All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அவிராவின் 'நீலியின் வதம்' - கதை திரி

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீலியின் வதம் - 6

கர்மா..


கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது.
சுருக்க கூறினால், நீயூட்டனின் மூன்றாம் விதி.. இன்றைய சமுதாயத்திற்கு, கர்மா - வைப்பற்றி தெளிவாக புரிய வைக்கும் அறிவியலாகும்.
"To Every Action There is an Equal and opposite Reaction."
"ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான சம வினை உண்டு.."

சுருங்கக் கூறின் நம்ஜயன் .. வள்ளுவர் கூறிய குறளில் எளிதில் புரிந்துக் கொள்ளலாம்.

" பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் "
தமக்கின்னா
பிற்பகல் தாமே வருமேl...
.. குறள் 319.

நமது இந்து சாஸ்திரத்தில் கர்மாவை மூன்று வகையாக பகுக்கப்பட்டு உள்ளது. அவை.,

சஞ்சித கர்மா - தாய் தந்தையரிடம் இருந்து அவர்களின் முன்னோர்களின் கர்மாவும் சேர்ந்து, பிறக்கும் பொழுதே பதிவுகளாக (DNA) வருவது.

ப்ராரத்தக் கர்மா - நாம் நமது 12 வயது முதல் செய்யும் செயல்களின் பதிவுகள்.

ஆகாம்ய கர்மா - மேற்கூறிய இரண்டு கர்மாக்களும், நமது ஆன்மாவிற்கு இச்சை ஊட்டி அதாவது தூண்டப்பட்டு செய்யும் செயல்களின் பதிவு. நல்ல குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு தீவிரவாதத்தில் இச்சைதூண்டி அதை நோக்கி சிந்திக்க வைப்பது. ஒரு பெண்/ஆண் மீது மிகுந்த பற்று காலத்தால் ஏற்ப்பட்டு அதனால் அவன்/அவள் வாழ்கையே தடம் புரள்வது. ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஒருவனுக்கு ஒரு அறிவியலாளரின் நட்பின் மேல் இச்சையைத் தூண்டி அவனை உயந்த நிலைக்கு இட்டுச் செல்வது. எல்லாமே ... கர்மா.. வின் பலன் தான் ..
இதன் வழி நன்மைகளும், தீமைகளும் .. கிடைக்கப்பட்டு, அந்த ஆத்மா" .. நிகழ் ஜென்மத்தில் வாழ்கிறது.முடிவாக ..நாம் செய்யும் தீமைகளை அந்த ஜென்மத்திலோ அல்லது எதிர்வரும் ஜென்மத்திலோ கட்டாயம் தீர்க்க பட வேண்டிய கர்மா " ஆகும் .. இதிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது.



பூஜையை முடித்து வெளியே வந்த கார்த்திக் :நண்பர்கள் இவ்வளவு நேரம் அங்கேயே தன் சொல்லுக்காக காத்து இருந்ததற்காக மனம் மகிழ்ச்சி அடைய ., அதன் விளைவாக தோன்றிய முறுவலுடனே,நண்பர்களின் முன் சென்று, தன் கையிலிருந்த "ரட்சையை " (சாமி கயிறு ) வினய்யின் கையில் கட்டியவன், அடுத்த தாக , கோயிலுக்கு செல்வது, விபூதி பூசுவது.. இது போல் எல்லாம் விரும்பாதவன்.. தனக்காக கோயிலுக்கு வந்ததே பெரிது..அதிலும் இதையும் ஏற்பானோ ஆரி?.. என கார்த்திக் ஆரியின் முகம் பார்க்க.. என்னே'. அதிசயம். புன்னகை முகமாக ஆரி.. தன் கரத்தை முன்னவனிடம் நீட்டினான்.. கயிறு கட்டுவதற்காக ..

அதில், வியந்து, தெளிந்த கார்த்திக் .. ஆரியன் கையைப் பற்றுவதற்குள், அவன் கையிலிருந்த; ரட்சை பறிக்கப்பட்டது.

தீடிரென நடந்த இந்நிகழ்வால் , வினய்யும்; கார்த்திக் - யும் யாரென பறித்த வரை பார்க்க..
ஆரியோ, நொடியில் தோன்றிய சினத்தில் பறித்த வரை பார்க்க..

