All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நறுமுகையின் "அனிச்சப்பூவே உதிராதே" - கதைத் திரி

Status
Not open for further replies.

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிகளே... உங்கள் ஆர்வத்திற்கும் அன்பிற்கும் மிகவும் நன்றி... 😍😍😘😘யூடி குடுக்க தான் முயலுகிறேன் பட் எனக்கு உடம்பு சரி இல்லை பா... இந்த லாக்டவுன் ல வெளிய கூட போக முடியல வீட்டுல தான் இருக்கேன்...டாக்டர் கன்சல்ட் கூட போன் ல தான்... அதான் கொஞ்சம் சீக்கிரமா ரெகவரி ஆக முடியல பா... சீக்கிரமா வர பார்க்குறேன்....
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனிச்சப்பூவே உதிராதே...

டீஸர் :



அம்மா... நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க.. என்று அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தக் கொண்டு கூறினாள்... பூரணி குட்டி...


சாதாரண காட்டன் புடவை அணிந்துக் கொண்டு காதில் ஒரு குட்டி ஜிமிக்கியும்... கையில் கண்ணாடி வளையலும்.. என்று எளிமையாக இருந்தாலும் தேவதையாக ஜொலித்தாள்... மெல்லினா..


அடியே பட்டு உனக்கு இதே பேச்சு தானா.. என்னைய விட நீ தான் குட்டி அழகு.. அப்படியே தேவதை மாதிரி இருக்க தெரியுமா... என்று அவளின் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளிவிட்டு சிறு முத்தம் பதித்தாள்...


அப்படியா அம்மா.. நான் நிஜமா அழகா.. என்றாள் கண்கள் மின்ன அந்த கறுப்பழகி...


ஆமா டா பட்டு.. என் பட்டு குட்டி போல அழகு யாருமே இல்ல தெரியுமா...
ஆனா நான் கருப்பா இருக்கேனே... என்றாள் முகம் சுருங்கி..
அழகுன்றது மனசு தான் குட்டி.. முகமும் நிறமும் இல்ல டா.. நீ அன்னைக்கு பசியோட ஒரு பாட்டி ரோட்டு ல படுத்து இருக்கப்போ.. உன்னோட சாப்பாடை உனக்கு பசிச்சும் அவங்களுக்கு பசியாற குடுத்தல.. அது தான் டா உண்மையான அழகு ... சில பேர் தன் கிட்ட தேவைக்கு போக மீதி இருந்தும் ஒருத்தவங்க கஷ்ட படுறதை பார்த்தா கூட குடுக்க மனசு இல்லாமல் இருகாங்க டா... அதுவா அழகு நீயே சொல்லு... என்றாள் கனிவுடன் பட்டுவின் முகம் பார்த்து...


இல்ல.. இல்ல.. அது எப்படி குடுக்காம இருக்க முடியும் பாவம் அவங்களுக்கும் பசிக்கும்ல மா.. என்றாள் முகத்தை பாவம் போல் வைத்து..



ஆமாடா பட்டு... பிறருக்கு குடுக்குற தான் அழகு.. அப்போ என் பட்டுவ போல யாரு அழகு இருக்கா சொல்லு.. இனி நீ அழகா இல்லன்னு சொல்ல கூடாது... என்றாள் மெல்லினா..


இல்ல மா சொல்ல மாட்டேன்.. என்று தலையை ஆட்டியது அந்த குட்டி வாண்டு...


புரணியை கட்டியணைத்து அவள் உச்சியில் சிறு முத்தமிட்டு.. " சரி வா கடைக்கு போலாம் "என்றாள்..


இருவரும் காய்கறி வாங்கிக் கொண்டு இருக்கும் போதும் அவர்களை இரு கண்கள் அதிர்ச்சியுடன் நோட்டமிட்டதை அறியாமல் இயல்பாக தங்கள் வேலையை முடித்துக்கொண்டு அந்த குன்னூர் மலை பாதையில் ஜீப்பில் வந்துக் கொண்டிருந்தார்கள்...


ஜீப்பை விட்டு இறங்கி சிறிது தூரம் நடந்தால் அவர்களின் வீடு... அவர்களின் வீட்டை நெருங்கும் முன்பே மழை பிடித்துக்கொள்ள.. குடை விரிக்கும் முன்னே இருவரும் நனைந்து விட்டிருந்தார்கள்..


அவர்கள் வீட்டை அடையும் வரைக்கும் அவர்களை அந்த அதிர்ச்சி நிறைந்த கண்கள் தொடர்ந்ததை அறியவில்லை அவர்கள்...
 

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மையா உங்க அன்பை பார்த்து பிரம்பிச்சிட்டேன் 😍😍😍எல்லாரும் அவ்ளோ மெசேஜ் பண்ணி இருக்கீங்க என் ஸ்டோரிக்காக நான் எழுதணும்ன்னு ரொம்ப ரொம்ப நன்றி தோழிகளே 😘😘 கண்டிப்பா கதையை இனி தொடருறேன் உங்களுக்காகவே 😍😍லவ் யூ லோட்ஸ் 😘😘😍😍😍
 
Status
Not open for further replies.
Top