All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் கலாப காதலா 7

Status
Not open for further replies.

Sindhiyan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
7 கலாப காதலா

தனக்கும் சித்தார்த்துக்கும் இடையே ஆன முதல் சந்திப்பை நினைத்தபடி கண்கள் மூடி படுத்திருந்தாள் பூர்ணிமா...

அஜய் " அம்மு "

குரல் கேட்டு கண் விழித்தவள் வெளியே அஜய் நிற்பதை கண்டு எழ முயன்றாள்..

அஜய் " ஏய் அம்மு பொறுமையா பொறுமையா என்னடி தூங்குனியா டிஸ்டர்ப் பண்ணிடனா "

பூர்ணி " எங்க ஐ அஜ்ஜூ தூங்குறது கண்ண மூடினாலே சித்து நியாபகம் தான் என் சித்து நெஞ்சில தூங்கமா தூக்கம் கூட வரல டா "

அஜய் அவளின் தலை கோதி அவள் சாய்வதற்கு ஏதுவாக முதுகு புறம் தலையணையை வைத்தவன் அவளின் அருகில் அமர்ந்து அவளின் கையினை பிடித்து கொண்டான்.....

பூர்ணி " என்ன அஜ்ஜூ ஒரு மாதிரியா இருக்கு என்னாச்சு "

அஜய் " அதலாம் ஒன்னும் இல்ல நீ சாப்பிட்டியா டேப்லெட் போட்டியா "
என கேட்கும் போதே
அவனது ஃபோன் அடித்தது எடுத்தவன் ம்ச்ச என்று அதனை கட் செய்ய திரும்ப திரும்ப அடித்தது...

பூர்ணி " யாரு அஜ்ஜூ எடுத்து பேச வேண்டியது தான "

அஜய் " ஒன்னுமில்ல அம்மு நான் அப்புறம் பேசிகிறேன் நீ ஜூஸ் குடிச்சியா "

திரும்பவும் ஃபோன் அடிக்க இம்முறை அவனது கையில் இருந்த போனை பிடிக்கினாள் பூர்ணி..

பூர்ணி " அம்மா தான கூப்பிடுறாங்க எடுத்து பேச வேண்டியது தான என்ன "

அஜய் " வேணாம் அம்மு நான் அப்புறம் பேசிக்கிறேன் நித்யா வர சொல்லி இருக்கேன் அவ வந்து உன்ன செக் பண்ணுவா "
என பேசி கொண்டு இருக்கும் போதே
அங்கு வந்தாள் நித்யா..

பூர்ணி " வாங்க நித்யா எப்படி இருக்கிங்க "

நித்யா " நான் நல்லா இருக்கேன் பூர்ணி நீ எப்படி இருக்க உள்ள இருக்கற பேபி எப்படி இருக்கு "
சிரிப்பை பதிலாக தந்தாள்...

பூர்ணி வந்ததில் இருந்து கவனித்து கொண்டு தான் இருக்கிறாள் நித்யா அஜய் இருவரும் முகம் கூட பார்த்து கொள்ளாமல் இருப்பதை..

பூர்ணி " அஜ்ஜூ என்னாச்சு இரண்டு பேருக்கும் சண்டையா "

தலை குனிந்து அமர்ந்திருந்தான் நிமிர்ந்து " அதலாம் ஒன்னும் இல்ல டா நார்மலா தான் இருக்கோம் "

பூர்ணி " இல்ல ஏதோ இருக்கு நீங்க இரண்டு பேரும் மறைக்குறிங்க சொல்லுங்க அம்மா வேற கால் பண்ணிடே இருந்தாங்க என்ன விஷயம் "
" அஜ்ஜூ என்கிட்ட பொய் சொல்ல கூடாதுனு தெரியும்ல "

பெருமூச்சு ஒன்றை விட்டவன்
" ஒன்னும் இல்லடி வீட்டுல மேரேஜ் பத்தி பேசுனாங்க கொஞ்சம் நாள் போகட்டும் சொன்ன அதுக்கு தான் கால் பண்ணிடே இருக்காங்க "

பூர்ணி " ஏய் ஏன்டா இப்படி சொன்ன இன்னும் எவ்வளவு நாள் தான் இரண்டு பேரும் வையிட் பண்ணிடே இருப்பிங்க உங்களுக்கு அப்புறம் லவ் பண்ணி நாங்க மேரேஜே பண்ணிட்டோம் இன்னும் என்ன இதுலா சரிவராது நீ அம்மா க்கு கால் பண்ணு நான் பேசுறேன் சீக்கிரமா கல்யாணத்த வைக்க சொல்லுவோம் "

