All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரியா வரதராஜனின் 'காதல் ரோஜாவே' - கதை திரி

Status
Not open for further replies.

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இதோ அடுத்து ஒரு புதிய எழுத்தாளரின் அறிமுகத்துடன் வந்துவிட்டேன்... எப்போதும் போல் இவருக்கு உங்களது ஊக்கத்தினை அளித்து உற்சாகப்படுத்துங்கள்... நிறைகளை கூறி ஊக்குவித்து, குறைகளை சுட்டிக்காட்டினாலும் அவரது திறமையை தட்டி கொடுக்க மறந்துவிடாதீர்கள்... கதையைப் பற்றி அவரே வந்து கூறுவார்... நன்றி மக்களே...

அன்புடன்,

ஶ்ரீகலா :)
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்,
நான் ரியா வரதராஜன்..... நாவல் படிக்குறதுல ரொம்ப ஆர்வம் ... அந்த ஆர்வம் இன்னிக்கு என்னை ஒரு நாவல் எழுதுற அளவுக்கு கொண்டு வந்துருக்கு ....... என்னோடைய முதல் கதை காதல் ரோஜாவே .... ஓரே ஜாலி ஆஹ் இருக்கு நானும் கதை எழுத போறேன் ..... எல்லாரும் எனக்கு சப்போர்ட் பண்ணுங்க கண்டிப்பா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி கதை போடுறேன் ......


நன்றி ஸ்ரீ mam
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே - 1


அதிகாலை சிலென்று காற்று முகத்தில் வீச , அதை சற்று அனுபவித்து ரசித்தவாறே பால்கனியில் நின்று கொண்டு இருந்தான் சித்தார்த், NGMN குரூப் ஒப் கம்பெனி md......இன்று தன் வாழ்வில் மிக முக்கியமான நாளாக இருக்க போகிறது என்று ஒரு வித உற்சாகத்தோடு , இன்று தான் செய்ய வேண்டிய வேலையை தீர்மானித்தான் ...... சித்தார்த் 29 வயது நிரம்பியவன்.... அவனின் ஆளுமையும் , கம்பிரமே எடுத்துரைக்கும் இவன் ஆண்களுக்கான இலக்கணம் என்று.... கண்களாலே அடுத்தவர்களை தன் கீழ் பணிய வைப்பவன்..... அதிக வேகமும் விவேகமும் உடையவன், ஒன்றை நினைத்தாள் அதை செய்து முடித்தே தீருவான்..... தொழிலில் அதிக எதிரிகள் இருந்தாலும் இவனை எதிர்க்க நினைக்கும் தைரியம் யாருக்கும் இல்லை , என் எதிர்க்க வேண்டும் என்று நினைத்தாலே , அவர்களை வேரோடு சாய்பவனாயிற்றே .....

சித்தார்த் குரூப் ஒப் கம்பெனி 8 அடுக்கு மாடியுடன் கம்பிரமாக நின்று கொண்டு இருந்தது...... இன்று வரை இந்தியா அளவிலான பறந்த அதன் கொடி இன்று முதல் உலகம் முழுக்க பறக்க இருக்கிறதே..... ஆம் இந்தியாவின் நம்பர் 1 network ஆன Next Generation Mobile network அடுத்த படியாக இன்டர்நேஷனல் நெட்ஒர்க் ஒன்றுடன் இணைய போகிறது, அதற்கான காண்ட்ராக்ட் ஒப்பந்தம் தன் இன்று நடைபெற இருக்கிறது ...... NGMN பல பேரின் dream கம்பெனி என்றே சொல்ல வேண்டும்

அடுத்த சில நொடியில் புயல் வேகத்தில் உள்ளே நுழைத்தான் சித்தார்த்..... அவனுக்கு மரியாதை தரும் விதமாக எல்லாரும் எழுந்து நின்று வணக்கம் சொல்ல அதை எதுவும் கண்டுகொள்ளாமல் அவனின் அறையை நோக்கி சென்றான் ........ அடுத்து சில மணி நேரத்தில் அந்த இன்டர்நேஷனல் மீட்டிங்கை அட்டென்ட் செய்தவன் அதில் வெற்றியும் அடைந்தான்.....




சி. என். டி பிரஸ் வேலை ஒரே பரபரப்பாகப் போய் கொண்டிருந்தது... அங்கு வந்த பியூன் நிலாவை எடிட்டர் அழைப்பதாக கூறிவிட்டு சென்றான்... நிலா உள்ளே சென்றதும், எடிட்டர் ஷண்முகம் அவளை பார்த்த பார்வையிலே நிலா தலையேய் கவிழ்த்து விட்டால். அவளால் எப்படி அவரை பார்க்க முடியும் . ஏனென்றால் அவள் செய்த வேலை அப்படியாயிற்றே.. ஓரு கட்சியின் தொண்டன் இறந்துவிட்டார்..... அவரை பற்றி செய்தி போடுவதற்கு டாக்குமெண்ட் ரெடி செய்ய சொன்னால் ....... அவள் அந்த கட்சியின் தலைவரே இறந்து விட்டதாக அல்லவா அவள் செய்தியை போட்டிருந்தாள்......

நிலா எனக்கு ஒரு சந்தேகம் நீ உண்மையாவே பைத்தியமா இல்லை பைத்தியம் மாதிரி நடிக்கிறியா..... உன்னை என்ன லைவ் நியூஸ் ஆ எழுத சொன்னேன்...... உன்னை மாதிரி நாலு பேரு இருந்தால் போதும் எப்பேர் பட்ட பெரிய ப்ரெஸ்ஸாக இருந்தாலும் சரி ரெண்டெ நாளில் இழுத்து மூட வேண்டியதுதான்...... சரி அதை விடு...


