“ஹாஹாஅஹாஹாஹாஹா” என ஆர்ப்பாட்டமாய் சிரித்தான் ஷிவேந்திரன்.
தன்னுடைய புடவையால் நாக்கை வெளியே நீட்டி ‘வரட்டு வரட்டென்று’ துடைத்தாள் புகழினி நாக்கில் ஒட்டியிருந்த சுவையை போக்குவதற்காக! அதனை தடுத்தி நிறுத்தி,
“ஹே குட்டி என்னடா ஜூஸ் பிடிக்கலையா?”
“உவ்வாஅய் இது என்னது? ஒரு மாதிரியா இருக்கு? வாடையும் சரியில்லை, சுவையும் சரியில்லை..”
“ம்ம்ம்ம் இது பியர்!”
“என்னவோ! நல்லாவே இல்ல.. உவ்வே..”
“இது மருந்துடா குட்டி! அருகம்புல் ஜீஸ் மாதிரி இதுவும் ஒரு ஜீஸ்… குடிச்சா உடம்பு நல்ல ஷைனிங்கா அதாவது நல்ல பளபளப்பா இருக்கும். அப்புறம் உடம்பு நல்ல வெயிட் போடும்.”
“அம்புட்டு நல்ல மருந்தா இது! அதேன் விமன்யா புள்ள இதையே பொழுதுக்கும் குடிச்சிட்டு கிடக்கா!”
“ம்ம்ம் ஆமா! ஆமா!” சிரிப்பை மென்றபடி பலமாக தலையாட்டினான் அவள் இணையவன்.
“அப்ப சுகி ஆத்தாக்கிட்ட இந்த மருந்த குடிக்கச் சொல்லனும். இப்ப கொஞ்ச நாளா இளச்சு போய்த்தாய்ங்க பாவம்..”
“கண்டிப்பா, நாளைக்கு உன் ஆத்தாக்கு நீயே கொண்டு குடேன்!” என்றான் கண்களில் விசமம் மின்ன.
“ஐ, நான் நாளைக்கு மறக்காம கொண்ட ஆத்தாக்கு குடுக்குறேன். ஆமா எனக்கு எதுக்கு குடுத்துயே? நான் நல்லாதேன் இருக்கேன்.”
“நீயா! ஹ எலிகுஞ்சு மாதிரி இருக்க.. அதான் இது கொடுத்து உன் உடம்ப தேத்தலாம்னு பாத்தேன்”
“உங்களுக்கு நான் இப்படிதேன் தெரியுவேன்.. ஏனா நீங்கெ அப்படி இருக்கிய…”
“எப்படி இருக்கேன், காட்டெருமை மாதிரியா?”
“அமா(ய்ன்)“ என்று சொல்லி தலையாட்டிவிட்டு, பின்பு தான் சொன்னதை உணர்ந்து கலவரமாக அவனை நோக்கி,
“இல்ல, அப்புடியில்ல! நீங்கெ அப்டியில்ல..” என்று கூறி மறுப்பாக கைகளை அசைத்தாள். அவன் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து கொண்டிருந்தான்.
புகழினி அவனை ஒரு வித பதட்டத்தோடு நோக்கினாள். பயத்தையும் தாண்டிய ஒரு உணர்வை அவனது பார்வை அவளுக்கு கொடுத்தது. அதை இன்னதென்று அவளால் பகுத்தறிய முடியவில்லை!
மணி சரியாக பணிரெண்டு அடித்தது, அவளை அப்படியே கைகளில் அள்ளி கொண்டு பால்கனிக்கு சென்றான். புகழினி பயத்தில் கண்களை இறுக மூடிகொண்டு, அவன் கழுத்தை இறுக கட்டி கொண்டாள். எங்கே தான் சொன்னதற்கு கோபம் கொண்டு தன்னை பால்கனியிலிருந்து கீழே வீசிவிடுவானோ என்ற பயம் அவளுக்கு. அவளை கைகளில் ஏந்தியபடி பால்கனியில் கொடி மண்டபம் இருந்த திசை பக்கம் வந்து நின்றவன் அவள் காதோரமாக குனிந்து,
“தெய்வா கண்ணை திறந்து பாரேன்” என்றான் கொஞ்சலான குரலில். மெதுவாக ஒற்றை கண்ணை மட்டும் திறந்து அவனை பார்த்தாள். படக்கென கண்ணடித்தவனைக் கண்டு அரண்டவள் மறுபடியும் கண்களை இறுக மூடி கொண்டாள். புகழினிக்கு எதன் மீதோ அமர்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்த அலங்கார ஊஞ்சலில் ஷிவேந்திரன் அமர்ந்திருக்க, அவன் மடியில் அழகாக அமர வைக்கப்பட்டிருந்தாள் புகழினி. அவன் அவள் முகத்தை திருப்பி கொடி மண்டபம் இருக்கும் திசையை சுட்டிக் காட்டினான்.
