All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

Status
Not open for further replies.

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் மா கதை...

அஜய்: வாட் ஆன் அட்டிடியுட்... அவன் சின்ன வயது டூ இப்போ வரை அது குறையவே இல்ல... ஓவர் அறிவாளி இவன்... பாசத்துக்கு ஏங்கினாலும் கூட வெளியில் சொல்லாம இருக்கதுலாம் எப்படித்தான் ஒரு குட்டி பையனால முடியுதோ ஆனால் வளர்ந்த ஆண் மகன் ஆனாலும் அது தான் அவன் நிலை. ஒருத்தியிடம் உருகுறான் பா செம்மயா... அம்மாவின் ஆசையை காப்பாற்ற, அவரின் லட்சியத்தை காப்பாற்ற எத்தனை எத்தனை முயற்சி, எவ்வளவு தோல்விகள் வந்த போதும் துவளாமல் எல்லாம் கண்டு பிடிச்சு அவனை ஆட்டுவிக்கிறது சூப்பர்... இந்த க்ரைம் இப்போ பரவலாக மெடிக்கல் ஃபீல்ட் ல நடக்கிறது தான் அதை தடுத்து நிறுத்த போய் கிட்டத்தட்ட மரணவாயிலை பார்த்திட்டு வரான்.. ஆனாலும் ஜெயிசிட்டான்..

தனிப்பட்ட வாழ்க்கை ஒன்னும் அவ்வளவா ஷோபிக்கலை அதை பிரகாசம் ஆக்க வரா ஒருத்தி. ஆனால் அவள் மேல் உள்ள உணர்வு புரியுமுன் அவளை படுத்தும் பாடு கொஞ்சமா நஞ்சமா சாமி இவ்வளவு கோபம் ஆகாதுடா... இருட்டு ரூம் ல போட்டு பயம் காட்டுறது அப்பறம் உருகுறது அதை மறைப்பதே பெரும் வேலை இவனுக்கு. காதலியின் ஆசையை நிறைவேற்ற போய் கதலியையே விட்டு கொடுக்கிறான்.. அவள் வந்தாளா??

இவனின் மாஜி மனைவி, eternal தோழி செய்யும் சித்தி விளையாட்டு.. அவளை எப்பொழுதும் போல் தோழியாய் நடத்தும் பொழுது கூட அந்த லூசுக்கு புரியலை போ அவன் மனம் மாறாது என்று பக்கி... ஆனாலும் இவள் நடிப்பு கொஞ்சம் ஓவர் தா.

நண்பன் n தோழி இறப்பு எவ்வளவு கொடுமையா இருந்து இருக்கும். எங்கும் உடையாதவன் அங்கு உடைவது அவனின் நட்பின் ஆழம் பார்த்து எனக்கு கண் கலங்கிடுச்சு... ரஞ்சு n சது இப்படி ஆகி இருக்க வேண்டாம். அவங்க காதல் முடிவு எல்லாம் சட்டுன்னு முடிஞ்ச மாதிரி முடிஞ்சு போயிடுச்சு.


மெல்லினா : அக்கா கல்யாணத்துக்கு போடப் போற ப்ளௌஸ் சரியா இல்லனா நல்லா இருக்குமா? நைட் பத்து மணிக்கு யாருகிட்டயும் சொல்லாம ப்ளௌஸ் சரி பண்ண போனது தான் வாழ்வே தலைகீழா மாறிடுச்சு. ஒரு கொலையை பார்த்து பயந்து கத்தி அவன் கடத்தி, போன இடத்தில பார்த்தா அவன் மனைவி இருக்கா.. அங்க இருந்து தப்பிக்க பார்த்தா மாட்டிகிட்டா.. அவங்க கேட்கும் உதவி செஞ்சா தான் வீட்டுக்கு போக முடியும் ஆனால் அதையும் சொல்ல மாட்டாய்ங்க அந்த ரெண்டு பேர்.

