவே சூர்யாவும், ஜெயஸ்ரீயும் வீட்டிற்குள் செல்ல,





பிரேமாவின் உடல் நிலை முன்னைவிட இப்பொழுது தேறி இருந்தாலும் சூர்யாவே அவரின் தேவைகள் அனைத்தையும் கவனித்து கொண்டாள். எனவே சூர்யா பிரேமா, எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து விட்டே பூஜைக்கு பூ பறிக்க வந்தாள். இவர்கள் வீட்டிற்குள் நுழையவும் அவரும் தயாராய் பூஜைக்கு வரவும் சரியாக இருந்தது.







“காலை உணவிற்கு என்ன சமைக்கலாம்” என ப்ரேமாவிடம் கேட்டு, அதற்கு ஏற்றவாறு தங்கம்மாவிற்கு சமைக்க காய்கறிகளை நறுக்கி உதவி கொண்டிருந்தாள் சூர்யா.







“நானும் வேலை செய்கிறேன் பேர்வழி” என அங்கிருந்த சமையல் மேடையில் அமர்ந்துக் கொண்டு, தங்கம்மாவிடம் கதை பேசிக் கொண்டிருந்தாள் ஜெயஸ்ரீ.





எல்லாம் தயாராகிவிட அனைவரையும் சாப்பிட அழைக்க சூர்யா செல்ல அவளை தடுத்தவள், “ப்ரேமாம்மாவை நான் அழைச்சிக்கிட்டு வரேன் அண்ணாவை போய் நீ அழைச்சிக்கிட்டு வா” என அவளை மாடிக்கு அனுப்பி வைத்தாள்.





சூர்யா மாடிக்கு செல்ல நேத்ரனோ, தன்னுடைய அலுவல் அறையில் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.



இவள் கதவை தட்டவும்,

“ சரி தாத்தா, கூடிய சீக்கிரம் நான் என்னோட முடிவை சொல்றேன். ஓகே பை... “ என அழைப்பை துண்டிக்க,



எப்பொழுதும் தாத்தாவிடம் பேசும் பொழுது புன்னைகையோடு கேலியும், கிண்டலுமாய் பேசுபவன் இன்று ஏதோ யோசனையோடு பேசவும் என்னவென கேட்க,



ஒன்றும் இல்லை என தலையாட்டி மறுத்தவன், சூர்யாவின் முகம் இன்னமும் தெளியாமல் இருப்பதை கண்டு மென்னகை உதடுகளில் தவழ அவளை நோக்கி கைநீட்ட, கொஞ்சமும் யோசிக்காது அதில் தன் கரங்களை வைத்தவளின் கரங்களை அழுந்தப்பற்றி தன்னை நோக்கி இழுக்க அவன் மார்பினில் பூங்கொடியென விழுந்தவளை அணைத்து கொண்டவன் பெண்ணவளின் பிறை நெற்றியில் தன் நெற்றிக்கொண்டு முட்டி, “இந்த தலைக்குள்ள எந்த நண்டு ஓடுது டாலி” என கேட்க,



“ இல்ல தனு, தாத்தாகிட்ட பேசுனா எப்பவும் சந்தோஷமா பேசுவிங்க இப்ப என்ன ஏதோ யோசனையா இருக்கீங்க ஏதாவது பிரச்சனையா..? “ என தயங்கி தயங்கி கேட்டாள் சூர்யா.





“ அதெல்லாம் ஒண்ணும் இல்லடா, நாம எப்போ இந்தியா வரோம்னு கேட்டார். எனக்கு இங்கே கொஞ்ச வேலை இருக்கு அதை முடிச்சிட்டு சொல்றேன் சொன்னேன். அதான் கொஞ்சம் யோசனையா இருந்தேன் ஆமா ஹரிஷ் வந்திருக்கானா..? “ என கேட்க,





“ இல்ல தனு, சரி சாப்பிட வாங்க கீழே அத்தம்மா வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க” என கூற,





“ சரி டாலி, இப்ப கொஞ்சம் ஸ்வீட் சாப்பிட்டுக்குறேன்” என கூறிக் கொண்டு அவள் முகம் நோக்கி குனிந்தவனை தடுத்து, அதெல்லாம் அப்புறம் சாப்பிடலாம் சீக்கிரம் கீழ வந்து சேருங்க” என அவனுக்கு பழிப்பு காட்டி விட்டு ஓடியவளை நோக்கி,



“ இரு டாலி, எத்தனை நாள் என்ன இப்படி ஏமாத்துற னு நானும் பார்க்குறேன்” என கூறிக் கொண்டவன் அடுத்து தன் அலுவல்களை பார்த்து விட்டு உணவு உண்ண வர, அங்கே, ஏற்கனவே அமர்ந்திருந்த ப்ரேமாவையும், ஹரிஷையும் பார்த்து,



“குட் மோர்னிங் டா, குட் மோர்னிங் ம்மா” என கூறியவன் அமர்ந்து சாப்பிட தொடங்கவும் சூர்யாவும் ஜெயஸ்ரீயும் பரிமாற தொங்கினார்கள்.





அவர்கள் இருவரையும் தங்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட எத்தனை தடவை சொல்லியும் கேட்காதவர்கள் அனைவர்க்கும் பரிமாறிய பின்பே சாப்பிட தொடங்குவார்கள்.