திரும்பிய புகழினியின் கண்கள் சந்தோசத்தில் விரிந்ததன.
“பிடிச்சிருக்கா!” என்று கிசுகிசுப்பான குரல் காதோரம் மீசை உராய கேட்டது. அந்த உராய்வில் அவள் உடல் நடுங்கி சிலிர்த்தது. அவள் பேச்சற்று ஆச்சரியமாக விழி விரித்து கணவனை நோக்கினாள்.
அவன் அவள் முகம் நோக்கி மெல்ல குனிந்தான், அவள் கண்களை ஆழ்ந்தபடி. கள்ளவனின் விழிவிசையின் வீச்சில் கிள்ளையின் கண்கள் அகல விரிந்து கொண்டே சென்றன. இமைகள் படபடக்க, மூச்சுகள் முட்டி மோத, வன்மையாளனின் முரட்டு உதடுகள் மென்மையாளின் மெல்லிழத்களை ஸ்பரித்தன. முத்தம்! முதல் முத்தம்!
புகழினியின் நெஞ்சு கூடு படபட என்று அடித்து கொண்டது. தன் கையிலிருந்த சிறிய நகை பெட்டியை திறந்து அதிலிருந்த வைர மோதிரத்தை அவள் இடது கை நடுவிரலில் அணிவித்து “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புகழினி தெய்வமங்கை!” என்று மந்தகாசமான புன்னகையுடன் வாழ்த்தினான் ஷிவேந்திரன்! புகழினியின் அழகிய அசுரன்!
கருப்பு அழகி வருவாள்…
தன்னுடைய புடவையால் நாக்கை வெளியே நீட்டி ‘வரட்டு வரட்டென்று’ துடைத்தாள் புகழினி நாக்கில் ஒட்டியிருந்த சுவையை போக்குவதற்காக! அதனை தடுத்தி நிறுத்தி,
“ஹே குட்டி என்னடா ஜூஸ் பிடிக்கலையா?”
“உவ்வாஅய் இது என்னது? ஒரு மாதிரியா இருக்கு? வாடையும் சரியில்லை, சுவையும் சரியில்லை..”
“ம்ம்ம்ம் இது பியர்!”
“என்னவோ! நல்லாவே இல்ல.. உவ்வே..”
“இது மருந்துடா குட்டி! அருகம்புல் ஜீஸ் மாதிரி இதுவும் ஒரு ஜீஸ்… குடிச்சா உடம்பு நல்ல ஷைனிங்கா அதாவது நல்ல பளபளப்பா இருக்கும். அப்புறம் உடம்பு நல்ல வெயிட் போடும்.”
“அம்புட்டு நல்ல மருந்தா இது! அதேன் விமன்யா புள்ள இதையே பொழுதுக்கும் குடிச்சிட்டு கிடக்கா!”
“ம்ம்ம் ஆமா! ஆமா!” சிரிப்பை மென்றபடி பலமாக தலையாட்டினான் அவள் இணையவன்.
“அப்ப சுகி ஆத்தாக்கிட்ட இந்த மருந்த குடிக்கச் சொல்லனும். இப்ப கொஞ்ச நாளா இளச்சு போய்த்தாய்ங்க பாவம்..”
“கண்டிப்பா, நாளைக்கு உன் ஆத்தாக்கு நீயே கொண்டு குடேன்!” என்றான் கண்களில் விசமம் மின்ன.
“ஐ, நான் நாளைக்கு மறக்காம கொண்ட ஆத்தாக்கு குடுக்குறேன். ஆமா எனக்கு எதுக்கு குடுத்துயே? நான் நல்லாதேன் இருக்கேன்.”