இதுல கடத்தினவனுக்கு இவள் மேல் காதல் வந்துடும், ஆனாலும் நல்லா வாங்கி கட்டுவா.. மேடம் க்கும் காதல் வரும்.. இவளுக்கு ஒரு காதல் தோல்வி, ஒருத்தன் நிச்சயதார்த்தம் பண்ணுணவன் இருக்கான் அதனால் மேடம் அவனுக்கு உண்மையா இருக்க நினைச்சு எதுவும் சொல்ல மாட்டாங்க..

ஆனா விதி விடுமா இவளை அவன் மனைவி n மாமனார் கடத்த இவங்க ரெண்டு பேர் உணர்வு வெளி வந்துடும். இருந்தும் இவ ஆசைக்காக இவ பெற்றோர் கிட்ட கூட்டிட்டு போகும் இடத்தில் நடக்கும் கலவரத்தில் இவளை அவர்களிடம் சேர்க்க இவன் அவர்களிடம் போராடி உண்மையை சொல்லி அவங்க அப்பாவுக்கு வாக்கு கொடுத்து விட்டுட்டு வரான்.. என்ன உண்மை? என்ன வாக்கு?

பெண்ணின் காதல் இங்க தான் ஸ்ட்ராங் ஆ வெளிவருது.. விட்டுட்டு போனால் விட்டுடுவோமா பின்னாடியே வந்துட மாட்டோம்.. ஆனாலும் அஜய் கிட்டயே நடிப்பு..

அதன்பிறகு சுவாரஸ்யம் அகைன் அவளை கூட்டிட்டு அவ வீட்டுக்கு போக உண்மை அவளுக்கு தெரிய வர மறுபடியும் கலவரம்😍😍😍 எப்படி செருறாங்க, அவங்க பரென்ட்ஸ் ஒத்துகுறாங்களா? அவனை பற்றிய உண்மை தெரிய வருதா ? இது கதையில்..

மோகன்: அஜையின் வலது இடது எல்லாம் இவன்தான் அதான் PA இவனொரு டாக்டர் என்று தெரிய வரும் போது ஷாக் தான். ஒரு டாக்டருக்கு பிஸினஸ் மேன் கூட என்ன வேலை. அதுவும் அஜய் செய்யும் கொலை, இவங்க உரையாடல் எல்லாம் கேட்கும் போது என்ன தான் பண்ணுறாங்க கொலை பண்ணுற அளவு என்ன வேலை என ஒரு சுவாரஸ்யம்.. இவன் பின் இருக்கும் சோகம் இவனின் ரியா பாவம் மோகன்... சில இடங்களில் சந்தேகம் வந்தாலும் ரெண்டும் கூட்டு கலவாணிகளா தான் இருக்குது. இவன் இவனின் மருத்துவ தொழில் நினைத்து கலங்கும் இடம் அப்படி என்ன டா பிராப்ளம் அப்படினு ஒரு கியூரியாசிட்டி வருது.. அது தெரிய வரும் போது கஷ்டமா இருக்கு. பணம் என்றால் எவனும் மேல மேல தப்பு பண்ண யோசிக்கிறது இல்லை. மோகன் கிரேட்...

இந்திரா: அப்பாவி மனைவி பாவம், பெறாத மகனையும் பெற்ற மகனையும் ஒன்றாக பார்க்க தெரிந்த ஒரு சராசரி பாசமுள்ள, பாசத்தால் எதையும் மன்னிக்க கூடிய பெண்.

