All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரிஷியின் 'உயிரோடு கலந்தவள் 02' - கதை திரி

Status
Not open for further replies.

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 07 [ A ]



கருமணிகள் அங்குமிங்கும் அசைவதை கண்டவனுக்கு கண்களில் ஆனந்தக் கண்ணீர்.



மெதுவாக இமைகளை பிரித்தவளுக்கு மங்கலாய் தெரிந்தது ஜீவாவின் உருவம்....



மேலே தூக்க போராடியவளின் கையை இறுக்க பற்ற அவள் உடல் நடுங்கியது.



திரும்பி மானிட்டரை பார்த்தவன் அது சீராக இருக்கவும் பிடித்திருந்த கரங்களை விலக்கி விட்டு சற்று தள்ளி நின்று கொள்ள அதற்குள் தன் இமைகளை முழுதாக திறந்திருந்தாள் ஆராதனா தேவமாருதன்!!!



***



கண்களை மூடி பின்னால் சாய்ந்து அமர்ந்திருந்தவனுக்கு மனது வேகமாக துடிக்க அதற்குள் திடுமென கார் க்ரீச்சிட்டு நிற்கவும் படக்கென விழி திறந்து தம்பியை பார்த்தான் ரிஷி.



"அ....அ...அண்ணா... ஏதோ....ஏதோ.... மனசுக்கு...." அவன் தடுமாற தனக்கும் போலவே அவனும் உணர்ந்திருந்ததில் அதிர்ந்து போனான்.



"ணா ஏதோ எனக்கு சொல்ல தெரிலணா பட்.....யாருக்காவது ஆபத்தா?" தான் இவ்வளவு பேசியும் அண்ணனிடம் பதிலில்லாது போக அவன் புறம் திரும்பியவன் அவன் அதிர்ந்திருப்பது கண்டு உலுக்கினான்.



"அண்ணா...அண்ணாஆஆ"



"ஹாங்...."



"என்னணா என்னாச்சு?" தன் தவிப்பு மறந்து கேட்டான்.



"ஆ...ஆரு ஆரு...நீ நீ இப்போ சொன்னல்ல.... ஏதொ ஏதோ மாதிரின்னு....எ..எனக்கும்..." அவன் முடிக்காமல் நிறுத்த



"ஏன்னணா சொல்ற?" இம்முறை இவன் அதிர்ந்தான்.



"நிஜமாதான்டா"



"ணா....டாக்டர் அர்ஜுனுக்கு ஏதாவது...."



"நோ நோ.... இருக்காது...." சொன்னாலும் அவனுக்குள்ளும் பதற்றம்....



"ஆரு ஹோட்டல்ல தங்க தேவயில்ல.... "



"ஓகே ணா" கியரை மாற்றியவனின் கைகளில் பறந்தது ரால்ஸ் ராய்ஸ்....



***



"அ....அண்...." அவள் பேச்சு தடை பட



"அண்ணா நல்லா இருக்காங்கமா... எல்லோரும் நல்லா இருக்காங்க....நீ எதுவும் ஒர்ரி பண்ணிக்காத ஓகே?"



"இ....இ...ல்....ல ஆ.... ஆரு"



"அவனும் நல்லா இருக்கான்...."



"அ...அண்ணா..."



"எல்லோரும் நல்லா இருக்காங்க" சலிக்காமல் மீண்டும் மீண்டும் சொன்னான்.



"இ...இல்...ல...நா..."



"உனக்கு ஒன்னும் இல்லமா...நீ சேஃபா தான் இருக்க" அவள் கண்கள் ஓரம் நீர் வழிய துடைக்க துடித்த கைகளை இழுத்து பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அவளையே பார்த்தான்.



"நீ....நீ....ஜீ...ஜீ....வா" அவன் கண்களில் ஒளி.



"ஆமாடா நான் ஜீவா தான்" மீண்டும் கை நீட்ட இப்பொழுது இறுக்கப் பற்றிக் கொண்டான்.



***



"ப்ச்...." எரிச்சலாக மொழிந்து விட்டு கைகளில் தலையை முட்டுக் கொடுத்து அமர்ந்திருந்தான் சித்தார்த்.



இப்பொழுதெல்லாம் அவன் வேலை மிகவும் இழுத்தடித்துக் கொண்டிருக்க வெறுத்துத் தான் போனது.



ஆரவ்விற்கு அழைத்தாலாவது பரவாயில்லை என்றிருக்க அவன் எடுக்காததில் கடுப்பாக வந்தது.



முன்னால் யாரோ சேரை இழுத்துப் போட்டு அமரவும் கோபமாக நிமிர்ந்தவன் மதனை கண்டு சற்று இறங்கினான்.



"என்ன மச்சான் என்னாச்சு?"



"ப்ச்....போடா"



"என்னடா?"



"இந்த ராகேஷ் நாய கண்கானிக்க சொல்லி இருந்தாருடா"



"அண்ணனா?"



"ஆமா..."



"சரி...."



"அவன் போட்ட ப்ளான் எல்லாம் நாம ஒவ்வொன்னா கண்டு பிடிச்சு ப்ளாப் ஆக்கிட்டோம்ல?"



"ஆமா..."



"இப்போ வேற என்னமோ உளர்றான்டா"



"என்ன ஆச்சு?"



"அண்ணக்கி அண்ணாவும் ஆருவும் வர்றேன்னு சொன்னாங்க....நா முன்னாடியே போனேன்....அவன் ஏதோ பாம் ஸ்கூல்னு உளறிகிட்டு இருந்தான்"



"இப்போ என்ன?"



"நானும் ஷாக்காகி நல்லா கேட்டு பாத்துட்டேன் மச்சி.... வாயே திறக்க மாட்டேங்குறான்"



"அண்ணா கிட்ட சொல்லி இருக்கலாமே?"



"சொல்லலாம்னு தான்டா இருந்தேன்... அதுக்குள்ள வேற கேஸ் வந்துடுச்சு"



"இப்போ??"



"ப்ச் அதான்டா ஆருக்கு கால் பண்ணேன் நாட் ரீச்சபல்னு வருது"



"அண்ணாக்கு ட்ரை பண்ணு.... இதுக்காகவா எழவு வீடு மாறி உக்காந்துட்ருந்த?"



"டேய்...."



"கூல் மச்சான்"



"இல்லடா....அவங்களே டாக்டர் அர்ஜுன் கேஸ் டென்ஷன்ல இருப்பாங்க நாம வேற"



"இது தான் பிரச்சனயா?"



"ம்....ம்...."



"சரி விடு...கொஞ்ச நேரம் கழிச்சு பண்ணலாம்" ஆமோதிப்பாய் தலையசைத்தான் சித்தார்த்.





இராமநாதபுரம்....



வெளியே மழை அடித்துப் பெய்து கொண்டிருக்க பூனை போல் பதுங்கிப் பதுங்கி வாசலுக்கு வந்து நின்றாள் அவள்.



((நண்பா யாருன்னு நெனக்கிறீங்க....



ஹா...ஹா...ஹா...



அதே அதே



அவங்களே தான்...



நம்ம அஷ்வினி அம்மணி



மழயில நனைய போராங்கலாம்....



யாரும் விடல போல அதான் பதுங்குறாங்க))



மெதுவாக தலையை திருப்பி பார்த்தவள் யாரும் இல்லையென்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வெளியே பாய்ந்து விட அப்பொழுது தான் அவளை கண்டான் அஜய்.



கையை விரித்து தலையை உயர்த்தி அண்ணார்ந்து பார்த்தவள் ஒரு சுற்று சுற்றினாள் குதூகலத்துடன்....



"ரிக்ஷி...." அஜய்யின் கோபமான குரல் வாசலில் கேட்க

"அஷ்வி..." அழுத்தமான வருணின் குரல் கேட் அருகே கேட்டது.



இருவரையும் மாறி மாறி பார்த்தவள்



'ஆத்தாடி இவனுங்க பேரு மாத்தி கூப்புட்றானுங்களே....ரொம்ப கோபமா கத்துறானுங்க...ஏஃ....' மனதிற்குள் நாக்கை வளைத்தவள் திருதிருவென விழித்தாள்.



"உள்ள போ" வருண் கத்த அவன் புறம் திரும்பி முறைத்தாள்.



((அன்னக்கு அண்ணாவோட கோச்சி கிட்டு வந்தாங்க ஞாபகம் இருக்கா... அதுக்கு தான் இந்த முறைப்பு))



"அவன எதுக்குடி முறைக்குற.... உள்ள வா" இப்பொழுது அஜய்.



அவன் புறம் திரும்பி பாவமாக பார்த்து வைத்தாள்.



"உள்ள வான்னு சொல்றேன்ல ரிக்ஷி"



"அண்ணா ப்ளீஸ்"



"அண்ணனும் நொண்ணனும் உள்ள வா"



"கொஞ்ச நேரம் அஜய் ப்ளீஸ் டா" அதற்குள் அவளருகில் வந்த வருண் அவள் கை பிடித்து இழுத்துக் கொண்டு செல்ல காலை தரையில் அடித்து சிணுங்கினாள் தங்கை....



"அஷ்வினி" கோபமா அழைத்தவன் இழுத்துக் கொண்டு போய் வாசலில் விட்டான்.



வீட்டிலிருந்து அனைவரும் வெளியே வந்து விட்டிருக்க இரு அண்ணன்களுக்கு நடுவில் நடுங்கியபடி தலை குனிந்து நின்றிருந்தாள் அஷ்வினி.



"அறிவிருக்கா இல்லயாடி?" அஜய் கேட்க வாயை இறுக்க மூடியே இருந்தாள்.



"மாமா மாம்ம திட்டாதிங்க" முன்னால் வந்து நின்றான் யாதவ்.



'வாடா என் செல்லாகுட்டி' மனதில் கொஞ்சியவள் மறந்தும் நிமிரவே இல்லை....



"திட்டாம என்னடா பண்ணனும்.... ராத்திரி ஜுரம் வந்து படுத்திருப்பா"



"மாமா மாம் சரியாகிடுவாங்க" அவனும் கத்த அவளை முறைத்து விட்டு உள்ளே சென்று விட்டான்.



"அஷ்வா என்னடா இது...."



"சாரி விஜி..."



"சரி உள்ள வா" வாய் பொத்தி சிரித்த தங்கைக்கு கொட்டி விட்டு ஓடினாள்.



***



"ஆரு நீ கார ஓரமா நிறுத்துடா...." அவன் நிறுத்தி விட்டு இறங்க ட்ரைவர் சீட்டுக்கு மாறினான் ரிஷி.



......



"ஆரு மொபைல கார் புளூ டூத்துக்கு கணெக்ட் பண்ணு"



"ஓகே ணா"



"டாட்....."



"கண்ணா என்னடா தூங்கல?"



"மாம்கு மாமா திட்டுனாங்க" புகார் வாசிக்க



"டேய் அந்த கமாண்டர் கிட்ட எதுக்குடா சொல்ற?" கூடவே மனைவியின் குரலும்....



"உன் மாம் என்ன பண்ணாங்க?" மனைவி பற்றி அவனுக்கா தெரியாது!!!



"அதூ....மாம்" இடையில் தடை பட்டது பேச்சு....



அதற்குள் அவள் தான் கட் பண்ணி இருந்தாளே!!!



***



"டாக்டர் அவ கண்ணு முழிச்சிட்டா" வாசுவிடம் சொன்னான் ஆனந்த்.



"ஓ காட்...." ஆர்ப்பரித்தவர் டாக்டர் அர்ஜுனுக்கு அழைத்தார்.



.....



கையிலிருந்த மொபைல் சிணுங்க டாக்டர் அர்ஜுனை பார்த்து வெடிச் சிரிப்பு சிரித்தாள் ஆத்மிகா!!!



.....



கண்ட்ரோல் ரூம்....



"சார் அந்த மொபைலுக்கு கால் வருது" ஒரு ஆபிஸர் சொல்ல சித்தார்த்துடன் அவன் ஆபிஸிற்குள் நுழைந்து கொண்டிருந்தவன் அவனை இழுத்துக் கொண்டு ஓடினான்.



"சித்து....அண்ணாக்கு ட்ரை பண்ணு" அவன் சொல்ல ரிஷிக்கு அழைப்பு போனது.





"சித்து அண்ணாக்கு கால் பண்ணு" சொல்லி விட்டு ஓடியவன் அந்த ஆபிஸர் அருகே போய் பதற்றமாய் நின்று கொண்டான்.



"சொல்லுடா" ரிஷி கேட்கவே



"அண்ணா டாக்டர் அர்ஜுன் போஃனுக்கு கால் வருது" என்றான் தகவல் போலும்.



"வாட்....ட்ரேஸ் பண்ணியா....எங்க காட்டுது?"



"இதோ மதன் பாத்துட்ருக்கான்ணா" தொலைபேசியை நீட்ட காதில் வைத்தான் மதன்.



......



ஏதோ ஓர் ஆர்வத்தில் டாக்டர் அர்ஜுனுக்கு அழைத்து விட்டிருந்த டாக்டர் வாசு அன்று நடந்தது ஞாபகம் வர வாயை கப்பென மூடிக் கொள்ளவும் போஃனை எடுத்து விட்டு பேசாமல் இருந்தவரை குழப்பத்துடன் பார்த்தான் ஜீவா.



இரு பக்கம் இருப்பவர்களுமே அமைதி காக்க சட்டென துண்டித்தார் வாசு.



......



"மதன்"



"அண்ணா அடண்ட் பண்ணி இருக்காங்களே தவிர எதுவுமே பேசிக்கலணா" என்றான் யோசனையுடன்.



"டாக்டர் அர்ஜுனுக்கு கால் பண்ணது யாருன்னு விசாரி.... இப்போ டாக்டர் அர்ஜுன் போஃன் எங்க இருக்கு?"



"ஜெய்பூர் பார்டர்ல இருந்து கொஞ்சம் தள்ளி இருக்கறதா காட்டுதுணா"



"ஓகே நாங்க பாத்துக்குறோம்.... சித்தார்த் கிட்ட கொடு"



"எஸ் ணா"



"சித்து....ஹாஸ்பிடல் போனியா.... என்ன ஆச்சு.... சந்தேகம் வர்றா மாறி ஏதாவது...."



"இல்ல ணா....அவர் ஆபிஸ் கேபின்ல கூட சந்தேகம் வர்றா மாதிரி எதுவும் இல்ல"



"ம்...ஓகே..."



"அண்ணா"



"சொல்லுடா?"



"இல்ல அந்த ராகேஷ்..."



"சித்து அவன நீ பாரு நா அப்பறமா கவனிச்சுகுறேன்" அழைப்பை துண்டித்து விட்டான்.



***



அன்றும் போலவே இன்றும் பேசப்படாமலேயே கட்டாகி விட ஆத்திரத்தில் போஃனை தூக்கி தரையில் அடித்தாள் ஆத்மிகா.



அவள் எதற்காக கோபப்படுகிறாள் என தெரியாவிட்டாலும் எந்த தகவலுமே அவளுக்கு கிடைக்காததில் நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டார் டாக்டர் அர்ஜுன்.



"டாடிஈஈஈ...." கோபமாக பல்லை கடித்தவள் அர்ஜுனை முறைத்தாள்.



"இவன் கிட்ட இருந்து உண்மய வாங்குற கஷ்டம் டாடி....இவன போட்ருங்க" அவள் கத்தி விட்டு செல்ல அதிர்ந்து போனார் அர்ஜுன்.



***



"என்னாச்சு டாக்டர் ஏன் எதுவும் பேசல?"



"டாக்டர் அர்ஜுன் பெரிய சிக்கல்ல மாட்டி இருக்கார்னு நெனக்கிறேன் ஆனந்த்.... இது ஆபத்தா இல்லயான்னு எனக்கு தெரில.... பட் அவர் இருந்தா ஆரா பத்தின தகவல அவங்க குடும்பத்துக்கு சொல்லி இருக்கலாம்" அவர் குரலிலும் வருத்தம்.



கண்களை இறுக்க மூடித் திறந்தவன்



"டாக்டர்....ஆரா கண்ணு முழிச்சிட்டா"



"வட் யூ மீன்?"



"நா சென்னை கெளம்புறேன்....இத ஆறப் போட்றது நல்லதா படல"



"பட்..."



"இல்ல டாக்டர் நா என்ன முயற்சி பண்ணி சரி இந்த விஷயத்த சொல்லிட்றேன்... நீங்க அவள பாத்துக்கோங்க.... நா வர்றேன்" என்றவன் அவர் பதிலை எதிர்பாராமலேயே வெளியேறி விட்டான்.



***



"ணா கொஞ்சம் மெதுவா" ரிஷியின் வேகத்தில் சற்று திணறித்தான் போனான் ஆரவ்.



"நம்ம லேட் பண்ற ஒவ்வொரு நிமிஷமும் டாக்டர் அர்ஜுன் உயிருக்கு ஆபத்து ஆரவ்.... நமக்கான வாய்ப்ப எப்போவும் நாம எதிரிங்களுக்கு வழங்கிட கூடாது"



ஆமோதிப்பாய் தலையசைத்தவன் தன்னை நிதானப் படுத்தவும் மறுபடியும் ரிஷியின் மொபைல் ஒலிரவும் சரியாக இருந்தது.



"ம்....எடுத்து பேசு" கண்களை மீண்டும் சாலையில் திருப்ப அதை ஏற்று மொபைலை காதிற்கு கொடுத்தான் ஆரவ்.



"டாட்...."



"அட யாது குட்டியா... நா ஆரு டா"



"சித்து டாட் வேணும்"



"ஏய் என்னமா ஏன் அழற?" ஆரவ் பதறவே தன் புருவத்தை நீவியவன் ஸ்பீக்கரில் போடுமாறு சைகை செய்தான்.



"இல்ல எனக்கு டாட் வேணும்"



"கண்ணடா என்னடா இதோ டாட் பேசுறேன்"



"டாட்..." அவன் அழவே இவனுக்குள் பதற்றம்.



அதிவேகமாக செலுத்திக் கொண்டிருந்த கார் வேறு ஒரு லாரியுடன் நூலிழையில் தப்பிக் கொள்ள காரை ஓரமாக நிறுத்தி விட்டான்.



"கண்ணா...யாது..."



"...."



"யாதவ்..." அவன் பதில் சொல்லாமல் அழுது கொண்டே இருக்க கண்டிப்புடன் அழுத்தமாக அழைத்தான் தந்தை.



"டாட்....மா...ம்...." அவன் கேட்கவே இருவருக்குமே பதற்றம்.



"என்னமா என்ன?" இடை புகுந்தான் ஆரவ்.



"மாம்கு ஜுரம்..... வாந்தி எல்லாம் எடுக்குறாங்க" அவன் அழவே அவளுக்கு எதுவும் இல்லையென்றதும் தான் இழுத்துப் பிடித்த மூச்சையே விட்டனர் இருவரும்.



ஏற்கனவே பிரச்சினை.... இதில் அவன் மனையாளின் உடல் நிலை வேறு சேர்ந்து கொள்ள மொத்த கோபமுமே அவள் மீதே திரும்பியது.



கியரை முன்னும் பின்னும் மாற்றியவன் "இடியட்" கோபமாய் மொழிந்து விட்டு காரை இன்னும் வேகமாய் உறும விட்டு கிளப்பினான்.



அண்ணனை பார்த்து பெரு மூச்சு விட்டவன்



"யாது குட்டி.... அம்மாக்கு ஒன்னில்லடா செல்லம்..." என்றான் அக்கறையாய்...



"இல்ல இல்ல எனக்கு பயம்.... டாக்டர் ஊசி போடுவாரு"



'அடேய் அம்மா புள்ள அவக்கு ஊசி போடுவாங்கன்னு நீ எதுக்குடா அழற' மனதில் அலறியவன்



"நோ யாது வேணாம் சொன்னா போட மாட்டாங்க" அவன் குரலில் சமாதானம்...



"யாது குட்டி சமத்துல.... சித்தி கிட்ட இல்லனா மாமா கிட்ட கொடுங்க"



"இல்ல டாட் வீட்டுக்கு வா...." அவன் அடம்பிடிக்க கார் ஓட்டிக் கொண்டிருந்தவனுக்கு ஏகத்துக்கும் எகிறியது.



"சமத்து பையன் இல்லயா அப்போ?"



"சமத்து சமத்து" அவசரமாக ஆமோதித்தவன் "மாமா...." என கத்திக் கொண்டே ஓடினான்.



"யாது மெதுவா வா" கண்டிப்புடன் கூறினான் டாக்டரை அனுப்பி விட்டு உள்ளே நுழைந்த அஜய்....



"மாமா....ஆரு சித்தா" அவன் நீட்ட நடந்தது யூகித்தவனாய் காதில் வைத்தான்.



"சொல்லு ஆரவ்..."



"அஷ்விக்கு என்னாச்சு?" நேரடியாகவே விஷயத்திற்கு வந்தான்.



"மழைல நனஞ்சிட்டா அதான்.... இப்போ பரவால்ல" அவன் கேட்காத தகவலையும் சேர்த்தே சொன்னான்.



"என்னாது...மழைல நனஞ்சாளா.... சரியா போச்சு...."



"ஓகே நா வெச்சுட்றேன்" அவன் அழைப்பை துண்டிக்க மொபைலை யாதவ்விடம் கொடுத்து விட்டு யாதவ்வை தூக்கிக் கொண்டு தங்கை அறைக்குச் சென்றான்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கட்டிலில் சாய்வாக அமர்ந்திருந்தவளுக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார் விஜயலக்ஷ்மி.



"ஏன்டா இப்பிடி பண்ண....இப்போ பாரு உன்ன பாத்து குழந்தையும் பயந்து போயிருக்கான்" கடிந்து கொண்டார்.



"சாரி விஜி"



"சாரி சொன்னா ஆச்சா?" முறைத்தான் உள்ளே நுழைந்த அஜய்.



"சின்ன குழந்தைன்னு நெனப்பு"



"...."



"உன் பையன் உன் புருஷன் கிட்ட போட்டு கொடுத்துட்டான்"



'அடப்பாவி....சப்போர்ட் பண்ணுவன்னு பாத்தா கோர்த்து உட்டியேடா...இப்போ அந்த கமாண்டர் என்ன வெச்சு செய்வான்' பாவமாய் அண்ணனை பார்த்தாள்.



"என்ன எதுக்கு பாக்குற?" முறைத்து விட்டு வெக்கமே இல்லாமல் அடுத்த வாய்க்காக வாயை திறந்தவளை பார்த்து தலையிலடித்தவன் யாதவ்வை இறக்கி விட்டான்.



***



"ணா நாம பார்டருக்கு நெருங்கிட்டோம்" ப்ளைட்டில் அருகில் அமர்ந்திருந்த அண்ணனிடம் ஆரவ் சொன்ன அதே நேரம் சென்னை விமானத்தில் ஏறி கண் மூடி சாய்ந்திருந்தான் ஜீவானந்த்.



***



"இப்போ எப்பிடி இருக்கு?" கேட்டுக் கொண்டே நெற்றியை தொடப் போன வருணின் கையை படக்கென தட்டி விட்டாள் அஷ்வி.



"இன்னுமா உனக்கு கோபம் போகல?" சிரித்துக் கொண்டே கேட்டவனை பார்த்து முறைத்தவள் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டாள்.



"சாரிடி....சாரி சாரி சாரி"



"இங்க யாரும் சாரி வாங்குறதா இல்ல... எடுத்துகிட்டு கெளம்புங்க சார்"



"அடிப்பாவி....இப்போ நா என்ன பண்ணா பேசுவ?"



"நா பேச தேவையில்ல அண்ணா.... எனக்கு உங்க கூட பேச பிடிக்கல"



"ஹே சாரிமா"



"நான் பேசறது உங்களுக்கு தான் இர்ரிடேட்டா இருக்கும்ல?" அன்றைக்கு அவள் மனம் உண்மையில் காயம் பட்டு தான் இருந்தது.



கண்கள் கலங்க ஏறிட்டுக் கேட்டவளை சட்டென தன் தோளில் சாய்த்தான்.



"சாரிடா நா அன்னக்கு ஏதோ டென்ஷன்ல...ரியலி சாரி ரிக்ஷி.... உன்ன ஹேர்ட் ஆக்கனும்னு நா எப்பவும் நெனச்சதே இல்லடா... சாரிமா"



"ஒன்னும் வேணாம் போடா" பிடித்து தள்ளி விட சிரித்தான் அவன்.



