All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சாரலின் "அன்பே உ(எ)ன்னை உனக்காக" கதைத் திரி

Status
Not open for further replies.

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 4
ஒரு வாரம் களித்து மும்பை மாநகரத்தில் இன்பினிட்டி வணிக வளாகத்தில் இருக்கும் ப்ஹுட் கோர்ட்டில் யஸ்வந்த் தனக்கு முன் ஒரு காபி கோப்பையுடன் கையில் அலைபேசியை நோண்டிக் கொண்டு நிஸ்வந்த்தின் வரவிற்காக காத்துக் கொண்டு இருந்தான் . அப்பொழுது தூரத்தில் "அம்மா " என்ற ஒரு மழலையின் தமிழ் விழிப்பு அவனின் கவனத்தை கவர்ந்தது .

நிமிர்ந்து அந்த பெண் குழந்தையை பார்த்தான் . 'ஒரு இரண்டு வயது இருக்குமா ?' அழகாக கொலு கொலு என்று துரு துரு என்று இருந்தாள் . யாருக்கோ போக்கு காட்டி தனது பிஞ்சு கால்கள் கொண்டு ஓடிக்கொண்டு இருந்தாள் . அவனின் முகத்தில் ஒரு புன்னகை அவனையும் அறியாமல் அவனின் கால்கள் அந்த குழந்தையை நோக்கி முன்னேற துடித்தது . இதைத்தான் தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்று முன்னோர்கள் சொல்லி சென்றனரோ ....!!

அப்பொழுது வேகமாக ஒரு பெண் அவனை கடந்து ஓடிச் சென்றாள் . நேராக அந்த பெண் சென்று குழந்தையை தூக்கிக் கொண்டாள் . குழந்தையோ "அம்மா " என்று கைதட்டி குதூகலித்தது . "ஹே பப்பு குட்டிமா அம்மா விட்டுட்டு இப்படி நீங்க ஓடலாமா ....பாட்டி பாருங்க உங்க மாதிரி ஓட முடியாம நிக்கிறாங்க " என்று குழந்தையுடன் கொஞ்சிக் கொண்டு இருந்தாள் .

அந்த குழந்தை அம்மா என்று அழைத்தவளை நிமிர்ந்து பார்த்தவுடன் மின்சாரம் தாக்கியது போல் சமைந்து நின்றான் யஸ்வந்த் . 'இவள் இந்த பாப்பாக்கு அம்மாவா ? ' என்று யோசிக்கலானான் மேலும் 'இவள் அன்று பார்த்தவள் தானே ' என்று எண்ணினான் . . அவளோ லெவிஸ் ஜீன்ஸ் பாண்ட் அணிந்து பெண்கள் அணியும் கருப்பில் வெள்ளை கட்டம் போட்ட அழகான டாப்ஸ் அணிந்து முடியை விரித்து போட்டு இருந்தாள் . நிச்சயம் அவளை ஒரு குழந்தையின் அம்மா என்றால் எவரும் நம்பமாட்டார்கள் .

யஸ்வந்த்தின் பார்வை அந்த பெண்ணை ஆழ்ந்து பார்த்துக்கொண்டு இருக்கையிலே அந்த பெண் தனது குழந்தையுடன் கொஞ்சுவதை நிறுத்திவிட்டு ஒரு இடத்தை வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தாள் . அவள் பார்வையில் தெரிந்தது என்ன கோபம் , ஆற்றாமை , வெறுப்பு அவனால் அந்த பார்வையின் அர்த்தத்தை கணிக்க முடியவில்லை .

அவள் பார்வை சென்ற திக்கை திரும்பி பார்த்த அவன் அதிர்ச்சியுற்றான் . காரணம் அவள் பார்த்துக்கொண்டு இருந்தது நிஸ்வந்தை . நிஸ்வந்த் தனது சகோதரனை தேடி வந்தான் . அவன் அவளை கவனிக்கவில்லை . அந்த பெண்ணின் பார்வை ,நிஸ்வந்த்தின் மேற்பார்வையில் இருக்கும் நிறுவனத்தின் பங்குச் சரிவு ,அனைத்து ப்ரொஜெக்ட்டும் சொல்லி வைத்தார் போல் ஒரே நிறுவனத்திற்கு கைமாறுவது என்று எல்லாத்தையும் சேர்த்து நினைத்த யஸ்வந்த் ஒரு நிமிடம் கண்ணை மூடி யோசித்தான் .

கண்ணை திறந்து பார்க்கையில் நிஸ்வந்த் இவன் அருகில் வந்துகொண்டு இருந்தான் . அவள் ....அவள் அவன் கண்களுக்கு தென்படவில்லை . ஒரு முடிவு தனக்குள் எடுத்துக்கொண்டு அடுத்தகட்ட வேலைகளை பார்க்க கிளம்பினான் யஸ்வந்த் .

"ஹாய் யாஷ் " என்று கூறிக்கொண்டே வந்த நிஸ்வந்த் அவனின் யோசனையான முகம்கண்டு "என்னாச்சு யாஷ் ஏன் இவ்ளோ யோசனை ? " என்று கேட்டான் .
"நிஷு அந்த எ ஜே சொலுஷன் சார்மான் உடனான மீட்டிங் புக் ஆயிடுச்சா ? " என்று புருவத்தின் நடுவில் முடிச்சுடன் கேட்டான் .
"இல்ல யாஷ் அவங்க நம்மகூட மீட்டிங் அக்ஸப்ட் பண்ண மாட்டீங்கிறாங்க ... சம்திங் பிஷி " என்றான் யோசனையுடன் .
"ஓகே நிஷு வி ஹவ் லோட் ஒப் ஒர்க் ... பஸ்ட் எப்படி எல்லா கான்ட்ராக்ட்டும் சரியா எ ஜே குரூப் ஒப் கம்பனிஸ்க்கு போகுதுனு தெரியணும் .. தென் எதுக்கு உன்னை டார்கெட் பண்ணனும் ... இஸ் இட் ஹேர் இல்லைனா வேற யாரு என்பதை கண்டுபிடிக்கணும் அதுக்கான காரணத்தையும் தெரிஞ்சுக்கணும் " யஸ்வந்த் ஒரு தீவிரத்துடன் சொல்லிக்கொண்டு இருந்தான் .

நிஸ்வந்த் எதற்காக இவன் இவ்ளோ தீவிரமா சொல்கிறான் என்ற யோசனையுடன் அதையும் யஸ்வந்த்திடம் கேட்டான் "என்னாச்சு யஸ்வந்த் ஏன் இவ்ளோ தீவிரமா யோசிக்கிற "

"நிஷு நீயே சொல்லிட்ட சம்திங் பிஷி அண்ட் ஒரு பொண்ணு அடிக்கடி உன்ன ஒரு விதமான வன்மத்துடன் பார்க்கிறதை நான் பார்த்தேன் . லாஸ்ட் வீக் அந்த பார்ட்டில ஒரு பொண்ணு உன்ன பார்த்து வன்மத்துடன் சிரிச்சா நீ உன் சுயநினைவுல இல்ல நான் உன் கிட்ட வரதுக்குள்ள ஷி லெப்ட் ... அந்த பார்ட்டி புயர்லி போர் பிசினஸ் பீப்பிள் ரொம்ப சிலருக்கு மட்டும் தான் இன்விடேஷன் போயிருக்கு ... அண்ட் எனக்கு கிடைச்ச நம்பகமான தகவல் சொன்னது இது தான் மிஸ்டர் மல்ஹோத்ரா மட்டுமே எ ஜே குரூப் ஒப் கம்பனிஸ் சிஇஓ வை பார்த்திருக்கார் ... " என்றான் யோசனையுடன் .

"வாட் ஐ காண்ட் கெட் யூ யாஷ் என்ன ஒரு பொண்ணு பாக்குறா அப்படினு சொல்ற , எ ஜே குரூப் சிஇஓ பத்தி பேசுற இதுல மல்ஹோத்ரா எங்க இருந்து வரார் ... எனக்கு சுத்தமா புரியல என்ன ஒரு பொண்ணு பாக்குறதா சொல்ற இஸ் தட் ஹேர் ? " என்றான் கேள்வியுடன் .