துவாரகா: என்னா ஒரு கெத்து கம்பீரம் சூப்பர் சூப்பர் கா... ரொம்ப பிடிச்சது இவங்களை.. ஒரு இடத்தில் கூட அவங்க குடும்ப மற்றும் மருத்துவ தொழிலை விட்டு கொடுக்கலை. எவ்வளவு பெரிய சேவை எவ்வளவு பாராட்டு ஆனாலும் கர்வம் இல்லை... கணவனின் அன்புக்காக யாசிக்கும் இடம் அவ்வளவு கஷ்டமா இருந்தது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பாசம் காதல் முன் தோற்று தான் போரங்க... இவங்க கடைசி வரை அவங்க தொழில் n கனவுல அதை நல்ல படியா நிறைவேற்றுவது என சூப்பர்.. மகனை வளர்த்த விதம், அவனை ஊக்கு விக்கும் இடம் எல்லாம் சூப்பர்... இவங்களை போல தான் அஜய் கூட...

துவாரகா கணவர் எனக்கு பிடிக்கலை. என்ன ஒரு மனுஷன் அவளுக்கு நம்பிக்கை கொடுத்து ஏமாற்றி விட்டார். அவரின் கடைசி நேரம் கூட உடன் இல்லை. அவளின் கம்பீரம் பிடிக்கும் என சொல்லி காதலுக்கு பிரதியாக அதையே கேட்பது ச்ச.. இவர் யாருக்கு உண்மையா இல்லை இந்திராவிர்க்கும் கூட.. தனக்கு என்ன வேண்டும் என தெரியாத மனிதர். அலட்சியத்தால் மனைவியின் கனவை அழிக்க இவரும் ஒரு காரணம்.

தீனா: இவர் எல்லாம் மனுஷன் இல்லை...

மிதுனா: இவளை எனக்கு பிடிக்கவே இல்லை. கடைசியில் திருந்தினால் செய்த தவறுகள் கொஞ்சம் இல்லை. இவளின் பிடிவாதம் என்ன காரணம் சொன்னாலும் இவளை என் மனது ஏற்று கொள்ளவில்லை. அப்படி என்ன ஒரு பிடிவாதம். தான் நினைத்தது தான் நடக்க வேண்டும், யார் பேச்சையும் கேட்காம சரியான திமிர்.

ரவீந்தர் : இவர் எல்லாம் என்னதுக்கு டாக்டர் க்கு படிச்சார்... உலகில் இறைவன் படைப்பை பழுது பார்க்கலாம், படைப்பையே மாற்றி பிரம்மாவாக நினைத்தால் எப்படி... உயிர்களோடு விளையாடும் அற்ப ஜந்துக்கள். தான் என்ற அகங்காரம்.. சரியான தண்டனை தான் இவருக்கும் மாறனுக்கும்.

ஷ்ரத்தா: வில்லனுக்கு பிறக்கும் பிள்ளைகள் எல்லாம் நல்ல பிள்ளைகளா தான் இருக்குதுக... சொன்னதும் அவ்வளவு கவலையிலும் உதவி செய்யுறா.. குட்..

கரண் இந்த டுவிஸ்ட் எதிர்பார்க்கலை... இவர் செயலில் நியாயம் இல்லை. பெற்ற மகன் என்றாலும் சரி தவறு பார்க்கணும் பாசம் கண்ணை மறைக்க கூடாது அதுவும் ஒரு போலீஸ்காரருக்கு.

துவாரக்: மோஸ்ட் வான்டட் கிரிமினல்.. பட் நல்ல கிரிமினல்.. அசுர வதம் செய்யும் மானுடன்... கண்ணுக்கு தெரியா உருவிடம் எல்லாரும் பயப்படுவது சூப்பர்... இவன் வெளி வந்து யார் என்று தெரியும் போது, எதிர்ப்பு வரும் என்று நினைத்த நபர் வரவேற்பது அருமை..

மருத்துவத்துறையில் நடக்கும் ஒரு முறைகேட்டை எடுத்து அதை நல்லா சொல்லி இருக்கீங்க... அதை மையமா வச்சு தான் கதை என்றாலும் காதல் பாசம் குடும்பம் கோபம் துரோகம் பழி தீர்ப்பு என சூப்பரா இருந்தது.