"ப்ளீஸ் ஒரே ஒரு தடவ அண்ணன மன்னிச்சுடு..... என் செல்லம்ல?"



"இல்ல உன் செல்லமே இல்ல" சிறு பிள்ளையாய் முறுக்கிக் கொண்டாள்.



தலை தடவி நெற்றியில் முத்தமிட்டு செல்பவனை பார்த்து அழகாய் விரிந்தன அவள் உதடுகள்.



***



"ரகு ப்ளீஸ்...."



"என்னால முடியாது" கடற்கரை மணலில் அமர்ந்து கெஞ்சிக் கொண்டிருந்தவளிடம் மறுத்துக் கொண்டிருந்தான் ரகு.



"ஏன் முடியாது?"



"இல்ல வசு....நீ உன் அம்மாப்பா சொல்ற பையன கட்டிக்கோ... என்னால உன் வீட்டுக்கு வந்து பேச முடியாது....அது சரி வராது"



"அதான் ஏன்?"



"என்னன்னு சொல்லி வந்து பேசுவேன் சொல்லு.... இருக்கறது ஜாப் மட்டும் தான்"



"என்னதான் சொல்ல வர்ற?"



"அம்மாப்பா எங்கன்னு கேட்டா என்ன சொல்றது வசு?" அவன் குரலில் கலக்கம்.



அவனை முறைத்தவள் அவன் தடுக்கும் முன்பே வருணுக்கு அழைத்து விட்டிருந்தாள்.



"அண்ணா..."



"சொல்லு மா"



"கொஞ்சம் *** பீச் வர வர்றீங்களா?"



"இதோ இன்னும் ஃபைவ் மினிட்ஸ்"



"தேங்க்ஸ் ணா"



.....



"என்ன பண்ற வசு?"



"நா என்ன பண்ணேன்?"



"ப்ச்...இப்போ எதுக்கு அவன வர சொல்லி இருக்க?"



"அண்ணா வரட்டும் சொல்றேன்"



......



"ஹாய்....அட ரகு நீயும் இங்க தான் இருக்கியா?" வசுந்ராவை முறைத்து விட்டு நண்பனை பார்த்து வலுக்கட்டாயமாக சிரித்து வைத்தான்.



"சிரிக்குறதுக்கு எதுக்குடா இவ்வளவு கஷ்டப்படுற... ம்...சரி சொல்லு மா என்ன விஷயம்?"



"ரகுவ லவ் பண்றேன்ணா"



"அதான் தெரியுமே... அதுக்கு சாரு முடியாதுன்னு சொல்றாரு அதானே?"



"அதுவும் தான்..."



"அதுவும் தான்னா.... வேற ஏதோ இருக்கு"



"ஆமா"



"சொல்லு மா"



"நாளைக்கு என்ன பொண்ணு பாக்க வர்றாங்கண்ணா.... இவங்க கிட்ட வந்து பேச சொன்னா நா அனாதை.... எப்பிடி வர்றதுன்னு கேக்குறாங்க"



"ஓஹோ....சரி மா... நீ பயப்படாம கிளம்பு.... நாளைக்கு இவன் தான் உன்ன பொண்ணு பாக்க வருவான்"



"டேய்...."



"நீ பேசாத.... நீ போமா" சம்மதமாய் தலையசைத்தவள் சந்தோஷமாகவே கிளம்பிச் செல்ல திரும்பி நண்பனை முறைத்தான் வருண்.



"நாங்க எல்லாம் செத்தா பொய்ட்டோம்?"



"மச்சான்....நா..."



"என்ன நீ..." அவன் கேள்வியில் தலையை குனிந்து கொண்டான் ரகு.



"அப்போ எங்களயெல்லாம் நீ மதிக்கவே இல்ல அப்பிடித்தானே.... அனாதையாம் அதனால முடியாதாம்...."



"சாரி டா"



"கிளம்பு" தானும் எழுந்து அவனையும் இழுத்துக் கொண்டு காருக்கு சென்றான்.



.....



"எங்கடா போறோம்"



"...."



"டேய் வருண்"



"உன் வீடு காலி பண்ணிட்டு புது வீட்டுக்கு"



"என்னடா சொல்ற?" அவன் புரியாமல் கேட்டாலும் எதுவுமே பேசாமல் வண்டியை செலுத்திக் கொண்டிருந்தவன் அவனிருந்த ப்ளாட்டுக்கு சென்று அவன் உடமைகளை எடுத்தவன் மறுக்க மறுக்க தன் வீட்டுக்கே அழைத்துச் சென்று விட்டான்.



***



"மதன் இவன போட்டு தள்ளிடலாமா?" ராகேஷை பார்த்து மதனிடம் கோபமாய் கேட்டான் சித்தார்த்.



"சித்து பி கூல் டா...."



"ப்ச் இவன பாத்தாலே பத்திகிட்டு வருது மச்சான்" கடுப்பாய் சொன்னவனை பார்த்து சிரித்தவனை முறைக்க கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான் மதன்.



"சிரிக்காத மச்சி.... கடுப்பா இருக்கு"



"ஓகே ஓகே...பட் ஏன்டா இவ்வளவு டென்ஷன்?"



"பின்ன என்னடா எத்தன தடவ தான் அடுச்சு துவக்கிறது இவன....பாவி வாயே தொறக்க மாட்டேங்குறான்டா"



"லீவ் இட் மச்சி.... இப்போ ரெண்டு பேருமா சேர்ந்து விசாரிக்கலாம்" மதனை நம்பிக்கை இல்லாமல் பார்த்தவன் ராகேஷ் புறம் திரும்பினான்.



"தோ பார் ராகேஷ் இதுக்கு மேல அடிச்சா உன் உன் உடம்புல உயிர் இருக்காது...மரியாதயா உண்மய சொல்லிடு" மீண்டும் கேட்டான் சித்தார்த்.



"டேய் இப்போ சொல்ல போறியா இல்லயாடா?" கேட்டுக் கொண்டே முகத்தில் குத்த குபுக்கென பாய்ந்தது இரத்தம்.



"சித்து...வயலண்டா நடந்துக்காத" கண்டித்தவன் ராகேஷை திரும்பி முறைத்தான்.



"ராகேஷ்.... நீ இந்த ஜென்மத்துல திருந்துவன்னு நம்பிக்க இல்ல....நீ உலகத்துல வாழ்றதே வேஸ்டுன்னு நெனக்கிறேன்....ஸோ நீ செத்துடு" சத்தமே இல்லாமல் குண்டை தூக்கி போட்டவனை அதிர்ந்து பார்த்தான் அவன்....



"சித்து மேச மேல இருக்க துப்பாக்கிய எடு" சித்தார்த் எடுத்து கையில் கொடுக்க அவன் நெற்றி பொட்டில் வைத்து அழுத்தப் போன சமயம் அலறினான் ராகேஷ் கண்ணா....



"கொ....கொ....கொன்னுடாத கொன்னுடாத நா... நா... சொ...ல்லிட்றேன்..."



"ம்...அஃது.... சொல்லுடா" மீண்டும் அழுத்த



"சொ...சொல்றேன் சொல்றேன்" பதறினான்.



"சத்யமூர்த்தி ராயல் ஸ்கூல்ல தான் பாம் வெக்க ஏற்பாடு பண்ணி இருக்கோம்"



"பண்ணி இருக்கோமா....?"



"நா இங்க வர்றதுக்கு முன்னால பண்ண ப்ளான் தான்"



"அப்போ இப்போ யாரு ப்ளான எக்ஸிகியூட் பண்ண போறது?" இடையிட்டான் சித்தார்த்.



"ஹரிஷும் அனுவும் தான்" அவன் சொல்லி முடிக்க கண்ணத்தில் அறைந்திருந்தான் சித்தார்த்.



"தூ....மனுஷாடா நீங்க எல்லாம்.... அங்க படிக்கிறது மூணு வயசு சின்ன குழந்தைங்க.... அவங்க உயிர எடுக்கறதுல அப்பிடி என்னடா சந்தோஷத்த கண்டுட போறீங்க... இவனெல்லாம் பொறந்ததே சாபக்கேடு மச்சான் இவனுங்கள உயிரோட புதைக்கணும்" ஆத்திரத்தில் வெடித்தான் சித்தார்த்.



"மச்சான் ரிலாக்ஸ்...." தோள் தொட்டவனின் கையை தட்டி விட்டு விறுட்டென வெளியேறி விட்டான்.



"ராகேஷ் தப்பு மேல தப்பு பண்ற.... இதோட நிறுத்திகிட்டா உனக்கு நல்லது" தன் பங்கிற்கு எச்சரித்து விட்டே வெளியே வந்தான்.



***



"அண்ணா நாம பார்டர தாண்டிட்டோம் பட்... மதன் அனுப்பி இருக்க லொக்கேஷன் நமக்கு ஜி.பி.எஸ் ல காட்ட மாட்டேங்குது"



"எதாவது பழய பங்களாவா இருக்கும் ஆரு தட்ஸ் வொய்..."



"ம்...."



"அண்ணா இப்போ நாம திடிர்னு போனாலும் நம்ம உள்ள போறதுக்குல டாக்டர ஏதாச்சும் பண்ணிட்டாங்கன்னா?"



"கரெக்ட் ஆரு" வலக்கை நடு விரல் புருவத்தை தானாய் நீவியது.



"ணா...நாம அந்த இடத்துல இல்லாம கார இங்கேயே பார்க் பண்ணிட்டு நடந்து போனா என்ன?" தம்பியை மெச்சுதலாய் பார்த்தவன்



"குட் டா" என்றபடியே எடுத்திருந்த வாடகை காரை நிறுத்த இடம் பார்த்தான்.



***



"டாடி....அர்ஜுன போட்டுடுங்க...." மிக தீவிரக் குரலில் சொன்னாள் ஆத்மிகா....



"இல்லமா ஆனா..."



"தேவயில்ல டாடி.... நீங்க எதுவும் பேசாதிங்க....நா சொல்றத பன்னுங்க" அவர் பேச அவகாசமே அளிக்காமல் அவள் சென்று விட அடியாளுக்கு கண்ணை காட்டி விட்டு கையில் நக்ல்ஸுடன் உள்ளே நுழைந்தார் ராஜன்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சென்னை விமான நிலையம்.....



ட்ராலியை தள்ளிக் கொண்டு வெளியே வந்தவன் ஆழ மூச்செடுத்து தன்னை தானே நிதானப்படுத்திக் கொண்டான்.



வருடங்கள் கடந்து இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்திருக்கிறான்...



ஏனோ மனம் பாரமாய் அழுத்தியது அவனுக்குள்....



"ஆனந்த்...." தோளில் நண்பன் கார்த்திக் கையை வைக்கவும் அவன் புறம் திரும்பியவன் வலுக்கட்டாயமாக புன்னகையை தத்தெடுத்திருந்தான்.



"மச்சான்....இப்போவே மணி காலை மூணாச்சு....என்ன பண்றதா இருக்க?"



"வீட்டுக்கு போலாம்டா....நாளைக்கு காலைல மாறன் சார் ஆபிஸ் போலாம்"



"ஓகேடா...."



***



இராமநாதபுரம்.....



மருந்தின் உபயோகத்தில் நன்றாக ஜுரம் விட்டிருக்க குளித்து முடிந்து வெளியே வந்தவளின் மொபைல் அலறியது.



அவள் பீ.ஏ மீரா தான் அழைத்திருந்தாள்.



அவள் அழைப்பை பார்த்ததும் தான் தனக்கு இன்று முக்கியமான கேஸ் வாதாடவிருப்பதே நினைவில் மோதியது.



"மேம்...."



"மீரா....நா இதோ டுவென்டி மினிட்ஸ்ல அங்கே இருப்பேன்.... ப்ளீஸ் அட்ஜஸ்ட்"



"இட்ஸ் ஓகே மேம்...." அழைப்பை துண்டித்தவள் அவசரமாக ஆடையை மாற்றி விட்டு கீழே ஓடினாள்.



"அஷ்வா ஜுரமால இருக்கு....எங்கடா கெளம்பிட்ட?"



"விஜி....யாதுவ ஸ்கூல்ல விட்டுட சொல்லு அஜய் கிட்ட....எனக்கு முக்கியமான கேஸ் ஒன்னு இருக்கு... பய்..." மகனுக்கு கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு சென்று மறைந்தாள் பெண்.



"மாம்....ஏன் அவசரமா போறாங்க க்ரேனி?"



"உன் அம்மாவுக்கு இன்னிக்கு முக்கியமான கேஸ் இருக்காம் கண்ணா"



"ஓ....அப்போ ஜெயிக்கனும்னு நா கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன்" வெகுளியாய் சொன்னவனை பார்த்து ஆதூரமாய் சிரித்தார் அவர்....



***



"மேம்...."



"என்ன மீரா ஆரம்பிச்சுட்டாங்களா.... லேட் ஆவிடுச்சா?"



"நோ மேம்.... வேற ஏதோ ரேப் கேஸ் ஒன்னு வந்திருக்கறதுனால நம்மளோடத நாளைக்கு தள்ளி வெச்சிட்டாங்க" திட்டு விழுமோ என தயங்கியே சொல்லி முடித்தாள்.



"தேங்க் காட்...."



"சாரி மேம்..."



"இட்ஸ் ஓகே மீரா.... நல்ல வேல இன்னிக்கு நடக்கல... நா கேஸ் பென்ட்ரைவ்வ தேவ் ஆபிஸ் ல வெச்சிருக்கேன்...."



"பட் மேம்..."



"நா நேத்தே எடுக்கலாம்னு இருந்தேன்....பட் முடில...நீ ஆபிஸ் போ.... நா ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ் பொய்ட்டு பென்ட்ரைவ்வ எடுத்துட்டு வந்தட்றேன்...." சொல்லி விட்டு கிளம்பினாள்.



***



"மச்சான்....நா பாத்துக்குறேன்" தானும் வரவா என கேட்ட கார்த்திக்கை தவிர்த்து விட்டு

ஆர்.கே இண்டஸ்ட்ரீஸ் நோக்கி புறப்பட்டான் ஜீவானந்த்.



***



இவள் தன் டூவீலரிலிருந்து இறங்கவும் அவன் தன் நண்பன் பைக்கை அவள் அருகே கொண்டு வந்து நிறுத்தவும் சரியாக இருக்க தன் முன் நிறுத்தியவனை நிமிர்ந்து பார்த்தாள் அஷ்வினி ரிக்ஷிதா!!!



***



காரை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு நடந்து சென்று கொண்டிருந்தனர் அண்ணனும் தம்பியும்....



"இது கூட புதிய அனுபவமா தான் இருக்கு இல்லணா?"



"ம்...."



"ஏன்ணா இப்போ நாம கண்டுபிடிச்சு போறதுக்குள்ள டாக்டர் அர்ஜுனுக்கு ஏதாவது ஆச்சுனா என்ன பண்றது?"



"...."



"என்னணா பதிலயே காணோம்"



"...."



"ணாவ்...." அப்போதும் அவன் அமைதியே பதிலாய் கிடைக்க ரிஷியை ஏறிட்டு பார்த்தான் ஆரவ்.



புருவம் சுருக்கி யோசனையில் ஆழ்ந்திருந்தவன் ஆரவ் தன்னுடன் வராமல் அப்படியே நிற்கவும் தான் சிந்தை கலைந்தான்.



"ஏன்டா நின்னுட்ட வா...."



"எவ்வளவு தூரம் யோசிச்சுட்டே போறன்னு பாத்தேன்" சொல்லிக் கொண்டே மீண்டும் வந்து இணைந்து நடந்தான்.



"ஆரவ்....உன் பிஸ்டல் எங்கே?"



"தோ இருக்குணா" முதுகுக்கு பின்னால் சொறுகி வைத்திருந்த பிஸ்டல் துப்பாக்கியை கையிலெடுத்தான் ஆரவ்...



"ம்...ஓகே..."



"ஏன்ணா?" புரியாமல் கேட்டான்.



"ஒரு இன்பர்மேஷனுக்கு தான்டா"



"உன் துப்பாக்கி....?"



"அது இருக்கு....நீ ஜி.பி.எஸ் ஆன் பண்ணு"



"ஓகே" சொல்லி விட்டு ரிஷியின் மொபைலை ஆக்டிவேட் பண்ணி விட்டான்.



***



தன் முன் நின்றவனை ஆராய்ச்சியாய் அளவெடுத்தன அவள் கண்கள்....



'இவன எங்கேயோ பாத்திருக்கோமே' மனதில் சந்தேகமாய் நினைத்துக் கொண்டவள் அறிமுகமாய் சிரித்து வைத்தாள்.



ரிஷியின் சாயலோ???



அவளைப் போலவே மனதிற்குள் நினைத்துக் கொண்டவன் தானும் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.



தன் மொபைல் ஒலிரவும் அவன் எடுத்து காதிற்கு கொடுக்க தோளை குழுக்கி விட்டு உள்ளே சென்றாள் பெண்.



"ஹாய் மதி"



"குட் மார்னிங் மேடம்"



"கதிர் எங்க?" அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கதிர் ஆனந்திற்கு பதில் சொல்வது கேட்டது.



"மாறன் சார் இல்ல சார்"



"அவர் மொபைல் நம்பர் சரி தர முடியுமா?" கதிர் அவனை ஆராய்ச்சியாய் பார்க்க அருகில் வந்தாள் அஷ்வினி.



"அண்ணா.....எனி ப்ராப்ளம்?"



"இவரு பேரு ஆனந்த்....மாறன் சார பாக்கனும்னு சொல்றாரு"



"என்ன விஷயமா பாக்கனும் மிஸ்டர்.ஆனந்த்?" நேர் பார்வையாக அவனை பார்த்து கேட்டாள் பாவை....



"முக்கியமான விஷயமா அவரு கிட்ட பேசனும்"



"அவரு இல்ல.... ஜெய்பூர் போயிருக்காரு...."



"ஓஹ்...." அவன் குரலில் அப்படி ஒரு ஏமாற்றம்....



"நான் அவரோடஒய்ப் தான்... நீங்க சொல்லுங்க" அவன் முக வாட்டம் பிடிக்காது சொல்லி விட.... நினைத்தது போலவே அவன் முகம் விகசித்தது.



"ஆர் யூ ஷூர்....?" அவன் குரலில் அப்பட்டமான எதிர்ப்பார்ப்பு.



"மேரேஜ் சர்டிபிகேட் கொண்டு வந்தா காட்ட முடியும்?" கடுப்பாக கேட்ட கதிரை அவன் முறைக்க வாய் பொத்தி சிரித்தாள் அவள்....



"சாரி ஆனந்த்...." மன்னிப்பு கேட்ட அஷ்வினியை இப்போது கதிர் முறைத்தான்.



'இவங்க எதுக்கு இவன் கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டு இருக்காங்க'



ரிஷிக்கு அறிமுகமில்லாத நபர்களிடம் எப்போதுமே எச்சரிக்கையுடன் தான் நடந்து கொள்வான் கதிர்.



அது ஏனோ ஆனந்தை பார்த்து சந்தேகப்பட முடியாவிட்டாலும் அவன் மீண்டும் மீண்டும் அவளிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பது பிடிக்காமல் வெடுக்கென சொல்லி விட அவள் மன்னிப்பு கேட்டதும் கோபம் வந்தது.



((அடேய் அடேய்.... உன் விசுவாசத்துக்கு ஒரு அளவு வேண்டாமாடா))



***



தூரத்தில் ஒரு பழைய பாழடைந்த பங்களா தெரிய ரிஷியின் உள்ளுணர்வு சட்டென விழித்துக் கொண்டது.



"ஆரு...பீ அலர்ட்...." அண்ணன் கண்கள் நோக்கி இருந்த திசையை பார்த்தவன் தானும் உஷாரானான்.



"பட் ப்ரோ.... வெளில யாருமே இல்லயே... இங்க எப்பிடி?"



"வெளில யாருமே இல்லாததுனால தான்டா சந்தேகமா இருக்கு.... என்னத்த படிச்சு கிழிச்ச?"



"ஹி...ஹி....நோ டென்ஷன் ப்ரோ ஒன்லி....ஆக்ஷன்..."



"ம்...." திரும்பி அவன் முறைத்த முறைப்பில் கப்பென வாயை மூடி விட்டான் ஆரவ்.



......



கையில் நக்ல்ஸுடன் தன்னை நோக்கி வந்த ராஜனை பயத்துடன் பார்த்தார் டாக்டர் அர்ஜுன்.



"என்ன டாக்டரூ... சாவு பயம் வந்துடுச்சு போல...உன் வாயால உண்மையே வர வைக்க தேவயில்ல உன்ன போட்டு தள்ளிரலாம்னு என் பொண்ணு ஆச பட்டுட்டா... பெத்த பொண்ணு ஆசய நிறைவேத்தாம இருக்க முடியுமா.... அதனால...." சொல்லிக் கொண்டே நெருங்கியவர் டமால் என்ற சத்தத்தில் அதிர்ந்து திரும்பினார்.



......



"ஆரவ்....நீ பின் வழியா வா....நா முன்னால போறேன்..."



"ஓகே ணா.... ஜாக்கிரத" அவனை பார்த்து மெலிதாய் சிரித்தவன் தலையசைப்போடு முன்னேற பின் வழியை தேடிச் சென்றான் ஆரவ்.



பூட்டப்படாத கதவு தானாக திறந்து கொள்ளவும் கையில் துப்பாக்கியை அழுத்திப் பிடித்தவன் மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தான்.



அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களில் மட்டும் கையில் ஏ.கே 47 துப்பாக்கியுடன் சிலர் நடந்து கொண்டிருக்க சத்தம் கேட்காமல் உள்ளே நுழைந்தவன் அருகிலிருந்த தூனில் மறைந்து நின்று கொண்டு ஒருவனுக்கு குறி பார்க்க திடீரென பின் பக்கத்திலிருந்து கேட்ட டமால் என்ற சத்தத்தில் தலையாட்டியவன் நடந்தது ஊகித்து 'இவன.....' பல்லை கடித்தவன் தன் தலையிலேயே அடித்துக் கொண்டான்.



இங்கே பின் வழியாக வந்தவனுக்கு கதவு பூட்டப்பட்டிருக்க சுற்றும் முற்றும் வேறு வழியை தேடியவனுக்கு அகப்பட்டது அந்த சிறிய ஜன்னல் துவாரம்!!!



கையிலிருந்த பிஸ்டலை மீண்டும் முதுகிலேயே சொறுகியவன் அருகிலிருந்த மரத்தில் சரசரவென ஏறத் துவங்கினான்.



((நல்லா தான்யா உனக்கு ட்ரெயினிங் சொல்லி குடுத்திருக்காய்ங்க))



மரக்கிளை வழியாக தொங்கி வந்தவன் சட்டென ஜன்னல் கட்டில் தொத்திக் கொண்டான்.



'நல்ல வேல டாக்டருக்கு படிக்கல' அந்த களேபரமான நேரத்திலும் நகைச்சுவையாய் எண்ணிக் கொண்டவன் தன் முழு பலத்தையும் திரட்டி திறந்திருந்த ஜன்னல் வழியே உள்ளே பாய அருகில் சாற்றி வைக்கப்பட்டிருந்த போர்ட் டமால் என்ற சத்தத்துடன் கீழே விழ ' அடக் கடவுளே' தலையில் கை வைத்தவன் பின்னாலிருந்த கப்பேர்டுக்கு பின்னால் சென்று நின்று கொண்டான்.



***



"இட்ஸ் ஓகே" ஆனந்த் சொல்லவே புன்னகைத்தவள்



"மிஸ்டர்.ஆனந்த் நாம உள்ள போயி பேசலாம் வாங்க...." சொல்லி விட்டு நடக்க அவளை பின் தொடர்ந்தனர் இருவரும்.



"அண்ணா.... கான்பரன்ஸ் ஹால்கு போலாமா?"



"சரி மா...."



.....



தன் அறையிலிருந்து ஏதோ கோப்பை தேடி வெளியே வந்த மதுவின் கண்களில் பட்டனர் மூவரும்!!!



தூரத்தில் நின்றிருந்ததால் முகம் தெளிவில்லாமல் இருக்க அப்படியே நின்று விட்டாள்.



......



நடந்து வந்து கொண்டிருந்தவளும் அப்போது தான் அவளை கண்டு கொண்டாள் போலும்....



ஏனென்றே தெரியாமல் எரிச்சல் மண்டியது பாவைக்கு....



