All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 10

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
10 கலாப காதலா

இரவு வரை நீடித்த இவர்களது பேச்சு விடிந்தும் நீட்டித்தது என்ன பேசுகிறோம் எதற்கு பேசுகிறோம் என எதுமே தெரியாமல் பேசி கொண்டே இருந்தனர் இருவருமே அந்த அழகாக நிகழ்வில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர்...

முக்கால்வாசி நேரம் சித் பூர்ணியை பேச சொல்லி அவளது பேச்சை ரசித்தான். இப்படி பேசி கொண்டே இருக்கும் போது சட்டென உள்ளே வந்த சுமதி.
" ஏய் என்னடி பண்ணிட்டு இருக்க யாருகிட்ட ஃபோன் பேசிட்டு இருக்க "
" ஆங் மா அது வந்து பிரியா மா சொன்னேன்ல பிரண்ட் காலேஜ் வரலயில்ல அதான் என்னாச்சுனு கேட்டுட்டு இருந்தேன் "
" சீக்கிரமா பேசிட்டு வா பாவம் டி பத்மா அக்கா பொண்ணுக்கு சீக்கிரமா நிச்சியம் வச்சுட்டு படதபாடு பட்டுட்டு இருக்கு இதுலா அந்த நந்தினி பொண்ணு வேற சம்மதிக்காம படுத்திட்டு இருக்கா போ நீ போய் அவ கூட இரு "
" ஆங் சரி மா "
" அப்புறம் இதுல உன் துணிலா இருக்கு ஊற வைச்சுட்டு போ "
" மா இப்ப நான் வேல செய்வா கிளம்பி பங்ஷனுக்கு போகவா "
" சரிடி ரொம்ப பண்ணாத ஊற மட்டும் வைச்சுட்டு போவியா நான் நைட்டு துவைச்சு போட்டுறன் சரியா தின்னுட்டு தின்னுட்டு தான தூங்குற செய் டி"
" உன்னைய "

அதுவரை அவன் காலில் இருந்த நினைப்பு வர அவசர அவசரமாக தாயை அனுப்பி வைத்தவள்
" ஹலோ "
என்றாள்..

எதிர்முனையில் இந்த சத்தத்தை எல்லாம் கேட்டவன் வாயை மூடி சிரிக்க..
அவனின் சிரிப்பை அறிந்த பூர்ணி
" இப்ப எதுக்கு சிரிக்குறிங்க "
" ஒன்னும் இல்ல சும்மா தான் "
" என்ன இப்படி சிரிக்குறிங்க உங்க அம்மாலா உங்கள திட்டவே மாட்டாங்களா "

சற்று நேரம் அமைதி ஆனவன்
" அப்படி யாரவது இருந்த தானே திட்டுறதுக்கு "
" சாரிங்க தெரியாம கேட்டுடேன் சாரி "
" சரி விடு என்ன பண்ணுற "
" ஐய்யோ போங்க உங்கிட்ட பேசுனா எல்லாத்தையும் மறந்துடுறேன் நான் போய் கிளம்புறேன் "
" ம்ம் பாய் "

கிளம்பி நந்தினி வீட்டிற்கு சென்றவளை கண்ட பத்மா ( நந்தினி அம்மா )
" வாடா பூர்ணி நல்லாருக்கியா எப்படா ஊருலேந்து வந்த "
" நான் நேத்து வந்தேன் அத்த நான் நல்லா இருக்கேன் நீங்க நல்லா இருக்கிங்களா "
" எங்க டா உனக்கு தான் எல்லாம் தெரியுமே இந்த நந்தினி பொண்ணு பாடா படுத்துறா அவங்க அப்பாவையும் சமாளிச்சுட்டு இவளையும் சமாளிக்க முடியல டா "
" சரி விடுங்க அத்த எல்லாம் நல்ல படியா நடக்கும் நான் போய் நந்தினிய பாக்குறேன் "
" சரி டா நீ பாத்துக்கோ நான் இதோ வந்துடுறேன் "

நந்தினின் அறைக்கு சென்றவள் அவளை பாக்க ஏதோ யோசனையிலே இருந்தாள்
" ஏய் என்னடி வந்தது கூட தெரியாம ஏதோ யோசனையிலே இருக்க "
"வா பூர்ணி எப்போ வந்த "
" நான் வந்தது இருக்கட்டும் நிச்சயம் வேலலா பெரிசா நடக்குது மேடம் என்கிட்ட சொலாவே இல்ல "
" ம்ச்ச் பூர்ணி நீ வேற கடுப்ப கிளப்பாத நானே செம டென்ஷனா இருக்கேன் "
" ஏய் அத்த மாமா எது பண்ணாலும் நல்லது தான் டி பண்ணுவாங்க "

அவளது பேச்சினை காதில் வாங்காமல் வேறு ஒரு சிந்தினையிலே இருந்தாள் நந்தினி..