"நோ நிஷு இட்ஸ் நோட் ஹேர் ... எனக்கு அவங்களை நல்லா அடையாளம் தெரியும் மோர் ஓவர் உனக்காக நானும் பல நாள் அவங்களை தேடிருக்கேன் இட்ஸ் புயர்லி மிஸ்டரி ஆனால் நாம் கண்காணிக்க படுகிறோம் அண்ட் உன்னோட பிசினெஸ் உன்னோட லாஸ் அது தான் எ ஜே கம்பனிஸ்க்கு முக்கிய டார்கெட்ன்னு புரியுது பட் வாய் ...மல்ஹோத்ரா எ ஜே கம்பெனி பவுண்டெர் லீலாவதியோட நல்ல ஒரு பிரண்ட் " என்றான் யஸ்வந்த் .

"அப்ப மல்ஹோத்ரா கிட்ட எ ஜே குரூப் கம்பெனி பத்தின டீடெயில்ஸ் கேட்கலாமே " என்றான் நிஸ்வந்த் .
"இட்ஸ் இம்பொசிபிள் மல்ஹோத்ரா எப்படி கேட்டாலும் ஒரு கிளு கூட குடுக்க மாட்டார் . ஐ ஹவ் சம் அதர் பிளான் லெட்ஸ் சி " என்று பேசிக்கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்தனர் .
..................................................................
ஒரு மாதம் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் சென்றது . ஆர் ஆர் குரூப்ஸ் ஒப் கம்பனிஸ் ஒரு விஷயத்தை யோசிக்கிறதுக்கு முன்னாடியே அங்க எ ஜே குரூப் ஒப் கம்பனிஸ் சென்று அந்த ஒப்பந்தத்தை கைப்பற்றினார்கள் .
எங்குமே எ ஜே குழுமத்தின் தலைமையை எவருமே கண்டது இல்லை . வெகு சில முக்கியமான நபர்களையும் நெருங்கி அவர்களை பத்தின தகவலை திரட்ட முடியவில்லை .

யஸ்வந்த் நிஸ்வந்த்தின் தொடர் வீழ்ச்சியை பற்றி அறிந்த கண்ணனும் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை . இதன் இடையில் மல்ஹோத்ரா மகளுடன் யஸ்வந்த்தின் பழக்கம் நெருக்கமாக மாற ஆரம்பித்தது .
யஸ்வந்த் சுஷ்மாவுடன் (மல்ஹோத்ராவின் மகள் ) அதிக நேரம் செலவு செய்வதை கண்ட நிஸ்வந்த் பலமுறை கேட்டும் மௌனத்தையே பதிலாக கொடுத்தான் யஸ்வந்த் .

ஒரு நாள் திடீர் என்று அவசரமாக நிஸ்வந்த்தின் அறைக்குள் நுழைந்த யஸ்வந்த் (இருவரும் இப்பொழுதெல்லாம் ஒரே அலுவலகத்தில் இருந்தே வேலை செய்கின்றனர் ) நிஸ்வந்த்தின் மடிக்கணினியில் ஒரு பென்ட்ரைவை சொருகி சில புகை படங்களை பார்வையிட்டான் . ஏன் இவனிடம் இத்துணை அவசரம் என்று யோசித்த நிஸ்வந்த் தனது மடிக்கணினியில் பார்வையை செலுத்தி புகை படங்களை பார்த்தான் .

ஒரு படத்தை பார்த்தவுடன் "யாஷ் இவ எப்படி மல்ஹோத்ரா டாட்டர் கூட ? " நிஸ்வந்த் கண்களை அகல விரித்து ஆச்சர்யத்துடன் கேட்பதை கண்ட யஸ்வந்த்திடம் ஒரு பரபரப்பு .

"இவங்களை உனக்கு தெரியுமா நிஷு ? " என்றான் யஸ்வந்த் .

"ஹே இவங்களை உனக்கு தெரிலயா ஷி இஸ் ஜெயதி ... " என்றான் ஆச்சர்யத்துடன் .

"காட் இட் " என்று பெருமூச்சை வெளியிட்ட யஸ்வந்த் தனது கரங்கள் கொண்டு தலையை அழுந்த கோதினான் .

"என்னாச்சு யாஷ் ? " நிஸ்வந்த்திற்கு ஒன்றும் புரியவில்லை என்ன நடக்கிறது ஏன் என்று பல கேள்விகள் அவன் மனதில் .

"நிஷு ஷி இஸ் எ ஜே குரூப் ஒப் கம்பனிஸோட சார்பேர்சன் " என்றான் யஸ்வந்த் .

நிஸ்வந்தால் சத்தியமாக அதை நம்ப முடியவில்லை அவனின் அதிர்ச்சியை மேலும் அதிக படுத்தினான் யஸ்வந்த் "இவங்க தான் உன்னை அடிக்கடி வன்மத்துடன் பார்த்தது . டூ யூ நோவ் ஹேர் பிபோர் ? " என்றான் கேள்வியாக .

"யாஷ் இட்ஸ் ஷாக்கிங் அவங்களை நம்ம கம்பெனி ஸ்டாப் ,கண்ணன் அண்ணா ரெகமெண்டேஷன், குட் டாலேண்டட் அந்த அளவில் தான் தெரியும் அதுக்குமேல அவங்களை பற்றி ஒன்றுமே தெரியாது ...ஹே நீயும் இவங்க ப்ரொபைல் பார்த்திருப்பியே நம்ம ஸ்டாப் லிஸ்ட்ல இவங்களை உனக்கு தெரிலயா " என்று யோசனையுடன் கேட்டான் நிஸ்வந்த் .

"அது தான் ஆரம்பமே நிஷு..... இவங்க போட்டோ இன் பயோ டேட்டா வாஸ் டிஃபரென்ட் . ஷி வாஸ் சோ போர்மல் அண்ட் தட் ஸ்னாப் வாஸ் நோட் கிளீயர் அதான் என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை .ஐ டிடின்ட் சீ ஹேர் இன் பேர்சன் நான் நேர்ல பார்த்தப்ப எல்லாம் ஷி வாஸ் ட்ரெண்டி மாடர்ன் அண்ட் ஸ்டைலிஷ் அந்த பிக்ச்சருக்கும் நேர்ல பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் . ஷி ப்லயேட் பிரில்லியண்ட் " என்றான் யஸ்வந்த் . மேலும் தனது முகத்தில் தீவிரத்தை கொண்டு வந்த யாஷ்
"நிஷு இவங்களை பத்தி தெரிஞ்சுக்க தான் சுஷ்மாவோட நெருங்கி பழகினேன் . அண்ட் வாட்ஸ் தி ரீசன் டு டார்கெட் யூ இஸ் மிஸ்டரி ஸ்டில் . ஷி இஸ் ஆல்சோ எ மதர் ஒப் எ சைல்ட் பட் நோட் மாரிட் " நிதானமாக பல அதிர்ச்சிகளை நிஸ்வந்த்தின் முன் வரிசை படுத்தினான் யாஷ் . அனைத்தையும் கேட்ட நிஸ்வந்த் தலையில் கைவைத்து அமர்ந்தான் .

"யாஷ் எனக்கு சுத்தமா புரியலை அவங்க இங்க வேலை செய்தப்ப பர்சனல் மாட்டேர்ஸ் யார்கூடயும் பேசிக்கிட்டது இல்லை என்னை ஏன் குறிவைக்கிறாங்கனும் தெரியல . கண்ணன் அண்ணா எப்படி விசாரிக்காம இருந்திருப்பாங்க என்ற நம்பிக்கை மட்டும் தான் அவங்க கிட்ட என்ன வேற எதுவும் கேக்க யோசிக்கவிடலை " என்றான் நிஷு .

"நிஷு லுக் நம்மளையே இவ்ளோ பிரிலியண்டா யோசிச்சு அடிச்சிருக்கா நம்மளோட ஸ்ட்ராட்டஜிய முழுசா தெரிஞ்சு இறங்கி வேலை செஞ்சிருக்கா கண்ணன் அண்ணாக்கும் அவளோட க்ரெய் ஷாட் தெரியாம இருந்திருக்கலாம் . " இவ்ளோ நேரம் மரியாதையாக குறிப்பிட்டு கொண்டு இருந்த யஸ்வந்த் ஜெயதியின் துரோகத்தை நினைத்து முழுதாக ஒருமைக்கு தாவினான் .

தனது அலைபேசியை கையில் எடுத்த யஸ்வந்த் சில இலக்கங்களை அழுத்தி காதிற்கு பொருத்தினான் . அவனை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் நிஸ்வந்த் . அந்த பக்கம் அழைப்பை ஏற்றவுடன் "கேன் ஐ ஸ்பீக் டு மிஸ் ஜெயதி சிஇஓ ஒப் யுவர் கன்செர்ன் " என்றான் அழுத்தமாக .