இன்னும் 3 நாட்களில் பிசினஸ் அவார்ட்ஸ் தர போறாங்க அதில் இளம் தொழில் அதிபர்கண விருது தமிழ்நாட்டை சேர்ந்த சித்தார்த் அதான் NGMN குரூப் ஒப் கம்பெனி md , அவர் தேர்ந்து எடுக்க பட்டுள்ளார்..... அவரின் கடந்து வந்த பாதை முதல் இன்று வரை எல்லாத்தியும் கலெக்ட் செய்து 21ம் பக்கம் முழுவதும் ஒரு ஆர்டிகள் போட வேண்டும் என்றதும் ...... நாலா பக்கமும் தலையே ஆட்டி விட்டு சென்றால்


இந்த ஆர்டிகள் தன் தலை எழுத்தையே மாற்ற போகும்...... இந்த ஆர்ட்டிகளை என் போட்டோம் என்று பிற்காலத்தில் தினம் தினம் அழ போகிறோம் என்று அப்போது அவளுக்கு தெரிந்திருந்தால் இந்த வேலைய வேண்டாம் என்றுப்பாளோ........
விதி யாரை விட்டது.......
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலா 23 வயது நிரம்பிய அழகிய பெண்.....அம்மாவும் தங்கையும் மட்டுமே அவள் உலகம்.... தனது சுட்டித்தனத்தாலும் குறும்பாலும் அடுத்தவர்களை கவர்ந்து விடுவாள்..... எளிதில் எல்லாரிடமும் பழகி விடுவாள்....நிலாவுக்கு இந்த வேலையில் அவ்வளவு பிடித்தம் இல்லை.... நிலாவின் அப்பா உயிராய் நேசித்த வேலை... அவரின் இறப்புக்கு பிறகு அந்த வேலையை நிலாவுக்கு கொடுக்க பட்டது.... இதோ அந்த வேலையை சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறாளே......

அந்த அறையை விட்டு வெளியே வந்த நிலாவுக்கு சற்று எரிச்சலாக தான் இருந்தது..... எடிட்டர் கொடுத்தது ஒன்றும் அவ்வளவு பெரிய வேலை இல்லை ...... அதை கூட தான் உருப்படியாக செய்ய வில்லை என்று தன்னை தானே நொந்தவள் ...

அடுத்த தன் எழுத போகும் இளம் தொழில் அதிபர் பற்றிய ஆர்ட்டிகளை கண்டிப்பாக தன்னால் முடிந்த வரை சிறந்த ஆர்டிகள் ஆக கொடுக்க வேண்டும் என்று சித்தார்த் பற்றிய முழு விவரத்தையும் சேமிக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தாள்......

அவனை பற்றி தெரிய தெரிய அவளுக்கு பிராமிபவும் ஆச்சரியமாகவும் இருந்தது..... ரெண்டே நாளில் அவனின் முழு விவரத்தையும் சேகரித்தவள்..... அவனை பற்றி ஒரு ஆர்ட்டிகளை தயார் செய்தால்.....

அதை பார்த்த ஷண்முகம் அசந்து போய்விட்டார்..... அவளின் ஆர்டிகள் அவ்வளவு அருமையாக இருந்தது..... இதுவரை அவள் கொடுத்து எந்த வேலையும் சரியாக செய்தது இல்லை என்றாலும் தான் அவள் மீது வைத்து இருந்த நம்பிக்கை பொய்த்து போகவில்லை என்று அவருக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது......

அதில் சில திருத்தங்களையும் சிலவற்றை நீக்கிவிடவும் சொனார்....... சொன்ன திருத்தங்களை சரி செய்தவள், அதில் உள்ள சில கண்டெண்ட்களை நிக்க அவளுக்கு மனம் வரவில்லை....... ஏனென்றால் அது சித்தார்த் பற்றிய இதுவரை வெளியே வராத உண்மைகள்...... வெளியே வரவேகூடாது என்று அவன் நினைத்து மறைத்து வைத்திருந்த அவனின் கருப்பு பக்கத்தை தான் அவள் வெளியே கொண்ட வந்தே தீர வேண்டும் என்று துடித்து கொண்டு இருந்தால்......

ஷண்முகம் இதை கண்டிப்பாக போட விடமாட்டார் என்று அவளுக்கு உறுதியாக தெரியும் அதான் மறுப்பு சொல்லாமல், சரி என்று சொல்லி விட்டு வந்துவிட்டால்...... அதை நிக்காமலே print செய்யவும் குடுத்துவிட்டால்......

அவள் உண்மையை வெளியே கொண்டு வந்தே தீர வேண்டும் என்று எண்ணினாலே தவிர அதனால் தான் தலை எழுத்தே மாறிவிடும் என்று நினைக்க வில்லை ........ என் இதை நீக்காமல் விட்டோம் என்று அவள் வருந்த கூடிய காலம் வெகு தூரம் இல்லை.......
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்,
என்னோட முதல் கதையோட முதல் அத்தியாயம் போட்டு விட்டேன் மக்களே...... படித்து விட்டு எப்படி இருக்குனு கமெண்ட் பண்ணுங்கள்...... அப்போ தான் என்னால உற்சாகமா தொடர்ந்து போட முடியும்.......நிறையோ குறையோ கமெண்ட் ல சொல்லுங்க ப்ளஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.......
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே - 2

அடுத்த நாள் காலை பொழுது அழகாக விடிந்தது ..... அலாரம் அடித்ததும் எழுந்து அணைத்து விட்டு jogging செல்ல தயார் ஆகி கொண்டிருந்தான் ரிஷி .... சித்தார்த்வுடைய P. A ரிஷி என்று சொல்வதை விட அவனின் left hand என்றுத்தான் சொல்ல வேண்டும்..... சித்தார்த் அவனிடம் கையை எடுத்து விட்டு வா என்று சொன்னால் தலையே எடுத்து விடுவான்...... சித்தார்த் சொல்வதையே கண்மூடி தனமாக நம்புபவன் அவனின் சொல்லே வேதவாக்கு ....... சித்தார்த்காக தன் உயிரே கேட்டாலும் தருவான் அவன் மீது அப்படி ஒரு மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன் ......

Jogging முடிந்து வந்ததும் ஒரு cupல் coffee கலந்து கொண்டு வந்தவன் செய்தி தாளில் கவனத்தை திருப்ப அதில் சித்தார்த் பற்றிய ஆர்டிகிள் இருக்கவும் , அதை படித்தவனின் மணமோ குழப்பத்தில் ஆழ்ந்தது ....... அதை நம்ப மணம் மறுத்தாலும் , ஒரு பொய்யான தகவலை எப்படி ஒரு பிரபலமான செய்தி தாளில் இவ்வளவு தைரியமாக போட முடியும்..... ஏனனில் அது பொய்யான தகவல் என்றால் அதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கு மிக நன்றாகவே தெரியுமே....... அது பொய்யான தகவல் என்றால் அந்த ப்ரெஸ்ஸில் இருந்து வெளியிட்ட கடைசி செய்தித்தாள் இதுவாக தான் இருக்கும் என்று அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும் ....... அப்படி இருந்தும் இப்படி ஒரு செய்தி போட்டு இருக்கிறார்கள் என்றால் என்று பல்வேறு யோசனையில் இருந்து மீண்டவன் அடுத்து தான் செய்ய வேண்டிய வேலையை நொடியில் தீர்மானித்து பின்பு , NGMN க்கு செல்ல புறப்பிட்டவன் அடுத்த 10வது நிமிடத்தில் அங்கே இருந்தான்..... நேராக சென்றது சித்தார்த்தின் அறைக்கு தான்....... ஒரு நிமிடம் சற்று தயங்கி நின்றுவிட்டு ....... பின்பு யோசனையுடனே உள்ளே சென்றவன், சித்தார்த்திடம் அந்த செய்தி தாளை நீட்ட, ரிஷியை கேள்வியாக பார்த்த சித்தார்த்துக்கு அவனின் முகத்தை வைத்தே எதோ சரியில்லை என்று தோன்ற அந்த தாளை வாங்கியவன் அதில் கண்ணை பதித்தான் .......