மாலை நேரம் சந்தன நிற தாவணி பாவாடை உடுத்தி தலை நிறைய மல்லி பூ வைத்து ஏற்ற அணிகலன்கள் பூட்டி நெற்றியில் சிறிய பொட்டு அதன் மேலே சிறிய கோடு விபூதி இட்டு அழகு ஓவியமாக வந்தாள் பூர்ணிமா..

அவளது அழகில் சொக்கிய கோபி அவளையே பார்த்து கொண்டு இருந்தான்..

" டேய் அருண் "
" என்னடி "
" ஒரு போட்டோ எடுதா இந்தா "
என தனது போனை கொடுக்க
" வேற வேல இல்ல பாரு எங்களுக்கு போடி "
" டேய் டேய் "
அவளது கத்தலை காதில் வாங்காமல் அவன் போக அங்கு வந்த கோபி
" கொடு பூர்ணி நான் எடுக்குறேன் "

சந்தோஷமா அவனிடம் கொடுத்தவள் விதவிதமாக போஸ் கொடுத்து தனது போனில் போடோ எடுத்து கொண்டாள்..
இருவரும் அருகருகே நின்று போனில் எடுத்த போட்டோவை பார்த்து கொண்டு இருக்க அங்கு வந்த முத்துராமன் இருவரையும் கண்டு விட்டு திருப்தியுடன் சென்றார்...

" எல்லா போட்டோவும் சூப்பரா இருக்கு தேங்க்ஸ் "
" நமக்குள்ள என்ன "
என பேச வந்தவனின் பேச்சினை காதில் வாங்காமல் சென்றுவிட்டாள்...

" என்ன இவ ரொம்ப நேரம் ஆச்சு கால் பண்ணுறனு சொன்னா இன்னும்
பண்ணல "
என வாட்ஸ்அப் ஓபன் பண்ணி பார்க்க அதில் தாவணி போட்டு எடுத்த போட்டோ வை டிபியாக வைத்து இருந்தாள் பூர்ணிமா..

கண் எடுக்காமல் பார்த்தவன் தனது போனில் சேவ் செய்ய மறக்கவில்லை...

" டேய் மச்சான் "
என அஜய் குரல் கேட்டு பதறியபடி திரும்ப
" ஏன்டா ஏன் இப்படி கத்துற "
" கத்துறனா கூப்பிடன் டா நீ ஏன் டா பதறுற "
" அது அது வந்து "
" டேய் நிறுத்து நிறுத்து நிறுத்து என்ன கருமம் டா இது "

நகத்தை கடித்து கொண்டு பேச இருந்தவனை
" த சை வாயிலேந்து கைய எடு "
" டேய் நான் சொல்ல வரனா "
" டேய் டேய் மச்சான் வேணாம் அதுமட்டும் சொல்லிடாத வேணாம் மச்சான் விழுந்துடாத "
" அல்ரெடி விழுந்துட்டேன் மச்சி "

" மச்சான் "
என தலையில் கை வைத்து நாற்காலியில் அமர்ந்தான் அஜய்...

