All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

Status
Not open for further replies.

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோ..

அருமை சகோ... எப்படி சொல்ல??
வார்த்தைகள் திக்கி திணறி கூட வெளிய வர முடியாதபடி ஒரு அழுத்தமான மனநிலைய உங்க வரிகள் உருவாக்கிடுச்சு.. அலர் கதாபாத்திரம்!!!! சொல்ல வார்த்தைகள் இல்லை.. அவளது ஏக்கம், பயம், பரிதவிப்பு, தைரியம், அத்தனையும் அவ்வளவு உணர்வுபூர்வமா குடுத்துருக்கீங்க.. அதற்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.. இது ஒரு கற்பனை கதைதானேனு அவ்வளவு சுலபமாக கடந்து செல்ல முடியல.. இது போன்ற சம்பவம் எங்கோ ஒரு மூலையில் நம் உடன்பிறவா உறவுக்கு அனுதினமும் நடந்துட்டேதான் இருக்கு. இங்க இருக்கிற கல், மண், நிலம், நீர், காற்று, ஆகாயம் எல்லாமே பெண் பெயரை வைத்து போற்றப்படுது.. ஆனால் காக்கப்படுதான்னு கேட்ட?? நிச்சயமாக இல்லை சீரழிக்கதான் படுது. என்னடா இவன் கதையை பற்றி கருத்து சொல்லாம வேறு எதையோ சொல்லறானு தவறாக எண்ண வேண்டாம்.. எழுத்துக்களால் என்னை பாதித்தவர்களில் நீங்களும் ஒருவர். அதனால் இதை பகிர்ந்து கொள்கிறேன். கதையின் கருத்துக்களை நிறை குறைகளை நேரம் கிடைக்கும்போது விரிவாக பதிவு செய்கிறேன்..

கதையின் அடுத்த நகர்வை எதிர்நோக்கி என்றும் அன்புடன் வடிவேல்..
 
Status
Not open for further replies.
Top