Regards
Ruby
வாவ் என்ன சொல்ல அசேரிங் ரிவ்யூ சிஸ்..
கதாப்பாத்திரங்களின் அலசல்.. கதையை எந்த அளவிற்கு உள்வாங்கிப் படிச்சிருக்கிங்க என்று தெரியுது.. ரொம்ப நன்றி..

அஜய்யைப் போல் இனி ஒருவனை உருவாக்க முடியுமா என்று தெரியலை..
மெல்லினா வாழ்க்கையை எதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் கேரக்டர்.. அதனால் தான் அஜய்யின் கோபங்களையும், உதாசீனங்களையும் கடந்து அந்த அளவிற்கு அவளால் காதலிக்க முடிந்தது.

மோகன் நல்ல மனிதன்.. எனக்குப் பிடித்த கேரக்டர்.

சுஹானா கம்பீரமான பெண்மணி.. எதற்கும் தலைவணங்காதவர் கணவனின் காதலுக்காக ஏங்கிய அப்பாவி. கடைசிவரை அவர் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை..

வேணுபிரசாத் தொழிலில் வெற்றியடைந்தவர்.. ஆனால் குடும்ப வாழ்க்கை மிக மோசமான தோல்வியைச் சந்தித்தவர்.

கரண் காவல் அதிகாரியாக இல்லாமல், உண்மையில் மகனின் மீது வைத்த பாசம் தான் இப்படி கண்மூடித்தனமாக இரு உயிர்களை காவு வாங்கியிருக்கிறது..

மருத்துவத் தொழில் புனிதமானது.. மருத்துவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்..
பணத்தில் மீது உள்ள மோகத்தில் சிலர் செய்யும் காரியங்கள் பல அப்பாவி மக்களின் வாழ்க்கையில் எமனாக மாறுகிறது.

