கரை தேடும் ஓடங்கள்
வந்தாரை வாழ வைக்கும் என்று அழைக்கப்படும் சென்னைக்கு மிக அருகில் உள்ள பள்ளிக்கரணையில் தன் குடும்பத்தோடு வாழ்ந்து வரும் ஹரிஷ் மற்றும் அவன் மனைவி சங்கீதா இவர்களின் ஒரு வயது மகள் கனிஷ்கா இவள் தான் நம் கதையின் நாயகி.....
ஹரிஷ் இவன் சென்னையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறான் சங்கீதா இவளும் இதே வேலை தான் ஆனால் வேறு நிறுவனம்.....இனி கதைக்கு போவோம்
ஹரிஷ் "நானும் கிளம்பிட்டேன் போற வழில என்னையும் ட்ராப் பண்ணிடு... "
"சரிமா "
ஏங்க "நம்ம பொண்ணு first year பர்த்டே செலிப்ரஷன்க்கு எல்லாருக்கும் சொல்லிட்டிங்களா???"
"சொல்லிட்டேன்மா,,, அம்மா அப்பாவால் வர முடியல்லையாம்.. நாம ஒரு வீக்எண்ட் போய்ட்டு பாப்பாவை காட்டிட்டு வருவோமா??"
"சரிங்க போகலாம்,,, அப்பறம் உங்க பிரிண்ட்ஸ எல்லார்ட்டையும் சொல்லிட்டீங்களா??",,, "அந்த கண்டிஷன்" என்று சொல்லி அவள் பார்த்த பார்வையில் "அதையும் சொல்லிடறேன்" ((யப்பா என்ன முறைப்பு ))சரி சரி டைம் ஆகுது சீக்கிரம் கிளம்பு.....
அம்மா " நானும் அவரோடவே கிளம்புறேன் லஞ்ச் கட்டிட்டிங்களா "
"கட்டிடேன்மா சாம்பார் சாதம்,,, இதுல மாப்பிள்ளைக்கும் இருக்கு"
"அப்பாவும் பாப்பாவும் எங்கம்மா காணோம்", ,,,,,
"அப்பா பாப்பாவை தூக்கிட்டு பக்கத்துல இருக்குற பூங்கா வரைக்கும் போயிருக்காரு,,, நீங்க பாத்து போய்ட்டு வாங்க"
"சரிம்மா நாங்க கிளம்புறோம் "
அத்தை "நாங்க வரும் போது எதும் வாங்கிட்டு வரணுமா"
"இல்ல தம்பி எல்லாம் இருக்கு,,,, பாப்பாக்கு பால் பவுடர் மட்டும் வாங்கிட்டு வாங்க ".......
((இதை கேட்கும் போது சங்கீதாவிற்கு தன் மார்பில் பால் சுரந்தது,,
அவள் கண்களில் சொல்ல முடியாது வழி,, தன் ஒரு வயதே ஆன குழந்தைக்கு தன் பாலை குடுக்க முடியவில்லையே என்று,,, ஆனால் அவள் என்ன செய்வாள் தன் கணவனின் பிடிவாதத்தினால் சொந்த வீடு இப்போ கார் இதுக்கு மாதம்தோறும் EMI கட்ட இப்போ ரெண்டு பேரும் வேலைக்கு போகும் நிலை... ))
இதே நேரம் அங்கு பூங்காவில் நம் கதையின் நாயகி கனிஷ்கா என்னும் கனி தாத்தா "அங்க பாருங்க தோ தோ ஐ பட்டர்பிளை "என்று தன் தாத்தாவின் கை பிடித்து சின்ன சின்ன அடிகள் வைத்து நடந்து வந்தது அவள் தாத்தாவும் அந்த பிஞ்சி கை பிடித்து அவள் நடைக்கு ஈடு குடுத்து நடந்து வந்தார்....
தொடரும்.........