வதம் - 8
'டேய் மாமா!,, காரை விட்டு கீழே இறங்கி, போன் பேசுவது போல; சுற்றியும் வேடிக்கைப் பார்த்துட்டு வா, 'என வினய்யை காரிலிருந்து வெளியே தள்ளி விட்டான் ஆரி..
காரிலிருந்து வெளியேறிய வினய், அடுத்த ஐந்தாவது நொடி ..பரப்பரப்பாக , காரினுள் அமர்ந்து, கதவைச்சாத்தினான்.
'டேய் மச்சி, யாருடா அந்த தடியனுங்க;, நம்மளுக்கு சற்றுத் தூரத்தில் , டயரை மாத்துவதுப் போல, எதுக்காக?...., நம்மளை
வேவு ., பார்க்கிறாங்க..? குழப்பமாக
ஆரியிடம் வினவினான் , வினய் ..
'நாம ; இப்ப போறது கிராமம்டா., நமக்கே சரியா!, சாப்பாடு கிடைக்குமோ?...இல்லையோ!'...
ஆரி தான் கேட்ட கேள்விக்கு, சம்பந்தமே இல்லாமல் , பேசவும் ., அதில் கடுப்பாகி வினய்,
"அதுக்கு?".,, என ஆரியிடம் கேட்டிருந்தான்.
'உம்.. அதுக்கு '.,,, என ராகம் இழுத்துக் கொண்டே, காரை , ஸ்டார்ட் செய்த ஆரி, எடுத்ததும் அதி வேகத்தில் காரை இயக்க, பின்னாடி வேவு பார்த்தவர்களும், அவசரமாக காரில் அமர்ந்து ..,,எங்கே? ...
அவர்களை தவற விட்டு விடுவோமோ .. எனக் கருதி.. அந்த கேங் கின் தலைவன் ,, தங்களின் காரையும், முன்னவனுக்கு எடுடாக ., செலுத்த
சொல்ல.. அவ்வண்டியின், வாகன ஓட்டியும் தனது காரின் வேகத்தினை அதிகப்படுத்தினான்..
இதை தான் எதிர்பார்த்தேன் என ஆரி, மெல்லிய சிரிப்பை உதிர்த்து விட்டு,
' வலது கையால், ஸ்டீரியங்கை இயங்கியப்படி, இடது கையால்: வினய்யின் சீட்டை பின் நோக்கி, தள்ளி விட்டு, வினய்யின் .மார்பின் மீது கரத்தை வைத்து அழுத்தி... தனது காரின் வேகத்தை சடாரென்று குறைத்த நொடி ...
"கீரிச்". .. என்ற பெரும் ஓசையுடன் , இரு கார்களும் உரச ; பின்னவர்களின் கார் ... பாதையை விட்டு, மண் ரோட்டில் நிலைதடுமாறி நின்றது.
பின்னவர்களின் காருக்கு சற்று முன் சென்று, ஆரியின் கார், பாதையோரம் இருந்த மரத்தில் .. நூல் இடைவெளியில் மரத்தில் மோதாமல் நின்றது ஆரியின் கைவண்ணத்தில்.
டாடா சுமோவில் இருந்தவர்கள், கார்கள் உரசிய வேகத்தில், முன்பக்கம் இடித்தும், மேற் கொண்டு கார் ; வேறெதிலும் ே மாததால்,
சிறு, சிறு காயங்களோடு., ஒருவர் பின் ஒருவராக காரிலிருந்து வெளியேறினர்.
என்ன?; டிரைவருக்கு தான் மூக்கில், லைட்டாக தக்காளி சாஸ்; எட்டிப் பார்த்தது ..
தீடிரென்று ஏற்பட்ட கார் உரசலில் ஆரியின் கார் ,, 'ஏர் பலூனை" ..வெளியிட, அது முகத்தில் மோதிய வேகத்தில் நிலை குலையாமல்;தன் காரை சரியாக; மரத்தின் மீது மோதாமல் நிறுத்தியவன், காரின் திறப்புகளை அன்லாக் செய்து வெளியே வந்தவன், மறுபுறம் காரை சுற்றி வந்து, வினய்யின் புற கதவைத் திறந்து,
"கமான் வினய், சீக்கிரம் வெளியே வா " எனக் கூறிக் கொண்டே ; . வினய்யின் கைப்பற்றி வெளியே இழுந்தான் ஆரி..
