பூ-5
மித்ரா வீட்டுக்கு சென்றவுடன் அம்மா !எனக்கு மிகவும் பசி எடுக்குது ஏதாவது கொடுங்க அப்படின்னு ராதாவை பார்த்து மித்ரா கேட்டால் .
ராதா உடனே இதோ எடுத்துட்டு வரேன் அப்படின்னு சமையலறையை நோக்கி சென்றார்.
மித்ரா கைகளை கழுவிக்கொண்டு சாப்பிட சென்றார் . உடனே ராதா மித்ராவை பார்த்து இன்று கல்லூரி எப்படி போனது எப்படி இருந்தது என கேட்டார்.
உடனே மித்ரா அதற்கு சிரித்துக்கொண்டும்
மகிழ்ச்சியாகவும் இன்றைய நாள் நன்றாக சென்றது அம்மா என சொல்லிவிட்டு உள்ளே சென்றாள் மித்ரா .
மித்ராவின் தங்கைகள் மூன்று பேரும் மித்ராவிடம் வந்து அக்கா இன்னைக்கு காலேஜ் எப்படி போச்சு அப்படின்னு கேட்டார்கள்.
உடனே மித்ரா ம் ம் ம் ம் .... சூப்பரா போச்சுடி ன்னு சொல்லிட்டு அன்றைய பாட புத்தகங்களை படிக்க சென்றுவிட்டால் மித்ரா.
மறுநாள் காலை மித்ரா வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல தாமதமாகிவிட்டது . அங்கு வகுப்பறை ஆரம்பித்துவிட்டது.
ஆனால் மித்ரா மிகவும் தாமதமாக சென்று வகுப்பறை முன் நின்றாள் அங்கு வகுப்பறை எடுத்துக் கொண்டிருந்தது (கைலாஷ் ) ..!
கைலாஷ் !மித்ரா வகுப்பறைக்கு வெளியே நின்றிருப்பது சற்றும் கவனிக்காமல் பாடத்தை நடத்திக் கொண்டிருந்தார்.
மித்ரா உடனே சார் நான் உள்ளே வரலாமா என கேட்டாள் அதற்கு கைலாஷ் மித்ராவை பார்த்து இதுதான் வகுப்பறைக்கு வர நேரமா மணி என்ன ஆகுது என்று பார்த்தியா.
மித்ரா அதற்கு வீட்டில் இருந்து வர சிறிது தாமதம் ஆகிவிட்டது சார் என சொன்னால் அதற்கு கைலாஷ் அதைப் பொருட்படுத்தாமல் உனக்கு மட்டும் தனியா வகுப்பறை எடுக்க முடியுமா எல்லோரும் உன்னுடன் படிக்கிறவங்க தான் அவங்க மட்டும் எப்படி டைமுக்கு வராங்க..?
அப்படின்னு மித்ராவை பார்த்து கேட்க அதற்கு மித்ரா வீட்டிலிருந்து வர கொஞ்சம் தாமதமாகிறது என்று திரும்பத் திரும்ப அதையே சொல்லிட்டு இருந்தால். கைலாஷுக்கு ரொம்ப கோவமா ஆகிடுச்சு.
மித்ரா வை பார்த்து நான் கேக்குறது உனக்கு புரியலையா சொன்ன பதிலையே திரும்பத் திரும்ப சொல்ற அப்படின்னு கைலாஷ் ரொம்ப திட்டிகிட்டே இருந்தாரு.
உடனே மித்ரா வகுப்பறைக்கு முன் அழுதுகொண்டே நின்றிருந்தாள் கைலாஷ் அதைப் பொருட்படுத்தாமல் வகுப்பறையை நடத்த சென்றுவிட்டார்.. சென்றுவிட்டார்
ஆனால் மித்ரா யோசித்துக்கொண்டு அழுது கொண்டும் இருக்கிறாள் ஏன்னா மித்ராவுக்கு படித்து முதல் மதிப்பெண் ,எடுத்து அவள் பெற்றோர்களை கௌரவிக்க வேண்டும் என்பதே அவளின் குறிக்கோளாக இருந்தது.
ஆனால் இதெல்லாம் கைலாஷுக்கு தெரியாது. மித்ரா சார் நான் உள்ளே வரட்டுமா அப்படின்னு கேட்டாள் அதற்கு கைலாஷ் நீ இன்றைய முழு நாள் வகுப்பறைக்கு உள்ளே வரக்கூடாது நீ வெளியவே பாடத்தை கவனித்துக் கொள் என சொன்னவுடன்.
மித்ரா ரொம்ப கவலையா அழுதுக்கிட்டே இருந்தா அப்பவும் அவ முழு நாள் நின்று பாடத்தை எல்லாத்தையும் கவனித்து குறிப்புகளை எடுத்துக் கொண்டால்.