“நீயா! ஹ எலிகுஞ்சு மாதிரி இருக்க.. அதான் இது கொடுத்து உன் உடம்ப தேத்தலாம்னு பாத்தேன்”
“உங்களுக்கு நான் இப்படிதேன் தெரியுவேன்.. ஏனா நீங்கெ அப்படி இருக்கிய…”
“எப்படி இருக்கேன், காட்டெருமை மாதிரியா?”
“அமா(ய்ன்)“ என்று சொல்லி தலையாட்டிவிட்டு, பின்பு தான் சொன்னதை உணர்ந்து கலவரமாக அவனை நோக்கி,
“இல்ல, அப்புடியில்ல! நீங்கெ அப்டியில்ல..” என்று கூறி மறுப்பாக கைகளை அசைத்தாள். அவன் அவளை ஒரு மார்க்கமாக பார்த்து கொண்டிருந்தான்.
புகழினி அவனை ஒரு வித பதட்டத்தோடு நோக்கினாள். பயத்தையும் தாண்டிய ஒரு உணர்வை அவனது பார்வை அவளுக்கு கொடுத்தது. அதை இன்னதென்று அவளால் பகுத்தறிய முடியவில்லை!
மணி சரியாக பணிரெண்டு அடித்தது, அவளை அப்படியே கைகளில் அள்ளி கொண்டு பால்கனிக்கு சென்றான். புகழினி பயத்தில் கண்களை இறுக மூடிகொண்டு, அவன் கழுத்தை இறுக கட்டி கொண்டாள். எங்கே தான் சொன்னதற்கு கோபம் கொண்டு தன்னை பால்கனியிலிருந்து கீழே வீசிவிடுவானோ என்ற பயம் அவளுக்கு. அவளை கைகளில் ஏந்தியபடி பால்கனியில் கொடி மண்டபம் இருந்த திசை பக்கம் வந்து நின்றவன் அவள் காதோரமாக குனிந்து,
“தெய்வா கண்ணை திறந்து பாரேன்” என்றான் கொஞ்சலான குரலில். மெதுவாக ஒற்றை கண்ணை மட்டும் திறந்து அவனை பார்த்தாள். படக்கென கண்ணடித்தவனைக் கண்டு அரண்டவள் மறுபடியும் கண்களை இறுக மூடி கொண்டாள். புகழினிக்கு எதன் மீதோ அமர்வது போன்ற உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்த அலங்கார ஊஞ்சலில் ஷிவேந்திரன் அமர்ந்திருக்க, அவன் மடியில் அழகாக அமர வைக்கப்பட்டிருந்தாள் புகழினி. அவன் அவள் முகத்தை திருப்பி கொடி மண்டபம் இருக்கும் திசையை சுட்டிக் காட்டினான்.
திரும்பிய புகழினியின் கண்கள் சந்தோசத்தில் விரிந்ததன.
“பிடிச்சிருக்கா!” என்று கிசுகிசுப்பான குரல் காதோரம் மீசை உராய கேட்டது. அந்த உராய்வில் அவள் உடல் நடுங்கி சிலிர்த்தது. அவள் பேச்சற்று ஆச்சரியமாக விழி விரித்து கணவனை நோக்கினாள்.
அவன் அவள் முகம் நோக்கி மெல்ல குனிந்தான், அவள் கண்களை ஆழ்ந்தபடி. கள்ளவனின் விழிவிசையின் வீச்சில் கிள்ளையின் கண்கள் அகல விரிந்து கொண்டே சென்றன. இமைகள் படபடக்க, மூச்சுகள் முட்டி மோத, வன்மையாளனின் முரட்டு உதடுகள் மென்மையாளின் மெல்லிழத்களை ஸ்பரித்தன. முத்தம்! முதல் முத்தம்!
புகழினியின் நெஞ்சு கூடு படபட என்று அடித்து கொண்டது. தன் கையிலிருந்த சிறிய நகை பெட்டியை திறந்து அதிலிருந்த வைர மோதிரத்தை அவள் இடது கை நடுவிரலில் அணிவித்து “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புகழினி தெய்வமங்கை!” என்று மந்தகாசமான புன்னகையுடன் வாழ்த்தினான் ஷிவேந்திரன்! புகழினியின் அழகிய அசுரன்!
கருப்பு அழகி வருவாள்…