அதை படித்த சித்தார்த்தின் முகம் கோபத்தில் சிவந்து இருக்க......... அதனை கண்ட ரிஷிக்கு புரிந்துவிட்டது அதில் இருப்பது உண்மைதான் என்று ....... அவனே ஆரம்பிக்கட்டும் என்று பொறுமைக் காத்தான்......

ஆனால் சித்தார்த்தின் மன நிலையோ வேறு மாதிரி இருக்க.... அந்த ஆர்ட்டிகளை திரும்ப திரும்ப படித்தவன் கோவத்தின் எல்லைக்கே சென்றுவிட்டான் இதை எழுதியவனை கண்டிப்பாக சும்மா விடக்கூடாது என்று எண்ணியபடி......... ரிஷியை பார்க்க............ இதை எழுதியவனின் பற்றிய முழு விவரம் இன்னும் ஒரு மணி நேரத்தில் எனக்கு வேண்டும் என்று ஆணை இட்டான் ........

எவ்வளவு தைரியம் இருந்தால் இப்படி ஒரு செய்தியை போட்ரிப்பான் அவனை கண்டிப்பாக உயிரோடு விடக்கூடாது என்று கொந்தளித்த ரிஷியை கண்கள்லலே அடக்கியவன், இல்லை ரிஷி அவனை ஒரே நிமிடத்தில் கொன்று விடக்கூடாது....... வாழ வைத்து கொல்ல வேண்டும்....... என்னை பற்றி தெரியாமல் அவன் என்னிடம் மோத வில்லை என்னை பற்றி முழு விவரமும் சேகரித்து, என்னை பற்றி தெரிந்து மோதி இருக்கிறேன் என்றால் அவன் வாழும் ஒவ்வொரு நிமிடமும் சாக வேண்டும்..... அவனுக்கு எங்கு வலிக்குமோ அங்கு தான் அடிக்க வேண்டும் என்று சொல்ல...... சரி என்று வெளியே வந்த ரிஷிக்கு தெளிவாக புரிந்துவிட்டது இனி அந்த அவனை யார் நினைத்தாலும் சித்தார்த்திடம் இருந்து காப்பாத்த முடியாது என்று.......



அடுத்த ஒரு மணி நேரத்தில் நிலா பற்றிய முழு விவரத்தையும் சேகரித்த ரிஷி நேராக சித்தார்த்திடம் சொல்ல ....... ரிஷி சொன்னதை கேட்ட சித்தார்த்க்கு அந்த கோவத்தையும் தாண்டி ஆச்சர்யமாக தான் இருந்தது......... ஏனென்றால் இதுவரை அவனை மோதியவர்கள் எல்லாருமே ஆண்கள் தான்...... இன்று ஒரு பெண் தன்னை பற்றி எல்லாத்தியும் தெரிந்துகொண்டே மோதிருக்கிறாள் என்றால் அவளின் தைரியம் அவனுக்கு பிடித்து தான் இருந்தது.......... ஆனால் அந்த தைரியம் இனி அவளிடம் இருக்கவே கூடாது என்று எண்ணியாவான் ஆர்ட்டிகளை அவள் என் போட்டோம் என்று தினமும் எண்ண வேண்டும் என்று நினைத்தவன் ......... அவளின் நம்பரை ரிஷியிடம் வாங்கி அவனே அவளுக்கு போன் செய்ய ........

***********---------------**************


சி.என்.டி ப்ரெஸ்ஸில், ஷண்முகம் நிலாவின் மேல சரியான கோபத்தில் இருந்தவர் ....... இதை உன்னிடம் நீக்கி விட தானே சொன்னேன்...... கொஞ்சமாவது உனக்கு அறிவு இருக்க ???? இதனால் எவ்வளவு பெரிய பிரச்னை, உனக்கும், இந்த ப்ரெஸ்க்கும் வரும் என்று உனக்கு தெரியுமா என்று கேட்க....

அவ்வளவு நேரம் அமைதியாக கேட்டு கொண்டிருந்த நிலாவுக்கு கடுப்பாக இருந்தது
என்ன சார் நான் என்ன பொய்யான நியூஸ்ஆ போட்டேன் உண்மையான நியூஸ் தானே போட்டேன் என்னிடம் evidence இருக்கு ..... ஏன் சார் உண்மை நியூஸ்யை போட கூட நமக்கு உரிமை இல்லையா???? ஏன் பயப்பட வேண்டும் என்று எதையோ பேச போனவளின் போன் அடித்தது .......

அதை எடுத்து பார்க்க ஏதோ புது நம்பர் காட்ட அதை அட்டென்ட் செய்தால் ...... எதிர்புறம் சித்தார்த் இது நிலா தானே என்றாவன் , அவள் ம் என்று சொல்லி கூட முடிக்கவில்லை உடனே கிளம்பி NGMN குரூப் ஒப் கம்பெனிக்கு வா என்றான் .......

அதை கேட்ட நிலாவுக்கு கோவமாக வந்தது அதே கோவத்துடுடன் என்னால் வர முடியாது என்றால்...... அதற்கு சித்தார்த் உன்கிட்ட வர முடியுமான்னு நான் கேட்கல நீ வந்தே ஆகணும்னு சொன்னேன்...... நீயாக வரியா இல்லை நான் வர வைக்கட்டுமா என்றான்...... முடிந்ததை பாருங்கள் என்று அவள் சொல்லி முடிக்கும் முன் உன் தங்கச்சி சக்தி இங்க தானே ஜெ.ஸ். பி கல்லூரி தானே 2ம் ஆண்டு கம்ப்யூட்டர் science படிக்கிறாள் என்றதுமே அவளுக்கு உடம்பு எல்லாம் பதறியது அடுத்த நொடி தாமதிகமால் எப்போ வரணும் என்றால் ...... thats good இன்னும் அரை மணி நேரத்தில் NGMN குரூப் ஒப் கம்பெனில் இருக்க வேண்டும் என்றவன் அடுத்த நொடி போனை கட் செய்துவிட்டான்.......