மிக அருகில் அவர்கள் வந்து விடவே மரியாதை நிமித்தமாய் வாழ்த்த வாய் திறந்தவளுக்கு ஆனந்தை பார்த்து வெறும் காற்று தான் வந்தது வாயில்.....



அவனுக்கும் உச்ச கட்ட அதிர்ச்சி தான் போலும்!!!



அவன் வாய் மது... என முணுமுக்க... அதேநேரம் அவள் அண்ணா.... என்றதில் இப்போது சிலையாய் சமைந்து நின்றனர் அஷ்வியும் கதிரும்...!!!!!



தொடரும்.......



26-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 07 [ B ]



சத்தம் கேட்டு அதிர்ந்து திரும்பிய ராஜன் அடுத்த நிமிடம் தடதடவென படிகளில் இறங்கி கீழே வரவும் சர்ரென்ற சத்தத்துடன் வெளியே கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.



படிகளில் இறங்குவது யாராக இருக்குமென இடுங்கிய கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு கதவை திறந்து கொண்டு வந்த ஆத்மிகாவை கண்டதும் கழுத்து நரம்பு புடைத்தெழுந்தது.



'டாமிட்....' அவளை கொன்று போடும் வெறி எழ கஷ்டப்பட்டு மூச்சை இழுத்துப் பிடித்தவன் அசையாமல் தூனுக்கு பின்னே நின்றான்.



அதற்குள் ராஜனும் கீழே பதற்றமாய் இறங்கி வர பொங்கி வந்த கோபத்தை பல்லை கடித்து அடக்கியவன் அவர்கள் இருவரையும் கூர்ந்து கவனிக்க துவங்கினான்.



"டாடி....ஏன் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க?" அவளுக்கு விடையளிக்காது சுற்று முற்றும் கண்களால் துளாவியவர் துப்பாக்கியுடன் நின்றிருந்தவர்களை வீட்டிற்குள் தேடச் சொல்லி பணித்தார்.



"ஏன் டாடி என்னாச்சு?"



"டாடி இப்போ சொல்ல போறீங்களா இல்லயா?" அவளுக்கும் பதற்றம்....



"இல்லமா நான் அர்ஜுன நெருங்கின சமயம் திடீர்னு கீழ ஏதோ சத்தம் கேட்டுது.... அதான் கீழ வந்தேன்"



"ப்பூ....இவ்வளவு தானா.... நானும் பயந்தே பொய்ட்டேன்"



"இல்லமா...."



"அய்யோ டாடி காத்துக்கு ஏதாவது விழுந்திருக்கும் வாங்க" அவரை இழுத்துக் கொண்டு டாக்டர் அறைக்குள் சென்றவள் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது போல் அப்படியே நிற்க பின்னால் வந்து நின்றவருக்கும் அதே நிலைதான்!!!



ஆம்....கட்டி வைக்கப்பட்டிருந்த இடத்தில் டாக்டர் அர்ஜுன் இல்லை!!!



***



"அண்ணனா...." தன்னை முதலில் சுதாகரித்தது கதிர் தான்...



"அண்ணன்....?" அப்போதுதான் அதிர்ச்சியிலிருந்து வெளி வந்து புருவம் சுருக்கினாள் பாவை....



இருவருமே அமைதியாய் இருக்க



"ஏய்....யார ஏமாத்த பாக்குற?" சட்டையை பிடித்திருந்தான் கதிர்.



"அண்ணா விடுங்க பேசிக்கலாம்...."



"இல்லமா நீ இரு நா பாத்துக்குறேன்"



"அண்ணா...." சற்றே அழுத்தமாய் அழைக்க அவன் கை தானாய் விலகியது.



மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டவள்



"மிஸ்டர். ஆனந்த்.... யாரு நீங்க?" தெரித்து வந்து விழுந்தன வார்த்தைகள்....



"மேம் நா...." இடைபுகுந்த மதுவை கை நீட்டி தடுத்தவள் மீண்டும் ஆனந்திடம் பார்வையை திருப்பினாள்.



"சொல்லுங்க மிஸ்டர். ஆனந்த்"



"மேடம் இத அப்பறமா பேசிக்கலாமா ப்ளீஸ்"



"ஏன்?"



"நா அத விட முக்கியமான விஷயத்த பத்தி பேசனும்" கண்கள் இடுங்க அவனை பார்த்தவள் என்ன நினைத்தாளோ



"ஓகே லெட்ஸ் டாக்" சொல்லி விட்டு கான்பரன்ஸ் அறைக்குள் நுழைய அவளை பின் தொடர்ந்தனர் மற்ற மூவரும்....



"ம்....சொல்லுங்க ஆனந்த்..... பேசனும்னு சொல்லிட்டு அமைதியா இருந்தா எப்பிடி?" பட்டுத் தெறித்தாற் போன்றிருந்த அவள் பேச்சை ஆச்சரியமாய் பார்த்திருந்தாள் மது.



" ஆராதனா தேவமாருதன் உயிரோட இருக்காங்க"



"வாட்...." அதிர்ந்து போய் கத்தியது அவளல்ல கதிரும் மதுவும் தான்.....



அவளோ "எவ்வளவு பணம் வேணும்" என்றாள் சிறிதும் அலட்டிக் கொள்ளாமல்.....



"வாட்....?" கோபமாய் கத்தியவன் அவளை ஏகத்துக்கும் முறைத்தான்.



ஆராதனா தேவ்வின் குட்டித் தங்கை அவள் இறந்து பல வருடமாகி விட்டது என்பது மட்டுமே அவளுக்கு தெரியும்!!!



அது மட்டுமல்லாமல் அவளவன் கொலை செய்ததற்கான காரணம் கூட அவள் அறிந்திருக்க வில்லை....



அன்று வாழ்க்கையை தொலைத்து விட்டு விட்டத்தை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளிடம் ஆவேசமாய் வந்தான் ஆரவ்....



(( அதாவது நண்பா பார்ட் ஒன்ல அவ பிரக்னன்ட்டா இருக்க டைம் ஆரவ் தவறி மேசைல விட்டுட்டு போன அந்த ஃபைல பாத்து அவன் கொலகாரன்னு நெனச்சி டிவோர்ஸ் பேப்பர்ல சைன் வேற கேட்டாளே....



அதுக்கு அவ அம்மா கத்த இவ வேற கொலகாரனோட என்னால வாழ முடியாதுன்னு சொன்னாளே....



அப்போ கோபமா அடிக்க போன ஆரவ்வ சித்தார்த் தடுத்து பிடிச்சான்ல....



அதுக்கப்பறமா ரிஷி வெளிய போக உள்ள வந்தான் ஆரவ்...



அந்த சீன தான் சொல்லி கிட்ருக்கேன் நண்பா.... நல்லா கேட்டுக்கோங்க))



தன்னை நோக்கி கோபமாக வந்தவனை உறுத்து விழித்தாள் பாவை...



"என்னடி நெனச்சிகிட்ருக்க... ஒரு ஃபைல வெச்சி அண்ணா கேரக்டர அவ்வளவு கேவலமா நெனச்சிட்டல்ல....எதுக்காக கொன்னாங்கன்னு தெரியுமாடி உனக்கு?" அவன் குரல் சட்டென உடைய கேலியாய் வளைந்தது அவள் உதடுகள்....



"அவன் செஞ்ச தப்ப நியாயப்படுத்தாம கெளம்பு"



"ச்சேஹ்.... இதுக்கெல்லாம் சேத்து அனுபவிப்படி" சென்று விட்டான்))



அந்நாள் நினைவிலிருந்து விடுபட்டவளுக்கு ஆனந்த் பொய் சொல்வதாகவே தோன்றிற்று!!!



"நா எதுக்கு பொய் சொல்லனும்?" பொறுமையை இழுத்துப் பிடித்தான்.



"பணம்...."



"எனக்கெதுக்கு பணம்....நான் ஒரு டாக்டர்.... எனக்கு தேவயான அளவு பணம் என்கிட்ட இருக்கு..... உங்க பணத்துக்காக ராஜ்கோட்ல இருந்து சென்னை வர எனெக்கென்ன தலையெழுத்தா?" அவன் கண்களில் பொய் இல்லை....



"சாரி சார்...." உடனே மன்னிப்பு கேட்டவளை பார்த்து இளகி விட்டான்.



"ஐ அம் சாரி மேம்.... ஆரா கிருடிகல் ஸ்டேஜ்ல இருக்கா.... அத அவ அண்ணன்களுக்கு சொல்ல தான் வந்தேன்.... அவளுக்கு மாறன் சாரையோ இல்லண்ணா ஆரவ்வையோ பார்த்தா தான் மனநிலை நார்மலாகும் ப்ளீஸ்...."



"...."



"நீங்க நம்பலன்னா இத பாருங்க" தன் போனிலிருந்த புகைப்படத்தை பார்க்குமாறு நீட்டினான்.



***



விழுந்திருந்த போர்ட்டை நிமிர்த்த வந்தவனின் வாய் பொத்து மறைவுக்குள் இழுத்து அவன் உயிர் நாடியிலேயே ஓங்கி குத்தினான் ஆரவ்.....



வலி பொறுக்க முடியாமல் கத்தப் போனவனின் வாயை இவன் மூடி இருக்க அவன் கைகளிலேயே திமிறினான்.



"என்னடா இப்பிடி திமிர்ற.... வேனும்னா நீ போலிஸ் ஆகிடு.... நம்ம டிபார்ட்மன்ட் உன்ன மாறி ஆளுங்கள தான் தேடி கிட்டு இருக்கு"

முதுகில் சொறுகியிருந்த துப்பாக்கியை ஏடுத்து சத்தமே இல்லாமல் அவன் தலையில் புல்லட்டை இறக்கி விட்டு வெளியே வந்தவன் அவனை நோக்கி ஆவேசமாக வந்து கொண்டிருந்தவனின் நெற்றிப் பொட்டிலேயே சுட்டான்.



"இந்த அண்ணன் எங்க இன்னும் காணோம்...." வாய் விட்டே புலம்பியவன் மெதுவாக உள்ளே ஹாலை எட்டிப் பார்த்தான்.



"மலமாடு மாறி நின்னுகிட்டு இருக்கானுங்க.... நம்ம ப்ரதர் எங்க போனாரு"



மாடியிலிருந்து தடதடவென கால் தடம் கேட்க கதவில் பின்னால் சென்று நின்று கொண்டான்.



"அட இவ தான் கடத்தலுக்கு காரணமா..... ஆனா எதுக்காக?" யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவர்கள் பேசுவது நன்றாக கேட்டது.



"டாடி டாக்டர் அர்ஜுன் எங்க போனாரு....யாரு வந்திருப்பா" அதீத பதற்றம் அவள் குரலில்.....



"ஓஹோ....அப்போ ப்ரதர் சத்தமே இல்லாம ஆக்ஷன் ஹீரோவா ஆகிட்டாரு....பாவி.... இங்க இத்தன பேரு இருக்கானுங்க.... எப்படிடா சமாளிக்கிறது நானு???" நன்றாக திட்டினான் தன் உடன் பிறப்பிற்கு.....



"டாடி நீங்க அந்த பக்கமா போங்க.... அவரு மிச்சம் தூரம் போயிருக்க வாய்ப்பே இல்ல" சொல்லிக் கொண்டே வெளியே ஓடினாள்.



டாக்டர் அர்ஜுனை கைத்தாங்கலாக அழைத்து வந்து ஒரு பாறை மேல் அமர வைத்தவன் அவன் பதில் பேசும் முன்பே மீண்டும் உள்ளே சென்றிருந்தான்.



***



கிட்டத்தட்ட ஆரவ்வின் சாயலில் கண் மூடி தளர்வாக படுத்திருந்தவளை பார்த்து கண்கள் கலங்கி விட்டன பாவைக்கு....



சட்டென அலைபேசியை எடுத்து தன்னவனுக்கு அழைக்க அந்தோ பரிதாபம் அது எடுக்கப்படவே இல்லை....



பாவமாய் ஆனந்தை ஏறிட்டவள் உதட்டை பிதுக்கி இல்லையென தலையாட்ட மொத்த நம்பிக்கையும் வடிந்து போனது அவனுள்!!!



"ஆமா....உங்களுக்கு எப்பிடி மாறன் சார தெரியும்" சட்டென மீண்டவள் தன் பிடியிலேயே நின்றாள்.



"அவர் என்னோட மாமா பையன்"



"வாஆஆஆஆட்...."



"எஸ்....நான் தேவகி தேவமாருதனோட பையன் ஆனந்த் தேவமாருதன்... இவ மதுமிதா தேவமாருதன்"



((நண்பா...

ஒரு தடவ ஆரு கயல் கிட்ட தன்னோட அப்பா இறந்து போனப்ப ரிஷி பாத்துகிட்டான்....

அத்த சொத்துக்காக வந்தாங்கன்னு கோபமா சொல்லி கிட்டு இருந்தானே....

அதே அதே....

அந்த அத்த சொத்தயோட பசங்க தான் இவங்க ரெண்டு பேரும்!!!

அதாவது மது நம்ம ஹீரோவோட அத்த பொண்ணு

தேவ் ரசிகர்கள் காண்டாகிட்டாங்க....

நா கிளம்புறேன்))





"அத்த பையனா?" அதிர்ந்து போய் கேட்டாள் பாவை....



"ஆமா...."



"அப்போ இவங்க எப்பிடி....?" கதிரின் சந்தேகமான கேள்வியில் இடையிட்டாள் மது.



"நா இங்கே இருக்க விஷயம் அண்ணாக்கு தெரியாது" அவளை புரியாமல் பார்த்தனர் இருவரும்....



"ஓகே...அப்போ அம்மா....?" பெண்ணவளின் கேள்வியில் அங்கே பலத்த மௌனம் நிலவியது.



"ஐ அம் சாரி" என்றாள் சட்டென புரிந்து கொண்டவளாய்....



"இட்ஸ் ஓகே....அம்மாவுக்கு கேன்ஸர் இருந்துது... காப்பாத்த முடில... அம்மா அந்த மாதிரி நடந்துகிட்டதுல அண்ணாக்கு அம்மா மேல கோபம்.....துக்கம் நடந்த வீட்ல போய் சொத்த பத்தி கேக்க வெக்கமா இல்லயான்னு கோபப்பட்டு கத்தினாங்க....அதுல இருந்து அம்மா கூட அண்ணா பேசறதில்ல.... அதுல இன்னும் உடஞ்சி பொய்ட்டாங்க....

அப்பாவும் எப்போவோ இறந்துட்டாங்க.... அண்ணா வீட்டுக்கு வர்றத குறைச்சி கிட்டாங்க....எனக்கு இது எதுவுமே முதல்ல புரியாம அம்மா கூட இருந்ததுனால அண்ணா என்கிட்டயும் பேச மாட்டாங்க....

நா புரிஞ்சி கொள்ள முன்னாடி அம்மா பொ...பொய்ட்டாங்க... அண்ணாவுக்கு நான் தான் தகவல் சொன்னேன்....அதுக்கப்பறமா நான் லண்டன் போக அண்ணா ராஜ்கோட்லயே இருந்துட்டாங்க.... அத்தான் லண்டன் வந்தது எனக்கே ஷாக் தான்.... ஆனா அம்மா பேரு சொல்லி பேச பயமா இருந்துது...



அத்தானை கண்வின்ஸ் பண்ண தான் திரும்ப இந்திய வந்தேன்.... அதனால அண்ணா கிட்ட கூட சொல்லல" விழி நீரில் பளபளக்க சட்டென குனிந்து கொண்டவளை ஆதரவாய் பிடிந்தன அவள் கைகள்.



அவள் மனம் உண்மையில் இளகி விட்டிருந்தது.



***



ஆக்ரோஷமாய் கதவை காலால் உதைத்துக் கொண்டு சிலிர்த்துக் கொண்டு தன் முன்னால் நின்றிருந்தவனை பார்த்த இருவருக்கும் முகம் பயத்தில் வெளவெளத்தது.



"அட....ஆக்ஷன் ஹீரோ வந்துட்டாரு நாமலும் போவோம்..." சொல்லி விட்டு காலை எடுத்து வைத்தவன் தட் என்ற ஓசையில் அவசரமாக நிமிர்ந்து பார்த்தான்.



கீழே விழுந்து கண்ணத்தில் கை வைத்தபடி இருந்தவளை பார்த்தவனுக்கு சிரிப்பு பீரிட்டது.



அடுத்த அடி எடுத்து வைக்கும் முன் மீண்டும் ஓசை....



இப்போது கீழே விழுந்திருந்தவர் ராஜன்.



"ஆரவ்...." அழுத்தமாக அழைத்து அவர்களை கவனிக்குமாறு கண்காட்டியவன் அதற்குள் தன்னை நெருங்கி வந்து கொண்டிருந்த அடியாட்கள் பக்கம் பார்வையை செலுத்தினான்.



தன்னை நோக்கி கையில் கத்தியுடன் ஓடி வந்தவனின் நெஞ்சிலேயே ஒங்கி மிதிக்க அவன் விழுந்த வேகத்திலேயே மீண்டும் ஓங்கி உதைந்ததில் பின்னால் வந்த இருவர் தடுமாறி விழுந்தனர்.



.....



கீழே விழுந்து கிடந்தவர் முன் குத்துக்காலிட்டு அமர்ந்தான் ஆரவ்.



"இந்த தள்ளாத வயசுல தேவயா உனக்கு இதெல்லாம்.... அவன் கைல மாட்டியிருக்க உன் நிலமைய நெனச்சா எனக்கே பாவமா இருக்கு ச்சு....ச்சு.... ச்சு....." அவர் கலவர பார்வையை கவனிக்காதவன் போல் தன் மண்டையை அவர் மண்டையில் ஓங்கி அடிக்க தலை கிறுகிறுக்க மயங்கி சரிந்தார் ராஜன்.



சாவகாசமாய் அவள் புறம் திரும்பியவன்



"நீ காசுக்காக இத பண்றியா.... இல்ல...." என்றான் கேலியாய்...



"....."



"மயக்கம் வர்றா மாறி இருக்குல?" அவன் கேள்வியில் அவள் புரியாமல் விழிக்க ஓங்கி ஒரு அறை விட்டான் தன் பங்கிற்கு....



அவன் கேட்டதன் பொருள் புரிய மயங்கினாள் அவளும்....



மயங்கிய இருவரையும் கோபமாய் முறைத்தவன் தன் அண்ணனுக்கு பின்னால் கட்டையை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடியவனின் காலிலேயே சுட சுருண்டு விழுந்தான் அவன்...



சத்தத்தில் திரும்பிப் பார்த்து கண்ணடித்து சிரித்தவன் தன் முன்னால் இருந்தவனின் கையை முறுக்கினான்.



***



நல்ல உறக்கத்தில் இருந்தாள் அபி....



மெல்ல பூனை நடையிட்டு அவளருகே வந்தவன் ((அட அர்விதான் நண்பா)) தன் கையிலிருந்த பெரிய க்ளாஸிலிருந்த தண்ணீரை அவள் முகத்திற்கு அப்படியே ஊற்றி விட பதறி எழுந்தமர்ந்தாள் பெண்....



அதில் அவன் வாய்விட்டுச் சிரிக்க வந்த கோபத்தை பல்லை கடித்து அடக்கியவள் அவனை கொலை வெறியில் முறைத்தாள்.



"ஏன்டா இப்பிடி பண்ண?"



"நீ நேத்து எனக்கு பண்ண நா இன்னிக்கி பண்ணேன்"



"எரும....அதுக்காக இப்பிடி தான் மேல ஊத்துவியா?" சீறினாள்.



"பின்ன....கொஞ்சம் கொஞ்சமா தெளிச்சு விட்ருக்கனுமா?" அவன் மீண்டும் சிரிக்க பாய்ந்து இறங்கியவள் அவனை துரத்திக் கொண்டு ஓடினாள்.



"நில்லுடா குரங்கு..."



"முடியாது போடி..."



"டேய்....மரியாதயா நில்லு....இல்ல...."



"என்னடி பன்னுவ?" பழிப்புக் காட்டினான்.



"உன்ன....." பல்லை கடித்தவள் டைனிங் டேபிள் மேலிருந்த ஆப்பிளை எடுத்து வீச அதை லாவகமாய் கேட்ச் பிடித்தவன் கடித்து விட்டு மீண்டும் அவளிடமே வீசினான்.



"ச்சீ...." அதை தூக்கிப் போட்டவள் அவனை முறைத்தவள் மீண்டும் துரத்தினாள்.



கொஞ்ச நேரம் அவளுக்கு போக்கு காட்டி ஓடியவன் வேண்டுமென்றே ரூமிற்குள் சென்று மறைய வெற்றிச் சிரிப்புடன் அவனை பின் தொடர்ந்து வந்தவளை இழுத்து சுவற்றில் சாற்றி நிறுத்தினான் அவளவன்.



"என்ன பண்ற அர்வி... விடு"



"நா கடிச்சது ஒனக்கு சீ யா?"



"அ...அது..." அடுத்த வார்த்தை பேச இடமளிக்காமல் அவள் உதட்டில் அழுத்த முத்தமிட்டு விலகியவன்



"இப்போ சீன்னு சொல்லுடி" என்றபடியே கண்ணடித்து விட்டு விலக பறந்து சென்ற தலையணை அவன் முதுகில் மோதி விழுந்தது.



***



தன் மேல் ஆறுதலாக படிந்த கையை ஆச்சரியமாய் பார்த்தாள் மது.



"இதுக்கு என்ன வழி?" அமைதியை கலைத்தான் கதிர்.



"மிஸ்டர். ஆனந்த்..."



"மிஸ்டர் தேவயில்ல.... ஆனந்த் மட்டும் போதும் மேம்"



"அப்போ அந்த மேம்ம விடனும்" தலையை அசைத்து விட்டு பக்கென சிரித்து விட்டான்.



"ம்....அஃது.... அஷ்வினி.... அஷ்வின்னாலும் ஓகே" அவள் துடுக்குத்தனத்தில் அவன் புருவம் வியந்து மேலெழுந்தது.



"நாம தேவ்கு ட்ரை பண்ணி கிட்டே இருக்கலாம்...."



"ம்....ஓகே...."



"நாமலே ராஜ்கோட் கிளம்பி போயி ஆராவ கூட்டிட்டு வந்தா என்ன?" குதூகளித்தாள் பெண்....



"அதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு" அவன் சொல்ல அவனை புரியாமல் ஏறிட்டனர் மூவரும்.



"ஏன்....?" கதிர் தான் கேட்டான்.



"ஆராதனா கற்பழிக்கப்பட்டு மரணித்ததா இருக்க ரிப்போர்ட் அவளுக்கு எதிரா இருக்கு.... அதனால அவள ராஜ்கோட் போலிஸ் கேஸ்ல இருந்து மீட்டு தான் இங்க கொண்டு வரனும்....

இந்த ரீஸனுக்காக தான் டாக்டர் அர்ஜுன் கூட யாருகிட்டவும் விஷயத்த சொல்லாம மறச்சாரு.... போலிஸ் கேஸானா சும்மா விளம்பரமாகும்... அப்பறம் மாறன் அண்ணா எதிரிங்க அவளுக்கு ஆபத்து வர வைக்க ட்ரை பண்ணவாங்க.. அதான்"



"வாட்....டாக்டர் அர்ஜுனுக்கு உண்மை முதல்லயே தெரியுமா?"



"ம்....ஆமா" என்றவன் நிலைமையை சுருக்கமாக விளக்க ஏதோ யூகித்து அதிர்ந்து போனது பேதை மனம்....



'கடவுளே தேவ்கும் ஆருவுக்கும் எதுவும் ஆக கூடாது' அவசரமாக வேண்டுதல் வைத்தவள் அவனை கலவரமாக ஏறிட்டாள்.



"ரிலாக்ஸ் அஷ்வி" அமைதிப்படுத்த முயன்றான்.



"இப்போ என்ன பண்றது?" யோசனையாய் கேட்ட கதிரை அதே யோசனையுடன் திரும்பிப் பார்த்தான் ஜீவா.



"லாயர்ஸ் யாராவது அவங்களுக்கு ஹயர் பண்ணி கேஸ கோர்ட்டுக்கு கொண்டு வரலாமே?" அவசரமாக சொன்னாள் மது.



கதிர் சடாரென திரும்பி அஷ்வினியை பார்க்க அவளும் அவனைத் தான் பார்த்தாள்.