அந்த பக்கம் ஒரு நொடி மௌனத்திற்கு பிறகு "நாளை அவங்களே உங்களை வந்து சந்திப்பாங்க மிஸ்டர் யஸ்வந்த் " என்று தகவலாக சொல்லி அழைப்பை துண்டித்தனர் .
"யார்கூட பேசுன யாஷ் " என்றான் நிஸ்வந்த் .
"ஜெயதியோட பர்சனல் செகிரேட்டரி . சுஷ்மா போன்ல இருந்து அந்த நம்பரை எடுத்தேன் " என்றான் யஸ்வந்த் . நிஸ்வந்த்திற்கு இன்று அதிர்ச்சி தரும் நாள் என்று எழுதி இருக்கோ என்னவோ !! அதிர்ச்சியுடன் தனது சகோதரனை நோக்கினான் .
"சுஷ்மா எளிதில் ஜெயதி பத்தி சொல்லல . ஷி இஸ் கிரேஸி ஓன் மீ அவளுக்கே தெரியாம அவ மொபைல் எடுத்து போட்டோஸ் டீடெயில்ஸ் எல்லாம் பென்ட்ரைவில் கோப்பி பண்ணேன் " என்றான் அசால்ட்டாக .
நிஸ்வந்த் மிகுந்த யோசனையில் ஆழ்ந்தான் . என்னதான் நடிக்கிறது என்று பொறுத்து இருந்து பார்க்க முடிவு செய்தான் .
.....................................................................................
அடுத்தநாள் காலை மூவருக்கும் ஒவ்வொரு விதமாக விடிந்தது .
யஸ்வந்த்திற்கு ஜெயதி மீதான கோபம் , நிஸ்வந்த்திற்கு நடப்பவைக்கான காரணம் என்ற குழப்பம் கடைசியாக ஜெயதி அவள் ஆவலுடன் எதிர் பார்த்த நாள் அதற்கான ஆர்வம் என்று ஒவ்வொரு விதமான மனநிலையுடன் அந்த நாளை எதிர்நோக்கி மூவரும் தங்கள் வேலைகளை செய்ய கிளம்பினர் .
காலை பத்து மணி என்று கடிகாரம் காட்டியது . சரியாக சொன்ன நேரத்தில் ஜெயதியின் வரவு யஸ்வந்த்திற்கு தெரிவிக்கப்பட்டது . தனது அலுவலக அறையில் வேலை செய்து கொண்டு இருந்த யஸ்வந்த் அவளின் வரவை எதிர் நோக்கி வாயிலை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் .
எந்த வித அறிவிப்பும் இல்லாமல் உள்ளே நுழைந்த ஜெயதி நேராக யஸ்வந்த்தின் எதிரில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள் ..

அவளை எடை போடும் பார்வை பார்த்தான் அவன் . தூக்கி போட்ட போனிடைல் போர்மல்ஸ் ஷர்ட் டயிட் ஸ்கிர்ட் . அந்த இளம் உதா வண்ண சட்டைக்கு அவள் அணிந்திருந்த ஸ்கிர்ட் அழகாக பொருந்தி இருந்தது . பெரிய ஒப்பனைகள் இல்லாமல் மிதமான ஒப்பனை காதில் சின்னதாக வைரம் பதித்த பொட்டு தோடு , இடது கையில் ரோலெக்ஸ் கடிகாரம் வலது கையில் எ ஜே என்று வைர கற்களால் பதிக்க பட்ட முகப்பு கொண்ட கைச்சங்கிலி . ஒரு நிமிடத்திற்கும் குறைவான பார்வையில் அவளை எடை போட்டான் யஸ்வந்த் .

அவள் பார்வையில் தெரிந்த கடினம் என்னை முடிந்தால் நெருங்கிப்பார் என்ற சவாலை சுமந்து இருந்தது . ஜெயதி கால் மேல் கால் போட்டு மிகவும் கம்பீரமாக அமர்ந்து இருந்தாள் .

யஸ்வந்த்திற்கு அவளை பார்த்து அவ்ளோ ஒரு ஆத்திரம் .

தனது அலுவகத்தில் தனக்கு எதிரே அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தவளை ஏதும் செய்ய இயலாமல் கையை கட்டி போட்டது போல் இருந்தது யஸ்வந்த்திற்கு .

யஸ்வந்த்தும் எந்த உணர்வையும் முகத்தில் காட்டாமல் வெறுமையான பார்வையுடன் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான் .

"சோ யு ஆர் தி கலப்ரிட் " தீயென தகித்தது அவனின் வார்த்தைகள் . முகத்திலோ எந்த உணர்வும் இல்லை .

ஒற்றை புருவத்தை தூக்கி மெச்சுவதை போன்ற ஒரு பார்வை பார்த்து நக்கலாக சிரித்த அவள் "ஓஹ் தி கிரேட் ட்வின் பிரோதெர்ஸ்க்கு என்னை கண்டு பிடிக்க இவ்ளோ மாதகாலம் ஆகிடுச்சா ? " அவ்ளோ ஒரு நக்கல் அவளின் குரலில் .
"வெல் மிஸ்டர் யஸ்வந்த் உங்க ட்வின் சோல் இப்ப போயிருக்கிற வேலை முடிந்து ஐந்து நிமிடம் ஆகிடுச்சு . அந்த ப்ராஜெக்ட் என் கன்சர்னுக்கு சாங்க்ஷன் ஆகி அதே அஞ்சு நிமிஷம் ஆயிடுச்சு . ரொம்ப நாளா யார் நான் அப்படினு தேடிட்டு இருந்தீங்கன்னு கேள்விப்பட்டேன் . சோ நீங்களே கூப்பிட்டு என்னை கண்டுபிடிச்சதை சொன்னப்ப இட் வாஸ் நோட் ஷாக்கிங் அட் ஆல் . சரி கண்ணாமூச்சி ஆடி போர் அடிச்சிடுச்சு இனி ஸ்ட்ரெயிட்டா பார்க்கலாம்னு நானே வந்துட்டேன் ." என்றாள் தெளிவாக .

"சீட் பண்ணி ஒரு விஷயத்தை சாதிக்கிறதை நினச்சா உனக்கே அசிங்கமா இல்லையா ? . பெண் புத்தி பின் புத்தின்னு காமிச்சிட்ட இல்ல " எரிச்சலுடன் கேட்டான் யஸ்வந்த் .

"லுக் மை டார்கெட் இஸ் நோட் யூ . யூ பெட்டெர் ஸ்டே அவெய் . எஸ் நான் சீட் பண்ணேன் . ஒருத்தங்க நமக்கு பண்ணதை அதே பாணியில் அவங்களுக்கு திருப்பி கொடுக்கிறேன் புரியுதா . ஏன் எதற்கு அப்படினு எஸ்பிளேன் பன்னிட்டு இருக்க முடியாது காட் இட் . தி ரியல் கேம் ஸ்டார்ட்ஸ் நொவ் . உன்னோட உடன் பிறப்பிடம் சொல்லிடு இனி என்னோட முழுநேர டார்கெட் உன்னோட ஆர் ஆர் கன்செர்ன் ஷுட் கம் அண்டர் எ ஜே குரூப் ஒப் கம்பனிஸ் " என்று சுட்டு விறல் நீட்டி எச்சரித்து விட்டு எந்த வித அறிவிப்பும் இல்லாமல் வெளியே செல்ல கதவை திறந்தாள் .

"மிஸ் ஜெயதி ஒன் மினிட் ப்ளீஸ் ... " என்று கூறி தனது இருக்கையில் இருந்து எழுந்து அவளின் அருகே வந்து அவளின் காதின் அருகில் குனிந்து "யூ லுக் சோ பியூடிபியுல் ஆஸ் லைக் யுவர் சிஸ்டர் அபிதா .... " என்று ஆழமான குரலில் கூறினான் .

இப்பொழுது அதிர்ச்சி ஆவது அவளின் முறை ஆகிற்று . கண்களை திறந்து "வாட் !! கம் அகைன் " என்றாள் .