NGMN குரூப் ஒப் கம்பெனி உள்ளே நுழைத்தாள் நிலா....... நேராக receptionistயிடம் சென்று சித்தார்த் சார் பார்க்க வேண்டும் என்று சொல்ல அங்க இருந்த receptionist அவள் பெயர் கேட்டுவிட்டு ரிஷிக்கு கால் செய்து தகவல் சொல்ல அடுத்த நொடி ரிஷி அங்கே வந்தான்........

நீங்கதான் நிலாவா என்று கேட்டதுக்கு தலையை மட்டும் ஆட்டி வைத்தாள்....... ரிஷி அவளை ஒரு மாதிரி பார்த்து வாங்க என்று மட்டும் சொல்லி விட்டு வேகமாக நடந்து சித்தார்த் அறையை நோக்கி சென்றான் ...... அறையின் கதவை தட்டினான் அடுத்த நொடி come in என்று கம்பிரமாக குரல் கொடுத்தான் சித்தார்த்.....

உள்ள போகும்படி நிலாவிடம் கையை காட்டி விட்டு அவள் போக வழி விட்டு தள்ளி நின்றான் ....... அவள் உள்ளே சென்றதும் அவளை பின் தொடர்ந்து ரிஷியும் உள்ளே சென்றான்.......

சார் இவங்க தான் அந்த நிலா என்க சித்தார்த் எழுந்து வந்து டேபிள் மேல் லேசாக சையைந்து அமர்ந்தவாறு அவளை பார்க்க , அதை பார்த்த நிலாவுக்கு எரிச்சலாக இருந்தது..... இங்க பாருங்க நான் எந்த ஒரு பொய்யான நியூஸ்யும் போடல என்கிட்ட அதற்கான evidence இருக்கு....... இந்த மாதிரி என் தங்கச்சி வச்சு மிரட்டும் வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்காதிங்க என்று அவள் ஒரு கை நீட்டீ சொல்ல...... அடுத்த நொடி சித்தார்த் அவள் கையை பற்றி முறுக்க நிலா வலி தாங்க முடியமால் முகத்தை சூளித்தாள் .... என்கிட்ட கை நீட்டீ பேசுவது இதே கடைசியாக இருக்கட்டும் என்று எச்சரிசத்தவாரு அவளை பார்க்க ..... நிலாவுக்கு வலி தாங்க முடியமால் கண்களில் தண்ணி நிக்கமால் வடிந்து கொண்டிருக்க அதை பார்த்தவன் மேலும் கையை இறுக்க அதற்க்கு மேல் நிலாவால் முடியாமல் ப்ளீஸ் சார் விட்ருங்க... ப்ளீஸ் ரொம்ப வலிக்குது சார் விட்ருங்க சார் விட்ருங்க ப்ளீஸ் என்று பாவமாக கெஞ்சி கொண்டருந்தாள் ...... இன்னும் கொஞ்சம் முறுகினால் கைய உடைந்து விடும் என்று எண்ணிபடி கையை விட்டான்........

நிலாவுக்கு கொஞ்சம் விட்டால் இதயமே வெளியே வந்து விழுந்து விடும் அளவிற்கு இதயம் துடித்து கொண்டு இருந்தது....... அவளை அமர்தலாக பார்த்தவன் கவலை படாதீங்க miss நிலா நான் உங்கள ஒன்னும் பண்ணமாட்டேன்...... என் listல நீ இல்லை உன் அம்மாவும் தங்கையும் மட்டும் தான் இருக்கிறார்கள் என்று சொன்னதும்.......... நிலாவுக்கு மூச்சு மூடுவது போல் இருந்தது ..... அவளுக்கு பயத்தில் உடம்பு எல்லாம் பதறியது.. நான் சொல்ற 3 கண்டிஷன் படி நீ நடந்தால் உன் அம்மாவும் தங்கையும் நான் எதுவும் செய்யமாட்டேன் என்ன சொல்ற உன்னோட சாய்ஸ் தான் என்று கேட்க...

நிலாவோ அவளுக்கே கேட்காத குரலில் ம் என்று பதில் அளித்தாள் ..... சித்தார்த் கேட்கல சத்தமா சொல்லு என்றதும் உங்க கண்டிஷனை சொல்லுங்க என்றால்........ அவன் சொன்ன கண்டிஷனை கேட்டவள் நொறுங்கிய போய்விட்டால் ..... இதற்கு பதிலாக என் உயிரை எடுத்திருக்கலாம் என்று நினைத்தவள் ஒரே நாளில் தன் வாழ்க்கை இப்படி தல கீழ் மாறிவிட்டதை நினைத்து கண்களில் நீர் நிரம்ப அப்படியே நின்றாள்.......
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே -3

நிலாவுக்கு எப்படி இதில் இருந்து தப்பிப்பது என்று புரியவே இல்லை....... தான் ஏதோ ஒரு பெரிய வலையில் சிக்கி கொண்டது போல் தோன்ற அந்த அறையில் அவளுக்கு மூச்சு விட கூட கஷ்டமாக இருந்தது...........இனி தன் வாழ்வு தன் கையிலையும், தன் இஷ்டத்துக்கும் இருக்க போவது இல்லை என்று நன்றாக புரிந்தது.......

சித்தார்த் நிலாவை பார்த்து கொண்டிருந்தான்...... உண்மையிலே நிலா போன்ற அழகான முகம் பார்ப்பவரை இன்னொரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகு...... பார்க்க சின்ன பெண்ணாக தான் இருக்கிறாள், ஆனால் அவள் செய்த காரியமோ அப்படி இல்லையே...... சில சமயங்களில் நாம் சின்னதாக நினைத்து செய்யும் காரியங்கள் அவ்வளவு சிறியதாக இருப்பது இல்லை...... சித்தார்த் பற்றி அவள் என்ன எழுதி இருந்தாலும் அவன் கண்டிப்பாக இவ்வளவு கோவப் பட்டிருக்கமாட்டான் எழுதுவது அவர்களின் உரிமை என்று விட்டுருப்பான் ....... ஆனால் அவள் எழுதியதை நினைக்க நினைக்க அவன் மணம் கொந்தளித்தது தன் மணம் அமைதி அடைய அவளை தண்டிக்க வேண்டும் என்று நினைத்தான்.....