சாப்பிடும் பொழுது நேத்ரன், ஹரிஷிடம், “உனக்கு வெளிய ஏதாவது முக்கியமான வேலை இருக்காடா..?” என கேட்க,



ஹரிஷ், “இல்லை” என கூற,



நண்பர்கள் இருவரும் உணவருந்தி விட்டு கிளம்ப கார் பயணத்திலும் அமைதியாக வரும் நண்பனை கண்டவன்,



“ என்ன கமல், ஏதாவது பிரச்சனையா டா..? அந்த விவேக் எதுவும் பண்ண மாதிரியும் தெரியலையே டா..? அவனை தான் வாட்ச் பண்ண 24 மணிநேரம் ஆள் இருக்கே வேற என்ன தான்டா பிரச்சனை..? சொன்னா தானேடா தெரியும்” என அலுத்து கொண்டவனை,





அமைதியாக பார்த்தவன், “ இந்தியாவில் இருந்து தாத்தா கால் பண்ணி இருந்தாங்க” என சொல்ல,



“ தாத்தா, என்ன சொன்னாங்க..? பாட்டிக்கு ஏதாவது உடம்புக்கு முடியலையா..? “ என கேட்க,





இல்லை என தலையசைத்து மறுத்தவன், “தாத்தா,என்னோட கல்யாண விஷயமா பேசுனாங்க” என நேத்ரன் கூறியவுடன்,





“ போடா லூஸு, சந்தோஷமா சொல்ல வேண்டிய விஷயத்துக்கா இப்படி ஒரு ரியாக்ஷன் கொடுத்த..?” என ஹரிஷ் கேட்க,





“ அப்பாவோட முதல் நினைவு நாள் முடிஞ்ச உடனே என்னோட கல்யாணத்தை முடிக்கணும்னு தாத்தா ஆசைப்படுறாங்க அதுக்கு முன்னாடி எனக்கு எங்க அப்பா என்னை விட்டு போக காரணமானவனை நான் கண்டு பிடிக்கணும்” என்றவன் கரங்களில் வாகனம் சற்று தடுமாற தன்னை முயன்று சமாளித்தவன் கண்கள் கொவ்வை பழம் போல் சிவந்து அவனின் கோபத்தில் அளவை சொல்ல,





ஹரிஷோ, அவன் தோள்களை பற்றியவன், “ கூல் கமல், அவன் நம்மளோட பிசினஸ் எதிரியா இருந்தாலோ இல்லை நமக்கு வேண்டாதவனாக இருந்தாலோ இந்த நாட்டை சேர்ந்தவனா இருந்தா கூட, இந்நேரம் நான் கண்டு பிடிச்சிருப்பேன். பட் அவன் ஒரு தேர்ட் பெர்ஸன், அவனோட கேர்லெஸ்னால தான் அந்த விபத்தே நடந்தது. அங்கிருந்த சிசிடிவி கேமரா ல அவனோட கார் போறத வச்சி பார்த்தா குடிச்சிட்டு ஓட்டி இருக்கான் இடியட் அவனோட கார் நம்பர் சரியா தெரியலை. ஆனா அவன் போனது ஒரு ட்ராவல்ஸ் கேப் சோ, அதை வச்சி தான் சர்ச் பண்றேன் எனக்கு கரெக்ட் இன்போர்மேஷன் கிடைக்கலை. நான் உன்னை போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுக்க சொன்னேன். நீயும் அப்ப இருந்த நிலைமைக்கு வேண்டாம் சொல்லிட்ட அப்பா உடம்பை இந்தியா எடுத்துக்கிட்டு போகணும்னு கவலை படாதே கமல், கண்டிப்பா என்னோட சத்யப்பாவை, இப்படி பண்ணவனை நான் சும்மா விடமாட்டேன் “ என கூறியவன் கண்களும் கலங்கி தான் இருந்தது. தன்னை இன்னொரு மகன் போல் அன்பு காட்டியவரும், தன்னுடைய துக்கத்தில் இன்னொரு தோழனாய் தோள் கொடுத்தவரின் பிரிவை நினைத்து...







தனக்கே, 'இவ்வளவு வேதனையும், வருத்தமும் இருக்கும் என்றால் நேத்ரனின் நிலைமையை நினைத்து மௌன கண்ணீர் வடித்தவன் கூடிய சீக்கிரம் அந்த கொலைகாரனை கண்டுபிடிக்க வேண்டும்' என முடிவெடுத்தான்.



ஆம்...கொலைகாரன் தான்

அவர்களின் சந்தோஷத்தினை கொன்றவன் அல்லவா..?





நேத்ரனின், மனத்தினை மாற்ற நினைத்து, “கல்யாண விஷயத்தை பற்றி சூர்யாகிட்ட பேசிட்டியா..? கமல்” என ஹரிஷ் கேட்க,



தன் வலக்கையினால் கேசத்தினை அழுந்த கோதி கொண்டவன், “ இல்லடா, கல்யாணத்தை பத்தி பேசுனா அவ எப்படி ரியாக்ட் பண்ணுவானு தெரியலை..? கொஞ்சம் பயமாவும் இருக்கு எங்க இப்ப இருக்க இந்த சுமூகமான மனநிலையும் மாறிடுமோன்னு அதனால நான் இதைபத்தி எதுவும் சொல்லலை” என்றவனை,





'இவ்வளவு நேரமும் ஆத்திரமும், கோபமும் போட்டிப்போட தன்னோடு பேசியவனா..? இப்பொழுது ஒரு சிறு பெண்ணின் காதலை எண்ணி பதட்டப்படுவது' என வியந்தவன்,





“ கமல், நீ சூர்யாகிட்ட பேசு அப்பதான் உன்னால தெளிவா ஒரு முடிவுக்கு வர முடியும் மத்தவங்க தங்கச்சிகிட்ட பேசுறதுக்கும் நீயே நேரடியா பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு கதவுக்கு பின்னாடி இருக்குறது தேவதையா..? இல்ல பிசாசா..? என்ன இருக்குமோனு சும்மா பயப்படாம தைரியமா திறந்து பார்க்குறது தான் புத்திசாலித்தனம் உனக்கு நான் சொல்லணும்னு அவசியம் இல்ல”





ஹரிஷ் கூறியவற்றை அமைதியாக கேட்ட நேத்ரன், யோசித்தவாறே காரோட்ட அவனின் சிந்தனையினை கலைக்கா வண்ணம் ஹரிஷும் அமைதியாக வந்தான். இருவரும் நேத்ரனின் அலுவலகம் வந்தடைந்தனர்.





அவள் உயிரானவன்...



 
Last edited:

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 29



அலுவலகம் வந்த பின்னும் தீவிர சிந்தனையில் இருந்தவனின் மனம் முழுவதும் காலையில் அவன் தாத்தாவுடன் நடந்த அலைபேசி உரையாடலே மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்தது.