"ஓஹ் கம் ஒன் மிஸ் உங்க சிஸ்டர் அபிதா எவ்ளோ அழகோ அதே போல் நீங்களும் அவ்ளோ அழகு . உங்க சிஸ்டரின் அழகில் வீழ்ந்த நிஷு இன்னைக்கு வரைக்கும் எழுந்திரிக்களை . மேலும் யோசிக்கும் திறனை மொத்தமா தொலைச்சுட்டு இருக்கான் . பட் ஆம் நோட் எ பூஹூல் யு க்நொவ் . நீ தான் அப்படினு தெரிஞ்ச நொடி உன்னை பத்தி தெரிஞ்சுகிறது அவ்ளோ கஷ்டமா இல்லை ...." யஸ்வந்த் மிகவும் எளிதாக சொல்லிவிட்டான் . ஆனால் அவன் சொன்ன செய்தியின் தாக்கம் அவளை விட்டு நீங்கவில்லை .
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிகளே ... கொஞ்சம் உடல் நிலை சரி இல்லை அதான் பதிவு போடுவதில் தாமதம் . இதோ அன்பே உ(எ)ன்னை உனக்காக ....கதையின் நான்காம் அத்தியாயம் பதிந்துவிட்டேன் . படித்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்துக்களை சொல்லவும் . உங்களின் கருத்துக்களை எதிர்பார்க்கும் நான் (சாரல்)

 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 5
ஜெயதி இந்த பக்கம் செல்கயில் அந்த பக்கம் உள்ளே நுழைந்தான் நிஸ்வந்த் . நிஸ்வந்த் தனது முக்கிய கூட்டத்தை முடித்து தனது ஆர் ஆர் சொலுஷன் வாசலை நெருங்குகையில் அவன் பார்த்தது ஜெயதி தனது உயர் ரக சிவப்பு நிற லம்போர்கினியில் ஏறியதை .

ஓட்டுநர் பக்கம் அவளின் காரியதரிசி மற்றும் தோழியுமான ஷில்பா ஏறினாள் . வாகனத்தை செலுத்தும் நிலையில் ஜெயதி இல்லை அவளின் அதிர்ச்சி அப்படி . ஜெயதி நிச்சயமாக யஸ்வந்த் அபிதாவை பற்றி அறிந்திருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை .

நிஸ்வந்த் பார்க்கும் சமயம் அவளின் லம்போர்கினி கிளம்பியது அதன் முன்னும் பின்னும் இரு இன்னோவாக்கல் சில ஆட்களுடன் நகர்ந்தது . வேகமாக தனது ஆடி வாகனத்தை அதற்குரிய இடத்தில் நிறுத்தாமல் சாவியை அங்கு இருந்த காவலாளியிடம் கொடுத்துவிட்டு வேகமாக படிகளை தாவி தாவி ஏறி ஐந்தாம் மாடியில் இருக்கும் அவர்களின் அறைக்குள் நுழைந்தான் .

உள்ளே நுழைந்தவுடன் அவன் கண்ட காட்சி யஸ்வந்த் இருகைகளையும் தனது தலைக்கு கொடுத்து ஓய்ந்து போய் அமர்ந்து இருந்ததை . "யாஷ் என்னாச்சு ஜெயதி அதுக்குள்ள வந்துட்டு போய்ட்டா போல ...என்ன சொன்னா ... அவள் ஏன் என்னை குறிவைக்கிறா ? " கேள்விகளை தொடர்ந்து அடுக்கினான் .

நிஸ்வந்தின் குரலில் தலை நிமிர்ந்து பார்த்த யஸ்வந்த் தனது வாயை திறக்காமல் அமைதி காத்தான் . "யாஷ் ப்ளீஸ் சொல்லு ..." என்று கெஞ்சலில் இறங்கினான் . தன்னவளை பற்றி ஏதேனும் தெரியுமோ என்று ஏங்கினான் . அனைவரும் அவள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறிய பொழுது அவனின் ஆள் மனது அவளின் இருப்பை அவனுக்கு உணர்த்தியது . தன்னை மட்டுமே குறி வைக்க வேண்டுமானால் அதன் முழுமுதற் காரணம் அவளாக மட்டுமே இருப்பாள் என்பதில் அவனுக்கு எள்ளவும் ஐயமில்லை .

"எஸ் நிஷு இட்ஸ் ஹேர் " என்றான் யஸ்வந்த் பொறுமையாக . அந்த நான்கு வார்த்தைகளில் ஒரு நொடி உறைந்த நிஷு தன்னிலை இழப்பதற்கான சமயம் இதுவல்ல என்று உணர்ந்து "அவள் அவள் இன்னும் உயிரோடு இருக்கிறாளா ? " என்றான் பரவசக் குரலில் .

"தெரியல " என்றான் யஸ்வந்த் . நிஸ்வந்த்திற்கு பல குழப்பங்கள் "என்ன யாஷ் சொல்ற இட்ஸ் அபிதா சொல்ற ஆனால் அவள் உயிருடன் இருக்கிறாளா என்று கேட்டால் தெரியலை சொல்ற...கொஞ்சம் தெளிவா சொல்லு " அவன் குரலிலே அவனின் பொறுமை எல்லை கடப்பதை உணர்ந்த யஸ்வந்த் தனது வாயை திறந்தான் .

"நிஷு காம் டௌன் ...இட்ஸ் போர் அபிதா ஆனால் அபிதாதான் இதை செய்கிறாளா என்றால் தெரியாது . ஜெயதி அண்ட் அபி ஆர் கசின்ஸ். அபியின் பெரியப்பா பெண் ஜெயதி . நல்ல தோழிகள் மற்றும் சகோதிரிகள் .ஜெயதி தனது பத்தாம் வயதில் தாய் தந்தையுடன் தொழில் சம்பந்தமாக ஸ்டேட்ஸ் சென்றுவிட்டாள் . "

யாஷ் பேசிக்கொண்டு இருக்கையிலே நிஸ்வந்த் இடையிட்டான் "அபிதா ஒருமுறை அவளின் சகோதரியை பற்றி கூறி இருக்கிறாள் ஆனால் பெயர் சொல்லல " என்றான் குழப்பத்துடன் .

"எக்ஸாக்ட்ல்லி அவள் தான் இந்த ஜெயதி . இதில் குழப்பம் என்னன்னா அபி உயிருடன் இருக்கிறார்களா என்பது தெரியலை . ஜெயதிக்கு ஒரு தங்கை உண்டு ஜெயதியை விட இறுவயது சிறியவள் ஆனால் அவளை லீலாவதி அவர்கள் சட்டப்படி தத்தெடுத்து இருக்கிறார்கள் . அவளின் பெயர் ரக்ஷிதா . எங்கும் அபியின் அடையாளங்கள் இல்லை . ஜெயதி என்று தெரிந்தவுடன் என்னால் அதிகபச்சம் கண்டு பிடிக்க முடிந்தது இவர்களின் உறவை மட்டுமே. அதற்குமேல் எவரை கேட்டாலும் சிறு தகவல் கூட இல்லை . அவர்களை சுற்றி பெரும் பாதுகாப்பு வலயம் . ஸ்டேட்ஸில் பெரும் தொழிலதிபர் லீலாவதி அவரின் துணை கொண்டு தனது சகோதரியின் வாழ்க்கையின் அஸ்தமனத்துக்கு காரணம் ஆன உன்னை பலி தீர்க்கவே இங்கு வேலைக்கு சேர்ந்துள்ளாள் " என்று தனக்கு தெரிந்த வரை நிஷ்வந்திடம் கூறி தனது வலது கையின் இருவிரல் கொண்டு நெற்றியை நீவி விட்டான் .

சற்று நேர அமைதிக்கு பின் சட்டென்று தலை நிமிர்த்திய யஸ்வந்த் "நிஷு எனக்கு என்னமோ கண்ணன் அண்ணாக்கு எல்லாம் தெரிந்து இருக்குமோ அவர்தான் இவர்களுக்கு உதவுகிறாரோ என்று சந்தேகமாக உள்ளது " என்றான் .

"ஹ்ம்ம் எனக்கும் அதே சந்தேகம் .... ஆனால் யாஷ் அண்ணாகிட்ட எதையும் கேக்க முடியாது கேட்டால் நம் வீட்டு ஆட்களே நமக்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளது " என்று வருத்தத்துடன் கூறி தலையை தொங்கபோட்ட நிஸ்வந்த் "தவறு செய்யும் பொழுது உற்சாகமாக இருந்தது இப்பொழுது ஒவ்வொரு செயலும் பூதாகரமா தெரியுது " என்றான் .