ரிஷிக்கு உண்மையாவே சித்தார்த் சொன்ன அர்த்தம் அப்போ சரியாக புரியவில்லை என்றாலும் இப்பொது தெளிவாக புரிந்தது இதை விட நிலாவை எப்படி தண்டிக்க முடியும்...... கண்டிப்பாக யாராலும் முடியாது என்றே தோன்றியது..... ஆனாலும் அவளை பார்க்க அவனுக்கு கவலையாக தான் இருந்தது....... அந்த பழக்கத்தை அவன் சித்தார்த்திடம் தான் கத்துக்கொண்டான்..... சித்தார்த் எப்போதும் பெண்களை மதிப்பவன்...... இதுவரை பெண்கள் அவனை அவர்களின் வலையில் விழ வைக்க எவ்வளவு முயற்சி செய்து இருக்கிறார்கள் ஆனால் யாரையும் அவன் ஏறு எடுத்தும் பார்த்தது இல்லை....... பெண்கள் என்றால் எப்போதும் ஒரு மரியாதையுடன் தான் பார்ப்பான்....... இன்று அவனே இப்படி நடந்துக்குறான் என்றால் நிலா எழுதியது எவ்வளவு தூரம் அவன் மனதை பாதித்து இருக்கிறது என்று புரிந்தது......

சித்தார்த் சற்று இடைவெளி விட்டு பின்பு தொடர்ந்தான் ........ மீண்டும் ஒரு முறை நிலாவிடம் என்ன நிலா நல்ல யோசிச்சு முடிவு பன்னிட்டியே என்று கேட்க, நிலாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை உண்மையில், சொல்ல வேண்டும் என்றால் நிலாவுக்கு அவன் எந்த ஒரு சாய்ஸ்யும் தரவில்லை.... நான் சொல்வதை செய் இல்லை உன் அம்மாவையும் தங்கையும் கொன்றுவிடுவேன் என்ற மிரட்டல் மட்டுமே இருந்தது....... நிலா இன்று ஒரு நாள் மட்டும் எனக்கு டைம் வேண்டும் நாளையில் இருந்து நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்கிறேன் என்று தனது சம்மதத்தை சொல்லிவிட்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியேறி விட்டாள் .......

அப்போ நன்றாக மழை பெய்ந்து கொண்டிருந்தது அதை கூட உணராமல் அந்த மழையில் நினைந்து கொண்டே போய் கொண்டிருந்தாள் நிலா....... அவளின் மனதில் சித்தார்த் சொன்ன சொல்லே படமாக ஓடி கொண்டிருந்தது......



சித்தார்த் நிலாவையே பார்த்த படி அவனின் கண்டிஷன் சொல்ல ஆரம்பித்தான்...... கண்டிஷன் நம்பர் 1. உன் அம்மாவையும் தங்கை இடமும் இனி உன் வாழ்வில் எந்த காரணம் கொண்டும் பேசவோ பார்க்கவோ கூடாது......

கண்டிஷன் நம்பர் 2 அந்த பிரஸ் வேலையை விட வேண்டும்.....


கண்டிஷன் நம்பர் 3 இது எனக்கானது நீ இந்த கம்பெனியில் நான் சொல்லும் வேலைகளை தான் செய்ய வேண்டும்....... உன் வலியை உன் கண்களில் நான் தினமும் பார்க்க வேண்டும் என்று தன் கண்டிஷனை சொல்லி முடித்தான்..... இந்த கண்டிஷன் படி நீ நடந்தால் உன் அம்மாவும் தங்கையும் பத்திரமாக இருப்பார்கள் என்றான்.....


இதை கேட்ட நிலாவுக்கு இதய துடிப்பே நின்று விடும் போல் இருந்தது...... இதற்கு பதில் என்னை கொன்று இருக்கலாமே அவர்களுக்காக தானே, நான் உயிர் வாழ்கிறேன் ......... தன் அப்பாவின் இறப்புக்கு பிறகு தன் அம்மாவிடமும் தங்கையிடமும் இந்த குடும்பத்தை அப்பாவின் நிலையில் இருந்து நான் காப்பாற்றுவேன் என்று வாக்கு குடுத்தேனே ...... அதற்காக தானே என் விருப்பம் இல்லாத வேலையை கூட என் தங்கச்சி படிப்புக்காக அந்த வேலையை செய்தேன் ....... அவர்கள் தானே என் உலகம்........ அவர்களை தவிர எனக்கோ இல்லை அவர்களுக்கோ யார் இருக்கிறார்கள் ...... ஒரு நாள் கூட இதுவரை நான் அம்மாவையும் தங்கையும் விட்டு இருந்தது இல்லை...... இனிமேல் அம்மாவையும் தங்கையும் பார்க்காமல் என்னால் இருக்க முடியுமா என்று நினைத்து கொண்டே நடந்துக் கொண்டிருந்தாள்...... கண்களில் மட்டும் கண்ணீர் நின்ற பாடு இல்லை......

அடுத்து தன் அம்மாவிடம் என்ன சொல்லுவது அவர்கள் இதை எப்படி ஏற்று கொள்வர்கள் என்று தெரியவில்லை அவர்கள் எங்க இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் தன்னால் அவர்களுக்கு எந்த கெடுதலும் வரக் கூடாது...... அதற்காக எதுவும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு போக அவளுக்கு விருப்பம் இல்லை.........

நேராக வீட்டுக்கு சென்றாள் யாரும் கவனிக்கும் முன் அவள் அறைக்கு சென்று கதவை தாழிட்டவள் ஒரு மூச்சு அழுது தீர்த்துவிட்டாள் ...... காலையில் இருந்து அழுததால் முகம் எல்லாம் சிவந்து இருக்க குளித்து விட்டு வெளியே வந்தாள் .......

நிலா நேராக அவள் அம்மா மீனாட்சியிடம் சென்றாள்........ அம்மா எனக்கு மும்பையில் வேலையை கிடைத்திருக்க என்று சொல்ல...... மீனாட்சி , அதற்கு என்றார்.... நான் அங்கே போய் வேலை பார்க்க போகிறேன்...... என்னை தடுக்கதிங்க அம்மா நான் நல்ல யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்....... எவ்வளவு நாள் தான் எனக்கும் பிடிக்காத வேலையை செய்ய முடியும் என்றாள்......

அதுக்கு ஏன் நிலா மும்பை வரை போக வேண்டும் சென்னையில் இல்லாத வேலையா என்றார்...... எங்க வேலை கிடைக்குதோ அங்க தான் அம்மா போக முடியும் என்றாள்.......

