காத்திருந்த தேவதை 3
அலுவலகத்தில் நுழைந்த பிறகு ஜீவிதாவிற்கு நேரம் போனதே தெரியவில்லை,,, காலையில் உள்ளே நுழைந்தவள் கொஞ்சம் கூட ஓய்வேயின்றி வேலை செய்து கொண்டிருந்தாள்,,, மதிய உணவை உண்பதற்கு கூட தாமதமாக தான் கிளம்பினாள்,,, மோஸ்ட்லி அனைத்துமே முடித்தாகிவிட்டது,,, இன்னும் ஒரு இரண்டு மூன்று பைல்களை புரட்டி பார்த்துவிட்டு அதை கம்யூட்டரில் ஏற்றிவிட்டால் அவளின் அன்றைய வேலை முடிந்துவிடும்,,, எதற்கு இத்தனை அவசரம் என்றால் அவள் இன்றைக்கு சீக்கிரமே வீட்டிற்க்கு போகவேண்டும்,,, பிகாஸ் இன்றைக்க் அவள் தோழி கார்த்திகாவிற்கு அந்த ஊரில் இருந்த பிரபலமான ஹாலிலே நிச்சயதார்த்தம்,,, கார்த்திகாவின் அப்பா பெரும்புள்ளியாதலால் குறிப்பிட்ட உறவுகளும் நட்புகளும் மட்டுமே அழைக்கப்பட்டிருக்கின்றன,, அவர்களில் ஜீவாவும் ஒருவள்,,,,
ஜீவாவும் கார்த்திகாவும் நல்ல தோழிகள்,,, கார்த்திகா ஜீவாவின் வயதை ஒத்த பெண்ணல்ல,,, சிறுவயதில் இருந்தே கார்த்திகா படிப்பில் கொஞ்சம் மந்தம்,,, மூன்று வகுப்புகளில் இரண்டிரண்டு வருடங்கள் படித்து ஒருவழியாக தந்தையின் தயவால் தான் கல்லுரியில் நுழைந்தாளே,,, அங்கே சென்றவளுக்கு ஜீவா நன்றாக படிப்பதை பார்த்தே பிடித்துவிட்டது,,, அவள் செமினார் எடுப்பது கூட புரியும் வகையிலேயே இருக்க எப்படியோ பேச ஆரம்பித்து நட்பாகி கடைசியில் அரியரே இல்லாமல் பாசானது வரைக்கும் ஜீவா தான் காரணமே,,, இரண்டு வீட்டு விசேஷங்களுக்கு இருவருமே போனது கிடையாது,,, அந்த அளவிற்கு நடந்ததும் இல்லை,,, முதல்முறையாக பத்திரிக்கையோடு வந்தவளிடம் வரமுடியாது என்று சொல்ல அவள் என்ன கல்மனதுக்காரியா????
கார்த்திகாவிற்கு என்ன தான் பள்ளியில் இருந்தே அவளுடைய பணத்திற்காக நிறைய தோழிகள் இருந்தாலும்,,, கல்லூரியில் ஜீவிதா மட்டுமே அவளுடைய உற்ற தோழி,,, பின்புலத்தை பார்க்காமல் மனதின் எண்ணங்களை வைத்து மட்டுமே தோன்றிய நட்பிது,,, அதனாலேயே என்னவோ மற்றவர்களை காட்டிலும் ஜீவிதா மீது தான் அவளுக்கு அதிக பாசமே,, ஜீவிதா படிப்பை முடித்ததுமே வேலைக்கு சென்றுவிட கார்த்திகாவின் வீட்டில் திருமணப்பேச்சு ஆரம்பமானது,,, கார்த்திகாவின் அப்பா அவருடைய பிஸ்னஸ் சர்க்கிலிலேயே ஒரு வரனை பார்த்து முடிக்க அதன் விளைவாகவே முக்கியமான உறவுகளை மட்டுமே அழைத்து நடத்தபடும் கார்த்திகாவின் நிச்சயதார்த்ததில் இவளுக்கும் அழைப்பு கிடைத்தது,,, கார்த்திகா தனது பெற்றோரோடு நேரிலேயே வந்து ஜீவிதா குடும்பத்தினரை வரவேற்று சென்றிருந்தாள்,,, நிச்சயதார்த்தம் தானே அதனால் ஜீவிதா மட்டும் போய் வந்துவிடலாம் என்று குடும்பத்தோடு பேசி முடிவு செய்திருக்க இன்று கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்ப வேண்டும்,,,
