பூ -1
மண்ணின் மனம் வீச நிலப் பயிர்களின் வாசம் கொண்ட ஒரு அழகிய கிராமம், அக்கிராமத்தில் உள்ள பெண்மணிகள் காலை சூரியன் ஒளிதரும் முன் சாணி தெளித்து கோலம் விட்டுக்கொண்டிருந்தன, அப்போது தலைக்கு குளித்து அந்த வட்ட முகத்தில் கஸ்தூரி மஞ்சள் பூசி, சாதாரண தாவணி அணிந்து பெண் கோலம் போட வந்தவள் குணம் பூவை விட மனமும் வாசமும் கொண்டது அவள் சங்கமித்ரா..! அவள் குடும்பத்தை பற்றி கூறவேண்டும் என்றால் மிகவும் ஏழ்மையான குடும்பம்..., நினைவு தெரிந்த நாளிலிருந்து அவள்தான் தன் குடும்பத்தை தாங்கிக் கொண்டு வருகிறாள்..
இவளின் தந்தை மூர்த்தி என்ன தான் அரசு வேலையில் இருந்தாலும் மாத சம்பளம் என்னவோ வீட்டிற்க்கு முழுமையாக வருவதில்லை.. இதை நினைத்து மித்ராவின் அம்மா ராதாவுக்கு வருத்தம். ஆனால் ராதா அதையே எண்ணி வருந்திக் கொண்டு இருக்காமல் நாற்று நடுவது வயல்காட்டு வேலை என்று கைத்தொழில் பார்த்துக் கொண்டிருப்பவர். இந்த நிலையில் மித்ரா 12 வகுப்பை அதிக மதிப்பெண்களுடன் பெற்று படித்து முடித்தாள். அவளின் அம்மா அப்பாவுக்கு சந்தோசம் இவளின் அடுத்த நிலை உயர் நிலை கல்வி படிக்க வேண்டும் என்ற ஆசை,
மித்ராவுக்கு என்ன தான் உயர் நிலை கல்வி படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவளுக்கு அவள் தங்கை மூன்று பேறையும் நினைத்து வருத்தம் ! ஏன் என்றால் மித்ரா படிக்க சென்று விட்டாள் தன் தந்தை தாய் நினைத்து வருத்தம், இந்த நிலையில் ஒரு நாள் மூர்த்தி, மித்ராவுக்கு மாப்பிள்ளை பார்க்க போவதாக ராதா விடம் கூறிக்கொண்டு இருந்தார்..!
எப்படியோ இதை அறிந்துகொண்ட மித்ரா அவள் அறையில் அழுதுக் கொண்டு இருந்தாள்.. அப்போது அவ்வழியாக சென்ற ராதா மகள் அழும் சத்தத்தைக் கேட்டு, "ஏண் டி அழுவுற" என அதட்டலாக கேட்க.
தாயின கண்டிப்பான குரலில் சற்று நடுங்கி கண்கள் சிவக்க கன்னத்தில் நீர் துளிகள் தழுவிட அதை மித்ரா தன் கைகளால் துடைத்து விட்டு, "அம்மா! என்று ஏதோ கூற வர.. ராதா அதை முழுமையாக கேட்டு கொள்ளாமல் ஓங்கி கன்னம் சிவக்க ஒரு அறை கொடுத்தார்.
வேலைக்கு சென்று வீடு திரும்பிய மூர்த்தி மூர்த்தி, "ராதா" என குரல் கொடுத்தார். ராதா மித்ரா அழுவதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், "இதோ வரெங்கனு என கணவனுக்கு பதில் கூறியவள் அழுதுகொண்டிருந்த மகளை சற்றும் ஏறெடுத்துப் பார்க்காமல் அந்த அறையை விட்டு வெளியேறினார். மித்ரா வின் அழுகை மேலும் கூடியதே தவிர குறையவில்லை.
மூர்த்தி ராதாவைப் பார்த்து, "ஏன் மித்ரா அழுதுகிட்டு இருக்கா?" என்று கேட்டார். ஏனென்றால் அவர் காதுகளிலும் விழுந்தது மித்ராவின் அழுகையின் சத்தம் அதற்குத்தான் சந்தேகமாக தன் மனைவியிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.
அதற்கு ராதா, "உங்க பொண்ணுக்கு கல்யாணம் வேண்டாமுன்னு சொல்றா" என்றார் நக்கலாக.
இதைக் கேட்டு மூர்த்தி மகளின் அறை நோக்கி, "மித்ரா மித்ரா இங்க வாம்மா" என சற்று கட்டமாக அழைத்தார்.
"இதோ வரேன் பா என உள்ளறையில் இருந்து குரல் கொடுத்தவள் அழுகையை நிறுத்தி விட்டு, "சொல்லுங்க அப்பா எனக் கூறிக் கொண்டே அவர் அருகில் வந்து நின்றாள்.