நடந்த விபத்தால், மந்திரித்து விட்டவன் போல், காரிலிருந்து வெளியே வந்த வினய், சற்று தள்ளியிருந்த ... சுமோவைப் பார்க்க ., அதை சுற்றி மக்கள் ;கட்டெறும்பாக சூழ்ந்திருந்தனர் ..
தங்களை நோக்கியும் பல எறும்புகள் படையெடுக்க, ஆரி; அவனின் கைப்பற்றி சாலைக்கு இழுத்து வந்தவன்; பின்னாடி திரும்பி ... தன் கார் அருகே முளைத்த புதியவனிடம் ,, அடிப்பட்டவர்களை கவனித்துக் கொள்ளுமாறு , கண் ஜாடைக் காட்டி
விட்டு, சாலையைக் கடந்து, சேலம் செல்லும் பாதையில், சற்று தூரம் நடந்துக் கொண்டே .. . விபத்தால் ஏற்பட்ட ;
ட்ராபிக்கில், வாகனங்கள் ஊரந்து செல்ல,, அதில் ஆடிஜ8; வெள்ளை நிற காரைக் கண்டு .,அதன் அருகே செல்ல,, அவனுக்காகவே காத்திருந்தது போல் அதன் டிரைவர், காரிலிருந்து இறங்கி ஆரிக்கு தலையசைத்து விட்டு, சென்றுவிட,
வினய்யை முன்புறம் கதவைத் திறந்து அமர வைத்து விட்டு, டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை, சேலத்தை நோக்கி இயக்க ஆரம்பித்தான் ஆரி....
இவ்வளவு நேரம் சாவி கொடுத்த பொம்மைப் போல் ஆரிக்கு கட்டுபட்ட
வினய், 'நடந்து முடிந்த நிகழ்வுகளை மனதில், ஓட்டிப் பார்த்தவன், தங்களை பாலோ பண்ணுபவர்களை தவிர்ப்பதற்காகவே.,
இந்த விபத்தை வேண்டுமென்றே ஆரி ஏற்படுத்தி இருப்பது புரிய ..
அவனை நோக்கி..
" எனக்கு சாவு பயத்தை காட்டிட்ட இல்ல. பரமா?.." வினய் குரல் தான் ஜெய்
போல் உயிருக்கு பயந்ததுப் போல் ஒலிக்க ., அவன் கண்களோ, தன்னை ஆரி பாதுகாப்பாக அணைந்து பிடித்ததில் உருகி கசிந்திருந்தது..
அதைக் கண்டுக்கொண்ட ; ஆரி;
" இந்த ரணகளத்துலையும், உனக்கு சிட்சுவேஷ்னல் டையலாக்
கேக்குதோ .. காலையில் இருந்து பாஸ்ட்டா டிரைவ், பண்ணுறேனு ;பயப்படுறீயேனு, பாவம் பார்த்து லைட்டா .. காரை இடிச்சா .... நக்கலு.... உம்". .. என ஆரி சிரித்துக் கொண்டே கேட்டான்..
"என்னாது லைட்டா ;இடிச்சதுக்கே., எமன் கண் முன்னாடி ,, குத்து டேன்ஸ் ஆடிட்டு போயிட்டான். இதுல நீ வேகமாக இடிச்சு இருந்தா.. ஆத்தாடி நானும் எமன் கூட சேர்ந்து ஆடிட்டு இருந்திட்டுப் பேன்.. நல்ல வேளை லைட்டா இடிச்சு.. என் உயிரை காப்பாத்திட்டா டா .. என நினைத்தவன் மேலும் .,
ஆரி அழுத்தமாக "உம்".....மை உச்சரித்ததிலேயே .. உனக்கு எந்த தீங்கும் வரவிட மாட்டேன் என்ற அர்த்ததை புரிந்துக் கொண்டு , ஆரி தனக்கு நட்பாக கிடைத்ததில் மனம் விம்ப,,
ஆரியின் தோளை அணைந்தான் வினய் ..
