அனிச்சப்பூவே உதிராதே... !
ஹீரோ பெயர் மனோகரப்பாண்டியன்.. முகம் பார்க்கும் கண்ணாடிப் போல இவன்.. அன்பைக் காட்டினால் அன்பால் கொல்லுவான்... இவனுக்கு எதிரியாய் இருபவனைக்கூட மன்னித்து விட்டுவிடுவான்.. துரோகியாய் இருபவனை வஞ்சம் வைத்து தீர்க்க இவனை போல யாராலும் முடியாது .. (ஆக மொத்தம் யாரா இருந்தாலும் கொல்லுவான்
)..
ஹீரோஹின் பெயர் மெல்லினா.. பெயரை போலவே மென்மையானவள்... அதிகம் வாய்திறந்து பேசாவிட்டாலும் தன் கண் பார்வையிலே கதை பேசும் காரிகை இவள்...இவளுக்கு கோபம் வந்தாள் மட்டும் கொற்றவை ஆகிவிடுவாள்...
அனிச்சப்பூவே உதிராதே... !
டீஸர் -1
சியாமளா.. சியாமளா..என்று இருமுறை தண்ணீர் தெளித்தும் எழாமல் இருந்ததால் ... மெல்லி நீ போய் கார் எடுடியம்மா ... உடனே போகலாம் ஹாஸ்பிடல்க்கு...
அவர் வந்தவுடன் தான் ஒரு தெளிவு வந்தது மெல்லினாவுக்கு... உடனே கார் எடுத்து வாசலில் இவள் நிற்கவும்... அபிராமி மாமியும் சரியாக சியாமளாவை காரில் உட்காரவைத்து தானும் உட்கார்ந்தார்... கார் அவர்கள் ஏறியதும் சீறி பாய்ந்தது மெல்லினாவின் கைகளில்....
ஹாஸ்பிடலில்... டாக்டர் அம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு... என்ன ஆச்சு டாக்டர்... என்றாள் வரும் கண்ணீரை துடைத்துக்கொண்டு ... பக்கத்து வீட்டு மாமி அவள் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்தார் ஆறுதலாக...
பயப்பட ஒன்னும் இல்லை இப்போதைக்கு... பட் பிபி அதிகமாகி மயக்கம் வந்திருக்கு... குறைக்க டேப்லெட் குடுத்து இருக்கேன்.. ஆனா இன்னொரு முறை இது மாதிரி ஆகாம பாத்துக்கோங்க.. பிபி அதிகம் ஆகி ரத்தக்குழாய் வெடிக்க வாய்ப்பிருக்கு.. அப்பறம் எங்களால காப்பாத்த முடியாது... பிபி கண்ட்ரோல்ல வச்சிக்க டேப்லெட் தரேன் ஒழுங்கா டைம்க்கு குடுத்துடுங்க... அவங்கள ஓவரா ஸ்ட்ரெஸ் குடுக்காம பாத்துக்கோங்க.. மனசுக்கு பிடிச்ச விஷயம் செய்ய சொல்லுங்க... அவங்கள முடிச்சவரைக்கும் இயல்பா இருக்கவைங்க... என்று டாக்டர் கூறிவிட்டு சென்றுவிட்டார்...
மெல்லினாவுக்கு பயத்தில் வேர்த்துக்கொட்டி விட்டது... அம்மாவுக்கு அந்த நிலைமை வந்தால்.. அய்யோ.. நாம அனாதை ஆயிடுவோமே.. எனக்குனு அம்மா மட்டும் தானே இருகாங்க... இனிமேயாச்சும் அவங்களை சந்தோசமா வச்சுக்கணும்.. அவங்க விருப்பப்படி இருக்கட்டும்... என்று மனதிற்குள் முடிவெடுத்தாள்...
இரண்டு நாள் ஹாஸ்பிடல் வாசம் முடிந்து வீடு திரும்பிய பின்... ஹால் சோபாவில் சியாமளா டிவி பார்த்துக்கொண்டிருந்தார்...
அவருக்கும் தனக்கும் க்ரீன் டீ போட்டு எடுத்துக்கொண்டு அவருக்கு எதிரில் உட்கார்ந்தாள் மெல்லினா...
அம்மா... டீ எடுத்துக்கோங்க...
ம்ம்.. என்று டிவி பார்த்துக்கொண்டே டீ குடித்தார்...
அம்மா நீங்க ஆசைப்பட்ட மாதிரி... அந்த ஊருக்கு போங்க ... அவரை போய் பார்த்துட்டு வாங்க... என்று கவனமாக தன் பெயரைச் சேர்க்காமல் சொன்னாள்...