உனக்கு உலகம் தெரியாது நிலா நீ ஒரு குறுகிய வட்டத்துகுளே இருந்து பழகிட்ட இப்போ இவ்வளவு பெரிய ஊரில் எப்படி வேலை பார்ப்ப...... இப்போ எல்லாம் சுலபமாக தான் தெரியும் ஆனால் அங்கு போனதுக்கு அப்புறம் தான் தெரியும் ........ அது எல்லாம் உனக்கு சரிவராது.......

அம்மா நான் முடிவு பன்னிட்டேன் நான் அங்க தான் போய் வேலை பார்க்கப் போறேன்..... உலகம் தெரியாது தெரியாதுன்னு சொல்லிகிட்டே இருந்தால் உலகம் தெரிந்து விடுமா..... கொஞ்சம் உலகத்தை தெரிஞ்சுகிட்டு தான் வரனே........

அதற்க்கு அப்புறம் உன் விருப்பம் நிலா...... உன் விருப்பத்துக்கு என்றும் நான் தடையாய் இருக்க மாட்டேன் நிலா....... எப்போ சேர வேண்டும் என்றார்......

நாளை மறு நாள் சேர வேண்டும் இப்போவே கிளம்பினாள் தான் சரியாக இருக்கும் நான் போய் தேவையானதை எடுத்து வைக்குறேன் என்றவள் அறைக்கு செல்ல, சொல்ல முடியாத அளவுக்கு வேதனையும் தூக்கமும் இருந்தது.......

என் நிலை கண்டிப்பாக யாருக்கும் வரக்கூடாது
...... எல்லாரும் இருந்து என்னை அனாதை ஆகிவிட்டானே என்று கடைசியாக அவளின் அறையை ஒரு முறை சுத்தி பார்க்க அங்கு அவள் அங்கு வாழ்ந்த சந்தோஷமான நிகழ்வுகள் நியாபகம் வர அதற்கு மேல் அங்கு இருக்க முடியாமல்....... தன் பொருள்களை எடுத்து கொண்டு வந்தவள் இதற்கு மேல் இங்கே இருந்தால் எதாவது உளறி விடுவோம் என்ற பயத்தில் சீக்கரம் கிளம்ப முடிவு எடுத்தால்.......


கடைசியாக தன் அம்மாவின் கையில் ஊட்டி விட சொல்லி சாப்பிட்டு விட்டு....... தங்கச்சி சக்தி வரும் வரை காத்திருக்க முடியாது என்று சொல்லிவிட்டு கடைசியாக தன் வீட்டை பார்த்து கண்டிப்பாக நான் இங்கு வருவது கடைசி முறை இல்லை மீண்டும் கண்டிப்பாக வருவேன்........ முன்பு போல் தன் அம்மா, தங்கையுடனும் சந்தோசமாக இந்த வீட்டில் வளம் வருவேன் என்று தன்னை தானே சமாதான படுத்தி கொண்டாள் ....

 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
எல்லாரோட லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸ்க்கு ரொம்ப நன்றி...... இதோ அடுத்த ud போட்டுட்டேன் படிச்சுட்டு மறக்காம கமெண்ட் பண்ணுங்க நிறையோ குறையோ கமெண்ட்ல சொல்லிருங்க please.....
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காதல் ரோஜாவே -4


அடுத்த நாள் காலையில் NGMN குரூப் ஆப் கம்பெனி வெளியே நின்று அந்த பிரமாண்டமான கட்டிடத்தை பார்த்ததுமே நிலாவுக்கு பயம் வந்துவிட்டது..... கால் மணி நேரமாக அங்கேயே நின்று கொண்டிருந்தாள்..... உள்ளே போக பயத்தில் கால் வரவில்லை..... வெளியே இருப்பவர்கள் அவளை ஒரு மாதிரி பார்க்க, மனதில் தைரியத்தை கொண்டு வந்து இனி என்ன நடந்தாலும் எதிர் கொண்டே ஆக வேண்டும் என்ற நினைப்புடன் உள்ளே சென்றாள்....

அங்கு ரிஷி receptionistயிடம் எதோ கேட்டு கொண்டிருந்தான்..... நிலா நேராக சென்று ரிஷி பக்கம் போய் பார்ப்பானா பார்ப்பானா என்று அவனையே பார்த்து கொண்டு நின்றாள் ..... ரிஷியோ அவளை பார்த்து விட்டான் ஆனால் கண்டும் காணாதது போல் சென்று விட்டான்..... ஐயோ இப்போ தனியா தான் போய் அவனை பார்க்கணுமா, பேசாம இப்படியே ஓடி விடலாமா என்று நினைத்து கொண்டிருக்கும் பொதே அந்த receptionist, மேம் உங்களை சித்தார்த் சார் கூப்புறாங்க என்றாள்......

அடுத்த நொடி சித்தார்த் அறைக்கு சென்றாள்...... சித்தார்த் போன் பேசிய படி chairஐ சொழட்டி கொண்டிருந்தான்......கொஞ்ச நேரம் போன் பேசி விட்டு நிலாவிடம் வந்தவன் டைம் என்ன என்றான் எடுத்த எடுப்பிலே ..... நிலா மணியை பார்க்க அது 10:40 காட்டியது.......

அவள் அமைதியாக கீழே குனிந்து நின்று கொண்டிருந்தாள்....... நாளையில் இருந்து எட்டு மணிக்கு சரியாக உள்ளே இருக்கனும் என்றவன் ...... நீ வேலை பார்க்க போவது நெட்ஒர்க் ட்ரான்ஸ்மிஷஸின் (network transmission)என்று அவள் செய்ய போகும் வேலையை அவனே தெளிவாக விவரித்தான்......

அவளுக்கோ அவன் சொன்ன எதுவும் சரியாக விளங்க வில்லை இருந்தாலும் புரிந்ததா என்று சித்தார்த் புருவத்தை உயர்த்தி கேட்டதும் புரிந்தது என்று தலையை ஆட்டி விட்டாள்....... ஒரு சின்ன சாம்பிள் மட்டும் இப்போ செய்யட்டும் என்று எண்ணியவன் சரியாக அரை மணி நேரத்தில் செய்து கொண்டு வந்து காட்டு என்றான் உடனே பியூனை வர சொல்லி அவளுக்கான இடத்தை காட்ட சொல்லிவிட்டான்......

பியூன் காட்டிய இடத்தில் ஒரே ஒரு chair டேபிள் கம்ப்யூட்டர் இருந்தது .... அதில் அமர்ந்து அதை எடுத்து பார்க்க ஒன்னும் புரியவும் இல்லை அவன் சொன்ன எதுவும் நினைவிலும் வரவில்லை....