"ஐ கேன் டூ இட்" உறுதியாய் கூறியவளின் குரலில் இருந்த நம்பிக்கையில் அவளை மெச்சுதலாக பார்த்தன மூவரின் கண்களும்.



அதை விட அவள் மனதில் வேறு ஒன்று தான் ஓடிக் கொண்டிருந்தது.



'இதுக்காக தான் அந்த கொலைகளா?' தீவிரமாய் சிந்தித்தித்துக் கொண்டிருந்தது அவள் மூளை....



அவள் அனுமானம் சரியாக இருந்தால்...



அவளவனுக்காக வாதாடப் இல்லையில்லை போராட போகிறாள்!!!
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மயங்கி இருந்த இருவரையும் வெறுப்புடன் பார்த்தவன் ஏதோ ஓர் எண்ணிற்கு அழைத்து அவர்களை ஒப்படைத்து விட்டு தம்பியை இழுத்துக் கொண்டு டாக்டரிடம் விரைந்தான்.



அதற்குள் அதிக உடற் சோர்வினால் மயங்கி விட்டிருந்தவரை கைத்தாங்கலாக பிடித்து காரின் பின்னால் ஏற்றியவர்கள் மீண்டும் பயணத்தை தொடர்ந்தனர்.



"என்னடா அமைதியா வர்ற?" வண்டியை செலுத்திக் கொண்டே கேட்டான் ரிஷி.



"இல்லணா.... இவங்க கடத்துற அளவுக்குன்னா விஷயம் ரொம்ப பெருசா இருக்கும் போல"



"ம்....எஸ்...."



"நீ என்ன நெனக்குற?"



"டாக்டர் அர்ஜுன் கிட்ட இருக்க விஷயத்த அவங்களுக்கு ட்ரம் கார்டா பயன்படுத்த நெனச்சிருக்கணும் ஐ கெஸ்.... என்னன்னு தெரில பாக்கலாம்...."

கொஞ்ச தூரம் சென்று வண்டி சட்டென ஓரிடத்தில் நிற்கவும் கண் மூடி சீட்டில் சாய்ந்திருந்த ஆரவ் விழி திறந்தான்.



"நீ இங்கேயே இரு.... நா இதோ வந்துட்றேன்"



"ஓகே ணா"



நொடி நேரம் கழிய கையில் ஏதோ பையுடன் மீண்டும் வந்தவன் அதை அவனிடம் நீட்ட குழப்பமாய் பார்த்தவனின் கண்கள் விரிந்தன.



"ஐ ஃபோன் லேட்டஸ்ட் மாடல்...." அவன் கேள்விக்கு புன்னகையையே பதிலாய் தந்தவன் சிம் கார்டையும் நீட்டினான்.



"நன்றி எல்லாம் சொல்ல முடியாது.... ஏன்னா நீதான் தூக்கிப்போட்ட" சிறு பிள்ளையாய் குற்றம் சாட்டியவன் சிம் கார்டை போட்டு அதற்குள் தன் மனையாளுக்கு அழைத்திருந்தான்.



"அம்மு...." அவன் கெஞ்சத் துவங்க தலையாட்டி சிரித்தவன் சாலையில் கவனம் பதிக்க அழையா விருந்தாளியாய் வந்து நின்றாள் அவனவள்!!!



'ஒரு கால் கூட பண்ண தோனல.... அவ்வளவு அழுத்தமாடி..... இரு வந்து வெச்சுக்குறேன்' உதட்டில் மெல்லிய கீற்றாய் புன்னகை அரும்பியது.



***



"அண்ணா தேவ் அடண்ட் பண்ணவே இல்ல" இரண்டு நாளாய் அவன் கெஞ்சிய போது மறுத்தவள் இன்று அவனுக்காகவே காத்திருந்தாள்.



"ஆனந்த்..... நீங்க ஏதாவது சாப்புட்றீங்களா?"



"நோ....எனக்கு பசியில்ல"



"அதெப்பிடி பசிக்காம போகும்...." அவள் மறுத்துப் பேச வாயெடுக்கும் முன் அழைத்து சொல்லி விட்டிருந்தாள்.



"அப்பறம் ஆனந்த்.... ஆரா எப்பிடி ராஜ்கோட்ல?"



"டாக்டர் அர்ஜுன் தான் அங்க ஷிப்ட் பண்ணாரு"



"ஓஹ்...."



"மீதி டீடெயில்ஸ் அவர் வாய திறந்தா தான் உண்டு"



"ம்....அப்போ தேவ் வந்த உடனே பேசலாம்.....அதுவர வீட்டுக்கு போலாமே?"



"நோ அஷ்வி.... அண்ணனுக்கு கோபம் வரும்.... தேவயில்லாம பிரச்சினையாகும்"



"அப்பிடி நடக்காம நா பாத்துக்குறேன்... ஆமா அது என்ன அண்ணன்..... உறவே குழப்புதே"



"அது....ஆரு சொல்றதுல எனக்கும் பழகிடுச்சு..... இவ தான் அத்தான்னு கூப்புடுவா" தங்கையிடம் கவனமாக பார்வையை தவிர்த்தான்.



'அத்தான் பொத்தான்' மனதிற்குள் பழிப்பு காட்டியவள் அப்போது தான் ஆனந்த் பார்வையை வலுக்கட்டாயமாக தவிர்ப்பது கண்டாள்.



"ஆனந்த்...."



"எஸ்...."



"இன்னுமா மது மேல உள்ள கோபம் போகல... அவளுக்குன்னு இருக்கறது இப்போ நீங்க மட்டும் தான்.... வெளில காட்டிகலன்னாலும் மனசுல இருக்க ஏக்கம் அப்படியே தான் இருக்கும்"

அதற்குள் காபி வந்து விட



"நீங்க பேசிட்ருங்க நா வந்துட்றேன்" கதிருடன் நாசூக்காக வெளியேறி விட்டாள்.



கனத்த மௌனம் நிலவியது அறைக்குள்.....



"ம...மதுமா..." முதலில் அவனே கலைத்தான்.



அப்போதும் அவள் எதுவுமே பேசாமல் இருக்கவும் அவள் கைகளை தன் கைகளுக்குள் பொத்திப் பிடித்தவன்



"ஐ அம் சாரி மா" என்றான் இறைஞ்சும் குரலில்....

"நா அப்பிடி நடந்துகிட்டு இருந்திருக்க கூடாது.....ஐ அம் ரியலி சாரி"



"அவங்க பண்ண தப்புக்கு எனக்கு ஏன்ணா தண்டன கொடுத்த?" பேசிக் கொண்டிருந்த அவன் வாய் கப்பென மூடிக் கொண்டது.



உண்மை தானே!!!



அவர்கள் செய்த தப்பிற்கு இவள் எப்படி பழியாக முடியும்???



குற்ற உணர்ச்சி தலை தூக்க



"ஐ அம் சாரி மா" என்றான் குரல் கம்ம....



அவள் அமைதியாய் இருந்து விடவே அவனுக்கும் எப்படி பேசவென்றே தெரியவில்லை....



"என்ன மன்னிக்க மாட்டியா மதுமா.... அன்னக்கி கோபத்துல பண்ணது இந்த அளவுக்கு வந்து நிக்கும்னு நா எதிர் பாக்கல... சாரிமா"



"விடுணா...." புன்னகைக்க முயன்றாள்.



அம்மாவும் இறந்து அண்ணனும் விலகிச் சென்று அவள் அனுபவித்த வலி இன்று கண்களால் ஊடு கடத்தப்பட மனம் பாராமானது அவனுக்கு....



தன்னை நம்பித்தானே தந்தை சென்றிருப்பார்....



அந்த நம்பிக்கையை தான் காக்கவில்லையோ???



"சாரி மா...இனிமே இப்பிடி நடக்காது நம்பு ப்ளீஸ்...நம்பிக்கை இருக்குல?"



"இருக்குணா..." அவள் ஒற்றை வார்த்தை போதுமாக இருந்தது அவன் நிம்மதியை மீட்க!!!



கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தவள்



"பாசமலர் போராட்டம் முடிச்சுதா?" என்றாள் சிரிப்புடன்....



அவளை பார்த்து முறைக்க முயன்று தோற்றவன் சிரித்து விட்டான்.



"சரியான வாலா இருப்ப போல?" அவன் சிரித்துக் கொண்டே கேட்க



"ச்சே ச்சே....எங்க மேடம் சொக்க தங்கம் சார்" என்றான் கதிர்.



"தெரியுது தெரியுது" நமுட்டுச் சிரிப்புடன் கூறியவன் மீண்டும் சிரித்துக் கொண்டே அவளை பார்த்தான்.



"என்ன இப்பிடில்லாம் கலாய்ச்சிங்கன்னா நா தேவ் கிட்ட போட்டு குடுத்துடுவேன்" அவள் பதிலில் அவன் சிரிப்பு விரிய ஆச்சரியமாய் அவளை பார்த்துக் கொண்டிருந்தாள் மது.



அமைதியான பெண் என்றல்லவா நினைத்திருத்தாள்!!!



((அட போமா.... நீ வேற....நண்பா.... இந்த மதுவுக்கு யாராவது தனியா நம்ம அம்மணியோட வீர சாகசங்கல பத்தி க்ளாஸ் எடுங்க....என்னால முடியாது))



***



ராகேஷின் தகவலின் அடிப்படையில் அந்த பாடசாலையை நோக்கி சென்று கொண்டிருந்தனர் சித்துவும் மதனும்.



"மச்சான் கெட்டிங் லேட் டா.....க்வீக்" மதன் படபடக்க சித்தார்தின் கைகளில் சீறிப் பாய்ந்தது ஜீப்....



அவர்கள் வந்திறங்கவும் காவல் துறையினர் பரிசோதிப்பு கருவியுடன் நிற்கவும் சரியாக இருக்க அங்கே விரைந்தனர் இருவரும்....



"என்னாச்சு?" மதன் சக அதிகாரி ஒருவரிடம் கேட்க அவர் பதிலில் அதிர்ந்து நின்று விட்டனர் இருவரும்.



"நாங்க நல்லா தேடி பாத்துட்டோம் சார்.... அப்படி யாரும் பாம் வெக்கல"



"வாட்...."அதிர்ந்து கத்தினர் இருவரும்.



"எஸ் சார்.... இதுவர மூணு தடவ நல்லா செக் பண்ணிட்டோம்.....ராங் இன்பர்மேஷனா இருக்கலாம்" அவர் சொல்லி விட்டு நகர ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டவர்கள் கண்களில் அத்தனை சீற்றம்.



"ஸோ....அந்த நாய் பொய் சொல்லி இருக்கான்" பல்லை கடித்தான் சித்தார்த்.



மதனும் பதில் சொல்லாமல் நின்றிருந்தாலும் அவனுக்கும் கோபம் உச்சத்தை தொட்டிருந்தது.



"மச்சான் லெட்ஸ் கோ..... இன்னிக்கு அவனா நாமலான்னு பாத்துடலாம்" சித்தார்த்தின் கையை பிடித்து இழுக்காத குறையாக அவனை வண்டியில் ஏற்றியவன் நேரே ராக்கேஷ் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கே வண்டியை செலுத்தினான்.



***



மீண்டும் மீண்டும் அழைப்பு வந்து கொண்டிருந்தது கயலின் அழைபேசிக்கு....



அதை முறைத்துக் கொண்டே அமர்ந்திருந்தவள் அது அடித்து ஓய்ந்து மீண்டும் அடிக்க அடண்ட் செய்து காதில் வைத்தாள்.



"அம்மு ப்ளீஸ் நா சொல்ல வர்றத முதல்ல கேளுமா.... நா பொய் சொன்னது தப்பு தான் ஒத்துகுறேன் ஆனா இந்த விஷயத்த சொன்னா நீ பயப்படுவியேன்னுதான் சொல்லல அம்மு ப்ளீஸ் புரிஞ்சிக்கடி"



"எங்க இருக்கீங்க இப்போ?" அப்போதுதான் அவள் தன் திருவாயை திறந்தாள்.



"எங்கன்னு சரியா தெரிலடி...."



"வீட்டுக்கு வா பேசிக்கலாம்" வைத்து விட்டாள்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அண்ணனை பாவமாய் பார்த்தான் ஆரவ்.



"என்னால முடிலணா"



"ஏன்டா?" அவன் சிரிப்பை அடக்குவது நன்றாகவே தெரிய திரும்பி முறைத்தான்.



"சிரிக்காதணா கடுப்பா இருக்கு"



"ம்....ஓகே"



"அண்ணா....." பல்லை கடிக்க அடக்க மாட்டாமல் பக்கென சிரித்து விட்டான் ரிஷி.



"கடவுளே அஷ்வி கிட்ட நல்லா வாங்கி கட்டனும் என் அண்ணன்" வாய் விட்டு புலம்ப அவன் சிரிப்பொலி இன்னும் கூடிற்று.



"ணா டாக்டர் அர்ஜுன்.....?"



"தோ பக்கத்துல தான் ஹாஸ்பிடல்.... போய் பாத்துக்கலாம்"



ஆமோதிப்பாய் தலையசைத்தவன் ஹாஸ்பிடல் வந்து விடவே அர்ஜுனை கைத்தாங்கலாக அழைத்து கொண்டு உள்ளே நுழைந்தனர்.



அவர் மயக்கம் தெளிய வைத்ததிலிருந்து அவர் ஏதோ சொல்ல முயற்சிக்க



"அப்புறமா பேசிக்கலாம் டாக்டர்" வாயை அடைத்து விட்டான் ரிஷி.



***



அந்த ஒற்றை ஹோட்டல் அறையில் நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருந்தாள் அனன்யா!!!



கூடவே குறுக்கும் நேடுக்கும் நடந்து சிந்தனை வயப்பட்ட படி ஹரிஷ்!!!



"ச்சே.... கஷ்டப்பட்டு அந்த இடத்துக்கு பாம செட் பண்ண போனா சுத்தி ஆளுங்க நிக்கிறாங்க..... எனக்கு ஓரே ஷாக்கிங்கா இருந்துது அனு"



"நாம போறது யாருக்குமே தெரியாதேடா.....அப்பறமும் எப்பிடி.... யாரோ நம்மல க்ளோஸா வாட்ச் பண்றாங்க" அவள் முகத்தில் குழப்ப ரேகைகள்!!!



"அப்பிடி யாரு அனு நம்மல வாட்ச் பண்ண போறாங்க?" அவள் குழப்பத்தில் இருக்க விட்டேற்றியாய் கேட்டான் ஹரிஷ்.



"அதான் குழப்பமா இருக்கு"



"இதுல குழப்ப என்ன இருக்கு?"



"ப்ச்....நாம பாம் வெக்க எப்போ போனோம்?"



"நைட்டு"



"போலிஸ் எப்போ வந்தாங்க?"



"காலைல....ஏன் கேக்கு...." பாதியிலேயே நிறுத்தி விட்டவனுக்கும் சந்தேகம் துளிர் விட்டது.



"என்ன குழப்புதா?"



"ஆமாடி...."



"இப்போ வாய மூடி கிட்டு யோசிக்க ஆரம்பி"



"ராக்கி சொல்லி இருந்தான்னா....?"



"தருதல....ராக்கி சொன்னதுனால தான் போலிஸ் காலைல வந்துது.... நைட் வேற யாரோ வந்திருக்காங்க"



"நம்ம ப்ளான் தான் யாருக்குமே தெரியாதுல?"



"அத தான்டா நானும் இவ்வளவு நேரமா யோசிக்க சொல்லிகிட்ருக்கேன்...." பற்களை நறநறவென கடித்தவள் எழுந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே தீவிர சிந்தனை வயப்பட்டாள்.



***



"ணா இது ஜோத்பூர்ல?"



"ம்...ஆமா"



"இங்கே ஏன்?"



"சென்னைக்கு டிக்கட் புக் பண்ணி இருக்கேன்.... அதுலயே போய்கலாம்"



"பட் ஏன் திடீர்னு?"



"திடீர்னெல்லாம் இல்ல....ஏற்கனவே போட்ட ப்ளான் தான்" அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஏர்போர்ட்டுக்குள் நுழைந்தது அவனது கார்....



செக்கிங் எல்லாம் முடித்துக் கொண்டு டாக்டர் அர்ஜுனுடன் பயனமானர் சென்னைக்கு....



***



"ஆனந்த் வீட்டுக்கு போலாம்..."



"இல்ல அஷ்வி...நா அண்ணா வந்ததுக்கு அப்பறமா வர்றேன்"



"நோ வே....நீங்க வந்தே ஆகணும்" பிடிவாதமாய் நின்றாள்.



"அது...."



"அதுவுமில்ல இதுவுமில்ல.... கிளம்புங்க... மது நீயும் வா"



"இல்ல வந்து.... நா அப்பறமா வர்றேன்... எனக்கு ஒர்க் இருக்கு"



"அண்ணா.... மது வேல செய்றதா இருக்காங்களாம் ஆபிஸ்ல உள்ள மொத்த வேலயயும் அவகிட்ட கட்டுங்க" அவள் பேச்சில் அனைவருக்குமே புன்னகை....



"ஆ....னந்த்...." அவள் ஒரு மார்க்கமாய் இழுக்க புருவம் சுருக்கி சிரிப்புடன் பார்த்தான் அவளை....



"என்ன.... இழுவ பலமா இருக்கு.... இது சரி இல்லயே"



"ஹி....இல்ல... உங்க பேரு ஆஆஆனந்த் மட்டும் தானா?"



"அத ஏன்மா இவ்வளவு இழுக்குற?"



"அதான் நீங்களே ஒத்துக்கிட்டீங்க பாத்தீங்களா....?"



"என்ன ஒத்துகிட்டேன்?"



"அதான் உங்க பேஏஏஏரு நீளம்னு"



"என்ன தான் கேக்க வர்றமா?" சிரித்துக் கொண்டே கேட்டான்.



"இல்ல.... ஷார்ட் நேமா இருந்தா ஈஸியா இருக்கும்ல.... இந்த ஆஆஆஆனந்த்னு சொல்றதுக்கே நாக்கு தள்ளுது" அவள் குறும்பில் வாய் விட்டுச் சிரித்தவன்



"அப்போ ஜீவான்னு கூப்புடு" என்றான் அமர்த்தலாக...



"அது யாரு?"



"நான்தான்"



"அப்போ இது...?"



"இதுவும் நான் தான்"



"ஆஆஆஆஆ.... குழப்பி விடாம சொல்லுங்க சார்" கெஞ்சும் நிலைக்கே வந்து விட்டாள்.



"என் பேரு ஜீவானந்த்"



"இத முதல்லயே சொல்றதுக்கு என்ன?"



"முதல்லயே கேக்குறதுக்கென்ன?" அவளைப் போலவே பேசி சரிக்கு சமமாக வாயாடிக் கொண்டிருந்த அண்ணனை ஆச்சரியமாய் பார்த்தாள் தங்கை...



அவளறிந்து அவனில் எப்போதுமே ஒரு இறுக்கம் இருக்கும்...



சிரிப்பான் தான் ஆனால் வாய் விட்டெல்லாம் சிரிக்கவே மாட்டான்.



அதை விட யாருக்கும் ஜீவா என அழைக்கவே விட மாட்டான்...



இவளிடம் மட்டும் எப்படி???



அப்படியே அஷ்வினியை பார்த்தாள்.



ரசிக்கத் தோன்றும் குழந்தை முகம்.... அதை விட முகத்தில் ஒரு தெளிவு....



தனக்குள் பேசிக் கொண்டவள் அவர்களுள் ஐக்கியமானாள்.



"ஜீவா....நா உங்கள விட வயசுல சின்னவ தானே?"



"மே பீ"



"மே பீ எல்லாம் இல்ல.... அப்பிடி தான்"



"சரி....அதுக்கு?"



"வா போன்னே கூப்பிடுங்க.... மேடத்துக்கு மரியாத போதும்" இல்லாத காலரை தூக்கி விட்டாள்.



"சரிடி..."



"என்னயா பொசுக்குனு சொல்ட?" அவள் கேட்ட திணுசில் விழுந்து விழுந்து சிரித்தனர் மூவரும்....



"சிரிச்சது போதும்ங்க சாரே.... ஜல்தி கரோ"



"இல்ல அஷ்வி...."



"கோபப்படுத்தாம வாடா.... நானும் போனா போகுதுன்னு மரியாதயா பேசுனா.....ரொம்ப பண்ற வா...." எழுந்து நடந்தவள்



"அண்ணா மதுவுக்கு நல்லா வேல கொடுத்து விடுங்க" பின்னால் திரும்பி சொல்லி விட்டு தன்னை வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தவர்களை பார்த்து வாய் பொத்தி சிரித்தவாறே வெளியேற தலையாட்டி சிரித்தவாறு அவன் பின்னால் சென்றான் ஜீவா.



***



மாலை இரண்டு மணி....



சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தது ஜோத்பூரிலிருந்து தறையிறங்கிய விமானம்.



சன நெறிசலில் ஊர்ந்து வெளியே வந்தவர்கள் டாக்டர் அர்ஜுனை அவர் வீட்டில் விட்டு விட்டு கிளம்பினர் மதுரைக்கு....



கிட்டத்தட்ட ஏழு மணி நேர பயணம்...



சென்னை சாலையில் ஏழு மணி நேரத்தையும் தாண்டும் என்பது ஊரறிந்த.... இல்ல இல்ல.... உலகறிந்த ரகசியம்....



அவங்க எப்போ போய் சேருறாங்கன்னு பாக்கலாம்.



.....



"அஷ்வி...." மறுமுனையில் இருந்து கயலின் குரல் கேட்க



"சொல்லு கயு" என்றாள் உற்சாகமாய்....



"ஆரு சென்னை வந்துட்டாங்களாம்.... இப்போ வீட்டுக்கு தான் போய்கிட்டு இருக்காங்க போல....வீட்டுக்கு போலாமா?" அவனிடம் குதித்ததென்ன தன்னிடம் தவிப்பதென்ன???



உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவளுக்கு மெல்லியதாய் தன்னவன் மீது சினம் தலை தூக்கியது.



தனக்கு ஏன் அழைக்கவில்லை???



'கமாண்டர்....வீட்டுக்கு வா' கருவினாள்.



" அஷ்வி...லைன்ல தான் இருக்கியா?"



"ஹாங்...."



"டூயட் பாட பொய்ட்டியா?"



"பாடிட்டாலும்...."



"சரி....வர்றியா இல்லயா...?"



"வர்றேன் வர்றேன்... கூடவே இன்னொருத்தரும் வர்றாங்க" கார் ஓட்டிக் கொண்டிருந்த ஜீவாவை திரும்பிப் பார்த்தாள்.



அவன் பைக்கையும் அவள் டூவீலரையும் தவிர்த்து கம்பெனி காரிலேயே வந்து விட்டிருந்தனர்.



"யாருடி அது?"



"அது சர்ப்ரைஸ்...."



"என்னமோ போ"



"இன்னொரு சர்ப்ரைஸும் இருக்கு"



"அது என்ன?"



"வந்தே சொல்றேன்"



"ப்ச்....போஃன வை... எரும" கடுப்பாகி கட் பண்ணி விட்டாள்.



"நீ எல்லோர் கிட்டவும் இப்பிடி தான் இருப்பியா?"



"எப்பிடி?"



"அதான் லூசு தனமா?"



"நான் லூசா?" சிலிர்த்துக் கொண்டு சண்டைக்கு தயாரானாள்.



"பின் பாதிய சேர்த்து தானே சொன்னேன்?" என்றான் சிரித்தபடி...



"அது எதோ மேனுஃபக்சரிங் டிஃபெக்ட்"



"பெரும....?"



"ஹி..."



"ஆமா யாரு கூட பேசுன?"



"கயல்விழி.... என் தங்கச்சி"



"அவளும் உன்ன மாரி தானா இல்ல..."



"ச்சே ச்சே அவ நவயுக அன்னை தெரசா"



"ஹா...ஹா...ஹா..."



"ஏன் ஜீவா... நீ...நீங்க வந்து..."



"எதுக்கு பம்முற?"



"இல்ல நீங்க ஆராவ லவ் பண்றீங்களா?" சட்டென நின்றது கார்.



"எ...ஏ...ஏன்?"



"இப்போ என்ன கேட்டுட்டேன்னு பதர்றீங்க?" அவள் நமுட்டுச் சிரிப்புடன் கேட்க தன் தொண்டையை செறுமிக் கொண்டவன் மீண்டும் வண்டியை எடுத்தான்.