மேலும், தன் மனதில் தோன்றிய சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள.. ஆரியிடம் கேள்வி ேகட்க முனைந்தான் வினய் ..
இவனுங்க பாலோ பண்றதை தெரிந்து தான் அவனுங்களை டைவர்ட் பண்ண, பெங்களுர்க்கு போற மாதிரி போயி ; ஆக்ஸிடெண்ட் பண்ணி, யாரும் பார்க்காத போது, திரும்பவும் வேரொருத்தர் காரு ல சேலம் வர்றோம்.. கரெக்ட்டா?.. ..
" இவ்வளவு லேட்டா பல்பு எரியுதுடா.. உனக்கு ".. மிதவேகத்தில் காரை இயங்கியபடியே ஆரி, இது புரிய இவ்வளவு ேநரமா என்பது போல் கேட்டு , வினய்யை வாரி விட்டான்.
அதற்கு வினய் ....'அம் ஏ அட்டு பாய்., அப்படி தான் இருப்பேன்.. பி .சிரியஸ்,, யார் சொல்லி?, அவங்க நம்மளை பாலோ பண்றாங்க',, அண்ட் ரீஸன் என்ன?..
இவ்வளவு நேரம் இருந்த இளக்கம் மாறி உடல் இறுக., பல்லைக் கடித்தவாறு ஆரி, "சம் கன்பூயூசன் அபௌட் த கல்பிரட் .. சூன் வில் பைண்ட் ஹிம், யூ நோ ெ வாரி ". என மறுமொழி கூறியிருந்தான்
கோவத்தால் தாடை இறுக, கண்கள் பளபளக்க, நண்பன் கூறியதிலிருந்தே, அந்த
கல்பிரிட்டை, கண்டுபிடிச்சா செத்தான் அவன் என்பது போல். இருக்க.. அவனை திசை திருப்ப ...
"வேவு பார்த்தவனுகளுக்கு, பால், பிரட், நேரா நேரத்துக்கு சாப்பாடு .. கவர்மெண்ட் ஆஸ்பிட்டலில் ஏற்பாடு பண்ணிட்ட... உன் உயிர் நண்பன் எனக்கு .. சாப்பாடு ?".. என வினய் வயிற்றை தடவி கேட்டான்..
அவன் செய்கையில் சிரித்த ஆரி...
"உனக்கு பிரைவேட் , ஆஸ்பிட்டலில்.. ஏசி ரும் ., ப்ளஸ்.. ஸ்டார் ஓட்டல் சூப்.. ரெடி பண்ணாட்டா.. மாம்ஸ் ...
வேண்டாம்டா பாவி,... நோ சோறு, நோ கேட்டிங், (கேட்பது) எனக்கு உயிர் முக்கியம். சைட்டிங் முக்கியம், லோ .மீ பாவம்.." தலையாட்டி பாவமாக உரைத்தான் வினய் ..
"அடச்சீ ; ரொம்ப கேவலமாக இருக்கு, அடங்குடா.., பின்னாடி சாப்பாடு, இருக்கு எடுத்து சாப்பிடு என்று விட்டு,குகிள் டூட் மேப்பை ஆராய ஆரம்பித்தான் ஆரி..
உணவினை பிரித்து உண்ண ஆரம்பித்த வினய், ஆரியும் பசியோடு இருப்பான்; என எண்ணி அவனுக்கும் ஊட்ட.. முதலில் மறுத்தவன்; பிறகு இரண்டு வாய் உணவு வாங்கிக் கொள்ள ,, ஆரியின் கண் முன்னே; இதே போன்ற நிகழ்வும் , அதைத் தொடர்ந்து சில காட்சிகளும் ஓட, ஒரு நொடி அனைத்தும் மறந்து, கண்கள் இருட்டாக, . தலையை ஒரு கையால் பிடித்தவன்,அச் சூழலிலும் , காரை ஓரமாக நிறுத்தியிருந்தான்.
