All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பிரசன்னா விஸ்வநாதனின் "விசித்திரமான உறவுகள்" - கதைத் திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் பிரண்ட்ஸ்.நான் பிரசன்னா விஸ்வநாதன். எனக்கு கதை எழுத வாய்ப்பளித்த ஸ்ரீகலா அக்கா-விற்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதுவே என்னுடைய முதல் கதை. ஏதேனும் பிழைகள் இருந்தால் பொறுத்து கொண்டு கருத்துக்களை பகிர மறவாதீர்கள்.என்னையும் உங்களில் ஒருவராய் இணைத்து கொள்ளுங்கள் நண்பர்களே. :):):)


அன்புடன்
பிரசன்னா விஸ்வநாதன் :giggle:
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தலைப்பு:விசித்திரமான உறவுகள்
நாயகன் :விஷ்ணு
நாயகி :சஹானா

ஒரு பெண் தன்னோட பிறந்த வீட்ல வாழற வாழ்க்கைக்கும் புகுந்த வீட்ல வாழற வாழ்க்கைக்கும் நிறைய வித்யாசம் இருக்கும்.அப்படி போற புகுந்த வீட்ல அவ சந்திக்கிற உறவுகளால் ஏற்படற வலிகள், அவமானங்கள், எல்லாத்தயும் எப்படி தாங்கி போறா.அப்படி தாங்க முடியாத நிலையில என்ன பன்றா னு தான் பாக்க போறோம்.
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் -1:

அழகான, அமைதியான கிராமம்.பொழுது விடிந்ததும் பெண்கள் காலி குடங்களுடன் தண்ணீர் பிடிக்க செல்ல, ஆண்கள் சாப்பாடு கூடையுடன் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். ஆனால் ஒரு வீட்டில் மட்டும் காலை 10மணி ஆகியும் எந்திரிக்காமல் நல்லா போர்வைய போர்த்திக்கிட்டு தூங்கிட்டு இருக்கா நம்ம சஹானா.


சஹானா நல்ல மாநிறமும், கருவிழி கண்களும் , வில் போன்ற புருவமும், கூர்மையான நாசியும், சிவந்த உதடுகளும், கருமையான அடர்ந்த இடை தாண்டிய நீல முடியும், 5அடி உயரமும் அதற்கேற்ற உடலமைப்பும் கொண்டு குடும்ப பாங்காய் தெரிபவள். ஆனால் அவளுக்கு இன்னொரு முகமும் உண்டு. அது தான் அவளுடைய கோவம், பிடிவாதம்.கோவம் வந்தாலும் நியாயமா தான் வரும்.பொய் பேசினா பிடிக்காது. அவளுக்கு ஒன்று வேண்டும் என்று நினைத்தால் அது வேண்டும். பிடிக்கவில்லை என்றால் எந்த சூழ்நிலையிலயும் ஒத்துக்க மாட்டா.


இப்படி இருக்கற சஹானா மாறுவலா. இல்லை சூழ்நிலை மாற்றுமா.
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஊரிலே மிகவும் செல்வாக்கு நிறைந்தவர் சொக்கநாதர். இவருடைய மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள். மூத்தவள் சஹானா. 2வது பெண் ஹரிணி. சஹானா பொறியியல் முடித்து விட்டு வீட்டில் பொழுதை போக்கி கொண்டிருக்கிறாள். வேளைக்கு போக வேண்டும் என்று ஆசை இருந்தாலும் அப்பா கு பிடிக்காத காரணத்தால் செல்ல வில்லை.ஹரினி பள்ளி படிப்பு முடித்திருந்தாள். சொக்கநாதர் கடந்த 3 வருடமாக சஹானா கு வரன் பார்த்து கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு பிடித்த மாறி அமைய வில்லை. இதனால் சிறிது வருத்தத்தில் இருந்தார்.

அப்போது, போன் அடிக்கும் சத்தம் கேட்டு நினைவுக்கு வந்தவர் அதை எடுத்து ஹலோ. ஆமா நான் சொக்கநாதர் தான் பேசுறேன். அப்டியா. சரி நான் சாயங்காலம் வந்து பாக்குறேன் னு சொல்லி வச்சுட்டார். பக்கத்தில் இருந்த மீனாட்சி யாருங்க பேசுனது. வரேன்னு சொல்றிங்க. என்ன விஷயம். நம்ம தரகர் தான் பேசுனாரு. ஒரு வரேன் வந்துருக்காம். அப்பா வும் பயனும் வெளிநாட்டுல இருக்காங்களாம். பையன் நல்லா படிச்சுருக்கானாம். நல்ல சம்பளம் வாங்குறானாம். ஒரு அக்கா.andha புள்ளைக்கு கல்யாணம் ஆகி 2 பொண்ணுங்களாம். நான் போய் பாக்குறேன்.ஒத்து வந்தா முடிச்சுடுவோம்.
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம வசதிக்கு ஏத்த மாறி இருக்குமா. பாப்போம் இருந்தா முடிச்சிடுவோம். நம்ம சஹானா கும் இந்த வருசத்துல கல்யாணம் முடிசிடனும் னு ஜோசியர் சொல்லிட்டாரு.பையனை மட்டும் பாப்போம். நம்ம கிட்ட இல்லாத சொத்தா.நம்ம சஹானாகு ஏத்த மாறி இருந்தா முடிசிடுவோம்.சரிங்க அப்ப போய் பார்த்துட்டு வாங்க.