கார்த்திகாவின் குடும்பத்தினர் வசதியானவர்கள்,,, அதனால் அவர்களுடைய வாழ்க்கை முறையுமே ஆடம்பரமானது தான்,,,, வாழ்க்கை முறையே அப்படியென்றால்!!! நிச்சயதார்த்தத்தை எல்லாம் எந்த அளவிற்கு ஆடம்பரமாக கொண்டாடுவர்,,, அங்கே போவதற்கு ஜீவா தன்னையும் தயார்படுத்திக்கொள்ள வேண்டுமே,,, இந்த ஐப்ரோ வேறு இஸ்டத்திற்கு காடு போல மண்டிக்கிடக்க புருவத்தையாவது சரிசெய்வோம் என்று ப்யூட்டி பார்லருக்கு போக நினைத்தாள்,,, இத்தனையெல்லாம் செய்ய வேண்டுமெனில் அவளின் அன்றைய வேலைகளை சீக்கிரமே முடிக்க வேண்டும்,,, அதற்காக தான் இத்தனை வேகமாக வேலை செய்ததும்,,,
ஆப்டர் நூன் லஞ்ச் டைமுக்கு வெறும் இரண்டு மூனு பைல்கள் மட்டும் தான் பெண்டிங்ல இருந்தது,,, அதையும் சாப்பிட்டு வந்ததும் முடித்து விடலாம் என்ற தைரியத்தோடு விரைவிலேயே சாப்பிட்டுவிட்டு அவளுடைய டேபிளுக்கு வந்தாள்,, அவள் அமர்ந்த சில நொடிகளிலேயே அந்த கம்பெனியின் சீஃப் அக்கௌண்டண்ட் சங்கர் சார் அவளை
வந்து அழைத்தார்,,,
"""""ஜீவிதா""""" என்று அவர் வந்து நிற்க இவள் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றாள்,,,
"""""சார்???"""""
""""""சாப்பிட்டாச்சாம்மா????"""""
"""""" ம்ம்ம்,, ஆச்சு சார்,,, என்ன விசயம்????"""" அவள் கேட்க அவர் வருத்தம் தோய்ந்த முகத்துடனே சொன்னார்,,,
"""""ஒரு ஷேட் நியூஸ் ஜீவிதா,,, உன்ன எம்.டி கூப்பிட்டாரு"""""
"""""என்ன சார் காமெடி பண்ணுறிங்க??? எம்.டி கூப்பிடுறது ஷேட் நியூஸா????"""""
"""""அட நீ வேறம்மா,,, எம்.டி கூப்பிடுறது ஷேட் நியூஸ் இல்ல,,, அவரு சொல்லப்போற விசயம் தான் ஷேட்,,,, ம்ம்ம்ம்""""""என்று அவர் பெருமூச்சு விட இவள் விசாரித்து பார்த்தாள்
"""""அப்படி என்ன மேட்டர் சார்????"""""
"""""அது வந்தும்மா,, இல்ல இல்ல நீ அத அவர்க்கிட்டயே கேட்டுக்கோம்மா""""" ரொம்ப ரொம்ப வருத்தமாக ஃபீல் பண்ணி சொல்லிட்டு அவர் அவ்விடத்தை விட்டு செல்ல ஜீவிதாவும் அப்படியென்ன விசயமோ என்று எம்.டியின் அறைக்கு சென்றாள்,,,
""""எக்ஸ்யூஸ் மீ சார்,,, மே ஐ கம் இன்""""" அறைக்கதவை தட்டியபடி கேட்க எம்.டி நாகராஜன் உள்ளிருந்தபடியே குரல்கொடுத்தார்,,,,
""""க்கூ இஸ் திஸ்????"""" அவர் நிமிர்ந்து பார்க்காமலேயே யாரென்று கேட்க ஒரு புருவ சுழிப்புடனே கதவை திறந்து தலையை மட்டும் உள்ளே நீட்டியபடி சொன்னாள்,,,
"""""இட்ஸ் மீ சார்,,, ஜீவிதா..."""" ஜீவிதா சொன்னதும் புன்னகையுடனே நிமிர்ந்தவர் அவளை வரவேற்றார்,,,
"""""ஜீவா,,, கம் இன் கம் இன்,,, உனக்கு எதுக்கு பர்மிசன்??? எப்போதும் போல வர வேண்டியது தானே!!!!""""