அவர்கள் முன் ..
கையில் ஊற்றுக் கோலைப் பிடித்தப்படி அவருக்கும்;
ேகாலுக்கும் வித்தியாசம் தெரியாத ப்ப டி., மேல் ஆடையின்றி; இடுப்பில் வெண் நிறஆடை அணிந்து, அதே நிறத்தில் வயிறு வரை நீண்ட தாடியுடனும்;இடுப்பு வரை நீண்ட ஜடாமுடியுடனும் ..
ெநற்றியில் திருநீறு பட்டை இட்டு., ஆயிரம் சூரியனின் வெப்பத்தை கண்களில் உமிழ்ந்தவாறு.."ஆரியை " முறைத்துக் கொண்டிருந்தார்..

அவரின் கண்களின் தீட்சண்ய ஒளியை; பார்க்க முடியாத ஆரி!.. சற்றே கண்களை தாழ்த்தி,அவரின் தாடியைப் பார்த்து தீட்டுவதற்கு வாயை திறக்க ,, முயற்சிக்க மட்டுமே முடிந்தது ..

" பொல்லாத உலகம்டா.. போதைகள் பல நிறைந்த உலகம்டா.. போதைக்குள் வீழ்ந்த புழுவையாய், மானிடர்கள் நித்தம் பலதீது செய்து ; பிறவிகள் பல எடுத்து ; தான் செய்த கர்மாவை தீர்க்க முயலுதடா..
இதிலே உலகம் சூழலுதடா..
அழிப்பவனின் நாமம் கொண்டவனின்.
" த்ருத அத்ருத கர்மா, வும் ..
உன்னால் விளைந்த " த்ருத கர்மா - வும் ... பகை முடிக்க காத்திருக்குதுடா... இதில் நீ
திட்டங்கள் பல தீட்டி, வீதியை மதியால் வெல்வாயோ.. இல்லை காலனிடம் வீழ்ந்து போவாயோ?... எம்பெருமான்
ஈசனையன்றி யாருக்கு தெரியும் "...

கூறி முடித்தவர, கார்த்தியிடம்... தன் கையை நீட்ட..
மந்திரத்துக்கு கட்டுப்பட்டவன் போல் ,அவர் உள்ளங்கையிலிருந்த கயிற்றை எடுத்துக் கொண்டான் கார்த்திக் ..

இவர் பேசியது எந்த மொழியாக இருக்கும் என அந்நிலையிலும் ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்த வினய்யின் புறம் திரும்பியவர் ..
" ".,, சிலவற்றை கூற

இம்முறை உண்மையாகவே' அதிர்ந்து நின்றான் வினய் ..

கடைசியாக.....ஆரியை ஆழ்ந்து பார்த்து.. மூச்சுப் பயிற்சி செய்வதுப் போல் ., மூக்கில் விரல்களை வைத்து, மண்ணையும், பின் வானத்தையும் பார்த்தவர் .. இறுதியாக நெஞ்சில் கரம் வைத்து ஆரியிடம் சைகையில் காண்பித்து விட்டு .. அருகே இருந்த காட்டிற்குள்
செல்லவராபித்தார் அம்முதியவர் ..

யாரோ! மனநிலை பிறழ்ந்தவர் .... ஏது ஏதோ .. உளறி விட்டு செல்கிறார்.. என எண்ணிய ஆரி.. கார்த்தியிடம் தன் கரத்தை நீட்டினான்.

செம்பில் பொறித்த ..உடுக்கையுடன் கூடிய தீரிசூலம், நடுவில் இருக்க, அதன் இருபுறமும் கருப்பு கயிற்றால் , ஜடைப் போல் பின்னப்பட்டு கழுத்தில்
போடும் வண்ணம் மூடிச்சிடப்பட்டு இருந்ததை ,
கார்த்திக் ,ஆரியின் கழுத்தில் எம்பி ., அணிவித்தான்..

அவனின் மனமோ பெரியவரின் கூற்றை ஆராய..

வினய்யோ! .. ஏதோ வித்தை தெரிந்த பெரிசு போல,, இவரு சொன்னதில் பாதி புரியலை., மீதி உண்மையா ?. பொய்யா?... என்று தெரியலையே! மேலும்,
இவன் கிட்ட ... ரிஸ்க் வேண்டாம்னு சொன்னா
"எனக்கு ஏதாவது ஆனா, உன் தங்கச்சி பாதிக்கப்படுவானு..தான் பயப்படுறீயா.. என்னோட நட்புக்கு மதிப்பில்லையா?என்று கோபபடுவான். எதுக்கு கம்மூசன் (Confusion).. எனக்கு ஆரி முக்கியம்.. ஆரி எவ்வழியோ , அடியேன் அவ்வழி.. என மனதில் நினைத்தவன் நீண்ட பெருமூச்சு விட,,

"டேய் யுகாண்டா எருமை " .. கூப்பிட, கூப்பிட என்னடா?... நின்னுக்கிட்டே கனவு.".. இவ்வளவு நேரம் வினய்யை கூப்பிட்ட கடுப்பில் கத்தினான் கார்த்திக் .

