All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாமரையின் மடல்கள்

Nayaki

Bronze Winner
லோட்டஸ் உங்க வரிகள் நெஞ்ச பிழியுது...அருமை அருமை அருமை
 

தாமரை

தாமரை
10284

கனவு காண சொன்னவர்..
பல நல்நனவுகளின் நாயகன்..

வெற்றிக்குப் பின்னே தன்னையும்.. தன் உழைப்பை மட்டுமே கொண்ட உத்தமர்..

அக்கினிச் சிறகுகள் கொண்ட பறவைகளை படைத்த கடவுள்..

வாழும் போதும்.. இறுதி மூச்சு வரையிலும் எதிர்கால இந்தியாவை செதுக்குவதில் முனைந்து நின்ற நன்மகன்..

சூரியனாய் தனித்து நின்று பல உள்ளங்களில் ஒளியேற்றியவர்..

உழைப்பின் பெருமையை செயலில் காட்டி இறப்பதற்கு ஒரு கணம் முன்பு கூட செயல் வீரராய் நின்றவர்..

இந்தியாவின் கடைக்கோடியில் பிறந்து.. முதல் குடிமகனாய் நின்றவர்..

அவர்
உதித்த தினத்திலே.. அன்னாரின்.. நல்மொழிகளை நினைவுகூர்கிறேன்..


*சூரியன் போல் ஜொலிக்க சூரியன் போல எரியத் தயாராய் இருக்க வேண்டும்..

*பறவைகள் மழை தாக்காமல் கூட்டினுள் அடையும்.. பறவை அரசனோ மேகத்திற்கும் மேலே உயரமாய் பறந்து மழையை அண்ட விடாமல் செய்யும்.

* வெற்றியாளர்கள் வாழ்க்கை கதை வெறும் தகவல் தான் தரும்.. தோல்வியாளர்களின் கதையோ பாடமாக, வெற்றிக்கு வழிகாட்டியான யோசனைகள் தருவதாய் இருக்கும்.

*கனவு என்பது தூக்கத்தில் வருவதல்ல.. உனை தூங்கவிடாமல் செய்வது..

*உன் கையெழுத்து ஆட்டோக்ராப் ஆக மாறுவதே வெற்றி..

... என்றும் நினைவில் வைப்போம்.. ஏவுகணை மனிதரை...



 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 10284

கனவு காண சொன்னவர்..
பல நல்நனவுகளின் நாயகன்..

வெற்றிக்குப் பின்னே தன்னையும்.. தன் உழைப்பை மட்டுமே கொண்ட உத்தமர்..

அக்கினிச் சிறகுகள் கொண்ட பறவைகளை படைத்த கடவுள்..

வாழும் போதும்.. இறுதி மூச்சு வரையிலும் எதிர்கால இந்தியாவை செதுக்குவதில் முனைந்து நின்ற நன்மகன்..

சூரியனாய் தனித்து நின்று பல உள்ளங்களில் ஒளியேற்றியவர்..

உழைப்பின் பெருமையை செயலில் காட்டி இறப்பதற்கு ஒரு கணம் முன்பு கூட செயல் வீரராய் நின்றவர்..

இந்தியாவின் கடைக்கோடியில் பிறந்து.. முதல் குடிமகனாய் நின்றவர்..

அவர்
உதித்த தினத்திலே.. அன்னாரின்.. நல்மொழிகளை நினைவுகூர்கிறேன்..


*சூரியன் போல் ஜொலிக்க சூரியன் போல எரியத் தயாராய் இருக்க வேண்டும்..

*பறவைகள் மழை தாக்காமல் கூட்டினுள் அடையும்.. பறவை அரசனோ மேகத்திற்கும் மேலே உயரமாய் பறந்து மழையை அண்ட விடாமல் செய்யும்.

* வெற்றியாளர்கள் வாழ்க்கை கதை வெறும் தகவல் தான் தரும்.. தோல்வியாளர்களின் கதையோ பாடமாக, வெற்றிக்கு வழிகாட்டியான யோசனைகள் தருவதாய் இருக்கும்.

*கனவு என்பது தூக்கத்தில் வருவதல்ல.. உனை தூங்கவிடாமல் செய்வது..

*உன் கையெழுத்து ஆட்டோக்ராப் ஆக மாறுவதே வெற்றி..

... என்றும் நினைவில் வைப்போம்.. ஏவுகணை மனிதரை...
VERA LEVAL AKKA
 

வான்மதி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thamarai akka,

super super romba naal piragu nalla kavithaigal vasitha feel. semma, athuvum 2vathu madal adi thool. itha vitratheenga ka. thodarnthu eluthunga. vaalthukal.
 

தாமரை

தாமரை
12574

#இனிய_மகளிர்_தின_நல்வாழ்த்துக்கள் ⚢♀⚢♀⚢♀⚢♀⚢♀⚢♀⚢♀

நடுஇரவு..
நகைகளணிந்த நங்கை..
நடந்து வரும் கங்கை..
அழகில் மேனகை..
வருகிறாள்..
தனியே தன் பணிமுடித்து..


மேடுபள்ளங்கள் மீதூறும் பார்வை..


களவு கொள்ள எண்ணும் கயமைப் பார்வை..

'இந்நேரத்தில் என்ன!எங்கே?'
ஆராய்ச்சிப் பார்வை..
'எம்மதம்.. என்ன ஜாதி' கேள்விப்பார்வை..


மூன்றாம் பாலை வன்மையாய் குடிக்க எண்ணும் விலங்கின் பார்வை..

ஏதுமில்லை.. எங்கும் இல்லை.. ஆம்... எங்குமே இல்லை.. இல்லவே இல்லை..


படபடப்பு ஏதுமின்றி ..
வழமை போல்
தன் வழியில்..
தன் கூட்டை நாடி..
நடக்கிறாள்..
பிடித்த பாடலை முணுமுணுத்து..

அயர்ந்து உறங்கும் குடும்பத்தின்
துயில் கலைக்காமல்..
துகில் மாற்றி.. யுகமாய் உழைத்த களைப்பு இதமாய் அழுத்த பஞ்சணை புக..
சுகமாய் அணைத்தன தேவனின் கரங்கள்.. நித்திரைத் தேவனின் கரங்கள்..

அச்சம்.. நாணம்.. மடமை.. பயிர்ப்பு ஏதும் சுமக்க தேவையில்லா மகளவள்.. மண்ணின் மேன்மை கூட்ட வந்த மகளிர் குலமவள்..

துஞ்சினாள்.. மறுநாளில் இன்னமும் வீறு கொண்டு விளங்கச் செய்ய.. அவனியை..

இந்நாள்.. இப்படி ஒரு நாள் வரும்..
💖💐💖💐💖💐💖💐💖💐💖💐💖💐

அனைவருக்குமான உலகாய் இவ்வுலகம் அழகாய் சுழலும்..

🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁🏁

வாழ்த்திய அன்புள்ளங்களுக்கு நன்றி.
உங்களுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள் 💐💐💐💐
 
Top