அடுத்த 1 மணி நேரத்தில் நிலாவை பியூன் வந்து சித்தார்த் கூப்பிடுவதாக சொல்லி விட்டு சென்றான்...... பயத்தில் கை எல்லாம் நடுங்க கண்களில் நீர் நிரம்பி சித்தார்த் முன் நின்றாள் ......

எப்போ முடித்து வந்து காட்ட சொன்னேன்.... உன்னை கூப்பிட ஒரு ஆள் அனுப்பநுமா என்று அவள் கையை பற்றி இறுக்க, முடிகிரியோ இல்லையோ சொன்ன நேரத்துக்கு வந்து ரிப்போர்ட் செய்யணும் என்று தெரியுமா தெரியாத என்று கையை மேலும் இறுக்கினான் ..... இல்ல சார் அது அது எப்படி பண்ணனும்னு கொஞ்சம் டவுட் ah இருந்தது அதான் என்று வலி தாங்க முடியாமல் சொல்லி முடிப்பதற்குள் திணறி விட்டாள்......

வலிக்குது சார் விடுங்க சார் ப்ளீஸ் என்று கெஞ்சி கொண்டிருந்தாள்.... சித்தார்த் அவள் முகத்தை தான் பார்த்து கொண்டிருந்தான் கண்ணில் இருந்து கண்ணீர் வலிந்து கொண்டிருக்க அவளின் முக்கு மட்டும் நன்றாக சிவந்து இருந்தது.......

சித்தத்திற்கு பொதுவாக பெண்கள் அழுதாள் சுத்தமாக பிடிக்காது...... ஆனால் நேற்று நிலா அழும் போது அவள் முகம் லைட்டா பிங்க் ஆக இருந்தாலும் மூக்கு மட்டும் சிவந்து போய் இருந்தது.... அதற்காகவே அவளை அழ வைத்து ரசித்து கொண்டிருந்தான்..... கதவு தட்டும் சத்தம் கேட்கவும் தான் அவள் கையை விட்டான்.....

சித்தார்த் என்ன இது என்று நியூஸ்பெபேருடன் உள்ளே நுழைந்தான் சச்சின்....... என்ன தைரியம் இருந்த இப்படி எழுதுவாங்க... எழுதுணவங்கள சும்மாவா விட்ட என்று அவன் கத்தியத்தில் நிலா நடுங்கி விட்டாள்..... அப்போ தான் சச்சின் நிலாவை கவனித்தான் ஹே இந்த பொண்ணு என்டா இப்படி அழுதுட்டு நிக்குது என்றான்......

சித்தார்த்தோ கொஞ்சமும் அலட்டி கொள்ளாமல் நீ கத்துனா கத்துக்கு தான்டா பாவம் பயந்து போய் அழுவுற என்று அதுதான் உண்மை போல் சொன்னான்......

சச்சினோ சாரி சாரி நான் எதோ டென்ஷன்ல கத்திட்டேன்.... நீங்க போய் வேலையா பாருங்க என்றான் ..... சித்தார்த் போனில் ரிஷியை அழைத்து ரூம்க்கு வர சொன்னான்...... ரிஷி வந்ததும் அவளுக்கு வேலையை பற்றி விவரிக்க சொல்லி இன்று அவள் செய்ய வேண்டிய வேலையை சொல்லிவிட்டு அதை முடித்ததும் வந்து பார்க்குமாறு சொல்லி அனுப்பி வைத்தான்.......

சச்சின் ஒரு லீடிங் கம்பெனியின் டைரக்டர்..... சித்தார்த்தின் மாமா மகன்..... அவன் அந்த நியூஸை பார்த்து பொறுக்க முடியாமல் சித்தார்த்தை பார்க்க வந்துவிட்டான்.......

என்ன சித்தார்த் இது இப்படி போட்டுருக்காங்க நீ என்னடானா கூல் அஹ இருக்க என்றதும் சித்தாத்திற்கு அதைப் பற்றி பேச சிறிதும் விருப்பம் இல்லை..... விடு சச்சின் அதை நான் ஹாண்டில் பணிக்குறேன் நீ டென்ஷன் ஆகாதடா என்றான்...... பின்பு பிசினெஸ் பற்றி பேச்சு திரும்ப அதை பற்றி கொஞ்சம் நேரம் பேசிவிட்டு சென்றான் சச்சின்.......

இங்கு நிலாவுக்கு கை கன்றி போய்விட்டது.... ரிஷி அவளை அவனுடைய ரூம்க்கு அழைத்து சென்றான்........ பின் அவளுக்கு வேலையை விவரிக்க நிலாவோ அழுகை நிற்கவே இல்லை கண்களை துடைத்த கொண்டே இருந்தாள்..... அதை பார்த்த ரிஷிக்கு கடுப்பாகி விட........ ஒன்னும் அவசரம் இல்லை முதல அழுது முடிங்க அப்புறம் நான் சொல்லவா, எனக்கு என்ன வேற வேலை வெட்டி இல்ல நீங்க அழுகுறத பார்க்குறது தான் என் வேலையினு நினைச்சீங்களா என்றதும் நிலாவோ நிமுந்து கூட பார்க்காமல் அமைதியாக உக்காந்திருந்தாள்....... அதை பார்த்த ரிஷிக்கு பாவமாக போய்விட்டது....

சரி பத்து நிமிஷம் பிரேக் எடுத்து ரீஃபிரஷ் ஆகிட்டு வாங்க என்று அனுப்பி வைத்தான்..... அவள் வந்ததும் வேலையை பொறுமையாக சொல்லிக் கொடுத்தான் ..... அவளும் தெளிவாக எல்லாத்தையும் கேட்டுக்கொண்டாள்..... சித்தார்த் சொன்ன வேலையை அவளுக்கு சொல்லிவிட்டு முடித்ததும் சித்தர்த்திடம் காட்டுமாறு சொல்லிவிட்டான்.....

சித்தார்த்திடம் வந்த ரிஷி, நிலாவுக்கு வேலையை விவரித்து விட்டதாக தகவல் சொல்லி விட்டு சென்றான்....... சித்தார்த்துக்கோ இவள் இதற்கே வலிக்குது என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள் இன்னும் போக போக என்ன செய்வாள்....... இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ள இப்படியா..... நிலா இனி நான் உன்னை சும்மா விடமாட்டேன் என்று வன்மமாக எண்ணிக்கொண்டான்.......

