கரை சேர்ந்த விண்மீன்..6
தரையில் விண்மீன்
வருவதுண்டு வந்தாலும்
கண் அதை பார்ப்பதுண்டு
பார்த்தாலும் கை அதை
தொடுவதுண்டு
தொட்டாலோ காதல்
ஆகும் உன் மனம்..
தனக்கு மேலிந்தவளைக்கண்டு ஆதிஷ் உறைந்திருக்க அவளோ கண்கள் அவனை பார்த்துக்கொண்டிருந்தாலும் கைகள் இரண்டும் சுற்றி எதையோ தேடிக்கொண்டிருந்தன.
சிறிது நேர தேடலின் பின் கையில் அவள் தேடியது மாட்டி விட மெதுவாய் எடுத்தவள் அந்த சவர்க்காரத்தை நன்றாக ஆதிஷின் கண்களில் தேய்த்து விட்டு எழுந்து ஓட முயல..
ஆதிஷோ ஒரு கையால் கண்ணை தேய்த்துக்கொண்டு மறுகையால் இவளை தப்பிக்க விடாது இறுக்க பிடித்துக்கொண்டான்.
முழித்து முழித்து பார்த்தவள் அவனை தள்ளிவிட அவனோ விடுவேனா என்பது போல் அவளையும் சேர்த்தே இழுத்துக்கொண்டு விழுந்தான்.
"ஏய் விடுடுடுடு..."சனா கீழே விழுந்திருந்தவன் மேல், மேலே பார்த்த வண்ணம் விழுந்திருக்க தன் மேல் இருந்த அவன் கையை தள்ளிக்கொண்டே எழப்போனாள்.
"முடியாது.. நீ கல்யாணத்த நிறுத்துரேன்னு சொல்லு.." கண்ணை தேய்த்துக்கொண்டு தன் பக்கத்திலே நின்றான் அவன்.
"முடியாது..விடு விடு.." சத்தமிட்டுக்கொண்டிருந்தவளுக்கு ஒரு யோசனை உதிக்க தன்னை சுற்றியிருந்த கையை ஒரே கடியாய் பற்கள் அனைத்தும் பதிய கடித்தாள்.
அலறிக்கொண்டு அவன் கையை விலக்கவும் எழுந்து தப்பினேன் பிழைத்தேன் என வெளியில் ஓடோடி வந்தாள் சனா. அதேநேரம் அந்த வழியில் வந்த வசுந்தரா இவளை முறைக்க.."ஒன்னுமில்லையேம்மா நானா எதுவும் பன்னலாட்டியும் நீயா இப்படி சும்மா முறைச்சி என்ன பன்ன வெச்சிருவ" என இழுக்க அவர் அவளை நெருங்கவும் ஒரே ஓட்டமாய் மேலே ஓடினாள்.
எதுக்கு என யோசித்து புலப்படாமல் அவர் வந்த வழியே திரும்ப ஆதிஷ் தான் கண்களை தண்ணீரில் குளிக்க வைத்து விட்டு கைகளை வாயால் ஊதிக்கொண்டு விட்டால் போதும் ராட்சசி என பொறிந்து கொண்டே யாரும் பார்க்க முன் வீட்டிலிருந்து வெளியேறினான்.
"எரும எரும எரும எரும.." ஒவ்வொரு எருமைக்கும் தாராளமாக மதுவின் தலையில் அவளது மண்டையோடே உணர்வற்று போகும் அளவு நங் நங் என கொட்டிக்கொண்டிருந்தாள் சனா.
"தப்புதான்டி அங்க மாமா இருக்கத சொல்லாதது தப்புதான் அடிக்காத போதும்.." ஓவென ஒப்பாரி வைத்தாள் அவள் பதிலுக்கு.
காப்பாற்ற வீட்டில் மதியை தவிர வேறு யாரும் இல்லாமல் போனது சனாவிற்கு சாதகமாகி விட வறுத்து எடுத்து தன் கோபத்தை எல்லாம் மதுவின் மேல் பிளிந்து கொண்டிருந்தாள்.
மதுவின் கூடவே பிறந்த பிறப்போ தவறியும் அவளது அழுகை காதில் விழுந்திடாமல் இருக்க ஹெட்போனை காதினுள்ளே புதைத்து அமர்ந்திருந்தது.
போதும் போதும் என தோன்றும் அளவு அடித்து முடித்தவள் பக்கத்திலே அமர்ந்து மூச்சு வாங்க மதுவோ ஈஈஈஈ என அழ ஆரம்பித்தாள். அவளை சனா முறைத்த முறைப்பில் வாயை கப் என மூடிக்கொண்டாள்.