அதில், தன்னிலை அடைந்த வினய், தன்னை பொதுவில் யுகாண் டா எருமை என்றதில் வீருக்கொண்டு ; கார்த்திக் யிடம் சண்டைக்கு செல்ல தயாராக ,.

கை முஷ்டியை மடக்கி , கார்த்திக்கின் மூக்கில் "வினய் குத்த வர ..

கார்த்திக் - யும் X வடிவில் கரங்களை மடக்கி, கால்களை அகட்டி நின்று தன்னை தற்காத்துக் கொள்ளுமாறு, நிற்க..

இதைப் பார்த்த அருகில் இருந்தோர்.. பயங்கரமாக அடிதடி நடப்பதை லைவ்வாக பார்ப்பதற்கு, அவர்களின் அருகே நெருங்கி வர ஆரம்பித்தனர்.

இவற்றை எல்லாம் பார்த்து கோவத்தின் உச்சிக்கு சென்ற ஆரி, "டேய் அடங்குங்கடா.. என கர்ஜிக்க ... உடனே
நண்பர்கள் இருவரும்; மாறி, மாறி; இருவரின் தோளிலும்;கையைப் போட்டு அணைத்துக் கொண்டார்கள் ..

இச்செயலில்சுற்றி இருந்தோர் இவர்களின் சண்டையை பார்க்க முடியாத கோவத்தில், தூ வென , துப்பும் பார்வையை இருவரை நோக்கி வீசிவிட்டு விலகி சென்றார்கள்..

வினய் கெட் இன் த கார் .. என ஆரி கூறியதும், கதவை திறந்து, காரின்முன்பக்கமாக; அமர்த்தவன்; கார்த்திக்கை முதல் நாள் பள்ளி செல்லும் குழந்தைப் போல் பாவமாக பார்த்து விட்டு ; கதவை மூடிக்கொண்டான்

கார்த்திக் .. அம்மாவை அடிக்கடி வீட்டுக்கு போய் பார்த்துக்க; என்னோட பிஸினஸ் எல்லாத்தையும் மதி பார்த்துப்பான்.. உ னக்கு
ஏதாவது என் கிட்ட ., பேசணும்னா.. என்னோட புது நம்பருக்கு கால் பண்ணு; இந்த நம்பர் உனக்கும் ;மதிக்கும் மட்டும் தான் தெரியும்.. எக்காரணம் கொண்டு அம்மா கிட்ட ; இந்த நம்பரை கொடுத்து டாதே... பாய். டேக் கேர் ... எனக் கூறி நண்பனின் தோள் அனைத்து விடுவித்தவன்., தனது காரில் அமர்த்து, காரை இயக்க ஆரம்பித்தான்.
இவர்களோடு விதியும் , இவர்கள் வாழ்வில் விளையாட .. இவர்களோடு காரில் பயணித்தது.
வதம் தொடரும்.
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர் சோல்ஸ்..
வதம் - அத்தியாயம் பகுதி - 6 பதிந்து விட்டேன். படித்து விட்டு நிறை | குறைகளை கூறுமாறு என் அன்பு சோல்கள் இடம் கேட்டுக்கொள்கிறேன். போனud-க்கு லைக்ஸ், Comment போட்ட இதயங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... கர்மா va pathi சொன்னது semma.... அந்த சாமியார் maari உள்ளவரு enna sonnaaru.... Vinay kita vera எதோ sonnaaru போல.... Kalambitaanga.... Enna aaga pooguthoo...
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் டியர் சோல்ஸ்..
வதம் - அத்தியாயம் பகுதி - 6 பதிந்து விட்டேன். படித்து விட்டு நிறை | குறைகளை கூறுமாறு எ
மிகவும் நன்றி சகோ
 

Aviraa

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... கர்மா va pathi சொன்னது semma.... அந்த சாமியார் maari உள்ளவரு enna sonnaaru.... Vinay kita vera எதோ sonnaaru போல.... Kalambitaanga.... Enna aaga pooguthoo...
மிகவும் நன்றி சகோ., Nxt epi - ல சாமியாரு சொன்னது வரும்.
 
Top