""""""சங்கர் சார் நீங்க கூப்பிட்டதா சொன்னார்"""""
"""""ஆமாடா கூப்டேன்,,, எல்லோர்க்கிட்டேயும் சொல்லியாச்சு,,, உன்கிட்ட மட்டும் சொல்ல முடியல,, சாப்பிட போயிட்டியாமே"""""
"""""ம்ம்ம்ம்ம்,,, என்ன விசயம் சார்??? எதுவும் ப்ராப்ளமா????"""""
""""""ஆமா,, நாம இரண்டு பேரு தானே இருக்கோம் ஜீவாம்மா,,, எதுக்கு சார் சார்ன்னு கூப்பிடுற??? எப்போவும் போல அங்கிள்ன்னு கூப்பிட வேண்டியது தானே!!!!""""" அவர் சாதாரணமாக சொல்லிவிட்டு சிரிக்க இப்பொழுது தான் ஜீவாவிற்கு கொஞ்சம் நார்மலாகவே இருந்தது,,, பிகாஸ் அவரு முகத்துல எந்த கவலையுமே தெரியவில்லை,,, ரொம்பவே கூலா அண்ட் இன் சேம் டைம் அவர் முகம் எந்த சங்கடமும் இல்லாமல் தெளிவாக தான் இருந்தது,,, அதனால ஜீவாவும் நிம்மதியுடனே அங்கே இருந்த நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்தாள்,,,,
"""""சரி ஓகே அங்கிள்,,, இப்போ சொல்லுங்க என்ன விசயம்????"""""
""""""அது ஒன்னுமில்லடா,, நான் என்னோட வொர்க்ல இருந்து ரிலீவ் ஆகிடலாம்ன்ன் முடிவு பண்ணிருக்கேன்""""" அவர் திடுமென சொல்ல ஜீவாவிற்கு தூக்கிவாரிப்போட்டது,,,
!
""""""வாட்!!!!!! என்ன அங்கிள் சொல்லுறிங்க??? ஏன் இந்த திடீர் முடிவு!!!!"""""
""""""திடீர் முடிவெல்லாம் இல்லடா,,, என்னோட நிலைமை அப்படி,,, அதான்""""""
""""""அப்படி என்ன நெலமை வந்துருச்சுன்னு ரிலீவ் ஆகுறேன்னு சொல்லுறிங்க,,, அங்கிள் உங்களுக்கு வயசாயிடுச்சுன்னு ஃபீல் பண்ணுறிங்களா??? போங்க அங்கிள்,, நீங்க இல்லைன்னா இந்த கம்பெனியோட நிலைமை என்ன??? யாரு எடுத்து நடத்துவா??? வித்துட போறிங்களா!!!
என்னால உங்க இடத்துல வேற யாரையுமே வச்சு பாக்க முடியாது அங்கிள்,,, ப்ளீஸ் போகாதிங்க""""" அவள் பேசிக்கொண்டே போக அவர் புன்னகைத்தவராய் சொன்னார்,,,
"""""ஹேய் ஜீவா கூல் கூல்,,, ஐ நோ,,, என் மேல இங்க இருக்கவங்கள விட நீ ரொம்ப பாசம் வச்சுருக்கன்னு தெரியும்...."""""
""""""அதான் தெரியுதுல்ல,,, அப்புறம் ஏன் போறிங்க??? போறேன்னு சொல்லுற அளவுக்கு என்ன தான் ப்ராப்ளம்?????""""" அவள் கேட்டுக்கொண்டே போக அவர் நிதானமாக பதில் சொன்னார்,,,
"""""ப்ராப்ளம் தான் ஜீவாம்மா..."""""
""""""அங்கிள்???""""""
""""""நான் இப்போ ரிலீவ் ஆகுறதுக்குன்னு ஒரு ரீசன் இருக்குடா"""""
""""""அப்படி என்ன ரீசன்????""""
""""""எனக்குன்னு ஒரு பையன் இருக்கான்னு உனக்கு தெரியும்ல"""""
"""""ம்ம்ம் தெரியும்,,, இப்போ அதனால என்ன??? பையன் வச்சுருந்தா ரிலீவ் ஆகணுமா????"""""
"""""ஹேய் லூசுப் பொண்ணு,,, கொஞ்சம் நான் சொல்லுறத கேட்கிறியா????"""""