"நாளைக்கு உணக்கு மாப்பிள்ளை பார்க்க வராங்க அதுக்கு அம்மா கொடுக்கிற நகை புடவை எல்லாம் போட்டுகிட்டு தயாராகி இரு" என்றார் மித்ரா உடனே மனதில் உள்ள ஆசைகளை மறைத்து, "சரிங்க அப்பா என்றாள் தந்தை சொல்லுக்கு மதிப்பு கொடுத்து. மூர்த்தியின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை.
மறுநாள் காலை ஐந்து மணி மேகம் தளர்ந்து போக சூரியன் உதிக்க மித்ரா வழக்கம்போல் வாசலில் கோலம் போட்டுவிட்டு வீட்டுக்குள் நுழைந்தாள் உடனே ராதா நகைகள் புடவை அனைத்தையும் கொண்டுவந்து மித்ரா விடம் கொடுத்துவிட்டு, 'மாப்பிள்ளை மணி பத்து மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு', "நீ அவர்கள் வரும் முன் தயாராகி விடு" என்று கூறிவிட்டு தன் வேலைகளை பார்க்க சென்றுவிட்டார். பாவம் மித்ரா அன்னை கொடுத்த புடவை மற்றும் நகைகளை கையில் வைத்துக் கொண்டு அதையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு நேரம் ஆக்குவதை உணர்ந்து குளிக்கச் சென்றாள்.
குளித்து முடித்து வந்தவள், அழகாக புடவை கட்டி பெண்களுக்கு அழகு சூட்டும் வகையில் புருவத்திற்கு மையிட்டு கண்களுக்கு மை இட்டு அவள் கண்ணுக்கு அழகு சேர்க்கும் வகையில் உருவத்திற்கும் அழகு சேர்க்கும் வகையில் இரண்டிற்கும் நடுவே வட்டவடிவ பொட்டு வைத்து ஒட்டி இருக்கு கீழே அழகிய குங்குமம் இட்டு கைகளில் அழகிய வளையல்கள் போட்டு காதில் தோடு போட்டு கால்களுக்கு அழகு சூட்டும் வகையில் கால் கொலுசு போட்டு பெண்ணிற்கு அழகு அவள் கூந்தலில் உள்ள பூக்களையே சூடும் அந்த வகையில் மிகவும் அழகிய மல்லிகைப் பூவைச் சூடிக்கொண்டு அன்னை கூறிய நேரத்திற்கு முன்பு தயாராகி அமர்ந்து இருந்தாள்.
மித்ரா தயாரான நிலையில், மூர்த்திக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து அழைப்பு வந்தது மூர்த்தி போனை கையில் வைத்துக்கொண்டு ராதாவிடம் கூற, உடனே ராதா, " சீக்கிரம் என்னன்னு கேளுங்க!" என்று ஆர்வமாக கேட்டார். மூர்த்தி அந்த அழைப்பை ஏற்று, " சொல்லுங்க? "என கேட்டார். அதற்கு மாப்பிள்ளை வீட்டார் தாங்கள் வருவதற்குத் தாமதமாகும் சொல்லிவிட்டு அழைப்பை பட்டென்று துண்டித்து விட்டார். மூர்த்திக்கு அப்போதே மனது உறுத்தியது தன்னையே கேள்வியாக நோக்கி கொண்டிருக்கும் மனைவியிடம் இதை கூற, ராதாவிற்கு மனக்கசப்பு வந்துவிட்டது ஏனென்றால் முதல் பெண் மித்ரா அவளுக்கு திருமணம் நல்லபடியாக செய்து விட்டு விட்டாள் இன்னும் 3 இளம்பெண்களை கரை சேர்க்க வேண்டும் என்ற கவலை வந்துவிட்டது. முதல் பெண்ணிற்கு இந்த தடுமாற்றம் என்றால் அடுத்து 3 பெண்ணிற்கு என்ன தடுமாற்றம் என மூர்த்திக்கு மிகவும் மனக்கவலை வந்துவிட்டது. ஊர்தியின் முகபாவனை பார்த்துக் கொண்டிருந்த ராதா கணவனிடம், 'கவலைப்படாதீங்க எல்லாமே நல்லபடியா நடக்கும்" எனக் கூறி தன்னையும் தேற்றிக் கொண்டார்.
நேரம் ஆனதே தவிர இன்னும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து எந்த தகவலும் இல்லை மறுபடியும் எந்த அழைப்பும் வரவில்லை ராதா, "என்னங்க இது மணி 11:00 மணி ஆகுது இன்னும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வரல?? எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு நீங்க போன் பண்ணி என்னன்னு கேளுங்க" என்றால் பதைப்புடன்.
மூர்த்தி, "இதோ கேட்டுப் பாக்குறேன்" எனக்கூறி கையில் போனை எடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்கு அழைப்பு கொடுத்தார் மாப்பிள்ளை வீட்டாரும் சரியாக பதில் அளிக்காமல் இதோ வருகிறோம் இதோ வருகிறோம் என பட்டும் படாமல் மூன்று தடவை சொல்லி விட்டு போனை துண்டித்து விட்டார். உடனே மூர்த்தி ஆதங்கமாக ராதாவிடம் சொல்லி கவலைப்பட. இம்முறையும் ராதா, "கவலைப்படாதீங்க எல்லாம் வருவாங்க" என மீண்டும் அதையே கூறி தங்களது வேலைகளை பார்க்க தொடங்கி விட்டனர். மித்ராவும் தன் அலங்காரத்தை கலைக்காமல் அவர்கள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தாள்.