சாயங்காலம் சொக்கநாதர் தரகரை பார்த்து பேசிக்கொண்டு இருந்தார்.அப்போது தரகர் வாங்க. உட்காருங்க. இவரு தான் சொக்கநாதர் பொண்ணோட அப்பா. சொந்தமா தொழில் nadathuraru.இவரு பேரு சுப்பிரமணி. வெளிநாட்டுல வேலை பாக்குறாரு. இவரு பையனுக்கு தான் உங்க பொண்ண கேட்டு பேசலாம்னு நெனைக்கிறாங்க. இந்தாங்க பையனோட விவரம், போட்டோ எல்லாம் இருக்கு. பிடிசிருந்தா நாளைக்கு தகவல் சொல்லுங்க. நாங்க வந்து பொண்ண பாக்குறோம்.சரிங்க நான் வீட்ல கலந்து பேசிட்டு சொல்றேன். அப்ப நான் கிளம்புறேன்
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னங்க பேசுனீங்களா. பையனோட வீட்ல இருந்து யார் வந்தது. இந்தா இதுல பயனோட விவரம் இருக்கு. அவங்க அப்பா வும், அக்கா வும் தான் வந்தாங்க. பாத்தா நல்ல குடும்பம் மாரி தெரியுது. பையனும் எனக்கு பிடிசிருக்கு. நம்ம சஹானா வ நல்லா வச்சுப்பான்னு எனக்கு தோணுது. இதையே செய்யலாம். என்னங்க பையன நேர்ல பாக்காம சொல்றிங்க. நீங்க பேசி எல்லாரையும் வர சொல்லுங்க. அப்பறம் முடிவ சொல்லுவோம். சரி மா காலைல போன் பண்ணி சொல்லிடறேன்.
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காலையில் சொக்கநாதர், சுப்பிரமணி க்கு தகவல் சொல்ல நல்ல நாளில் பெண் பார்க்க வருவதை முடிவு செய்தனர்.ஆனால் சஹானா மட்டும் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாய் இருந்தாள்.என்ன அக்கா யாரையோ பொண்ணு பார்க்க வர மாரி நீ பாட்டுல இருக்க.உனக்கு பிடிக்கலையா பையன. அப்டிலாம் இல்லை. அதான் அப்பா நேர்ல வர சொல்லிருக்காங்களே. அப்புறம் பாப்போம். அதுக்குள்ள ஏன் நாமளே முடிவு பண்ணனும். எல்லாம் முடிவுக்கு வரட்டும்.அவ்ளோதான். பையன உனக்கு பிடிசிருக்கா அக்கா. எனக்கு தெரியலையே ஹரிணி. எல்லா பொன்னுக்கும் தனக்கு வர போற கணவன் எப்டிலாமோ இருக்கனும்னு ஆசை இருக்கும். எனக்கும் இருக்கு. அது நடக்குதான்னு பாப்போம்.

சஹானா ஆசை நிறைவேறுமா??
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 2:

ஒரு நல்ல நாளில் சஹானா வை பெண் பார்க்க வந்தனர் சுப்பிரமணி குடும்பத்தினர்.பெண்கள் வீட்டுக்கு உள்ளேயும் ஆண்கள் வெளியிலும் அமர்ந்து கொண்டனர். அப்போது விஷ்ணு -வின் அக்கா விஜி நாங்க ஒரு போட்டோ எடுத்துக்காவா என்று சஹானா விடம் கேட்க சஹானாவோ நீங்க அப்பா கிட்ட கேட்டுட்டு எடுத்துக்கோங்க. சரி மா நான் போய் கேட்டுட்டு வரேன்.வெளியில் வந்த விஜி சொக்கநாதரிடம் நாங்க பொண்ணை ஒரு போட்டோ எடுத்துக்கறோம்.தம்பிக்கு அனுப்பனும்என்று கேட்க .அதற்கு சரி என்று ஒத்துக்கொண்டார் சஹானா- வின் அப்பா. உள்ளே வந்த விஜி சஹானாவின் சித்தப்பா பையனும் தம்பியுமான முகேஷிடம் போட்டோ எடுத்து குடுக்கும் படி கேட்க அவனும் 3 போட்டோ எடுத்து கொடுத்தான். அது அப்டியே விஷ்ணு -க்கு வாட்ஸாப்ப் மூலம் சென்றது.