"""""சரி சொல்லுங்க"""""
"""""ஒரு அப்பாவா நான் என் பையனுக்கு பண்ண வேண்டிய கடமைன்னு நெறையவே இருக்குல்ல"""""
""""""ம்ம்ம்ம்ம்""""""
""""""அவனுக்கு அம்மா இல்ல,, நான் மட்டும் தான்,,, சின்னவயசுல இருந்தே ரொம்ப செல்லம் கொடுத்து வளத்துட்டேன்,,, அவன் என்ன கேட்டாலும் இல்லன்னு சொன்னதே இல்ல"""""
"""""சரி"""""
"""""அவனுக்கு பிடிச்ச படிப்பை படிக்க வச்சேன்,,, வெளிநாட்டுல போய் மேற்கொண்டு படிக்கணும்னு சொன்னான்,, அதையும் பண்ணிட்டேன்"""""
"""""சரி""""
""""""அவனுக்கு போட்டேஃக்ராபில பெரிய அளவுல அச்சீவ் பண்ணனும்னு ஆசை,,, சோ அவன் விருப்பப்பட்டபடியே அவனுக்கு புடிச்சதெல்லாம் பண்ணிட்டேன்,,, எல்லாமே அவன் நல்லதுக்குன்னு பண்ணினால் இப்போ அதுவே பெரிய பிரச்சனை ஆகியிருச்சு,,,
அவர் வருத்தம் தோய்ந்த குரலில் சொல்ல இவள் புரியாமல் கேட்டாள்,,,
"""""என்ன அங்கிள் சொல்லுறிங்க????"""""
""""""போட்டோ எடுக்குறேன்,, போட்டோ எடுக்குறேன்னு அவன் ஊரு ஊரா,, நாடு நாடா சுத்துறது,,, கண்ட பொண்ணுங்களை எல்லாம் போட்டோ எடுக்குறதுன்னு அவன் இப்போ இருக்குறத பார்த்தா ரொம்ப பயமா இருக்கு ஜீவா"""""
""""""இதுல என்ன அங்கிள் பயம்
???? போட்டோக்ராபி கூட ஒரு நல்ல கரியர் தான்,,, எத்தனையோ பேரு போட்டோக்ராபி லைன்ல சாதிக்கலையா??? உங்க பையனுக்கும் அது போல ஆசையோ என்னவோ!!!!"""""
""""""நீ சொல்லுறதும் சரி தான்டா,,, ஆனா இவன் பொண்ணுங்க கூட சுத்துறத பார்த்தா தான் பயமா இருக்கு,,, ஏதோ பார்ட்டி கீர்ட்டின்னு போறான்,,, இதெல்லாம் சரியா படலம்மா,,, எதுவும் முன்னப்பின்ன தெரியாத பொண்ண கூட்டிக்கிட்டு வந்துட்டு இவ தான் உங்க மருமகள்ன்னு சொல்லிடுவானோன்னு பயமா இருக்கு""""" அவர் கவலையாக சொல்ல கேட்டுக்கொண்டிருந்தவளோ விழுந்து விழுந்து சிரித்துவிட்டு சொன்னாள்,,,
"""""ஐயோ ஐயோ,,, அங்கிள் அங்கிள்,,, உங்கள வச்சுட்டு,,, நீங்க இப்போ பேசுறத பார்த்தா ஒரு டிபிக்கல்ட் இந்தியன் மாமியார் மாதிரியே இருக்கு""""""சொல்லிவிட்டு அவள் திரும்பவும் விழுந்து விழுந்து சிரிக்க அவர் இதழ்களுமே மெல்ல விரிந்தது,,,
"""""யூ நாட்டி,,, கிண்டல் பண்ணுற???"""""
""""""பின்ன என்ன அங்கிள்???? நீங்க சொல்லுறத பார்த்தா அப்படி தான் இருக்கு...."""""
""""""சரிடா,,, நீ என்ன வேணும்னாலும் நெனைச்சுக்கோ,, இப்போதைக்கு இருக்க சிட்சுவேசனுக்கு
நான் அவனை பிசினஸ்ல புகுத்துனா தான் நான் கவலைப் படுற மாதிரி எதுவும் நடக்காது"""""
"""""நீங்க சொல்லுறது சரிதான் அங்கிள்,,, அதுக்குன்னு அவர் விருப்பமே இல்லாம அவருக்கு தெரியாத ஒரு விசயத்தை திணிக்குறது சரியா????"""""அவள் கேட்க அவர் இதழ்கள் விரிய சொன்னார்,,,,
""""""யாருக்கு தெரியாது அவனுக்கா!!!! சின்னவயசுல இருந்தே இந்த ஃபீல்டுல ஊறி வளர்ந்தவன்டா,,, எப்படி தெரியாம இருப்பான்????""""""