எப்பொழுதும் போல் தயாராகி தன்னுடைய அலுவலக அறையில் சில முக்கிய கோப்புகளை பார்வையிட்டு கொண்டிருந்தவனின் கவனத்தினை கலைத்தது அவனின் கைபேசி...



யாரென பார்க்க அவனின் தாத்தா, என்றதும் முகம் புன்னகை சிந்த அவரின் அழைப்பை ஏற்றான்.



“ என்ன ஓல்ட் மேன், காமுகிட்ட ஏதாவது சண்டை போட்டுட்டீங்களா..? எனக்கு காலையிலேயே கால் பண்ணி இருக்கீங்க” என கேட்க,



“ அடபோடா, அந்த கிழவிக்கெல்லாம் யார் பயப்படுறா, நான் உனக்கு போன் பண்ண விஷயமே வேற”







“ ஆமா எல்லாரும் எப்படி இருக்கீங்க.... உங்க அம்மாவோட ஹெல்த் எப்படி இருக்கு” என அனைவரையும் நலம் விசாரிக்க,



“ எல்லாரும் நல்லா இருக்கோம் தாத்தா, என் டார்லிங்க கேட்டதா சொல்லுங்க வேற என்ன விஷேசம் தாத்தா “ என கேட்க,





“ அதை நீதான் சொல்லணும் கண்ணப்பா, சூர்யா ஊருக்கு வந்து விளையாட்டு போல மூணு மாசம் ஓடிப்போச்சு இன்னமும் நீ ஒரு முடிவும் சொல்லாம இருக்க இந்த பொண்ணுக்காக தானே ஐஞ்சு வருஷம் கல்யாணம் பண்ணிக்காம இருந்த இப்ப என்ன ஆச்சு ஒருவேளை இப்ப அந்த பொண்ணு மேல எந்தவித நோக்கமும் இல்லைனா சொல்லிடு நான் உங்க பாட்டிக்கிட்ட சொல்லி வேற பொண்ண பார்க்க சொல்றேன்” என்றவரின் பேச்சில் அதிர்ச்சியுற்றவன்,





“ ஏன் தாத்தா, என் மனசு தெரிஞ்சும் இப்படி பேசறீங்க. எனக்கு இந்த ஜென்மத்தில் மனைவின்னு ஒருத்தி வந்தா அது சூர்யா தான், வேற யாரையும் அந்த நிலையில் வைச்சி என்னால யோசிக்க கூட முடியாது எனக்கு கொஞ்சம் டைம் வேணும் தாத்தா, அவளோட காயம் ஆறி அவ மனசு என்னை ஏத்துக்க வைக்க” என நேத்ரன் கூற,



“ கண்ணப்பா, நான் அப்ப சொன்னதை தான் இப்பவும் சொல்றேன். சூர்யாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு புருஷனா அவளோட எல்லா சுக துக்கத்திலையும் கூட இருந்து அவளோட மனகாயங்களை சரி பண்ணு அத விட்டுட்டு இன்னும் டைம் வேணும் அது இதுனு சின்ன பிள்ளை மாதிரி காரணம் சொல்லாத” ( நேத்ரா, உனக்கு இது தேவையா..? உலகம் முழுதும் பிசினஸ் பண்ற ஒருத்திய கல்யாணதிற்கு சம்மதிக்க வைக்க என்ன பாடுப்படுற இப்படி ஆகும்னு முன்னாடியே தெரிஞ்சிருந்தா உங்க தாத்தா கேட்டப்பவே கல்யாணத்திற்கு ஓகே சொல்லி இருப்பல்ல என்ன செய்ய எல்லாம் விதி).





“ உங்க அப்பாவுக்கு சாமி கும்பிட வரும் பொழுது எனக்கு நல்ல பதிலா சொல்ற. இந்த தடவை நீ இந்தியா வந்துட்டு திரும்பும் பொழுது கண்டிப்பா உன்னோட பொண்டாடியோட தான் திரும்பணும். அது சூர்யாவா இருந்தா எங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் இல்ல இங்க நம்ம சொந்ததுல யாரையாவது ஒரு பொண்ண பார்த்து கட்டிவெச்சிடுவேன். அப்புறம் என்னை குத்தம் சொல்ல கூடாது “ என கூறியவர், “ சீக்கிரம் ஒரு நல்ல முடிவா சொல்லு” என அலைபேசியை துண்டித்தார்.







கமலநாதன் பேசுவதை கேட்டு அவரை முறைத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள், “எதுக்கு இவ்வளவு கோவமா கண்ணப்பாகிட்ட பேசறீங்க அவனோட கல்யாணம் சீக்கிரம் நடந்தா எனக்கும் சந்தோசம் தான் அதுக்குன்னு இப்படியா அப்படி என்ன அவசரம்” என கேட்க,



“ இல்ல காமு, அவன் அந்த பிள்ளையை காதலிக்க ஆரம்பிச்சி ஐஞ்சு வருசம் மேல ஆயிடுச்சி சூர்யா ஊருக்கு போய் மூணு மாசம் ஆகுது அந்த பொண்ணும் நம்ம கண்ணப்பா மேல பிரியமா தான் இருக்குனு நம்ம பிரேமா சொல்றா விட்டா இவன் இன்னும் நாள் கடத்திக்கிட்டே போவான். அதுக்கு தான் இந்த நெருக்கடி. அவனுக்கும் வயசு கூடிகிட்டே போகுது இல்லையா, உனக்கு அவன் கல்யாணத்தை சீக்கிரம் பார்க்கணும்னு ஆசை இருந்தா நான் சொல்ற மாதிரி கேட்டு தலையாட்டு மத்த விஷயத்தை நான் பார்த்துக்குறேன்.

யாரு கிட்ட, நான் அவன் அப்பனுக்கு அப்பன், இந்த தடவை அவனுக்கு கல்யாணம் பண்ணாம நான் ஓயமாட்டேன்” என தன் மீசையை நீவிவிட்டு கொண்டார் கமலநாதன்.