ரொம்ப நன்றி சிஸ்.. அருமையான விமர்சனம்.. :smile1:
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் சரண்யா மா...ரொம்ப அருமையான கதைடா👌👌👌
முதலில் எங்களுக்காக லிங்க் extn பண்ணதுக்காக மிக்க நன்றி🙏🙏🙏
Intro காதல் கதை ஹீரோ முரட்டு பீஸுனு சொன்னவுடன் ஆர்வமா உள்ளப்போய் பார்த்தா. எடுத்தவுடனே கொலை....அப்படியே கொலை நடுங்கிடுச்சி...இது தான் உங்க ஊருல காதல் கதையா🙄🙄🙄
Jokes apart...😁😁😁ரொம்ப ரொம்ப சூப்பரா திரில்லிங்கா விருவிருப்பா சஸ்பென்ஸோட மிக மிக அருமையா எழுதி இருக்கீங்க.. ஒரு மாஸ் படம் பார்த்த எபெக்ட்டு எனக்கு😘😘😘😘
அஜய் அப்பாஆஆ..என்ன ஒரு ஆளுமை...அவனோட அழகு அறிவு...கம்பீரம் னு சும்மா அசத்துறான்......என்னவோ சப்பாத்தி சுடுற மாதிரி பொசுக்கு பொசுக்குனு எல்லாரையும் சுடுரானேனு மிரள வைத்தான்....அவனுடைய இளமை காலம் அவன் அம்மாவோட ரொம்ப ரசிச்சுப் படிச்சேன்...சுஹானா ரொம்ப அற்புதமான பெண்..எவ்ளோ அழகா தன்னோட மகன டீல் பண்றாங்க....i like her very much...ஆனால் இப்படிபட்டவர்களுக்கு நல்ல துணை என்பதே கிடைக்காதா....வேணு இந்த ஆள நினைச்சாலே செம காண்ட் ஆகுது இரண்டு பெண்களுக்குமே அவர் நியாயம் செய்யவில்லை....அவரின் தவறை அஜய் சுட்டிக்காட்டும் இடம் அருமை👌👌👌👌
இந்திரா நல்ல மனம் கொண்ட ஒரு பாவப்பட்ட ஜீவன்..இவரை அஜய் தள்ளி நிறுத்தியது வருத்தம் ஆனால் அஜய் சொன்ன காரணம் ஏற்புடையதாய் இருந்தது......
நம்ம நாயகி எலினா(அந்த பேர இப்படி கூட சுருக்கி கூப்பிட முடியுமா😊😊😊)
ஒரு பிளவுஸால இந்தம்மா வாழ்க்கைல ஒரு திருப்பு முனை வந்திடுச்சே....அவளோட பயம், காதல் தவிப்பு பிடிவாதமா அவனை அடைந்தது எல்லாமே அசத்தல்.....அவன் தான் துவாரக்னு தெரிஞ்சவுடன் கொடுத்தா பாரு ஒரு ரியாக்ஷன்....ஹா ஹா பாவம் புள்ள மோகனு பயந்து போய் சுவத்துல ஒட்டிக்கிச்சு.....😊😊😊😊
மோகன் அருமையான காரெக்டர் மனதை வருடுகிறான்...என்னவோ தெரில அவன் கொலை செய்த காட்சி பார்த்த பிறகு கூட அவன் மேல எனக்கு சந்தேகம் வரல....அவன் வரும் காட்சிகள் எல்லாமே நான் மிகவும் ரசித்தேன்...பாவம் எல்லாருக்கும் அவன அண்ணணாக்கிட்டீங்களே....😤😤😤
அவனோட ரியா சத்தியமா அவள் ஒரு பிக் பாக்கெட் எக்ஸ்பெக்ட் பண்ணவேயில்ல....ஏன்னா fb la நீங்க கொடுத்த பில்டப்பு அப்படி😒😒அவளோட இறப்பு கண் கலங்க வைத்தது...
மிதுனா பெண்ணா அவள்.....அஜய்யோட ஒருவருட contract marriage தெரிந்தவுடன் செம கடுப்பு பிரியமானவளே விஜய்னு நெனப்புனு இருந்தது...அந்த அளவுக்கு மிதுனா மேல பாவமா இருந்தது.....ஆனா fb la சே னு ஆகிடுச்சி......
ரஞ்சித் சாதனா பாவம்.....
தீனா நம்பிக்கை துரோகி.....
ஷ்ரத்தா இளம் சிட்டு....துருப்புசீட்டு
கடைசில கரண் படுபாவி அதுக்கு அவன் சொன்ன காரணம் நடு மண்டைல நச்சுனு வைக்கணும் போல இருந்தது....
இன்னும் இன்னும்
எல்லார பத்தியும் சொல்லனும் போல இருக்கு...முகிலன்(நீ கொடுத்த மோதிரத்த கழட்டி போட்டதுமில்லாமல மாமா வா னு கேட்டுட்டானே இந்த ஜெய்) நாயகியோட அப்பா😡😡😡😡 அம்மா இப்படி பல.......
ஆனா நான் ஒரு கதை எழுதின மாதிரி ஆகிட போதுனு விட்டுடறேன்..😝😝😝😝
So and so வில்லன்கள் மருத்துவ துறையில் நடக்கும் சீர்கேடல்கள் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை எதிர்த்து நாயகனோட போராட்டம் இறுதி வெற்றி எல்லாமே அசத்தல்..
எனக்கு over all review கொடுக்கலாம் தெரியாது இத நீங்க கருத்தாவும் நினைச்சுக்கலாம் இல்ல காறியும் துப்பலாம் அது உங்க விருப்பம்....ஆனா இப்படி ஒரு கதை கொடுத்ததுக்கு மிக மிக நன்றி ரைட்டர்ஜி என்று சொல்லி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்..🙏🙏🙏
Kadaisiya onnu naan padikka mudiyaathu nu enna tease pannala ....naan padichitten.வவ்வவ்வவவ😁😁😁😁😁
கதையை முடிச்சிட்டிங்களா சூப்பர்..:love::love::love:

ஹாஹா கதையில் காதல் இருக்குதானே.. அப்படின்னா காதல் கதைதான்.:LOL::LOL::LOL:

அஜய் என் ஹீரோக்களில் தனி.. எனக்கு ரொம்ப ஸ்பெஷல்..