அதை கேட்ட யஸ்வந்த் கோபம் கொண்டு தனது இருக்கையில் இருந்து எழுந்து "லுக் நிஷு வயதின் கோளாறு மேலும் நாம் யாரையும் எதற்கும் கட்டாயப்படுத்தவில்லை . அதைவிட அனைத்துமே அளவில் தான் இருந்தது . அனைத்தும் அபியை நீ பார்க்கும் வரை " என்று கூறி குற்றம் சாட்டும் பார்வையை நிஷுவின் பக்கம் திருப்பினான் யாஷ் .

நிஷுவும் இயலாமையுடன் தலைகவிழ்ந்தான் ."நான் அன்னைக்கே சொன்னேன் அபி இஸ் நோட் யுவர் கயிண்டா பேர்சன்னு . நீ அவங்க குணத்துலயும் அழகுளையும் விழுந்த அவங்க உண்மையான முகம் தெரிந்து ஒரு தவறு செய்தாய் அதும் கோபத்தில் அது இவ்வாறு முடியும் என்று நீ நினைக்கவில்லை . விடு பார்த்துக்கலாம் எதா இருந்தாலும் சேர்ந்து சந்திப்போம் "

மேலும் தொடர்ந்த யாஷ் "நிஷு யூ லாஸ்ட் யூர்செல்ப் மான் . அபியை கோபத்தில் எதோ செய்து அது தப்பும் தவறுமாக முடிந்து நீ உன் இயல்பை தொலைத்தாய் . ஜெயதியை பக்கத்தில் வைத்துக்கொண்டே உண்மையான முகத்தை கண்டுகொள்ளும் திறனை ஏன் மறந்தாய் நிஷு " என்றான் ஒரு வித தவிப்புடன் .

"தெரியல யாஷ் அபியுடன் பழகும் நாட்கள் மிற்ற பெண்கள் போல இவளும் ஒரு நாள் தேவையற்று போவாள் என்று நினைத்து தான் பழகினேன் பிறகு எவ்வாறு இது காதலாக மாறியது என்று தெரியாது . அவளின் மரண செய்தி என்னை ஆட்டிவைத்தது அப்பொழுது உணர்ந்தேன் அவள் தான் என் உயிர் என்று . தொழிலை முழுதாக கவனத்துடன் பார்க்க முடியவில்லை . கடந்து வந்த நாட்களில் நான் வலியுடன் தெரிந்து கொண்டது ஐ லவ் அபிதா . ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுனு சும்மாவா சொன்னாங்க " என்று கூறி வெளியே சென்றுவிட்டான் நிஸ்வந்த் .

யஸ்வந்த் கோபத்தில் தனது மேஜையை ஓங்கி தட்டினான் "ஜெயதி " என்று கூறி பற்களை கடித்தான் .(இதோட இவங்க அறைக்கு மாற்றிய மேஜையின் எண்ணிக்கை 101 )
...................................................................
அங்கு ஜெயதியோ மும்பை மாநகரில் இருந்து சற்று ஒதுங்கினார் போன்ற இடத்தில் இருந்த விஸ்தாரமான மாளிகையினுள் நுழைந்தாள் . அவள் உள்ளே நுழைந்தவுடன் தாதியிடம் இருந்து நழுவி வந்து "அம்மா " என்று கூவி தனது அன்னைய நோக்கி ஓடினாள் அந்த தேவதை .

ஓடி வந்த மகளை ஆசையாக தூக்கிய ஜெயதி "அம்மு குட்டிமா " என்று செல்லம் கொஞ்ச ஆரம்பித்தாள் .
தாயும் மகளும் தனி உலகில் லயித்து இருந்த சமயம் அவர்களின் கவனத்தை கலைத்தது ஜெயதியின் அலைபேசியில் வந்த காணொளி அழைப்பு . அதில் வந்த முகத்தை கண்ட அந்த சின்ன வாண்டு பாவமாக தனது அன்னையை ஏறிட்டு பார்த்து அவளின் கைகளில் இருந்து இறங்கி தாதியுடன் தனது அறைக்கு சென்றாள் .

அந்த சிரிகுழந்தையின் வாட்டத்தை காண இயலாத ஜெயதி கோபத்தில் அருகில் இருந்த பூ ஜாடியை ஓங்கி அடித்து உடைத்தாள் . விதியின் சதியால் நிந்திக்கப்பட்ட அந்த இளம் தளிரின் வாழ்க்கையை எண்ணி நொந்துகொண்டாள் .

அதற்குள் அவளின் அலைபேசி மூன்று முறை அடித்து ஓய்ந்தது . ஒரு நிமிடத்தில் தன்னுடைய கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்த ஜெயதி அலைபேசிக்கு உயிர் கொடுத்து "ஹாய் அம்மா " என்றாள் வரவழைத்த புன்னகையுடன் .

தாய் அறியாத சூளா இருந்தும் வேற ஏதும் கேளாமல் "சொல்லு ஜெயா மா அங்க என்ன நடந்துச்சு " என்று கேட்டார் .
அன்னையிடம் எதையும் மறையாமல் சொல்லி முடித்த ஜெயதி அங்கு காணொளியில் காட்சி தந்த ரக்ஷிதாவை கண்டு "ஹாய் ரக்ஷி எப்படிம்மா இருக்க " என்றாள் பாசமாக .

"நல்லா இருக்கேன் அக்கா அம்மா தான் உங்களை பத்தி கவலை படறாங்க " என்றாள் ரக்ஷிதா .
"ஹே உன்னை அக்கா சொலாதனு எத்தனை தடவை சொல்லிற்கேன் ... " என்று பொய் கோபத்துடன் செல்லமாக மிரட்டினாள் ஜெயதி .

"அக்கா ...எனக்கு வரலை " என்று கூறி வேறு பேச்சிற்கு தாவினாள் ரக்ஷிதா . ஜெயதி அவளின் நோக்கம் புரிந்து மேலும் வலியுறுத்தாமல் அவளின் பேச்சிற்கு இணையாக பேசினாள் .

இவை அனைத்தையும் ஜெயதி வீட்டின் கூடத்தில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்த ஷில்பாவிற்கு தனது தோழியின் வருத்தம் பொறுக்க இயலாமல் 'பேசாமல் அவனுங்களை கொன்று விடுவோமா ' என்று என்ன ஆரம்பித்தாள் .
............................................................................................
நிஸ்வந்த் செயல் இழந்து இருந்த தனது மூளையை முடக்கி விட்டு நாலா பக்கமும் தன்னவளை தேடி அலைந்தான் . பலரை நியமித்தான் . தகவல் கொடுப்பவருக்கு பெரும் தொகையை தருவதாக கூறினான் அந்தோ பரிதாபம் எந்த ஒரு பாதுகாப்பு வலயத்தையும் தகர்த்த இயலாமல் ஓய்ந்து போய் இருந்தான் .

யஸ்வந்த் நிஸ்வந்த்தின் நிலை உணர்ந்து தொழிலை முழுதாக தன் கட்டுக்குள் கொண்டு வந்து பார்த்துக்கொள்ள ஆரம்பித்தான் . அவன் என்ன தான் முயற்சித்தாலும் அங்கு இவர்களை நியாயமான காரணத்திற்காக பலி தீர்க்க அவளின் எண்ணம் அறிந்த விதி கூட இவர்களுக்கு சதி செய்தது .

தொடர் தோல்வியில் கடும் கோபத்தில் இருந்த யஸ்வந்த் ஜெயதியின் ஆள் எவரேனும் தனது அலுவலகத்தில் இருக்கிறார்களா என்று அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஒவ்வொருவரை பற்றியும் ஆராய்ந்தும் எந்த தகவலும் உருப்படியாக இல்லாமல் அனைவரையும் சந்தேக கண்ணோடு பார்க்க ஆரம்பித்தான் .

அன்று ஒரு நாள் தோல்வியின் வலி தாங்காமல் மும்பை மாநகரத்தின் அடையாள சின்னமான கேட் வேய் ஒப் இந்தியாவின் அருகில் நின்று கடலை வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு இருந்தான் யஸ்வந்த் . அப்பொழுது அவனின் காலை உரசிக்கொண்டு புறாவை துரத்தி ஓடினாள் அந்த அழகு தேவதை .

அந்த மழலையின் உர்ச்சாகத்தில் தன்னை தொலைத்தான் யஸ்வந்த் . அப்பொழுது அன்று போல் இன்றும் ஒரு யுவதி ஓடி வந்து குழந்தையை தூக்குவதை கண்டான் . தெரிந்துகொண்டான் இது அவள் தான் என்று . அவன் என்ன முயன்றும் குழந்தை பற்றின தகவல் ஒரு துளி கூட அறிய இயலவில்லை .