காலை நீட்டி போட்டு அமர்ந்து ஆதிஷ் வசுந்தராவிடம் கொடுத்து விட்டு போன பையிலிருந்த சாக்லெட்டை எடுத்து காலி செய்யத்தொடங்கினாள்.
அந்நேரம் ஜோசியரை பார்க்க சென்றிருந்த வசுந்தராவும் மூர்த்தியும் வர கதவை திறந்து விட்டு மீண்டும் வந்து நல்ல பிள்ளையாய் வந்து அமர்ந்து கொண்டாள் சனா.
ஹெட்போனை கழட்டி ஓரமாய் வைத்து விட்டு சனா அருகில் தவழ்ந்து வந்த மதி சனாவின் காதை இழுத்து வைத்து.."பாத்ரூமுள்ள என்னடி நடந்தது.." என கேட்கவும் அவளை முறைத்த சனா.."சின்ன புள்ள கேட்குற கேள்வியாடி இது.." என்றாள் சத்தமாய்.
பாய்ந்து வந்து அவள் வாயை மூடியவள்.."க்கும் நான் உன்ன விட ஜஸ்ட் ஏழு வயது தான் சின்னவ மறந்துடாத.." என்றாள் பாவனையோடு.
"அட ஜஸ்ட் ஏழுதானா அப்போ அடுத்த மேடையிலே உனக்கும் கல்யாணத்த வச்சிடலாம்..அம்மா" அவள் சத்தமாய் அழைக்க இவள் மாட்டி விட்டாலும் விடுவாள் என அங்கிருந்து சத்தமின்றியே விலகிச்சென்றாள் மதி.
நாட்கள் இவ்வாறு நகர ஆதிஷ் திருமணத்தை நிறுத்த முயற்சிப்பதும் தோல்வி காண்பதுமாய் இருக்க இங்கு சனா வசுந்தராவின் அறிவுறைகளை ஒதுக்கி வீட்டுக்குள் அடைத்து விட்டு ஊர் மேய போவதும் தொடர இதோ நாளை திருமணம் என்றிருக்க சொந்தக்காரர்களால் வீடே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.
இன்றைக்காவது இவள் உருப்படியா இருந்துடனும் என உலகில் எல்லா கடவுளையும் வேண்டிக்கொண்ட வசுந்தரா ஊர் சுற்ற போனவளை பிடித்து இழுத்து வந்து மேலே அவரது அறையில் அமர்த்தி காவலுக்கு வாசலிலே மதியையும் நிறுத்தி வைத்து விட்டு வேலைகளை பார்க்க சென்றார்.
அப்படி மட்டும் நடந்தால் சூரியன் தான் மேற்கில் உதித்து விடுமே கதவை வசுந்தரா அடைத்துச்சென்ற அடுத்த நொடி ஜன்னல்வழி எட்டிப்பார்த்தான் சுதன்.
"ஏய் வா வா..விக்கி பெட்ட எங்க வச்சிருக்கான் கண்டுபிடிச்சிட்டயா..? எப்படி போக போறோம்..அவன் அங்க இல்லாத டைம் எப்போ" ஆர்வத்தில் அவனருகில் ஓடிச்சென்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள் சனா.
"ம்ம்ம்ம்.."
"என்னடா ம்ம்ம்ன்ற..ஏதும் சிக்கிடுச்சா என்னத்தய அப்பட சாப்பிட்ட.."
"ம்ம்ம்ம்" அவன் மீண்டும் ம்ம் எனவும் தான் புரிந்தவளாக..
"ஓஹ் இத எடுக்கவா இரு இரு.."அவன் வாயில் இருந்த கயிற்றை கையில் எடுத்தாள் சனா.
எடுத்தது தான் தாமதம்.."மக்கு மக்கு ஏறி வந்தவன தூக்கி விடுவோமா இல்ல வாயில இருக்கதாவது எடுப்போமா அதுவும் இல்லயா இந்த கையில இருக்கதையாவது எடுக்கிறயா ஒன்னுமில்ல கேள்வியா கேக்குற மக்கு சட்டி.." பொறிந்து தள்ளினான் சுதன்.
சுறு சுறு என கோபம் ஏற.."டேய் ஏணியோடே பிடிச்சி தள்ளி விட்றுவன் ஓவரா பேசாத.." சனா எச்சரிக்க கீழே ஏணியை பிடித்துக்கொண்டு நின்ற மஹதி இந்து மகேஷ் குமாருக்கு பொறுமை பறந்து கொண்டு இருந்தது.