“ இந்த வேகம் ஐஞ்சு வருஷத்துக்கு முன்ன வந்து இருந்தா நல்லா இருந்திருக்கும். இந்நேரம் நானும் என் கண்ணப்பாவோட பிள்ளைய கொஞ்சிகிட்டு இருந்திருப்பேன். அப்பயெல்லாம் சும்மா இருந்திட்டு இப்ப வந்து துள்ளிக்கிட்டு திரியறத பாரு” என நொடித்துக் கொண்டார் காமாட்சி.



“ உன் பேரன் தான்டீ, எனக்கு யோசிக்க டைம் வேணும் அந்த பொண்ணை திகட்ட திகட்ட காதலிக்கணும் அப்படி இப்படி என்னென்னமோ சொன்னான். நான் சொன்னதை அவன் கேட்கலை சரி நம்ம பேரானாவது அழகா, அம்சமா, அவனுக்கு பிடிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிக்கட்டும்னு ஒரு நல்ல எண்ணம் தான்” என முணுமுணுக்க,





இடுப்பில் கைகளை ஊன்றி அவரின் முன் வந்து நின்ற காமாட்சியம்மாள், முறைத்துக் கொண்டே,





“ என்ன சொன்னிங்க அழகா, அம்சமா, மனசுக்கு பிடிச்ச பொண்ணா அவனாவது கல்யாணம் பண்ணிக்கட்டும்னு ஒரு நல்ல எண்ணத்தில் சொன்னிங்களா..? அப்ப உங்களுக்கு அப்படி அமையலைன்னு ரொம்ப குறைப்படுறீங்களோ..?

வெளிநாட்டுக்கு போன மவராசன், அங்கேயே அழகா, அம்சமா ஒரு வெள்ளைக்காரியை பார்த்து புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே உங்களை யாரு இங்க வந்து என்னை கட்டிக்க சொன்னது...” என கேட்க,





கமலநாதனோ, ' நான் மெதுவா தானே சொன்னேன் கிழவிக்கு இது எப்படி கேட்டுச்சு இதே ஒரு காபி கேட்டு கரடியா கத்துனாலும் காது கேக்காது' என மனத்திற்குள் எண்ணியவர் தன் மனைவியை சமாதானம் செய்யும் பொருட்டு,





“ நான் எப்போ காமு, உன்னை எனக்கு பிடிக்கலை சொன்னேன். அதுவும் இத்தனை வருஷம் கழிச்சி உன் பேரன் சொன்னான் தானே சொன்னேன். எனக்கு பாரீஸ் நாட்டு அழகி எல்லாம் வேணாம் எனக்கு இந்த பல்லவ நாட்டு பேரழகி தான் வேணும்னு கடல் கடந்து போனாலும் தேடி வந்து உன்ன தானே கட்டிக்கிட்டேன்”



“ உன் மேல கொண்ட ஆசை

உத்தமியே நித்தம் உண்டு

சத்தியமா சொல்லுறேண்டி தங்க ரத்தினமே... “

என பாட,





அந்த வயதிலும் காமாட்சியம்மாளின் முகம் வெட்கத்தில் சிவக்க அதை கண்ட கமலநாதன், “ ஏன் காமு, உனக்கு மட்டும் வயசு ஏற ஏற அழகும் கூடுதோ..?” என கேட்க அதே வெட்கத்தோடு புன்னகை தவழ, “ பொண்டாடியோட அழகு அவ புருஷன் கிட்ட இருக்கு எந்த கவலையும் இல்லாம சந்தோஷமா, மனநிறைவா ஒரு வாழ்க்கை நீங்களும் நானும் வாழறோம்னு ஒரு ஆத்ம திருப்தி நீங்க எனக்கு கொடுத்து இருக்கீங்க... அதனால உங்க கண்ணுக்கு நான் அழகா தெரியலாம் “ என கூற,





“ அப்படினா உன் அழகின் ரகசியம் நான்தான்னு சொல்லு அப்படித்தானே” என அவர் அருகில் கமலநாதன் வர,

“ போதுமே பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாண்ட கதையா இருக்கு. இந்நேரம் நம்ம கண்ணப்பாக்கு கல்யாணம் முடிச்சிருந்தா அவனுக்கே ஒரு குழந்தை பிறந்திருக்கும். அப்படி இருக்கும் பொழுது கிழவனுக்கு குசும்ப பாரு “ என கூறி உள்ளே சென்றுவிட,





கமலநாதனோ, “அடிப்பாவி, நீதானேடி, என்னென்னமோ டயலாக் எல்லாம் சொன்ன கடைசியில் இப்படி சொல்லிட்டு போயிட்டாளே” என குழம்பி போய் நிற்க( தேவையா உமக்கு இது).





அவர் நேத்ரனை திருமணத்திற்கு அவசர படுத்த இன்னொரு காரணம் சூர்யாவின் பெற்றோர், என்னதான் பெண்ணை பெற்றவர்கள் தெரிந்தவர்களாக இருந்தாலும் பெண்ணை பெற்றவர்களின் தவிப்பை உணர்ந்தவராய், மேலும் எந்தவித புது சிக்கலும் வருவதற்கு முன் நேத்ரனுக்கும் சூர்யாவிற்கும் திருமணத்தை சீக்கிரமே முடிக்க எண்ணினார் கமலநாதன்.



அவருக்கு தெரியும் இந்நேரம் நேத்ரன், சூர்யா வாழ்வில் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து முடித்திருப்பான். அதற்கு காரணமானவனையும் கண்டுபிடித்திருப்பான் என்று...





ஆனால் நேத்ரனின் அமைதி தான் அவரை கவலைக்குள்ளாகியது. ஏனெனில் தன்னுடைய பேரனின் நடவடிக்கைகளை பற்றி நன்கு அறிந்தவர், எப்பொழுதும் எதிராளியின் மீது விழும் முதல் அடி, சொல், செயல் எல்லாம் தன் பக்கத்தில் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என சொல்லுபவன், அமைதியின் சிகரமாக விளங்கினால் அவரும் பதற தானே செய்வார்.