ஜெயதியை கண்கொட்டாமல் பார்த்த யஸ்வந்த் மெதுவாக அவளை நெருங்கினான் . தனக்கு முன் அரவம் உணர்ந்த ஜெயதி கண்களை யஸ்வந்த்தின் பக்கம் திருப்பினாள் . அவளின் முகத்தில் தெரிந்த பாவம் என்ன ? குழம்பினான் யஸ்வந்த் . சரியாக அந்த சமயம் ஜெயதியின் அலைபேசியில் வந்த அழைப்பை கண்ட அந்த சின்ன வாண்டு கண்களில் தேங்கிய அழுகையுடன் தனது அன்னையின் முகத்தை பார்த்தாள் .

ஜெயதி உயிர் துடித்து போனாள் . யஸ்வந்த் நடப்பவையை பார்த்து முற்றிலுமாக குழம்பினான் ஒரு அழைப்பு ஏன் ஒரு மழலையின் சந்தோசத்தை வாட செய்கிறது ...? . ஜெயதி மற்றும் யஸ்வந்த்தின் இடையில் ஒரு ஐந்தடி தூரமாவது இருக்கும் ஆகையால் அவளின் அலைபேசியை அவனால் காண இயலவில்லை . அந்த குழந்தை கண்களில் தேங்கிய கண்ணீருடன் ஜெயதியின் கரங்களில் இருந்து இறங்கி புறாக்களை நோக்கி சென்றாள் .

எதிரில் ஒருவன் இருப்பதை மறந்து அழைப்பை துண்டித்து கண்களில் கண்ணீர் தேங்க குழந்தையை பார்த்தாள் ஜெயதி . யஸ்வந்த்தின் கால்களோ அனிச்சை செயலாக குழந்தையை நோக்கி முன்னேறியது . ஜெயதி உணர்வற்று போனாள் . ஷில்பா குழந்தைக்கு உன்ன ஏதேனும் கிட்டுமா என்று வாங்க சென்றிருந்தாள் .

யஸ்வந்த் குழந்தையை தூக்கி " உங்க பெயர் என்ன " என்றான் . ஜெயதி யஸ்வந்த்தின் குரலில் தன்னிலை அடைந்து விரைந்து பதட்டத்துடன் செல்வதற்குள் "ஆஞ்சி " என்று மழலையில் கூறியது .
அவன் புரியாமல் நிற்கையில் "நீங்க " என்று கேட்டாள் அந்த தேவதை . அவள் தன் பெயர் கேக்கிறாள் என்றுணர்ந்து முறுவலுடன் "யஸ்வந்த் ...யாஷ் கூப்பிடுங்க " என்றான் .

"அப்ப நிஷு " என்று மழலையில் கூறிய குழந்தையை கண்ட யஸ்வந்த் உறைந்தான் . அவனின் தடுமாற்றத்தை தனக்கு சாதகமா பயன்படுத்திய ஜெயதி அவனிடம் இருந்து குழந்தையை பறித்து வேகமாக கூட்டத்தின் நடுவில் சென்று மறைந்தாள் . அதற்கு அவளின் பாதுகாவலர்களும் உதவினர் ஷில்பாவும் வந்து சேர்ந்தாள் .

ஷில்பா யஸ்வந்த்தை எரிக்கும் பார்வை பார்த்து குழந்தையை வாங்கி வாகனத்தில் வேகமாக ஏறினாள் .
யஸ்வந்த் நொடி பொழுதில் நிகழ்ந்தவையை தடுக்க இயலாமல் பார்த்து தனக்குள் யோசிக்கலானான் .

"பெயர் அஞ்சி அப்டின்னா ... புரிலயே இப்படி ஒரு பெயரா " என்று தனக்குள் பேசி அடுத்த நொடி "நான் யாஷ் சொன்னா அவ அப்ப நிஷு அப்படினு கேட்டாளே அது எனக்கு புரிந்ததே ... நிஷுவை பற்றி குழந்தைக்கு எப்படி தெரியும் ... அந்த ராட்சசி ஏன் பயந்து பதட்டமானா ..யார் அவளுக்கு கூப்பிட்டது " பல கேள்விகளுடன் அந்த குழந்தையின் அடையாளத்தை தேட எண்ணிக்கொண்டான் .
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிகளே எனது இரண்டாம் கதையான அன்பே உ(எ)ன்னை உனக்காக ... கதையின் ஐந்தாம் அத்தியாயம் பதிந்துவிட்டேன் . படிச்சுட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க மக்காஸ் . உங்களின் ஆதரவை எப்பொழுதும் போல் இப்பொழுதும் எதிர் பார்க்கும் நான் (சாரல் ).

 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிஸ் மன்னிக்கவும்... ஒரு முக்கிய வேலையாக ஊருக்கு வந்துள்ளேன்... ஆகையால் இந்த வாரம் மட்டும் விடுமுறை எடுத்துக்கொள்கிரேன்...
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் - 6
யஸ்வந்த் மற்றும் அந்த குட்டி தேவதையின் அறிமுகத்திற்கு பிறகு ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் யஸ்வந்த்தால் எதையும் கண்டுகொள்ள முடியவில்லை . நிஸ்வந்தும் முயன்று ஜெயதியின் குடும்ப பின்னணியை அறிய முற்பட்டான் ஆனால் முடியவில்லை .

இருவரும் தொழிலும் தொடர் தோல்விகளையே சந்தித்தனர் . நிஷ்வந்தின் நிலை ஏதோ கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது . இவை அனைத்தையும் கண்ட யஸ்வந்த் நிஷ்வந்தையும் அழைத்துக் கொண்டு நேராக கண்ணனின் முன் நின்றான் .

கே கே நகர் இல்லத்தில் ராஜ் மற்றும் கண்ணன் இருவரும் கூடத்தில் நீள்விரிக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர் . அப்பொழுது வேகமாக உள்ளே வந்த இரட்டையர்கள் கண்ணனின் முன் நின்றனர் .

கண்ணன் புரிந்து கொண்டான் எதையும் முகத்தில் காட்டாமல் "உட்காரு யாஷ் ,நிஷு நீயும் உட்கரு "

யாஷ் பொறுமை இழந்தவனாக "அண்ணா நாங்க உங்க கிட்ட தனியா பேசணும் ..."

கண்ணன் நிதானம் இழக்காமல் "இங்கயே பேசலாம் " என்று கூறி அர்த்தம் பொதிந்த பார்வையை தந்தையின் பக்கம் செலுத்தினான் .

யாஷ் உடனே சிறு கோபம் எட்டி பார்த்த குரலுடன் " அண்ணா ஜெயதி யாரு ? " நேராக தனது கேள்விக்கு வந்தான் .

கண்ணன் சிறு புன்னகையுடன் "உனக்கே இந்நேரத்தில் தெரிஞ்சிருக்கும் யாஷ் " என்றான் பொறுமையாக . அனைத்தையும் ராஜ் வேடிக்கை பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தார் .

"அபி இன்னும் உயிரோடு இருக்கிறாளா ? " இப்பொழுது கேள்வி வந்தது நிஷுவிடம் இருந்து .

"அபி ஹான் என்ன திடீர் அக்கறை .... !! " எள்ளலாகவே கேட்டுவைத்தான் கண்ணன் .

"சோ உங்களுக்கு எல்லாம் தெரியும் ரைட் " இந்த கேள்வி நிஷுவிடம் இருந்து கூர்மையாக வந்தது .

"எனக்கு எல்லாம் தெரியும் " கண்ணன் நிதானமாக அழுத்தமாக சொன்னான் .

நிஷு இயலாமையுடன் பொத்தென்று நீல் விரிக்கையில் அமர்ந்தான் .

யாஷ் தன் இரட்டை பிறவியின் துயரை போக்கும் வகையில் அவனின் முதுகை தட்டி கொடுத்து அவனின் அருகில் அமர்ந்தான் .