நிலாவோ அவளுக்கு கொடுத்த வேலையை முடித்து மணி பார்க்க அது ஏழு என்று காட்டியது......சித்தார்த்தை தேடி சென்றாள் அவனோ அதை சரி பார்த்து விட்டு அதில் உள்ள தவறுகளையும் திருத்த சொல்லி அனுப்பினான்...... தவறுகளை சரி செய்ய மணி 9 ஆகிவிட்டது..... அதை கொண்டு போய் அவனிடம் காட்டிவிட்டு வந்ததும் பசி எடுக்க, நேற்று அம்மா ஊட்டி விடச் சொல்லி சாப்பிட்டதோடு சரி இப்போ வரைக்கும் சாப்பிடவில்லை....... எல்லாத்தையும் எடுத்து வைத்துவிட்டு ஹாஸ்டலுக்கு கிளம்பினாள்

நிலா நேற்று இரவே ஒரு தனியார் ஹாஸ்டலில் போய் சேர்ந்துவிட்டாள் .... அவள் சிம் கார்டையும் உடைத்துவிட்டாள்....... ஒரு நிமிஷம் தான் என்ன செய்து கொண்டிருக்கோம் என்று ஒன்றுமே புரியவில்லை...... வேறு என்ன சொல்லிருந்தாலும் அவள் அதை கண்டிப்பாக செய்திருக்க மாட்டாள், அவள் அம்மா தங்கச்சி வைத்து மிரட்டுகிரனே அவர்களுக்கு எதாவது என்றால் தன்னால் கண்டிப்பாக தாங்கி கொள்ள முடியாது.............யாரிடம் உதவி கேட்பது, எப்படி இதற்கு தீர்வு கொண்டு வருவது என்று ஒன்னும் தெரியாமல்...... அவர்கள் நலன் கருதி தான் இப்படி தனியாக வந்து நிற்கிறாள் ........

********-----------*********

சித்தார்த் வீட்டுக்கு செல்ல அங்கு சித்தார்த்தின் அம்மா ரேவதி அவனுக்காக காத்துக் கொண்டிருந்தார்....... சித்தார்த்தால் அவன் அம்மாவின் முகத்தை பார்க்க கூட முடியவில்லை.......அவன் அப்டியே அவன் அறைக்கு செல்ல..... அதை கவனித்த ரேவதி "ஒரு நிமிஷம் சித்தார்த் உனக்காக தான் காத்துகிட்டு இருக்கேன், உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா ????? " என்று கேட்க ..........

சித்தார்த்திற்கு அவன் அம்மா கேட்க்கும் கேள்விக்கு பதில் கிடையாது என்று நன்றாக புரிய...... "இல்ல அம்மா இன்னிக்கு வேலை ரொம்ப அதிகமா இருந்தது அதான் ரொம்ப களைப்பயிருக்கு நாளைக்கு பேசலாமா " என்றவன் அவர் பதிலுக்கு கூட எதிர்ப்பார்க்காமல் அறைக்கு சென்றுவிட்டான்.......

ரேவதி பெரிய மகன் போவதையே பார்த்து கொண்டு நிற்க....... "என்னாச்சு மா ", என்று கேட்டான் ரேவதின் இளைய மகன் கிருஷ் என்னடா நினைச்சுட்டு இருக்கான் அவன் மனுசுல, ஒரு நிமிஷம் நின்னு பேச கூட முடியாதுனு சொல்லிட்டு போறான்டா என்றார்..... விடுங்க மா அவன் எதோ மன கஷ்டத்தில இருக்கான் இந்த நேரத்துல நாமலும் அவனா டிஸ்டர்ப் பண்ண வேணாம்..... அவனே வருவான் விடுங்க என்க....... ரேவதிக்கு தான் மணம் அடித்துக்கொண்டது..... அவனா சாப்பிடுவது வர சொல்லுடா என்றார்......

கிருஷ், சித்தார்த்தை தேடிச் சென்றான்..... உள்ளே சித்தார்த் பால்கனியில் நின்று கொண்டுருக்க கிருஷ் வருவதை கூட உணராமல் எதையோ யோசித்து கொண்டிருந்தான்...... கிருஷ் 2 முறை அழைத்து பின்பு தான் சுய நினைவுக்கே வந்தான்.......
என் சித்து அம்மாகிட்ட சரியா பேசல அவங்க எவ்வளவு வருத்த படுறாங்க தெரியுமா...... உனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்குனு எனக்கு புரியுது அதுக்காக அம்மாவா கஷ்ட படுத்தாத வா வந்து சாப்பிடு..... நீ சாப்ட்ருக்க மாட்டேன்னு அம்மாக்கு தெரியும் நாங்களும் சாப்பிடல வா போய் சாப்பிடலாம் என்று அழைக்க....... ஏன்டா இன்னும் சாப்பிடாம இருக்கீங்க, சரி வா போய் சாப்பிடலாம் என்று டின்னிங் டேபிள் நோக்கி சென்றான்.......

அங்கு அவனுக்காக காத்துக் கொண்டிருந்த அம்மாவிடம் சென்றவன்...... அம்மாவின் கையை பிடித்து, சாரி மா நான், என்று எதோ சொல்ல வர அதற்குமேல் அவனை பேசவிடாமல்... விடு சித்து உனக்கு மனசு கஷ்டம் தர எதையும் நாம பேச வேணாம்........ வா சாப்பிடலாம் என்று ரெண்டு மகன்களுக்கும் எடுத்து வைத்துவிட்டு தானும் சாப்பிட்டார்........

இப்போ ரேவதிக்கு சற்று நிம்மதியாக இருந்தது....... எங்கே தன் பெரிய மகன் பழைய விஷயத்தையே நினைத்து உடைந்து விடுவானோ என்று பயந்து போய்விட...... இப்போ அவன் இப்படி பேசுவதை பார்க்க சற்று நிமித்தியாக இருந்தது.......

ரேவதிக்கு எப்போதுமே பெரிய மகன் மீது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது........ அதை ஒரு நாள் மகனே உடைத்து ஏறியபோகிறான் என்று அப்போது அவருக்கு தெரியவில்லை......
 

Riya Varadharajan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends,
லாஸ்ட் டைம் லைக் அண்ட் கமெண்ட் பண்ணின எல்லாருக்கும் ரொம்ப நன்றி....... நெஸ்ட் ud போட்டுட்டேன் படிச்சுட்டு மறக்காம எப்படி இருக்குனு கமெண்ட்ல சொல்லுங்க........ நிறையோ குறையோ கமெண்ட் சொல்லிருங்க please ......
 
Status
Not open for further replies.
Top