சுஹானா அற்புதமான பெண்மணி.. அவர்களின் வளர்ப்பு தவறவில்லை.. அவரின் மறுபிம்பம் தான் அஜய்.

மெல்லினா செய்யும் சிறு தவறு அவளின் வாழ்க்கையை மாற்றிவிட்டது.. அந்த வாழ்க்கையும் அவளுக்குப் பிடித்தமாதிரி அமைந்துவிட்டது.. ஹாஹா அவளும், மோகனும் வரும் சீன்லாம் சிரித்துக்கொண்டே தான் எழுதினேன்.

மோகன் எனக்குப் பிடித்த கேரக்டர்..

மிதுனா அன்பை தவறான வகையில் பெற நினைத்தால் அதற்கான தண்டனையா அவளது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.
பிரியமானவளே விஜய்யா நான் இதை யோசிக்கவே இல்லையே..:oops::oops::oops:

ஹாஹா இதுவே குட்டிக் கதை தான்.. அருமையாக விமர்சனம் பண்ணிருக்கீங்க.. எனக்குப் பிடித்திருக்கு..

ரொம்ப ரொம்ப நன்றி..:love::love::love::love::love::smile1:
 

marry

Bronze Winner
கதையை முடிச்சிட்டிங்களா சூப்பர்..:love::love::love:

ஹாஹா கதையில் காதல் இருக்குதானே.. அப்படின்னா காதல் கதைதான்.:LOL::LOL::LOL:

அஜய் என் ஹீரோக்களில் தனி.. எனக்கு ரொம்ப ஸ்பெஷல்..

சுஹானா அற்புதமான பெண்மணி.. அவர்களின் வளர்ப்பு தவறவில்லை.. அவரின் மறுபிம்பம் தான் அஜய்.

மெல்லினா செய்யும் சிறு தவறு அவளின் வாழ்க்கையை மாற்றிவிட்டது.. அந்த வாழ்க்கையும் அவளுக்குப் பிடித்தமாதிரி அமைந்துவிட்டது.. ஹாஹா அவளும், மோகனும் வரும் சீன்லாம் சிரித்துக்கொண்டே தான் எழுதினேன்.

மோகன் எனக்குப் பிடித்த கேரக்டர்..

மிதுனா அன்பை தவறான வகையில் பெற நினைத்தால் அதற்கான தண்டனையா அவளது வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.
பிரியமானவளே விஜய்யா நான் இதை யோசிக்கவே இல்லையே..:oops::oops::oops:

ஹாஹா இதுவே குட்டிக் கதை தான்.. அருமையாக விமர்சனம் பண்ணிருக்கீங்க.. எனக்குப் பிடித்திருக்கு..

ரொம்ப ரொம்ப நன்றி..:love::love::love::love::love::smile1:
Ha ha thank u pa💟💟
Piriyamaanavalay movie enakku tukkunu nyapagam vanthathu...one year agreement. Vijay character pidikkaathu...
Athey feel Ajay kitta start la feel pannen...(athukku thaan quote pannen)
Athukku appuram antha feeling pointhey, poi pochey, it's gone 😍😍😍😍😍
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha thank u pa💟💟
Piriyamaanavalay movie enakku tukkunu nyapagam vanthathu...one year agreement. Vijay character pidikkaathu...
Athey feel Ajay kitta start la feel pannen...(athukku thaan quote pannen)
Athukku appuram antha feeling pointhey, poi pochey, it's gone 😍😍😍😍😍
ஒரு நல்லவனைப் போய் திட்டிருக்கீங்க.. பாவம் அஜய்
 
Status
Not open for further replies.
Top