விஷ்ணு, 6அடி உயரமும், அதற்கேற்ற உடலமைப்பும், சிவந்த நிறமும் கொண்டவன். கண்ணில் அணிதிருக்கும் கண்ணாடியே அவனுக்கு தனி அழகு தான். அவன் சிரிக்கும் போது விழும் கன்னத்து குளிக்கே பெண்கள் அடிமை ஆகி விடுவார். கையில் வாட்சும், நன்கு வாரிய தன்மையும் பார்க்கும் போதே ரசிக்க தோன்றும் விதமாய் இருப்பவன்.
சஹானா போட்டோ வை பார்த்த விஷ்ணு-க்கு முதலில் பிடிக்கவில்லை. என்ன பொண்ணு ரொம்ப olliya இருக்கு எலும்பு மாரி. நிறமும் என்ன விட கம்மியா இருக்கு. ஏன் விஜி உங்களுக்கு பிடிசிருக்கா. டேய் விஷ்ணு பொண்ணு நேர்ல நல்லா தான் தான் இருக்கு.ஹெயிட் கொஞ்சம் கம்மியா இருக்கற மாரி இருக்கே விஜி. இல்லடா சரியா டா இருக்கு. நாங்க வீட்ல போய் பேசுறோம்.சரி விஜி.வீட்டுக்கு போய்ட்டு எனக்கு போன் பண்ணுங்க.
 

Riyanshika

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெளியில் இருந்த அனைவரும் சஹானா- வை வெளியில் அழைத்தனர். வெளியில் வந்த சஹானா முதலில் பயந்தாலும் அமைதியாக அனைவர்க்கும் வணக்கம் சொன்னாள். அங்கிருந்தவர்கள் அவளை அமர சொல்ல அவளும் பெண்கள் இருக்கும் இடத்தில் அமர்ந்தாள். கொஞ்ச நேரம் கழித்து அவளை உள்ளே போக சொல்லி விட்டு பெரியவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினர்.

முதலில் தரகர் தான் பேச்சை ஆரம்பித்தார். பொண்ணுக்கு நீங்க என்ன செய்ய போறீங்க சொக்கநாதர். நான் சொல்றதுக்கு என்ன இருக்கு. நான் சீர், நகை எல்லாமே செஞ்சுறன்.நீங்க என்ன சொல்றிங்க சுப்பிரமணி.எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. சீர் மட்டும் வேணாம்.கல்யாணம் முடிஞ்ச உடனே 2பேரும் வெளிநாட்டுல தான் இருக்க போறாங்க. அதுக்கு எதுக்கு இங்க சீர் வாங்கணும். மத்தபடி அவங்க பொன்னுக்கு என செய்றங்களோ அத செய்யட்டும். நாங்க கேக்க மாட்டோம். அப்ப நகை பத்தி பேச வேணாமா.நகை அவங்க பொன்னுக்கு அவங்க செய்ய போறாங்க. இதுல நாங்க கேக்க என்ன இருக்கு. சரிப்பா அப்ப மாப்பிள்ளையை எப்ப பாக்க போறீங்க சொக்கநாதர். அதற்கு சுப்ரமணி நீங்க பாக்கணும்னா சொல்லுங்க,.10 நாள் லீவ் போட்டு வர சொல்றோம். சரிங்க அப்ப வர சொல்லுங்க. நாங்களும் பத்துக்கறோம் என்று பேச்சை முடித்து வைத்தார் தரகர். பின்பு அனைவரும் சொக்கநாதரின் வீட்டில் உணவு ஏற்பாடு செய்ய பட்டு இருந்தது. அதை முடித்து விட்டு கிளம்ப தயாரானார்கள் சுப்பிரமணி. வந்து சஹானாவிடம் போய்ட்டு வரோம் மா என்றார். சரி ங்க போய்ட்டு வாங்க. அத்தை நாங்க போய்ட்டு வரோம் என்றனர் விஷ்ணு வின் அக்கா மகள்கள். சஹானாவிற்கு அந்த 2பிள்ளைகளையும் ரெம்ப பிடித்து விட்டது. அதே போல் விஷ்ணு -வையும். ஏன் என்றால் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் விஜி விஷ்ணு போட்டோ வை காட்டினா. அத பாத்துட்டு தான் சஹானா க்கு ஓகே னு தோணுச்சு.
 
Last edited:
Status
Not open for further replies.
Top