அஜய் " வேணாம் டி இப்ப எனக்கு மனசே சரியில்லை சித் தான் எங்க கல்யாணத்த க்ரேண்டா பண்ணி பாக்கனும் ஆசபட்டான் இப்ப அவனே இல்ல எனக்கு கொஞ்சம் கூட இன்ரெஸ்டே இல்ல கொஞ்சம் நாள் போகட்டும் "

பூர்ணி " என்ன அஜ்ஜூ இப்படி பேசுற நாங்க ரொம்ப எதிர்பார்த்தே உங்க மேரேஜ் தான் என் சித்து இடத்துல நின்னு நான் எல்லாம் பண்ணுவேன் என்ன நம்பு "

அஜய் " ஏய் லூசு அதுக்காக இல்ல இருந்தாலும் மனசுல "

பூர்ணி " இது சரிபட்டு வராது நித்யா நீங்க அமைதியா இருக்கிங்க அவன்கிட்ட சொல்லுங்க "

நித்யா " அஜய் க்கு என்ன சரியா படுதோ அத செய்யட்டும் "
என நித்யா முடித்து கொள்ள...

பூர்ணி " அஜ்ஜூ பிளிஸ் மேரேஜ் க்கு ஓகே சொல்லு நீ சந்தோஷமா இருந்தா தான் நான் சந்தோஷமா இருப்பேன் பிளிஸ் என் செல்லம்ல "

அவளின் பேச்சில் பழைய பூர்ணியை கண்டவள் " உனக்காக ஓகே போதுமா "

பூர்ணி " அய் ஜாலி இதோ வந்துடுறேன் "
என தனது ஐந்து மாத வயிற்றை தூக்கி கொண்டு வெளியே சென்றாள்...

நித்யா " ஏய் பாத்துபோ "
என்ற பேச்சு அவளின் காதுக்கு எட்டவில்லை...

அவள் சென்றவுடன் தன்வளை இழுத்து தன் மடியில் அமர வைத்தான் அஜய்...

அஜய் " கோபமா "

நித்யா " சத்தியமா இல்ல "

அஜய் " சாரி டி மேரேஜ் இப்ப பண்ண வேணாணு சொன்னதுக்கு ரீஷன் ...."

நித்யா " அஜய் நீ ஒன்னும் சொல்ல வேணாம் எனக்கு தெரியும் அம்மா அப்படி பேசுனது எனக்கும் கஷ்டமா தான் இருந்துச்சு சரி விடு பாத்துக்கலாம் "

அஜய் " அதுமட்டும் இல்லடி பூர்ணிய ஏதாவது சொல்லிட்டா என்னால தாங்கவே முடியாது டி "

நித்யா " அப்படி யாராவது சொல்ல விட்டுவனா "
" நீ எத நினைச்சும் கவலபடாத அவள நாம் பத்துரமா பாத்துக்கலாம் "
" அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையனும் "

அவளின் கூற்றுக்கு தலை அசைத்தவன் நெற்றியின் மீது இதழ் பதித்தான்....

எத்தனை பேருக்கு கிடைக்கும் மனசை புரிந்து கொள்ளும் மனைவி இந்த விஷயத்தில் அஜய் மிகவும் கொடுத்து வைத்தவன்....

கைகளை கட்டி முதுகு காட்டி பின்புறம் நின்றவனின் அருகில் வந்தாள் சுபா....

சுபா " இனியன் "
" இனியன் "

இனியன் " ஆங் சொல்லுங்க சுபா "

சுபா " என்ன ஏதோ யோசிட்டு இருக்கிங்க போல "

இனியன் " நான் என்ன யோசிக்க போறேன் என் வாழ்க்கையில என்ன நடந்தது நடக்குது நடக்க போகுது இத பத்தி தான் யோசிட்டு இருக்கேன் "

சுபா " நடந்தத பத்தி நினைக்காதிங்க இனியன் நீங்க கொஞ்சம் மனசு மாறுவிங்கனு தான் வெளியே கூட்டிட்டு வந்தோம் இங்கயும் இப்படியே இருந்தா
என்ன அர்த்தம் வாங்க பா இவர என்னனு கேளுங்க வாங்க "

ராமசந்திரன் " என்ன இனியன் தம்பி நீங்க உங்க மனசு மாற தான வெளியே கூட்டிட்டு வந்தோம் இங்க வந்தும் இப்படி
இருக்கலாம "

இனியன் " அதலாம் ஒன்னும் இல்ல சார் நான் நார்மல் தான் வாங்க போலாம் அனைவரும் அவ்விடம் விட்டு அகல "

அந்த மலை உச்சியின் உயரத்தில் இருந்து இறங்கும் போது சுபா மெதுவாக இனியனின் கைகளில் தன் கையினை கோர்த்தாள்...

