All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Mythili

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைவருக்கும் வணக்கம், என் பெயர் மைதிலி, வசிப்பது திருப்பூர், படித்தது முதுகலை உயிர்வேதியியல் துறை, தற்போது
மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்ட்டாக படிபுரிகிறேன். பள்ளி செல்லும் போது ராஜேஷ்குமார் நாவல் மட்டுமே படித்து கொண்டிருந்தேன். கல்லூரி சென்ற பிறகு குடும்ப நாவல் படிக்க துவங்கினேன். அன்றிலிருந்து தொடர்கிறது. புத்தகமாக படிக்க தொடங்கி, ஒரு சமயம் ஆன்லைன் படிக்க தேடிய போது கிடைத்ததே ஸ்ரீகலா மேம் நாவல்கள். தீவிர ரசிகையாக மாறிவிட்டேன் அவரது நாவல் படித்து. அப்படியே மற்ற எழுத்தாளர்கள் வர வர அவர்களது நாவல் படித்து வருகிறேன். இன்னும் அனைவரது நாவலும் படிக்க முடியவில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் போது மற்ற எழுத்தாளர்களின் கதைகளை கண்டிப்பாக படித்து விடுவேன். உங்கள் எழுத்து திறன் பார்த்து நானும் எனது கற்பனையை கொண்டு எழுதலாம்னு நினைக்கிறன் விரைவில் வருகிறேன். ஸ்ரீ கலா மேம் அவர்களும் திரி அமைத்து கொடுக்கிறேன் என கூறியுள்ளார். ரொம்ப மொக்க போடறானோ???. ஒகே டியர்ஸ் போதும் முடித்து கொள்கிறேன். பை. பை....
 

Nithyarvr

New member
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே
நான் நித்யா. மதுரையில் பிறந்து,வளர்ந்த,வாழ்ந்து வரும் இல்லத்தறசி . இரண்டு குட்டீஸோட அம்மா
கைவிணை பொருள் செய்வதில் மிகு ஆர்வம் உண்டு
பிடித்த பொழுதுபோக்கு படிப்பது,படிப்பது,படிப்பது (பாடம் இல்லேங்கோ.......) அதான் இங்கே வந்துட்டேன்
 

Josejames

Active member
நான் சுகன்யா பிறந்தது cumbum அருகில் உள்ள ஒரு கிராமம்.
இருப்பது trichy படித்தது கணிதம்
House wife பிடித்தது கதைகள் படிப்பது. ராஜேஷ்குமார்,ரமணி mam novels விரும்பி படிப்பேன் .melodies பாடல்கள் கேட்பது. இரண்டு வருடங்களாக online இல் படித்து கொண்டிருகேன். ஆனால் ஸ்ரீ mam novel எப்படி படிப்பதுன்னு தெரியாம register பண்ண முடியாம 2 years ஆ try பண்ணி recent தான் join பண்ணினேன்.வேர ஒன்னும் இல்லை.
 

Kokilasoundar

New member
Hi friends,
என் பெயர் கோகிலா. நானும் சின்ன வயசுல இருந்து ரமணி சந்திரன் அம்மா ஓட கதை எல்லாம் படிச்சிருக்கேன்.. இப்போ இந்த தளத்தில் எல்லா எழுத்தாளர் கதையும் படிக்கிறேன்.. அனைத்தும் மிகவும் அருமை... நான் கொஞ்சம் கவிதை எழுதுவேன்.. நிறைய பாட்டு கேப்பேன்..
 

Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ் ....

என்னோட பெயர் வாணிப்பிரியா ..... கதைக்காக ஸ்ரீவாணி...

என்னோட ஊர் திண்டுக்கல்ல ஒரு சின்ன கிராமம் . எக்ஸாம்லாம் முடிச்சிட்டு வெட்டியா இருந்தப்ப பொழுதுபோகாம கதை படிக்க தேடினப்போ எனக்கு கிடைச்சது நம்ம ஸ்ரீ மேம் "உயிர் உருகும் ஓசை " நாவல். அதற்கு முன்னாடியும் நிறைய கதைகள் படிச்சிருக்கேன். ஆனால் இந்த அளவு சத்தியமா எதுவும் புடிக்கலை.. அப்படியே நம்ம சைட்டைப் பிடிச்சு வந்து இப்போ நிறைய அக்காஸ் பிரெண்ட்ஸ் ஆய்ட்டாங்க. ஸ்டோரிக்கு கமெண்ட்ஸ் போட்டு எங்களுக்குள்ள பல இனிமையான வாக்குவாதங்கல்ன்னு அழகா நகர்ந்திட்டிருன்தது.. நல்லா போய்கிட்டு இருக்கப்ப திடீர்னு ஒரு ஆசை பேராசை கதை எழுத. ஒரு வழியா ஒரு கதையும் எழுதி முடித்தாகிவிட்டது. தோன்றதை எழுதறேன். சத்தியமா எழுத்தாளர்லாம் இல்லை.

அடுத்த கதைக்கு தயார்படுத்திட்டு இருக்கேன் இப்போதைக்கு. பாப்போம் ....என்ன ஆகுதுன்னு.


இப்போதைக்கு சொல்லிக்கிற அளவு பெருசா எதுவும் பண்ணலை. பின்னாடி பண்ணா பாப்போம்....

நன்றி.
Mam nanum
Didigul LA oru village tha same pitch mam
 

Rmya

Member
நான் ரம்யா..... மன்னார் குடி, ஊட்டி, அறந்தாங்கி,கும்பகோணம் என வசித்து தற்போது இருப்பது சென்னையில்....என் தந்தை சத்தியமூர்த்தி தமிழாசிரியர்.....என் தந்தையின் படைப்பாற்றலால் கவரப்பட்ட நான் கல்லூரியில் படிக்கும் போது நாவல்கள், கவிதைகள் படிக்க ஆரம்பித்தேன்.... ஆனால் நான் கணித ஆசிரியை...... Srikala mam கதைகள் மிகவும் பிடிக்கும்....மற்ற எழுத்தாளர்கள் கதைகளை தற்போது தான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.....அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.....
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai srikala mam na ippatha NUK padicha awesome mem but 39, 40 antha rendu link illa ennala padikka mudiyala atha:(
but samma mem
 
Top