தவம் : 3
இளங்கலை படிப்பை முடித்த நண்பர்கள் பட்டாளம் தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் வாழ்வின் அடுத்த நிலை சென்றனர். யஸ்வினிக்கு இன்னும் சில மாதங்களில் திருமணம். ஜாபர் தன் தந்தை தொழிலில் மாற்றம் கொண்டுவந்து அதில் வெற்றியும் பெற்று விட்டான். ஜூஹி, இர்பான், கெளதம், சுரேஷ் நால்வரும் தங்களது முதுகலை படிப்பில் இறுதி ஆண்டின் தேர்வு முடிக்க சில தினங்கள் இருக்க , இந்த இரண்டு வருடமும் பகுதி நேர வேலையாக five star டெகரேஷன் என்ற பெயரில் வீடு ஒன்றை வாடகை எடுத்து சிறு அளவில், விருந்து அலங்காரம், திருமண அலங்காரம் செய்கின்றனர்.
ஆதி மற்றும் அதிதி தம்பதி தற்சமயம் தங்களின் நூற்பு ஆலை ( faberic business ) விரிவுபடுத்தும் வேளையில் தீவிரமாக உள்ளனர். அருணா - ராமமூர்த்தி தம்பதி தங்களின் மகள் திருமணத்தை நடத்த எண்ணி அதற்கான வேளையை ரகசியமாக செய்து வருகின்றனர். அடுத்த வாரம் தங்களின் உறவில் நடக்கும் திருமணத்திற்கு, அவளை கோவை அழைத்து செல்ல உள்ளனர். திருமணத்தில் அணிய வேண்டிய உடைகளை எடுத்து வைத்து கொண்டிருந்தவர் கையில் தன் சகோதரனின் டைரி கிடைக்க அதனை எடுத்துக்கொண்டு அமர்ந்து விட்டார், அது கொடுக்க போகும் அதிர்ச்சி தெரியாமல்.
***************
நண்பர்கள் தங்களின் தொழில் கூடத்தில் அடுத்த 2 தினங்களில் நடக்க இருக்கும் திருமணத்திற்கு தேவையான அலங்கார பொருட்களை அடுக்கி வைத்து கொண்டு இருந்தனர் சுரேஷ் மற்றும் இர்பான்.
" மாலை, செண்டு டிசைன் செலெக்ஷன் முடிச்சதா? " - சுரேஷ்.
" இன்னைக்கு காலைல தான் பைனல் பண்ணாக, ஆர்டர் கொடுத்தாச்சு, அட்வான்ஸ் போகும் போது கொடுக்கணும். " இர்பான்.
" peyment எவ்ளோ செட்டில் பண்ணி இருகாங்க"
" ¾ பண்ணிட்டாங்க மீதி marriage முடிச்சதும் வாங்கணும் ".
" ஜீஹி, கவுதம் எப்போ வராங்க? "
" டிரஸ் trial பாக்க எடுத்துட்டு போய் இருக்கா , இன்னும் அறை மணிநேரத்தில் வந்துடுவா, கவுதம் அவகூடத்தான் போய் இருக்கான் "
" மதிய சாப்பாடுக்கு பொருள் வாங்கி குடுத்து இருக்கேன், நாளைக்கு எனக்கும், ஜீஹிகும் பைனல் எக்ஸாம் அது முடிச்சிட்டு அப்புறம் ஈவினிங் நேர பொண்ணு வீட்டுக்கு வந்துடுவோம் " . - இர்பான்.
" ஓகே, மிதி நாங்க பாத்துக்கிறோம். " - சுரேஷ்
அந்த நேரம் மண மக்களின் உடைகளை எடுத்து கொண்டு உள்ள நுழைந்தனர் மற்ற இருவரும்.
" ஹாய், பா டிரஸ் எல்லாம் ஓகே சொல்லிட்டாங்க, அங்கிள் arrangement's பத்தி கேட்டாக, சொல்லி இருக்கேன், நாளைக்கு ஈவினிங் திங்ஸ்லாம் வந்துடும்னு சொல்லி இருக்கேன். ஓகே வா? " - ஜீஹி
" நாங்க ரெண்டு பேரும் காலைல போடுறோம் நீங்க ஈவினிங் வந்துடுங்க " என சுரேஷ் கூற இர்பானை பார்த்து விட்டு யோசனை ஓடு சரி என தலை அசைக்க
அதை பார்த்து கெளதம் " என்ன? "
" எனக்கு அடுத்த வாரம் ஒரு நாலு நாள் லீவு வேணும்? " என முகத்தை பாவம் போல் வைத்து கொண்டு கேட்க. மற்ற மூவரும் அவளை எரிப்பது போல் பார்த்தனர். காரணம் பரிட்சை முடிந்து அடுத்த இரண்டு வாரம் தமிழ் நாடு முழுக்க சுற்றுலா பயணம் போக திட்டம் போட்டு ஒரு படையை திரட்டிய பின் இப்பொழுது இவ்வாறு பேசுவது அவர்களுக்கு கோவத்தை ஏற்படுத்தியது.