அதற்காகவே அவர் நேத்ரனை, சீண்டி விட்டது அவருக்கு தெரியும் மற்ற அனைத்தையும் விட நேத்ரனுக்கு சூர்யா எவ்வளவு முக்கியமானவள் உயிரானவள் என்று அதனாலேயே அவளை முன்னிருத்தி நேத்ரனுக்கு கால அவகாசம் அளித்திருந்தார். பாவம் அவருக்கு தெரியவில்லை அவனின் பொறுமை, தன்மை, மென்மை எல்லாம் சூர்யாவிடம் மட்டுமே வெளிப்படும் என்று சிரித்துக் கொண்டே எதிராளியை வீழ்த்துவதில் அவன் அந்த மாயக்கண்ணனுக்கு நிகரானவன் என்று...



தன் அலுவலக அறையில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்த நேத்ரனை தானும் அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தவன், ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த ஹரிஷ், ( இல்லனா மட்டும் நீ பொறுமையின் சிகரம் பாரு).





“ டேய், அப்படி என்ன தான்டா யோசிக்கிற சொன்னா நாங்களும் யோசிப்போம் இல்ல அவனைவன் லவ் பண்ணோமா கல்யாணம் முடிச்சோமா புள்ளகுட்டிய படிக்க வெச்சோமா அப்படினு நெக்ஸ்ட் லெவல் போய்கிட்டே இருக்காங்க நீ மட்டும் தான் லவ் பண்ண பொண்ண பக்கத்தில வெச்சிகிட்டு வீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்லியும் யோசிக்கிற” என கூறியவன்,





மேஜையின் மறுபக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவன், சற்று முன் நோக்கி சாய்ந்து மேஜைமேல் கைகளை ஊன்றிக் கொண்டு ஹஸ்கி வாய்ஸில்,

“ மச்சான், உனக்கு உடம்புல எந்த பிரச்சனையும் இல்ல தானே” என கேட்க,



அவனை முறைத்து பார்த்தவன்,

“ பக்கி, உனக்கு கொழுப்பு கூடி போச்சிடா... “ என கூறிய நேத்ரன், மேஜை மேல் இருந்த பேப்பர் வெயிட்டை தூக்கி ஹரிஷ் மீது எறிய அதனை லாவகமாக கைகளில் பிடித்தான் ஹரிஷ்.





“கேட்ச்” என கூறிக்கொண்டே, “ அப்பாடி, உன் மௌன விரதம் கலைஞ்சிதா..? ஷப்பா உன்ன பேச வைக்க நான் எவ்வளவு பேச வேண்டி இருக்கு அப்படி என்ன தான்டா யோசிச்சிக்கிட்டு இருந்த அதை சொல்றதுக்கு முன்னாடி எனக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ் சொல்லு உன் கூட பேசி பேசியே நான் டையர்ட் ஆகிட்டேன்” என ஹரிஷ் கூறிய பாவனையில் சிரித்த நேத்ரனை பார்த்துக் கொண்டிருந்தவன்,



“ சொல்லு மச்சான், அப்படி என்ன தீவிர யோசனை அப்பா, விஷயத்தை பத்தி நீ கவலை படாதே அதை கண்டு பிடிக்க வேண்டியது என்னோட பொறுப்பு. நீ சூர்யாகிட்ட கல்யாண விஷயத்தை எப்படி சொல்றதுன்னு மட்டும் யோசி” என கூற,





“ம்ம்...” என தலை ஆட்டியவன், “ உனக்கு வெளிய ஏதாவது முக்கியமான வேலை இருக்கா ஹரி” என நேத்ரன் வினவ,





“ உன்னைய விட இப்போதைக்கு எனக்கு எதுவும் எந்த வேலையும் முக்கியம் இல்ல சொல்லு அப்படியே மறக்காம ஜூஸ் கொண்டுவர சொல்லு “ என ஹரிஷ் கூற,



தன் தலையில் அடித்துக் கொண்ட நேத்ரன், “இந்த ரணக்களத்திலயும் உன்னால மட்டும் தான்டா, இப்படி எல்லாம் கேட்க முடியும் “ என்றவன்,



ஜூஸை வரவழைத்து கொடுத்தான். தன்னுடைய பி.ஏவை அழைத்து 'ஏதாவது அவசர வேலை மற்றும் முக்கிய வேலை இருக்கா' என கேட்டுக் கொண்டவன், “தன்னை ஒரு ஒரு மணி நேரத்திற்கு யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம்” என கூறினான் நேத்ரன்.







அவன் பேசி முடிப்பதற்குள் ஹரிஷ், அந்த ஜூஸை ரசித்து ருசித்து அருந்தி முடித்தவன், “ இப்போ சொல்லுடா கமல்”

என ஹரிஷ் கூற,



தன் திட்டத்தினை கூறியவனை மேலும் கீழும் பார்த்தவன், “ இதெல்லாம் சரி வரும்னு நினைக்கிறியா கமல்” என தன் நெற்றியை தேய்த்துக் கொண்டே யோசனையாக கேட்க,



“ உன் தொங்கச்சிக்கு, இப்படி பண்ணா தான் சரி வருவா அவ மனசுல இருக்க அந்த விவேக் பத்தின பயம் முழுசா போனா தான் அவ முழுமனசா என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பா. இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடுறது எவ்வளவு சீக்கிரம் இதை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இந்த விஷயத்தை முடிச்சுக்கணும்

சோ, நான் சொன்னதை எவ்வளவு சீக்கிரம் செஞ்சி முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செஞ்சி முடி இன்னும் ஒரு வாரத்துல சூர்யாவும், ஜெயஸ்ரீயும் ஆபீஸ் வர மாதிரி நான் பார்த்துக்குறேன்...” என நேத்ரன் கூற,





“ இந்த பிரச்சனை முடியற வரை நீயும் உன்னோட வெளி வேலைகளை குறைச்சிக்கிட்டு இங்க ஆபீஸ்லேயே இருக்க மாதிரி பார்த்துக்க(இத நீ சொல்லவே தேவையில்லை நீ எப்படி சூர்யா இருக்குற இடத்தில இருப்பியோ அதே போல் தான் ஹரிஷும்).