" பட்டு இங்க வாயேன் "
" என்னடா ஏன் கத்துற "
" வாடி சொல்லுறேன் "
என அவளை அழைத்து சென்றான் சித்தார்த்...

வீட்டின் பால்கனிக்கு சென்றவளுக்கு இன்பதிர்ச்சி
பூர்ணி " சித்து வாவ் சூப்பரா இருக்குங்க "

சித் " மேடம்க்கு ஊஞ்சல் னாதான் ரொம்ப பிடிக்குமே அதான் ஆர்டர் பண்ணேன் வர லேட் ஆகிடுச்சு "

கூண்டு போல ஒற்றை ஆள் உட்காரும் அழகிய ஊஞ்சல் ஒன்றை பூர்ணிக்காக சித் வாங்கிறுந்தான்...

சித் " உனக்கு எப்பலா நான் கூடவே இருக்கனும் தோனுதோ அப்பலா இந்த ஊஞ்சல வந்து உட்காரு நானே உன்ன மடியில தாங்குற மாதிரி உன் கூடவே இருப்பேன் "

பூர்ணி " நீ எங்க போக போற நான் கூப்பிட்டா எங்க இருந்தாலும் என்கிட்ட ஓடி வந்துடவ தான "
என அவன் கண்ணம் இரண்டினை பிடித்து கொஞ்ச...

சித் " சப்போஸ் என்னால வரமுடியாத அப்போ "

ஊஞ்சலில் அமர்ந்து
நடந்ததை நினைத்து மூடி இருந்த கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது....
" சித்து எங்க இருக்க எப்பவும் என்கூடவே தான இருப்பனு சொன்ன அப்புறம் ஏன்டா என்ன விட்டு போன "

அஜய் வெட்ஸ் நித்யா
அந்த பிரமாண்ட திருமண மண்டபத்தில் தனது ஏழு மாத வயிற்றை தூக்கி கொண்டு அஜயின் அறையில் அமர்ந்திருந்தாள் பூர்ணி..

அஜய் " பூர்ணி ஓகே நேத்துல இருந்து ஓரே அலைச்சல் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறியா "

பூர்ணி " அஜ்ஜூ அதலா ஒன்னும் இல்ல கல்யாண மாப்பிள்ளை நீ மொதல ரெடி ஆகுற வேலைய பாருடா "

நேற்றில் இருந்த அஜய் எல்லாத்துக்கும் பூர்ணியை முன் நிறுத்தியது நித்யா அம்மா இந்திராவிற்கு பிடிக்கவில்லை..
இருப்பினும் அஜய் முன்பு பேசி அஜயை கோபப்படுத்த கூடாது என எண்ணியவள் நேரம் வர காத்திருந்தாள்...

அதன்படி ஏதோ வேலையாக அஜய் வெளியே செல்ல தனியே இருந்த பூர்ணியிடம் இந்திரா சென்றாள்...

பூர்ணி " வாங்க மா அஜய் இப்ப தான் வெளியே போனான் கூப்பிடவா "

இந்திரா " அதலாம் வேணாம் உன்கிட்ட பேச தான் வந்தேன் "

பூர்ணி " ஆங் சொல்லுங்க மா "

இந்திரா " சொல்லுறேனு தப்பா நினைக்காத மா இந்த மாதிரி விஷயத்துக்கு உன்ன மாதிரி பொண்ணலா வரவே கூடாது சரி வந்துட்ட அமைதியா ஒதுங்கி இருக்கலாம்ல அவனுக்கு தான் ஒன்னும் தெரியாது உனக்கும் கூடவா "
என அவளிடம் கூறியவர்..

" புருஷன முழுங்கிட்டு எப்படி தான் இந்த மாதிரி நல்ல காரியத்துக்குல வரிங்கலோ "
என முனுமுனுக்க பூர்ணி காதில் விழுந்தது..

கண்கள் கலங்கி நின்ற போதும் உதட்டில் புன்னகையுடன் " சாரி மா நான் தெரியாம "
எனும் போதே அங்கு நித்யா வந்தாள்...

நித்யா " எனக்கு தெரியும் மா நீ இப்படி தான் ஏதாவது பண்ணுவனு என்ன மா சொன்ன பூர்ணிய "

இந்திரா " நான் என்ன டி சொல்ல போறேன் நானால எதும் சொல்லல "

நித்யா " இல்ல நீ ஏதோ சொல்லி இருக்க பூர்ணி நீ சொல்லு "
என அவளை கேட்க திரும்பிய போது பூர்ணி அங்கு இல்லை...