"அண்ணா இது சரி இல்லை எதுவாக இருந்தாலும் நேராக எங்களிடம் கேள்வி கேட்டிருக்கலாம், ஆனால் இது ...இது சூழ்ச்சி எங்களை முதுகில் குத்திவிட்டீர்கள் ...உங்களை எவ்ளோ நம்பினோம் நீங்களே இப்படி செய்யலாமா " என்று இயலாமை நிறைந்த குரலில் கேட்டது யாஷ் . தன்னுடைய குருவான சகோதரன் தங்களுக்கு செய்தது நம்பிக்கை துரோகம் என்று எண்ணி எண்ணி வருந்தினான் . இந்த நொடி வரை அண்ணாவிற்கு இதில் சம்பந்தம் இருக்காது என்ற சிறு நம்பிக்கையில் வந்த அவனின் மனதிற்கு கண்ணன் தன் வாய்மொழியாகவே ஒத்துக்கொண்டது பெரும் வலியை ஏற்படுத்தியது .
ராஜ் ஏதும் கூறவில்லை அவரும் அமைதியாகவே அமர்ந்து இருப்பதைய் கண்ட யாஷ் புரிந்துக் கொண்டான் இதில் தங்களின் பெரியப்பாவின் பங்கும் பெரும் அளவில் இருக்கிறது என்று .

அப்பொழுது கோவிலுக்கு போயிட்டு உள்ளே நுழைந்த ரஞ்சினியை கண்ட ராஜ் "ரஞ்சி என்னமா சாமி கும்பிட்டாச்சா ...இங்க பாரு யாரு வந்திருக்கானு பசங்களுக்கு பிரசாதம் வச்சு விடு " என்றார் .

அப்பொழுதுதான் இரட்டையர் பக்கம் திரும்பிய ரஞ்சினி "அடடே டேய் பசங்கள எப்ப வந்திங்க இந்தா பிரசாதம் வச்சுக்கோ " என்று கோவில் பிரசாதத்தை நீட்டினார் .

"இன்னைக்கு மதியம் இங்க தான் சாப்பிடணும் " என்று அன்பு கட்டளை விதித்து உள்ளே சென்றார் .
நிஷு முயன்று தனது முக பாவத்தை மாற்றிக்கொண்டான் . யாஷ் இப்பொழுது பேய் அறைந்தார் போல் அமர்ந்து இருந்தான் .

அவனை பார்த்த கண்ணன் கண்ணில் சிரிப்புடன் அவனையே பார்த்தான் .

யாஷ் தன்னிலை அடைந்து ராஜின் பக்கம் திரும்பி "பெரியப்பா பெரியம்மாவை நீங்க எப்படி கூப்பிடுவீங்க " என்று குழப்பத்துடன் கேட்டான் .

நிஷு ஒரு புரியாத பார்வையை அவனின் பக்கம் செலுத்தி "எதுக்கு யாஷ் இப்ப ? " என்று கேட்டான் .

கண்ணன் மனதில் ' ஹஹா பயபுள்ள எதையோ கண்டுபிடிச்சிடுச்சோ ' என்று எண்ணினான் .

ராஜ் புன்னகையுடன் "ரஞ்சி " என்று நிறுத்தி நிதானமாக கூறினார் .

யஸ்வந்த் சட்டென்று எழுந்து விட்டான் நிஷு மேலும் குலம்பினான். கண்ணன் பக்கம் வந்த யாஷ் "நான் நினைக்கிறது உண்மையா இருந்தா அதை பலபேர் தாங்கிக்க மாட்டாங்க அண்ணா ...இதுக்காக நீங்க ரொம்ப வருத்தப்படுவீங்க " என்றான் .

கண்ணன் யஸ்வந்த்தை ஆழ்ந்த பார்வை பார்த்து " யாஷ் நீங்க ஆடின ஆட்டத்தின் முடிவை நான் தீர்மானித்தேன் இதுல என்ன தப்பு இருக்கு " நியாயவாதியாக வினவினான் கண்ணன் .

கண்ணன் சொல்லும் கூற்றில் இருந்த உண்மை புரிந்தாலும் அதை ஒத்துக்கொள்ளாமல் கோபத்துடன் வெளியே சென்றான் யாஷ் . நிஷு முற்றிலுமாக குழப்பமான மன நிலையில் யஸ்வந்த்தை தொடர்ந்து வெளியே சென்றான் .

ராஜ் கண்ணன் பக்கம் திரும்பி "கண்ணா இனி என்னப்பா நடக்கும் எதுக்கு இந்த கண்ணாமூச்சி ஆட்டம் "
என்றார்

"அப்பா கூட இருக்கும் பொழுது ஒருவரின் அருமை புரியாது அதே ஒருவர் நம்மை விட்டு பிரிந்தால் அவர் பின் ஓடி பிரயோஜனம் இல்லை ....இவன் செய்த அனைத்து தப்பயும் பொறுத்துக்கொண்டு இவனை முழுமனதாக ஒருவள் ஏற்றுக்கொண்டால் எப்படி எல்லாம் வைத்துக்கொள்ள வேண்டும் ...ஆனால் இவனோ ஏதோ அரைகுறையாக புரிந்த விஷயத்தின் தாக்கத்தில் ஒரு பெண்ணை எவ்வாறு நடத்தி உள்ளான் ...இது பத்தாது இனி தான் அவன் வாழ்வில் தொடங்குகிறது உண்மையான ஆட்டம் ." தனது கருத்தில் மிகவும் அழுத்தத்தை கூட்டி சொன்னான் கண்ணன் .
....................................................................................
மும்பையில் தனது அலுவலகத்தில் முழுமூச்சாக வேலை செய்துகொண்டு இருந்த ஜெயதியின் கவனத்தை கவர்ந்தது அவளின் அலைபேசி அதை எடுத்து காதில் பொருத்தினாள் அவள் .

"எப்படிம்மா இருக்க " என்றது எதிர் முனையில் இருந்த குரல் .


"நல்ல இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க " மிகவும் மரியாதையுடன் ஒலித்தது ஜெயதியின் குரல் . அங்கே அதே அறையில் தனது நாற்காலியில் அமர்ந்து இருந்த ஷில்பா ஜெயதியின் மரியாதையான குரலில் யார் அழைத்திருப்பது என்பதை உணர்ந்துக் கொண்டாள் .

"குழைந்தை எப்படி இருக்கா " என்றது அந்த குரல் .

ஜெயதியோ சோர்வுற்ற குரலில் "இருக்கா ...இந்த வயசில் அவளுக்கு புரிந்த வரையில் சில விஷயங்களை புரிந்துக்கொண்டு அவளையே வருத்திக் கொள்கிறாள் "

அவளின் குரலில் இருந்த சோர்வை உணர்ந்த எதிர் முனைக்கு உரியவர் "எல்லாம் நல்லதாவே நடக்கும் அந்த சின்ன தேவதை எங்கள் வீட்டின் வரம் ! ஒருமுறை யாரேனும் அவளை பார்த்தாள் அவளை அந்த நொடியே கூட அழைத்து வந்து விடுவார்கள் !! ...அவளுக்காக இங்கு பல சொந்தம் காத்துக்கொண்டு இருக்கிறது "

"பல சொந்தம் இருந்தும் என்ன பிரயோஜனம் இரண்டு வயதில் அந்த குழந்த மனதளவில் படும் துன்பம் கொடுமையானது ...கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்க வேண்டிய நபரிடம் இருந்து வந்தாலொழிய அந்த குட்டி தேவதையின் சிரிப்பு மலரும் ." என்று வருத்தமான குரலில் கூறினாள் அவள் .

"அதுக்குத்தான் கூப்பிட்டேன்மா அவர்களை இங்கு வரவைத்துவிடலாம் " என்றது அந்த குரல் .

அந்த குரல் சொன்ன செய்தியில் உறைந்த ஜெயதி "நிஜமாவா !! அவர்கள் இங்கு வந்தால் தேவை இல்லாத துயர் தான் மிஞ்சும் " என்றாள் அதிர்ச்சி விலகாமல் .

"இல்லை நான் எல்லாம் நல்ல விசாரித்துவிட்டேன் ... டாக்டர் கிட்ட பேசிட்டேன் . அவர்கள் இங்கு நிச்சயம் வரலாம் வரவேண்டும் இந்த ஆட்டம் முடிவை நோக்கி செல்கயில் நீ அதை தடுக்காதே " கண்டிப்புடன் கூறியது அந்த குரல் .

"இல்லை நான் அவளின் உடல் நிலை கருத்தில் கொண்டு தான் பேசினேன் . எனக்கும் இந்த ஆட்டத்தை ஆடி சலித்துவிட்டது . எதற்காக ஓடுகிறேன் என்றே தெரியாமல் ஓடிக்கொண்டு இருக்கிறேன் " என்றாள் ஜெயதி .