"இல்லயே...ஏன்?"



"சும்மா.... ஓகே ஓகே இத பத்தி பேசல.... மூச்சு விடுங்க" கலகலத்து சிரிக்க அவளை போலியாக முறைத்தான்.



"யாரெல்லாம் இருக்காங்க?"



"இரண்டு அண்ணன் ஒரு தங்கச்சி.... ஒரு புருஷன் ஒரு குழந்தை....ஒரு அம்மா...."



"உன்ன...."



"ஹாஹா..."



"அண்ணா என்ன பண்றான்?"



"ஒருத்தன் லாயரா...." அவர்கள் பேச்சு தொடர்ந்தது.



***



இரவு ஒரு மணி....



ஜிவாவை காலையில் பார்த்துக் கொள்ளலாமென்று உறங்க சொல்லி இருக்க காலிங் பெல் சத்தம் கேட்டு எழுந்து சென்று கதவை திறந்தாள் கயல்....



"வாங்க அத்தான்" மெலிதாய் புன்னகைத்தவள் தன்னவனை பார்த்து முறைத்தாள்.



தன்னவளை தேடி அலைபாய்ந்த கண்கள் அவள் சோபாவிலேயே அமர்ந்து உறங்கி இருப்பது கண்டு சிரித்துக் கொண்டன.



"அஷ்வி...." அவன் தடுக்கும் முன் கயல் கத்தி விட்டிருக்க படக்கென விழி திறந்து வாசலை பார்த்தாள் காரிகை...



கொட்டாவி விட்டபடி எழுந்து வந்தவள் தன்னவனை தவிர்த்து



"வாடா கெழவா.... எப்பிடி இருக்க.... உடம்ப தெம்பா வெச்சிருக்கல்ல?" என்றாள் சம்மந்தமே இல்லாமல்....



"தூக்கத்துல உனக்கு மூளை குழம்பி போச்சா ராட்சஸி....?"



"இல்ல....அடி கன்பார்ம்....அதான் கேட்டேன்" அவள் கேள்வியில் மனைவியை பயத்துடன் பார்த்தவன் அவள் முறைத்து விட்டு அறைக்கு செல்வது கண்டு அவள் பின்னால் ஓடினான்.



"கண்ணம்மா..." அவன் துவங்க முதல் மாடிப்படியில் ஏறி சென்று விட கதவை தாழிட்டவன் தானும் மேலேறிச் சென்றான்.



சோஃபாவில் கோபமாய் அமர்ந்திருந்தவளை ஓரக்கண்ணால் பார்த்தபடி ப்ரஷப்பாகி விட்டு வந்தடன் அவளே எதிர்பாரா வண்ணம் தன் பக்கம் இழுத்து அணைத்திருந்தான்.



"விடுங்க என்ன"



"முடியாது"



"ப்ச்...."



"ஏன்டி சலிச்சுக்குற?"



"விடுங்க தேவ்..." அவள் அழைப்பிற்காகவே காத்திருந்தவன் போல் இன்னுமின்னும் இறுக்கினான்.



"பாத்து எவ்வளவு நாளாச்சு.... வாய் வார்த்தைக்காக சரி எப்பிடி இருக்கீங்கன்னு கேக்குறாளா பாரு"



"விட போறீங்களா இல்லயா?"



"இல்ல....கோபமா இருக்கியா?"



"இல்லயே"



"சாரி கண்ணம்மா"



"சரி விடுங்க என்ன"



"இல்ல முடியாது..... முழுசா மூணு நாள் ஆச்சு உன் பக்கத்துல இருந்து கொஞ்ச நேரம் சும்மா இருடி"



"முடியாது விடுங்க"



"இதுக்கான பதில நான் ஏற்கனவே சொல்லிட்டேன் பேபி.... சாரிடி"



"எங்கே போனிங்க?"



"ஜெய்பூர்"



"பிஸ்னஸ் விஷயமால்ல?"



"எ...எஸ்... ஏன் கேக்குற?"



"டாக்டர் அர்ஜுன் பிஸ்னஸுக்கு மாறிட்டாரா மாறன்?" அவளை விலக்கியவன் அவள் கண்களை ஊடுருவினான்.



"உனக்கெப்பிடி?"



"ஜீவா வந்தாரு"



"ஜீவா....?"



"ஜீவா....ஜீவானந்த் தேவமாருதன்..... உங்க அத்த பையன்" அவன் முகம் இறுகியது.



"ஏன் வந்தான்?"



"கொஞ்சம் இருங்க வர்றேன்..." அவனின் "எங்க போற அஷு" என்ற எரிச்சலான கேள்விக்கு பதில் சொல்லாமல் தன் மொபைலை தேடி எடுத்துக் கொண்டு வந்தாள்.



"பேசிட்ருக்கும் போது எங்க போற கண்ணம்மா...."



"இத பாருங்க" ஜீவா அவளுக்கு காட்டிய அதே புகைப்படத்தை அவன் முன் நீட்ட கண்கள் அதிர்ச்சியில் தெறிக்க ஈரெட்டு பின்னால் நகர்ந்தான் தி கிரேட் பிஸ்னஸ் மேக்னட் ரிஷிகுமார் தேவமாருதன்!!!



அன்று வந்த அழைப்பு உண்மை தானா???



தொடரும்.....



27-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 08 [ A ]



வீட்டிற்குள் கூட வராமல் தன்னை இழுத்துக் கொண்டு வந்திருந்த தமக்கையை முறைத்துப் பார்த்தாள் கயல்.



"நானும் கேட்டுகிட்டே இருக்கேன்.... பதில் சொல்லாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம் அஷ்வி.... யாரு இவங்க?" பின் சீட்டில் இருவரும் அமர்ந்து பேசுவது ஓட்டிக் கொண்டிருந்தவனின் காதில் நன்றாகவே கேட்டது.



"சொல்லுடி...." கடுப்பில் உலுக்க மித்ராவிடம் கொஞ்சிக் கொண்டிருந்தவள் மெதுவாக திரும்பினாள்.



"என்ன பிரச்சனை?"



"ம்...."



"இது ஜீவானந்த் தேவமாருதன்"



"தெளிவா பேசு அஷ்வினி" உச்ச கட்ட கோபத்தில் இருக்கும் போது மட்டுமே தன் பெயரை தங்கை அவ்வாறு அழைப்பாள் என்பது தெரிந்து விளையாட்டை விட்டு விட்டு நேராக அமர்ந்தாள்.



"தேவோட அத்த தெரியும்ல?"



"ம்....ஆமா ஆரு சொல்லி இருக்கான் ஒரு தடவ..." அவள் குரலிலிருந்த வெறுப்பில் கலங்கிப் போனான் ஆனந்த்.



அம்மாவை நினைத்து கொபமாக கூட வந்தது.



"அவங்களோட பையன் தான் இவங்க"



"ஓஹ்...."என்றாளே தவிர எதுவும் பேசவில்லை.



"நீ நெனக்கிறா மாதிரி இல்ல கயு" தங்கை கையை பற்றியவள் நடந்ததைனத்தையும் ஒப்பிக்க



"சாரி சார்..." என்றாள் தான் விடயம் தெரிய முன்னரே தப்பாக நினைத்து விட்டதற்காய்....



"இட்ஸ் ஓகே கயல்"



"சர்ப்ரைஸ் என்னன்னு கேக்கவே இல்லயே நீ?"



"ஆமால்ல....சொல்லு சொல்லு" சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாள்.



"ஆரா உயிரோட தான் இருக்கா"



"சும்மா இரு கா... பொய் சொல்லாத"



"நெஜமா கயு....அம்மா மேல சத்தியமாடி"



"வாட்...." அஷ்வினியின் தாய் மீதான சத்தியங்களில் கயலுக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டு...



அப்படியென்றால்???



எப்படி சாத்தியம்....



உறைந்து நின்று விட்டவளை உலுக்கினாள் பாவை....



"கயு....கயல்....கயூஊஊஊ"



"ஹாங்...." திருதிருவென விழிக்க ஜீவாவின் போஃனை வாங்கி காட்டினாள்.



"அக்கா..." நெகிழ்வாய் அழைத்தவள் தமக்கையின் கழுத்தை பாய்ந்து கட்டிக் கொண்டு குழுங்கி அழ ஆதரவாய் அணைத்துக் கொண்டாள் பெண்.



"கயுமா....நீயே இப்பிடி அழுதா அப்பறம் ஆருவுக்கு எப்பிடி விஷயத்த சொல்லுவ?"



"என்னால ஆரு கிட்ட சொல்ல முடியாது நீயே சொல்லிடுகா ப்ளீஸ்" விசும்பினாள்.



"ஹே....நா எப்பிடி கயு.... தேவ் எப்பிடி ரியாக்ட் பண்ணுவார்னு நினைக்கவே பயமா இருக்கு"



"அதே தான் கா.... எனக்கும் பயமா இருக்கு"



"நல்ல விஷயம் தானே கயு.... ப்ளீஸ்"



"எப்பிடி?"



"வாட்ஸ் ஆப்ல இந்த போடோவ அனுப்பி விட்றேன்.... அவன்கிட்ட எப்பிடியாச்சும் சொல்லிடு"



"ம்...." கலக்கமாக தலையாட்டினாள் கயல்விழி ஆரவ்....



கண்களை இறுக்க மூடி நடந்ததை நினைத்துக் கொண்டிருந்தவள் ஆரவ் பின்னாலேயே வந்து அணைக்கவும் விழி திறந்தாள்.



எப்படி சொல்வது.... நினைக்கவே பயமாக இருந்தது பேதை மனதுக்கு....



"அம்மு...." கெஞ்சலாக அவன் அழைக்க முறைப்புடன் திரும்பியவள் அதே போல் இருப்பதென முடிவெடுத்திருந்தாள்.



"ஐ அம் சாரி அம்மு...பொய் சொன்னது தப்பு தான்...... அதுக்காக என்ன தண்டன வேணும்னாலும் ஏத்துக்குறேன்....பட் பேசிடு செல்லம்...." எதுவும் பேசாமல் போனை எடுத்துக் கொண்டு வந்தவள் அவன் கைகளில் கொபம் போல் திணித்து விட்டு மறுபக்கம் திரும்பி கண்ணை இறுக்க மூடி நின்று விட்டாள்.



தன் கையிலிருந்த போனையும் அவனையும் மாறி மாறி பார்த்தவன் அவளிடம் பேசப் போய் பின் ஏதோ உந்த அழைப்பேசி திறையை உற்று நோக்கினான்.



கையிலிருந்த மொபைல் நழுவிய சத்தத்தில் அவசரமாக திரும்பியவள் கணவனை கண்டு அதிர்ந்து போனாள்.



கண்கள் நிலை குத்த திக்பிரமை பிடித்தவன் போல் நின்று கொண்டிருந்தவன் கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் வழிந்து கொண்டே இருக்க அதில் அவன் உணர்வோடு தான் இருக்கிறானா என்பதில் தான் அதிர்ந்து போனாள்.



அவனருகில் தண்ணீருடன் ஓடிச் சென்றவள் அவனை அமர வைத்தாள்.



அப்போதும் அப்படியே தான் இருந்தான்.



நெஞ்சுக்குள் பயம் அப்பிக் கொள்ள கண்ணீருடன் உலுக்க ஆரம்பித்தாள் கணவனை....



"ஆரவ்....ஆரு..."



"...."



"ஆரு...."எழுந்து அவன் முன் வந்து நின்று தன்னிரு கரங்களாலும் அவன் முகத்தை ஏந்தி தன்னை நொக்கி திருப்பினாள்.



"ஆரவ்...இங்க பாரேன் என்ன...நான் பேசுறது கேக்குதா இல்லையா?" முகத்தை முன்னும் பின்னும் உலுக்கினாள்.



"ஆரு இப்பிடி இருக்காதடா...எனக்கு பயமா இருக்கு ஆரு....என்ன பாத்து பேசுடா....ஆரு இங்க....இங்க பாரு....என்ன பாருடா....என்ன பேச சொல்லி கெஞ்சினேல்ல.... அதான் பேசறேனே... பதில் சொல்லுடா...."



"...."



"டேய்....இங்க இங்க என்ன பாரு..." தன் முகம் காண வைத்தவள் அவன் நெற்றியில் இதழ் பதித்தாள்.



இமைக்காமல் அவளையே பார்த்திருந்தானே தவிர அவன் நிலையில் எந்த மாற்றமுமே இல்லை...



"ஆரவ்....ஆரவ்...ஆரு...எனக்கு பயமா இருக்கு.... ஏதாவது பேசுடா தங்கம்...."



"...."



"டேய்....ஆரு...ஆரவ்..." முகத்தை விட்டு விட்டு அவன் டீ-ஷர்ட் காலரை பிடித்து உலுக்கியவள் அவனை தன் வயிற்றோடு சேர்த்தனைத்துக் கொண்டு கதற அவள் இடையை அப்போது தான் சேர்த்து இறுக்கி அணைத்தான் அவளவன்.



"அம்மு...." மெல்லிய விசும்பலாய் கேட்ட அவன் குரலில் தன்னிலையடைந்தவள் அவன் முகத்தை நிமிர்த்தப் போக அதற்கும் விடாமல் இன்னுமின்னும் ஆழமாக புதைந்து தன் கண்ணீரை மறைக்க முயன்றான்.



அவன் தலையை ஆதரவாக வருடி விட்டவளுக்கும் கண்ணீர் வழிந்தது...



இம்முறை ஆனந்தமாக!!!



***



தன்னை நோக்கி நீண்டிருந்த அவள் கரங்களிலிருந்த போட்டோவில் ஈரெட்டு பின்னால் நகர்ந்தவன் நிற்க முடியாமல் தள்ளாட போனை கட்டிலில் வீசி விட்டு தன்னவன் அருகில் ஓடினாள் பெண்.



வியர்த்து வழிய அப்படியே நின்றிருந்தவனின் உடம்பு பனிக்கட்டியாய் உறைந்து போயிருந்தது.



"தேவ்...தேவ்..." அவன் கண்ணங்களில் மாறி மாறி தட்டி தன் புறம் திருப்ப முயன்றாள் பாவை....



ஊஹூம்....அவன் அசைவதாகவே இல்லை....



"தேவ்...ஒன்னில்ல... ஒன்னில்ல.... இங்க பாருங்க என்ன" அவன் கண்ணங்களில் அழுத்தம் கொடுத்து தன் கண்களோடு அவன் கண்களை கலக்க விட்டவள் சற்றே எம்பி அவனிதழ்களுக்குள் தன்னிதழ்களை பொறுத்த மறத்துப் போயிருந்த மூளை செயற்பட ஆரம்பித்ததுவோ???



அவனை விட்டு விலகி இறுக்க அணைத்துக் கொண்டவள்



"ஒன்னில்ல....ஒன்னில்ல.. எல்லாம் சரி ஆவிடுச்சு..." தன் கரங்களால் அவன் முதுகை ஆதரவாக வருட திடீரென வளைத்து அணைத்தது அவன் கரங்கள்.



அது உணர்வுகளை அடக்க போராடுபவனின் போராட்ட அணைப்பு!!!



அவன் இறுக்கிய விதத்தில் வலித்தது அவளுக்கு...



பல்லை கடித்து பொறுத்துக் கொண்டவளின் கரம் அவன் ஷர்ட்டை இறுக்கப் பற்றி இருந்தது.



அவனுக்கு அதுவெல்லாம் நினைவிலேயே இல்லை போலும்!!!



அவளை தான் அணைத்திருப்பது கூட உணரவே இல்லை அவன்...



எலும்புகள் நொறுங்கும் அளவிற்கு தனக்குள் இறுக்கிக் கொண்டவனின் கண்களிலிருந்து இரு சொட்டு கண்ணீர் துளி அவள் உச்சந்தலையில் பட்டுத் தெறித்தது.



இதயம் அதிவேகமாக துடிக்கும் சத்தம் அவன் நெஞ்சில் தலைவைத்திருந்தவளுக்குள் பெரும் அதிர்வாய்!!!



"தேவ்....ஒன்னில்ல..." மீண்டும் வருடவே தான் அவன் அணைப்பு மெல்ல இளகத் துவங்கியது.



விட்டு விடுவான் என நினைத்த நேரம் மீண்டும் இறுக்க இம்முறை உடல் வலியில் அவள் கண்கள் கூட இலேசாக கலங்கிற்று....



சட்டென விலக்கியவன் அவள் தோள்களை பிடித்து அழுத்தி எதிர்ப்பார்பாய் அவள் முகம் பார்க்க ஆமோதிப்பாய் தலையசைத்தவனின் பதிலில் அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரகரவென வழியத் துவங்கவும் பதறிப் போனாள் பெண்.



"ப்ச்....என்ன தேவ் இது....சின்ன பசங்க மாதிரி பிஹேவ் பண்றீங்க.... கண்ணை துடைங்க முதல்ல...கண்ண துடைங்கன்னு சொன்னேன்" தாயாய் அதட்டியவள் தானே துடைத்து விட்டு அவன் கண்ணத்தில் முத்தமிட்டாள்.



"அ....அ...ஷு...."



"இங்க வாங்க தேவ்" சோஃபாவில் சென்று அமர்ந்தவள் மடி மீது சாய்த்துக் கொண்டு தலை கோத மெதுவாக கண்களை மூடியவனின் கடைவிழியோரம் கண்ணீர் கசிந்தது.



"தே...வ்...." மீண்டும் துடைத்து விட அண்ணார்ந்து தன்னவள் முகம் பார்த்தான்.



"என்ன தேவ்...?" கனிவாய் வந்து விழுந்தன வார்த்தைகள்!!!



"ஜீவா தான் வந்து சொன்னாங்க...." நடந்ததனைத்தையும் ஒன்று விடாமல் கூற கேட்டிருந்தவன் சடாரென எழுந்தமர்ந்த வேகத்தில் பயந்து தான் போனாள் பாவை....



"ஏன் என்னாச்சு தேவ்?"



"நா....நாம...நாம இ... இப்போவே ப...போலாம் போலாம் அஷு.... போலாம்" அவன் அதிகமாய் உணர்ச்சி வசப்பட்டிருப்பது கண்டு அருகிலிருந்த க்ளாஸை எடுத்து நீரை புகட்ட தலையை தாங்கிப் பிடித்தவன்



"போ...போ...போலாம் அஷு.... இப்போவே போலாம்" சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தான்.



எழுந்து அவன் முன்னால் மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் கைகளை தனக்குள் பொத்திப் பிடித்தாள்.



"தேவ் ரிலாக்ஸ்...."



"இ...இல்ல கண்ணம்மா நா...நாம போலாம்"



"தேவ்....ராத்திரி மூணு மணி ஆச்சு... இன்னும் கொஞ்ச நேரம் தான்.... காலைல போலாம் சரியா?"



"ப்ளீஸ் அஷு எ...என்னால என்னால மு...முடில எ...என்ன அழைச்சிட்டு போறியா?" கண்கள் கலங்க கேட்டவனை வாரி அணைத்தவள்



"தேவ் ரிலாக்ஸ்.... நாம போலாம்.... நீங்க கொஞ்ச நேரம் தூங்குங்க ப்ளீஸ்" சோஃபாவில் அமர்ந்தவள் வலுக்கட்டாயமாய் தன் மடி மீது அவன் தலையை வைத்து தலை கோத அவள் விரலை அணைத்தபடியே உறங்கிப் போனான் அந்த ஆறடி ஆண்மகன்!!!



......



இரவு முழுவதும் விழித்திருந்ததன் பயனாய் கண்கள் சிவந்து கலங்கி இருந்தது பாவைக்கு.....



குனிந்து மடியில் தலை வைத்திருந்த கணவனின் நெற்றியில் கை வைத்து பார்த்தாள்.



நேற்று அனலாய் தகித்த உடல் இரவு முழுவதுமான அவள் கவனிப்பில் முழுவதுமாக குறைந்து சாதாரணமாக மாறி இருந்தது.



இரவு முழுவதும் தங்கையின் பெயரை அனத்திக் கொண்டே இருந்தவன் அன்பில் மேனி சிலிர்த்தது.



மனதில் எவ்வளவு பாசமிருந்தால் அவளால் காய்ச்சலில் படுத்திருப்பான்...



நினைக்க நினைக்க ஆச்சரியம் தாளவில்லை அவளுக்கு!!!



மீண்டும் ஒரு முறை தண்ணீரில் நனைத்து துனியால் நெற்றியையும் முகத்தையும் துடைத்து விட்டவள் தலையணையை தலைக்கு வைத்து விட்டு எழுந்து கொண்டாள்.



மகனையும் ஒரு முறை பார்த்தவள் குளித்து ஆயத்தமாகி கீழே இறங்கி வரவும் ஜீவாவும் ஜாங்கிங் முடித்துக் கொண்டு உள்ளே வரவும் சரியாக இருக்க அவனை பார்த்து புன்னகைத்தாள்.



"ஹாய் ஜீவா..."



"ஹாய்.... ஆமா ஏன் உன் கண்ணு சிவந்திருக்கு?"



"அது சும்மா... வாங்க காபி குடிக்கலாம்" சமாளிப்பாய் நழுவி விட பேப்பரை எடுத்துக் கொண்டு ஹாலில் அமர்ந்து விட்டான்.



.....



"ஜீவா...."



"ம்...." பேப்பரிலிருந்து தலையுயர்த்தி பார்த்தவன் அவள் நீட்டிய காபி கப்பை வாங்கிக் கொண்டான்.



"டிக்கட்ஸ் ரெடில்ல?"



"ஆமா அஷ்வி.... எட்டு மணிக்கு கிளம்பினா சரியா இருக்கும்"



"ம்...சரி நீங்க ரெடி ஆகிடுங்க....நா எல்லோரையும் கூட்டிட்டு வந்தட்றேன்"



"சரி...." காபி கப்பை வைத்து விட்டு எழுந்தவன்



"தேங்க்ஸ்..." என்றான் உணர்ந்து.



"உங்க தேங்க்ஸுங்குற வார்த்தைக்காக தான் நாங்க இவ்வளவு பண்ணினமாக்கும்?"



"இல்லமா...."



"சும்மா விடுங்க ஜீவா.... அதெல்லாம் நா ஒன்னுமே நினைக்கல...நீங்க போங்க"



"இருந்தாலும்..."



"அடி வாங்காம போடா" சொல்லி விட்டு நகர்ந்தவளை சிரிப்புடன் பார்த்தவன் தலையாட்டி சிரித்து விட்டு தனதறைக்கு சென்றான்.



***



"ஆரு...." மெதுவாக கணவனை தட்டினாள் கயல்...

மெதுவாய் விழி திறந்தவன் அவளை பார்த்து சிரித்தான்.



"எந்திரி...."



"கோபம் போயிடுச்சா?" கேட்டுக் கொண்டே எழுந்தவன் அவளை இழுக்க நிலை தடுமாறி கட்டிலில் வந்து விழுந்தாள் பெண்....



"என்னடா பண்ற?" எழ முயற்சித்தவளை இறுக்க அணைக்க அவன் மனமறிந்து அப்படியே அடங்கிப் போனாள்.



"என்னடா...."



"பயமா இருக்கு அம்மு..."



"ஏன்...ஏன்டா?"



"ப்ச்...ஏனோ பயமா இருக்கு... சரி அத விடு....என் மேல உள்ள கோபம் போயிடுச்சா?"



"...."



"ஹே அப்போ கோபமா இருக்கியா?" தன் நெஞ்சிலிருந்த அவள் தலையை நிமிர்த்தினான்.



கண்கள் கலங்கி இருந்தன!!!



"என்னமா....ஏன் அழற?"



"நா ரொம்ப பயந்துட்டேன்டா" மீண்டுமாய் அவளை இறுக்க அணைத்தவன் கதவு தட்டப்படும் சத்தத்தில் விலகி எழுந்தான்.



....



"வா அஷ்வி...."



"காபி..." இரண்டு கப்களை நீட்டியவள் கயலின் பின்னால் வந்து நின்ற ஆரவ்வை பார்த்து வேண்டுமென்றே சிரித்தாள்.



"எதுக்குடி சிரிக்கிற?" சட்டென கடுப்பானான்.



"இல்ல....ராத்திரி அழுகை சத்தம் கேட்டுச்சு.... அதான் ரெண்டு பேருல யாருன்னு பாத்துட்ருக்கேன்"



"அடிங்க...." கையை ஓங்கியவன் சிரித்துக் கொண்டே அணைத்தான் ஆருயிர் தோழியை...