" என்ன விளையாடுறியா ? " இர்பான்
" இப்போ எதுக்கு லீவு? எங்க போற? " சுரேஷ்.
தலை குனிந்து இருப்பது போல் நடித்து கொண்டு ஓர கண்ணால் மூவரையும் அளந்து கொண்டே
" கல்யாணத்துக்கு " என்றாள்.
" யாருக்கு உனக்கா - என நக்கலாக கெளதம் கேட்க
" டேய் லூசு, சொந்தக்காரங்க கல்யாணம் டா "
" நீ எதுக்கு போற? " சுரேஷ்
" கல்யாணத்துக்கு எதுக்கு டா போவாங்க "
" நாங்க எல்லாம் சாப்பிட தான் போவோம், அந்த சாப்பாடு நான் இங்க வாங்கி தரேன் ne ஒன்னும் போக வேண்டாம் "
" நீ வேணா அதுக்கு போலாம் நான்லாம் அந்த மாதிரி கிடையாது "
" பின்ன பாத்திரம் கழுவ போறியா "
என்றவனை, ஜீஹி கொலை வெறியுடன் பாக்க. இர்பான் அவளை பார்த்து,
" நாம பிளான் பண்ணி ஒரு மாசம் ஆகுது இப்போ வந்து இப்படி சொல்ற, நாம ஆறு பேர் மட்டும் பரவாயில்ல, வீட்டுல இருந்து வேற வராங்க இல்ல, உன்ன விட்டுட்டு எப்படி போக முடியும் ? "
" ம்…. புரியுது பா. அம்மா ரொம்ப வற்புறுத்தி கூப்புடுறாங்க, ரெண்டு வருஷம் எங்க கூட எந்த விருந்துளையும் கலந்துகல இப்போ இதுக்கு கூட வா சொல்ராங்க, மறுக்க முடியல அதான் "
" நீங்க எல்லாரும் கிளம்புக நான் வந்து சேந்துக்கறேன் "
" அம்மாக்கு நாம டூர் போறது தெரியுமே, இருந்தும் வர சொல்றங்களா? " கெளதம்.
" ம்.. முக்கியமான சொந்தகாரங்களாம், அண்ணா வர முடியாதனால நான் கண்டிப்பா வரணும் சொல்ராங்க. "
" அம்மாக்கு தெரியும், இருந்தும் வர சொல்றங்கனா முக்கியமானவங்கள இருக்கணும். சரி போய்ட்டு வா, டூர் டேட்ஸ் மாத்திக்கலாம் , நீ வந்த பிறகு போகலாம் " என கெளதம் கூற. மனம் சந்தோசம் அடைந்தாலும், தான் பொருட்டு மற்றவர்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என நினைத்து
" டேட்ஸ் மாத்த வேணாம், பிளான் படி நீங்கள் எல்லாம் போங்க, நான் இடைல வந்து உங்க கூட சேந்துக்கறேன்.. "
அவளை விட்டு செல்ல மனம் இன்றி, கெளதம் கூறியது சரி என எண்ணி சுரேஷ்,
" ஒரு ஆணியும் பிடுங்க வேண்டாம், மத்தவங்க கிட்ட நாங்க பேசிக்கறோம், இப்போ நேரம் ஆச்சு நீ கெளம்பு " என்றான்.
மறுத்து பேச நினைத்து வாய் திறக்க, அந்த நேரம் அவளது அலைபேசியில் அருணா அழைக்க,
" என்னமா… "
"---------"
" இன்னும் இல்ல, கொஞ்ச நேரம் ஆகும்…. "
"---------"
" இல்லை, நாளைக்கு பரிட்சை இருக்கு, அடுத்த நாள் கல்யாணம் இருக்கு, நாங்க யாரும் இன்னும் வேலைய பிரிச்சுக்க கூட இல்லை….. "
"-----------"
" ஏன் மா, சரி அறை மணி நேரத்துல கிளம்புறேன். "
"----------"
" மா, ஜஸ்ட் அறை மணி நேரம் தான் "
"--------"
" சரி வரேன். "
அவளின் சம்பாஷணை பார்த்து கொண்டு இருந்த மூவருக்கும் அருணா என்ன சொல்லி இருப்பார் என்பது புரிய.
, " நீ கெளம்பு நாங்க பாத்துக்கறோம் " கெளதம்.
" சரி, வேலை எல்லாம் பிரிச்சி யாருக்கு என்ன என்ன வேலை, எனக்கு என்ன வேலைனு கால் பண்ணி சொல்லுக " என்று கூறி தன் இரு சக்கர வாகனத்தை வீடு நோக்கி செலுத்தினாள்.