நண்பனின் மாற்றத்தை பதற்றத்தோடு பார்த்த வினய்யின், காதில், காலை அந்த பெரியவர் கூறிய,
"எப்பொழுது புனிதமலைக்கு ; நீங்கள் பிரவேசிக்கிறீர்களோ. அப்பொழுது முதல் உன் நண்பனுக்கு, போன ஜென்ம நிகழ்வுகள், வரத் தொடங்கும், சில மறக்கும் சில குழப்பும் ..., அப்போது நீ , அவனை எந்தவொரு கேள்வியும் கேட்காமல், இந்த ஜென்மத்திற்கு கொண்டு வர வேண்டும் .. இல்லையெனில் மூளை குழம்பி .. பித்து பிடித்து திரிவான் டா .உன் நண்பன்.. மீண்டும் ஒரு ஜென்மம் வேண்டுமடா.. பாவம் போக்க,..
கால தேவனை ஏமாற்ற ..
முடியும் மென வந்துள்ளான் நரன் ஒருவன்... முடியுமாடா?... மானிடனான ?....உங்களால?..." என்ற குரல் இப்போது கூறுவது போல் ஒலிக்க ., .
வினய் .தலையசைத்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன், தான் இனி அவனை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்; என முடிவு எடுத்து விட்டு ..
நண்பனைப் பார்க்க, அவன்..
"தலையைத் தாக்கி அமர்ந்திருந்தவனிடம் .., பருக தண்ணீர் பாட்டிலை நீட்டி.. டேய் மச்சி, இந்தாடா தண்ணீ குடிச்சுட்டு ; இந்தப் பக்கம் வா, இனி நான் டிரைவ் பண்றேன்.. என ஆரியை உலுக்கினான் வினய்..
"ஆஹாங்' என நடப்பிற்கு வந்த ஆரி, 'என்னவென்பது போல் திருதிருத் தான் .. .. "
" தன் நண்பன், தான் சொல்வதை கவனிக்காமல், இங்கு வந்ததால் மனக்குழப்பத்தில் உள்ளான்; அதை தான் அந்தப் பெரியவர் தன்னிடம் குறிப்பாக கூறினார் என்பதை .. புரிந்துக் கொண்டவன். ...
"ஆரி, நான் டிரைவ் பண்றேன், இந்தப் பக்கம் வா" என அழைத்தான் நண்பனை ..
வினய்யின் கையிலிருந்த தண்ணீரை வாங்கிக் கொண்டு, காரிலிருந்து வெளியேறி, ஒரமாகச் சென்று, முகத்தை கழுவி விட்டு, காரிலில் சாய்ந்து அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான்.. ஆரி..
ஓட்டுனர் இருக்கைக்கு இடம் மாற , காரை சுற்றி வந்த வினய், எதேச்சையாக நிமிர்த்துப் பார்க்க..
சற்று தொலைவில், "அண்ணாமலையார் கோபுரம் "தெரிந்தது.. அக் கோபுரத்தைப் பார்த்ததும் ,, அவனை மீறி கைகளை
கூப்பி., "அப்பா!
அண்ணாமலையாரே!.. எதற்காக இங்க வந்தோம்; என்ன? காரணம் என்று அறியோம் .. ஏதோ?.. ஒன்று எங்களை இங்கு இழுத்து வந்துள்ளது என்பதை மட்டும் அறியேன். இதிலிருந்து என் நண்பனுக்கு எந்த பாதிப்பும் வராமல் நீதான் காக்க வேண்டும் .. அப்பா !
அப்படி இதிலிருந்து எந்த கஷ்டமும் வராமல் இருந்தால் ,, ஒரு வருடம் 'கிரிவலம்' ஆரியை கூட்டி வருகிறேன்"... என மனதார வேண்டிக் கொண்டான் வினய் ..
அவர்களுடன் இருந்த விதியோ, "நான் இருக்கும் போது அதை அவ்வளவு சீக்கிரம் செயல்படுத்த விடுவேனா " ... என சிரிக்க ஆரம்பித்தது.
. ... வதம் தொடரும்....