இந்திரா " நீ பேசாம வா எனக்கு எல்லாம் தெரியும் "
என நித்யா கையை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு சென்றார்.....

மணமேடையில் மாப்பிள்ளை அமர அதுவரை நித்யா வுடன் தான் பூர்ணி இருக்கிறாள் என நினைத்த அஜய் இப்போது நித்யா மட்டும் வர பூர்ணி அவன் கண்களுக்கு தென்படவில்லை....

அஜய் " நித்து பூர்ணி எங்க " மெதுவாக அவளின் காதில் கேட்க

நித்யா " அஜய் அஜய் சாரி டா அது "

அஜய் " பூர்ணி எங்க "
என சத்தமாக கேட்க அருகில் இருந்த அனைவரின் காதிலும் விழுந்தது..

அஜய் தாய் " டேய் ஏன்டா இப்ப சத்தம் போடுற பூர்ணி இங்கதான் ரூம்ல எங்கயாச்சும் இருப்பா "

தன் தாயிடம் கை காட்டி நிறுததுங்க என்றவன்
" நித்யா பூர்ணி எங்க "
என கண்கள் சிவக்க கோபத்துடன் கேட்டான்..

நித்யா " சாரி டா என்ன நடந்துச்சுனு தெரியல அம்மா தான் ஏதோ "
என கூறும்போதே அஜய் எரிக்கும் கண்களுடன் இந்திராவை பார்த்தார்...

மணமேடையில் இருந்து எழுந்தவன் மாலையை கழட்டி விட்டு இறங்கி வந்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான்....

" அஜய் என்ன பண்ணுற முகூர்த்ததுக்கு டைம் ஆகிடுச்சு "
என அவன் தாய் தந்தை கூற எதையும் காதில் வாங்காமல் இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தான்...

இந்திரா " என்னபா அஜய் இப்படி பண்ணுற நான் தெரியாம பூர்ணிய பேசிட்டேன் அதுக்கு அவகிட்ட மன்னிப்பு கேட்குறேன் இப்ப வந்து தாலி கட்டுபா "

அஜய் " என் அம்மு வரட்டும் கட்டுறேன் "

இந்திரா " ஏய் நித்யா நீயாச்சும் அஜய்கிட்ட பேசு டி "

நித்யா " எனக்குலா தெரியாது நீ தான பூர்ணிய பேசுன போ போய் அவள கூட்டிட்டு வா "

பதட்டத்துடன் மண்டபத்தை விட்டு வெளியே வந்தார் பூர்ணியை தேடி.......

தொடரும்....

வணக்கம் பிரெண்ட்ஸ்

கலாப காதலா கதை எப்படி இருக்கு கதையோட போக்க கொஞ்சம் கமெண்ட்ல சொல்லுங்க அப்புறம் கதையில சித் பூர்ணி காதல் கல்யாணம் எல்லாமே பூர்ணி நினைச்சு பார்க்கிறது தான் இதுக்கு அப்புறம் வர பகுதி எல்லாம் சித் பூர்ணி கடந்த காலம் தான் குழப்ப கூடாதுனு தான் இப்படி போடுறேன் ரொம்ப குழப்புற மாதிரி புரியாத மாதிரி இருந்தா சொல்லுங்க திருத்திக்குறேன் தயவு செய்து உங்களோட கருத்துக்கள போடுங்க அப்பதான் எங்களோட தவறுகள திருத்திக்க முடியும்

நன்றி
 

Chitra Balaji

Bronze Winner
இனியன் எங்க இருக்கான் யாரு அந்த suba..... Avanuku என்ன puriyala..... அஜய் ku. கல்யாணம் ஏற்பாடு pannita பூரணி.... Nithya அம்மா அந்த maari பேசி இருக்க vendaam.... Iva எங்க போனா... Ava வந்ததா கல்யாணம் nu sollitaan... Super Super maa
 
சித்து தான் இனியனா சகோ
அப்படி என்றால் இனியனுக்கு என்ன நடந்தது அந்த காரில் ஒரு எரிந்த பாடி இருந்தது என்றால் அப்போ உயிருடன் இருப்பது யாரு சகோ
😇😇😇😇😇😇😇
 

ramanidamu

Active member
ஹாய் சகோ, கதை ரொம்ப நல்லா போகுது அஜய், நித்யா இருவரின் புரிதல் ரொம்ப அழகா இருக்கு. பூரணி மிகவும் பாவம், சித், உயிருடன் இருக்கிறானா? இனியன் யார்? Eagerly waiting for next ud.😍😍😍
 
Status
Not open for further replies.
Top