""""""சோ,,, இனி அவங்க தான் பார்த்துக்க போறாங்க???""""""
""""""ஆமாடா,,,, எனக்கு எந்த அளவுக்கு எல்லாரும் டெடிக்கேட்டடா இருந்திங்களோ அதைப் போல அவன் மேனேஜ்மெண்டுலயும் இருக்கணும்"""""
""""""அங்கிள்,,, இத நீங்க சொல்லணுமா என்ன????"""""
""""""சொல்லணும்னு அவசியம் இல்ல தான்,,, ஆனால் சொல்லாம போயிட்டா என்ன நீ சும்மா விடுவியா,, கரிச்சு கொட்டிட மாட்ட????""""" விளையாட்டாக சொல்ல சிணுங்கினாள்,,,,
""""""அங்கிள்""""""என்று,,,
""""""சரி சரி கோவிச்சுக்காத,,, இதான் விசயம்,,, நாளையில இருந்து அவன் தான் உங்க புது எம்.டி""""" அவர் சிரித்தபடியே சொல்ல ஜீவாவிற்கு சங்கடமாகவும் கஷ்டமாகவும் இருந்தது,,, இத்தனை நாட்களில் அவர்கள் இருவருக்குள்ளும் உருவான பந்தம் அப்படி,,, ஆண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு பெண் குழந்தைகள் மீது ஒரு ஏக்கம் வருமே,,, அதே ஏக்கம் தான் ஜீவாவை பார்த்த போதும்,,,,அவர் இவளை பெண்ணைப் போலவே பார்க்க இவளும் அவரை தந்தையைப் போலவே கவனிக்க ஆரம்பித்துவிட்டாள்,,, இத்தனை நாட்கள் கூடவே இருந்தவர் திடுமென இப்படி சொன்னது கஷ்டமாக இருந்தது,,, ஆனாலும் இதுதான் நிலை என்றால் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும் என்று இயல்பாக பேசினாள்,,,,
""""""அங்கிள்,,, அதுக்காக ஒரேயடியா வராமலே இருந்துடாதிங்க,,, அடிக்கடி வரணும்,, என்கிட்ட பேசணும்"""""
""""""கண்டிப்பா"""""
""""""உங்க புள்ளைய பார்த்துட்டோம்னு என்ன மறந்துட்டு இருந்திங்க,,, அப்புறம் அவ்ளோ தான்"""" கண்களை உருட்டி மிரட்டி அவள் சொன்னாலும் குரலில் இருந்த வருத்தம் தன்னை அப்பட்டமாக வெளிக்காட்டவே எழுந்து வந்து அவள் தலையை வருட அவள் கவலையை மறந்து சிரித்தாள்,,,
"""""சரி ஓகே அங்கிள்,,, நான் இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமாக போகணும்,,, பெண்டிங் வொர்க் இருக்கு,,, முடிச்சுட்டு கிளம்புறேன்,,, பை,,, டேக் கேர்""""" கைக்குலுக்கி அவசரமாக விடைபெற்றாள்,,, இன்னும் கொஞ்ச நேரம் அங்கிருந்தால் கண்கள் குளமாவதென்னவோ சர்வ நிச்சயம் தான்,,, அதற்காகவே விழுந்தடித்து வெளியே வந்தாள்,,,,
தன்னுடைய இடத்தில் போய் அமர்ந்து கண்களை மூடி தன்னைத்தானே நிலைப்படுத்திக்கொள்ள,,, காதுகளில் நாகராஜனின் குரல் கேட்டது போட்டோக்ராபி போட்டோக்ராபி என்று,,, தலையைக் குலுக்கி சரிசெய்தவள் திரும்பவும் கண்களை மூட அவன் உருவம் பளிச்சென்று வந்து போக அத்தனை பேர் சுற்றியிருந்தும் தலையில் அடித்துக்கொண்டு தன் வேலைகளை கவனிக்க ஆரம்பித்தாள்,,, மின்னல் போல அவன் உருவம் மனதில் வந்து வந்து நிழலாடி விளையாட வெளியே திடுமென வந்த மழையும் மின்னலும் அவள் மனதை வெளிப்படுத்துவதாகவே இருந்தது,,,