All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
ஆரு அந்த பள்ளத்தில் விழுந்தவுடன், அவளை காக்க அவளின் தேஜா வூ வருவானா என எதிர்பார்த்து கொண்டிருக்கையில் அவள் கால சக்கரத்தில் பயணிப்பது அருமை 👌 இனி அவ்வளவு தான் விழப்போகிறோம் என்று அவள் நினைக்கையில் அந்த பள்ளத்தில் மிதப்பது அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

அந்த காலச்சக்கரம் அவள் வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுக்கும் பின்னோக்கி அழைத்து செல்கிறது.அவள் யாரை பார்க்க வேண்டுமென ஆவல் கொண்டிருக்கிறாளோ அவனை அவள் சந்தித்த ஒவ்வொரு தருணத்திற்கும் அழைத்து செல்கிறது.

நிகழ்கால ஆருவை சிறுவன் ரவி ஆன்ட்டி என்றழைப்பதும், இளவயது ரவி அவளை அக்கா என்றழைப்பதும் அவளுக்கு பெருஞ்சினத்தை ஏற்படுத்தினால், நமக்கோ அக்காட்சிகள் அனைத்தும் முகத்தில் புன்முறுவலை தோற்றுவிக்கிறது 😍

ரவி தான் அவளின் தேஜா வூ என்று உணர்ந்துகொண்டாள். இனி அவள் குலோப் ஜாமூனை நோக்கி அவள் பயணம் தொடர்கிறது. அவர்கள் இருவரின் சந்திப்பிற்க்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன், பல கேள்விக்கான விடைகளையும் எதிர்நோக்கி 😍
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆரு அந்த பள்ளத்தில் விழுந்தவுடன், அவளை காக்க அவளின் தேஜா வூ வருவானா என எதிர்பார்த்து கொண்டிருக்கையில் அவள் கால சக்கரத்தில் பயணிப்பது அருமை 👌 இனி அவ்வளவு தான் விழப்போகிறோம் என்று அவள் நினைக்கையில் அந்த பள்ளத்தில் மிதப்பது அவளை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.

அந்த காலச்சக்கரம் அவள் வாழ்வின் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுக்கும் பின்னோக்கி அழைத்து செல்கிறது.அவள் யாரை பார்க்க வேண்டுமென ஆவல் கொண்டிருக்கிறாளோ அவனை அவள் சந்தித்த ஒவ்வொரு தருணத்திற்கும் அழைத்து செல்கிறது.

நிகழ்கால ஆருவை சிறுவன் ரவி ஆன்ட்டி என்றழைப்பதும், இளவயது ரவி அவளை அக்கா என்றழைப்பதும் அவளுக்கு பெருஞ்சினத்தை ஏற்படுத்தினால், நமக்கோ அக்காட்சிகள் அனைத்தும் முகத்தில் புன்முறுவலை தோற்றுவிக்கிறது 😍

ரவி தான் அவளின் தேஜா வூ என்று உணர்ந்துகொண்டாள். இனி அவள் குலோப் ஜாமூனை நோக்கி அவள் பயணம் தொடர்கிறது. அவர்கள் இருவரின் சந்திப்பிற்க்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன், பல கேள்விக்கான விடைகளையும் எதிர்நோக்கி 😍
நல்ல விமர்சனம். எனக்கு பிடிச்சிருக்கு. U r a gud reader💗
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Azhaga irukku edho fantasy world kulle pore madiri...
But konjam confused a iluthu...
Thank u dear hanza. குழப்பங்கள் தீரும் இனி வரும் பதிவுகளில். தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து உற்சாக படுத்தும் படி கேட்டு கொள்கிறேன்.😄😚
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Lovely episode.... Ravi kita vanthuta ஆராதனா.... Avanuku ஒரே ஆச்சர்யம்.... Rendu perum onnu senthutaanga
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa... Lovely episode.... Ravi kita vanthuta ஆராதனா.... Avanuku ஒரே ஆச்சர்யம்.... Rendu perum onnu senthutaanga
Yes. ரெண்டு பேரும் சேர்ந்து விட்டார்கள்😍
 

Ramyasridhar

Bronze Winner
மிகவும் கவித்துவமான பதிவு 👌👌😍😍😍
ஆரு ரவியிடம் வந்து சேர்வதற்கு முன்னர் அவனின் அழகினை கண்டு மயங்கி நிலாமகளும் கேண்டில் லைட்டும் போட்டி போட்டுக்கொள்வதும், நிலாமகள் வெட்கம் கொண்டு மேகத்திற்குள் ஒளிவதும், பின் மெல்ல அவனை எட்டிப்பார்க்க அங்கே இருந்த கேண்டிலை கண்டு பொறாமை கொண்டு தன் ஒளியை கூட்டுவதும், கேண்டில்களும் பெல்லி டான்ஸ் ஆடுவதும், இவர்கள் இருவரையும் கண்டு பரிகசிக்கும் வெள்ளை ரோஜாக்கள், ஆரு வந்தவுடன் தங்களை விட அழகியான அவள் அழுவதை பொறுக்காமல் இவர்கள் அழுது கரைவதும் பின் அவள் சோகத்தை போக்க இவர்கள் ஒளிக்கதிர்களை பிரகாசிக்க செய்வது என எல்லாமே மிகவும் கவித்துவமாகவும் ரசனைமிக்கதாகவும் இருந்தது 🥰🥰

தன்னவளை பற்றிய நினைவுகளிலேயே குளியல் தொட்டியில் அமர்த்திருந்தவன் முன்னால் அவன் எண்ணத்தின் நாயகியே வந்து அவனை கட்டியணைக்கிறாள். அந்த இன்ப அதிர்ச்சியில் இவன் பேச்சற்று தான் போகிறான் மாறாக அவள் பேசிக்கொண்டே இருக்கிறாள். எங்கே இவன் யாரென்று அறியாமல் அவள் முன்பு மறுத்ததனால் வெறுத்துவிடுவானோ என்று அஞ்சியும், அவளின் காதலை அவனுக்கு சொல்லிவிடும் வேகத்திலும் அவள் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறாள். இருவரும் இணைந்ததில் மகிழ்ச்சி.

இனி வரும் பதிவுகளில் சில புதிர்களுக்கான முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழும் என எதிர்பார்க்கிறேன் 😍
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த கல்லின் சக்தி மூலமாக காலச்சக்கரத்திற்கு செல்ல முடியுமா சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
அதற்கான காரணம் இனி வரும் பதிவுகளில் வரும்.;):)
 
Top