"தேங்க்ஸ்...."



"விடுடா என்ன..." அவனை பிடித்து தள்ளி விட்டு முறைத்தாள்.



"ஏன்டி....?"



"நா ஒனக்கு ஃப்ரண்ட் இல்லல்ல?"



"ஓகே சாரி.... தேங்க்ஸ் வாபஸ்"



"ம்...." மீண்டும் முறைத்தாள்.



"ஓகே ஓகே நோ தேங்க்ஸ் நோ சாரி"



"ஆமா....கண்ணு ஏன் சிவந்திருக்கு?"



"கட்டாயம் சொல்லியே ஆகணுமாடா தாத்தா?"



"உன்ன..." மண்டையில் நன்றாக கொட்டினான்.



"போடா கிழவா.... சீக்கிரம் ரெடியாகு... எட்டு மணிக்கு ஏர்போர்ட் போகணும்" தலையை தேய்த்துக் கொண்டே சென்றவளை சிரிப்புடன் பார்த்தனர் இருவரும்....



***



"யாது....கண்ணா.... எந்திரிங்க பாட்டி வீட்டுக்கு போலாம்...."



"ஊஹூம்...."



"மித்து....ஸ்ரீ....வர்ஷி.... அப்பறம் ரித்வி ( சித்தார்த்தோட குழந்த).... எல்லோரும் வர்றாங்களாம்டா.... நீ போல?"



"மாம்....நானும்" கண்களை திறவாமலே தூக்கிக் கொள்ளுமாறு கைகளை விரிக்க தூக்கி தோளில் போட்டவள் குளியலறை சென்றாள்.



....



"அப்போ டாட் வரமாட்டாரா?" இடையில் குட்டி டவலுடன் கேள்விக் கேட்டுக் கொண்டே இருந்தான் மகன்.



"டாடும் மாமும் வேலை விஷயமா வெளில போறோமாம்.... யாது சமத்தா பாட்டி கூட இருப்பீங்களாம்.... சரியா?"



"நோ....யாதுவும்"



"கண்ணா முக்கியமா வேலடா... என் சமத்துல?"



"...."



"கண்ணா ப்ளீஸ் டா"



"உங்க கண்ணு ஏன் மாம் ரெட் கலரா இருக்கு...."



"அதுவா....கண்ணுல தூசு போயிடுச்சா.... கசக்கி விட்டேனா... அதான் அப்பிடி"



"எங்க காட்டுங்க நா ஊதி விட்றேன்" பிஞ்சு விரல்களால் கண்ணை திறக்குமாறு வைத்து ஊதி விட அப்படியே அணைத்துக் கொண்டாள்.



"நீங்க அங்க போனாலும் கேர்லெஸ்ஸா இருப்பீங்க மாம்...."



"அதுக்கு...?"



"நானும் உங்க கூடவே வர்றேன் மாம்....நா நல்லா பாத்துப்பேன் உங்கள"



"ஹாஹாஹா.... யாரு நீ என்ன நல்லா பாத்துபியா?"



"எஸ் மாம்...." அவன் கண்களில் தெரிந்த தீவிரத்தில் பயந்து போனாள் பெண்...



ஒரு சிறு குழந்தைக்கு இவ்வளவு ஆக்ரோஷம் எதற்கு???



"கண்ணா என்னடா.... சீரியஸான விஷயமா பாக்கற?"



"ஆஃப் கோர்ஸ் மாம்... இட்ஸ் சீரியஸ்.... நா உங்கள எப்பவும் நல்லா பாத்துப்பேன்" வாயடைத்துப் போனாள் பெண்....



டீ-ஷர்ட்டை போட்டுக் கொண்டிருந்த கை அந்தரத்தில் நின்றது.



"ஏன் இப்பிடி பேசற யாதவ்....?"



"எங்க ஸ்கூல்ல ஒரு பையனோட அப்பா அவங்க அம்மாவ அடிச்சாங்க...." அந்த சம்பவம் மனதில் பதிந்து போயிருக்கவே அப்படி பேசுகிறான் என புரிந்து நிம்மதியானாள்.



"உங்க மேல அப்படி யாரும் கை வைக்க நா விட மாட்டேன் மாம்...."



இந்த அன்பு நல்லதா கெட்டதா???



பெருமைப்படலாம் தான் ஆனால் கணவன் மீதான அபிப்பிராயம்???



"யாது டாட் அப்பிடி செய்ய மாட்டாங்க"



"எஸ் ஐ நோ மாம்.... எனக்கு டாட் பத்தி தெரியும்"



"பின்ன என்னடா....?"



"அன்னக்கி அர்ஜுன் அத்தான் பணிஷ்மெண்ட் கொடுத்தாங்க?"



"அது சும்மாடா..."



"நோ மாம்....டாட் தவிர உங்க மேல யாரு கை வெச்சாலும் எனக்கு புடிக்காது"



ஹப்பாடா என்று தான் இருந்தது அவளுக்கு....



இந்த அளவில் சரி புரிந்து வைத்திருந்தானே!!!



வளர வளர புரிந்து கொள்வான் என உணர்ந்தவள் அதற்கு மேல் எதுவும் பேசாமல் காலில் ஷூவை மாட்டி விட்டாள்.



திரும்பி கணவனை பார்த்தாள்....



அப்போது தான் எழுந்திருப்பான் போலும்....



எழுந்தமர்ந்து அப்படியே சோஃபாவில் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.



"யாது....நீ கீழ போ நா இதோ வந்துட்றேன்...."



"ஓகே மாம்...." கண்ணத்தில் முத்தமிட்டு விட்டு ஓடி விட நெருங்கி தன்னவன் தோள் மீது கை வைத்தாள் பாவை....



"தேவ்...என்னாச்சு?"



"ஒன்னில்ல...சாரி..."



"எதுக்கு தேவ்?"



"இல்ல ராத்திரி... வந்து...நா..."



"இட்ஸ் ஓகே"



"இல்லடா என்னதான் இருந்தாலும் நா அப்பிடி கஷ்ட.."



"முதல்ல குளிச்சிட்டு கிளம்புங்க..... இத அப்பறமா பேசிக்கலாம்... அட எந்திரிங்க தேவ்..." அவனை இழுத்துக் கொண்டு போய் குளியலறையில் தள்ளி விட்டாள்.



குனிந்திருந்து பேசியதாலோ என்னவோ அவள் கண் சிகப்பை அவன் கவனிக்காமல் விட்டிருந்தான்.



***



ஹாஸ்பிடல்.....



"டாக்டர் அர்ஜுன் ஹியர்..."



"டாக்டர்....ஆர் யூ ஆல் ரைட்...நான் வாசு...."



"ஆல் ரைட் வாசு.... ஆரா எப்பிடி இருக்காங்க?"



"குட் டாக்டர்....நீங்க வர்றீங்கல்ல?"



"ஓ....எஸ்....நானும் இன்னிக்கு வர்றேன்"



"ஓகே டாக்டர்"



"தென்.... கேர்புல்லா பாத்துக்கோங்க.... இஸ் எனி இஷ்யூஸ்?"



"நோ டாக்டர்....ஆல் சேஃப்"



"தேங்க் காட்.... அப்போ நா அங்கே வந்து டீல் பண்ணிக்கிறேன்"



"டேக் கேர்....." வைத்தவர் திரும்பி ஒரு தடவை ஆராதனாவின் உடல் நிலையை சரி பார்த்து விட்டு வெளியே வந்தார்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜ்கோட்.....



மாலை ஆறு மணி...



கிட்டத்தட்ட ஒன்பது மணி நேர பயணம்...



விமானம் தரை இறங்கிய அடுத்த நிமிடத்திலிருந்து சகோதரர்கள் இருவருக்கும் உடம்பில் ஒரு பரபரப்பு!!!



வாழ்வில் தொலைத்த பொக்கிஷம்....



கண்ணால் காணும் வரை பொறுமையே இல்லை இருவருக்கும்....



ஜீவா தான் ஓட்டிக் கொண்டிருந்தான்.



இருந்த பரபரப்பில் அவனை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை....



இதுவரைக்கும் போதுமென்று பெருமூச்சு விட்டுக் கொண்டாள் பாவை....



சரியாக நாற்பத்தைந்து நேர பயணத்தின் முடிவில் அந்த பிரம்மாண்ட தனியார் மருத்துவமனை முன் வந்து வலுக்கிக் கொண்டு வந்து நின்றது கார்.



கயலின் கையை இறுக்கிப் பிடித்திருந்தவன் மனைவியை திரும்பிப் பார்த்தான்.



கண்களால் தைரியம் சொன்னவள் கீழே இறங்க முன் சீட்டில் தலை சாய்த்து கண் மூடி அமர்ந்திருந்தவன் தோளை பின்னாலிருந்து தொட்டாள் அஷ்வினி.



கண்களை திறந்து நிமிர்ந்து அமர்ந்தவன் இறங்கிக் கொள்ள ஜீவாவிடம் கண்ணை காட்டி விட்டு அவசரமாக தானும் இறங்கி பின்னால் நடந்தாள்.



.....



"அம்மு...."



"அதான் நா இருக்கேன்ல....வா" அவள் சொல்லிக் கொண்டிருக்க முன்னால் வந்து நின்றார் டாக்டர் அர்ஜுன்.



அவர் இவர்களுக்கு முன்னாலேயே வந்து விட்டிருந்தார்.



"வெல்கம்...." என்றவரை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான் ஆரவ்.



"ஆரவ் ஜஸ்ட் ரிலாக்ஸ்....கம்...." அவன் தோளில் கை போட்டு உள்ளை அழைத்துச் செல்ல சற்று பின்னால் குனிந்த தலை நிமிராமல் நடந்து கொண்டிருந்தவனின் நடை தேங்கி நின்றது.



"என்னாச்சு தேவ்....கமான்" அவன் கையை பிடிக்க உதறியவன் வராண்டாவில் போடப்பட்டிருந்த சேரில் தலை தாங்கி அமர்ந்து கொண்டான்.



அனைத்தும் கனவில் நடப்பது போல் இருக்க அவனால் நிஜத்தை ஜீரணிக்க சில கணங்கள் தேவைப்பட்டது.



"தேவ்...." அவன் பக்கத்தில் அமர்ந்து அவன் தோள் மேல் ஆதரவாக கை வைத்தாள்.



"என்னாச்சு...வாங்க... அப்போ ஆராவ பாக்க வேணாமா?"



"நா வர்ல நீ போ...."



"ப்ச்...என்ன தேவ் நீங்க....இப்போ என்ன ஆகிப் போச்சு?"



"ஒன்னில்ல நீ போ நா வர்ல" தோளிலிருந்து கை எடுத்தவள் தள்ளி அமர்ந்தாள்.



"போன்னு சொல்றேன்ல?"



"எதுக்காக அடம் பிடிக்கிறீங்க தேவ்... நேத்து நீங்க தானே என்ன கூட்டிட்டு போன்னு சொன்னீங்க... ரெண்டே எட்டு தான்"



"எ...என்னால முடியல அஷு... பயமா இருக்கு" சட்டென தன்னெஞ்சோடு சேர்த்தனைத்தாள் பெண்.



***



உடல் நடுங்க அருகில் சென்று நின்றான் ஆரவ்....



கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் உடைப்பெடுத்தது.



தூங்கி இருந்தவள் மெதுவாய் கண் திறக்க முன்னால் கண்ணீர் வழிய தன் உடன் பிறப்பு!!!



அவளையறியாமலேயே அவள் கண்களிலும் கண்ணீர் கண்ணத்தை தொட தன்னை நோக்கி நீண்ட அவள் கரங்களை ஈரெட்டில் பற்றியவன் தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டு குழுங்கி அழுதான்.



"ஆ....ஆ....ஆரு....."



"...."



"அ...அண்..ணா"



"...."



"ஆ...ரவ்..."



"பயந்துட்டோம்டா...." அவன் பிடி இறுகியது.



வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு ரிஷியை தேடி வெளியில் வந்தாள் கயல்விழி.



.....



"அஷ்வி...." அவள் அழைக்க சட்டென விலகினான் ரிஷி.



"என்ன கயு?"



"ஆரா அத்தான தேடுறாங்க...." கண்களை இறுக்க மூடித் திறந்தவன் சடாரென எழுந்து கொள்ள தானும் எழுந்தவள் அவன் கையில் அழுத்தம் கொடுத்து உள்ளே செல்லுமாறு கண்களை காட்ட அதை கேட்டு நடந்து சென்று கதவில் கை வைத்தவனின் கால்கள் தள்ளாடின.



"தேவ்....ரிலாக்ஸ்.... ஜஸ்ட் கொ...."



.....



கதவு திறக்கப்பட கண்களை திருப்பினாள் மாது.



கைப்பிடியை இறுக்கப்பற்றி சாய்ந்து நின்றிருந்தவன்



"அ...அண்ணா..." எனும் அழைப்பில் உடல் தூக்கிப் போட விழி திறந்தான்.



நிஜம் தான்!!!



கண்களில் மீண்டும் கரகரவென வழிந்தது கண்ணீர்....



"ணா...." தலையாட்டி அவனை தன்னிடம் வருமாறு அழைக்க பாய்ந்து சென்று அவள் மறுபக்கம் நின்றவன் அவள் முகமெங்கும் முத்தமழை பொழிந்தான்....



கதவின் அருகில் இருந்த பெண்கள் இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிய உடற் சோர்வும் செர்ந்து இரவு தூங்காதது வேறு வாட்ட தன்னவன் பிம்பம் மங்கலாய் தெரிய மயங்கி சரிந்தாள் காரிகை...



உதட்டில் உறைந்திருந்தது புன்னகை!!!



"அக்கா...." பதறி தாங்கிப் பிடிக்க கைகளை நீட்டு முன் அவளை தாங்கி இருந்தான் ஜீவா.



"அத்..." என கத்தப் போனவளை தடுத்தவன் அவளை ஏந்திக் கொண்டு வெளியேற தானும் பின்னால் வந்தாள் கயல்.



"கயல்....நாம அவங்கள டிஸ்டர்ப் பண்ண வேணாம்.... ஐல் மேனேஜ்"



"சரிங்க சார்..."



"வாங்க என் கூட..." டாக்டர் அர்ஜுனுக்கு அழைத்தவன் விடயத்தை சுருக்கமாக விளக்கி விட்டு காத்திருந்தான்.



"என்னாச்சு ஆனந்த்?" கேட்டுக் கொண்டே நுழைந்தவர் அவள் பல்ஸை செக் பண்ண துவங்கினார்.



"சாதாரண மயக்கம் தான்.... நைட் சரியா தூங்கி இருக்க மாட்டாங்க..... உடற் சொர்வுனால தான் ஆகி இருக்கு" பதற்றமாய் இருந்த கயலுக்கு அப்போது தான் நிம்மதியாயிற்று....



***



"ணா...."



"அண்ணன் தான்மா" ஆரவ் இடது பக்கத்தில் கைளை தனக்குள் பொத்தி பிடித்திருக்க வலது பக்கத்தில் அமர்ந்து தனக்குள் மற்றைய கையை அடக்கி இருந்தான் ரிஷி.



"ஆரு...." எதுவும் பேசாமல் கண்களை மட்டும் உயர்த்தினான்.



"ஏன் அமைதியா இ.. இருக்கீங்க ரெண்டு பேரும்?"



"ணா..."



"ம்...."



"ஆரு பேசவே மாட்டேங்குறான்" அவள் கண்கள் கலங்கிற்று.



"ப்ச்....ஏன்டா?" அவள் கண்ணீரை துடைத்து விட்டவன் தலை கோதி புன்னகைத்தான்.



"நம்ம வீட்டுக்கு போலாமா ணா"



"போலாம்டா"



"எனக்கு ப...பயமா இருக்கு"



"அதான் அண்ணன் வந்துட்டேன்ல.... எதுக்கு பயம்?"



"இ...இல்ல இல்ல நாம வீட்டுக்கு போலாம்"



"சரிமா...சரி போலாம்" என்றவனுக்கு அப்போது தான் மனையாளின் ஞாபகம் வந்தது போலும்...



பின்னால் தலையை திருப்பி பார்த்தவன் அவள் இல்லாதது கண்டு புருவம் நெறித்தான்.



"யாரணா பாக்குற?"



"அண்ணி மா...."



"கிரீன் சுடி போட்டிருந்தாங்களே அவங்களா?"



"நோ மா...அது ஆருவோட ஒய்ப்...."



"ம்..."



'அப்போ அஷு எங்க போனா...உள்ள கூட வர்லியா'



"நா அவங்கள அழச்சிட்டு வரட்டுமா?"



"சரிணா...." கண்கள் மின்ன தலையாட்டியவளின் பார்த்து சிரித்தவன் எழுந்து வெளியே வர அவனை நோக்கி வந்தார் டாக்டர் அர்ஜுன்.



"ஹலோ மிஸ்டர்.மாறன்" கை குழுக்கியவன் கண்கள் நாளா புறமும் அலசியது.



"அஷ்வினி....?"



"எஸ் டாக்டர்....நீங்க பாத்திங்களா.... இங்க தானே இருந்தா"



"நோ நோ அவங்க மயங்கி விழுந்துட்டாங்க... வார்ட் *** ல இருக்காங்க"



"வாட்...?"



"ராத்திரி தூங்காததுனால வந்த சாதாரண மயக்கம் தான்" அடுத்த வார்த்தை பேசவெல்லாம் அவன் அந்த இடத்திலேயே இல்லை....



.....



மயக்கம் தெளிந்து சாய்ந்து அமர்ந்திருந்தவள் இருபக்கமும் அமர்ந்திருந்த ஜீவா கயலிடம் பேசிக் கொண்டிருந்தாள்.



படீரென கதவு திறக்கப்பட்டதில் மூவரும் வாசலை பார்க்க பதற்றமாய் நின்றிருந்தான் அவளவன்.



கயலும் ஜீவாவும் வெளியேற ஈரெட்டில் அவளை அடைந்தவன் இறுக்கி அணைத்து கண்களை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.



"தேவ் எனக்கு ஒன்னில்ல....ஐ அம் ஓகே...."



"தேவ்...." அவள் மீண்டும் அழைக்கவே அவள் முகம் ஏந்தி அழுத்தமாக நெற்றியில் இதழ் பதித்தவன் அவள் நெற்றி முட்டி கண்களை மூடி நின்றான்.



"என்ன பதற வெக்கிறதே வேலையா போச்சுல உனக்கு?" அவன் பேச்சில் சிரித்தாள் பாவை....



"ஐ அம் ஓகே தேவ்..."



"என்ன ஆச்சு?" விலகி அவள் முகம் பார்த்தான்.



"இல்ல வந்து ராத்திரி தூங்கலல... அதான்"



"ஏன் தூங்கல?"



"...."



"ஏன்னு கேட்டேன்"



"அ...அது உங்களுக்கு ஜுரம்..."



"வாட்....?"



"ராத்திரியெல்லாம் உங்களுக்கு ஜுரமா இருந்துதா.... நான் பயந்து போயி தூங்கல" குரலே எழும்ப வில்லை அவளுக்கு....



"லூசா நீ.... அதுக்காக இப்பிடி தான் தூங்காம மயக்கம் போட்டு விழுவியா... இடியட்...."



"சாரி...."



"யாருக்கு வேணும் உன் சாரி...தூக்கி குப்பைல போடு" ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தவன் கண்ணத்தில் திடீரென முத்தமிட வாயை கப்பென மூடி விட்டு அவளை பார்த்து முறைத்தான்.



"வேணும்னா இன்னொன்னு தரவா தேவ்?" அதற்கும் முறைத்தான்.



"ஏன் தேவ் கோபப்பட்றீங்க....?"



"ஏன் அஷு இப்படி பண்ற.... ஹெல்த்த பாக்க மாட்டியா?" கொஞ்சம் தனிந்திருந்தான்.



"ஏன் நீங்க பாத்துக்க மாட்டீங்களா....?" தலைசாய்ந்து கேட்டவளை பார்த்து முறைக்க முயன்று தோற்றவன் சிரித்து விட்டு மீண்டும் நெற்றியில் இதழ் பதித்து விலகினான்.



"சரி வா ஆராவ பாத்துட்டு வர்லாம்..."



"முடியாது"



"ஏன்?"



"என்ன தூக்கி ரொம்ப நாளாச்சுல... தூக்குங்க" கையை விரிக்க சிரித்தவன் தூக்கிக் கொண்டு "இம்சை..." என முணுமுணுக்க



"நான் உங்களுக்கு இம்சையா?" அவன் மீசையை நன்றாக இழுத்து விட்டாள்.



"ஆ....வலிக்குதுடி"



"நல்லா வலிக்கட்டும்" அவள் முகம் தூக்க தலையாட்டி சிரித்தவன் எதுவும் பேசாமல் நடந்தான்.



***



"சார்...." தன்னிடம் சரி பார்க்க தந்த டாக்குமெண்டை கதிரிடம் நீட்டினாள் மது.



தூக்கம் கண்ணை சுழற்றியது.



"குட்..." அவன் பாராட்டுக்கு பதில் சொல்லாமல் அவள் நின்று கொண்டே இருக்க தலையுயர்த்தி என்னவென்பது போல் பார்த்தான் கதிர்.



'சரியான உம்மனா மூஞ்சி.....ஏன் என்னன்னு வாய தொறந்து கேக்க மாட்டாராமா...அத்தான் கூட மட்டும் தான் வாய் கிழிய பேசறான்.... ஒரு வேல நேர்த்தி கடனோ'



"மிஸ்.மது"



"ஹாங் சார்...."



"காது செவிடா?"



"இல்லயே ஏன் சார்?"



"டவுட்டு...."



"ஒஹ்....ஏன் சார் ஏதாவது கேட்டிங்களா என்கிட்ட?"



"வீட்டுக்கு போகாம இங்க என்ன பண்ற?"



"நீங்க போன்னு சொல்லலல்ல.... அதான்...."



"சரி போ...."



"ம்...ஓகே சார் பய்..."



"...."



"பய்னு திருப்பி சொல்லணும் சார்"



"பய்..." அவள் வெளியேறி தன் வேலைக்குள் மூழ்கியவனை மீண்டும் கலைத்தாள் அவள்...



"ப்ச்....வாட்?"



"வெளில இருட்டா இருக்கு...."



"அதுக்கு...."



"கொஞ்சம் பார்க்கிங் வர வர்றீங்களா சார்?"



"ஓகே....முன்னாடி போ வர்றேன்" என்றவன் பார்த்துக் கொண்டிருந்த கோப்பை அதன் இடத்தில் வைத்து விட்டு பின்னால் நடந்தான்.



"சார்..."



"என்ன?"



"எலவேட்டர் (லிஃப்ட்) லயே போலாம்..."



"ம்...." என்றவன் அவளுடன் இணைந்து ஏறிக் கொள்ள சக பணியாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தனித்து விடப்பட்டனர் இருவரும்....



சீராக சென்று கொண்டிருந்த லிஃப்ட் திடீரென தடுமாற ஆரம்பிக்க அதிர்ந்து போயினர் இருவரும்....



"சா...ர்...பயமா இருக்...." அவள் வார்த்தைகளை முடிக்கு முன் லைட் அணைய ஓரத்திலிருந்தவனை பாய்ந்து கட்டிக் கொண்டாள் பெண்...



அதிவேகமாக கீழிறங்கிய இயந்திரம் டமால் என்ற சத்தத்துடன் அதிர்ந்து நிற்க பயத்தில் இன்னுமின்னும் புதைந்தவளை அணைக்கத் தோன்றாமல் உறைந்து நின்றிருந்தான் கதிர்.



நிமிடங்கள் கழித்து மின்சாரம் வர அணைத்திருந்த அவனிலிருந்து சட்டென விலகியவள்



"சாரி சார்" என்றாள் தரை பார்த்து....



அதற்குள் கதவும் திறந்து விட எதுவும் பேசாமல் வெளியேறியவன் பின் சென்றவள் தன் காரை எடுத்துக்கொண்டு சென்று விட்டாள்.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இராமநாதபுரம்....



"ரித்வி....ரெடி.... பால் (ball) போடு..." கையில் கிரிக்கெட் பெட்டை பிடித்துக் கொண்டு கத்தினான் யாதவ்.



"ம்...." ஓடி வந்து கை சுழற்றி பந்தை வீச இவன் அடித்து விட்டதில் எதிர் வீட்டு ஜன்னல் உடைந்து சிதறியது.