சூர்யாவை எப்பவும் தனியா விட கூடாது”



ஹரிஷோ, “எப்ப பாரு வில்லங்கத்தை இழுத்து விடுறதே இவனுக்கு வேலையா போச்சி”



“டேய் விவேக், உன் முகத்தை கூட நான் சரியா பார்த்ததில்லை ஆனா உன் மேல அவ்வளவு கொலவெறியில இருக்கேன். வாடி வா, உன்ன வைச்சி செய்றேன்” என புலம்ப,



ஹரிஷ் முகப்பாவனைகளை கவனித்து கொண்டிருந்த நேத்ரன், “ஏன்டா, இல்லாத மூளைக்கு வேலை கொடுக்குற ரொம்ப யோசிக்காம நான் சொன்னதை செஞ்சி முடிக்குற வழியை பாரு” என,





“ இவ்வளவு நேரம் உர்ராகுட்டான் மாதிரி இருந்திட்டு என்னை டேமேஜ் பண்ணணும் னா மட்டும் வரிஞ்சிக்கட்டிக்கிட்டு வாடா,

முதல்ல நீ உன் பிரெண்டுக்கு போன் போட்டு பேசு மீதி வேலையை நான் பார்த்துக்குறேன்” என கூறிய ஹரிஷ், நாற்காலியில் இருந்து எழ,







“ எங்கடா போற..? வெளிய வேலை இல்லனு சொன்ன..?” என கேள்வியாக வினவ,



“ எனக்கு லைட்டா பசிக்குது. நான் போய் சாப்பிட்டுட்டு வரேன்” என கூறியவனை பார்த்து துப்புவது போல் செய்கை செய்தான் நேத்ரன். அதனை தூசு போல் தட்டி விட்டவன், “ சொன்ன வேலையை செய்டா, வளருற புள்ள சாப்பிடற விஷயத்தில் எல்லாம் கண் வைக்க கூடாது” ( இன்னும் எவ்வளவு தான்டா வளருவ) என கூறிய ஹரிஷ், தன் வேலையை பார்க்க சென்றான். அதாங்க சாப்பிடுற வேலையை அவன் செல்வதை பார்த்து கொண்டிருந்த நேத்ரனின் முகத்தில் புன்னகை பூத்தது.











' அப்பா, அம்மா ஆக்சிடெண்ட் அப்போ நீ மட்டும் இல்லைனா, என்னோட நிலைமை ரொம்ப மோசமா போய் இருக்கும்டா, அம்மா மொத்தமா என்னைவிட்டுபோய் இருப்பாங்க. நான் இன்னும் இறுகி போய் இருப்பேன்.

உன்னால தான்டா, நானும் அம்மாவும் இன்னும் சகஜமான மனநிலையில் இருக்கோம். உன்ன மாதிரி ஒரு பிரெண்ட் கிடைச்சத்துக்கு நான் அந்த கடவுளுக்கு ரொம்ப ரொம்ப நன்றி சொல்ல கடமை பட்டிருக்கேன்' என தன் மனதோடு சொல்லி கொண்ட நேத்ரன், ஹரிஷ் சொல்லிய வேலையை செய்து முடிக்க, அங்கு உணவுண்ண சென்ற ஹரிஷும், நேத்ரன் கூறியவற்றை எல்லாம் செய்து முடித்திருந்தான்.







*******************



மேலும் சில நாட்கள் கடந்த நிலையில் ஒரு ஞாயிற்று கிழமை மதிய உணவு வேளையில் அனைவரும் ஒன்றாக உணவருந்தி கொண்டிருக்க நேத்ரன், தன் அம்மாவிடம்,





“ அம்மா, இப்பவும் உங்களுக்கு ஒரு கம்பானியன் வேணுமா ம்மா..?” என கேட்க சூர்யா எதற்கு இந்த கேள்வி இப்பொழுது என புரியாமல் நேத்ரனை பார்க்க, பிரேமாவோ, “என்ன விஷயம் கண்ணா” என கேட்க,





“ அது ஒண்ணும் இல்லை ம்மா, நம்ம ஹோட்டல் பிஸினெஸ் ஆல்ரெடி உலகம் முழுக்க நம்ம பிரஞ்செஸ் இருந்தாலும் மெயின் ஏரியாஸ் தான் நாம கவர் பண்ணுறோம். அதனால ஒரு சில பெஸ்ட் ஹோட்டல்ஸ் நம்ம கூட டை-ஆப் பண்ணிக்க விரும்புறாங்க. அது சம்பந்தமா எனக்கு கொஞ்சம் வெளி வேலைகள் நிறைய இருக்கு. எனக்கு பதிலா நம்பிக்கையான ஒருத்தர் என்னோட இடத்தில் இருந்து பார்த்துகிட்டா நல்லா இருக்கும். அதான் சூர்யா கொஞ்சம் ஆபீஸ் போயிட்டு வந்தா எனக்கு ஒர்க் பிரஷர் இல்லாம நான் என்னோட வேலையை பார்க்க முடியும்...” என நேத்ரன் கூற,





ஹரிஷோ, திறந்த வாய் மூடாமல் நேத்ரனை பார்த்துக் கொண்டிருந்தான். மனத்திற்குள், 'என்ன நடிப்புடா சாமி' என வியந்தான்.



அவன் அருகில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜெயஸ்ரீயோ,

யாரும் அறியாமல் அவன் காலை மிதிக்க அதில் கவனம் கலைந்தவன் ஜெயஸ்ரீ பக்கம் பார்க்க அவளோ, சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியில் வருமாறு கண்களால் சொல்ல,





'ஐய்யோ..! இப்ப எதுக்கு இவ தனியா கூப்பிடுறா னு தெரியலையே...' என மனதோடு புலம்பிக் கொண்டிருந்தவனை பிரேமாவின் குரல் கலைத்தது.





“ எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்ல கண்ணா, சூர்யாவுக்கு இதுல இஷ்டம்னா எனக்கும் விருப்பம் தான்” என கூற,



“ தேங்க்ஸ் ம்மா” என கூறிய நேத்ரன், சூர்யாவை பார்க்க தலை அசைத்து தன் சம்மதம் தெரிவித்தவளின் முகம் தெளிவில்லாமல் இருப்பதை கண்டுக் கொண்ட நேத்ரன், அவளை பார்த்தவாறே மீதி உணவை முடிக்க அவரவர் உணவை உண்டு முடித்து செல்ல சூர்யாவோ, ஏதோ யோசனையில் தட்டில் கோலம் வரைந்துக் கொண்டிருந்தாள்.







பிரேமா, இதை கண்டு கொண்டாலும்.... தன் மகன் சூர்யா விஷயத்தில் யோசிக்காமல் எதனையும் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கையில் அவர்கள் இருவருமே பேசி முடிவெடுக்கட்டும் என தன் உணவை முடித்து கொண்டு தன்னறைக்கு சென்று விட்டார்.

ஹரிஷும், ஜெயஸ்ரீயும் கூட சென்று விட, நேத்ரனும் சூர்யா மட்டுமே தனித்திருக்க...



“ ரியா... ரியா” என இருமுறை அழைத்தும் ஏதோ யோசனையில் இருந்தவளை கண்டவன் இம்முறை அவள் தோளில் கைவைத்து அசைத்து சற்று அழுத்தமாக அழைக்க அதில் திடுக்கிட்டவள் நேத்ரனை கண்டு சற்று ஆசுவாசம் அடைந்தவள் என்னவென தன் விழிகளால் வினவ, அவளின் விழிவீச்சில் மயங்கிய மனதை கடிவாளம் இட்டவன், “என்ன யோசனை டாலி...” என வினவ,





ஒன்றும் இல்லை என தலை அசைக்க ஆனால் அவளின் கண்களில் உள்ள கலக்கத்தினை கண்டுக் கொண்ட நேத்ரன், அவளின் கரம் பற்றி தோட்டத்திற்கு அழைத்து வந்தான்.







அங்கிருந்த செயற்கை நீரூற்று பக்கத்தில் உள்ள மேடையில் அமர்ந்த நேத்ரன், சூர்யாவையும் பக்கத்தில் அமர வைத்து கொண்டவன்,

“ இப்போ சொல்லு டாலி, என்ன விஷயம் இந்த மண்டைக்குள்ள இருந்து உனக்கு பிரச்சனை கொடுக்குது” என அவளின் தலையில் கைவைத்து ஆட்டி கேட்டான் நேத்ரன்.



“ இன்னமும் மௌனத்தில் இருந்தவளை கண்டு ஏன் டாலி, உனக்கு ஹோட்டல் வரதுக்கு விருப்பம் இல்லையா..?” என கேட்க,



“அப்படி எல்லாம் இல்ல தனு, ஆனா ஏதோ மனசு உறுத்தலா இருக்கு. அதான் நீங்க என் கூடவே இருப்பீங்க தானே என்னை தனியா விட்டுட்டு போக மாட்டீங்க தானே” என சிறு குழந்தை என கேட்க, ( கடல் கடந்து வேலைக்கு வந்தவள், அதனை மறந்து முதல் நாள் பள்ளி செல்லும் மழலை தாயை பிரிய அழுவது போல் இருந்தது அவளின் செயல்).





அதில் மனம் உருகிய நேத்ரன், “டாலி, உன்ன தனியா விட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன். அப்படியே ஏதாவது அவசர வேலையா நான் போனாலும் உன் கூட எப்பவும் ஜெயஸ்ரீ இருப்பா அதனால நீ எப்பவும் தனியா இருக்க மாட்ட” என குழந்தைக்கு சொல்வது போல் சொல்லியவன்,





அவளின் நெற்றியில் முட்டி, சிரித்துக் கொண்டே, “ இவ்வளவு பயப்படுறவ எப்படி வேலைக்கு வந்த அதுவும் வெளிநாட்டுக்கு” என கேட்க ( நேத்ரா, அவ சேட்டை எல்லாம் பார்த்தும் இப்படி சொல்ற இது தற்காலிக சூர்யா ஓல்ட் வெர்ஷனுக்கு மாறினா உன்னோட நிலைமைய நினைச்சி நீ தான் பயப்படணும்).





அதில் கோபம் கொண்ட சூர்யா, அவனிடம் இருந்து சற்று விலகி அமர்ந்து, “ சரி நான் எப்போ இருந்து வேலைக்கு வரணும் “ என கேட்க அவளின் செய்கையையும் குரலில் உள்ள பேதத்தினையும் கண்டுக் கொண்ட நேத்ரன்,





'எதுக்கு இந்த கோவம்' என யோசித்துக் கொண்டே அவள் அருகில் இன்னும் நெருங்கி அமர அவனை முறைத்து பார்த்துக் கொண்டு இன்னும் சற்று நகர்ந்து அமர மீண்டும் நேத்ரன் நெருங்கி அமர சூர்யா தள்ளி அமர என இறுதியில் அந்த மேடையின் விளிம்பில் அமர்ந்து இருந்தவளை பார்த்து இன்னும் நெருங்கி அமர்ந்த நேத்ரன், அவள் நகர முற்படும் பொழுது.... அவளின் கரம் பற்றி தன் மடி மீது அமர்த்திக் கொண்டு அவளின் இடையோடு கரம் கோர்த்து அணைத்து கொண்டவன்,



“இப்ப எதுக்கு இந்த கோவம் என் பப்ளிமாஸ்க்கு “ என வினவ,





“ யாரு பப்ளிமாஸ், நானா, அப்பறம் அவ்வளவு குண்டா இருக்குறவளை எதுக்கு கஷ்டப்பட்டு உங்க மடி மேல இழுத்து பிடிச்சி உட்கார வச்சிருக்கீங்க” என படபடக்க,





“ அதான் சொல்லிட்டீங்களே நீ வேலைக்கு வந்தவ, வேலையை பாருன்னு அப்புறம் என்ன “ என கூறியவளின் குரல் கலங்கி இருக்க,