கைலாஷ் மித்ராவை கூப்பிடு பேசினார். ஏன்மா இப்படி லேட்டா வந்த அப்படின்னு கேக்க அதற்கு மித்ரா என்னை வீட்டில் இருந்து கூப்பிட்டு வர யாரும் இல்லை சார் அப்பா வேலைக்கு சென்றுவிட்டார் அதனால் நான் நடந்தே ! காலேஜுக்கு வந்தேன் அதனால தான் தாமதமாக வந்து விட்டேன் சாரி சார் இதுக்கு அப்புறம் நான் கரெக்டா காலேஜுக்கு வந்துருவேன் ..
உடனே கைலாஷ் சரிம்மா நானும் சாரி கேட்டுக்குறேன் உன்ன ஒருநாள் முழுசா வகுப்பறைக்கு வெளியே நிற்க வச்சது தப்புதான் சாரிமா.
அதற்கு மித்ரா பெருந்தன்மையாக சார் நீங்க எதுக்கு சாரி எல்லாம் சொல்றீங்க வகுப்பறைக்கு தாமதமாக வந்தது என்னுடைய தவறு அதற்கான தண்டனை பெறுவது தான் சரி என சொல்லிவிட்டு சென்று விட்டாள்.
ஆனால் என் மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஏன்னா மித்ரா ஓட காலேஜ் இரண்டாவது நாள் ஆன அன்றே குறிப்பிட்ட நேரத்திற்குள் வகுப்பறைக்கு செல்லாமல் பனிஷ்மென்ட் வாங்கியதை நினைத்தே கவலைப்பட்டாள்....
மித்ரா வீட்டிற்கு சென்றவுடன் யாரிடமும் பேசாமல் மௌனமாக உள்ளே சென்று விட்டாள் ..
மூர்த்தி வருகிறார் அப்போது ராதா மித்ராவின் பற்றி மூர்த்தி இடம் எடுத்துச் சொன்னாள்.. இங்க பாருங்க மித்ரா வந்ததிலிருந்து யார்கிட்டயும் பேசாம உள்ள போய் உட்கார்ந்துட்டு இருக்கா நீங்களே என்னன்னு உங்க பொண்ணு கிட்ட கேளுங்க அப்படின்னு சொன்னார் ராதா..
அதற்கு மூர்த்தி உடனே மித்ராவிடம் சென்று மித்ரா அப்டின்னு கூப்பிட ! சித்ரா தலைநிமிர்ந்து அவள் அப்பாவைப் பார்க்க உடனே மூர்த்தி மித்ராவை பார்த்து ஏன்மா ஏன் எதற்கு அழுகிராய் என்றுகேட்டார்
அதற்கு மித்ரா அப்பா இன்னைக்கு நீங்க என்ன காலேஜ்க்கு கூட்டிட்டு போய் விடாமல் வேலைக்கு போயிட்டீங்க நான் காலேஜுக்கு நடந்தே போய் வகுப்பறைக்கு தாமதமாக சென்று விட்டேன்.
வகுப்பறைக்கு தாமதமாக சென்றதனால என்ன ஒரு நாள் முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நின்று பாட குறிப்புகளை எடுத்துக் கொள்ளும்படி ஆசிரியர் சொல்லிவிட்டார் என்னை இனிமே நீங்க சீக்கிரமா காலேஜுக்கு கூட்டிட்டு போய் விட்டுடுங்க அப்பா என்று சொன்னாள்.
அதற்கு மூர்த்தியும் சரி மா என்னால ஒருநாள் கூட்டிட்டு போய் விட முடியும் மற்றொரு நாள் என்னால எப்படிமா கூட்டிட்டு போய் விடமுடியும் நீயே யோசிச்சு பாரு மித்ரா என்று மூர்த்தி மித்ராவிடம் சொல்லிவிட்டார்..
மித்ரா அழுதுகொண்டே இருக்கிறாள்... மூர்த்திக்கு உடனே ஒரு யோசனை வருகிறது.
நான் இருக்கும் ஒரு வண்டியை வேலைக்கு எடுத்து சென்று விடுகிறேன் பிறகு வீட்டில் இருக்கும் என் மகள்கள் கடைக் கோ வெளியே எங்கேயாவது செல்ல வேண்டுமென்றால் எதை எடுத்து செல்வார்கள் என மூர்த்தி சிந்தித்து ஒரு முடிவு எடுத்து விடுகிறார்.
மித்ரா விடம் சென்று மித்ரா அழுவாத ம நாம புதுசா ஒரு ஸ்கூட்டி வாங்கலாமா உனக்கு காலேஜ் எடுத்து செல்லவும் தங்கச்சிங்களுக்கு வெளியே எடுத்து செல்ல உபயோகமா இருக்கும் என மூர்த்தி சொல்லியது ராதாவுக்கும் மித்ரா வுக்கும் மித்ராவின் தங்கைகளுக்கும் அன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
எல்லோரும் மகிழ்ச்சியாக உறங்கச் சென்றனர்..
மலறுவால் ....