பாப்பா பாட்டு...!
பாப்பா பாட்டு பாடிய -
பாரதம் கண்ட முண்டாசுக் கவிஞனே...!
பாப்பாவின் பாட்டு
பாரெல்லாம் கேட்டு
பாடித்திரிந்த கூட்டினிலே....
பாசங்கள் உண்டு
பந்தங்கள் உண்டு
பாடித்திரிந்த நாட்டினிலே...!
மழலை சிரிப்பில்
மயக்கங்கள் கொண்டு
மயங்கி நின்ற காலம் அன்று..!
மழலை கூட
விலையாய் போன
பரிதாபமான காலம் இன்று..!
குழந்தை வடிவில்
தெய்வங்கள் கண்ட
தெய்வத் திரு நாட்டினிலே...
குழந்தை சிரிப்பில்
இன்பங்கள் கண்ட
இனிய பரத கண்டத்திலே...
குழந்தை கூட
சதையாய்ப் போன
பரிதாபக் கோலம் ஏனடியோ...?
கிள்ளை மொழியில் உற்சாகமாய்,
பிள்ளைத் தமிழில் உத்வேகமாய்,
அன்ன நடையில் ஓய்யாரமாய்,
சின்னச் சிரிப்பில் சந்தோசமாய்,
கூடு தோறும் கூடி நின்று
குலுங்கிச் சிரித்த குடும்பத்தில்
குன்றென நிமிர்ந்தது குலக் கொழுந்து!
பதின் வயதின் பழக்கமெல்லாம்
பருவம் பார்த்து பகிர்ந்தளித்தால்
பக்குவமாய் பல விஷயம்
பாருக்குள்ளே பரவுமன்றோ...?
பாசம் என்றால் என்னவென்று
நேசம் என்றால் என்னவென்று
புனிதம் என்றால் என்னவென்று
மனிதம் என்றால் என்னவென்று
கண்ணியங்கள் காட்டி விட்டால்
புண்ணியங்கள் மீட்டி வந்து
மனிதம் எல்லாம் வாழும் வென்றே!
காலம் இது கலிகாலம்
கோலம் அது கொடுங்கோலம்
காணக் காண நெஞ்சமெல்லாம்
கதறிக் கண்ணீர் வடிக்குதம்மா....!
உத்தமராய் வாழ்வதற்கு
உன்மத்தம் வேண்டுமம்மா...!
உன்மத்தம் அடைவதற்கு
உத்வேகம் வேண்டுமம்மா...!
உத்வேகம் கொடுப்பதற்கு
உன் கைகள் வேண்டுமம்மா...!
அம்மா....!
உன் கைகள் வேண்டும்..!ஆம்...,
தாயே.....!
உன் கை கொடு தாயே...!
உன் மெய் கொடு தாயே...!
உய்வெய்திடும் சேயே...!
உயர்வாகிடும் நாடே...!
பாருக்குள்ளே நல்ல நாடு
எங்கள் பாரத நாடு!
பாரதி பாட்டு,
பாரெல்லாம் கேட்டு!
பரவட்டும் மெட்டு,
மலரட்டும் மொட்டு!
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்! நன்றி