“ நீ சுகமான சுமைடி, என் செல்ல தர்பூஸ், உன்ன யாரு வேலை பார்க்க சொன்னா அங்க இருக்கவங்களை வேலை வாங்க சொன்னேன். நீ இப்படி எல்லாம் பயப்பட கூடாதுன்னு சொன்னேன் டாலி.... பிகாஸ், நீ என்னோட பெட்டர் ஹாப் Mrs.சூர்யா கமலநேத்ரன்... அதுவும் இல்லாம இந்த கமலநேத்ரன் பொண்டாட்டி எந்த விஷயத்திற்காகவும், எதுக்காகவும், யாருக்காகவும் பயப்பட கூடாது”







“ நீ இந்தியாவில் இருந்து தைரியமா தானே இந்த நாட்டுக்கு வேலை பார்க்க வந்த இப்ப அந்த தைரியம் எங்க போச்சின்னு தான் நான் கேட்டேன் டாலி, உன்னோட தைரியமா, உனக்கு உறுதுணையா, பக்கபலமா தான் நான் இருக்கணும் இருப்பேன் அதுக்கு தான் நான் அப்படி சொன்னேன் அது உன்ன ஹர்ட் பண்ணி இருந்த சா... ம்ம்ம் ...” நேத்ரனின் வாயில் தன் கைவைத்து மூடி இருந்தாள் சூர்யா.





தலையை, இடவலமாக அசைத்து, “ சொல்லாதீங்க தனு, நீங்க எந்த தப்பும் செய்யலை அப்பறம் எதுக்கு என்கிட்ட சாரி சொல்றிங்க” என கூறி கைகளை விலக்கி அவன் கழுத்தில் மாலைப்போல் கோர்க்க இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டான் நேத்ரன்.







“ நான் தான் லூஸு மாதிரி, உங்ககிட்ட கோபமா பேசிட்டேன் அதுக்கு நான் தான் சா... ரி “ இந்த வார்த்தை வெளியில் வர முடியாமல் அவளின் இதழ்களை தன்னுடைய உதடுகளால் சிறை செய்திருந்தான் அவளின் காதல் கள்வன் ...





சில நிமிடங்கள் நீடித்த அந்த முத்தத்தினை விருப்பமே இல்லாமல் முடிவுக்கு கொண்டு வந்த நேத்ரன்,

“ டாலி, நான் மட்டும் இல்ல நீயும் என்கிட்ட சாரி சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல அதுவும் இல்லாம உன்னோட கோவம், சந்தோசம் என எந்த உணர்வையும் நீ என்கிட்ட தாராளமா வெளிப்படுத்தலாம் அதுக்கான முழு உரிமை உனக்கு இருக்கு” ( ஐய்யோ..! நேத்ரா, இதுக்கு பேர் தான் செல்ப் ஆப்பு பின்னாடி என்ன நடக்க போகுதுன்னு தெரியாம வாய கொடுத்து வான்டெட்டா மாட்டிக்கிட்டியே).





“ இப்ப என் மேல் உள்ள கோபம் எல்லாம் போயிடுச்சா ( உன்னோட இந்த கோபம் தான் டாலி நீ கொஞ்சம் கொஞ்சமா உன்னோட கூட்டுக்குள் இருந்து நீ வெளிய வருவதற்கான அறிகுறி ஐ மிஸ் மை கியூட் டாலி சீக்கிரம் உன்ன பழைய படி பார்க்க ஆசையா இருக்கு என மனத்திற்குள் எண்ணியவன்) நாளையில் இருந்து நீயும் ஜெயஸ்ரீயும் ஆபீஸ் வர்றிங்க ஓகே” என,





“சரி” என கூறியவள், கன்னம் தட்டி, “தட்ஸ் மை கேர்ள்...” என கூறினான் நேத்ரன்.





சென்னை...





தன் கையில் உள்ள கடிதத்தினை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தான் விவேக். ஆம், அது அவன் தங்களின் ஹோட்டல் டை-ஆப் விஷயமாக சென்ற இடத்தில் இருந்து வந்திருந்தது.





அதில் உள்ள சாராம்சம் தங்களின் ஹோட்டலை தாங்கள், “ தி கமல் குரூப் ஒப் இண்ட்ஸ்ட்ரிஸ் அண்ட் காம்பனிஸ்” நிறுவனத்திடம் விற்று விட்டதாகவும்,

'நீங்கள் எங்களோடு போட்ட ஒப்பந்தத்தினை அவர்களிடம் தொடர விரும்பினால் அவர்களின் சென்னை கிளையினை அணுகி கொள்ளவும். அவர்களின் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் உங்களுக்கு சரிப்பட்டு வந்தால் மேற்கொண்டு நீங்கள் பாரீஸில் உள்ள அதன் நிறுவனரை சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் ' என இருக்க...





விவேக்கிற்கோ, மற்ற அனைத்தையும் விட அந்த நிறுவனத்தின் பெயரும் அந்த நாடும் மட்டுமே கண்களை நிறைத்தது.





பின்னே, தேடி அலைந்தது காலடியில் கிடைத்தது போல் ஒரு மகிழ்ச்சி அவனுக்கு தெரிய வில்லை. மற்றவர் துன்பத்தில் வரும் மகிழ்ச்சி நிலைக்காது என...





விளக்கை தேடி போகும்

விட்டில் பூச்சியின் நிலையில் இருந்தான் விவேக். அவன் மனம் முழுவதும் வன்மம் மட்டுமே, 'எனக்கு தெரியாம போய் ஒளிஞ்சிகிட்டதா நினைச்ச இல்ல வரேண்டி நேர்லையே வரேன். வந்து எவனோட அணைப்பில் அவ்வளவு சந்தோஷமா இருந்தியோ அந்த சந்தோஷத்தை இல்லாம பண்றேன்' என கூறிக்கொண்டான். (போடா, ஸ்கெட்ச் போட்டதே அவன் தான்டா).





அவள் உயிரானவன்...
 
Status
Not open for further replies.
Top