" எப்படி டா உனக்குலா இவ்வளவு தைரியம் என்ன பாத்துட்டும் நீ எப்படி டா லவ் பண்ணுற "
" உனக்கு என்ன மச்சான் ராஜா மாதிரி இருக்க நித்யா உன்ன அன்பாலையும் பாசத்தாலையும் குளிக்க வைக்குறா "
" அடிச நிறுத்து அவகிட்ட மாட்டிட்டு நான் படுற அவஸ்தை எனக்கு தான் தெரியும் "

" யாரு யாருகிட்ட மாட்டிட்டு அவஸ்த படுறா சார் "
என கைகளை கட்டி கொண்டு நின்ற நித்யாவை கண்டு
" ஐய்யயோ குட்டிமா நீ எப்ப டா வந்த "
" நீ அவஸ்த சொல்லும் போதே வந்துட்டேன் "

" அது சும்மா டா நித்து நான் இன்ப அவஸ்தனு சொல்ல வந்தேன் அதுக்குள்ள நீ வந்துட்ட "
" நடிக்காத டா உன்ன அப்புறம் பேசிக்குறேன் "
என்றவள் சித் யிடம் திரும்பிக்
" யாருடா அந்த பொண்ணு "
" பூர்ணி எனக்கு ஹெல்ப் பண்ணி ஹாஸ்பிடல் சேர்த்தால அந்த பொண்ணு "
" லவ் சொல்லிடியா "
" பேசி இரண்டு நாள் தான் ஆகுது சொல்லனும் "
" இரண்டு நாள லவ்ஆ எதுவா இருந்தாலும் யோசித்து செய் "

" எல்லாம் அவன் யோசித்து செய்வான் நீ வா நம்ப போலாம் பிளைட் டைம் ஆகிடுச்சு " என்ற அஜயிடம்
" உன் பிரண்ட்ஆ ஒன்னும் சொல்லபா நானு சரி சித் நான் போயிட்டு 2 வீக்ஸ்ல வந்துடுவேன் அப்ப பேசலாம் பாய் "
" சரி மச்சான் நான் விட்டுட்டு வரேன் "
என இருவரும் கிளம்ப இவர்களுக்கு இருக்கும் டாம் அண்ட் ஜெர்ரி காதல் நன்கு அறிந்தவன் சித்தார்த் ஒருவனே...

என்ன தான் சண்டை போட்டாலும் அந்த சண்டையிலும் இவர்களது காதல் ஒருவருக்கு ஒருவர் மட்டுமே புரியும்...

" நந்தினி நந்தினி "
என அவளது அறைக்கு தேடி சென்ற பத்மா கண்ணில் பட்டது காற்றில் ஆடிய காகிதம்
" மா அப்பா மன்னிச்சுடுங்க
உங்க கிட்ட போராட எங்களுக்கு பலம் இல்ல என் காதல் கூட நான் போறேன் நீ சொல்லுற வாழ்க்கை வாழ எனக்கு விருப்பம் இல்ல முடிஞ்சா என்ன மன்னிச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க நந்தினி "

படித்த அனைவரும் ஆடி போக மாப்பிள்ளை வீட்டார் கண்டபடி பேசி விட்டு போக அவமானத்தில் தலை குனிந்தனர் பத்மா மற்றும் அவரது கணவர்..

வீட்டிற்கு வந்த யார் முகத்திலும் சொல்ல முடியாத உணர்வு இருந்தது..
" ச்ச என்ன இப்படி பண்ணிடா அவங்க அம்மா அப்பா பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்ல என்ன பொண்ணு இவ "
என எண்ணத்துடன் தூங்க...

அவளுக்கு இப்போது புரியவில்லை இதே தவறை அவளும் ஒரு நாள் செய்ய போகிறாள் என...


தொடரும்...

வணக்கம் பிரண்ட்ஸ்

ரொம்ப கஷ்டமாக இருக்கு கதை படிக்கற யாருமே சரியான கருத்துகள சொல்லயில்ல ஒரு சிலர் மட்டுமே ஆரம்பம் முதல் கருத்து சொல்லுறது கொஞ்சம் ஆறுதலா இருக்கு உங்களோட எண்ணம் தெரிஞ்ச தான நான் கதைய தொடருதா தொடர வேணாமானு தெரியும் பிளிஸ் படிக்கற எல்லாரும் கமெண்ட் பண்ணுங்க....

சிந்தியன்..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice episode.... நந்தினி love panravan oda poitaala..... சித் avala love 😍 panrenu அஜய் kita sollitaan ava kita eppo solla poraan...
 

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Nice episode.... நந்தினி love panravan oda poitaala..... சித் avala love 😍 panrenu அஜய் kita sollitaan ava kita eppo solla poraan...
எப்ப சொல்லாறுனு வையிட் பண்ணி பாக்கலாம் சகி நன்றி
 
Status
Not open for further replies.
Top