"ஏன் இந்த சோர்வு நியாயத்தை கேட்டு என் முன் கம்பீரமாக நின்ற அந்த சிறு பெண் எங்கே ... புத்தி கூர்மையுடன் இந்த ஆட்டத்தை ஆடிய என் அன்பு தங்கை எங்கே " எதிர் முனையில் இருந்த குரல் ஒரு வித பாசத்துடன் ஒலித்தது .

"நீங்க இல்லைனா என்ன பண்ணிருப்போம் என்றே தெரியாது . உங்களால் மட்டும் தான் மூன்றாடுக்கு பிறகான இந்த விளையாட்டு ஆரம்பித்தது . உங்களை நம்பி மட்டுமே நான் இதில் முழு மூச்சாக இறங்கினேன் உங்கள் பேச்சை என்றும் மீறமாட்டேன் நான் அவர்களை வரவைக்கிறேன் " என்று கூறி அழைப்பை துண்டித்தாள் ஜெயதி .

அதற்குள் ஷில்பா எழுந்து வந்து "பயணத்துக்கான ஏற்பாடை பண்ணிட்டேன் நீ அவங்களுக்கு கால் பண்ணி இன்னும் நான்கு நாட்களில் கிளம்ப தயாராக சொல்லு " புன்னகையுடன் கூறினாள் அந்த ஆருயிர் தோழி .

ஷில்பாவை திரும்பி பார்த்த ஜெயதி "தேங்க்ஸ் ஷில்பா ...நான் இந்தியா போறேன் சொன்ன உடனே எதைப்பத்தியும் யோசிக்காமல் என்னோடவே வந்துட்ட இப்ப கூட நான் சொல்லாம நீயே எல்லாம் ஏற்பாட்டையும் பண்ணிட்ட " நெகிழ்வான குரலில் கூறினாள் ஜெயதி . அவளின் நெகிழ்விற்கான காரணம் தனக்காக தனது தோழி பல லட்சங்களில் வரும் சம்பாத்தியத்தை விட்டு ஜெயதி ஒருத்திகாக இந்தியா வந்ததே காரணம் .
.................................................................................................
அது ஒரு அழகான திங்கட்கிழமை . பொழுது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் விடிந்தது . இது வரை குழந்தை ஜெயதி ,அவளின் அன்னை லீலாவதி, மேலும் ஷில்பா, அவர்கள் வீட்டில் குழந்தைக்காக வேலையில் அமர்த்த பட்டிருக்கும் நபர் என்று சிலரோடு மட்டுமே பழகிய இருக்கிறாள் ரக்ஷிதாவிடம் எவ்வாறு பழகுவாள் என்று புரியாமல் தவித்தாள் ஜெயதி . மேலும் முன் போல் குழந்தையை காயப்படுத்தி விடுவாளோ என்ற கவலை அவளை ஆட்கொண்டது . ஆனால் என்ன செய்ய முடியும் எத்துணை நாள் தான் இவ்வாறு குழந்தையை மறைத்து வைக்க முடியும் என்ற முடிவுடன் விமான நிலையம் நோக்கி தங்கள் வீட்டில் இருக்கும் இன்னோவா வாகனத்தில் ஷில்பாவை ஏற்றிக்கொண்டு சென்றாள் .

விமான நிலையத்தில் ரக்ஷிதா மற்றும் லீலாவதியின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தனர் ஜெயதி ஷில்பா மற்றும் அந்த இரண்டு வயது தேவதை .

அப்பொழுது சரியாக தங்களின் கல்லூரி தோழனை அழைத்துச்செல்ல வந்த யஸ்வந்த்தின் கண்ணில் பட்டாள் அந்த குழந்தை . அவளை இப்பொழுது பார்வையில் ஒரு வித உரிமையுடன் நோக்கினான் யஸ்வந்த் .

அந்த குழந்தையை நெருங்க அவன் தனது கால்களை முன்னே எடுத்து வைக்க நினைக்கையில் "ரஞ்சி குட்டி " என்ற குரல் அவனின் கவனத்தை கவர்ந்தது .

அந்த குரல் வந்த திசையை நோக்கினான் யஸ்வந்த் அப்பொழுது அங்கே கைகளை விரித்துகொண்டு நின்றிருந்தார் லீலாவதி . யஸ்வந்த்தால் லீலாவதியை அடையாளம் காண முடிந்தது பலமுறை பத்திரிகையில் அவரின் புகைப்படத்தை கண்டிருக்கிறான் . அவரின் கைகளில் ஓடிச்சென்று பாந்தமாக அடங்கினாள் அந்த 'ரஞ்சி குட்டி ' என்று அழைக்கப்பட்ட அந்த சின்ன தேவதை .

ஏற்கனவே யஸ்வந்த் யூகித்து இருந்த விஷயம் என்றாலும் அதை நிஜத்தில் உணரும் தருணத்தில் அவன் அதிர்ச்சியாகினான் . அவனின் அதிர்ச்சியை கூட்டும் வகையில் லீலாவதியின் பின்னே வந்து நின்றாள் ரக்ஷிதா .'இவங்க எப்படி ...அதும் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் ' என்று யஸ்வந்த் எண்ணிக்கொண்டு இருக்கையிலே ரஞ்சி பாட்டியின் கைகளில் இருந்து இறங்கி கண்களில் தேங்கிவிட்ட கண்ணீருடன் ஜெயதியிடம் தாவினாள் . உணர்ந்தாற்போல் ஜெயதியும் ரஞ்சியை அன்போடு அனைத்துக் கொண்டாள் .

சரியாக அந்த சமயம் உள்ளே வந்தான் நிஸ்வந்த் பல முறை யாஷுக்கு அழைப்பு விடுத்து பார்த்து பதில் இல்லை என்றவுடன் உள்ளே வந்த நிஷு கண்டது உறைந்து நிற்கும் தனது தம்பியை . யாஸ்வந்தின் பார்வை சென்ற திக்கை பார்த்த நிஸ்வந்த் முழுதாக அடிபோனான் . அவனின் பார்வை சொன்ன செய்தியை அவனால் நம்ப முடியவில்லை .
அதற்குள் அவர்கள் அனைவரும் அவ்விடம் விட்டு பாதுகாவலர்களின் உதவியுடன் நகர்ந்தனர் . அதில் பார்வையின் திசையை திருப்பிய யஸ்வந்த் அங்கு நிஸ்வந்த் சற்று தள்ளி நிற்பதை கண்டு அவனின் அருகில் சென்று தோழில் கை வைத்தான் .

நிஸ்வந்த் கண்களில் கண்ணீருடன் "அது அவதான " என்றான் ஏக்கமாக . யஸ்வந்த்திற்கு அவனின் நிலை புரிந்தது ஆம் என்னும் விதமாய் தலை ஆடி வைத்தான் . அவர்களின் நண்பனும் வந்து சேர்ந்தான் தங்களை ஓரளவு சுதாரித்துக் கொண்டு நண்பனுடன் இயல்பாக இருப்பது போல் பேச ஆரம்பித்தனர் . இருந்தும் நிஷுவின் கலக்கம் மறைந்தபாடில்லை அதை யஸ்வந்த்தும் கவனிக்க தவறவில்லை .
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ் ஆம் பாக் ...ஒரு வார விடுமுறை எடுத்துக்கொண்டு என்னுடைய கதை அன்பே உ(எ)ன்னை உன்னக்காக.... கதையின் 6 அத்தியாயத்துடன் வந்துவிட்டேன் படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் . இனி தொடர்ந்து அப்டேட் கொடுக்க முயற்சிக்கிறேன் . உங்களின் காத்திருப்புக்கு நன்றி . இப்படிக்கு நான் (சாரல் )

 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோழிகளே ஏன் இந்த கதைக்கு மட்டும் இத்துனை தடங்கல் என்று தெரியவில்லை... தாமதத்திற்கு மிகவும் வருந்துகிறேன் தவிர்க்க mudiyatha சூழ்நிலை காரணமாக என்னால் பதிவை சரியாக போ முடியவில்லை mannithu பெருத்து கொள்ளுங்கள் தோழிஸ்... சீக்கிரம் pathivudan வருகிறேன்.... 😍😍😍😍
 

saaral

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தொடர்ந்து வீட்டில் ஒவ் ஒருவராக உடல் நலம் குன்றி இருப்பதால் ennal இங்கு சரியாக வந்து பதிவை போட இயலவில்லை.... நிச்சயம் சீக்கிரம் வந்து பதிவு podugiren தோழிஸ்
 
Status
Not open for further replies.
Top