"அச்சச்சோ....யாது வாடா...." மட்டையை தூக்கி வீசியவன் யாதவ்வையும் இழுத்துக் கொண்டு ஓட வாசலில் இடுப்பில் கை குற்றி நின்றிருந்தாள் வர்ஷினி....



(அபி பொண்ணு )



"ரித்வி....வர்ஷ் நிக்கிறா...."



"எங்கடா...."



"வாசல் பக்கம் பாரு"



"என்ன பண்றது....?"



"கண்டுக்காம உள்ள போலாம்...."



"ம்...." ஆமோதித்தவன் அவளை கடந்து செல்ல



"அர்ஜு அத்தாஆஆன்" கத்தினாள் வீடே அதிர....



"போச்சு...." யாதவ் தலையில் கை வைக்க அவளை முறைத்தான் ரித்விக்.



அதற்குள் எதிர் வீட்டு பெண்மனியும் உள்ளே இருந்து அனைவரும் வந்து விட்டிருக்க தலையை தொங்கப் போட்டு மாட்டி விட்டவளை மனதிற்குள் அர்ச்சித்தபடி நின்றிருந்தனர் இருவரும்....



"ஏன் வர்ஷுமா.... ஏன் கத்தினீங்க?" அவள் பதில் சொல்லு முன் அந்த பெண்மனி துவங்கி விட்டார்.



"இதோட பத்தாவது கண்ணாடி மாத்தியாச்சு.... ஒரு நாளைக்கு மூணு தடவ ஒடச்சி விட்றான் இந்த பையன்..."



"சாரிமா....நாங்க பணம் கொடுத்துட்றோம்.... மன்னிச்சிடுங்க...." அவரை சமாதானப்படுத்தி பணத்தை கொடுத்து விட்டு இருவர் புறம் திரும்பினாள் ரித்திகா....



அனைவரும் அங்கே வந்து விட்டிருக்க வீடே கலை கட்டியிருந்தது.



"ரித்விக்...."



"சாரி மா....சாரி ரித்துமா" இருவருமே தலை குனிந்து முணுமுணுக்க மண்டியிட்டு அமர்ந்தாள் பெண்...



"அதான் அந்த பக்கம் ப்ளே கிரவுண்ட் இருக்குல?"



"யாது வர முடியாதுன்னு சொன்னான்...."



"ஏன்டா வர மாட்டேன்னு சொன்ன?"



"மாம் அவங்க இல்லாத நேரம் போக வேணாம்னு சொல்லி இருக்காங்க ரித்துமா"



"சரியான அம்மா புள்ள....சரி வாங்க ரெண்டு பேரும்..." அவள் உள்ளே செல்ல பழிப்புக் காட்டிய வர்ஷினியை முறைத்தனர் இருவரும்....



***



ஹாஸ்பிடல்.....



"தேவ்...தேவ்..."



"என்னடி?"



"இறக்கி விடுங்க என்ன"



"ஏன்?"



"ஆரா பாத்தா என்ன நினைப்பா.... இறக்கி விடுங்க தேவ்"



"முடியாது"



"ப்ளீஸ் தேவ்....நீங்க என்ன சொன்னாலும் பண்றேன்"



"டீல் ஓகே"



"டீல அப்பறமா பாத்துக்கலாம் இறக்கி விடுங்க முதல்ல...."



"நான் பிஸ்னஸ் மேன்மா.... கட் அண்ட் ரைட்"



"சரி சொல்லுங்க"



"இல்ல அப்பறமா சொல்றேன்"



"ஆஆஆஆ....விடுங்க தேவ்" வாசல் வரவே துள்ளி இறங்கினாள்.



"பாத்துடி...."



"எங்களுக்கு தெரியும்...நீங்க வாங்க...." நாக்கை துறுத்தி அழகு காட்டியவள் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.



.....



"ஹாய்...." உற்சாகமாக சொல்லிக் கொண்டே வலது பக்கம் இருந்த இருக்கையில் அமர மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் அவளவன்....



"அ...அண்ணி..."



"எஸ்...."



"....."



"நானே தான் அறிமுகப்படுத்திகனுமா.... டேய் தடியா கொஞ்சம் என்ன பத்தி எடுத்து விடு" தலை குனிந்திருந்த ஆரவ்வை வம்பிலுக்க விலுக்கென நிமிர்ந்தவன் கண்கள் ஏகத்துக்கும் கலங்கி இருந்தது.



"சரி சரி....நீ அழற.... உன்னால சொல்ல முடியாது அதானே... அதுக்கு ஏன்டா முறைக்குற?"



"...."



"நீ சொல்லலன்னா போ.... இவனுக்கு நா நல்லா பேசறேன்னு பொறாமை.... நீ வாமா நான் பேசறேன்" உண்மையிலேயே அவன் முறைக்க சிரித்தனர் ரிஷியும் ஆராவும்....



"நான்....ச்சே இல்ல என் பேரு அஷ்வினி ரிக்ஷிதா....என் புருஷன் பேரு...."



"என்னண்ணி மறந்துட்டீங்களா?"



"ம்...லைட்டா....ஆமா உன் அண்ணன் பேரு என்ன?"



"ரிஷிகுமார்"



"ஹாங்....அதே அதே தான்.....என் புருஷன் பேரும் அதே தான்...." ரிஷி முறைக்க பக்கென சிரித்தான் ஆரவ்.



"அட....தாத்தா உனக்கு சிரிக்க கூட வருமா?"



"ராட்சஸி...."



"தேங்க் யூ தாத்தா"



"தாத்தாவா....?" கலகலவென சிரித்த தங்கையை ஆசையாய் பார்த்தனர் இருவரும்....



இருவர் கண்களுமே கலங்கி இருந்தது.



"ம்....ஆமா ஆரா.... இவனுக்கு தாத்தா வயசாகுது.... என் தங்கச்சிய லவ் பண்ணான்.... தாத்தாக்கு தர முடியாதுன்னு சொன்னேன் யூத் கெட்டப் போட்டிருக்கான்" அவள் சிரியாமல் சொல்ல சரித்தனர் மூவரும்....



"கொஞ்ச நேரம் வாய மூடிகிட்டு இருடி ராட்சஸி" முழுதாக இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தான் ஆரவ்....



"அத நீ சொல்லாத தாத்தா" அவள் அழைப்பில் மீண்டும் சிரித்தாள் அவள்....



"அண்ணி.... ஆரு பாவம்...."



"பாருடி சப்போர்டுக்கு ஆள் இருக்கு"



"ஆரா....நீ எனக்கு தானே சப்போர்ட்?"



"நோ....ஆரா நீ எனக்கு தானே சப்போர்ட்?" இருவரையும் மாறி மாறி பார்த்தவள் முகத்தில் தவழ்ந்த புன்னகையுடன் நின்றிருந்த அண்ணனையும் பார்த்தாள்....



பழைய கசடுகள் மறைந்து நிம்மதியானது அவளுள்ளம்!!!



"நான் அண்ணிக்கு தான் சப்போர்ட்...."



"தேவயா உனக்கு இது...." வாய் பொத்தி சிரிக்க மண்டையில் கொட்டினான்.



"வலிக்குதுடா எரும லூசு பைத்தியம்..." கோபமாய் திட்டியவள் கடைசியில்



"தேவ்...." என சிணுங்கினாள்....



"போ போயி சொல்லு உன் அப்பாடாக்கர் புருஷன் கிட்ட...."



"போடா கிழவா.... ஆரா நீ வா நாம பேசலாம்...." அவள் திரும்பி பேசத் துவங்க சரிப்புடன் பார்த்த ஆரவ்வின் பார்வைக்கு மாற்றமாக அவளவன் பார்வை பெண்ணவளை காதலாய் வருடிக் கொண்டிருந்தது.



***



பால்கனியில் நின்று கொண்டு நிலவை வெறித்திருந்தான் கதிர்....



ஏதேதோ பழைய ஞாபங்களுக்குள் மின்னலாய் மூவரின் முகம்....



"ப்பா....அங்கிள் கிட்ட போலாமாபா...." மூக்கிலிருந்த ஆக்சிஜன் மாஸ்கை எடுத்து விட்டு ஏக்கமாய் கேட்ட மகளின் ஆசையை கடைசி வரை நிறைவேற்றாமலே போய்விட்டானே....



"பா....ப்ரீத்தி ட்ரஸ்... அழகா இருக்கா அங்கிள் தான் தந்தாங்க" தன் முன் சட்டையை விரித்து நின்ற குழந்தையை தொடப் போக காற்றோடு கலைந்தது அந்த உருவம்!!!



***



"எக்ஸ்கியூஸ் மீ...." அனுமதி வேண்டி விட்டு டாக்டர் அர்ஜுன் அறைக்குள் நுழைந்தான் ரிஷி.



"கம் கம்....ஹேவ் அ ஸீட் மிஸ்டர். மாறன்"



"தேங்க் யூ டாக்டர்"



"இப்போ ஹேப்பியா மாறா?"



"எஸ் டாக்டர்...."



"எனிதிங் எல்ஸ்?"



"எஸ்....ஆராவ சென்னைக்கே அழச்சிட்டு போகலாம்னு இருக்கேன்"



"....."



"ஒய் டாக்டர்....எனி இஷ்யூஸ்?"



"எஸ் மிஸ்டர். மாறன்..ஆராதனா மரணிச்சதா இருக்க ரிப்போர்ட் அவங்களுக்கு எதிரா இருக்கு.... ராஜ்கோட் போலிஸ் கிட்ட பேசி நாம சென்னை அழச்சிட்டு போனாலும் அவங்க மேல கேஸ் பைல் பண்ணுவாங்க....அதுக்கான ப்ரொஸீஜர்ஸ் எல்லாம் பாத்துட்டு அவங்கள அழச்சிட்டு போறது தான் சேஃப்.... வாட் டு டூ மாறன்?"



"ஐல் ஹெண்ட்ல் திஸ்....நான் இப்போ மதன் கிட்ட பேசி அங்க வர்றதுக்கான ஏற்பாட பண்ணிட்றேன்.... அதுக்கப்பறமா என்ன பண்ணலாம்னு சென்னை போய் யோசிக்கலாம் டாக்டர்...."



"ஓகே தென்..." தன் புருவத்தை நீவியவன் விடை பெற்று வெளியே வந்து மதனுக்கு அழைத்து அதற்கான வேலைகளை பார்க்க சொல்லி விட்டு நிமிர முன்னால் நின்றிருந்தாள் அவன் அருமை பத்தினி.



"என்ன அஷு?"



"வந்து தேவ்...." அவள் தடுமாறவே அவன் கண்கள் கூர்மையாய் அவளை துளைத்தது.



"வாட்ஸ் யூர் ப்ராப்ளம்?"



"ஜீவா....ஜீவாவ மன்னிக்கலாமே தெவ்....அவங்க மேல எந்த தப்புமே இல்லல்ல?"



"வாட் த ஹெல்.... இப்பிடி பேச சொல்லி அனுப்புனானா அவன்?"



"நோ தேவ்....நானாக தான் வந்தேன்"



"...."



"தேவ்.... கொஞ்சம் யோசிச்சு பாருங்க... சொந்தம்னு சொல்லிக்க நீங்க மட்டும் தானே இருக்கீங்க... அவங்க மேல தப்பு இல்ல தேவ்.... தேவகி அத்த பண்ண தப்புக்கு இவங்களுக்கு ஏன் தண்டனை... அவங்களுக்கான தண்டனய தான் ஜீவா கொடுத்துட்டாங்களே.... அவங்க தன்னையே தனிமை படுத்தி கிட்டு அவங்களே தண்டனையும் அனுபவிக்கிறாங்க... மது கூட சரி பேசறது இல்ல"



"வாட்....மது யாரு?"



"ம...மதுமிதா தான் ஜீவாவோட தங்கச்சி....."



"ட்ராமா...ரைட்....?"



"நோ தேவ்.... ஜீவாவுக்கு மது லண்டன்ல இருந்து வந்த விஷயமே தெரியாது"



"இத நம்பனுங்குறியா?"



"இட்ஸ் ட்ரூ தெவ்.... ப்ளீவ் மீ... தப்பை உணர்ந்து மன்னிப்பு கேக்க தானே வந்திருக்காங்க ரெண்டு பேரும்.... ஒரு சான்ஸ் குடுக்கலாமே தேவ்"



"....."



"ப்ளீஸ் ஒரு தடவ அவங்க பக்கம் நின்னு யோசிச்சு பாருங்க...."



"நீ ஏன் அவனுக்கு சப்போர்ட் பண்ற?"



"...."



"சொல்லுங்க மிஸ். அஷ்வினி"



"பிகாஸ்...."



"ம்....பிகாஸ்...."



"ஹீ இஸ் மை ஃப்ரண்ட்"



"எப்போதுல இருந்து ஃப்ரண்ட்?"



"இப்போ அதுவா முக்கியம்?"



"எஸ்... ஒரு வேல அவங்களும் பணத்துக்காக வந்திருக்காக தான் வந்திருந்தாங்கன்னா....?"



"டெபனிட்லி நாட் தேவ்...."



"ரீஸன்?"



"உலகத்துல ஹைலி பேய்ட் (paid) ஜாப்ஸ்ல மனநிலை மருத்துவமும் ஒன்னு"



"வாட் டு யூ மீன்?"



"ஜீவா இஸ் எ சைக்காட்ரிஸ்ட்... அவருக்கு எதுக்காக பணம்?"



"...."



"ப்ளீஸ் தேவ் ஒரே ஒரு தடவ சான்ஸ் கொடுங்க"



"ஓகே..."



"நிஜமாவா....?" கண்கள் மின்ன சட்டென அணைத்துக் கொண்டவளை பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைகள் வளைத்து அணைத்தன.



"அப்போ ஜீவாவயும் நம்ம கூட அழச்சிட்டு போலாம்"



"...."



"ஏன் தேவ்....?" முகம் வாட அவன் நெஞ்சில் நாடியை குற்றி நிமிர்ந்து பார்த்தாள்.



"அழச்சிட்டு போலாமா?"



"ம்...."



"ஐஐஐஐ....தேங்க் யூ தேவ்..." எம்பி கண்ணத்தில் முத்தமிட்டவள் மின்னலென மறைந்திருந்தாள்.



***



"ஜீவா...." தனக்கு பின்னால் கேட்ட ஹஸ்கி வாய்ஸில் தன் வேலையை விட்டு விட்டு நிமிர்ந்தவன் அஷ்வினி நிற்பது கண்டு எழுதிக் கொண்டிருந்ததை மூடி வைத்து விட்டு உள்ளே வருமாறு சைகை காட்டினான்.



"வாங்க மேடம்.... ஆளையே பிடிக்க முடில"



"அத நாங்க சொல்லணும் மிஸ்டர்.ஆனந்த்"



"ஏன் ஜீவாக்கு என்னாச்சு?"



"அது ரொம்ம்ம்ம்...."



"நெக்ஸ்ட சொல்லுமா"



"அதூ...ரொம்ம்ப ஷார்ட்டா இருக்கு"



"அடிப்பாவி...."



"ஹி...."



"சரி என்ன இந்த பக்கம்?"



"உன் அத்தான் பொத்தான் உன்ன மன்னிக்கிறன்னு சொல்லி இருக்காரு"



"மரியாத தேயுது..."



"அதெல்லாம் அப்பிடி தான்டா ஜீவா"



"என்னாது...டா வா?"



"ஆமாடா...."



"நீ நடத்துமா....உன் கிட்ட ஜெயிக்க முடியுமா?"



"ஓஹ் தேங்க் யூ... தேங்க் யூ..."



"அடிங்க...." அவன் கையோங்க கலகலத்து சிரித்தவளை பார்த்து தானுமே சிரித்து விட்டான்.



"மேட்டர் என்னன்னா மிஸ்டர்.ஆனந்த்...."



"சொல்லுங்க மிஸஸ். மாறன்"



"நீங்களும் எங்க கூட வர்றீங்க.. உங்க அத்தான் கிட்ட நான் பேசிட்டேன்"



"என்ன சொன்னாங்க?"



"உங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாமேன்னு கேட்டேன்..."



"ம்...."



"ஓகேன்னு சொல்லி இருக்காங்க ஜீவா"



"...."



"ஏதாவது சொல்லுவாங்கன்னு பயமா இருக்கா?"



"இல்லமா....முதல்ல அவரு கிட்ட மன்னிப்பு கேக்கணும்....ஐ ஃபீல் கில்டி"



"ம்...."



"சரி அத விடு பாத்துக்கலாம்.... வாட் அபவ்ட் ஆரா?"



"ஷீ இஸ் ஆல் ரைட்..."



"ம்...."



"ஏன் ஜீவா உண்மையிலேயே நீங்க ஆராவ லவ் பண்ணலல்ல?"



"ஆமா....ச்ச நோ..."



"அப்போ ஓகே..."



"என்ன ஓகே...?"



"இல்ல....நீங்க லவ் பண்ணா உங்களுக்கே கட்டி கொடுக்கலாம்னு இருந்தேன்.... நீங்க தான் தேவயில்லன்னு சொல்லிட்டீங்கல்ல..... அதனால..."



"அ...அ...அதனால?"



"அதனால நல்ல பையனா பாத்து கட்டி வெக்..."



"இனஃப்.... ப்ளீஸ் அஷ்வி.... எஸ் ஐ லவ் ஹேர்...." அவன் கண்களை இறுக்க மூடிக் கொள்ள வாய் பொத்தி சிரித்தாள் பெண்.



"இத முதல்லயே சொல்லி இருந்தா இவ்வளவு நீளமா பேச அவஷியமிருந்திருக்காதுல?"



"சாரி...."



"என்ன பண்றதா இருக்கீங்க?"



"அண்ணா ஏத்துக்குவாங்களான்னு தெரில அஷ்வி.... ஸோ நா இத எப்போவும் அவகிட்ட சொல்ல போறதில்ல"



"வாட்....ஆர் யூ மேட்?"



"நோமா....இட்ஸ் நாட் ஈஸி.... அண்ணா மன்னிச்சாலும் அவ மனச நாம பாக்கனும்ல?"



"அதுக்காக வேற ஒருத்தருக்கு தூக்கி கொடுத்துடுவீங்களா நீங்க.... தேவ் கிட்ட பேசி முதல்ல புரிய வைங்க.... அப்பறம் அவங்களே பாத்துப்பாங்க"



"நோ...."



"ப்ச்....ஏன்?"



"அவ மனசு வீக்கா இருக்கு அஷ்விமா... அவ இருக்க சிச்சுவேஷன்ல எந்த ஆம்பளயும் நம்ப முடியாது...."



"ஸோ....?"



"ஸோ.... முடிவெடுக்க வேண்டியது அவ தான்"



"அப்போ நீங்க கை கட்டி வேடிக்க பாக்க போறிங்க....அப்பிடி தானே.... வாட்ஸ் ராங் வித் யூ ஜீவா.... உங்க லவ்வுக்காக நீங்களே போராடலன்னா....?"



"அஷ்வி...."



"சரி....விடுங்க பாத்துக்கலாம்.... ரெடியா இருங்க... மார்னிங் மூணு மணிக்கு ப்ளைட்...." அவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்று விட தலையை தாங்கிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான் அவன்....



***



மறுநாள் இரவு எட்டு மணி....



வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் தான் ஹப்பாடாவென இருந்தது அனைவருக்கும்....



ஆராதனாவை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு போய் அறையில் விட்டவன் போர்வையை போர்த்தி நெற்றியில் இதழ் பதித்து விலக எத்தனிக்க ரிஷியின் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டாள் அவள்....



"என்னமா...?" தலையை தடவி தலை மாட்டிலேயே அமர்ந்து விட்டான்.



"பயமா இருக்குணா... கூடவே இரு"



"சரிமா நீ தூங்கு நா பக்கத்துலயே தான் இருப்பேன்"



"ம்...." அவள் கண் மூட தலையை தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.



.....



"இந்த தேவ் எங்க இன்னும் வர்ல...." புலம்பிய படி வெளியே வந்தவள் ஆராதனாவின் அறையில் விளக்கு எரிவதை கண்டு உள்ளே நுழைந்தாள்.



அவள் பேச வாயெடுக்கும் முன்னரே "உஷ்..." என வாயில் விரல் வைத்து தடுக்க கப்பென மூடியவள் ஹஸ்கி குரலில் பேசினாள்.



"தேவ்..." என்றவளிடம் சைகையால் என்னவென கேட்டு வைத்தான்.



"தூங்கல?"



"நீ போய் படு நா இங்கேயே இருக்கேன்" வார்த்தைக்கு வலிக்குமோ என அவன் குரல் தனித்து பேச முகம் வாட திரும்பியவளை அருகில் வருமாறு அழைத்தான் கணவன்....



"இல்ல நீங்க இருங்க நா போறேன்...." அவனை பார்க்காமலேயே வந்து விட்டாள்.



.....



'ஏன் முகம் அப்பிடி இருந்துது....ஃபீல் பண்றாளா?' ஏதேதோ எண்ணங்கள் அலைமோதினாலும் தங்கையை விட்டு செல்ல முடியாத நிலை....



திரும்பி தங்கை முகத்தை பார்த்தான்....



நிர்மலமாக உறங்கிக் கொண்டிருந்தாள்!!!



புன்னகைத்தவனுக்கு அப்போது தான் அது உறைத்தது.



'இவ உயிரோட இருக்கான்னா.... நா பண்ண கொலைக்கு என்ன அர்த்தம்...தப்பு பண்ணவன் தண்டன அனுபவிச்சு தானே ஆகனும்....'



திடீரென இறுகியது அவன் முகம்!!!



***



காலை....



குடும்பம் மொத்தமுமே அவளை சுற்றி இருந்தது.



குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்க யாதவ் மட்டும் தாயின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான்.



"மாம்...."



"சொல்லு கண்ணா"



"பசிக்குதுன்னு சொல்லிட்டே இருக்கேன்.... நீங்க என்ன பண்றீங்க?" வழமைக்கு மாற்றமாக அவன் குரல் உயர மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த தந்தையின் கண்டிப்பு பார்வையில் தலையை தொங்கப் போட்டு "சாரி மாம்" என்றான் சிறு குரலில்....



அவன் குரலில் பேதத்தை உணர்ந்து அவனை தூக்கி டைனிங் டேபிள் மேல் வைத்தவள்



"ஏன் யாது...எதுக்கு சாரி...?" என்றாள் நாடி நிமிர்த்தி....



அதற்குள் அவனும் பின்னால் வந்து நிற்க



"நா கத்தி பேசிட்டேன்" என்றான் உணர்ந்து....



"இட்ஸ் ஓகேடா.... அதுக்கென்ன?" அவன் பதில் சொல்லாமல் தந்தையை பார்க்க அவன் பார்வை போன திசையில் தானும் பார்த்தவள் விடயத்தை யூகித்து திரும்பினாள்.



"தெவ்.... குழந்தை கிட்ட இப்பிடி பிஹேவ் பண்ணாதிங்க"



"நோ மாம்.... இட்ஸ் மை ஃபால்ட்"



"குட்...." என்றவன் மகனை கைகளில் தூக்கிக் கொள்ள அவனையே பார்த்திருந்தவளை பாராமலே சென்று விட்டான்.



அவன் முகத்திலிருந்த இறுக்கம் புதிதாக தெரிய மனதுக்குள் ஏதோ நெருடியது!!!



.....



கொஞ்சம் தாமதமாக வீட்டுக்குள் நுழைந்தான் அஜய்...



நடுவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவள்



"வா அஜய்...." எனும் அண்ணியின் அழைப்பில் வாசல் புறம் நோக்கினாள்.



"இவ தான் ஆராதனா...." அவனை இழுத்துக் கொண்டு வந்தவள் கை காட்டி அறிமுகம் செய்ய ஷாக்கடித்தது போல் அதிர்ந்த அவன் முகத்துக்கு மாற்றமாக "சார்...." என முணுமுணுத்தது ஆராவின் உதடுகள்!!!



தொடரும்.......



28-05-2021.
 

Rishi24

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இராமநாதபுரம்....



"ரித்வி....ரெடி.... பால் (ball) போடு..." கையில் கிரிக்கெட் பெட்டை பிடித்துக் கொண்டு கத்தினான் யாதவ்.



"ம்...." ஓடி வந்து கை சுழற்றி பந்தை வீச இவன் அடித்து விட்டதில் எதிர் வீட்டு ஜன்னல் உடைந்து சிதறியது.