"ஆமா ஏணி ஏறி உன்ன காப்பாத்த வந்தேன் பாரு என்ன சொல்லனும்..போ" கோபத்தில் அவன் முகத்தை திருப்பிக்கொள்ள சனாவோ இவன் போய்ட்டா நாம எப்படி போறது மன்னிப்பு கேட்கலாமா என்று யோசிக்க அதே நேரம் கீழே இருந்து.."டேய் இரண்டு பேரும் கீழ வந்து சண்ட போடுங்கடா..என்ன ஜென்மங்களோ உங்க இரண்டு பேராலையும் தான் நம்ம டைகர் கெங் இன்னும் முன்னேறவே இல்ல.."மஹதி பொறுமை இழந்து சத்தமிட இப்போது தங்களது சண்டை மறந்த சனாவும் சுதனும் என்ன என கேட்டுக்கொண்டே கீழே பார்த்து முறைத்தனர்.
சில கெஞ்சல் கொஞ்சல் பல சண்டைகள் என ஏணியிலிருந்து சுதன் தரை இறங்க அவனுக்கு பின்னே இறங்கினாள் சனா.
"சரி சரி ப்ளான் என்ன பெட் எங்க இருக்கு.."
சனா கேட்க அங்கிருந்த வாண்டுகள் அனைத்தும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விட்டு நீ சொல்லு என ஆள் ஆளை காட்ட இவ்வொறே நேரம் கடக்கவும் பொறுமையை இழந்த சனா.."யாராவது சொல்லுங்கடா..." என்றாள் கோபமாய்.
"அது சட்டி..பெட் இருக்கது..இருக்கது.."சுதன் இழுக்க..
"இருக்கது.." என எடுத்துக்கொடுத்தாள் சனா..
"இருக்கது ஆதிஷ் மாமா வீட்டுல.."பட்டென போட்டு உடைத்தாள் மஹதி.
"ஹீஹீ சரிடா பசங்களா பார்த்து கவனமா போய்ட்டு வாங்க..அக்காக்கு கல்யாணம்ல வெளில எல்லா சுத்த கூடாதுல..டாட்டா.."சனா ஏணியை எடுத்து வைத்து ஏறப்போக.."ஏய்."என்று அனைத்து வாண்டுகளும் முன்னால் வந்து நின்று மறைத்தது.
அடுத்த பத்து நிமிடத்தில் அவளை உருட்டி மிரட்டி ஆதிஷ் வீட்டின் முன்னால் நிற்க வைத்திருந்தனர்...
"டேய் வேற பெட் வாங்கிக்கலாம்டா சொன்னா கேளுங்க.."சனா அழுகுரலில் இழுக்க..
"முன்ன வச்ச கால பின்ன வைக்க த டைகர் கெங்க்கு தெரியாது சட்டி மறந்துடாத.." என்றான் சுதன்.
"சரிடா நான் முன்னயும் வைக்கல பின்னயும் வைக்கல நீங்க வரும் வரை இங்கயே நின்னுக்குவேனாம்..நீங்க போவீங்கலாம்..எப்படி.."சனா சிரித்துக்கொண்டு கேட்க நல்லாவே இல்ல என்று அனைவரும அவளை இழுத்துக்கொண்டே அந்த வீட்டின் பின்பக்கமாய் சென்றனர்.
உள்ளே ஏறிக்குதித்தவர்கள் மேல்தளத்தில் இருந்து ஆளுக்கு ஒருவர் ஒரு பக்கமாய் பிரிந்து தேடலை ஆரம்பிக்கப்போகவும் சனா சுதனை பிடித்து வைத்து தன் சந்தேகத்தை கேட்டாள்.
"சுப்பு விக்கி ஏன்டா பெட்ட இங்க வைக்கனும்.."
"அது சட்டி அவனுக்கு நாம தேடி வருவோம்ன்னு தெரியும் அதோட ஆதிஷ் மாமாவும் விக்கியும் இப்படியாம்..." என்றான் தன் கைகளிரண்டையும் அவள் முன்னால் பிணைத்துக்காட்டி.."ஆனால் அவனுக்கு தெரியாது ஆதிஷ் மாமா நமக்கு மாமான்னு..சரி சரி தேடு போ.." என்று விரட்டி விட்டு தன் வழியே போனவன் திரும்பி வந்து.." இது ஆதிஷ் மாமா தூங்குற டைம்..பாட்டியும் தான்..வேற யாரும் இங்க இல்ல சோ பயப்புடாம போலாம்.." என்று விட்டு திரும்பி நடந்தான்.
தன்னையே நொந்து கொண்டு சனா அறையிலிருந்து வலதுபக்கமாக போக ஆரம்பிக்க..."ஆஷி டேடி..ங்க இயிக்க.." என்று இடது பக்கமாய் இருந்து வந்த மழலைக்குரலில் குழம்பியவள் கொஞ்சம் நின்று விட்டு பின் இடது பக்கம் மெதுவாய் நடக்க தொடங்கினாள்.
கருத்துக்களை பகிர