இப்படியே காத்துக்கொண்டிருக்க அந்தி மாலை சூரியன் மறையும் மணி மாலை ஐந்து மணி ஆகிவிட்டது இந்த நிலையில் ராதா தன் கணவனிடம், "என்னங்க மாப்பிள்ளை வீட்டார் வருவதாக தெரியவில்லை, மறுபடியும் மாப்பிள்ளை வீட்டுக்கு போன் பண்ணி என்னனு ஒழுங்கா விசாரிங்க?" என்றார் தோய்ந்த குரலில்.
மனைவியின் சோர்வை கண்டு, "என்னம்மா பண்றது நான் போன் செய்தால் மாப்பிள்ளை வீட்டார் இது வருகிறோம் இதோ வருகிறேன்னு சொல்லிட்டு போனை கட் பண்றாங்க, ஒழுங்கா நான் கேட்டதுக்கு பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க என்னதான் பண்றது" என்றார் மனக் கசப்புடன்.
ராதா அதற்கு, "ஒரு தடவை கடைசியா போன் பண்ணி பாருங்க" என்றார் நம்பிக்கையுடன். மனைவியின் சொல்லுக்கு அடிபணிந்து மூர்த்தியும் கடைசி முயற்சியாக மாப்பிள்ளை வீட்டாருக்கு அழைப்பு விடுவித்தார், அந்தப்பக்கம் அழைப்பை ஏற்ற மாப்பிள்ளையின் தந்தை, "என் மகன் அரசு வேலையில் வேலை பார்க்கிறான் எனது மகனுக்கு உயர்கல்வி படித்த பெண்ணை தான் நாங்கள் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்று இருந்தோம்" என்று கூறினார். அதற்கு மூர்த்தி, " நாங்கள் உங்களுக்கு முதலிலேயே சொல்லியிருந்தோம் இல்லை என் பெண் பன்னிரண்டாம் வகுப்பு தான் படித்து இருக்கிறாள் என்று அதை தெரிந்து நீங்கள்தான் வருவதாக சொன்னீர்கள் பிறகு ஏன் இப்படி சொல்றீங்க" என மூர்த்தி மாப்பிள்ளையின் தந்தையிடம் கேட்டார்.
உடனே மாப்பிள்ளையின் தந்தை, "அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது நாங்கள் எங்கள் மகனுக்கு நல்ல உயர் கல்வி படித்த பெண்ணை தான் தேடுகிறோம் நாங்கள் வரவில்லை" என கூறி விட்டு போனை துண்டித்து விட்டார். மூர்த்திக்கு மிகவும் கவலையாகி விட்டது உடனே தன் மகள் இருக்கும் அறைக்குள் நுழைந்து , "என்ன மன்னிச்சிடு மா மாப்பிள்ளை வீட்டார் வரலை" என கூறி அவர்கள் கூறிய காரணத்தையும் கூறினார். ராதா கணவன் பின்னாலே வந்தவர் அவர் கூறியதைக் கேட்டு அவரும் திகைத்து, "என்னங்க இப்படி சொல்றீங்க என்ன ஆச்சு?" பதற்றத்துடன் விசாரிக்க.
"எத்தனை முறை கேட்டாலும் நான் சொன்னதுதான் உண்மை, வேற எதுவும் என்னால மாத்தி சொல்ல முடியாது என்றார் சற்று எரிச்சலுடன். ராதா கண்கள் கலங்க அதைக் கணவரிடம் காட்டிக்கொள்ளாமல் வந்த வழியே திரும்பி சென்றுவிட்டார். மனைவி சென்ற உடன் அங்கே எந்த முக பாவனையும் காட்டிக் கொள்ளாமல் நின்றிருந்த மகளிடம் திரும்பிய மூர்த்தி, "மாப்பிள்ளை வரும் முன் நீ ஏன் அழுதாய்?" என கேட்க உடனே மித்ரா கண்களில் கண்ணீர் கன்னம் சிவக்க கண்ணீர் துளிகள் அவள் முகத்தில் விழுந்து, " வேலை பார்த்துக்கொண்டே உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற அம்மாவிடம் கேட்டேன் அம்மா அதற்கு உயர்கல்வியை ஒன்றும் தேவை இல்லை என சொல்லிவிட்டு உனக்கு அடுத்து 3 தங்கைகளே இருக்கிறார்கள் அவர்களை நினைத்துப் பார்த்தாயா எனக் கேட்டுவிட்டு என்னை அடித்து விட்டார்" என மித்ரா தேம்பி தேம்பி அவள் அப்பாவிடம் அழுது சொல்லிவிட்டாள்
மித்ரா அடுத்து உயர் கல்வி படிக்க செல்வாலா !மூர்த்தி என்ன சொல்லப் போகிறார் என அடுத்த அதியாயதில் பார்க்கலாம்.
மலருவாள்....