"அச்சச்சோ....யாது வாடா...." மட்டையை தூக்கி வீசியவன் யாதவ்வையும் இழுத்துக் கொண்டு ஓட வாசலில் இடுப்பில் கை குற்றி நின்றிருந்தாள் வர்ஷினி....



(அபி பொண்ணு )



"ரித்வி....வர்ஷ் நிக்கிறா...."



"எங்கடா...."



"வாசல் பக்கம் பாரு"



"என்ன பண்றது....?"



"கண்டுக்காம உள்ள போலாம்...."



"ம்...." ஆமோதித்தவன் அவளை கடந்து செல்ல



"அர்ஜு அத்தாஆஆன்" கத்தினாள் வீடே அதிர....



"போச்சு...." யாதவ் தலையில் கை வைக்க அவளை முறைத்தான் ரித்விக்.



அதற்குள் எதிர் வீட்டு பெண்மனியும் உள்ளே இருந்து அனைவரும் வந்து விட்டிருக்க தலையை தொங்கப் போட்டு மாட்டி விட்டவளை மனதிற்குள் அர்ச்சித்தபடி நின்றிருந்தனர் இருவரும்....



"ஏன் வர்ஷுமா.... ஏன் கத்தினீங்க?" அவள் பதில் சொல்லு முன் அந்த பெண்மனி துவங்கி விட்டார்.



"இதோட பத்தாவது கண்ணாடி மாத்தியாச்சு.... ஒரு நாளைக்கு மூணு தடவ ஒடச்சி விட்றான் இந்த பையன்..."



"சாரிமா....நாங்க பணம் கொடுத்துட்றோம்.... மன்னிச்சிடுங்க...." அவரை சமாதானப்படுத்தி பணத்தை கொடுத்து விட்டு இருவர் புறம் திரும்பினாள் ரித்திகா....



அனைவரும் அங்கே வந்து விட்டிருக்க வீடே கலை கட்டியிருந்தது.



"ரித்விக்...."



"சாரி மா....சாரி ரித்துமா" இருவருமே தலை குனிந்து முணுமுணுக்க மண்டியிட்டு அமர்ந்தாள் பெண்...



"அதான் அந்த பக்கம் ப்ளே கிரவுண்ட் இருக்குல?"



"யாது வர முடியாதுன்னு சொன்னான்...."



"ஏன்டா வர மாட்டேன்னு சொன்ன?"



"மாம் அவங்க இல்லாத நேரம் போக வேணாம்னு சொல்லி இருக்காங்க ரித்துமா"



"சரியான அம்மா புள்ள....சரி வாங்க ரெண்டு பேரும்..." அவள் உள்ளே செல்ல பழிப்புக் காட்டிய வர்ஷினியை முறைத்தனர் இருவரும்....



***



ஹாஸ்பிடல்.....



"தேவ்...தேவ்..."



"என்னடி?"



"இறக்கி விடுங்க என்ன"



"ஏன்?"



"ஆரா பாத்தா என்ன நினைப்பா.... இறக்கி விடுங்க தேவ்"



"முடியாது"



"ப்ளீஸ் தேவ்....நீங்க என்ன சொன்னாலும் பண்றேன்"



"டீல் ஓகே"



"டீல அப்பறமா பாத்துக்கலாம் இறக்கி விடுங்க முதல்ல...."



"நான் பிஸ்னஸ் மேன்மா.... கட் அண்ட் ரைட்"



"சரி சொல்லுங்க"



"இல்ல அப்பறமா சொல்றேன்"



"ஆஆஆஆ....விடுங்க தேவ்" வாசல் வரவே துள்ளி இறங்கினாள்.



"பாத்துடி...."



"எங்களுக்கு தெரியும்...நீங்க வாங்க...." நாக்கை துறுத்தி அழகு காட்டியவள் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள்.



.....



"ஹாய்...." உற்சாகமாக சொல்லிக் கொண்டே வலது பக்கம் இருந்த இருக்கையில் அமர மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக் கொண்டு நின்றிருந்தான் அவளவன்....



"அ...அண்ணி..."



"எஸ்...."



"....."



"நானே தான் அறிமுகப்படுத்திகனுமா.... டேய் தடியா கொஞ்சம் என்ன பத்தி எடுத்து விடு" தலை குனிந்திருந்த ஆரவ்வை வம்பிலுக்க விலுக்கென நிமிர்ந்தவன் கண்கள் ஏகத்துக்கும் கலங்கி இருந்தது.



"சரி சரி....நீ அழற.... உன்னால சொல்ல முடியாது அதானே... அதுக்கு ஏன்டா முறைக்குற?"



"...."



"நீ சொல்லலன்னா போ.... இவனுக்கு நா நல்லா பேசறேன்னு பொறாமை.... நீ வாமா நான் பேசறேன்" உண்மையிலேயே அவன் முறைக்க சிரித்தனர் ரிஷியும் ஆராவும்....



"நான்....ச்சே இல்ல என் பேரு அஷ்வினி ரிக்ஷிதா....என் புருஷன் பேரு...."



"என்னண்ணி மறந்துட்டீங்களா?"



"ம்...லைட்டா....ஆமா உன் அண்ணன் பேரு என்ன?"



"ரிஷிகுமார்"



"ஹாங்....அதே அதே தான்.....என் புருஷன் பேரும் அதே தான்...." ரிஷி முறைக்க பக்கென சிரித்தான் ஆரவ்.



"அட....தாத்தா உனக்கு சிரிக்க கூட வருமா?"



"ராட்சஸி...."



"தேங்க் யூ தாத்தா"



"தாத்தாவா....?" கலகலவென சிரித்த தங்கையை ஆசையாய் பார்த்தனர் இருவரும்....



இருவர் கண்களுமே கலங்கி இருந்தது.



"ம்....ஆமா ஆரா.... இவனுக்கு தாத்தா வயசாகுது.... என் தங்கச்சிய லவ் பண்ணான்.... தாத்தாக்கு தர முடியாதுன்னு சொன்னேன் யூத் கெட்டப் போட்டிருக்கான்" அவள் சிரியாமல் சொல்ல சரித்தனர் மூவரும்....



"கொஞ்ச நேரம் வாய மூடிகிட்டு இருடி ராட்சஸி" முழுதாக இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தான் ஆரவ்....



"அத நீ சொல்லாத தாத்தா" அவள் அழைப்பில் மீண்டும் சிரித்தாள் அவள்....



"அண்ணி.... ஆரு பாவம்...."



"பாருடி சப்போர்டுக்கு ஆள் இருக்கு"



"ஆரா....நீ எனக்கு தானே சப்போர்ட்?"



"நோ....ஆரா நீ எனக்கு தானே சப்போர்ட்?" இருவரையும் மாறி மாறி பார்த்தவள் முகத்தில் தவழ்ந்த புன்னகையுடன் நின்றிருந்த அண்ணனையும் பார்த்தாள்....



பழைய கசடுகள் மறைந்து நிம்மதியானது அவளுள்ளம்!!!



"நான் அண்ணிக்கு தான் சப்போர்ட்...."



"தேவயா உனக்கு இது...." வாய் பொத்தி சிரிக்க மண்டையில் கொட்டினான்.



"வலிக்குதுடா எரும லூசு பைத்தியம்..." கோபமாய் திட்டியவள் கடைசியில்



"தேவ்...." என சிணுங்கினாள்....



"போ போயி சொல்லு உன் அப்பாடாக்கர் புருஷன் கிட்ட...."



"போடா கிழவா.... ஆரா நீ வா நாம பேசலாம்...." அவள் திரும்பி பேசத் துவங்க சரிப்புடன் பார்த்த ஆரவ்வின் பார்வைக்கு மாற்றமாக அவளவன் பார்வை பெண்ணவளை காதலாய் வருடிக் கொண்டிருந்தது.



***



பால்கனியில் நின்று கொண்டு நிலவை வெறித்திருந்தான் கதிர்....



ஏதேதோ பழைய ஞாபங்களுக்குள் மின்னலாய் மூவரின் முகம்....



"ப்பா....அங்கிள் கிட்ட போலாமாபா...." மூக்கிலிருந்த ஆக்சிஜன் மாஸ்கை எடுத்து விட்டு ஏக்கமாய் கேட்ட மகளின் ஆசையை கடைசி வரை நிறைவேற்றாமலே போய்விட்டானே....



"பா....ப்ரீத்தி ட்ரஸ்... அழகா இருக்கா அங்கிள் தான் தந்தாங்க" தன் முன் சட்டையை விரித்து நின்ற குழந்தையை தொடப் போக காற்றோடு கலைந்தது அந்த உருவம்!!!



***



"எக்ஸ்கியூஸ் மீ...." அனுமதி வேண்டி விட்டு டாக்டர் அர்ஜுன் அறைக்குள் நுழைந்தான் ரிஷி.



"கம் கம்....ஹேவ் அ ஸீட் மிஸ்டர். மாறன்"



"தேங்க் யூ டாக்டர்"



"இப்போ ஹேப்பியா மாறா?"



"எஸ் டாக்டர்...."



"எனிதிங் எல்ஸ்?"



"எஸ்....ஆராவ சென்னைக்கே அழச்சிட்டு போகலாம்னு இருக்கேன்"



"....."



"ஒய் டாக்டர்....எனி இஷ்யூஸ்?"



"எஸ் மிஸ்டர். மாறன்..ஆராதனா மரணிச்சதா இருக்க ரிப்போர்ட் அவங்களுக்கு எதிரா இருக்கு.... ராஜ்கோட் போலிஸ் கிட்ட பேசி நாம சென்னை அழச்சிட்டு போனாலும் அவங்க மேல கேஸ் பைல் பண்ணுவாங்க....அதுக்கான ப்ரொஸீஜர்ஸ் எல்லாம் பாத்துட்டு அவங்கள அழச்சிட்டு போறது தான் சேஃப்.... வாட் டு டூ மாறன்?"



"ஐல் ஹெண்ட்ல் திஸ்....நான் இப்போ மதன் கிட்ட பேசி அங்க வர்றதுக்கான ஏற்பாட பண்ணிட்றேன்.... அதுக்கப்பறமா என்ன பண்ணலாம்னு சென்னை போய் யோசிக்கலாம் டாக்டர்...."



"ஓகே தென்..." தன் புருவத்தை நீவியவன் விடை பெற்று வெளியே வந்து மதனுக்கு அழைத்து அதற்கான வேலைகளை பார்க்க சொல்லி விட்டு நிமிர முன்னால் நின்றிருந்தாள் அவன் அருமை பத்தினி.



"என்ன அஷு?"



"வந்து தேவ்...." அவள் தடுமாறவே அவன் கண்கள் கூர்மையாய் அவளை துளைத்தது.



"வாட்ஸ் யூர் ப்ராப்ளம்?"



"ஜீவா....ஜீவாவ மன்னிக்கலாமே தெவ்....அவங்க மேல எந்த தப்புமே இல்லல்ல?"



"வாட் த ஹெல்.... இப்பிடி பேச சொல்லி அனுப்புனானா அவன்?"



"நோ தேவ்....நானாக தான் வந்தேன்"



"...."



"தேவ்.... கொஞ்சம் யோசிச்சு பாருங்க... சொந்தம்னு சொல்லிக்க நீங்க மட்டும் தானே இருக்கீங்க... அவங்க மேல தப்பு இல்ல தேவ்.... தேவகி அத்த பண்ண தப்புக்கு இவங்களுக்கு ஏன் தண்டனை... அவங்களுக்கான தண்டனய தான் ஜீவா கொடுத்துட்டாங்களே.... அவங்க தன்னையே தனிமை படுத்தி கிட்டு அவங்களே தண்டனையும் அனுபவிக்கிறாங்க... மது கூட சரி பேசறது இல்ல"



"வாட்....மது யாரு?"



"ம...மதுமிதா தான் ஜீவாவோட தங்கச்சி....."



"ட்ராமா...ரைட்....?"



"நோ தேவ்.... ஜீவாவுக்கு மது லண்டன்ல இருந்து வந்த விஷயமே தெரியாது"



"இத நம்பனுங்குறியா?"



"இட்ஸ் ட்ரூ தெவ்.... ப்ளீவ் மீ... தப்பை உணர்ந்து மன்னிப்பு கேக்க தானே வந்திருக்காங்க ரெண்டு பேரும்.... ஒரு சான்ஸ் குடுக்கலாமே தேவ்"



"....."



"ப்ளீஸ் ஒரு தடவ அவங்க பக்கம் நின்னு யோசிச்சு பாருங்க...."



"நீ ஏன் அவனுக்கு சப்போர்ட் பண்ற?"



"...."



"சொல்லுங்க மிஸ். அஷ்வினி"



"பிகாஸ்...."



"ம்....பிகாஸ்...."



"ஹீ இஸ் மை ஃப்ரண்ட்"



"எப்போதுல இருந்து ஃப்ரண்ட்?"



"இப்போ அதுவா முக்கியம்?"



"எஸ்... ஒரு வேல அவங்களும் பணத்துக்காக வந்திருக்காக தான் வந்திருந்தாங்கன்னா....?"



"டெபனிட்லி நாட் தேவ்...."



"ரீஸன்?"



"உலகத்துல ஹைலி பேய்ட் (paid) ஜாப்ஸ்ல மனநிலை மருத்துவமும் ஒன்னு"



"வாட் டு யூ மீன்?"



"ஜீவா இஸ் எ சைக்காட்ரிஸ்ட்... அவருக்கு எதுக்காக பணம்?"



"...."



"ப்ளீஸ் தேவ் ஒரே ஒரு தடவ சான்ஸ் கொடுங்க"



"ஓகே..."



"நிஜமாவா....?" கண்கள் மின்ன சட்டென அணைத்துக் கொண்டவளை பேண்ட் பாக்கெட்டில் இருந்த கைகள் வளைத்து அணைத்தன.



"அப்போ ஜீவாவயும் நம்ம கூட அழச்சிட்டு போலாம்"



"...."



"ஏன் தேவ்....?" முகம் வாட அவன் நெஞ்சில் நாடியை குற்றி நிமிர்ந்து பார்த்தாள்.



"அழச்சிட்டு போலாமா?"



"ம்...."



"ஐஐஐஐ....தேங்க் யூ தேவ்..." எம்பி கண்ணத்தில் முத்தமிட்டவள் மின்னலென மறைந்திருந்தாள்.



***



"ஜீவா...." தனக்கு பின்னால் கேட்ட ஹஸ்கி வாய்ஸில் தன் வேலையை விட்டு விட்டு நிமிர்ந்தவன் அஷ்வினி நிற்பது கண்டு எழுதிக் கொண்டிருந்ததை மூடி வைத்து விட்டு உள்ளே வருமாறு சைகை காட்டினான்.



"வாங்க மேடம்.... ஆளையே பிடிக்க முடில"



"அத நாங்க சொல்லணும் மிஸ்டர்.ஆனந்த்"



"ஏன் ஜீவாக்கு என்னாச்சு?"



"அது ரொம்ம்ம்ம்...."



"நெக்ஸ்ட சொல்லுமா"



"அதூ...ரொம்ம்ப ஷார்ட்டா இருக்கு"



"அடிப்பாவி...."



"ஹி...."



"சரி என்ன இந்த பக்கம்?"



"உன் அத்தான் பொத்தான் உன்ன மன்னிக்கிறன்னு சொல்லி இருக்காரு"



"மரியாத தேயுது..."



"அதெல்லாம் அப்பிடி தான்டா ஜீவா"



"என்னாது...டா வா?"



"ஆமாடா...."



"நீ நடத்துமா....உன் கிட்ட ஜெயிக்க முடியுமா?"



"ஓஹ் தேங்க் யூ... தேங்க் யூ..."



"அடிங்க...." அவன் கையோங்க கலகலத்து சிரித்தவளை பார்த்து தானுமே சிரித்து விட்டான்.



"மேட்டர் என்னன்னா மிஸ்டர்.ஆனந்த்...."



"சொல்லுங்க மிஸஸ். மாறன்"



"நீங்களும் எங்க கூட வர்றீங்க.. உங்க அத்தான் கிட்ட நான் பேசிட்டேன்"



"என்ன சொன்னாங்க?"



"உங்களுக்கு ஒரு சான்ஸ் கொடுக்கலாமேன்னு கேட்டேன்..."



"ம்...."



"ஓகேன்னு சொல்லி இருக்காங்க ஜீவா"



"...."



"ஏதாவது சொல்லுவாங்கன்னு பயமா இருக்கா?"



"இல்லமா....முதல்ல அவரு கிட்ட மன்னிப்பு கேக்கணும்....ஐ ஃபீல் கில்டி"



"ம்...."



"சரி அத விடு பாத்துக்கலாம்.... வாட் அபவ்ட் ஆரா?"



"ஷீ இஸ் ஆல் ரைட்..."



"ம்...."



"ஏன் ஜீவா உண்மையிலேயே நீங்க ஆராவ லவ் பண்ணலல்ல?"



"ஆமா....ச்ச நோ..."



"அப்போ ஓகே..."



"என்ன ஓகே...?"



"இல்ல....நீங்க லவ் பண்ணா உங்களுக்கே கட்டி கொடுக்கலாம்னு இருந்தேன்.... நீங்க தான் தேவயில்லன்னு சொல்லிட்டீங்கல்ல..... அதனால..."



"அ...அ...அதனால?"



"அதனால நல்ல பையனா பாத்து கட்டி வெக்..."



"இனஃப்.... ப்ளீஸ் அஷ்வி.... எஸ் ஐ லவ் ஹேர்...." அவன் கண்களை இறுக்க மூடிக் கொள்ள வாய் பொத்தி சிரித்தாள் பெண்.



"இத முதல்லயே சொல்லி இருந்தா இவ்வளவு நீளமா பேச அவஷியமிருந்திருக்காதுல?"



"சாரி...."



"என்ன பண்றதா இருக்கீங்க?"



"அண்ணா ஏத்துக்குவாங்களான்னு தெரில அஷ்வி.... ஸோ நா இத எப்போவும் அவகிட்ட சொல்ல போறதில்ல"



"வாட்....ஆர் யூ மேட்?"



"நோமா....இட்ஸ் நாட் ஈஸி.... அண்ணா மன்னிச்சாலும் அவ மனச நாம பாக்கனும்ல?"



"அதுக்காக வேற ஒருத்தருக்கு தூக்கி கொடுத்துடுவீங்களா நீங்க.... தேவ் கிட்ட பேசி முதல்ல புரிய வைங்க.... அப்பறம் அவங்களே பாத்துப்பாங்க"



"நோ...."



"ப்ச்....ஏன்?"



"அவ மனசு வீக்கா இருக்கு அஷ்விமா... அவ இருக்க சிச்சுவேஷன்ல எந்த ஆம்பளயும் நம்ப முடியாது...."



"ஸோ....?"



"ஸோ.... முடிவெடுக்க வேண்டியது அவ தான்"



"அப்போ நீங்க கை கட்டி வேடிக்க பாக்க போறிங்க....அப்பிடி தானே.... வாட்ஸ் ராங் வித் யூ ஜீவா.... உங்க லவ்வுக்காக நீங்களே போராடலன்னா....?"



"அஷ்வி...."



"சரி....விடுங்க பாத்துக்கலாம்.... ரெடியா இருங்க... மார்னிங் மூணு மணிக்கு ப்ளைட்...." அவள் எதுவும் பேசாமல் எழுந்து சென்று விட தலையை தாங்கிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான் அவன்....



***



மறுநாள் இரவு எட்டு மணி....



வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் தான் ஹப்பாடாவென இருந்தது அனைவருக்கும்....



ஆராதனாவை கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு போய் அறையில் விட்டவன் போர்வையை போர்த்தி நெற்றியில் இதழ் பதித்து விலக எத்தனிக்க ரிஷியின் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டாள் அவள்....



"என்னமா...?" தலையை தடவி தலை மாட்டிலேயே அமர்ந்து விட்டான்.



"பயமா இருக்குணா... கூடவே இரு"



"சரிமா நீ தூங்கு நா பக்கத்துலயே தான் இருப்பேன்"



"ம்...." அவள் கண் மூட தலையை தடவிக் கொடுத்துக் கொண்டே இருந்தான்.



.....



"இந்த தேவ் எங்க இன்னும் வர்ல...." புலம்பிய படி வெளியே வந்தவள் ஆராதனாவின் அறையில் விளக்கு எரிவதை கண்டு உள்ளே நுழைந்தாள்.



அவள் பேச வாயெடுக்கும் முன்னரே "உஷ்..." என வாயில் விரல் வைத்து தடுக்க கப்பென மூடியவள் ஹஸ்கி குரலில் பேசினாள்.



"தேவ்..." என்றவளிடம் சைகையால் என்னவென கேட்டு வைத்தான்.



"தூங்கல?"



"நீ போய் படு நா இங்கேயே இருக்கேன்" வார்த்தைக்கு வலிக்குமோ என அவன் குரல் தனித்து பேச முகம் வாட திரும்பியவளை அருகில் வருமாறு அழைத்தான் கணவன்....



"இல்ல நீங்க இருங்க நா போறேன்...." அவனை பார்க்காமலேயே வந்து விட்டாள்.



.....



'ஏன் முகம் அப்பிடி இருந்துது....ஃபீல் பண்றாளா?' ஏதேதோ எண்ணங்கள் அலைமோதினாலும் தங்கையை விட்டு செல்ல முடியாத நிலை....



திரும்பி தங்கை முகத்தை பார்த்தான்....



நிர்மலமாக உறங்கிக் கொண்டிருந்தாள்!!!



புன்னகைத்தவனுக்கு அப்போது தான் அது உறைத்தது.



'இவ உயிரோட இருக்கான்னா.... நா பண்ண கொலைக்கு என்ன அர்த்தம்...தப்பு பண்ணவன் தண்டன அனுபவிச்சு தானே ஆகனும்....'



திடீரென இறுகியது அவன் முகம்!!!



***



காலை....



குடும்பம் மொத்தமுமே அவளை சுற்றி இருந்தது.



குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்க யாதவ் மட்டும் தாயின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான்.



"மாம்...."



"சொல்லு கண்ணா"



"பசிக்குதுன்னு சொல்லிட்டே இருக்கேன்.... நீங்க என்ன பண்றீங்க?" வழமைக்கு மாற்றமாக அவன் குரல் உயர மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த தந்தையின் கண்டிப்பு பார்வையில் தலையை தொங்கப் போட்டு "சாரி மாம்" என்றான் சிறு குரலில்....



அவன் குரலில் பேதத்தை உணர்ந்து அவனை தூக்கி டைனிங் டேபிள் மேல் வைத்தவள்



"ஏன் யாது...எதுக்கு சாரி...?" என்றாள் நாடி நிமிர்த்தி....



அதற்குள் அவனும் பின்னால் வந்து நிற்க



"நா கத்தி பேசிட்டேன்" என்றான் உணர்ந்து....



"இட்ஸ் ஓகேடா.... அதுக்கென்ன?" அவன் பதில் சொல்லாமல் தந்தையை பார்க்க அவன் பார்வை போன திசையில் தானும் பார்த்தவள் விடயத்தை யூகித்து திரும்பினாள்.



"தெவ்.... குழந்தை கிட்ட இப்பிடி பிஹேவ் பண்ணாதிங்க"



"நோ மாம்.... இட்ஸ் மை ஃபால்ட்"



"குட்...." என்றவன் மகனை கைகளில் தூக்கிக் கொள்ள அவனையே பார்த்திருந்தவளை பாராமலே சென்று விட்டான்.



அவன் முகத்திலிருந்த இறுக்கம் புதிதாக தெரிய மனதுக்குள் ஏதோ நெருடியது!!!



.....



கொஞ்சம் தாமதமாக வீட்டுக்குள் நுழைந்தான் அஜய்...



நடுவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவள்



"வா அஜய்...." எனும் அண்ணியின் அழைப்பில் வாசல் புறம் நோக்கினாள்.



"இவ தான் ஆராதனா...." அவனை இழுத்துக் கொண்டு வந்தவள் கை காட்டி அறிமுகம் செய்ய ஷாக்கடித்தது போல் அதிர்ந்த அவன் முகத்துக்கு மாற்றமாக "சார்...." என முணுமுணுத்தது ஆராவின் உதடுகள்!!!



தொடரும்.......



28-05-2021.
 
Status
Not open for further replies.
Top