sivanayani
விஜயமலர்
நன்றி தங்கம். நன்றி. மிக அழகான கருத்துப்பகிர்வு நருமு. ஆமாம் இப்படி ஒருத்தங்க கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். என் அக்காவின் மகளுக்கு திருமணம் பேசிட்டு என்கிட்ட வந்தாங்க. இத்தனைக்கும் அமரிக்காவில கை நிறைய சம்பாதிக்குது பயபுள்ள. தாய் கேட்டாங்களாம் பொண்ணுக்கு எவ்வளவு கொடுப்பீங்கன்னு அவர் என் கிட்ட கேட்டார். கல்யாணத்துக்கு பெண் கேட்டு வந்தவர நார் நாரா கிழிச்சு தொங்கப் போட்டு அனுப்பி விட்டுட்டேன். கை நிறைய சம்பாதிக்கிறவருக்கு எதுக்கு ஒரு பெண்ணுகிட்ட பணம் கேட்கிறாரு. பெண்ண வச்சு பாத்துக்கத் தெரியாதவனுக்கு எதுக்குத் திருமணம். யாராவது சீதனம் அப்படின்னு கேட்டுட்டு வாசல் படி ஏறாதீங்கன்னு கேட்டுட்டு அனுப்பிட்டேன். நானும் முகுந்தனும் வச்சிருக்கிற பாலிசி. பொண்ணுங்களுக்கு சீதனம் கொடுப்பதுமில்லை, என் பையனுக்கு சீதனம் வாங்குவதுமில்லை. சீதனம் எவ்வளவுன்னு கேட்டுட்டு வர்ரவனுக்கு பொண்ணு கொடுப்பதுமில்லை. அவ்வளவும்தான்.ஜெயந்தி உங்களை போன்றவர்கள் நிச்சயம் எத்தனை பேர் இருந்து விட முடியும்,பெண் பிள்ளை மீதான உங்கள் ஏக்கமும் ஆண்பிள்ளை பெற்ற கர்வமும் இல்லாமல், மருமகளை மகளாக ஏற்று கொள்ள காத்திருக்கும் உங்களின் உண்மையான அன்பும் கிடைக்க பெறுவது உதயத்தாரகை பெற்ற வரமே....
இன்று ஜெயந்தியை போல் சீதனம் வேண்டாம் என்று சொல்லும் நல்லுள்ளங்கள் நாட்டில் இருந்தால் வரதர்ச்சனை கொடுமையே இருக்காது, ஆனால் அப்படி பட்டவர்கள் சொற்பமே கான முடிகிறது .
உதயதாரகை உன்னிடம் இருந்து இப்படி ஒரு எதிர் வினையை நிச்சயம் எதிர் பார்க்கவில்லை, பிரைவசி தேவை தான், அதற்கு வித்யாசாகரின் பெற்றவர்களை விட்டுட்டு தனி குடித்தனம் செல்ல முனைவது நியாமா, இன்றைய சுயநலம் கொண்ட உலகில் உன்னை நொந்து என்ன பயன் .என்ன ஒன்னு உன் தங்கைக்கு இருக்கும் கனிவு உனக்கு இல்லாதது ஏமாற்றமாக உள்ளது.
மிகில் உனக்கு வந்த சோதனையை பாரு, இந்த மக்கு பொண்ணு நிதார்த்தினி உனக்கு உறவாம் நொம்ப கஷ்டம் தான் உன் நிலைமை .
அருமையான பதிவு மாதாஜி .