All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘ஆத்மராகம்’ - கருத்து திரி

Thani

Well-known member
அட அட என்னா நடிப்புடா சாமி.. ராம் நைசாய் மோதிரத்தை உருவிட்டு பின் ஆத்மிக்கு உரிமைபட்டவன் என்று அமலாக்கு சொல்லாமல் செயலில் காட்டிட்டியே😍👍
அஞ்சலியொட மறதியை தனக்கு சாதகமாக பயன்படுத்தி விட்டான் ஹஹஹஹ சீக்கிரம் அமரோட மனதிலும் இடம் பிடித்து விடுவானோ... நன்றாக இருந்தது பதிவு சிஸ்😀😍👍👍
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

"ஆத்மராகம்" - ஸ்ரீகலாவின் எழுத்தோவியம். மனங்கள் பேசும் ஓசையை குணங்கள் காட்டும் சொல்லோவியம். இது ஆத்ம பந்தத்தின் அற்புத காவியம்! - பாகம் - 2





காரியக்காரன் கள்வன்


பாசக்காரன் அன்பன்


அன்பன் அவன் கள்வனானால்


ஆத்மி அவள் களவு போவாளோ!





தகப்பன் மடி தேடிய மகள் - இவள்


தகப்பன் மதி கூடிய மங்கை!


பெற்றவன் கடன் தீர்க்க


உற்றவளாவாளோ!





தலை விழுந்தாலும்


பூ விழுந்தாலும்


சுண்டிய நாணயத்தின்


தீர்ப்புகள் தீர்வே!





பழி கொண்ட பாவம்


கரை சேர நின்றால்


வழி கண்ட சுபாவம்


கரை சேர்க்கலாமோ!





அன்பின் வலியில்


காதலை விட்டவன்


காதலின் தெளிவில்


அன்புருவாவானோ!





பழி பாவம் கடந்த


மறு வாழ்வில் இன்று


விதி போடும் கோட்டில்


மதியோடு வென்று


அன்பின் அடைக்கலம்


ஆகும் நேரம்...


ஆத்மராகத்தின்


அனுராகமே!





வாழ்த்துகள் தோழி, நன்றி

 
Top